Tuesday, July 5, 2016

குற்றம்பேஸ்புக் மூலம் காதல்

குற்றம்பேஸ்புக் மூலம் காதல்: குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து 17 வயது இளம்பெண் பலாத்காரம் - மருத்துவ மாணவர் மீது பகீர் புகார் இணையதள குற்றங்களை தடுக்க மாணவர்களுக்கு விழிப்புணர்வு - பெற்றோர் கோரிக்கைமத்திய அமைச்சரவையில் 5 பேருக்கு கல்தா 19 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு - பிரகாஷ் ஜவடேகருக்கு கேபினட் பொறுப்புபுதுக்கோட்டை, -சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியை சேர்ந்த 17 வயது இளம்பெண் புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் அளித்த புகார்: எனக்கு பேஸ்புக் மூலம் புதுக்கோட்டை மாவட்டம் ராயவரத்தை சேர்ந்த சண்முகராஜா அறிமுகமானார். சண்முகராஜா என்னை அடிக்கடி தொடர்பு கொண்டு பேசி வந்தார். என்னை காதலிப்பதாகவும் கூறினார். முதலில் மறுத்த நான், பின்னர் காதலித்து வந்தேன். சண்முகராஜா புதுவையில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு எனது வீட்டில் பெற்றோர் இல்லாதபோது சண்முகராஜா வீட்டிற்கு வந்து என்னிடம் மேஜரான பிறகு உன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி, குளிர்பானத்தில் ஏதோ ஒன்றை கலந்து கொடுத்து என்னிடம் தகாத உறவு வைத்து கொண்டார். நான் அவரிடம் கேட்டதற்கு நான் தான் உன்னை கல்யாணம் செய்து கொள்ள போகிறேனே எனக்கூறி சமாதானப்படுத்தினார். இதனால் நான் இந்த சம்பவம் குறித்து எனது பெற்றோரிடம் கூறவில்லை. ஆனால் தொடர்ந்து என்னிடம் சண்முகராஜா சரியாக பேசவில்லை. இதனால் நான் இந்த சம்பவம் குறித்து எனது பெற்றோரிடம் தெரிவித்தேன். பெற்றோர் சண்முகராஜாவின் பெற்றோருடன் பேசியபோது, சண்முகராஜாவின் தாய் தனது மகனை ரூ.1 கோடி செலவு செய்து படிக்க வைப்பதாகவும், சண்முகராஜாவை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றால் ரூ.50 லட்சம் கொடுக்க வேண்டும் எனவும் கூறினார். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.17 வயது இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.

Tuesday, April 1, 2014

இந்தியன் என்றால் என்னது தம்பி?

சாதியும் இருக்கும் மதமும் இருக்கும் சாத்திரம் மக்களை... வேறெனப் பிரிக்கும்! மோதலும் இருக்கும் முதலாளி இருப்பான் முன்னேற்றம் சிலர்க்கே வாய்ப்பாக இருக்கும்! குந்தியே தின்பான் ஒருவன் மற்றவன் குடல்வற்றிச் சாவான் இவற்றிடை யாவரும் இந்தியன் என்றால் என்னது தம்பி? எல்லாரும் சம்மென்றால் எப்படித் தம்பி? கொள்ளையன் ஆள்வான் கொடுமைகள் செய்வான் கொடுக்கும் உரிமைகள் கொடாது தடுப்பான்! வெள்ளையன் ஆண்டதும் வெறியர் ஆள்வதும் வேறுபா டின்றி விளங்கிடும் தம்பி! முந்திய ஆட்சியை அடிமைஎன் றார்கள்! முன்னினும் இவர்கள் அடிமைசெய் தார்கள்! இந்தியன் என்றால் என்னது தம்பி? எல்லாரும் சமமென்றால் எப்படித் தம்பி? -பாவலரேறு பெருஞ்சித்திரனார் -

Tuesday, March 18, 2014

ப.சிதம்பரத்துக்கு ஒரு பகிரங்க மடல்..........

ஒரே நாளில் 40 ஆயிரம் தமிழர்களை முள்ளிவாய்க்காலில் கொன்றுகுவித்த ராஜபக்ஷேவை உங்கள் அரசுதானே குடியரசு மாளிகையில் ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்று விருந்தோம்பி மகிழ்ந்தது? காமன்...வெல்த் விளையாட்டு அரங்கில் அவருக்குத் தனிமரியாதை தந்து பரவசப்பட்டவர் நம் பாரதப் பிரதமர்தானே! புத்தகயாவிலும், திருப்பதியிலும் அவர் புனித யாத்திரை நடத்துவதற்கு அனுமதியும், பாதுகாப்பும் அளித்தது யார்? நீங்கள் அறிவாளி என்பதில் எங்களுக்கு எள்ளளவும் ஐயமில்லை. அதற்காக, நாங்கள் எதையும் நம்பும் முட்டாள்கள் என்று நீங்கள் முடிவெடுத்துப் பேசுவதில் நியாயமில்லை. இனப்படுகொலையைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது’ என்று நீங்கள் மனிதகுல நாகரிகத்தின் உச்சத்தில் நின்று உரத்த குரலில் அறிவித்துவிட்டீர்கள். ஆனால், இனப்படுகொலை இலங்கை அரக்கர்களால் முள்ளிவாய்க்காலில் அரங்கேறியபோது நீங்களும், உங்கள் மத்திய அரசும் வெறும் மௌனப் பார்வையாளர்களாக மட்டும் இருக்கவில்லை; அந்த மாபாதகச் செயலுக்குப் பக்க பலமாகவும் இருந்தீர்கள் என்பதை உலகம் நன்கறியும். ஈழத் தமிழர் அழிவுக்கு நாள் குறித்த இலங்கை அரசுக்கு இணக்கமாக நடந்துகொண்ட நீங்கள், போரை நிறுத்த எவ்வளவோ முயன்றதாகச் சொல்கிறீர்கள். கேழ்வரகில் நெய்யென்றால் கேட்பவர்களுக்கா புத்தியில்லை? 'ஒரு இறையாண்மை உள்ள நாட்டில் சிறுபான்மை மக்களுக்கு உரிமைகளைப் பெற்றுத்தருவது எளிதல்ல’ என்று புத்தஞானம் போதிக்கிறீர்கள். அல்பேனியர்களுக்கும் செர்பியர்களுக்கும் ஒத்துவராத நிலையில் நடந்த இனப்போரில் 11 ஆயிரம் பேர் பலியானதும், பத்து லட்சம் அல்பேனியர்கள் துரத்தியடிக்கப்பட்டதும், செர்பியர்களின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்ட அல்பேனியர்கள் சர்வதேச சமுதாயத்தின் அங்கீகாரத்துடன் 'கொ சோவா’ தனிநாடு கண்ட சரித்திரம் உங்களுக்குத் தெரியாதா? யுகோஸ்லேவியா இன அடிப்படையில் சிதறுண்டதைச் சிந்தியுங்கள். 'குற்றவாளிகளைத் தண்டிக்கும் வரை இந்தியா ஓயாது’ என்றீர்கள். அடுத்த நாளே அந்தக் குற்றவாளிகளின் கடற்படையை வலுப்படுத்தி எங்கள் மீனவர்களை மேலும் கொன்று குவிக்க வழிவகுக்கிறீர்கள். உங்கள் வார்த்தைகளுக்கு நம்பகத்தன்மை இல்லை என்பதை நீங்களே இதற்கு முன்பு நிரூபித்திருக்கிறீர்கள். 'இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம், வடக்கு - கிழக்கு மாகாண இணைப்பு, தமிழர்களின் வாழ்வுரிமைக்கு உத்தரவாதம் பெற்றுத்தரும் 13-வது திருத்தத்தை இலங்கை அரசு நிறைவேற்றும் வரை இந்தியா ஓயாது’ என்றும் நீங்கள் சுருதி பேதம் சிறிதும் இல்லாமல் சொல்லி இருப்பதைப் படித்தபோது சிரிப்பை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை சிதம்பரம் அவர்களே! விடுதலைப் புலிகள் இந்திய அரசின் ஆதரவோடு இலங்கை ராணுவத்தால் மே 18, 2009 அன்று முற்றாக அழிக்கப்பட்டுவிட்டதாக ராஜபக்ஷே ஆரவாரத்துடன் அறிவித்து நான்கரை ஆண்டுகள் நடந்துவிட்ட பின்பும், 13-வது திருத்தம் ஏன் நடைமுறைக்கு வரவில்லை நிதியமைச்சரே? போர் நடந்த நேரத்தில் 13-வது திருத்தம் வழங்கும் உரிமைகளோடு கூடுதலாகவும் சில உரிமைகள் ஈழத் தமிழருக்கு வழங்கப்படும் என்று வாக்குறுதி வழங்கிய ராஜபக்ஷேவின் வாய் மலர்ந்த அரசியல் தீர்வுதான் '13 ப்ளஸ்’ என்பதை அரசியல் விழிப்பு உணர்வுள்ள ஒருவராவது மறக்க முடியுமா? இன்று அதே ராஜபக்ஷே, 'தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிப்பது பற்றிப் பேச நான் என்ன முட்டாளா?’ என்று ஆணவத்துடன் பத்திரிகையாளர்களிடம் பதிவு செய்ததையும், '13 மைனஸ்’ என்று புதிய பல்லவி பாடுவதையும் மன்மோகன் அரசு ஏன் மனதில் கொள்ளவில்லை? ஈழத் தமிழருக்குரிய உரிமைகள் அனைத்தையும் அள்ளி வழங்கும் அதிசய அட்சய பாத்திரம் 13-வது திருத்தம் என்பது போன்ற பொய்யான மாயத்தோற்றத்தை நீங்களும், காங்கிரஸ் அறிவு ஜீவிகளும் இன்னும் எவ்வளவு காலம் உருவாக்கி இந்த இனத்தை ஏமாற்றப்போகிறீர்கள்? இந்திய மாநிலங்களுக்குரிய உரிமைகள் ஈழ மண்ணில் வடக்கிலும் கிழக்கிலும் சென்று சேர இந்த 13-வது திருத்தம் எந்த வகையில் உதவக்கூடும்? ராஜபக்ஷேவின் கண்ணசைவுக்கு ஏற்பக் காரியமாற்றும் ஆளுநரே உண்மையான நிர்வாக அதிகாரம்(executive power) உள்ளவர். அவருக்கு 'உதவுவதும் பரிந்துரைப்பதும்’ தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவையின் பணி. நிதி மேலாண்மை ஆளுநர் வசம். ஆளுநர் விருப்பத்துக்கு இசைய மறுக்கும் மாகாண சபை கலைக்கப்படும். அந்த அதிகாரம் இலங்கை அதிபர் கையில்... 13-வது திருத்தம் சொல்லும் செய்தி இதுதானே! சட்டம்-ஒழுங்கு, காவல் துறை, அரசு நிலம் என்று எதன் மீதும் முற்றுரிமை மாகாண அவைக்கு அறவே இல்லை. 'தேசிய நலன்’ என்ற போர்வையில் இலங்கை நாடாளுமன்றம் தமிழர் நலனுக்கு எதிராக எந்தச் சட்டத்தையும் இயற்ற முடியும். எந்த உரிமையும் தமிழருக்குத் தருவதற்கு வழிவகுக்காத இந்த 13-வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தவும் சிங்கள அரசுக்குச் சம்மதம் இல்லை. நீங்கள் ஒரு கற்றறிவாளர், புகழ்பெற்ற வழக்கறிஞர்; சர்வதேச சட்டங்களைக் கரைத்துக் குடித்தவர். இந்த ஏதுமறியாப் பாமரனுக்கு நீங்கள்தான் தெளிவான பதிலைத் தரக்கூடும். இரண்டு இறையாண்மை மிக்க நாடுகள் பலமுறை கூடிப் பேசி, விவாதித்து... இறுதியில் ஓர் ஒப்பந்தத்தில் கையப்பமிட்டால், அந்த ஒப்பந்தம் இரு நாடுகளையும் சம அளவில் கட்டுப்படுத்துவதுதானே நியாயம்? பின்னாளில் அரசுப் பொறுப்பில் அமரும் அரசியல்வாதிகளின் விருப்பு வெறுப்புக்கேற்ப ஒரு நாடு தன்னிச்சையாக அந்த ஒப்பந்தத்தைக் குப்பைக்கூடையில் வீசியெறிந்தால், அந்த இழிசெயலை இன்னொரு நாடு பார்த்தும் பாராமல் நடந்துகொண்டால், இரண்டு அரசுகளின் 'இறையாண்மை’ என்னாவது? இறையாண்மை பற்றி அதிகமாகப் பேசிக்கொண்டிருக்கும் நீங்கள்தான் இந்த அறிவிலிக்கு விளக்கவுரை வழங்க வேண்டும். vikatan.com, 08.12.2013.

Monday, February 3, 2014

எதற்காக உண்ணாநிலை போராட்டம் என சிந்தித்து பார்


நாம் ஓடி, ஆடி, விளையாடிய நம் மண்ணை ,இயற்க்கை வளத்தை ,நம்மையும்,நம் சந்ததியையும் , அழிவின் விழிம்பில் இருந்து காத்திடஎழுந்து வா .......!! இரத்த வெறி பிடித்த ஆட்சியாளர்களால் ,அவர்களுக்கு துணை போகும் எதிர்கட்சிகளால் எந்த அளவு நாம் வஞ்சிக்கபடுகிறோம் என்பது இனியாவது சிந்தியுங்கள் ....!! அணு உலைக்கு முடிவு கட்டிட எழுந்து வா .......!! அறவழியில் 900 நாட்களை கடந்து நடக்கும் போராட்டத்துக்கு முற்று புள்ளி வைத்திட நெல்லை, தூத்துக்குடி,குமரி ...மாவட்ட அன்பு சொந்தங்களே திரண்டு வா .........!! எதற்காக உண்ணாநிலை போராட்டம் என சிந்தித்து பார் !! நமக்காக தன்னையே வருத்தி கொண்டு காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது .அணு உலைக்கு முடிவு கட்டிட எழுந்து வா .......!! கர்நாடகாவில் அணு கழிவை கொட்ட நினைத்த அரசுக்கு 24 மணி நேரத்தில் அந்த பகுதி மக்கள் முடிவு கட்டினார்கள்......!! அணு உலை சவ பெட்டிக்கு புதைகுழி கட்டுவோம் !! தன்னுரிமைக்கு முன்னுரிமை கொடுப்போம் !! வீதியில் இறங்கி நீதியை நிலை நாட்டுவோம் எழுந்து வா .......!!

Tuesday, December 10, 2013

கோழிகறியினால் வரப்போகும் பிரச்சனை

இரண்டு நிமிடம் மட்டும் ஒதுக்குங்க... பிறந்து 55 நாட்களில் கல்லீரல், தமனி, நுரையீரல் என்று எல்லாத்தையும் இழக்கும் ஒரு செயற்கை பிராணியை தான் முட்டாள் தனமாக உண்டு வாழ்கிறோம்… இந்த விசயத்தில் கொஞ்சம் சிந்தியுங்கள் நண்பர்களே… இன்னும் சில நாட்களில் கோழிகறியினால் வரப்போகும் பிரச்சனைகளால் 120 இல் இருந்து 40 நோக்கி குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் இவர்களின் திட்டத்தின்படி 160 என்று விலையை உயர்த்தி, பிறகு 120 என்ற சமநிலையை கொண்டு வரும் நோக்கத்தில் தான் இப்படி செய்கின்றனர். மேலும் இதை விரும்பி சாப்பிடும் நமக்கு எலும்புகளில் இருக்கும் சத்து முற்றிலும் அழிகிறது, மஞ்சள் காமாலை, இரைப்பை, கல்லீரல் செயலிழப்பு என்று வியாதிகளின் எண்ணிக்கையை அடுக்கலாம். ப்ராய்லர் கோழி மற்றும் முட்டைகளை அதிகமாக சாப்பிட்ட நாமக்கல் மக்களுக்கு இப்போது புற்று நோய் பிரச்சனை அதிகமாக பரவி வருகிறது. அவர்கள் படும் கஷ்டங்களை கோழி பண்ணைகளின் தலைவர்களான சில அரசியல் வாதிகள் வியாபார நோக்கத்துடன் உண்மை மக்களிடம் போகாமல் பார்த்துக் கொள்கின்றனர். உடலின் ஏழு சுவைகளையும் வளர்க்க ஆறு சுவைகளில் காய்கனிகளும் ஏராளமாகப் புலால் உணவும் அன்றைய ஐந்து திணைகளிலும் இருந்தன. ஆடு, மாடு, கோழி, காடை, கௌதாரி என அன்றைய தமிழர் புசிக்காத புலால் இல்லை. பச்சை ஊனைப் புசித்து புறங்கையில் வழியும் குருதியையும் புலால் நெய்யையும் பூட்டிய வில்லில் தடவி நின்றபோர்வீரன் குறித்து சங்க இலக்கியங்கள் பல இடங்களில் பேசுகின்றன. இன்றைக்கு அசைவம் சாப்பிடுவது பற்றி இருவேறு கருத்துகள் இருக்கின்றன. ஒன்று… அசைவம் சாப்பிட்டால், உடம்பு வளரும், மூளை வளராது, சைவமே சிறந்தது என்பது. இரண்டாவது… அசைவம் சாப்பிடுவோருக்குக் காய், கனிகள் ஒரு பொருட்டே அல்ல என்பது. இவை இரண்டிலும் எது சரி? உண்மை இவை இரண்டுக்கும் நடுவில் இருக்கிறது என்பதே சரி. அசைவம் சாப்பிட்டால் மூளை வளராது என்பது உழைக்கும் வர்க்கத்தை இழிவுபடுத்தும் ஒரு கருத்து. நோபல் பரிசு வாங்கியவர்களில் 99 சதவிகிதத்தினரும் உலகை உலுக்கி மாற்றிய மைக்ரோசாஃப்ட் ஆப்பிள் முதலாளிகளும் அசைவப் பிரியர்கள்தான். புலாலில் உள்ள புரதமும் சில நுண் சத்துக்களும் பொதுவாகக் காய்கனிகளில் குறைவு. உதாரணத்துக்கு 100 கிராம் ஈரலில், 6,000 மைக்ரோ கிராம் இரும்புச் சத்து உண்டு. 100 கிராம் கேரட்டில் 300 மைக்ரோ கிராம் தான் சத்து இருக்கிறது. ஆகையால் அசைவத்தின் ஆற்றலைக் கேள்விக் குறியாக்க வேண்டியது இல்லை. ஆனால் அசைவம் மட்டுமே போதுமா? அசைவத்தை எப்படி சாப்பிட வேண்டும்? எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதுதான் முக்கியமான ஒரு கேள்வி ஏனென்றால் போருக்குப் போகும் வீரன் சாப்பிட்டது , காரில் போகும் சுகவாசிக்கும் அப்படியே சரிப்படாது. அன்று முதல் இன்று வரை கட்டு மரத்தில் நெடுஞ்சாணாக நின்று கடலை ஆளும் மீனவர் சாப்பிட்ட அளவு நோஞ்சானாக கேண்டில் லைட் டின்னரில் ஃபிஷ் ஃப்ரை ஆர்டர் செய்யும் சாஃப்ட்வேர் இன்ஜினீயருக்குச் சரி வராது. உழைக்கும் அளவுக்கும் வாழும் நிலத்துக்கும் உண்ணும் அளவைத் தீர்மானிப்பதில் எப்போதுமே முக்கியமான பங்குண்டு. அசைவம் சாப்பிடலாம். ஆனால் அளவாக சாப்பிடுங்கள் ஐந்து பேர்கொண்ட ஒரு குடும்பம் வாரத்துக்கு ஒரு நாள் அரை கிலோ போதுமானது. அதையும் கூட இரண்டு நாட்களாகப் பிரித்து எடுத்துக் கொண்டால் இன்னும் சிறப்பானது. ஏனைய நாட்களில் காய், கனிகளுக்கு இடம் கொடுங்கள். வாரத்தில் ஒரு நாள், குறைந்தது ஒரு வேளையேனும் வயிற்றுக்கு ஓய்வு கொடுத்து விரதம் இருங்கள். எல்லாமே விருந்துதான். எல்லாவற்றுக்குமே ஒரு புரிதல் தேவைபடுகிறது. அட்டகாசமான கறி விருந்து சாப்பிட்டால், மறுநாளே கொள்ளு ரசம், சோறு, இஞ்சித் துவையலுடன் எளிமையாக அன்றைய சாப்பாட்டை முடித்துக்கொள்ளும் வழக்கம் நம் முன்னோர்களிடம் உண்டு. ஆட்டின் இறைச்சி உடலுக்குத் தேவையான வலுவைத் தரும் என்றால் கொள்ளும், இஞ்சியும் கொழுப்பைக் கரைக்கும் என்பதை அறிந்து வைத்திருந்தார்கள். கோழி நல்ல உணவு. ஆனால் அது தானாக இரை தேடி வளர்ந்த கோழியாக இருக்க வேண்டும். ஊசி போட்டு வளர்ந்த கோழியாக இருக்கக் கூடாது. கோழிக்கறி பொதுவாக உடல் சூட்டைத் தந்து நோய் போக்கக்கூடியது. உடல் தாதுவை வலுப்படுத்தி ஆண்மையைப் பெருக்கக் கூடியது என்கிறது சித்த மருத்துவம். கோழியில் நார்ச்சத்து அதிகம், வைட்டமின் பி12 சத்தும் அதிகம். பிராய்லர் கோழிகளின் செழுமையான தோற்றத்துக்காக அளிக்கப்படும் ரோக் ஸிர்சோன் என்ற மருந்து மனிதர்களுக்குப் புற்றுநோயை உருவாக்க வல்லது என்கிறது அமெரிக்காவின் பிட்ஸ்பர்க்கில் அமைந்துள்ள டியூக்கேன் பல்கலைக்கழக ஆய்வு முடிவுகள் குழந்தைப் பருவத்திலேயே சிறுமிகள் பூப்படைதல், ஆண்மைக் குறைவு உள்ளிட்ட பல்வேறு நோய்களும் இந்த பிராய்லர் கோழிகளையும் லேயர் கோழிகள் இடும் முட்டைகளையும் தொடர்ந்து உட்கொள்ளும் மனிதர்களுக்கு புற்றுநோய் ஏற்படவாய்ப்புகள் இருப்பதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Tuesday, November 26, 2013

மனதில் உறுதி வேண்டும் தலைவரின் வழி செல்வோம் மலரட்டும் தமிழீழம்

சில சந்தர்ப்பங்களில் குழப்பமான சூழலில் சிக்குண்டு வாழும் நிலை எமக்கு விதிக்கப் பட்டு விடுகின்றது. எம்மை மீறிய செயல்ப்பாடுகள்… எம்மால் சுமக்க முடியாத சுமைகள் எம் மீது சுமத்தப்படும் போது அவை எம்மை திக்குமுக்காடச் செய்து விடுகின்றுது. எதையும் சமாளிக்க முடியாது என்ற ஒரு சூழலில் தன்னம்பிக்கையை இழந்து விடுகின்றோம். anna-thalaiஇங்குதான் முடிவுகள் எடுப்பதில் சிக்கல்கள் உருவாகின்றது. சில சமயங்களில் வாழ்வதை விட இறப்பது சிறப்பானது என்ற முடிவுக்கு வருபவர்களும் உண்டு. ஏன்டா இந்த இனத்தில் வந்து பிறந்தோம் என்று எண்ணவும் தோன்றும. நான் தமிழனாக பிறந்ததனால்தான் என் தலைவனை தலைவனாக பெறும் பாக்கியம் கிடைத்தது. வரலாற்று நாயகர்களுடன் பழகும் பெரும் பாக்கியம் கிட்டியது. தமிழின் தொன்மையான சிறப்பு ஒரு புறம். ஆழகிய மொழியை வளர்க்கப் பாடுபடும் வாய்ப்பும் கிடைத்தது என்ற மகிழ்ச்சி இன்னொருபுறம். பிற மொழிகளும் பல சோக வரலாற்றை கண்டுதான் வளர்ந்துள்ளது. எனவே தமிழானாக பிறந்து தமிழனாக வாழ்வதில் எனக்கு பெருமைதான். உழைப்பில் ஆசையுள்ளவன் தொழிலை வெறுக்கமாட்டான். தாய் மீது அன்பு கொண்டவன் தாய்மொழியை சிறுமையடைய விடமாட்டான். நோக்கம் தெளிவானதாக இருக்குமானால் முடிவுகள் சுலபமானதாக இருக்கும். பிரிவை வகுத்த பின்பு பயந்தென்ன இலாபம்.. என்ற கண்ணதாசன் வரிகள் நடைமுறைச் சிக்கல்கல்களை கண்டு பயப்படாது உங்கள் இலட்சிய பயணத்தை தொடருங்கள் என்று சொல்லுகின்றது.. இதுபோன்று எத்தனை பாடல் வரிகள் உள்ளன. நடைமுறைச் சிக்கல் இடத்துக்கு இடம் வேறுபடுகின்றது. நாம் அதை சரியாக பகுத்து அறியாமல் விடை காண அவதிப்படுகின்றோம். உதாரணமாக சிறிய வயதில் சில பிரச்சனைகள் எங்களை பயமுறுத்தியுள்ளன. அவற்றை இலகுவாக வெல்லும் ஆற்றல் அப்பொழுது எம்மிடம் இருக்கவில்லை. அன்றைய சூழலில் எமது அறிவும் வசதியும் அச் சிக்கலைக் கையாள போதுமானதாக இருக்கவில்லை எனலாம். மிகவும் சுலபமாக கையாளக் கூடிய விடயங்கள் அன்று பூதாகாரமான தோற்றத்தை கொண்டு பயமுறுத்தியுள்ளது. இன்று அதை நினைக்கும்போது நாம் வாழ்ந்த வாழ்க்கை முறையின் குறைகளை விளங்க இவ்வளவு ஆண்டுகள் சென்றுள்ளது என எண்ணத் தோன்றுகின்றது. காலம் பதில் சொல்லும் என்பதை நாம் புரிந்துகொள்ள இது நல்ல உதாரணமாக இருக்கும் என்று நான் நம்புகின்றேன். ஒரு காலத்தில் முடியாத விடயம் இன்னொரு காலத்தில் இலகுவானதாகி விடுகிறது நாங்கள் ஒரு சிறுவட்டத்துக்குள் இருந்துகொண்டு சிலவற்றை சிந்திக்கின்றேம். எங்கள் ஊருக்குள் மட்டும் நாங்கள் வாழ்ந்தபோது நாங்கள் பெற்ற அறிவும் வாய்ப்புக்களும் போதுமானதாக இருந்ததில்லை. இந்த உலக ஊரெல்லாம் திரிந்து நாம் பெற்ற அறிவும் வளமும் எவ்வளவு வேறுபாடானது என்பதை இன்று உணருகின்றோம். சிந்திக்கும் வளம் கற்றலினால் தோன்றுகின்றது. அனுபவக் கல்வியை மிஞ்சிய கல்வி ஏதும் இல்லை என்பார் கற்றவர்.. எமது அனுபவமின்மை எப்பொழுதும் சில முடிவுகளை எடுக்கத் தடையாக உள்ளது. சில சமயங்களில் மற்றவருடன் முரண்படவும் வழிவகுத்து விடுகின்றது. நோக்கம் ஒன்றாக இருப்பினும் அடைவதற்கான வழிகளில் வேறுபாடுகள் உருவாகின்றது. நோக்கம் ஒன்றாக இருப்பினும் பல மார்க்கங்களான சமயங்கள் தோன்றுவதற்கு வெவ்வேறு அனுபவங்கள்தான் காரணமாகின்றன. மற்றவருடைய அனுபவத்துக்கும் மதிப்புக் கொடுக்கும்போது இலகுவாக புரிந்துணர்வு ஏற்பட்டு விடுகின்றது. இஸ்லாமியரின் கலாச்சாரம் பாலைவன சூழலில் உருவாகியது. கொடும் மணல் புயலிலிருந்து தம்மையும் குழந்தைகளையும் பாதுகாக்க பெண்கள் முழவதும் மூடிய ஆடைகளை அணியவேண்டிய அவசியம் தோன்றியது. ஆதுவே காலப் போக்கில் இஸ்லாமிய பண்படாக வலுவடைந்து விட்டது இறைவனை நம்புகின்றவருக்குள் எத்தனை பிரிவுகள் என்றாலும் நோக்கம் இறைபதம் அடைவதுதான். இந்த நடைமுறை வேறுபாடுகள் தோன்றக் காரணமான மொழி சமய பழக்கவழக்கங்கள் புவியியல் அமைப்பு பிராந்திய சமூக பொருளாதார அமைப்பு என்று பல்வேறுவிதமான சூழல் குழம்பு காரணிகளாக அமைந்துவிடுகின்றன. பன்னெடுங்காலம் சில பழக்க வழக்கங்களோடு வாழ்ந்தவரிடம் புதிய மாற்றங்களை இலகுவாக கண்டுவிட முடியாது. எனவேதான் உன்னைப்போல் உன் அயலவனையும் நேசி என்று யேசுபிதா சொன்னார். எமது தமிழ்ச் சமுதாயத்தின் சிக்கலான பழக்க வழக்கங்களை நாம் நன்றாக அறிந்திருந்தாலும் இச் சமுதாயத்தின் சிறப்பான குணங்கள் அதைவிட அதிகமானதாக காணப்படுகின்றது. தோல்லியைக் கண்டு துவண்டு விழும் தமிழன் ஒரு வெற்றிச் செய்தியை கேட்டதும் துணிந்து எழுந்துவிடுவான். சில சமயங்களில் வெற்றிகரமான பின்வாங்கல் எதிர்கால வெற்றியை வலுப்படுத்த அத்தியாவசியமாகின்றது. இச் செயல் எதிரிக்கு இன அழிப்பு செய்ய வழிவகுத்து விடுகின்றது. பாரதூரமன விளைவுகளை ஏற்படுத்தி அழிவுகளைச் செய்ய எதிரிக்கு வாய்ப்பாகி விடுகின்றது. விடுதலைப் போரை நசுக்குவதற்கு எதிரி போராடும் இனத்தை கொடுமையான சித்திரவதைக்குள் உட்படுத்துவான். இக் கொடுஞ் செயலுக்கு காரணம் போராடும் குணம் என்று அடிமைப் படுத்துவான். இங்குதான் நாங்கள் சிறப்பாக செயல்பட வேண்டும். பொறுமையாக விடயங்களை அலசிப்பார்க்க வேண்டும்.. நிதானமாக எமது இலக்கு நோக்கிய பயணத்தை வலுப்படுத்த தேவையான வழிவகைகளை ஆராய்ந்து செயல்படவேண்டும். என்று மாசேதுங் கூறியுள்ளார் தன் பலம் பிறர் பலம் அறிந்து செயல்பட வள்ளுவனார் போதித்த திருக்குறள் தமிழனை ஈராயிரம் ஆண்டுகளாக வழிமுறை செய்து வருகின்றது. சின்ன பாம்பை அடிப்பதானாலும் பெரிய தடியால் அடிக்கவேண்டும் என்றும் தேசிய தலைவர் கூறுவதும் நாம் அவதானமாக செயற்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவதாகும். எமது தேசிய விடுதலை பல முட்டுக்கட்டைகளை கொண்டிருந்தமை 1977க்கு முன்னதாகவே சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இந்தியாவின் கொடும் பிடிக்குள் எமது தாயகம் இருப்பதை தேசியத் தலைவர் தெளிவாக புரிந்து வைத்திருந்தார். இலங்கை பேரினவாதிகளுடன் போரிட்டு வெல்வது மட்டுமன்றி இந்திய கூட்டு மாநில ஆட்சியாளரையும் வெல்ல வேண்டும் என்றும் அவர்களை வெல்வதுதான் சிரமமானது என்று தெளிவுபடுத்தியிருந்தார். இந்த அடிப்படையில்தான் இந்திய சதித்திட்டத்துககுள் அகப்படாமல் தமிழீழ விடுதலைப் புலிகளையும் மக்களையும் வழிநடத்தி எமது போராட்டத்ததை உலக அரங்குவரை கொண்டு வந்துள்ளார் எமது தேசியத் தலைவர். ஓரு மிகப் பெரிய நாடு என தன்னைச் சொல்லிக் கொள்ளும் இந்தியாவின் கூட்டு மாநில ஆட்சி முறைக்கு அசாமின் காஸ்மீரின் விடுதலைப் போராட்டங்கள் எவ்வளவு அச்சுறுத்தலோ அவ்வளவு அச்சுறத்தலாக எமது போராட்டமும் அமைந்து விடும் என்ற கருத்தை இந்திய கொள்கை வகுப்பாளர்கள் மிக உறுதியாக கையிலெடுத்துளளார்கள். எந்த விலைகொடுத்தும் தமிழீழம் அமைவதைத் தடுப்பது தான் அவர்களின் நோக்கமாக இருக்கின்றது. ஈழ மக்கள் பாமரர் என்ற வகையில் இந்தியா தனது திட்டத்தை 1983க்கு முற்பட்ட காலங்களில் கையாண்டது. தேசிய தலைவர் தவிர்ந்த ஏனைய போராட்டக் குழு தலைவர்கள் இந்தியாவின் சூழ்ச்சிக்குள் அகப்பட்டு தாம் இழைத்த பிழையை தேசிய தலைவர் மீது சுமத்தி தம்மை நியாயப்படுத்த முனைந்து தோல்வி கண்டனர். தமிழீழ மக்களின் விவேகத்தின் மிது நம்பிக்கை கொண்டு தேசியத் தலைவர் போராட்டத்தை விரைவுபடுத்த தொடங்கிய காலத்தில் 1987 ல் சிங்கள இராணுவம் மாபெரும் பின்னடைவை சந்திக்கும் போது தமிழீழம் விடுதலை அடையும் சூழலும் உருவாகிக் கொண்டிருந்தது. தமிழீழத்தின் பொது நிர்வாக அலகுகள் தமிழரின் கைக்கு வரத் தொடங்கியிருப்பதை கண்டு டெல்லி அரசு அதிர்ந்தது. நாம் வேண்டாத போது தனது படையை எம்மண்ணில் நேரடியாக இறக்கி. புல சூழ்ச்சிகளை செய்து எமது தேசிய விடுதலைப் போரை நசுக்க இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக சொல்லணா கொடுமைகளை எம்மீது திணித்து பயனற்று இழப்புடன் நாடு மீண்டது. தனது திட்டம் சிறு பயனைக் கொடுத்தது என்ற நிறைவு இந்தியாவுக்கு இருந்தாலும் அது பூரணமான விளைவை ஏற்படுத்த வில்லை. அதி உயர் விலையை கொடுத்தாயினும் தமிழீழ விடுதைலப் புலிகளின் சர்வதேச செல்வாக்கை குலைத்துவிடும் திட்டங்கள் 1990ல் இந்தியாவினால் வகுக்கப்பட்டன. புலம் பெயர் நாடுகளில் பல கூலித்தமிழரும் இந்தியாவின் திட்டத்தை வழிநடத்த தயாராக இருந்தனர். இவர்களுக்கு பல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. இலங்கை இ.ந்திய கூட்டுச் சதியாக போதைவஸ்து கடத்தும் நாடகம் அரங்கேறியது. பிடிபடும் அனைவரும் தம்மை விடுதலைப் புலிகள் என்று சொல்வதனூடாக அனுதாபத்தை பெற்று வெளிநாடடு சுங்கப்பிரிவு அதிகாரிகளிடம் இருந்து தப்பிக்கும் அளவுக்கு விடுதலைப் புலிகள் மீதான அனுதாபமும் பிரமிப்பும் வெளிநாட்டவரிடையே பரவி இருந்தது. தொடர்ச்சியான இச்சதியால் விடுதலைப் புலிகளின் நற்பெயர் பாதிப்புக்குள்ளானது. தமது முயற்சியில் ஓரளவு வெற்றியை கண்ட இந்திய இலங்கை கூட்டுச் சதியாளர். துமது அடுத்த கட்ட நடவடிக்கையாக சிறர்களை படையில் இணைக்கும் விடையத்தை கையிலெடுத்தனர். தமது அதிகாரத்தையும் அரசியல் செல்வாக்கு நிதி வசதி என்பவற்றை பயன்படுத்தி பல செய்தி நிறுவனங்களை தம் வசமாக்கி தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான அவதூறுகளை மிக இலகுவாக பரப்பினர். ராஜீவ் காந்தி முதல் கதிர்காமர் வரை பல கொலைகள் மிக இலகுவாக நடத்தப்பட்டன. இவற்றை தமிழீழ விடுதலைப் புலிகள் திட்டமிட்டு நடத்தியதாக மின்னல் வேக பரப்புரைகள் நடந்தேறின. சிங்கள கிரமங்கள் மீதான பல தாக்குதல்களும் பள்ளிவாசலகள் மீதான தாக்குதல்களும் கூட விடுதலைப் புலிகளின் பெயரில் நடத்தப்பட்டன. இவை உலக அரங்கில் மிக கொடுமையாக எடுத்துக் காட்டப்பட்ட போது பலரும் அதை நம்ப வேண்டிய சூழல் உருவாகியது. இதுவே விடுதலைப் புலிகளை பயங்கரவாத பட்டியலுக்குள் சில நாடுகள் சேர்த்துக் கொள்ள போதுமானதாக இருந்தது. தேசியத் தலைவரை நன்கு தெரிந்திருந்த இந்திய ஆட்சியாளா தலைவரின் தன்நலமற்ற சமூக நலத்திட்டங்களைக் கண்டு மிரண்டு போயினர். மகாத்மா காந்தியை நாவளவில் வைத்துக் கொண்டு மிக மோசமான ஆட்சியை நடத்துபவர் மத்தியில் மகாத்மா காந்தியின் சிந்தனைகளையும் ஏற்றுக்கொண்டு ஒரு அழகான நாட்டை கட்டிய பெருமை தேசியத்தலைவருக்கு உரியது. தெற்காசியாவின் புரையோடிப் போன வறுமையும் பெண்கள் மீதான பாலியல் அடக்குமுறையும் சாதிக் கொடுமையும் தமிழீழத்தில் துடைத்து ஒழிக்கப்பட்டது. இந்த பிராந்தியத்தின் ஆட்சியாளர்களிடையே தங்களை தங்கள் நாட்டு மக்கள் இழிவுபடுத்த தமிழீழம் வழி வகுத்துவிடும் என்ற பயமும் இருக்கின்றது. ஏறக் குறைய மூன்றில் ஒரு பங்கு தமிழீழ மக்கள் வெளிநாடுகளில் வசதியாக வாழ்வதால் தமிழீழம் மேற்குலகின் கொள்கையை தனது கொள்கை வகுப்புக்குள் செல்வாக்கானதாக ஆக்கிவிடும் என்ற பயமும் இந்தியாவுக்கு உண்டு. சாக்கடைப் பெருச்சாளிகள் போன்று குப்பத்து மக்கள் இல்லாத வளமான நாடாக தமிழீழம் அமைந்து விடுவது இந்திய அரசியலில் பல குழப்பங்களளை உருவாக்கிவிடும் என்ற பயமும் இந்தியாவுக்கு உண்டு. இதை விட சிங்கள தேசமும் தனது கையை விட்டு சென்றுவிடும் என்ற பயமும் இந்தியாவுக்கு உண்டு. ஈழப் பிரச்சினை ஒன்றுதான் சிங்கள தேசத்தை இந்தியாவின் கைக்குள் வைத்திருக்க உதவுகின்றது. ஈழப் போரை தனக்கு சாதகமாக பயன்படுத்த இந்தியா எப்பொழுதும் முயற்சி செய்யும். வுலுவுள்ள ஒரு நாடாக பாகிஸ்தான் போன்று சிங்கள தேசம் வளரும்போது வங்காளதேசம் அமைந்ததுபோல் ஈழம் அமையலாம். ஆனாலும் அதிலும் ஒரு சிக்கல் உள்ளது. தமிழ் நாடு பிரிந்து விடும் என்ற பயம் இந்தியாவுக்கு நிறையவே உண்டு. அதனால்தான் சிங்கள தேசத்துடனாக சீனாவின் பாகிஸ்தானின் சிநேகத்தையும் இந்தியா விரும்புவதில்லை. தமிழர்களாகிய எங்கள்மீது பல அவதூறான பொய்யான செய்திகள் பரப்பப்பட்டுள்ளன. தெரிந்தோ தெரியாமலோ உங்கள் செயல்கள் எம் இனத்தின் நற்பெயரைக் கெடுக்காமல் பார்த்துக் கொண்டாலே அது நீங்கள் எம் இனத்துக்கு செய்யும் பெரும் நற்செயலாகும். அதை விட ஒரு படிமேலாக எங்கள் போராட்டம் பற்றிய விளக்கத்தையும் உண்மை நிலையையும் உலகத்தாருக்கு எடுத்துச் சொல்வதனூடாக நீங்களும் தேசிய உணர்வாளராக தேசிய தலைவரால் தமிழீழத்தில் மதிப்பளிக்கப்படுவீர்கள் அன்புத் தமிழ் மக்களே நாம் எத்தகைய சிக்கலில் உள்ளோம் என்பதை தலைவர் மிகத் தெளிவாக உங்களுக்கு பல கோணங்களில் தெளிவு படுத்தியுள்ளார். எம்மைச் சூழ பல நடைமுறைச் சிக்கல்கள் காணப்பட்டடாலும் போராடும் தன்மையை இழக்காமல் காய் நகர்த்தலை மேற் கொள்ள தலைவர் படும் துயரம் நெருப்புள் வாழ்வதை விடக் கொடியது. எங்கள் இனத்துக்காக முப்பதாயிரத்துக்கும் அதிகமான மாவீரரும் நூற்றைம்பது ஆயிரத்துக்கும் அதிகமான தன்மானத் தமிழரும் தற்கொடை ஆகியுள்ளனர். இவர்களின் தியாகம் எமது மன உறுதியை வளர்த்துள்ளது. உலக நாடுகளிடம் எங்கள் நியாயங்களை இடை விடாது எடுத்துச் சொல்வதனூடாக எங்கள் தாயகத்தை மீடகும் தார்மீக கடமை புலம் பெயர்ந்து வாழும் எம்மிடம் தேசியத் தலைவரால் ஓப்படைக்கப்பட்டுள்ளது.. யார் எதைச் சொன்னாலும் சொல்லிவிடடுப் போகட்டும்.. எவர் வேண்டுமானாலும் அறிக்கைளை விடட்டும். எமது தலைவரின் சிந்தனை எது என்று உங்களுக்கு தெரியும். தலைவர் வெளிப்படும்வரை பொறுமையாக நிதானமாக உறுதியோடு செயல்ப்படுங்கள். இந்திய வல்லாதிக்கம் இலங்கை இனவாதிகளின் சதி வலைக்குள் தானாக சிக்கித் தவிக்கின்றது. இலங்கை இனவாதமும் சீர்குலைந்து நாசவழியை தேடிக்கொண்டு தவிக்கிறது. நீங்கள் புத்திஜீவிகளாக வாழ்கின்றீர்கள். எதையும் பகுத்தறிந்து செயற்படக் கூடியவர்களாக இருக்கின்றீர்கள்;. இன்றும் உங்கள் இதயத்துள் ஆறாத வடுக்களாக பல துயரங்கள் இருக்கின்றன. இவை எல்லாம் எப்படி நடந்தேறின என்பதை நீங்கள் தெளிவாக உணர்ந்துள்ளீர்கள். நாங்கள் நீதியின் பக்கம் நின்று இவ் உலகிடம் நீதி கேட்கின்றோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எமது பாதை எது என்பதும் தேசியத்தலைவரின் வழிநடத்தலும் எம்மிடம் நிலைத்திருக்கும். தமிழ் தேசத்தின் சிற்பம் செதுக்கப்பட்டு பாதி வேலை முடிந்த நிலையில் உங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சகல சர்வதேச தடைகளையும் தகர்த்து எம் இனிவரும் சந்ததிக்கு நல்லதொரு வாழ்வைக் காட்ட இப்புலம் பெயர் நாட்டின் வாழ்க்கை வாய்ப்பபை பயன் படுத்துவோம். நாம் புலம் பெயர்ந்தது அகதியாக வாழ்ந்து மடிவதற்காக இல்லை நம் நாடு காணும் இறுதிப் பணி ஏற்று விடிவு காண்பதற்காக. காலம் இட்ட கட்டளை உன்னையும் என்னையும் புலம்பெயரச் செய்துள்ளது. தேசப் பணியாற்ற விரைந்து வா. மனதில் உறுதி வேண்டும் தலைவரின் வழி செல்வோம் மலரட்டும் தமிழீழம்

Saturday, November 23, 2013

தமிழீழ மாவீரர் வாரம் கார்த்திகை 21 - 27

தமிழீழ மாவீரர் வாரம் இன்று ஆரம்பமாகிறது,எங்கள் மண்ணின் விடுதலைக்காய் விதையாகிப் போன இந்த எங்கள் விடுதலை வீரர்கள் கனவுகள் அரியவை, பெரியவை, போற்றத்தக்கவை. சிங்களதேசத்தில் தமிழர்கள் வகைதொகையின்றி அழிக்கப்பட்டனர். உடைமைகள், சொத்துகள் களவாடப்பட்டது. காணாமல் போதல் கைதுகள் என எண்ணற்ற கொடுமைகள் அரங்கேற்றப்பட்டது. இந்நிலைலேயே எம் தன்னிலை மாறாத் தலைவன் ஈழ விடுதலையை தீவிரமாக்கினார். பல்லாயிரம் சங்கர்களும், மாலதிகளும், மில்லர்களும் ஏன் அங்கயற்கண்ணிகளும் விடுதலை வேள்வியில் ஆகுதியாயினர். அழிக்கப்பட்டதாய் சொல்லப்படும் எம் போராட்டம் தமிழீழம் என்ற எம் மாவீரர் கனவுகளால் எட்டப்படும், அவர்கள் துக்கமின்றி உழைத்த கனவுகள் எப்படி வீண் போகலாம்? வெறும் மாவீரர் எழுர்சியை அனுட்டிப்பதில் பயனில்லை மாவீரர் கனவுகளுக்கு செயல் வடிவம் கொடுக்கும் திறனும் ஆற்றலும் புலம்பெயர் தமிழர்களின் கரங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எத்தனை துரோகங்களிலும், தடைகளிலும் அதை நிறைவேற்ற வேண்டிய கடப்பாட்டில் நாமிருக்கிறோம். தமிழீழ விடுதலை என்பது வெறும் கனவல்ல என்று உலகமும், சிங்களமும் ஒருநாளில் அறிந்து கொள்ளட்டும். தியாகங்களால் எம் மாவீரர்கள் விடுதலை பயணத்தை உச்சத்தில் வைத்தனர். எதையும் முடிக்கும் வல்லமை காட்டினர். தமிழரின் வீரம் பிறப்பிலென்று பறை சாற்றினர். காலங்காலமாய் எமது விடுதலைப் போராட்டத்தில் ஏற்பட்ட பின்னடைவுகளை எங்கள் மாவீரர்களே உடைத்து வெற்றி கொண்டனர். தியாகத்தின் எல்லையை தொட்டு நின்றனர். "உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள்! உயர்ந்தவர்கள்! நானும் உண்மையானவனல்லன்." என தேசிய தலைவர் சொல்லுவார். சிறிதாய் சொல்லப்போனால் அந்தந்த வயதில் கிடைக்கவேண்டியதை விடுத்து, அந்த மாவீரர்கள் செய்ததெல்லாம் தமிழரின் விடுதலைக்காகவன்றி வேறெதற்காய்? அந்த வீரர்களின் தியாகத்துக்காய் இந்த வாரம் நாம் சிந்தும் கண்ணீரே நாம் அவர்களுக்கு செய்யும் மிகச் சிறிய நன்றிக்கடன் என கொள்வீர். நம் கோவில்களான கல்லறைகளை உடைத்து விடுவதால் எங்கள் மனங்களின் தொழுகைகளை நிறுத்த முடியாது, ஏழு நாட்டகள் எமக்கு எந்த ஆடம்பர நிகழ்வுகளும் வேண்டாம், சொந்த குருதி வடியும்போது சந்தோசம் வருமா எங்கிருந்தாவது? தமிழராக முன்பு மனிதனாக வேண்டும். கார்த்திகையில் வானம் கூட அழுது தொழும் எம் செம்மனச்செல்வங்களை, கார்ர்த்திகைப் பூவும் பூத்து வணங்கிக்கொள்ளும், விதையானவர் தமிழீழம் மலரவென்பதால் இயற்கை வணக்கம் செய்யும். "சத்திய இலட்சியத் தீயில் தம்மையே அழித்து சரித்திரமாகிவிட்ட எமது மாவீரர்கள் வழியில் சென்று நாம் எமது இலட்சியத்தை அடைவோமென உறுதி எடுத்துக்கொள்வோமாக" என்ற தேசிய தலைவரின் கூற்றுக்கிணங்க, வரலாறு தந்த வீரர்களை நினைவுகொள்வோம், அவர் பாதையில் நடந்து இலட்சியம் வெல்வோம்.