Tuesday, July 5, 2016
குற்றம்பேஸ்புக் மூலம் காதல்
குற்றம்பேஸ்புக் மூலம் காதல்: குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து 17 வயது இளம்பெண் பலாத்காரம் - மருத்துவ மாணவர் மீது பகீர் புகார்
இணையதள குற்றங்களை தடுக்க மாணவர்களுக்கு விழிப்புணர்வு - பெற்றோர் கோரிக்கைமத்திய அமைச்சரவையில் 5 பேருக்கு கல்தா 19 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு - பிரகாஷ் ஜவடேகருக்கு கேபினட் பொறுப்புபுதுக்கோட்டை, -சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியை சேர்ந்த 17 வயது இளம்பெண் புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் அளித்த புகார்:
எனக்கு பேஸ்புக் மூலம் புதுக்கோட்டை மாவட்டம் ராயவரத்தை சேர்ந்த சண்முகராஜா அறிமுகமானார். சண்முகராஜா என்னை அடிக்கடி தொடர்பு கொண்டு பேசி வந்தார். என்னை காதலிப்பதாகவும் கூறினார். முதலில் மறுத்த நான், பின்னர் காதலித்து வந்தேன். சண்முகராஜா புதுவையில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு எனது வீட்டில் பெற்றோர் இல்லாதபோது சண்முகராஜா வீட்டிற்கு வந்து என்னிடம் மேஜரான பிறகு உன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி, குளிர்பானத்தில் ஏதோ ஒன்றை கலந்து கொடுத்து என்னிடம் தகாத உறவு வைத்து கொண்டார். நான் அவரிடம் கேட்டதற்கு நான் தான் உன்னை கல்யாணம் செய்து கொள்ள போகிறேனே எனக்கூறி சமாதானப்படுத்தினார். இதனால் நான் இந்த சம்பவம் குறித்து எனது பெற்றோரிடம் கூறவில்லை. ஆனால் தொடர்ந்து என்னிடம் சண்முகராஜா சரியாக பேசவில்லை. இதனால் நான் இந்த சம்பவம் குறித்து எனது பெற்றோரிடம் தெரிவித்தேன். பெற்றோர் சண்முகராஜாவின் பெற்றோருடன் பேசியபோது, சண்முகராஜாவின் தாய் தனது மகனை ரூ.1 கோடி செலவு செய்து படிக்க வைப்பதாகவும், சண்முகராஜாவை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றால் ரூ.50 லட்சம் கொடுக்க வேண்டும் எனவும் கூறினார்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.17 வயது இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment