Saturday, May 25, 2013

மலையாளத்திற்கும் செம்மொழி - தமிழ்க்காப்புக்கழகம் கண்டனம்

கருணாநிதி இழைத்த ஒரு தவற்றால் மலையாளம் உள்பட ஒவ்வொரு மொழிக்கும் செமமொழி அளிக்கும் தகுதி வந்து விட்டது என்று தமிழ்க்காப்புக் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்துத் தமிழ்க்காப்புக் கழகத்தலைவர் இலக்குவனார் விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது : - செம்மொழித்தகுதி மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மலையாள மொழிக்கும் செம்மொழித் தகுதி வழங்குவதாக முடிவு எடுக்கப்பட்டு அறிவித்துள்ளனர். மூத்த வழக்குரைஞர் காந்தி அவர்கள் செம்மொழி வரையறைக்காக மத்திய அரசு அமைத்த குழுவிற்கு எதிராக வழக்குகள் தொடுத்துள்ளார். இதன் அடிப்படையில் செம்மொழிக்காலத்தை 1.500 ஆண்டு என வரையறுப்பதும் அதன் அடிப்படையில் பிற மொழிகளுக்குச் செம்மொழித் தகுதி ஏற்று அறிவிப்பதும் தவறு என்றாகிறது. ஆனால், மத்திய அரசு, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளுக்கு வழக்கு நிலுவையில் இருக்கும் பொழுதே 2008 இல் செம்மொழித் தகுதி வழங்கியது. பொதுவாக வழக்கு நிலுவையில் இருக்கும் பொழுது தீர்ப்பிற்கு உட்பட்டு ஆணை பிறப்பிப்பது வழக்கம் என்றாலும், அவ்வாறில்லாமல் வழக்கைத் திரும்பப் பெறச் செய்யப் போவதாகக் கூறியது. மத்தியக் கன்னடப்பல்கலைக்கழகம் அமைத்தல், செம்மொழிக் கன்னட நிறுவனம், செம்மொழித் தெலுங்கு நிறுவனம் நிறுவுதல் முதலான தொடர் நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இனி,தொடர்ச்சியாக வங்காளம் முலான பிற மொழிகளுக்கும் வழங்க உள்ளது. தமிழின் சேய் மொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலான மொழிகள் செம்மொழித் தகுதி பெறுகின்றன என்றால் தமிழுக்குப் பெருமைதானே என எண்ணலாம். ஆனால், வீண் பெருமையால் பயனில்லை. செம்மொழித் தகுதிக்குரிய தொன்மை, முதன்மை, தாய்மை முதலான தகுதிகளற்ற மொழிகளுக்கு அவ்வாறு தகுதியை வழங்குவது முறையல்ல. முத்தான மணியான தமிழ்ப்பேராசிரியர்கள் சிலரே, சேரநாட்டுத் தமிழ் இலக்கியங்களை எல்லாம் பழமலையாளம் எனக்காட்டி உதவியுள்ளனர் என்பதுதான் வேதனையானஉண்மை. வரலாற்றுப் புகழ் தமிழ் தனக்குரிய செம்மொழித் தகுதிக்கான ஏற்பிசைவைப் பெறுவதற்காகப் பல போராட்டக் களங்களைச் சந்தித்துள்ளது. இதனால் பொறாமையுற்ற பிற மொழியினர் மத்திய அரசில் செல்வாக்கைச் செலுத்தி எளிதில் செம்மொழித் தகுதியைப் பெற்று வருகின்றனர். சமசுகிருதத்தைவிடவும் மூத்த மொழியாகவும் சிறந்த தனித்தியங்கும் மொழியாகவும் தமிழ் உள்ளது. ஆனால் சமசுகிருத்திற்கு இணையான உதவியைத் தமிழுக்கு அளிக்க மத்திய அரசு விரும்பவில்லை. எனவேதான் இந்திய மாநில மொழிகள் என்பது போன்று செம்மொழிப்பட்டியலை உருவாக்கி வருகின்றது. அவ்வரிசையில் இன்று மலையாளம் சேர்க்கப்பட்டுள்ளது. இவ்வாறான வரலாற்றுப் பிழைகளுக்குக் காரணம் என்ன? இதற்கு வழி விட்டவர் யார்? இக்கேள்விக்கு வருத்தத்துடன் கலைஞர் என்றுதான் சொல்ல வேண்டி உள்ளது. செம்மொழிக்கான கால வரைறையை 2000 ஆண்டு என வரையறுக்கப்பட இருந்ததை 1000 என மத்திய அரசு மாற்றியது. மூவாயிரம் ஆக்க வேண்டும், கி.மு. என அறிவிக்க வேண்டும் என்றெல்லாம் அறிஞர்கள் குரல் கொடுத்தனர். மலேசியாவில், செம்மொழி அகவைத் திருத்த ஆய்வுக் குழு என முனைவர் ஆறு.நாகப்பன் தலைமையில் ஒரு குழு அமைத்து, அதன் சார்பில் மாநாடு நடத்தி, அங்கு அக்டோபர் 27, 2010 அன்று வந்த இந்தியத் தலைமை யமைச்சரிடம் மூவாயிரம் ஆண்டுக் கால வரையறை வேண்டி முறையீடும் அளித்துள்ளனர். முதல்வராக இருந்த பொழுது கலைஞர் அவர்கள், முதலில் ஆயிரம் ஆண்டு வரையறைக்கு ஒப்புக் கொண்டு வலுத்த எதிர்ப்பினால், 1500 ஆண்டு என மாற்றினார். ‘’உன் மொழிக்குத் தகுதி கிடைத்து விட்டது. அடுத்தமொழிக்குக் கிடைப்பதாக இருந்தால் உனக்கு என்ன’’ என்ற தொனியில் நேரில் எதிர்ப்பு தெரிவித்தவர்களிடமும் சொல்லி உள்ளார். முதல் வகுப்பு படிப்பவனையும் முனைவர் பட்டம் பெற்றவரையும் சமமாகக் கருத இயலுமா என அவர் எண்ணவில்லை. காலவரையறைக் குறைப்பிற்கு உடன்படாமல் ஒதுக்கி யிருந்தார் என்றால் இன்றைக்கு இந்த நிலை வந்திருக்காது.மத்திய அரசின் சதி என்பதை உணர்ந்து கால வரையறையை மாற்றாமல் இருக்க வகை செய்திருந்தார் எனில் இவ்வாறு அடுக்கடுக்காக ஒவ்வொரு மொழிக்காகச் செம்மொழித் தகுதி அளித்து உயர்தனிச் செம்மொழியான தமிழைத் தாழ்வு படுத்தும் நிலை வந்திருக்காது. தமிழுக்குத் தலைமை சமசுகிருதத்திற்கும் இநதிக்கும் பிற மொழிகளுக்குச் செலவிடும் மொத்தத் தொகையையும் விடக் கூடுதலாகச் செலவிடும் மத்திய அரசு தமிழுக்கு நிதி ஒதுக்க மனமின்றியும் தமிழின் சிறப்பு வளர்ந்தோங்கக் கூடாது என்பதற்காகவும் இவ்வாறு செய்கின்றது. இனி நாம் என்ன செய்ய வேண்டும்? தமிழக அரசே மூத்த வழக்குரைஞைர் காந்தி அவர்கள் தொடுத்த வழக்கை விரைந்து முடிக்க ஆவன செய்வதுடன் தானும் வழக்கு தொடுக்க வேண்டும். உயர்தனிச் செம்மொழி என்பது தமிழ் ஒன்றே என அறிவிக்கச் செய்து அதன் அடிப்படையில் உலகெங்கும் தமிழைப் பரப்புவம் தமிழ்நாட்டில் தமிழுக்குத் தலைமை கிடைக்கவும் வழி வகை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். நன்றி : மாலை முரசு

மலையாளத்திற்கும் செம்மொழி - தமிழ்க்காப்புக்கழகம் கண்டனம்

கருணாநிதி இழைத்த ஒரு தவற்றால் மலையாளம் உள்பட ஒவ்வொரு மொழிக்கும் செமமொழி அளிக்கும் தகுதி வந்து விட்டது என்று தமிழ்க்காப்புக் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்துத் தமிழ்க்காப்புக் கழகத்தலைவர் இலக்குவனார் விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது : - செம்மொழித்தகுதி மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மலையாள மொழிக்கும் செம்மொழித் தகுதி வழங்குவதாக முடிவு எடுக்கப்பட்டு அறிவித்துள்ளனர். மூத்த வழக்குரைஞர் காந்தி அவர்கள் செம்மொழி வரையறைக்காக மத்திய அரசு அமைத்த குழுவிற்கு எதிராக வழக்குகள் தொடுத்துள்ளார். இதன் அடிப்படையில் செம்மொழிக்காலத்தை 1.500 ஆண்டு என வரையறுப்பதும் அதன் அடிப்படையில் பிற மொழிகளுக்குச் செம்மொழித் தகுதி ஏற்று அறிவிப்பதும் தவறு என்றாகிறது. ஆனால், மத்திய அரசு, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளுக்கு வழக்கு நிலுவையில் இருக்கும் பொழுதே 2008 இல் செம்மொழித் தகுதி வழங்கியது. பொதுவாக வழக்கு நிலுவையில் இருக்கும் பொழுது தீர்ப்பிற்கு உட்பட்டு ஆணை பிறப்பிப்பது வழக்கம் என்றாலும், அவ்வாறில்லாமல் வழக்கைத் திரும்பப் பெறச் செய்யப் போவதாகக் கூறியது. மத்தியக் கன்னடப்பல்கலைக்கழகம் அமைத்தல், செம்மொழிக் கன்னட நிறுவனம், செம்மொழித் தெலுங்கு நிறுவனம் நிறுவுதல் முதலான தொடர் நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இனி,தொடர்ச்சியாக வங்காளம் முலான பிற மொழிகளுக்கும் வழங்க உள்ளது. தமிழின் சேய் மொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலான மொழிகள் செம்மொழித் தகுதி பெறுகின்றன என்றால் தமிழுக்குப் பெருமைதானே என எண்ணலாம். ஆனால், வீண் பெருமையால் பயனில்லை. செம்மொழித் தகுதிக்குரிய தொன்மை, முதன்மை, தாய்மை முதலான தகுதிகளற்ற மொழிகளுக்கு அவ்வாறு தகுதியை வழங்குவது முறையல்ல. முத்தான மணியான தமிழ்ப்பேராசிரியர்கள் சிலரே, சேரநாட்டுத் தமிழ் இலக்கியங்களை எல்லாம் பழமலையாளம் எனக்காட்டி உதவியுள்ளனர் என்பதுதான் வேதனையானஉண்மை. வரலாற்றுப் புகழ் தமிழ் தனக்குரிய செம்மொழித் தகுதிக்கான ஏற்பிசைவைப் பெறுவதற்காகப் பல போராட்டக் களங்களைச் சந்தித்துள்ளது. இதனால் பொறாமையுற்ற பிற மொழியினர் மத்திய அரசில் செல்வாக்கைச் செலுத்தி எளிதில் செம்மொழித் தகுதியைப் பெற்று வருகின்றனர். சமசுகிருதத்தைவிடவும் மூத்த மொழியாகவும் சிறந்த தனித்தியங்கும் மொழியாகவும் தமிழ் உள்ளது. ஆனால் சமசுகிருத்திற்கு இணையான உதவியைத் தமிழுக்கு அளிக்க மத்திய அரசு விரும்பவில்லை. எனவேதான் இந்திய மாநில மொழிகள் என்பது போன்று செம்மொழிப்பட்டியலை உருவாக்கி வருகின்றது. அவ்வரிசையில் இன்று மலையாளம் சேர்க்கப்பட்டுள்ளது. இவ்வாறான வரலாற்றுப் பிழைகளுக்குக் காரணம் என்ன? இதற்கு வழி விட்டவர் யார்? இக்கேள்விக்கு வருத்தத்துடன் கலைஞர் என்றுதான் சொல்ல வேண்டி உள்ளது. செம்மொழிக்கான கால வரைறையை 2000 ஆண்டு என வரையறுக்கப்பட இருந்ததை 1000 என மத்திய அரசு மாற்றியது. மூவாயிரம் ஆக்க வேண்டும், கி.மு. என அறிவிக்க வேண்டும் என்றெல்லாம் அறிஞர்கள் குரல் கொடுத்தனர். மலேசியாவில், செம்மொழி அகவைத் திருத்த ஆய்வுக் குழு என முனைவர் ஆறு.நாகப்பன் தலைமையில் ஒரு குழு அமைத்து, அதன் சார்பில் மாநாடு நடத்தி, அங்கு அக்டோபர் 27, 2010 அன்று வந்த இந்தியத் தலைமை யமைச்சரிடம் மூவாயிரம் ஆண்டுக் கால வரையறை வேண்டி முறையீடும் அளித்துள்ளனர். முதல்வராக இருந்த பொழுது கலைஞர் அவர்கள், முதலில் ஆயிரம் ஆண்டு வரையறைக்கு ஒப்புக் கொண்டு வலுத்த எதிர்ப்பினால், 1500 ஆண்டு என மாற்றினார். ‘’உன் மொழிக்குத் தகுதி கிடைத்து விட்டது. அடுத்தமொழிக்குக் கிடைப்பதாக இருந்தால் உனக்கு என்ன’’ என்ற தொனியில் நேரில் எதிர்ப்பு தெரிவித்தவர்களிடமும் சொல்லி உள்ளார். முதல் வகுப்பு படிப்பவனையும் முனைவர் பட்டம் பெற்றவரையும் சமமாகக் கருத இயலுமா என அவர் எண்ணவில்லை. காலவரையறைக் குறைப்பிற்கு உடன்படாமல் ஒதுக்கி யிருந்தார் என்றால் இன்றைக்கு இந்த நிலை வந்திருக்காது.மத்திய அரசின் சதி என்பதை உணர்ந்து கால வரையறையை மாற்றாமல் இருக்க வகை செய்திருந்தார் எனில் இவ்வாறு அடுக்கடுக்காக ஒவ்வொரு மொழிக்காகச் செம்மொழித் தகுதி அளித்து உயர்தனிச் செம்மொழியான தமிழைத் தாழ்வு படுத்தும் நிலை வந்திருக்காது. தமிழுக்குத் தலைமை சமசுகிருதத்திற்கும் இநதிக்கும் பிற மொழிகளுக்குச் செலவிடும் மொத்தத் தொகையையும் விடக் கூடுதலாகச் செலவிடும் மத்திய அரசு தமிழுக்கு நிதி ஒதுக்க மனமின்றியும் தமிழின் சிறப்பு வளர்ந்தோங்கக் கூடாது என்பதற்காகவும் இவ்வாறு செய்கின்றது. இனி நாம் என்ன செய்ய வேண்டும்? தமிழக அரசே மூத்த வழக்குரைஞைர் காந்தி அவர்கள் தொடுத்த வழக்கை விரைந்து முடிக்க ஆவன செய்வதுடன் தானும் வழக்கு தொடுக்க வேண்டும். உயர்தனிச் செம்மொழி என்பது தமிழ் ஒன்றே என அறிவிக்கச் செய்து அதன் அடிப்படையில் உலகெங்கும் தமிழைப் பரப்புவம் தமிழ்நாட்டில் தமிழுக்குத் தலைமை கிடைக்கவும் வழி வகை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். நன்றி : மாலை முரசு

Tuesday, May 21, 2013

யாசின் மாலிக்கை அழைத்தது எப்படி பிழையாகும்: நாம் தமிழர் கட்சி கேள்வி..

இலங்கையில் சிங்கள பெளத்த இனவெறி அரசால் தமிழினம் திட்டமிட்டு அழித்தொழித்து முடிக்கப்பட்ட நாளான மே 18ஐ இன எழுச்சி நாளாக கடலூர் நகரில் நாம் தமிழர் கட்சி நடத்திய உள் அரங்குக் கூட்டத்தில் ஜம்மு – காஷ்மீர் விடுதலை முன்னணியில் தலைவர் யாசின் மாலிக் கலந்துகொண்டதற்கு காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகள் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக அறிக்கை விடுத்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஞானதேசிகன் அவர்கள், யாசின் மாலிக் கடலூருக்கு எப்படி வந்தார், அவரை அழைத்து வருவதற்கு உதவி செய்த சக்தி எது? அந்த நிகழ்ச்சி பின்புலமாக இருந்து செயல்பட்ட இயக்கங்கள் எவை என்றெல்லாம் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் பொன். இராதாகிருஷ்ணன், இந்தியாவை துண்டாட நினைக்கும் பிரிவினைவாதியான யாசின் மாலிக்கை தமிழகத்தில் நுழைய அனுமதித்தது மிகவும் அபாயகரமானது என்று கூறியுள்ளார். இதற்கெல்லாம் பதிலும் விளக்கமும் அளிக்க வேண்டிய கடமை நாம் தமிழர் கட்சிக்கு உண்டு என்பது மட்டுமின்றி, இந்தத் தலைவர்களுக்கு சில கேள்விகளையும் நாம் தமிழர் கட்சி எழுப்ப வேண்டிய அவசியம் உள்ளது. காஷ்மீர் மக்களால் பெரிதும் மதிக்கப்படும் தலைவரான யாசின் மாலிக்கின் ஜம்மு-காஷ்மீர் விடுதலை இயக்கம் ஒரு தடை செய்யப்பட்ட இயக்கம் அல்ல. அது இன்றளவும் சுதந்திரமாக இயங்கி வருகிறது. யாசின் மாலிக்கும், அவரது இயக்கமும் காஷமீர் மக்களின் அரசியல் உரிமைக்காக போராடி வருகிறார்கள். அது காங்கிரஸ், பா.ஜ.க. போன்ற கட்சிகளுக்கு ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அந்த கட்சிக்கும், அதன் அரசியல் தலைமைக்கும் இந்திய நாட்டில் எங்கு சென்றும் கருத்துக்களை கூற உரிமை இருக்கிறது. அது இந்திய அரசியல் சட்டப்பூர்வமானது. காஷ்மீர் தலைவர் ஒருவரை தமிழகத்திற்கு ஏன் அழைத்து வரக்கூடாது? தமிழ்நாட்டை போல காஷ்மீரமும் இந்திய நாட்டின் ஒரு அங்கம்தானே? காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்தியா ஒரே நாடு என்று நீங்கள்தானே முழங்கினீர்கள். அது உண்மையானால் எனது காஷ்மீர் சகோதரனை இங்கே அழைத்து வந்த பேச வைப்பதில் உங்களுக்கு என்ன சங்கடம்? அவர் பிரிவினைவாத தலைவர் என்கிறீர்கள். அப்படியானால், காஷ்மீர் சென்றபோது இந்தியாவின் பிரதமர் மன்மோகன் சிங், அவரை காஷ்மீர் சட்டப்பேரவைக்கு வெளியே சந்தித்துப் பேசியது ஏன்? காஷ்மீர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண பிரதமராக இருந்த வாஜ்பாய் முதல் இன்றுள்ள பிரதமர் வரை, நீங்கள் கூறக்கூடிய அந்த பிரிவினைவாத தலைவர்களுடன் பேச அனுபவம் வாய்ந்த இந்திய அரசு அதிகாரியை நியமித்து பேசி வருவது ஏன்? நாங்கள் அழைத்து பேச வைத்தால் குற்றம், இந்திய மத்திய அரசு அவர்களோடு பேசினால் சரியா? இது என்ன தலைக்கு ஒரு சீயக்காய், தாடிக்கு ஒரு சீயக்காய்? ஈழத்தில் தடை செய்யப்பட்ட குண்டுகளை போட்டு ஒன்றே முக்கால் இலட்சம் தமிழர்களை கொன்று குவித்த இனப் படுகொலையாளன் மகிந்த ராஜபக்சேயை அழைத்து, இரத்தின கம்பள வரவேற்பு கொடுக்கிறீர்களே, அது இந்த தேசத்திற்கு பெருமை தரக்கூடியதா? தமிழினத்தை கொன்று குவித்த அந்நிய நாட்டுத் தலைவனை அழைத்து அரசு மரியாதை கொடுப்பதுதான் தேச பக்தியா? தேசப் பக்தியாளர் ஞானதேசிகன் பதில் சொல்லட்டமே. கடந்த 35 ஆண்டுகளாக கச்சத் தீவு கடற்பகுதியில் 544 மீனவர்களை கொன்று குவித்துள்ள சிங்கள கடற்படையின் தலைவரான ராஜபக்சவிற்கு ராஜ உபசாரம் செய்வது தமிழர்களை வெறுப்பேற்றாதா? பிரிவினைக்கு வித்திடாதா? ஞானதேசிகன் பதில் சொல்லட்டும். இந்த நாட்டின் செல்வத்தை அந்நிய பெரு நிறுவனங்களும், நாடுகளும் கொள்ளையடித்துக்கொண்டு போவதற்கு ஏற்ற வகையில் கொள்கை வகுத்துக்கொடுத்துக் கொடுப்பதுதான் காங்கிரஸ் கூறும் தேச பக்தி. காங்கிரஸ் அரசின் அனைத்து பொருளாதார சுரண்டல் கொள்கைக்கும் ஒத்துப்போகும் தேச பக்தியைத்தான் பாரதிய ஜனதா கடைபிடிக்கிறது. ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்களாக இருக்கும் இந்தக் கட்சிகள்தான் தேசப்பற்றை பற்றி பேசுகின்றன. நாங்கள் தேசப்பற்றைப் பற்றி பேசவில்லை, இந்த தேச மக்களின் உரிமைகளைப் பற்றிப் பேசுகிறோம். தமிழீழத்தில் எம் தமிழினம் எப்படி திட்டமிட்டு இன்றளவும் அழிக்கப்பட்டு வருகிறதோ, அதேபோல் காஷ்மீரிலும் நாங்கள் நசுக்கப்படுகிறோம் என்று யாசின் மாலிக் கூறினாரே, அதற்கு உங்கள் பதில் என்ன? இந்திய படைகள் தங்கள் மண்ணில் இருந்து வெளியேற வேண்டும் என்று கூறி, அம்மக்கள் நடத்திய பெரும் போராட்டம் இந்த நாட்டிற்கே தெரியும். ஆனால் அந்த மக்களை இந்தியர்கள் என்றா பார்த்தது இந்திய மத்திய அரசு. துப்பாக்கியால் சுட்டு 104 பேரைக் கொன்றது. அரசமைப்புப் பிரிவு 370ன் கீழ் காஷ்மீருக்கு அதிகமான சிறப்பு சலுகைகளை கொடுத்து அம்மாநிலம் செழிப்புடன் உதவி வருவதாக பொன் இராதாகிருஷ்ணன் கூறுகிறார். அப்படியானால் அந்த மக்கள் இந்திய அரசுக்கு எதிராக போராடி வருவது ஏன்? அம்மாநிலத்தில் ஆயுத படைகள் சிறப்பு அதிகார சட்டம் எனும் காட்டுமிராண்டித்தனமான சட்டத்தை நடைமுறைப்படுத்தி, இந்திய இராணுவம் எந்த வீட்டில் வேண்டுமானாலும் நுழைந்து யாரை வேண்டுமானாலும் விசாரணைக்குத் தூக்கி செல்லலாம் என்கிற நிலையை இன்று வரை அனுமதிக்கிறீர்களே ஏன்? இராணுவத்தால் அம்மாநிலத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்கள் பத்தாயிரம் பேருக்கு மேல் இன்று வரை என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை என்று ஐ.நா. மனித உரிமை அமைப்பு கூறியதே அதற்கு இந்த தேச பகதர்களின் பதில் என்ன? காஷ்மீராகட்டும், பழங்குடியினரை வேட்டையாடும் தண்டகாரண்ய காடுகள் ஆகட்டும், இந்த நாட்டில் எங்கெல்லாம் மக்கள் அடக்குமுறைக்கும், ஒடுக்குதலுக்கும் ஆளாக்கப்பட்டாலும் நாம் தமிழர் கட்சி அதை எதிர்க்கும், ஒடுக்கப்படும் மக்களுக்கு ஆதரவாக அவர்களோடு நின்று உரிமைக் குரல் கொடுக்கும். நாம் தமிழர் இந்திய அரசமைப்பை ஏற்று ஜனநாயக பாதையில் இயங்கிவரும் கட்சி. இலங்கையில் எம்மினத்தின் விடுதலைக்காகவும், இந்தியாவில் தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும் போராடும் அரசியல் கட்சி என்பதை தெட்டத் தெளிவாக, ஆவணப்பூர்வமாக விளக்கியிருக்கிறோம். தமிழ்நாட்டு மக்கள் எங்கள் கட்சியை தங்கள் கட்சியாக நினைக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்களிடமிருந்து அந்நியப்பட்டு நிற்கும் தேசியக் கட்சிகள் எங்கள் மீது கூறும் குற்றச்சாற்றுகள் எந்த அடிப்படையும் அற்றது என்பது தமிழர்கள் அனைவருக்கும் தெரியும். நாங்கள் தமிழீழ விடுதலை பற்றி பேசும்போதெல்லாம் இவர்கள் இந்தியாவின் இறையாண்மை பற்றி பேசுகிறார்கள். இது வேடிக்கையாகவும் விநோதமாகவும் இருக்கிறது. இறையாண்மை என்பதற்கு உண்மையான பொருள் என்ன என்பதை அறியாத, புரியாத தலைவர்களுக்கு நாங்கள் விளக்கமளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதையும் தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறோம். நாம் தமிழர் கட்சிக்காக, செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர்

Monday, May 20, 2013

தமிழீழ சுதந்திர சாசன வரைபு எமது விடுதலைப் போராட்டத்தில் மேலும் ஒரு மைல்கல்!

நியாயமான சம உரிமைகளுடன் சுதந்திரமாக வாழ நினைத்த எம்மினத்தின் மீது சிங்களப் பேரினவாத அரச இயந்திரத்தால் பலவந்தமாகத் திணிக்கப்பட்ட அடக்குமுறைகளில் இருந்து எம் மக்களையும், பூர்வீகமாக நாம் செறிந்து வாழும் தாயக நிலப்பரப்பையும், எதிர்கால சந்ததியையும் காப்பாற்றும் பொருட்டு...... ....எமது முன்னைய அரசியல் பிரதிநிதிகளால் கூட்டாக முன் வைக்கப்பட்டது தான் தனித் தமிழீழத்துக்கான கோரிக்கையும் அதற்கான மக்கள் அங்கீகாரமுமாகும். ஆரம்பத்தில் எமக்கான உரிமைகளை வேண்டி தமிழ் அரசியல் தலைவர்கள் அறவழியில் முன்னெடுத்த போராட்டங்களை சிங்கள அரச பயங்கரவாதம் ஆயுத வன்முறைகொண்டு அடக்க முனைந்தது, இதனால் தான் வேறு வழியின்றி எம் உரிமைகளை வென்றெடுப்பதற்காக தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தினார்கள். நீண்ட கால ஆயுதப் போராட்டமே எமக்கென்றொரு நிழல் அரசை நிறுவ துணை நின்றதுடன் தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை சர்வதேச அளவில் பேசுபொருள் ஆக்கியது. அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத் தாக்குதலுடன் விடுதலைக்கான போராட்டங்களும் சர்வதேச நாடுகளால் பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டு தடைசெய்யப்பட்டன. இதனாலேயே தமிழீழ விடுதலைப் போராட்டமும். பல நாடுகளால் தடைசெய்யப்பட்டது. இத்தடையை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தியே எமது விடுதலைப் போராட்டத்தை எதிரி பின்னடைவுக்கு இட்டுச் சென்றான். அதற்கு சர்வதேசத்தில் பல நாடுகள் துணையாக நின்றன. அவர்களால் முன்வைக்கப்பட்ட காரணம் எமது விடுதலைப் போராட்டம் ஜனநாயகமற்றதென்றும் ஆயுத வன்முறை ரீதியிலானதும் என்பதே. சர்வதேச நாடுகளுக்கு ஒவ்வாமையாக இருந்த எமது ஆயுதப் போராட்டம் 2009 ல் ஆயுத மெளனிப்புடன் இடைநிறுத்தப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளால் முன்னெடுக்கப்பட்ட ஆயுதப் போராட்டத்தாற் தான் தமிழ் மக்களுக்கான நியாயமான அரசியல் தீர்வைக் கொடுக்க முடியவில்லை என்று இத்தனை காலமும் சொல்லி வந்த சிங்கள அரசு ஆயுதப் போராட்டம் இடைநிறுத்தப்பட்டு நான்காண்டுகள் ஆன நிலையிலும் இன்று வரை தமிழ் மக்களுக்கான குறைந்த பட்ச உரிமைகளைக் கூட வழங்க முன்வரவில்லை. மாறாக முன்னரை விட மோசமாக மக்களை அடிமைகள் போல நடாத்தி வருவதுடன், பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள், காணாமல் போதல், கைதுகள் எம் பூர்வீக நிலங்களில் பலவந்தமான சிங்களக் குடியேற்றம், கலாசார சீரழிவு என திட்டமிட்ட முறையில் தமிழர் இனவழிப்பை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகிறது. எமது விடுதலைப் போராட்டத்திற்கு சர்வதேச நாடுகள் ஆதரவளிக்காமைக்காக சொன்ன காரணங்களை கவனத்திற் கொண்டே புலம்பெயர் தமிழ் மக்கள் சர்வதேச நாடுகளின் சட்டங்களுக்கு ஏற்பவும் ஜனநாயக விழுமியங்களை மதித்தும் அதற்கேற்ப தமிழ் மக்களின் அபிலாசை தமிழீழம் ஒன்றே என்பதை சர்வதேச சமூகத்துக்கு மீண்டும் வலியுறுத்தவே நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை தமிழ் மக்கள் அமைத்துள்ளனர். இன்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மேற்கொள்ளும் சுதந்திர சாசன வரைபு தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மேலும் ஒரு மைல்கல். தனித் தமிழீழத்துக்கான வரைபுகள் முன் வைக்கப்படுவது இது தான் முதல் தடவை அல்ல. 1976 ல் வட்டுக் கோட்டைத் தீர்மானமும், 1985 ல் தமீழீழ விடுதலைப் புலிகளால் தமிழீழ சோசலிசக் குடியரசு என்ற வரைபும் முன் வைக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளால் முன் வைக்கப்பட்ட தமிழீழ சோசலிசக் குடியரசு என்ற வரைபானது அனைத்துத் தமிழ் பேசும் மக்களாலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய சகல அம்சங்களையும் உள்ளடக்கிய எந்தக் காலத்துக்கும் பொருத்தமான வரைபென்பது குறிப்பிடத்தக்கதாகும். அந்தவகையில் சர்வதேசத்தின் முன்நிலையில் ஜனநாயக ரீதியில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கமானது தமிழீழ சுதந்திரசாசன வரைபு தொடர்பில் உலகெங்கும் பரந்து வாழும் அனைத்து தமிழ் அமைப்புகளினதும், மக்களினதும் கருத்தினையும் ஆலோசனையையும் அங்கீகாரத்தையும் வேண்டி நிற்கின்றது. தமிழ் மக்களின் விடுதலை வேட்கையின் எண்ணங்களில் இருந்து வரும் கருத்துக்களால் இச்சாசனம் மேலும் மெருகூட்டப்படவுள்ளதால் சர்வதேச நாடுகளால் மறுக்கப்பட முடியாத ஒரு சாசனமாக இது அமையும். எனவே அனைவரும் இதற்கு பூரணமான ஆதரவை வழங்க வேண்டும். அதேவேளையில் தனித் தமிழீழம் குறித்து ஏலவே முன்வைக்கப்பட்ட வரைபுகளுக் கும் முக்கியத்துவம் கொடுத்து அவற்றினையும் முழுமையாக உள்வாங்கி தமிழீழ சுதந்திர சாசனத்தை அனைத்துத் தமிழ்பேசும் மக்களும் ஏற்கக் கூடிய வகையில் நிறைவானதொரு சாசனமாக அமைக்க வேண்டும் என வேண்டிக் கொள்வதுடன், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் தமிழீழ சுதந்திர சாசன வரைபிற்கு எம்முடைய ஆதரவையும் வரவேற்பையும் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் __._,_.___

தமிழீழ சுதந்திர சாசன வரைபு எமது விடுதலைப் போராட்டத்தில் மேலும் ஒரு மைல்கல்!

நியாயமான சம உரிமைகளுடன் சுதந்திரமாக வாழ நினைத்த எம்மினத்தின் மீது சிங்களப் பேரினவாத அரச இயந்திரத்தால் பலவந்தமாகத் திணிக்கப்பட்ட அடக்குமுறைகளில் இருந்து எம் மக்களையும், பூர்வீகமாக நாம் செறிந்து வாழும் தாயக நிலப்பரப்பையும், எதிர்கால சந்ததியையும் காப்பாற்றும் பொருட்டு...... ....எமது முன்னைய அரசியல் பிரதிநிதிகளால் கூட்டாக முன் வைக்கப்பட்டது தான் தனித் தமிழீழத்துக்கான கோரிக்கையும் அதற்கான மக்கள் அங்கீகாரமுமாகும். ஆரம்பத்தில் எமக்கான உரிமைகளை வேண்டி தமிழ் அரசியல் தலைவர்கள் அறவழியில் முன்னெடுத்த போராட்டங்களை சிங்கள அரச பயங்கரவாதம் ஆயுத வன்முறைகொண்டு அடக்க முனைந்தது, இதனால் தான் வேறு வழியின்றி எம் உரிமைகளை வென்றெடுப்பதற்காக தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தினார்கள். நீண்ட கால ஆயுதப் போராட்டமே எமக்கென்றொரு நிழல் அரசை நிறுவ துணை நின்றதுடன் தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை சர்வதேச அளவில் பேசுபொருள் ஆக்கியது. அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத் தாக்குதலுடன் விடுதலைக்கான போராட்டங்களும் சர்வதேச நாடுகளால் பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டு தடைசெய்யப்பட்டன. இதனாலேயே தமிழீழ விடுதலைப் போராட்டமும். பல நாடுகளால் தடைசெய்யப்பட்டது. இத்தடையை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தியே எமது விடுதலைப் போராட்டத்தை எதிரி பின்னடைவுக்கு இட்டுச் சென்றான். அதற்கு சர்வதேசத்தில் பல நாடுகள் துணையாக நின்றன. அவர்களால் முன்வைக்கப்பட்ட காரணம் எமது விடுதலைப் போராட்டம் ஜனநாயகமற்றதென்றும் ஆயுத வன்முறை ரீதியிலானதும் என்பதே. சர்வதேச நாடுகளுக்கு ஒவ்வாமையாக இருந்த எமது ஆயுதப் போராட்டம் 2009 ல் ஆயுத மெளனிப்புடன் இடைநிறுத்தப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளால் முன்னெடுக்கப்பட்ட ஆயுதப் போராட்டத்தாற் தான் தமிழ் மக்களுக்கான நியாயமான அரசியல் தீர்வைக் கொடுக்க முடியவில்லை என்று இத்தனை காலமும் சொல்லி வந்த சிங்கள அரசு ஆயுதப் போராட்டம் இடைநிறுத்தப்பட்டு நான்காண்டுகள் ஆன நிலையிலும் இன்று வரை தமிழ் மக்களுக்கான குறைந்த பட்ச உரிமைகளைக் கூட வழங்க முன்வரவில்லை. மாறாக முன்னரை விட மோசமாக மக்களை அடிமைகள் போல நடாத்தி வருவதுடன், பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள், காணாமல் போதல், கைதுகள் எம் பூர்வீக நிலங்களில் பலவந்தமான சிங்களக் குடியேற்றம், கலாசார சீரழிவு என திட்டமிட்ட முறையில் தமிழர் இனவழிப்பை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகிறது. எமது விடுதலைப் போராட்டத்திற்கு சர்வதேச நாடுகள் ஆதரவளிக்காமைக்காக சொன்ன காரணங்களை கவனத்திற் கொண்டே புலம்பெயர் தமிழ் மக்கள் சர்வதேச நாடுகளின் சட்டங்களுக்கு ஏற்பவும் ஜனநாயக விழுமியங்களை மதித்தும் அதற்கேற்ப தமிழ் மக்களின் அபிலாசை தமிழீழம் ஒன்றே என்பதை சர்வதேச சமூகத்துக்கு மீண்டும் வலியுறுத்தவே நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை தமிழ் மக்கள் அமைத்துள்ளனர். இன்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மேற்கொள்ளும் சுதந்திர சாசன வரைபு தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மேலும் ஒரு மைல்கல். தனித் தமிழீழத்துக்கான வரைபுகள் முன் வைக்கப்படுவது இது தான் முதல் தடவை அல்ல. 1976 ல் வட்டுக் கோட்டைத் தீர்மானமும், 1985 ல் தமீழீழ விடுதலைப் புலிகளால் தமிழீழ சோசலிசக் குடியரசு என்ற வரைபும் முன் வைக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளால் முன் வைக்கப்பட்ட தமிழீழ சோசலிசக் குடியரசு என்ற வரைபானது அனைத்துத் தமிழ் பேசும் மக்களாலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய சகல அம்சங்களையும் உள்ளடக்கிய எந்தக் காலத்துக்கும் பொருத்தமான வரைபென்பது குறிப்பிடத்தக்கதாகும். அந்தவகையில் சர்வதேசத்தின் முன்நிலையில் ஜனநாயக ரீதியில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கமானது தமிழீழ சுதந்திரசாசன வரைபு தொடர்பில் உலகெங்கும் பரந்து வாழும் அனைத்து தமிழ் அமைப்புகளினதும், மக்களினதும் கருத்தினையும் ஆலோசனையையும் அங்கீகாரத்தையும் வேண்டி நிற்கின்றது. தமிழ் மக்களின் விடுதலை வேட்கையின் எண்ணங்களில் இருந்து வரும் கருத்துக்களால் இச்சாசனம் மேலும் மெருகூட்டப்படவுள்ளதால் சர்வதேச நாடுகளால் மறுக்கப்பட முடியாத ஒரு சாசனமாக இது அமையும். எனவே அனைவரும் இதற்கு பூரணமான ஆதரவை வழங்க வேண்டும். அதேவேளையில் தனித் தமிழீழம் குறித்து ஏலவே முன்வைக்கப்பட்ட வரைபுகளுக் கும் முக்கியத்துவம் கொடுத்து அவற்றினையும் முழுமையாக உள்வாங்கி தமிழீழ சுதந்திர சாசனத்தை அனைத்துத் தமிழ்பேசும் மக்களும் ஏற்கக் கூடிய வகையில் நிறைவானதொரு சாசனமாக அமைக்க வேண்டும் என வேண்டிக் கொள்வதுடன், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் தமிழீழ சுதந்திர சாசன வரைபிற்கு எம்முடைய ஆதரவையும் வரவேற்பையும் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் __._,_.___

Saturday, May 18, 2013

தமிழ்ஈழம் மலரத் தமிழ்அறிஞர்களே ! நல்லாற்றுப்படுத்துங்கள்!

(தமிழ் இயக்கங்களின் கூட்டமைப்பு 30.03.2044/12.04.2013 அன்று வள்ளுவர் கோட்டம் அருகே பட்டினிப்போர் நிகழ்த்திய பொழுது வழங்கிய உரை.) தமிழ் இயக்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் தமிழீழம் மலரவும் இனப்படுகொலையாளிகள் தண்டிக்கப்படவும் நடைபெறும் இப்பட்டினிப் போராட்டத்தை ஒருங்கிணைக்கும் பெருங்கவிக்கோ அவர்களுக்கும் பங்கேற்கும் அமைப்பினருக்கும் என் வணக்கங்கள். அழைப்பிதழில், தமிழீழம் மலரவும் போர்க்குற்றவாளி இராசபக்சேவை உலகமன்றில் நிறுத்தித் தண்டனை வழங்கவும் பட்டினிப் போராட்டம் எனக் குறிப்பிட்டு இனப்படுகொலையை மறைத்தது ஏன்? என வா.மு.சே.திருவள்ளுவரிடம் கேட்டேன். உடன் அதைத் திருத்தித் தீர்மானத்தில் இனப்படுகொலை என்ற உண்மையை இடம் பெயரச் செய்தமைக்காக அவருக்குப் பாராட்டுடன் கூடிய நன்றி. தமிழ் ஈழ மக்கள் கூட்டம் கூட்டமாகப் படுகொலை செய்யப்படுவதற்கு முன்பு, சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற படைப்பாளர் பேரவை சார்பான கூட்டத்தில் நான் இனப்படுகொலை குறித்துக் கூறியது நினைவிற்கு வருகின்றது. விடுதலைப்புலிகளின் வீரம் யாருக்கும் சளைத்ததில்லை என்றாலும் நேரிடைப் போராக இல்லாமல் வஞ்சகச் செயலாக உள்ளமையால், போர் நீடிப்பது நல்லதில்லை. போர் நீடித்தாலும் அழிவு. சரண் அடைந்தாலும் அழிவுதான் என்ற நிலையே உள்ளது. எனவே, அவர்களின் வீரத்தைப் பற்றி மட்டும் பாராட்டிக் கொண்டிராமல் படுகொலைகளைத் தடுக்கும் வகையில் உலகெங்கும் உடனடிப் பரப்புரை மேற் கொண்டு வஞ்சகப் போரினை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றேன். எதிரிகளின் வஞ்சகச் செயல்களை நாம் முழுமையாகக் கணிக்கத் தவறியமையால், மாற்றான் வலியை அறிந்த நாம் அவனின் வஞ்சகத்தையும் மாற்றான் துணை வலியையும் உணராக் காரணத்தால், பன்னூறாயிர ஈழத் தமிழர்கள் படுகொலைகளுக்கு ஆளான அவலத்தைச சந்தித்துள்ளோம். படுகொலை வெவ்வேறு வடிவங்களில் ஈழத்தில் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. இதனை நிறுத்தித் தமிழ் ஈழத்தை மலரச் செய்யும் பொறுப்பு படைப்பாளிகளிடம்தான் உள்ளது. படைப்பாளிகள் தமிழக எல்லைக்குள் பரப்புரையை மேற்கொள்ளாமல் பார் முழுவதும் மேற்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் உலக மக்கள் உண்மையை உணர்ந்து தமிழ் ஈழத்தை ஏற்பர். தமிழ் ஈழம் மலரத் தமிழ்அறிஞர்களே! நல்லாற்றுப்படுத்துங்கள்! என்பதே தமிழ்க்காப்புக்கழகம் சார்பிலும் இலக்குவனார் இலக்கிய இணையம் சார்பிலும் இப்போராட்டக்களம் மூலம் நான் விடுக்கும் வேண்டுகோள். பழந்தமிழகத்தில் முடி மன்னர்களுக்குப் புலவர்கள் அறிவுரை கூறினர். அறங்கூறு அவையம் என இருப்பினும் நிறைமாண் புலவர்கள் வேண்டப்படும்பொழுது இடித்துரைக்கத் தவறவில்லை. எனவேதான் செவியறிவுறூஉ என ஓர் இலக்கியத் துறையே உள்ளது. அரசன் ஆற்ற வேண்டிய கடமைகளை அவனுக்கு, முறை தவறாமல் ஆற்றுமாறு அவன் செவியில் கேட்குமாறு அறிவுறுத்துவதே செவியறிவுறூஉ ஆகும். தெய்வப்புலவர் திருவள்ளுவரும் இடித்துரைப்போர் துணையாய் இருப்பின் அவ்வரசைக் கெடுக்க வல்லார் யாருமில்லை என்று, இடிக்குந் துணையாரை யாள்வாரை யாரே கெடுக்குந் தகைமை யவர் (திருக்குறள் 447) என்னும் திருக்குறளில் விளக்குகிறார். அத்தகையோர் இல்லா அரசு தானாகவே அழியும் என்பதையும் இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும் (திருக்குறள் 448) என்னும் திருக்குறளில் விளக்குகிறார். சங்கக்காலத்தில் புலவர் பெருமக்கள் இத்தகைய அறிவுறுத்தும் நற்பணியைச் செய்து வந்தார்கள்; ‘எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே’ எனக் கூறி, வயிற்றை நிரப்புவதைக் குறிக்கோளாகக் கொள்ளாமல், நயந்து பேசி நல்வளம் அடைவதையே இலக்காக எண்ணாமல், உறுதியுடன் அறிவுரை வழங்கினர். அத்தகைய ஆன்றோரும் சான்றோரும் இப்பொழுது ஏன் இல்லை? புலவர் பெருமக்கள் அல்லவா அரசிற்கு - ஆளும் தலைமைக்கு - அல்லன ஆற்றும் பொழுது நல்லன புரிய ஆற்றுப்படுத்தும் பணியைச் செய்ய வேண்டும். பதவி நலன்களுக்காக வாய்மூடி அமைதி காப்பதில் என்ன பயன்? தன்னலம் பேணாமல் பொதுநலம் பேண வேண்டிய தமிழறிஞர்கள் எங்கே சென்று விட்டார்கள்? தமிழ் தமிழ் எனப் பேசி ஆட்சிக்கு வந்தபின்பு தமிழ்ப்பகைவர்களுக்கு முதன்மை கொடுக்கும் பொழுது தட்டிக் கேட்கத் தயங்குவது ஏன்? தங்களின் அரும்பணிகளைப் புறக்கணித்து ஆட்சிக்கு ஏற்பத் தாளம் போடும் அரிதாரம் பூசிகளைச் சிறப்பிக்கும் பொழுது அதையும் தாங்கிக் கொள்வது ஏன்? தனக்குப் பதவி கேட்டால்தானே தனக்காக எதிர்ப்பதாகக் கூற நேரிடலாம். தமிழுக்கு முதன்மை அளித்துத் தமிழர்க்குத் தலைமை அளித்துத் தமிழ்ப்பகைவர்களை அகற்ற அவர்கள் ஆள்வோருக்கு அறிவுறுத்த வேண்டாவா? இத்தகைய பண்பைக் கைக்கொள்ளாததால்தான் ஈழத்தில் இனப்படுகொலை நடந்தும் இடித்துரைக்காமல் கையறுநிலை பாடுகிறார்கள். தமிழ் ஈழத்தில் இனப்படுகொலை நடைபெறுவதற்குக் காரணம் இந்தியத் துணைக்கண்டத்தில் தேசிய இனங்களை அழித்து வரும் பேராயக்கட்சியாகிய காங்கிரசுதான் என்பதை அனைவரும் அறிவர். அக்கட்சியில் தமிழ்ப்புலவர்கள், தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் சிலராவது இல்லையா? இருக்கின்ற பிறராவது கட்சி என்ன செய்தாலும் அதுதான் சரி என வாதுரை செய்யாமல் கட்சியின் தவறுகளையும் கொடுமைகளையும் சுட்டிக்காட்டலாம் அல்லவா? “தன் நாட்டு மக்களைக், குழந்தைகளைக் காக்கும் தாயைப் போலப் பாதுகாக்கவேண்டும்” என்று சேரமான் கருவூரேறிய ஒள்வாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறைக்கு, நரிவெரூஉத்தலையார் அறிவுரை கூறுகிறார். அப்பொழுது புலவர், அருளும் அன்பும் நீக்கி நீங்கா நிரயங் கொள்பவரொடு ஒன்றாது காவல் குழவி கொள்பவரின் ஓம்புமதி; அளிதோ தானேஅது பெறல்அருங் குரைத்தே. (புறநானூறு 5: 5- 8) என்கிறார். “அருளையும் அன்பையும் விலக்கி வைத்து வாழுமிடத்தை நிரயமாக (நரகமாக) ஆக்கிக் கொள்பவர்களோடு சேராதே! தாய், தன் குழந்தையைக் காப்பதுபோல் நாட்டு மக்களைக் காப்பாற்றுவாயாக ! அதுவே செய்தக்க செயல்” என அவர் அறிவுறுத்துவது எக்காலத்திலும் ஆள்வோர் அனைவருக்கும் பொருந்தக்கூடியதல்லவா? இலங்கை மண்ணின் மக்கள் ஆகிய தமிழர்கள் மீது அருளும் இல்லாமல் அன்பும் இல்லாமல் அழித்தொழிக்கும் சிங்களக் கொடுங்கோல் அரசுடன் சேராதே என்றல்லவா அதற்குத் துணை நிற்கும் மத்திய ஆளும் கட்சியாகிய பேராயக் கட்சிக்கு அறிவுரை வழங்கி இருக்க வேண்டும். மாறாக “ முன்பு ஆயுதம் கொடுத்தோம்! பின்பு உணவு கொடுத்தோம்! இப்போது குடியிருப்பு கொடுக்கிறோம்” என்றெல்லாம் தலைமையின் குரலைச் சிந்தனையின்றிப் பரப்பலாமா? “ஆடுகளைப் பலியிடுகின்றாயே” என்று கேட்டால் “நேற்றுவரை அதற்கு வேண்டிய உணவு வகைகளை அளித்ததும் நான்தான்! குளிப்பாட்டி அழகுபடுத்தியதும் நான்தான்! மாலையிட்டுப் போற்றியதும் நான்தான்! என்னைப்போய்க் குற்றம் சொல்லலாமா?” என்பதுபோல் கூறலாமா? “உன் வயிற்றை நிரப்புவதற்காக ஆடுகளின் வயிற்றை நிரப்பி உள்ளாய். உன் நலனுக்காக அவற்றின் நலன்மீது கருத்து செலுத்தி உள்ளாய்! அடிப்படை நோக்கம் அவற்றை அழிப்பதுதானே! இதே போல் தானே ஈழத்தமிழரைக் அரசு காவு கொடுத்துள்ளாய்!” என இடித்துரைக்க வேண்டியவர்கள் கொன்றவனையும் கொல்லத் துணைநின்றவனையும் உத்தமன்போல் காட்டிப் பேசுவது முறைதானா? அறம்தானா? முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்குப் பின்பு வீடு கட்டிக் கொடுக்க உதவுகிறோம் என்றெல்லாம் சொல்வது வஞ்சகத்தனம் இல்லையா? இந்தியப் பொருளுதவி, தமிழர் நிலத்தில் சிங்களக் குடியேற்றம் அமைக்கவும், சிங்களப் படைஞர்கள் முகாம்கள் அமைக்கவும்தானே பெரும்பகுதி பயன்பெறுகிறது. சிறுபான்மை தமிழர்க்கு அளிக்கப்படும் வீடுகளும் மழையில் ஒழுகுவதாகவும் பாதுகாப்பற்றதாகவும்தானே உள்ளன. நிதியுதவி நிதியுதவி என்று சொல்லும் பேராயக்கட்சி அந்த உதவியில் சிங்களர் பெறும் பயன்பற்றி வாய் மூடுவதேன்? தமிழர்க்கு உதவி என்ற பெயரில் இன அழிப்பாளர்களுக்கு உதவும் பேராயக்கட்சியைத் திருத்த இயலாவிடில் துரத்த வேண்டாவா? துறக்க வேண்டாவா? பெரும்பாலோரைக் கொன்று விட்டு எஞ்சியவருக்குப் பிச்சை எடுக்கத் திருவோடு தருகிறோம் என்பதற்கும் காங்கிரசின் பிதற்றலுக்கும் வேறுபாடு உள்ளதா? உரிமை வாழ்வு வந்தவர்களுக்கு ஒத்துழைப்பு தராதிருந்தால்கூடப் பரவாயில்லை. அவர்களை அழித்தொழிக்க எல்லாவகையிலும் எதிராளிக்கு உதவி விட்டு இவர்களுக்கு உதவுவதாகப் பொய்யுரை கூறுவது குறித்துக் கண்டிக்க வேண்டாவா? பிற மாநிலத்தவர் தங்கள் மொழி, இனச் சிக்கல் என்றால் பேராயக்கட்சியைச் சேர்ந்திருந்தாலும் அதன் செயல்பாட்டிற்கு எதிராகக் கிளர்ந்தெழுகிறார்கள் அல்லவா? தமிழகப் பேராயக்கட்சியினர் அவ்வாறு இல்லாமல் மானம் இழந்து கொத்தடிமையாய் இருப்பது ஏன்? “உலக நாடுகளின் உரிமைகளுக்கெல்லாம் குரல் கொடுத்துவிட்டு, நம்முடன் உறவாடும் நற்றமிழர் வாழ்வைச் சிதைக்கலாமா” எனக் கேட்கும் துணிவுகூட இல்லாமல் இருப்பது ஏன்? அவலங்களைத் தட்டிக்கேட்பவனும் அதைத் துடைப்பதற்காகக் குரல் கொடுப்பவனும்தான் உண்மையான படைப்பாளியாக இருக்க முடியும். அவ்வாறு ஒருவர்கூட இக்கட்சியில் இல்லாததன் காரணம் என்ன? நாம் ஆயுதம் கொடுக்காவிட்டால் சீனா கொடுக்கும், பாக்கிசுதான் கொடுக்கும், நம் எதிரிகள் கொடுப்பார்கள் என்று சொல்லும் பொழுது “உன் குடும்பத்தினரைக் கொல்வதற்கு எதிரியின் துணையுடன் ஒருவன் வந்தால் எதிரியின் ஆயுதத்தால் கொல்லாதே! நான் ஆயுதங்கள் தருகிறேன்! அவற்றால் கொல்லு!” என்றா சொல்வாய் எனத் திருப்பிக் கேட்டிருக்க வேண்டாவா? வெளியுறவுக் கொள்கையை மத்திய அரசுதான் முடிவெடுக்கும் எனக் கூறும் பொழுது மாநிலங்கள் இணைந்ததுதான் மத்திய அரசு! வானிலிருந்து குதித்து வந்ததல்ல மத்திய அரசு! எங்கள் நலனுக்கு எதிராக வெறியுறவுக் கொள்கை அமைந்தால் அது வெளியுறவுக் கொள்கையன்று உட்பகைக்கொள்கை! மத்திய அரசை நம்பியுள்ள தமிழர்களை உட்பகையாக எண்ணிக் கழுத்தறுக்கும் கொள்கை! இதை ஒப்பமாட்டோம்! எனச் சீறி இருக்க வேண்டாவா? தமிழக மீனவர்களைத் தொடர்ந்து கொன்று குவிக்கும் சிங்கள நாடு நட்பு நாடு என்றால், தமிழக மீனவர்களின வாழ்வாதாரங்களை அழிக்கும் சிங்கள அரசு நட்பு அரசு என்றால், பகைவனின் நண்பனும் எங்களுக்குப் பகையே! என எச்சரித்திருக்க வேண்டாவா? இலங்கையில் இருந்தும் ஈழத்தில் இருந்தும் ஆதரவு நாடி வரும் தமிழர்களுக்கு ஓர் அளவுகோல்! உகாண்டா முதலான இடங்களில இருந்து வரும் வடவருக்கு ஓர் அளவுகோல்! சிங்களத்தால் தமிழக மீனவர்கள் கொல்லப்படும்பொழுது ஓர் அளவுகோல்! அதே சிங்களத்தால் கேரள மீனவர்கள் கொல்லப்படும் பொழுது ஓர் அளவுகோல்! இவ்வாறு பல்வேறு இரட்டை அளவுகோல்களைத் தமிழர்களிடத்திலும் பிறரிடத்திலும் பயன்படுத்தும் பேராயக்கட்சியை(காங்கிரசை)க் கண்டித்திருக்க வேண்டாவா? அக்கட்சித் தலைவர்களிடம், எங்கள் மண்ணின் நலத்திற்கும் உரிமைக்கும் எதிராகச் செயல்பட்டால் நீங்களும் பகைவரே எனக் கடிந்துரைத்திருக்க வேண்டாவா? அவ்வாறு இல்லாமல் கொலைகாரர்களையும் கொலைக்கூட்டாளிகளையும் பாதுகாவலர் போல் காட்ட முயலலாமா? மத்தியில் இருக்கும் பேராய(காங்.)அரசு தன் வெளியுறவுக் கொள்கை என்பது மனித நேய அடிப்படையிலானது எனச் செயல்பட்டிருந்தால், பன்னூறாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் காப்பாற்றப்பட்டிருப்பார்களே! வேறு யாரும் போராடத் தேவை இருந்திருக்காதே! சிறப்பாகச் செயல்பட்டு வந்த தமிழீழ அரசு உலக நாடுகளால் ஏற்கப்பட்டு அதன் கொடி பட்டொளி வீசி உலகநாடுகளில் பறந்திருக்குமே! தமிழக மீனவர்கள் தங்கள் உயிரையும் வாழ்வையும் தொலைத்து நிற்கும் அவலநிலை தடுக்கப்பட்டிருக்குமே! பிறரின் ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் தேவையற்றனவாய் அமைந்திருக்குமே! உலக நாடுகளிடையே இந்தியாவின் மதிப்பும் உயர்ந்திருக்குமே! இந்தியாவின் நட்பு நாடாகத் தமிழ் ஈழம் திகழ்ந்து இந்தியாவின் ஆக்கப் பணிகளுக்கு உதவியாக இருந்திருக்குமே! ஆனால், அக்கட்சியில் உள்ளவர்கள் பிற கட்சியினர் போல் கொத்தடிமைகளாக உள்ளமையால் கட்சி என்ன செய்தாலும் அதுவே சரி என வாதிட்டு நமக்குக் கேடு விளைவிக்கின்றனரே! இனியேனும் திருந்துவார்களா! வெளிப்படையாகத் தம் கட்சியைக் கண்டிக்க மனம் இல்லாவிட்டாலும் கட்சி மட்டத்திலாவது எதிர்ப்புக் குரலை எழுப்புவார்களா? திருச்சியில் மாணாக்கர்கள் மீது உருட்டைக்கட்டைகளால் தாக்கிவிட்டு அது திட்டமிட்ட செயலல்ல என உங்கள் கட்சித் தலைவர் கூறுகிறாரே! திட்டமிடவில்லை என்றால் குண்டர்கள் ஒவ்வொருவர் கையிலும் குண்டாந்தடி இருந்தது எப்படி? 1965இல் மதுரையில் உங்கள் கட்சி அலுவலகத்தில் இருந்து வந்து அரிவாளால் மாணாக்கர்களை வெட்டியதன் விளைவு இன்றைக்குத் தமிழக மக்களால் ஓட ஓட விரட்டப்படுகிறீர்கள். இப்பொழுது இந்திய அரசியலில் இருந்தே விரட்டப்படும் நிலைக்கு ஆளாகின்றீர்கள். இவற்றை எல்லாம் தெரிந்திருந்தும் “தமிழுக்குப் பகையாக நடக்கும் பேராயத்தின்(காங்கிரசின்) செயற்பாடுகள் தொடர்ந்தால் நாங்களும் கட்சியைத் துறப்போம்” எனத் தலைமைக்கு எச்சரிக்கை கொடுத்திருக்க வேண்டாவா? நீங்கள் எல்லாம் தமிழரா? வடவரா? சிங்களவரா? தமிழர் எனில் உங்கள் எழுத்தாலும் பேச்சாலும் வற்புறுத்தலாலும் கொலைகாரப் பேராயக்கட்சியின் கொலைகளுக்கு முற்றுப்புள்ளி இட வைத்திருக்க வேண்டாவா? அல்லல்பட்டு ஆற்றாது அழும் மக்களைப் பார்த்த பின்பும் நீங்கள் அமைதி காக்கிறீர்கள் என்றால் நீங்கள் படித்த அறநெறி இலக்கியங்களால் என்ன பயன்? நிரயம்(நரகம்) புகுவோனிடம் சேரும் நீங்களும் நிரயம்(நரகம்)தானே புகுவீர்கள்! படிப்பால் பண்பட்டுப் பிறரையும் பண்படுத்துவதுதானே முறை! இதனை உணர்ந்தும் கொலைகாரக் கட்சியை நல்வழிப்படுத்தாவிடிலோ அதற்குச் சாவுமணி அடிக்காவிட்டாலோ என்ன பயன்? பிறர் நலம் போற்றுபவர்களால்தான் இவ்வுலகம் இயங்குகின்றது என்பது தமிழ் நெறியன்றோ! நீங்களோ நம் இனத்தவர் நலன் சிதைக்கப்படும் பொழுது, பதவி நலன், வாழ்வு நலன் முதலியனவற்றிற்காக வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளீர்களே! வேடிக்கை பார்ப்பதுடன் நில்லாது கொடுஞ்செயல்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவ்வாறு செய்பவர்களைப் பாராட்டுகின்றீர்களே! இனியேனும் மாறுவீர்களா? வரலாற்றில் உங்களுக்கு ஏற்படும் பழியிலிருந்து காத்துக் கொள்ள முன் வருவீர்களா? தமிழ் ஈழ மக்களை இனப்படுகொலை புரிந்தவர்களைத் தண்டிப்பதற்கும் தமிழ் ஈழ அரசு புத்துயிர் பெற்று உலகவரால் ஏற்கப்படவும் ஆவன செய்வீர்களா? உங்கள் நெஞ்சில் சிறிதேனும் ஈரம் இருந்தால், தன்மான உணர்வு கொஞ்சமாவது இருந்தால், தலைமைக்குத் துதி பாடும் கொத்தடிமைத் தனத்தை விட்டொழியுங்கள். உங்கள் கட்சியில் தமிழர்க்கான, ஈழத்தமிழர்க்கான உரிமைக்குரலை எழுப்பி ஆவன செய்யுங்கள்! செய்வீர்களா? மத்தியில் குறிப்பிடத்தக்க மற்றொரு கட்சி பாரத மக்கள் கட்சி(பாரதிய சனதா கட்சி). ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே சமயம் எனக் கொடி தூக்கி நாட்டை அழித்து வரும் கட்சி. அக்கட்சியில் உள்ள சிலவாகிய தமிழறிஞர்கள், இமயம் முதல் குமரி வரை ஆண்ட மொழி தமிழ் என்பதை உணர்த்தியிருக்க வேண்டாவா? ஆரியமும் நமக்கு அயல்தான் என்பதை எடுத்துரைத்திருக்க வேண்டவா? வாசுபாய் போன்ற மிகச்சிலர் தனிப்பட்ட முறையில் ஈழத்தமிழர் நலன் காக்க, இந்தியப் படை உதவியைச் சிங்களத்திற்கு மறுத்திருக்கலாம். எனினும் பொதுவாக இக் கட்சியும் தமிழ்ப்பகைக்கட்சியாகத்தானே செயல்படுகிறது. தமிழ்நாட்டிற்கு வந்து மீனவர் நலனுக்காக உரத்துக் குரல் கொடுத்த கட்சித்தலைவி சுசுமா சுவராசு இந்தியா நாடாளுமன்றத்தில் இலங்கை தொடர்பான தீர்மானம் வரவிடாமல் தடுத்தார் அல்லவா? இந்த நடிப்பு கண்டு கொதித்தெழுந்து, இந் நாடகம் தொடர்ந்தால் தமிழ்நாட்டை மறந்து விட வேண்டியதுதான் எனச் சொல்லி இருக்க வேண்டாவா? இன்றைக்கு யசுவந்து சின்கா தமிழ் ஈழமே தீர்வு எனப் பேசுவதால் பழையனவற்றை மறப்போம்.! இப்பொழுதேனும் அக் கட்சிக்கு எடுத்துரைக்க வேண்டியது என்ன? தமிழ் நாட்டில் ஒன்றும் வடக்கே ஒன்றுமாகப் பேசி ஏமாற்றும் வேலையில் ஈடுபடக்கூடாது என எச்சரிக்க வேண்டும். அடுத்ததாக, உண்மையை உணர்ந்து தமிழ் ஈழத்தை ஆதரிப்பதை உறுதிப்படுத்த அக்கட்சி ஆளும் மாநிலங்களிலும் உள்ளாட்சி அமைப்புகளிலும் தமிழக அரசைப் பின்பற்றி, தமிழீழப் பொதுவாக்கெடுப்பிற்கும் இனப் படுகொலையாளர்கள் தண்டிக்கப்படவும் தீர்மானம் இயற்றச் செய்ய வேண்டும். இக்கட்சி ஆளும் மாநிலங்களில் தமிழ் ஈழத்தை ஏற்பதாகவும் இந்திய நாடாளுமன்றமும் பிற உலக நாடுகளும் இவ்வாறு தீர்மானம் இயற்ற வேண்டும் எனவும் ஒரு தீர்மானம் இயற்ற வேண்டும். இல்லையேல் தேர்தலுக்கான நாடகம் என்றாகிவிடும். தமிழீழம் என்பது பாரத மக்கள் கட்சியின்(பா.ச.க.வின்) உண்மை முகமா அல்லது முகமூடியா என்பதை உணர்த்தச் செய்ய வேண்டும். கட்சியின் குரலுக்கேற்ப தாளம் போடாமல், இவ்வாறு துணிந்து அறிவுரை கூறும் பக்குவத்தை இக்கட்சியின் தமிழ்அறிஞர்களும் தமிழ் ஆர்வலர்களும் பெற வேண்டும். கொத்தடிமைத்தனத்தில் இன்பம் காணும்வரை உண்மைக்காகக் குரல் கொடுக்க முடியாது என்பதை உணர வேண்டும்! இனியேனும் இவ்வாறு நல்லாற்றுப்படுத்துவார்களா? ஆதரவு காட்டுவதுபோல் பேசிக் கழுத்தறுக்கும் கட்சி பற்றி இங்கே கூற வேண்டும். மூளைச்சலவை செய்யப்பட்ட அதன் தொண்டர்கள் திசைமாறுகிறார்கள் என்பதால் அவர்களைப்பற்றியும் கூற வேண்டும். இலங்கைத் தமிழர்களின் உரிமைக்குக் குரல் கொடுக்கிறார்களாம்! நல்வாழ்விற்குக் கொடி பிடிப்பார்களாம்! ஆனால், அவர்கள் ஒன்றுபட்ட இலங்கைக்குள் வாழ வேண்டுமாம்! அவர்களின் உரிமைக்கும் தேவைக்கும் வாழ்வு நலன்களுக்கும் மாறாகக் குரல் கொடுக்க இவர்கள் யார்? உடம்பாடு இலாதவர் வாழ்க்கை-குடங்கருள் பாம்போடு உடன் உறைந்தற்று (திருக்குறள் 890) என்னும் குறள் மூலம் உடன்பாடு இல்லாதவருடன் சேர்ந்து வாழ்பவருக்குக் குடத்தில் பாம்புடன் வாழ்பவருக்கு ஏற்படுவதுபோல் அழிவு உறுதி என்கிறார் தெய்வப்புலவர். அதுமட்டுமல்ல! செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே உட்பகை உற்ற குடி (திருக்குறள் 887) என்று உட்பகை கொண்ட குடியுடன் கூடி வாழ முடியாது என்கின்றார் தெய்வப்புலவர். ஆனால், அயல்நாட்டு மூளையை இரவலாகப் பெற்றுச் சிந்திப்பவர்கள், சீனாவின் நண்பன் சிங்களம் என்பதால் ஒருமைப்பாடு பற்றிக் கூவுகிறார்கள். தமிழர் நலன் காக்கும் வகையில் நடந்து கொள்ளாவிட்டால் சீனாவிலும் சிங்களத்திலும் கட்சியை நடத்துங்கள்! தமிழ்நாட்டின் பக்கம் வராதீர்கள்! என இடித்துரைக்க வேண்டாவா? உலகில் எங்கே அடக்குமுறை நிகழ்ந்தாலும் செங்கொடி தூக்குபவர்கள், இங்கே ஈழத்தில் மட்டும் இனப்படுகொலை நடக்கும் பொழுது அதை மறைத்து வைப்பது ஏன்? பொதுவுடைமை நாடுகள் சிங்களத்தின் பக்கம் இருக்கின்றன என்றால் அந்நாடுகளை நல்வழிப்படுத்தாமல் தாமும் அவர்கள் பக்கம் சாய்வது ஏன்? சாய்வதைத்தான் வெளிப்படையாக அறிவித்தால் என்ன? தமிழ்நாட்டில் அரசியல் நடத்த முடியாது என்ற அச்சம்தானே! ஈழத்தமிழர் நலன்களுக்குச் சார்பாகப் பேசுவதுபோல் அவர்களின் உரிமைக்கும் கருத்திற்கும் மாறாகப் பரப்புரை மேற்கொள்வது ஏன்? செஞ்சட்டைப் படைப்பாளர்கள் அவர்களை இடித்துரைத்திருக்க வேண்டாவா? தேசிய இன விடுதலை என்றெல்லாம் பேசுபவர்கள் கொத்தடிமையாக இருப்பது ஏன்? கொத்தடிமைத் தனத்திலிருந்து விடுபட்டால்தானே கட்சித்தலைமைக்கு உண்மையை மூடி மறைக்கும் செயலில் இருந்து விடுபட்டு ஈழ உரிமைக்குக் குரல் கொடுக்கச்செய்ய முடியும். உண்மையான பொதுவுடைமையாளர்களாக விளங்க வேண்டும் என்றால் தமிழ் ஈழம்பக்கம் துணை நிற்க வேண்டும் எனப் படைப்பாளர்களே ஆற்றுப்படுத்துங்கள்! தமிழ்நாட்டிலும் மத்தியிலும் பன்முறை ஆண்ட கட்சியாகவும் ஆட்சிக்கனவில் மிதக்கும் கட்சியாகவும் உள்ளது தி.மு.க.. பிற கட்சிகளுடன் ஒப்பிடுகையில் தமிழ் உணர்வாளர்கள் மிகுதியாக உள்ள கட்சி இதுதான். நேரடியாக இணைந்தும் சார்ந்தும் உள்ள தமிழ்ப்புலவர்கள், தமிழறிஞர்கள் மிகுதியாக இங்குதான் உள்ளனர். ஆனால் தமிழ்ப்புலவர்களுக்கு இருக்க வேண்டிய அஞ்சாமையும் துணிவும் எங்கே போயின? தலைமை தடுமாறும் பொழுது தட்டிக் கேட்காமல் தாலாட்டு பாடுவது ஏன்? முன்பு பெருங்காயம் இருந்த வெறும் குப்பியை எத்தனைக்காலத்திற்குத்தான் காட்டி ஏமாற்ற முடியும்? ‘‘நேற்று முன் நாள் நான் இப்படிச் செய்தேனே! நேற்று அப்படிச் செய்தேனே!’’ என்பதெல்லாம் மக்களுக்கு முதன்மை இல்லை. “இன்று என்ன செய்தாய்” என்பதுதான் அவர்களது கேள்வி. ஒரு வழக்குமொழி கூட உண்டு. "நாள்தோறும் போடாத சீதேவி இன்று அரிசி கொடுத்தாள்; என்றும் போடும் மூதேவிக்கு இன்று என்ன வந்தது? ஒன்றும் தரவில்லை" எனப் பிச்சை எடுப்பவர் கூறுவதாகக் கூறுவர். இதுதான் மக்கள் மனநிலை. எனவே, இன்றைக்குக் கொலைகாரக் கூட்டாளிக்குத் துணை நின்றுவிட்டுப் பழங்கதைப் பேசிப் பயனில்லை. நாம் தடம் மாறத் தடம் மாற மக்கள் வேறு திசையில் செல்கின்றார்கள் என்றெல்லாம் முது பெரும் தலைவருக்கு இடித்து உரைத்திருக்க வேண்டாவா? இதற்கு முன்பு உயிர்காக்கும் மருந்து கொடுத்ததும் உண்மை! அது பயனளித்ததும் உண்மை! ஆனால், அதே மருந்து காலக்கெடு முடிந்து நஞ்சான பின்பும் அதைத்தான் தருவேன் என்பதில் என்ன பயன்? அம் மருந்தைத் தூக்கி எறியாமல் பாதுகாத்து என்ன பயன்? அதைப்போல்தான் ஈழத்தமிழர் நலன் காக்க முன்பு குரல் கொடுத்ததை வைத்துக் கொண்டு, இப்போது மறைமுகமாகச் சிங்களக் கூட்டாளியாகச் செயல்படுவதை மறைப்பது. இதனை, வீட்டு மக்கள் நலனை முன்னிறுத்தி நாட்டு மக்கள் நலனை மறக்கும் பொழுது எடுத்துரைத்திருக்க வேண்டாவா? தமிழ் என்றால் வீரம் என்றும் பொருள் உண்டல்லவா? இவர்கள் தமிழ் படித்து என்ன பயன்? படித்த தமிழைத் தமிழர் நலனுக்காகப் பயன்படுத்தாத பொழுது, அத்தமிழால் பிழைப்பது கண்டு நாணுற வேண்டாவா? சென்னைக்கு வந்து சேர வேண்டிய தொடரியை ஓட்டுபவர், நான் செங்கல்பட்டு வரை ஓட்டி வந்து விட்டேன். அதன் பின்தானே தடம் புரளச் செய்தேன் என்றால் யாரேனும் பாராட்டுவார்களா? தடம் புரளச் செய்து பல்லாயிரவர் இறக்கக் காரணமானவர் என்பதால் தண்டிப்பார்களா? இலங்கைத் தமிழர் நலனுக்காகப் பாடுபட்டதெல்லாம் எப்பொழுது பாராட்டப்படும்? அதே நிலையில் இருந்து வெற்றியை ஈட்டினால் அல்லவா தட்டிக கொடுத்துப் பாராட்டு மாலை அணிவிப்பார்கள். இல்லாமல், பேரறிஞர் அண்ணாவாலும் தமிழக மக்களாலும் விரட்டியடிக்கப்பட்ட பேராய(காங்கிரசு)க் கட்சியுடன் இணைந்திருக்க வேண்டிய குடும்ப நலனுக்காக, இனப்படுகொலையைக் கண்டும் காணாமல் மறைமுக உடந்தையாக இருந்தமைக்காகத், தட்டிப்போட்டு ஓரங்கட்டுவார்களா? இதனை எடுத்தியம்பத் தமிழறிஞர்கள் தயங்கியது ஏன்? பெருங்கவிக்கோ அவர்களே! அரசியல் பேச வேண்டா என்கின்றீர்கள். அரசியல் இல்லாமல் வாழ்க்கை இல்லை. தொகுப்பாளரும் வேறு சிலரும் தி.மு.க.வைப் பாராட்டினார்களே! அந்த அரசியல் பேச்சை ஏன் நிறுத்தச் சொல்லவில்லை. அன்பு நண்பர் ஒருவர், தான் பேசும் பொழுது நெருக்கடிநிலையால் மிகுதியும் துன்பத்திற்கு ஆளானது தி.மு.க.வினர் என்றும் அவர்களை மறு முறை தேர்ந்தெடுக்காமல் தமிழ் மக்கள் கொடுமை இழைத்து விட்டதாகவும் கூறினாரே! மீண்டும் கலைஞரைத்தான் ஆட்சியில் அமர்த்தவேண்டும் என்றாரே! அது கட்சி அரசியல் இல்லையா? அவரைப் பேசவிட்ட நீங்கள் என் பேச்சைத் தடுக்கக்கூடாது. தி.மு.க.வினரைக் கொடுமை படுத்திய கட்சியுடன் அதன் தலைவரே உறவு கொண்டாடும் பொழுது அவர்கள் பட்ட இன்னல்களை மறந்து விட்டார் என்றுதானே பொருள்! அவ்வாறாயின் பிறர் ஏன் நினைவு கொள்ள வேண்டும். பேராயக்கட்சியுடனான உறவைத் தமிழர் நலனுக்குப் பயன்படுத்தாமல்போனது ஏன்? குசரால் அமைச்சரவையில் இருந்து தி.மு.க.வை விரட்ட வேண்டும் என்ற பேராயக்கட்சியின் தீர்மானத்தைச் செய்தியாளர்களிடம் கூறுகையில் கடுமையான சொற்களைக் கூறியவர் பிரணாப் முகர்சி. அவர்தான் முதுபெரும்தலைவரின் நெடுங்காலக் கெழுதகை நண்பராம்! அக் கெழுதகை நண்பர் அடிக்கடிச்சிங்கள அரசாளர்களைச் சந்தித்து வந்தாரே! எதற்கு? ஈழத்தமிழர் நலன்களைக் காக்கவா? அழிக்கவா? இனப்படுகொலைகளை விரைந்து நடத்தத்தானே அறிவுரை வழங்கினார் எனச் சொல்லப்படுகின்றது. தம் நட்புரிமையைப் பயன்படுத்தி அதை ஏன் தடுக்க வில்லை? “ஊழலைப்பற்றிச் சொல்லும் பொழுது பேராயக்கட்சியின் ஊழலுக்கு இணையாக யாரையும் கூறமுடியாது என்றோம்! தம் குடும்பத்தவரையே முதன்மைப் பதவிகளில் அமர்த்திய பொழுது எல்லா அரசியல் தலைவர்களும் அவ்வாறுதானே செய்கின்றார்கள் என்றோம்! கிழவர் அணியா? இளைஞர் அணியா

தமிழ்ஈழம் மலரத் தமிழ்அறிஞர்களே ! நல்லாற்றுப்படுத்துங்கள்!

(தமிழ் இயக்கங்களின் கூட்டமைப்பு 30.03.2044/12.04.2013 அன்று வள்ளுவர் கோட்டம் அருகே பட்டினிப்போர் நிகழ்த்திய பொழுது வழங்கிய உரை.) தமிழ் இயக்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் தமிழீழம் மலரவும் இனப்படுகொலையாளிகள் தண்டிக்கப்படவும் நடைபெறும் இப்பட்டினிப் போராட்டத்தை ஒருங்கிணைக்கும் பெருங்கவிக்கோ அவர்களுக்கும் பங்கேற்கும் அமைப்பினருக்கும் என் வணக்கங்கள். அழைப்பிதழில், தமிழீழம் மலரவும் போர்க்குற்றவாளி இராசபக்சேவை உலகமன்றில் நிறுத்தித் தண்டனை வழங்கவும் பட்டினிப் போராட்டம் எனக் குறிப்பிட்டு இனப்படுகொலையை மறைத்தது ஏன்? என வா.மு.சே.திருவள்ளுவரிடம் கேட்டேன். உடன் அதைத் திருத்தித் தீர்மானத்தில் இனப்படுகொலை என்ற உண்மையை இடம் பெயரச் செய்தமைக்காக அவருக்குப் பாராட்டுடன் கூடிய நன்றி. தமிழ் ஈழ மக்கள் கூட்டம் கூட்டமாகப் படுகொலை செய்யப்படுவதற்கு முன்பு, சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற படைப்பாளர் பேரவை சார்பான கூட்டத்தில் நான் இனப்படுகொலை குறித்துக் கூறியது நினைவிற்கு வருகின்றது. விடுதலைப்புலிகளின் வீரம் யாருக்கும் சளைத்ததில்லை என்றாலும் நேரிடைப் போராக இல்லாமல் வஞ்சகச் செயலாக உள்ளமையால், போர் நீடிப்பது நல்லதில்லை. போர் நீடித்தாலும் அழிவு. சரண் அடைந்தாலும் அழிவுதான் என்ற நிலையே உள்ளது. எனவே, அவர்களின் வீரத்தைப் பற்றி மட்டும் பாராட்டிக் கொண்டிராமல் படுகொலைகளைத் தடுக்கும் வகையில் உலகெங்கும் உடனடிப் பரப்புரை மேற் கொண்டு வஞ்சகப் போரினை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றேன். எதிரிகளின் வஞ்சகச் செயல்களை நாம் முழுமையாகக் கணிக்கத் தவறியமையால், மாற்றான் வலியை அறிந்த நாம் அவனின் வஞ்சகத்தையும் மாற்றான் துணை வலியையும் உணராக் காரணத்தால், பன்னூறாயிர ஈழத் தமிழர்கள் படுகொலைகளுக்கு ஆளான அவலத்தைச சந்தித்துள்ளோம். படுகொலை வெவ்வேறு வடிவங்களில் ஈழத்தில் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. இதனை நிறுத்தித் தமிழ் ஈழத்தை மலரச் செய்யும் பொறுப்பு படைப்பாளிகளிடம்தான் உள்ளது. படைப்பாளிகள் தமிழக எல்லைக்குள் பரப்புரையை மேற்கொள்ளாமல் பார் முழுவதும் மேற்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் உலக மக்கள் உண்மையை உணர்ந்து தமிழ் ஈழத்தை ஏற்பர். தமிழ் ஈழம் மலரத் தமிழ்அறிஞர்களே! நல்லாற்றுப்படுத்துங்கள்! என்பதே தமிழ்க்காப்புக்கழகம் சார்பிலும் இலக்குவனார் இலக்கிய இணையம் சார்பிலும் இப்போராட்டக்களம் மூலம் நான் விடுக்கும் வேண்டுகோள். பழந்தமிழகத்தில் முடி மன்னர்களுக்குப் புலவர்கள் அறிவுரை கூறினர். அறங்கூறு அவையம் என இருப்பினும் நிறைமாண் புலவர்கள் வேண்டப்படும்பொழுது இடித்துரைக்கத் தவறவில்லை. எனவேதான் செவியறிவுறூஉ என ஓர் இலக்கியத் துறையே உள்ளது. அரசன் ஆற்ற வேண்டிய கடமைகளை அவனுக்கு, முறை தவறாமல் ஆற்றுமாறு அவன் செவியில் கேட்குமாறு அறிவுறுத்துவதே செவியறிவுறூஉ ஆகும். தெய்வப்புலவர் திருவள்ளுவரும் இடித்துரைப்போர் துணையாய் இருப்பின் அவ்வரசைக் கெடுக்க வல்லார் யாருமில்லை என்று, இடிக்குந் துணையாரை யாள்வாரை யாரே கெடுக்குந் தகைமை யவர் (திருக்குறள் 447) என்னும் திருக்குறளில் விளக்குகிறார். அத்தகையோர் இல்லா அரசு தானாகவே அழியும் என்பதையும் இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும் (திருக்குறள் 448) என்னும் திருக்குறளில் விளக்குகிறார். சங்கக்காலத்தில் புலவர் பெருமக்கள் இத்தகைய அறிவுறுத்தும் நற்பணியைச் செய்து வந்தார்கள்; ‘எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே’ எனக் கூறி, வயிற்றை நிரப்புவதைக் குறிக்கோளாகக் கொள்ளாமல், நயந்து பேசி நல்வளம் அடைவதையே இலக்காக எண்ணாமல், உறுதியுடன் அறிவுரை வழங்கினர். அத்தகைய ஆன்றோரும் சான்றோரும் இப்பொழுது ஏன் இல்லை? புலவர் பெருமக்கள் அல்லவா அரசிற்கு - ஆளும் தலைமைக்கு - அல்லன ஆற்றும் பொழுது நல்லன புரிய ஆற்றுப்படுத்தும் பணியைச் செய்ய வேண்டும். பதவி நலன்களுக்காக வாய்மூடி அமைதி காப்பதில் என்ன பயன்? தன்னலம் பேணாமல் பொதுநலம் பேண வேண்டிய தமிழறிஞர்கள் எங்கே சென்று விட்டார்கள்? தமிழ் தமிழ் எனப் பேசி ஆட்சிக்கு வந்தபின்பு தமிழ்ப்பகைவர்களுக்கு முதன்மை கொடுக்கும் பொழுது தட்டிக் கேட்கத் தயங்குவது ஏன்? தங்களின் அரும்பணிகளைப் புறக்கணித்து ஆட்சிக்கு ஏற்பத் தாளம் போடும் அரிதாரம் பூசிகளைச் சிறப்பிக்கும் பொழுது அதையும் தாங்கிக் கொள்வது ஏன்? தனக்குப் பதவி கேட்டால்தானே தனக்காக எதிர்ப்பதாகக் கூற நேரிடலாம். தமிழுக்கு முதன்மை அளித்துத் தமிழர்க்குத் தலைமை அளித்துத் தமிழ்ப்பகைவர்களை அகற்ற அவர்கள் ஆள்வோருக்கு அறிவுறுத்த வேண்டாவா? இத்தகைய பண்பைக் கைக்கொள்ளாததால்தான் ஈழத்தில் இனப்படுகொலை நடந்தும் இடித்துரைக்காமல் கையறுநிலை பாடுகிறார்கள். தமிழ் ஈழத்தில் இனப்படுகொலை நடைபெறுவதற்குக் காரணம் இந்தியத் துணைக்கண்டத்தில் தேசிய இனங்களை அழித்து வரும் பேராயக்கட்சியாகிய காங்கிரசுதான் என்பதை அனைவரும் அறிவர். அக்கட்சியில் தமிழ்ப்புலவர்கள், தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் சிலராவது இல்லையா? இருக்கின்ற பிறராவது கட்சி என்ன செய்தாலும் அதுதான் சரி என வாதுரை செய்யாமல் கட்சியின் தவறுகளையும் கொடுமைகளையும் சுட்டிக்காட்டலாம் அல்லவா? “தன் நாட்டு மக்களைக், குழந்தைகளைக் காக்கும் தாயைப் போலப் பாதுகாக்கவேண்டும்” என்று சேரமான் கருவூரேறிய ஒள்வாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறைக்கு, நரிவெரூஉத்தலையார் அறிவுரை கூறுகிறார். அப்பொழுது புலவர், அருளும் அன்பும் நீக்கி நீங்கா நிரயங் கொள்பவரொடு ஒன்றாது காவல் குழவி கொள்பவரின் ஓம்புமதி; அளிதோ தானேஅது பெறல்அருங் குரைத்தே. (புறநானூறு 5: 5- 8) என்கிறார். “அருளையும் அன்பையும் விலக்கி வைத்து வாழுமிடத்தை நிரயமாக (நரகமாக) ஆக்கிக் கொள்பவர்களோடு சேராதே! தாய், தன் குழந்தையைக் காப்பதுபோல் நாட்டு மக்களைக் காப்பாற்றுவாயாக ! அதுவே செய்தக்க செயல்” என அவர் அறிவுறுத்துவது எக்காலத்திலும் ஆள்வோர் அனைவருக்கும் பொருந்தக்கூடியதல்லவா? இலங்கை மண்ணின் மக்கள் ஆகிய தமிழர்கள் மீது அருளும் இல்லாமல் அன்பும் இல்லாமல் அழித்தொழிக்கும் சிங்களக் கொடுங்கோல் அரசுடன் சேராதே என்றல்லவா அதற்குத் துணை நிற்கும் மத்திய ஆளும் கட்சியாகிய பேராயக் கட்சிக்கு அறிவுரை வழங்கி இருக்க வேண்டும். மாறாக “ முன்பு ஆயுதம் கொடுத்தோம்! பின்பு உணவு கொடுத்தோம்! இப்போது குடியிருப்பு கொடுக்கிறோம்” என்றெல்லாம் தலைமையின் குரலைச் சிந்தனையின்றிப் பரப்பலாமா? “ஆடுகளைப் பலியிடுகின்றாயே” என்று கேட்டால் “நேற்றுவரை அதற்கு வேண்டிய உணவு வகைகளை அளித்ததும் நான்தான்! குளிப்பாட்டி அழகுபடுத்தியதும் நான்தான்! மாலையிட்டுப் போற்றியதும் நான்தான்! என்னைப்போய்க் குற்றம் சொல்லலாமா?” என்பதுபோல் கூறலாமா? “உன் வயிற்றை நிரப்புவதற்காக ஆடுகளின் வயிற்றை நிரப்பி உள்ளாய். உன் நலனுக்காக அவற்றின் நலன்மீது கருத்து செலுத்தி உள்ளாய்! அடிப்படை நோக்கம் அவற்றை அழிப்பதுதானே! இதே போல் தானே ஈழத்தமிழரைக் அரசு காவு கொடுத்துள்ளாய்!” என இடித்துரைக்க வேண்டியவர்கள் கொன்றவனையும் கொல்லத் துணைநின்றவனையும் உத்தமன்போல் காட்டிப் பேசுவது முறைதானா? அறம்தானா? முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்குப் பின்பு வீடு கட்டிக் கொடுக்க உதவுகிறோம் என்றெல்லாம் சொல்வது வஞ்சகத்தனம் இல்லையா? இந்தியப் பொருளுதவி, தமிழர் நிலத்தில் சிங்களக் குடியேற்றம் அமைக்கவும், சிங்களப் படைஞர்கள் முகாம்கள் அமைக்கவும்தானே பெரும்பகுதி பயன்பெறுகிறது. சிறுபான்மை தமிழர்க்கு அளிக்கப்படும் வீடுகளும் மழையில் ஒழுகுவதாகவும் பாதுகாப்பற்றதாகவும்தானே உள்ளன. நிதியுதவி நிதியுதவி என்று சொல்லும் பேராயக்கட்சி அந்த உதவியில் சிங்களர் பெறும் பயன்பற்றி வாய் மூடுவதேன்? தமிழர்க்கு உதவி என்ற பெயரில் இன அழிப்பாளர்களுக்கு உதவும் பேராயக்கட்சியைத் திருத்த இயலாவிடில் துரத்த வேண்டாவா? துறக்க வேண்டாவா? பெரும்பாலோரைக் கொன்று விட்டு எஞ்சியவருக்குப் பிச்சை எடுக்கத் திருவோடு தருகிறோம் என்பதற்கும் காங்கிரசின் பிதற்றலுக்கும் வேறுபாடு உள்ளதா? உரிமை வாழ்வு வந்தவர்களுக்கு ஒத்துழைப்பு தராதிருந்தால்கூடப் பரவாயில்லை. அவர்களை அழித்தொழிக்க எல்லாவகையிலும் எதிராளிக்கு உதவி விட்டு இவர்களுக்கு உதவுவதாகப் பொய்யுரை கூறுவது குறித்துக் கண்டிக்க வேண்டாவா? பிற மாநிலத்தவர் தங்கள் மொழி, இனச் சிக்கல் என்றால் பேராயக்கட்சியைச் சேர்ந்திருந்தாலும் அதன் செயல்பாட்டிற்கு எதிராகக் கிளர்ந்தெழுகிறார்கள் அல்லவா? தமிழகப் பேராயக்கட்சியினர் அவ்வாறு இல்லாமல் மானம் இழந்து கொத்தடிமையாய் இருப்பது ஏன்? “உலக நாடுகளின் உரிமைகளுக்கெல்லாம் குரல் கொடுத்துவிட்டு, நம்முடன் உறவாடும் நற்றமிழர் வாழ்வைச் சிதைக்கலாமா” எனக் கேட்கும் துணிவுகூட இல்லாமல் இருப்பது ஏன்? அவலங்களைத் தட்டிக்கேட்பவனும் அதைத் துடைப்பதற்காகக் குரல் கொடுப்பவனும்தான் உண்மையான படைப்பாளியாக இருக்க முடியும். அவ்வாறு ஒருவர்கூட இக்கட்சியில் இல்லாததன் காரணம் என்ன? நாம் ஆயுதம் கொடுக்காவிட்டால் சீனா கொடுக்கும், பாக்கிசுதான் கொடுக்கும், நம் எதிரிகள் கொடுப்பார்கள் என்று சொல்லும் பொழுது “உன் குடும்பத்தினரைக் கொல்வதற்கு எதிரியின் துணையுடன் ஒருவன் வந்தால் எதிரியின் ஆயுதத்தால் கொல்லாதே! நான் ஆயுதங்கள் தருகிறேன்! அவற்றால் கொல்லு!” என்றா சொல்வாய் எனத் திருப்பிக் கேட்டிருக்க வேண்டாவா? வெளியுறவுக் கொள்கையை மத்திய அரசுதான் முடிவெடுக்கும் எனக் கூறும் பொழுது மாநிலங்கள் இணைந்ததுதான் மத்திய அரசு! வானிலிருந்து குதித்து வந்ததல்ல மத்திய அரசு! எங்கள் நலனுக்கு எதிராக வெறியுறவுக் கொள்கை அமைந்தால் அது வெளியுறவுக் கொள்கையன்று உட்பகைக்கொள்கை! மத்திய அரசை நம்பியுள்ள தமிழர்களை உட்பகையாக எண்ணிக் கழுத்தறுக்கும் கொள்கை! இதை ஒப்பமாட்டோம்! எனச் சீறி இருக்க வேண்டாவா? தமிழக மீனவர்களைத் தொடர்ந்து கொன்று குவிக்கும் சிங்கள நாடு நட்பு நாடு என்றால், தமிழக மீனவர்களின வாழ்வாதாரங்களை அழிக்கும் சிங்கள அரசு நட்பு அரசு என்றால், பகைவனின் நண்பனும் எங்களுக்குப் பகையே! என எச்சரித்திருக்க வேண்டாவா? இலங்கையில் இருந்தும் ஈழத்தில் இருந்தும் ஆதரவு நாடி வரும் தமிழர்களுக்கு ஓர் அளவுகோல்! உகாண்டா முதலான இடங்களில இருந்து வரும் வடவருக்கு ஓர் அளவுகோல்! சிங்களத்தால் தமிழக மீனவர்கள் கொல்லப்படும்பொழுது ஓர் அளவுகோல்! அதே சிங்களத்தால் கேரள மீனவர்கள் கொல்லப்படும் பொழுது ஓர் அளவுகோல்! இவ்வாறு பல்வேறு இரட்டை அளவுகோல்களைத் தமிழர்களிடத்திலும் பிறரிடத்திலும் பயன்படுத்தும் பேராயக்கட்சியை(காங்கிரசை)க் கண்டித்திருக்க வேண்டாவா? அக்கட்சித் தலைவர்களிடம், எங்கள் மண்ணின் நலத்திற்கும் உரிமைக்கும் எதிராகச் செயல்பட்டால் நீங்களும் பகைவரே எனக் கடிந்துரைத்திருக்க வேண்டாவா? அவ்வாறு இல்லாமல் கொலைகாரர்களையும் கொலைக்கூட்டாளிகளையும் பாதுகாவலர் போல் காட்ட முயலலாமா? மத்தியில் இருக்கும் பேராய(காங்.)அரசு தன் வெளியுறவுக் கொள்கை என்பது மனித நேய அடிப்படையிலானது எனச் செயல்பட்டிருந்தால், பன்னூறாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் காப்பாற்றப்பட்டிருப்பார்களே! வேறு யாரும் போராடத் தேவை இருந்திருக்காதே! சிறப்பாகச் செயல்பட்டு வந்த தமிழீழ அரசு உலக நாடுகளால் ஏற்கப்பட்டு அதன் கொடி பட்டொளி வீசி உலகநாடுகளில் பறந்திருக்குமே! தமிழக மீனவர்கள் தங்கள் உயிரையும் வாழ்வையும் தொலைத்து நிற்கும் அவலநிலை தடுக்கப்பட்டிருக்குமே! பிறரின் ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் தேவையற்றனவாய் அமைந்திருக்குமே! உலக நாடுகளிடையே இந்தியாவின் மதிப்பும் உயர்ந்திருக்குமே! இந்தியாவின் நட்பு நாடாகத் தமிழ் ஈழம் திகழ்ந்து இந்தியாவின் ஆக்கப் பணிகளுக்கு உதவியாக இருந்திருக்குமே! ஆனால், அக்கட்சியில் உள்ளவர்கள் பிற கட்சியினர் போல் கொத்தடிமைகளாக உள்ளமையால் கட்சி என்ன செய்தாலும் அதுவே சரி என வாதிட்டு நமக்குக் கேடு விளைவிக்கின்றனரே! இனியேனும் திருந்துவார்களா! வெளிப்படையாகத் தம் கட்சியைக் கண்டிக்க மனம் இல்லாவிட்டாலும் கட்சி மட்டத்திலாவது எதிர்ப்புக் குரலை எழுப்புவார்களா? திருச்சியில் மாணாக்கர்கள் மீது உருட்டைக்கட்டைகளால் தாக்கிவிட்டு அது திட்டமிட்ட செயலல்ல என உங்கள் கட்சித் தலைவர் கூறுகிறாரே! திட்டமிடவில்லை என்றால் குண்டர்கள் ஒவ்வொருவர் கையிலும் குண்டாந்தடி இருந்தது எப்படி? 1965இல் மதுரையில் உங்கள் கட்சி அலுவலகத்தில் இருந்து வந்து அரிவாளால் மாணாக்கர்களை வெட்டியதன் விளைவு இன்றைக்குத் தமிழக மக்களால் ஓட ஓட விரட்டப்படுகிறீர்கள். இப்பொழுது இந்திய அரசியலில் இருந்தே விரட்டப்படும் நிலைக்கு ஆளாகின்றீர்கள். இவற்றை எல்லாம் தெரிந்திருந்தும் “தமிழுக்குப் பகையாக நடக்கும் பேராயத்தின்(காங்கிரசின்) செயற்பாடுகள் தொடர்ந்தால் நாங்களும் கட்சியைத் துறப்போம்” எனத் தலைமைக்கு எச்சரிக்கை கொடுத்திருக்க வேண்டாவா? நீங்கள் எல்லாம் தமிழரா? வடவரா? சிங்களவரா? தமிழர் எனில் உங்கள் எழுத்தாலும் பேச்சாலும் வற்புறுத்தலாலும் கொலைகாரப் பேராயக்கட்சியின் கொலைகளுக்கு முற்றுப்புள்ளி இட வைத்திருக்க வேண்டாவா? அல்லல்பட்டு ஆற்றாது அழும் மக்களைப் பார்த்த பின்பும் நீங்கள் அமைதி காக்கிறீர்கள் என்றால் நீங்கள் படித்த அறநெறி இலக்கியங்களால் என்ன பயன்? நிரயம்(நரகம்) புகுவோனிடம் சேரும் நீங்களும் நிரயம்(நரகம்)தானே புகுவீர்கள்! படிப்பால் பண்பட்டுப் பிறரையும் பண்படுத்துவதுதானே முறை! இதனை உணர்ந்தும் கொலைகாரக் கட்சியை நல்வழிப்படுத்தாவிடிலோ அதற்குச் சாவுமணி அடிக்காவிட்டாலோ என்ன பயன்? பிறர் நலம் போற்றுபவர்களால்தான் இவ்வுலகம் இயங்குகின்றது என்பது தமிழ் நெறியன்றோ! நீங்களோ நம் இனத்தவர் நலன் சிதைக்கப்படும் பொழுது, பதவி நலன், வாழ்வு நலன் முதலியனவற்றிற்காக வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளீர்களே! வேடிக்கை பார்ப்பதுடன் நில்லாது கொடுஞ்செயல்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவ்வாறு செய்பவர்களைப் பாராட்டுகின்றீர்களே! இனியேனும் மாறுவீர்களா? வரலாற்றில் உங்களுக்கு ஏற்படும் பழியிலிருந்து காத்துக் கொள்ள முன் வருவீர்களா? தமிழ் ஈழ மக்களை இனப்படுகொலை புரிந்தவர்களைத் தண்டிப்பதற்கும் தமிழ் ஈழ அரசு புத்துயிர் பெற்று உலகவரால் ஏற்கப்படவும் ஆவன செய்வீர்களா? உங்கள் நெஞ்சில் சிறிதேனும் ஈரம் இருந்தால், தன்மான உணர்வு கொஞ்சமாவது இருந்தால், தலைமைக்குத் துதி பாடும் கொத்தடிமைத் தனத்தை விட்டொழியுங்கள். உங்கள் கட்சியில் தமிழர்க்கான, ஈழத்தமிழர்க்கான உரிமைக்குரலை எழுப்பி ஆவன செய்யுங்கள்! செய்வீர்களா? மத்தியில் குறிப்பிடத்தக்க மற்றொரு கட்சி பாரத மக்கள் கட்சி(பாரதிய சனதா கட்சி). ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே சமயம் எனக் கொடி தூக்கி நாட்டை அழித்து வரும் கட்சி. அக்கட்சியில் உள்ள சிலவாகிய தமிழறிஞர்கள், இமயம் முதல் குமரி வரை ஆண்ட மொழி தமிழ் என்பதை உணர்த்தியிருக்க வேண்டாவா? ஆரியமும் நமக்கு அயல்தான் என்பதை எடுத்துரைத்திருக்க வேண்டவா? வாசுபாய் போன்ற மிகச்சிலர் தனிப்பட்ட முறையில் ஈழத்தமிழர் நலன் காக்க, இந்தியப் படை உதவியைச் சிங்களத்திற்கு மறுத்திருக்கலாம். எனினும் பொதுவாக இக் கட்சியும் தமிழ்ப்பகைக்கட்சியாகத்தானே செயல்படுகிறது. தமிழ்நாட்டிற்கு வந்து மீனவர் நலனுக்காக உரத்துக் குரல் கொடுத்த கட்சித்தலைவி சுசுமா சுவராசு இந்தியா நாடாளுமன்றத்தில் இலங்கை தொடர்பான தீர்மானம் வரவிடாமல் தடுத்தார் அல்லவா? இந்த நடிப்பு கண்டு கொதித்தெழுந்து, இந் நாடகம் தொடர்ந்தால் தமிழ்நாட்டை மறந்து விட வேண்டியதுதான் எனச் சொல்லி இருக்க வேண்டாவா? இன்றைக்கு யசுவந்து சின்கா தமிழ் ஈழமே தீர்வு எனப் பேசுவதால் பழையனவற்றை மறப்போம்.! இப்பொழுதேனும் அக் கட்சிக்கு எடுத்துரைக்க வேண்டியது என்ன? தமிழ் நாட்டில் ஒன்றும் வடக்கே ஒன்றுமாகப் பேசி ஏமாற்றும் வேலையில் ஈடுபடக்கூடாது என எச்சரிக்க வேண்டும். அடுத்ததாக, உண்மையை உணர்ந்து தமிழ் ஈழத்தை ஆதரிப்பதை உறுதிப்படுத்த அக்கட்சி ஆளும் மாநிலங்களிலும் உள்ளாட்சி அமைப்புகளிலும் தமிழக அரசைப் பின்பற்றி, தமிழீழப் பொதுவாக்கெடுப்பிற்கும் இனப் படுகொலையாளர்கள் தண்டிக்கப்படவும் தீர்மானம் இயற்றச் செய்ய வேண்டும். இக்கட்சி ஆளும் மாநிலங்களில் தமிழ் ஈழத்தை ஏற்பதாகவும் இந்திய நாடாளுமன்றமும் பிற உலக நாடுகளும் இவ்வாறு தீர்மானம் இயற்ற வேண்டும் எனவும் ஒரு தீர்மானம் இயற்ற வேண்டும். இல்லையேல் தேர்தலுக்கான நாடகம் என்றாகிவிடும். தமிழீழம் என்பது பாரத மக்கள் கட்சியின்(பா.ச.க.வின்) உண்மை முகமா அல்லது முகமூடியா என்பதை உணர்த்தச் செய்ய வேண்டும். கட்சியின் குரலுக்கேற்ப தாளம் போடாமல், இவ்வாறு துணிந்து அறிவுரை கூறும் பக்குவத்தை இக்கட்சியின் தமிழ்அறிஞர்களும் தமிழ் ஆர்வலர்களும் பெற வேண்டும். கொத்தடிமைத்தனத்தில் இன்பம் காணும்வரை உண்மைக்காகக் குரல் கொடுக்க முடியாது என்பதை உணர வேண்டும்! இனியேனும் இவ்வாறு நல்லாற்றுப்படுத்துவார்களா? ஆதரவு காட்டுவதுபோல் பேசிக் கழுத்தறுக்கும் கட்சி பற்றி இங்கே கூற வேண்டும். மூளைச்சலவை செய்யப்பட்ட அதன் தொண்டர்கள் திசைமாறுகிறார்கள் என்பதால் அவர்களைப்பற்றியும் கூற வேண்டும். இலங்கைத் தமிழர்களின் உரிமைக்குக் குரல் கொடுக்கிறார்களாம்! நல்வாழ்விற்குக் கொடி பிடிப்பார்களாம்! ஆனால், அவர்கள் ஒன்றுபட்ட இலங்கைக்குள் வாழ வேண்டுமாம்! அவர்களின் உரிமைக்கும் தேவைக்கும் வாழ்வு நலன்களுக்கும் மாறாகக் குரல் கொடுக்க இவர்கள் யார்? உடம்பாடு இலாதவர் வாழ்க்கை-குடங்கருள் பாம்போடு உடன் உறைந்தற்று (திருக்குறள் 890) என்னும் குறள் மூலம் உடன்பாடு இல்லாதவருடன் சேர்ந்து வாழ்பவருக்குக் குடத்தில் பாம்புடன் வாழ்பவருக்கு ஏற்படுவதுபோல் அழிவு உறுதி என்கிறார் தெய்வப்புலவர். அதுமட்டுமல்ல! செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே உட்பகை உற்ற குடி (திருக்குறள் 887) என்று உட்பகை கொண்ட குடியுடன் கூடி வாழ முடியாது என்கின்றார் தெய்வப்புலவர். ஆனால், அயல்நாட்டு மூளையை இரவலாகப் பெற்றுச் சிந்திப்பவர்கள், சீனாவின் நண்பன் சிங்களம் என்பதால் ஒருமைப்பாடு பற்றிக் கூவுகிறார்கள். தமிழர் நலன் காக்கும் வகையில் நடந்து கொள்ளாவிட்டால் சீனாவிலும் சிங்களத்திலும் கட்சியை நடத்துங்கள்! தமிழ்நாட்டின் பக்கம் வராதீர்கள்! என இடித்துரைக்க வேண்டாவா? உலகில் எங்கே அடக்குமுறை நிகழ்ந்தாலும் செங்கொடி தூக்குபவர்கள், இங்கே ஈழத்தில் மட்டும் இனப்படுகொலை நடக்கும் பொழுது அதை மறைத்து வைப்பது ஏன்? பொதுவுடைமை நாடுகள் சிங்களத்தின் பக்கம் இருக்கின்றன என்றால் அந்நாடுகளை நல்வழிப்படுத்தாமல் தாமும் அவர்கள் பக்கம் சாய்வது ஏன்? சாய்வதைத்தான் வெளிப்படையாக அறிவித்தால் என்ன? தமிழ்நாட்டில் அரசியல் நடத்த முடியாது என்ற அச்சம்தானே! ஈழத்தமிழர் நலன்களுக்குச் சார்பாகப் பேசுவதுபோல் அவர்களின் உரிமைக்கும் கருத்திற்கும் மாறாகப் பரப்புரை மேற்கொள்வது ஏன்? செஞ்சட்டைப் படைப்பாளர்கள் அவர்களை இடித்துரைத்திருக்க வேண்டாவா? தேசிய இன விடுதலை என்றெல்லாம் பேசுபவர்கள் கொத்தடிமையாக இருப்பது ஏன்? கொத்தடிமைத் தனத்திலிருந்து விடுபட்டால்தானே கட்சித்தலைமைக்கு உண்மையை மூடி மறைக்கும் செயலில் இருந்து விடுபட்டு ஈழ உரிமைக்குக் குரல் கொடுக்கச்செய்ய முடியும். உண்மையான பொதுவுடைமையாளர்களாக விளங்க வேண்டும் என்றால் தமிழ் ஈழம்பக்கம் துணை நிற்க வேண்டும் எனப் படைப்பாளர்களே ஆற்றுப்படுத்துங்கள்! தமிழ்நாட்டிலும் மத்தியிலும் பன்முறை ஆண்ட கட்சியாகவும் ஆட்சிக்கனவில் மிதக்கும் கட்சியாகவும் உள்ளது தி.மு.க.. பிற கட்சிகளுடன் ஒப்பிடுகையில் தமிழ் உணர்வாளர்கள் மிகுதியாக உள்ள கட்சி இதுதான். நேரடியாக இணைந்தும் சார்ந்தும் உள்ள தமிழ்ப்புலவர்கள், தமிழறிஞர்கள் மிகுதியாக இங்குதான் உள்ளனர். ஆனால் தமிழ்ப்புலவர்களுக்கு இருக்க வேண்டிய அஞ்சாமையும் துணிவும் எங்கே போயின? தலைமை தடுமாறும் பொழுது தட்டிக் கேட்காமல் தாலாட்டு பாடுவது ஏன்? முன்பு பெருங்காயம் இருந்த வெறும் குப்பியை எத்தனைக்காலத்திற்குத்தான் காட்டி ஏமாற்ற முடியும்? ‘‘நேற்று முன் நாள் நான் இப்படிச் செய்தேனே! நேற்று அப்படிச் செய்தேனே!’’ என்பதெல்லாம் மக்களுக்கு முதன்மை இல்லை. “இன்று என்ன செய்தாய்” என்பதுதான் அவர்களது கேள்வி. ஒரு வழக்குமொழி கூட உண்டு. "நாள்தோறும் போடாத சீதேவி இன்று அரிசி கொடுத்தாள்; என்றும் போடும் மூதேவிக்கு இன்று என்ன வந்தது? ஒன்றும் தரவில்லை" எனப் பிச்சை எடுப்பவர் கூறுவதாகக் கூறுவர். இதுதான் மக்கள் மனநிலை. எனவே, இன்றைக்குக் கொலைகாரக் கூட்டாளிக்குத் துணை நின்றுவிட்டுப் பழங்கதைப் பேசிப் பயனில்லை. நாம் தடம் மாறத் தடம் மாற மக்கள் வேறு திசையில் செல்கின்றார்கள் என்றெல்லாம் முது பெரும் தலைவருக்கு இடித்து உரைத்திருக்க வேண்டாவா? இதற்கு முன்பு உயிர்காக்கும் மருந்து கொடுத்ததும் உண்மை! அது பயனளித்ததும் உண்மை! ஆனால், அதே மருந்து காலக்கெடு முடிந்து நஞ்சான பின்பும் அதைத்தான் தருவேன் என்பதில் என்ன பயன்? அம் மருந்தைத் தூக்கி எறியாமல் பாதுகாத்து என்ன பயன்? அதைப்போல்தான் ஈழத்தமிழர் நலன் காக்க முன்பு குரல் கொடுத்ததை வைத்துக் கொண்டு, இப்போது மறைமுகமாகச் சிங்களக் கூட்டாளியாகச் செயல்படுவதை மறைப்பது. இதனை, வீட்டு மக்கள் நலனை முன்னிறுத்தி நாட்டு மக்கள் நலனை மறக்கும் பொழுது எடுத்துரைத்திருக்க வேண்டாவா? தமிழ் என்றால் வீரம் என்றும் பொருள் உண்டல்லவா? இவர்கள் தமிழ் படித்து என்ன பயன்? படித்த தமிழைத் தமிழர் நலனுக்காகப் பயன்படுத்தாத பொழுது, அத்தமிழால் பிழைப்பது கண்டு நாணுற வேண்டாவா? சென்னைக்கு வந்து சேர வேண்டிய தொடரியை ஓட்டுபவர், நான் செங்கல்பட்டு வரை ஓட்டி வந்து விட்டேன். அதன் பின்தானே தடம் புரளச் செய்தேன் என்றால் யாரேனும் பாராட்டுவார்களா? தடம் புரளச் செய்து பல்லாயிரவர் இறக்கக் காரணமானவர் என்பதால் தண்டிப்பார்களா? இலங்கைத் தமிழர் நலனுக்காகப் பாடுபட்டதெல்லாம் எப்பொழுது பாராட்டப்படும்? அதே நிலையில் இருந்து வெற்றியை ஈட்டினால் அல்லவா தட்டிக கொடுத்துப் பாராட்டு மாலை அணிவிப்பார்கள். இல்லாமல், பேரறிஞர் அண்ணாவாலும் தமிழக மக்களாலும் விரட்டியடிக்கப்பட்ட பேராய(காங்கிரசு)க் கட்சியுடன் இணைந்திருக்க வேண்டிய குடும்ப நலனுக்காக, இனப்படுகொலையைக் கண்டும் காணாமல் மறைமுக உடந்தையாக இருந்தமைக்காகத், தட்டிப்போட்டு ஓரங்கட்டுவார்களா? இதனை எடுத்தியம்பத் தமிழறிஞர்கள் தயங்கியது ஏன்? பெருங்கவிக்கோ அவர்களே! அரசியல் பேச வேண்டா என்கின்றீர்கள். அரசியல் இல்லாமல் வாழ்க்கை இல்லை. தொகுப்பாளரும் வேறு சிலரும் தி.மு.க.வைப் பாராட்டினார்களே! அந்த அரசியல் பேச்சை ஏன் நிறுத்தச் சொல்லவில்லை. அன்பு நண்பர் ஒருவர், தான் பேசும் பொழுது நெருக்கடிநிலையால் மிகுதியும் துன்பத்திற்கு ஆளானது தி.மு.க.வினர் என்றும் அவர்களை மறு முறை தேர்ந்தெடுக்காமல் தமிழ் மக்கள் கொடுமை இழைத்து விட்டதாகவும் கூறினாரே! மீண்டும் கலைஞரைத்தான் ஆட்சியில் அமர்த்தவேண்டும் என்றாரே! அது கட்சி அரசியல் இல்லையா? அவரைப் பேசவிட்ட நீங்கள் என் பேச்சைத் தடுக்கக்கூடாது. தி.மு.க.வினரைக் கொடுமை படுத்திய கட்சியுடன் அதன் தலைவரே உறவு கொண்டாடும் பொழுது அவர்கள் பட்ட இன்னல்களை மறந்து விட்டார் என்றுதானே பொருள்! அவ்வாறாயின் பிறர் ஏன் நினைவு கொள்ள வேண்டும். பேராயக்கட்சியுடனான உறவைத் தமிழர் நலனுக்குப் பயன்படுத்தாமல்போனது ஏன்? குசரால் அமைச்சரவையில் இருந்து தி.மு.க.வை விரட்ட வேண்டும் என்ற பேராயக்கட்சியின் தீர்மானத்தைச் செய்தியாளர்களிடம் கூறுகையில் கடுமையான சொற்களைக் கூறியவர் பிரணாப் முகர்சி. அவர்தான் முதுபெரும்தலைவரின் நெடுங்காலக் கெழுதகை நண்பராம்! அக் கெழுதகை நண்பர் அடிக்கடிச்சிங்கள அரசாளர்களைச் சந்தித்து வந்தாரே! எதற்கு? ஈழத்தமிழர் நலன்களைக் காக்கவா? அழிக்கவா? இனப்படுகொலைகளை விரைந்து நடத்தத்தானே அறிவுரை வழங்கினார் எனச் சொல்லப்படுகின்றது. தம் நட்புரிமையைப் பயன்படுத்தி அதை ஏன் தடுக்க வில்லை? “ஊழலைப்பற்றிச் சொல்லும் பொழுது பேராயக்கட்சியின் ஊழலுக்கு இணையாக யாரையும் கூறமுடியாது என்றோம்! தம் குடும்பத்தவரையே முதன்மைப் பதவிகளில் அமர்த்திய பொழுது எல்லா அரசியல் தலைவர்களும் அவ்வாறுதானே செய்கின்றார்கள் என்றோம்! கிழவர் அணியா? இளைஞர் அணியா

தமிழ்ஈழம் மலரத் தமிழ்அறிஞர்களே ! நல்லாற்றுப்படுத்துங்கள்!

(தமிழ் இயக்கங்களின் கூட்டமைப்பு 30.03.2044/12.04.2013 அன்று வள்ளுவர் கோட்டம் அருகே பட்டினிப்போர் நிகழ்த்திய பொழுது வழங்கிய உரை.) தமிழ் இயக்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் தமிழீழம் மலரவும் இனப்படுகொலையாளிகள் தண்டிக்கப்படவும் நடைபெறும் இப்பட்டினிப் போராட்டத்தை ஒருங்கிணைக்கும் பெருங்கவிக்கோ அவர்களுக்கும் பங்கேற்கும் அமைப்பினருக்கும் என் வணக்கங்கள். அழைப்பிதழில், தமிழீழம் மலரவும் போர்க்குற்றவாளி இராசபக்சேவை உலகமன்றில் நிறுத்தித் தண்டனை வழங்கவும் பட்டினிப் போராட்டம் எனக் குறிப்பிட்டு இனப்படுகொலையை மறைத்தது ஏன்? என வா.மு.சே.திருவள்ளுவரிடம் கேட்டேன். உடன் அதைத் திருத்தித் தீர்மானத்தில் இனப்படுகொலை என்ற உண்மையை இடம் பெயரச் செய்தமைக்காக அவருக்குப் பாராட்டுடன் கூடிய நன்றி. தமிழ் ஈழ மக்கள் கூட்டம் கூட்டமாகப் படுகொலை செய்யப்படுவதற்கு முன்பு, சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற படைப்பாளர் பேரவை சார்பான கூட்டத்தில் நான் இனப்படுகொலை குறித்துக் கூறியது நினைவிற்கு வருகின்றது. விடுதலைப்புலிகளின் வீரம் யாருக்கும் சளைத்ததில்லை என்றாலும் நேரிடைப் போராக இல்லாமல் வஞ்சகச் செயலாக உள்ளமையால், போர் நீடிப்பது நல்லதில்லை. போர் நீடித்தாலும் அழிவு. சரண் அடைந்தாலும் அழிவுதான் என்ற நிலையே உள்ளது. எனவே, அவர்களின் வீரத்தைப் பற்றி மட்டும் பாராட்டிக் கொண்டிராமல் படுகொலைகளைத் தடுக்கும் வகையில் உலகெங்கும் உடனடிப் பரப்புரை மேற் கொண்டு வஞ்சகப் போரினை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றேன். எதிரிகளின் வஞ்சகச் செயல்களை நாம் முழுமையாகக் கணிக்கத் தவறியமையால், மாற்றான் வலியை அறிந்த நாம் அவனின் வஞ்சகத்தையும் மாற்றான் துணை வலியையும் உணராக் காரணத்தால், பன்னூறாயிர ஈழத் தமிழர்கள் படுகொலைகளுக்கு ஆளான அவலத்தைச சந்தித்துள்ளோம். படுகொலை வெவ்வேறு வடிவங்களில் ஈழத்தில் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. இதனை நிறுத்தித் தமிழ் ஈழத்தை மலரச் செய்யும் பொறுப்பு படைப்பாளிகளிடம்தான் உள்ளது. படைப்பாளிகள் தமிழக எல்லைக்குள் பரப்புரையை மேற்கொள்ளாமல் பார் முழுவதும் மேற்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் உலக மக்கள் உண்மையை உணர்ந்து தமிழ் ஈழத்தை ஏற்பர். தமிழ் ஈழம் மலரத் தமிழ்அறிஞர்களே! நல்லாற்றுப்படுத்துங்கள்! என்பதே தமிழ்க்காப்புக்கழகம் சார்பிலும் இலக்குவனார் இலக்கிய இணையம் சார்பிலும் இப்போராட்டக்களம் மூலம் நான் விடுக்கும் வேண்டுகோள். பழந்தமிழகத்தில் முடி மன்னர்களுக்குப் புலவர்கள் அறிவுரை கூறினர். அறங்கூறு அவையம் என இருப்பினும் நிறைமாண் புலவர்கள் வேண்டப்படும்பொழுது இடித்துரைக்கத் தவறவில்லை. எனவேதான் செவியறிவுறூஉ என ஓர் இலக்கியத் துறையே உள்ளது. அரசன் ஆற்ற வேண்டிய கடமைகளை அவனுக்கு, முறை தவறாமல் ஆற்றுமாறு அவன் செவியில் கேட்குமாறு அறிவுறுத்துவதே செவியறிவுறூஉ ஆகும். தெய்வப்புலவர் திருவள்ளுவரும் இடித்துரைப்போர் துணையாய் இருப்பின் அவ்வரசைக் கெடுக்க வல்லார் யாருமில்லை என்று, இடிக்குந் துணையாரை யாள்வாரை யாரே கெடுக்குந் தகைமை யவர் (திருக்குறள் 447) என்னும் திருக்குறளில் விளக்குகிறார். அத்தகையோர் இல்லா அரசு தானாகவே அழியும் என்பதையும் இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும் (திருக்குறள் 448) என்னும் திருக்குறளில் விளக்குகிறார். சங்கக்காலத்தில் புலவர் பெருமக்கள் இத்தகைய அறிவுறுத்தும் நற்பணியைச் செய்து வந்தார்கள்; ‘எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே’ எனக் கூறி, வயிற்றை நிரப்புவதைக் குறிக்கோளாகக் கொள்ளாமல், நயந்து பேசி நல்வளம் அடைவதையே இலக்காக எண்ணாமல், உறுதியுடன் அறிவுரை வழங்கினர். அத்தகைய ஆன்றோரும் சான்றோரும் இப்பொழுது ஏன் இல்லை? புலவர் பெருமக்கள் அல்லவா அரசிற்கு - ஆளும் தலைமைக்கு - அல்லன ஆற்றும் பொழுது நல்லன புரிய ஆற்றுப்படுத்தும் பணியைச் செய்ய வேண்டும். பதவி நலன்களுக்காக வாய்மூடி அமைதி காப்பதில் என்ன பயன்? தன்னலம் பேணாமல் பொதுநலம் பேண வேண்டிய தமிழறிஞர்கள் எங்கே சென்று விட்டார்கள்? தமிழ் தமிழ் எனப் பேசி ஆட்சிக்கு வந்தபின்பு தமிழ்ப்பகைவர்களுக்கு முதன்மை கொடுக்கும் பொழுது தட்டிக் கேட்கத் தயங்குவது ஏன்? தங்களின் அரும்பணிகளைப் புறக்கணித்து ஆட்சிக்கு ஏற்பத் தாளம் போடும் அரிதாரம் பூசிகளைச் சிறப்பிக்கும் பொழுது அதையும் தாங்கிக் கொள்வது ஏன்? தனக்குப் பதவி கேட்டால்தானே தனக்காக எதிர்ப்பதாகக் கூற நேரிடலாம். தமிழுக்கு முதன்மை அளித்துத் தமிழர்க்குத் தலைமை அளித்துத் தமிழ்ப்பகைவர்களை அகற்ற அவர்கள் ஆள்வோருக்கு அறிவுறுத்த வேண்டாவா? இத்தகைய பண்பைக் கைக்கொள்ளாததால்தான் ஈழத்தில் இனப்படுகொலை நடந்தும் இடித்துரைக்காமல் கையறுநிலை பாடுகிறார்கள். தமிழ் ஈழத்தில் இனப்படுகொலை நடைபெறுவதற்குக் காரணம் இந்தியத் துணைக்கண்டத்தில் தேசிய இனங்களை அழித்து வரும் பேராயக்கட்சியாகிய காங்கிரசுதான் என்பதை அனைவரும் அறிவர். அக்கட்சியில் தமிழ்ப்புலவர்கள், தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் சிலராவது இல்லையா? இருக்கின்ற பிறராவது கட்சி என்ன செய்தாலும் அதுதான் சரி என வாதுரை செய்யாமல் கட்சியின் தவறுகளையும் கொடுமைகளையும் சுட்டிக்காட்டலாம் அல்லவா? “தன் நாட்டு மக்களைக், குழந்தைகளைக் காக்கும் தாயைப் போலப் பாதுகாக்கவேண்டும்” என்று சேரமான் கருவூரேறிய ஒள்வாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறைக்கு, நரிவெரூஉத்தலையார் அறிவுரை கூறுகிறார். அப்பொழுது புலவர், அருளும் அன்பும் நீக்கி நீங்கா நிரயங் கொள்பவரொடு ஒன்றாது காவல் குழவி கொள்பவரின் ஓம்புமதி; அளிதோ தானேஅது பெறல்அருங் குரைத்தே. (புறநானூறு 5: 5- 8) என்கிறார். “அருளையும் அன்பையும் விலக்கி வைத்து வாழுமிடத்தை நிரயமாக (நரகமாக) ஆக்கிக் கொள்பவர்களோடு சேராதே! தாய், தன் குழந்தையைக் காப்பதுபோல் நாட்டு மக்களைக் காப்பாற்றுவாயாக ! அதுவே செய்தக்க செயல்” என அவர் அறிவுறுத்துவது எக்காலத்திலும் ஆள்வோர் அனைவருக்கும் பொருந்தக்கூடியதல்லவா? இலங்கை மண்ணின் மக்கள் ஆகிய தமிழர்கள் மீது அருளும் இல்லாமல் அன்பும் இல்லாமல் அழித்தொழிக்கும் சிங்களக் கொடுங்கோல் அரசுடன் சேராதே என்றல்லவா அதற்குத் துணை நிற்கும் மத்திய ஆளும் கட்சியாகிய பேராயக் கட்சிக்கு அறிவுரை வழங்கி இருக்க வேண்டும். மாறாக “ முன்பு ஆயுதம் கொடுத்தோம்! பின்பு உணவு கொடுத்தோம்! இப்போது குடியிருப்பு கொடுக்கிறோம்” என்றெல்லாம் தலைமையின் குரலைச் சிந்தனையின்றிப் பரப்பலாமா? “ஆடுகளைப் பலியிடுகின்றாயே” என்று கேட்டால் “நேற்றுவரை அதற்கு வேண்டிய உணவு வகைகளை அளித்ததும் நான்தான்! குளிப்பாட்டி அழகுபடுத்தியதும் நான்தான்! மாலையிட்டுப் போற்றியதும் நான்தான்! என்னைப்போய்க் குற்றம் சொல்லலாமா?” என்பதுபோல் கூறலாமா? “உன் வயிற்றை நிரப்புவதற்காக ஆடுகளின் வயிற்றை நிரப்பி உள்ளாய். உன் நலனுக்காக அவற்றின் நலன்மீது கருத்து செலுத்தி உள்ளாய்! அடிப்படை நோக்கம் அவற்றை அழிப்பதுதானே! இதே போல் தானே ஈழத்தமிழரைக் அரசு காவு கொடுத்துள்ளாய்!” என இடித்துரைக்க வேண்டியவர்கள் கொன்றவனையும் கொல்லத் துணைநின்றவனையும் உத்தமன்போல் காட்டிப் பேசுவது முறைதானா? அறம்தானா? முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்குப் பின்பு வீடு கட்டிக் கொடுக்க உதவுகிறோம் என்றெல்லாம் சொல்வது வஞ்சகத்தனம் இல்லையா? இந்தியப் பொருளுதவி, தமிழர் நிலத்தில் சிங்களக் குடியேற்றம் அமைக்கவும், சிங்களப் படைஞர்கள் முகாம்கள் அமைக்கவும்தானே பெரும்பகுதி பயன்பெறுகிறது. சிறுபான்மை தமிழர்க்கு அளிக்கப்படும் வீடுகளும் மழையில் ஒழுகுவதாகவும் பாதுகாப்பற்றதாகவும்தானே உள்ளன. நிதியுதவி நிதியுதவி என்று சொல்லும் பேராயக்கட்சி அந்த உதவியில் சிங்களர் பெறும் பயன்பற்றி வாய் மூடுவதேன்? தமிழர்க்கு உதவி என்ற பெயரில் இன அழிப்பாளர்களுக்கு உதவும் பேராயக்கட்சியைத் திருத்த இயலாவிடில் துரத்த வேண்டாவா? துறக்க வேண்டாவா? பெரும்பாலோரைக் கொன்று விட்டு எஞ்சியவருக்குப் பிச்சை எடுக்கத் திருவோடு தருகிறோம் என்பதற்கும் காங்கிரசின் பிதற்றலுக்கும் வேறுபாடு உள்ளதா? உரிமை வாழ்வு வந்தவர்களுக்கு ஒத்துழைப்பு தராதிருந்தால்கூடப் பரவாயில்லை. அவர்களை அழித்தொழிக்க எல்லாவகையிலும் எதிராளிக்கு உதவி விட்டு இவர்களுக்கு உதவுவதாகப் பொய்யுரை கூறுவது குறித்துக் கண்டிக்க வேண்டாவா? பிற மாநிலத்தவர் தங்கள் மொழி, இனச் சிக்கல் என்றால் பேராயக்கட்சியைச் சேர்ந்திருந்தாலும் அதன் செயல்பாட்டிற்கு எதிராகக் கிளர்ந்தெழுகிறார்கள் அல்லவா? தமிழகப் பேராயக்கட்சியினர் அவ்வாறு இல்லாமல் மானம் இழந்து கொத்தடிமையாய் இருப்பது ஏன்? “உலக நாடுகளின் உரிமைகளுக்கெல்லாம் குரல் கொடுத்துவிட்டு, நம்முடன் உறவாடும் நற்றமிழர் வாழ்வைச் சிதைக்கலாமா” எனக் கேட்கும் துணிவுகூட இல்லாமல் இருப்பது ஏன்? அவலங்களைத் தட்டிக்கேட்பவனும் அதைத் துடைப்பதற்காகக் குரல் கொடுப்பவனும்தான் உண்மையான படைப்பாளியாக இருக்க முடியும். அவ்வாறு ஒருவர்கூட இக்கட்சியில் இல்லாததன் காரணம் என்ன? நாம் ஆயுதம் கொடுக்காவிட்டால் சீனா கொடுக்கும், பாக்கிசுதான் கொடுக்கும், நம் எதிரிகள் கொடுப்பார்கள் என்று சொல்லும் பொழுது “உன் குடும்பத்தினரைக் கொல்வதற்கு எதிரியின் துணையுடன் ஒருவன் வந்தால் எதிரியின் ஆயுதத்தால் கொல்லாதே! நான் ஆயுதங்கள் தருகிறேன்! அவற்றால் கொல்லு!” என்றா சொல்வாய் எனத் திருப்பிக் கேட்டிருக்க வேண்டாவா? வெளியுறவுக் கொள்கையை மத்திய அரசுதான் முடிவெடுக்கும் எனக் கூறும் பொழுது மாநிலங்கள் இணைந்ததுதான் மத்திய அரசு! வானிலிருந்து குதித்து வந்ததல்ல மத்திய அரசு! எங்கள் நலனுக்கு எதிராக வெறியுறவுக் கொள்கை அமைந்தால் அது வெளியுறவுக் கொள்கையன்று உட்பகைக்கொள்கை! மத்திய அரசை நம்பியுள்ள தமிழர்களை உட்பகையாக எண்ணிக் கழுத்தறுக்கும் கொள்கை! இதை ஒப்பமாட்டோம்! எனச் சீறி இருக்க வேண்டாவா? தமிழக மீனவர்களைத் தொடர்ந்து கொன்று குவிக்கும் சிங்கள நாடு நட்பு நாடு என்றால், தமிழக மீனவர்களின வாழ்வாதாரங்களை அழிக்கும் சிங்கள அரசு நட்பு அரசு என்றால், பகைவனின் நண்பனும் எங்களுக்குப் பகையே! என எச்சரித்திருக்க வேண்டாவா? இலங்கையில் இருந்தும் ஈழத்தில் இருந்தும் ஆதரவு நாடி வரும் தமிழர்களுக்கு ஓர் அளவுகோல்! உகாண்டா முதலான இடங்களில இருந்து வரும் வடவருக்கு ஓர் அளவுகோல்! சிங்களத்தால் தமிழக மீனவர்கள் கொல்லப்படும்பொழுது ஓர் அளவுகோல்! அதே சிங்களத்தால் கேரள மீனவர்கள் கொல்லப்படும் பொழுது ஓர் அளவுகோல்! இவ்வாறு பல்வேறு இரட்டை அளவுகோல்களைத் தமிழர்களிடத்திலும் பிறரிடத்திலும் பயன்படுத்தும் பேராயக்கட்சியை(காங்கிரசை)க் கண்டித்திருக்க வேண்டாவா? அக்கட்சித் தலைவர்களிடம், எங்கள் மண்ணின் நலத்திற்கும் உரிமைக்கும் எதிராகச் செயல்பட்டால் நீங்களும் பகைவரே எனக் கடிந்துரைத்திருக்க வேண்டாவா? அவ்வாறு இல்லாமல் கொலைகாரர்களையும் கொலைக்கூட்டாளிகளையும் பாதுகாவலர் போல் காட்ட முயலலாமா? மத்தியில் இருக்கும் பேராய(காங்.)அரசு தன் வெளியுறவுக் கொள்கை என்பது மனித நேய அடிப்படையிலானது எனச் செயல்பட்டிருந்தால், பன்னூறாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் காப்பாற்றப்பட்டிருப்பார்களே! வேறு யாரும் போராடத் தேவை இருந்திருக்காதே! சிறப்பாகச் செயல்பட்டு வந்த தமிழீழ அரசு உலக நாடுகளால் ஏற்கப்பட்டு அதன் கொடி பட்டொளி வீசி உலகநாடுகளில் பறந்திருக்குமே! தமிழக மீனவர்கள் தங்கள் உயிரையும் வாழ்வையும் தொலைத்து நிற்கும் அவலநிலை தடுக்கப்பட்டிருக்குமே! பிறரின் ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் தேவையற்றனவாய் அமைந்திருக்குமே! உலக நாடுகளிடையே இந்தியாவின் மதிப்பும் உயர்ந்திருக்குமே! இந்தியாவின் நட்பு நாடாகத் தமிழ் ஈழம் திகழ்ந்து இந்தியாவின் ஆக்கப் பணிகளுக்கு உதவியாக இருந்திருக்குமே! ஆனால், அக்கட்சியில் உள்ளவர்கள் பிற கட்சியினர் போல் கொத்தடிமைகளாக உள்ளமையால் கட்சி என்ன செய்தாலும் அதுவே சரி என வாதிட்டு நமக்குக் கேடு விளைவிக்கின்றனரே! இனியேனும் திருந்துவார்களா! வெளிப்படையாகத் தம் கட்சியைக் கண்டிக்க மனம் இல்லாவிட்டாலும் கட்சி மட்டத்திலாவது எதிர்ப்புக் குரலை எழுப்புவார்களா? திருச்சியில் மாணாக்கர்கள் மீது உருட்டைக்கட்டைகளால் தாக்கிவிட்டு அது திட்டமிட்ட செயலல்ல என உங்கள் கட்சித் தலைவர் கூறுகிறாரே! திட்டமிடவில்லை என்றால் குண்டர்கள் ஒவ்வொருவர் கையிலும் குண்டாந்தடி இருந்தது எப்படி? 1965இல் மதுரையில் உங்கள் கட்சி அலுவலகத்தில் இருந்து வந்து அரிவாளால் மாணாக்கர்களை வெட்டியதன் விளைவு இன்றைக்குத் தமிழக மக்களால் ஓட ஓட விரட்டப்படுகிறீர்கள். இப்பொழுது இந்திய அரசியலில் இருந்தே விரட்டப்படும் நிலைக்கு ஆளாகின்றீர்கள். இவற்றை எல்லாம் தெரிந்திருந்தும் “தமிழுக்குப் பகையாக நடக்கும் பேராயத்தின்(காங்கிரசின்) செயற்பாடுகள் தொடர்ந்தால் நாங்களும் கட்சியைத் துறப்போம்” எனத் தலைமைக்கு எச்சரிக்கை கொடுத்திருக்க வேண்டாவா? நீங்கள் எல்லாம் தமிழரா? வடவரா? சிங்களவரா? தமிழர் எனில் உங்கள் எழுத்தாலும் பேச்சாலும் வற்புறுத்தலாலும் கொலைகாரப் பேராயக்கட்சியின் கொலைகளுக்கு முற்றுப்புள்ளி இட வைத்திருக்க வேண்டாவா? அல்லல்பட்டு ஆற்றாது அழும் மக்களைப் பார்த்த பின்பும் நீங்கள் அமைதி காக்கிறீர்கள் என்றால் நீங்கள் படித்த அறநெறி இலக்கியங்களால் என்ன பயன்? நிரயம்(நரகம்) புகுவோனிடம் சேரும் நீங்களும் நிரயம்(நரகம்)தானே புகுவீர்கள்! படிப்பால் பண்பட்டுப் பிறரையும் பண்படுத்துவதுதானே முறை! இதனை உணர்ந்தும் கொலைகாரக் கட்சியை நல்வழிப்படுத்தாவிடிலோ அதற்குச் சாவுமணி அடிக்காவிட்டாலோ என்ன பயன்? பிறர் நலம் போற்றுபவர்களால்தான் இவ்வுலகம் இயங்குகின்றது என்பது தமிழ் நெறியன்றோ! நீங்களோ நம் இனத்தவர் நலன் சிதைக்கப்படும் பொழுது, பதவி நலன், வாழ்வு நலன் முதலியனவற்றிற்காக வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளீர்களே! வேடிக்கை பார்ப்பதுடன் நில்லாது கொடுஞ்செயல்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவ்வாறு செய்பவர்களைப் பாராட்டுகின்றீர்களே! இனியேனும் மாறுவீர்களா? வரலாற்றில் உங்களுக்கு ஏற்படும் பழியிலிருந்து காத்துக் கொள்ள முன் வருவீர்களா? தமிழ் ஈழ மக்களை இனப்படுகொலை புரிந்தவர்களைத் தண்டிப்பதற்கும் தமிழ் ஈழ அரசு புத்துயிர் பெற்று உலகவரால் ஏற்கப்படவும் ஆவன செய்வீர்களா? உங்கள் நெஞ்சில் சிறிதேனும் ஈரம் இருந்தால், தன்மான உணர்வு கொஞ்சமாவது இருந்தால், தலைமைக்குத் துதி பாடும் கொத்தடிமைத் தனத்தை விட்டொழியுங்கள். உங்கள் கட்சியில் தமிழர்க்கான, ஈழத்தமிழர்க்கான உரிமைக்குரலை எழுப்பி ஆவன செய்யுங்கள்! செய்வீர்களா? மத்தியில் குறிப்பிடத்தக்க மற்றொரு கட்சி பாரத மக்கள் கட்சி(பாரதிய சனதா கட்சி). ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே சமயம் எனக் கொடி தூக்கி நாட்டை அழித்து வரும் கட்சி. அக்கட்சியில் உள்ள சிலவாகிய தமிழறிஞர்கள், இமயம் முதல் குமரி வரை ஆண்ட மொழி தமிழ் என்பதை உணர்த்தியிருக்க வேண்டாவா? ஆரியமும் நமக்கு அயல்தான் என்பதை எடுத்துரைத்திருக்க வேண்டவா? வாசுபாய் போன்ற மிகச்சிலர் தனிப்பட்ட முறையில் ஈழத்தமிழர் நலன் காக்க, இந்தியப் படை உதவியைச் சிங்களத்திற்கு மறுத்திருக்கலாம். எனினும் பொதுவாக இக் கட்சியும் தமிழ்ப்பகைக்கட்சியாகத்தானே செயல்படுகிறது. தமிழ்நாட்டிற்கு வந்து மீனவர் நலனுக்காக உரத்துக் குரல் கொடுத்த கட்சித்தலைவி சுசுமா சுவராசு இந்தியா நாடாளுமன்றத்தில் இலங்கை தொடர்பான தீர்மானம் வரவிடாமல் தடுத்தார் அல்லவா? இந்த நடிப்பு கண்டு கொதித்தெழுந்து, இந் நாடகம் தொடர்ந்தால் தமிழ்நாட்டை மறந்து விட வேண்டியதுதான் எனச் சொல்லி இருக்க வேண்டாவா? இன்றைக்கு யசுவந்து சின்கா தமிழ் ஈழமே தீர்வு எனப் பேசுவதால் பழையனவற்றை மறப்போம்.! இப்பொழுதேனும் அக் கட்சிக்கு எடுத்துரைக்க வேண்டியது என்ன? தமிழ் நாட்டில் ஒன்றும் வடக்கே ஒன்றுமாகப் பேசி ஏமாற்றும் வேலையில் ஈடுபடக்கூடாது என எச்சரிக்க வேண்டும். அடுத்ததாக, உண்மையை உணர்ந்து தமிழ் ஈழத்தை ஆதரிப்பதை உறுதிப்படுத்த அக்கட்சி ஆளும் மாநிலங்களிலும் உள்ளாட்சி அமைப்புகளிலும் தமிழக அரசைப் பின்பற்றி, தமிழீழப் பொதுவாக்கெடுப்பிற்கும் இனப் படுகொலையாளர்கள் தண்டிக்கப்படவும் தீர்மானம் இயற்றச் செய்ய வேண்டும். இக்கட்சி ஆளும் மாநிலங்களில் தமிழ் ஈழத்தை ஏற்பதாகவும் இந்திய நாடாளுமன்றமும் பிற உலக நாடுகளும் இவ்வாறு தீர்மானம் இயற்ற வேண்டும் எனவும் ஒரு தீர்மானம் இயற்ற வேண்டும். இல்லையேல் தேர்தலுக்கான நாடகம் என்றாகிவிடும். தமிழீழம் என்பது பாரத மக்கள் கட்சியின்(பா.ச.க.வின்) உண்மை முகமா அல்லது முகமூடியா என்பதை உணர்த்தச் செய்ய வேண்டும். கட்சியின் குரலுக்கேற்ப தாளம் போடாமல், இவ்வாறு துணிந்து அறிவுரை கூறும் பக்குவத்தை இக்கட்சியின் தமிழ்அறிஞர்களும் தமிழ் ஆர்வலர்களும் பெற வேண்டும். கொத்தடிமைத்தனத்தில் இன்பம் காணும்வரை உண்மைக்காகக் குரல் கொடுக்க முடியாது என்பதை உணர வேண்டும்! இனியேனும் இவ்வாறு நல்லாற்றுப்படுத்துவார்களா? ஆதரவு காட்டுவதுபோல் பேசிக் கழுத்தறுக்கும் கட்சி பற்றி இங்கே கூற வேண்டும். மூளைச்சலவை செய்யப்பட்ட அதன் தொண்டர்கள் திசைமாறுகிறார்கள் என்பதால் அவர்களைப்பற்றியும் கூற வேண்டும். இலங்கைத் தமிழர்களின் உரிமைக்குக் குரல் கொடுக்கிறார்களாம்! நல்வாழ்விற்குக் கொடி பிடிப்பார்களாம்! ஆனால், அவர்கள் ஒன்றுபட்ட இலங்கைக்குள் வாழ வேண்டுமாம்! அவர்களின் உரிமைக்கும் தேவைக்கும் வாழ்வு நலன்களுக்கும் மாறாகக் குரல் கொடுக்க இவர்கள் யார்? உடம்பாடு இலாதவர் வாழ்க்கை-குடங்கருள் பாம்போடு உடன் உறைந்தற்று (திருக்குறள் 890) என்னும் குறள் மூலம் உடன்பாடு இல்லாதவருடன் சேர்ந்து வாழ்பவருக்குக் குடத்தில் பாம்புடன் வாழ்பவருக்கு ஏற்படுவதுபோல் அழிவு உறுதி என்கிறார் தெய்வப்புலவர். அதுமட்டுமல்ல! செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே உட்பகை உற்ற குடி (திருக்குறள் 887) என்று உட்பகை கொண்ட குடியுடன் கூடி வாழ முடியாது என்கின்றார் தெய்வப்புலவர். ஆனால், அயல்நாட்டு மூளையை இரவலாகப் பெற்றுச் சிந்திப்பவர்கள், சீனாவின் நண்பன் சிங்களம் என்பதால் ஒருமைப்பாடு பற்றிக் கூவுகிறார்கள். தமிழர் நலன் காக்கும் வகையில் நடந்து கொள்ளாவிட்டால் சீனாவிலும் சிங்களத்திலும் கட்சியை நடத்துங்கள்! தமிழ்நாட்டின் பக்கம் வராதீர்கள்! என இடித்துரைக்க வேண்டாவா? உலகில் எங்கே அடக்குமுறை நிகழ்ந்தாலும் செங்கொடி தூக்குபவர்கள், இங்கே ஈழத்தில் மட்டும் இனப்படுகொலை நடக்கும் பொழுது அதை மறைத்து வைப்பது ஏன்? பொதுவுடைமை நாடுகள் சிங்களத்தின் பக்கம் இருக்கின்றன என்றால் அந்நாடுகளை நல்வழிப்படுத்தாமல் தாமும் அவர்கள் பக்கம் சாய்வது ஏன்? சாய்வதைத்தான் வெளிப்படையாக அறிவித்தால் என்ன? தமிழ்நாட்டில் அரசியல் நடத்த முடியாது என்ற அச்சம்தானே! ஈழத்தமிழர் நலன்களுக்குச் சார்பாகப் பேசுவதுபோல் அவர்களின் உரிமைக்கும் கருத்திற்கும் மாறாகப் பரப்புரை மேற்கொள்வது ஏன்? செஞ்சட்டைப் படைப்பாளர்கள் அவர்களை இடித்துரைத்திருக்க வேண்டாவா? தேசிய இன விடுதலை என்றெல்லாம் பேசுபவர்கள் கொத்தடிமையாக இருப்பது ஏன்? கொத்தடிமைத் தனத்திலிருந்து விடுபட்டால்தானே கட்சித்தலைமைக்கு உண்மையை மூடி மறைக்கும் செயலில் இருந்து விடுபட்டு ஈழ உரிமைக்குக் குரல் கொடுக்கச்செய்ய முடியும். உண்மையான பொதுவுடைமையாளர்களாக விளங்க வேண்டும் என்றால் தமிழ் ஈழம்பக்கம் துணை நிற்க வேண்டும் எனப் படைப்பாளர்களே ஆற்றுப்படுத்துங்கள்! தமிழ்நாட்டிலும் மத்தியிலும் பன்முறை ஆண்ட கட்சியாகவும் ஆட்சிக்கனவில் மிதக்கும் கட்சியாகவும் உள்ளது தி.மு.க.. பிற கட்சிகளுடன் ஒப்பிடுகையில் தமிழ் உணர்வாளர்கள் மிகுதியாக உள்ள கட்சி இதுதான். நேரடியாக இணைந்தும் சார்ந்தும் உள்ள தமிழ்ப்புலவர்கள், தமிழறிஞர்கள் மிகுதியாக இங்குதான் உள்ளனர். ஆனால் தமிழ்ப்புலவர்களுக்கு இருக்க வேண்டிய அஞ்சாமையும் துணிவும் எங்கே போயின? தலைமை தடுமாறும் பொழுது தட்டிக் கேட்காமல் தாலாட்டு பாடுவது ஏன்? முன்பு பெருங்காயம் இருந்த வெறும் குப்பியை எத்தனைக்காலத்திற்குத்தான் காட்டி ஏமாற்ற முடியும்? ‘‘நேற்று முன் நாள் நான் இப்படிச் செய்தேனே! நேற்று அப்படிச் செய்தேனே!’’ என்பதெல்லாம் மக்களுக்கு முதன்மை இல்லை. “இன்று என்ன செய்தாய்” என்பதுதான் அவர்களது கேள்வி. ஒரு வழக்குமொழி கூட உண்டு. "நாள்தோறும் போடாத சீதேவி இன்று அரிசி கொடுத்தாள்; என்றும் போடும் மூதேவிக்கு இன்று என்ன வந்தது? ஒன்றும் தரவில்லை" எனப் பிச்சை எடுப்பவர் கூறுவதாகக் கூறுவர். இதுதான் மக்கள் மனநிலை. எனவே, இன்றைக்குக் கொலைகாரக் கூட்டாளிக்குத் துணை நின்றுவிட்டுப் பழங்கதைப் பேசிப் பயனில்லை. நாம் தடம் மாறத் தடம் மாற மக்கள் வேறு திசையில் செல்கின்றார்கள் என்றெல்லாம் முது பெரும் தலைவருக்கு இடித்து உரைத்திருக்க வேண்டாவா? இதற்கு முன்பு உயிர்காக்கும் மருந்து கொடுத்ததும் உண்மை! அது பயனளித்ததும் உண்மை! ஆனால், அதே மருந்து காலக்கெடு முடிந்து நஞ்சான பின்பும் அதைத்தான் தருவேன் என்பதில் என்ன பயன்? அம் மருந்தைத் தூக்கி எறியாமல் பாதுகாத்து என்ன பயன்? அதைப்போல்தான் ஈழத்தமிழர் நலன் காக்க முன்பு குரல் கொடுத்ததை வைத்துக் கொண்டு, இப்போது மறைமுகமாகச் சிங்களக் கூட்டாளியாகச் செயல்படுவதை மறைப்பது. இதனை, வீட்டு மக்கள் நலனை முன்னிறுத்தி நாட்டு மக்கள் நலனை மறக்கும் பொழுது எடுத்துரைத்திருக்க வேண்டாவா? தமிழ் என்றால் வீரம் என்றும் பொருள் உண்டல்லவா? இவர்கள் தமிழ் படித்து என்ன பயன்? படித்த தமிழைத் தமிழர் நலனுக்காகப் பயன்படுத்தாத பொழுது, அத்தமிழால் பிழைப்பது கண்டு நாணுற வேண்டாவா? சென்னைக்கு வந்து சேர வேண்டிய தொடரியை ஓட்டுபவர், நான் செங்கல்பட்டு வரை ஓட்டி வந்து விட்டேன். அதன் பின்தானே தடம் புரளச் செய்தேன் என்றால் யாரேனும் பாராட்டுவார்களா? தடம் புரளச் செய்து பல்லாயிரவர் இறக்கக் காரணமானவர் என்பதால் தண்டிப்பார்களா? இலங்கைத் தமிழர் நலனுக்காகப் பாடுபட்டதெல்லாம் எப்பொழுது பாராட்டப்படும்? அதே நிலையில் இருந்து வெற்றியை ஈட்டினால் அல்லவா தட்டிக கொடுத்துப் பாராட்டு மாலை அணிவிப்பார்கள். இல்லாமல், பேரறிஞர் அண்ணாவாலும் தமிழக மக்களாலும் விரட்டியடிக்கப்பட்ட பேராய(காங்கிரசு)க் கட்சியுடன் இணைந்திருக்க வேண்டிய குடும்ப நலனுக்காக, இனப்படுகொலையைக் கண்டும் காணாமல் மறைமுக உடந்தையாக இருந்தமைக்காகத், தட்டிப்போட்டு ஓரங்கட்டுவார்களா? இதனை எடுத்தியம்பத் தமிழறிஞர்கள் தயங்கியது ஏன்? பெருங்கவிக்கோ அவர்களே! அரசியல் பேச வேண்டா என்கின்றீர்கள். அரசியல் இல்லாமல் வாழ்க்கை இல்லை. தொகுப்பாளரும் வேறு சிலரும் தி.மு.க.வைப் பாராட்டினார்களே! அந்த அரசியல் பேச்சை ஏன் நிறுத்தச் சொல்லவில்லை. அன்பு நண்பர் ஒருவர், தான் பேசும் பொழுது நெருக்கடிநிலையால் மிகுதியும் துன்பத்திற்கு ஆளானது தி.மு.க.வினர் என்றும் அவர்களை மறு முறை தேர்ந்தெடுக்காமல் தமிழ் மக்கள் கொடுமை இழைத்து விட்டதாகவும் கூறினாரே! மீண்டும் கலைஞரைத்தான் ஆட்சியில் அமர்த்தவேண்டும் என்றாரே! அது கட்சி அரசியல் இல்லையா? அவரைப் பேசவிட்ட நீங்கள் என் பேச்சைத் தடுக்கக்கூடாது. தி.மு.க.வினரைக் கொடுமை படுத்திய கட்சியுடன் அதன் தலைவரே உறவு கொண்டாடும் பொழுது அவர்கள் பட்ட இன்னல்களை மறந்து விட்டார் என்றுதானே பொருள்! அவ்வாறாயின் பிறர் ஏன் நினைவு கொள்ள வேண்டும். பேராயக்கட்சியுடனான உறவைத் தமிழர் நலனுக்குப் பயன்படுத்தாமல்போனது ஏன்? குசரால் அமைச்சரவையில் இருந்து தி.மு.க.வை விரட்ட வேண்டும் என்ற பேராயக்கட்சியின் தீர்மானத்தைச் செய்தியாளர்களிடம் கூறுகையில் கடுமையான சொற்களைக் கூறியவர் பிரணாப் முகர்சி. அவர்தான் முதுபெரும்தலைவரின் நெடுங்காலக் கெழுதகை நண்பராம்! அக் கெழுதகை நண்பர் அடிக்கடிச்சிங்கள அரசாளர்களைச் சந்தித்து வந்தாரே! எதற்கு? ஈழத்தமிழர் நலன்களைக் காக்கவா? அழிக்கவா? இனப்படுகொலைகளை விரைந்து நடத்தத்தானே அறிவுரை வழங்கினார் எனச் சொல்லப்படுகின்றது. தம் நட்புரிமையைப் பயன்படுத்தி அதை ஏன் தடுக்க வில்லை? “ஊழலைப்பற்றிச் சொல்லும் பொழுது பேராயக்கட்சியின் ஊழலுக்கு இணையாக யாரையும் கூறமுடியாது என்றோம்! தம் குடும்பத்தவரையே முதன்மைப் பதவிகளில் அமர்த்திய பொழுது எல்லா அரசியல் தலைவர்களும் அவ்வாறுதானே செய்கின்றார்கள் என்றோம்! கிழவர் அணியா? இளைஞர் அணியா

Tuesday, May 7, 2013

வீழ்வோம் என்று நினைத்தாயோ

2009ஆம் ஆண்டு மே 18ஆம் நாளன்று, முள்ளிவாய்க்கால், வட்டுவாகல் ஆகிய இரண்டு சிறிய கிராமங்களில், சிங்கள பெளத்த இனவாத அரசின் இராணுவத்தின் தொடர் தாக்குதல்களால் தங்கள் சொந்தங்களை மட்டுமின்றி, தங்கள் அங்கங்களையும், அவயங்களையும் இழந்து, நகரக்கூட வலுவற்றுக் கிடந்த நாற்பதினாயிரத்திற்கும் அதிகமானோரை கொன்று குவித்து, எந்த மண்ணின் மீட்சிக்காக போராடினார்களோ அந்த மண்ணிலேயே அம்மக்களை புதைத்து மூடிய பிறகு, சிங்கள இராணுவத்தின் தலைமை கூறியது: போர் முடிந்துவிட்டது என்று. அந்த செய்திக்குப் பிறகுதான் சிங்கள பெளத்த இனவாத அரசின் அதிபர் இருக்கும் மகிந்த ராஜபக்ச கூறினார்: புலிகளை முற்றிலுமாக அழித்துவிட்டோம். இலங்கையின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக இருந்த அந்த போராளிக் குழுவை அழித்துவிட்டோம் என்றார். அப்படித்தான் நினைத்தார்கள், நம்மை அழித்த சிங்கள பெளத்த இனவாத அரசு மட்டுமல்ல, நமது அழிப்பிற்குத் துணைபோன தெற்காசிய வல்லாதிக்கங்கள் மட்டுமல்ல, நமக்காகவே தங்கள் வாழ்வும் அரசியலும் இருப்பதாக கண்ணீர் வடித்த அரசியல் கலைஞர்கள் கூட கூறினார்கள்: எல்லாம் முடிந்துவிட்டது என்று. இதற்குமேல் ஈழத் தமிழினத்திற்கு ஏதாவது செய்ய வேண்டுமெனில், அதனை ராஜபக்ச அரசின் வாயிலாகத்தான் செய்ய முடியும் என்றார்கள். தமிழீழ மண்ணி்ன், மக்களின் விடுதலைக்காக தங்களின் இளமையை மட்டுமின்றி, தம் குடும்ப உறவுகளைத் துறந்து, கல்வி, வாழ்க்கை, எதிர்காலம் என்ற அனைத்தையும் துறந்து, புலிகளாய் களமாடிய எம் மாவீரர்களின் போராட்டம் அன்றைய தினம் மெளனிக்கப்பட்டது என்ற அறிவிப்போது எல்லாம் முடிந்துவிட்டது என்று உலகமே கூறியது. சிங்கள பெளத்த இனவாத அரசின் இன அழிப்பிலிருந்து தமிழினத்தைக் காக்க களமாடி உயிர் நீத்த 46 ஆயிரம் மாவீரர்களின் ஆன்மா தாகம் விடுதலை என்கிற விடிவு ஏற்படாமலேயே அடங்கிவிட்டதா? அப்படி அடங்கிவிடத்தான் முடியுமா? விடுதலைக்கான போராட்டம் மெளனிக்கப்படலாம், விடுதலைக்கான நியாயம் இல்லாமல் போகுமா? இல்லை, நமது போராட்டம் ஒரு களத்தில் தோற்றது உண்மையே, ஆனால் மற்றுமொரு பாதையில் அந்த போராட்டம் வேறொரு வடிவில் தொடரும் என்று கூறினாரா எம்மினத்திற்காக ஆயுதமேந்திய போராட்டத்தை முன்னெடுத்த எம் தலைவர், அது நடவாமல் போய்விடுமா? என்று உலகெங்கும் வாழ்ந்த தமிழர் நெஞ்சங்களில் எழுந்த கேள்விகளே, அவர்களின் போராட்டத்தை சர்வதேச அரங்கிற்கு கொண்டு சென்றது. இலங்கை எனும் சிறியதொரு தீவில் நடந்ததொரு விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதம் என்று கூறி முடிக்க பார்த்த சக்திகளுக்கு உலகமே ஆதரவாக நின்றது. ஆனால், இலங்கைத் தீவில் அந்த உன்னத, தியாகப் போராட்டத்தை முடக்க முடிந்த சர்வதேச வல்லாதிக்கங்களுக்கு, தமிழினம் அந்தத் தீவைத் தாண்டி தனது போராட்டத்தை தொடர்ந்தபோது முடக்கவும் முடியவில்லை, தடுக்கவும் முடியவில்லை, திகைத்து நின்றது. ஈழமென்ற வார்த்தை கூட ஒலிக்கக்கூடாது என்று அரசு உத்தரவு போட்டு தடுக்க நினைத்தார்கள் தாய் தமிழகத்தில்! இதற்கு மேல் ஈழம் என்று சொல்லி இங்கு யாரும் அரசியல் செய்ய முடியாது என்று பேசினார்கள்... இல்லை, இல்லை, திமிராக எச்சரித்தார்கள். நாம் பேசினோம், நாம் தமிழராய் தலை நிமிர்ந்து பேசினோம். எம்மக்களிடேயே மேடை போட்டு, தமிழீழ விடுதலையின் நியாயத்தைப் பேசினோம். எம் இனத்தின் விடுதலைக்கு எதிராக கூறப்பட்ட அபாண்டங்களை உடைத்தெறிந்து, எம் மாவீரர்களின் தியாகப் போராட்டத்தை பேசினோம். எம் மக்களின் துயரத்திற்காக எமது புலிகள் அழவில்லை. மாறாக, அவர்களின் அழுகையை துடைக்க தம் உயிரைப் பணயம் வைத்து வெங்கொடுமை சாக்காட்டில் வீரத்துடன் விளையாடினார்கள் என்று நெஞ்சை நிமிர்த்துப் பேசினோம். தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டம் பயங்கரவாதமல்ல, மாறாக, சிங்களம் ஈழத் தமிழினத்தின் மீது திணித்த அரச பயங்கரவாதத்திற்கு பதில்வாதமென்றோம். மக்கள் ஏற்றார்கள், தமிழ்நாட்டில் அரசியல் மாறியது. ஈழம் இதற்கு மேல் தமிழ்நாட்டில் அரசியல் அல்ல என்றவர்கள், இன்று ஈழத்தைப் பற்றிப் பேசாமல் அரசியல் இல்லை என்கிற நிலையைக் கண்டார்கள். தங்களின் பழைய நாடகத்தை புதுப்பித்து அரங்கேற்றினார்கள், எடுபடவில்லை. தங்களின் அரசியல் பாதையை மாற்றினார்கள், மக்கள் நம்பவில்லை. ஐ.நா.மனித உரிமை மன்றத்தில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று முழங்கினார்கள். என்ன அந்தத் தீர்மானம், அதில் எங்கே இருக்கிறது ஈழத் தமிழினத்திற்காக நியாயம் என்று தமிழ்நாட்டின் மாணவர் சமுதாயம் பொங்கியெழுந்து குரலெழுப்பியது. வெற்று மனத்தோடு ஆர்ப்பரித்தவர்கள் அடங்கிப்போனார்கள். போராட்டம் கைமாறியது. எந்தத் தலைவனின் படத்தைப் போட்டு சுவரொட்டி கூட ஒட்டுக்கூடாது என்றார்களோ, அந்தத் தலைவனின் படம் எம் இளைய சமூகத்தினரின் ஆடைகளின் மலர்ந்த புன்னகையோடு ஆட்சி செய்வதைக் கண்டு நாணினார்கள். புலிகளை அழித்துவிட்டோம், இதற்கு மேல் தமிழர்களுக்குத் தருவதற்கு ஏதுமில்லை என்று சிங்கள இனவாத அரசியல் தலைமை பேசியது. புலிகள் யார்? தமிழர்கள் யார்? எப்படி பிரிப்பது? பிரிக்கத்தான் முடியுமா? சிங்கள பெளத்த இனவாத அரசு தொடர்ந்து பயங்கரவாதத்தை முறியடித்து தன் இனத்திற்கு விடுதலை பெற்றுத்தர தமிழரிடையே உருவான எழுச்சியின் அடையாளம்தான் புலி. அது மிருகமல்ல, வீர உணர்ச்சியின் எழுச்சி வடிவம். அதைத் தம் இதயத்தில் தாங்கிய எம் மாவீரர்கள் எதிரியின் பலத்தைக் கண்டு அஞ்ஞாமல், துஞ்சாமல் இரவும், பகலுமாக போராடினார்கள். அவர்கள் வேறு நாம் வேறல்ல. பிரித்துப்பேசி ஒரு இனத்தின் விடுதலைப் போராட்டத்தை முடித்தவிட திட்டமிட்டார்கள். அந்த இராஜதந்திரம் தமிழினத்திடம் தோற்றுப்போனது. உலக அளவில் எழுந்தோம், நிமிர்ந்தோம், போராடினோம், எமது போராட்டத்தின் நியாயம் களத்தில் பெற்ற தோல்வியால் முடிங்கிவிடாது என்று இன்றுவரை பறைசாற்றிக்கொண்டிருக்கிறோம். அதனால்தான் கடந்த ஆண்டு இதே மே 18ஆம் நாளை ‘விழ விழ எழுவோம், விதையாய் வீழ்ந்த நாங்கள், விடுதலையாய் எழுவோம்’ என்று விடுதலையுணர்வுடன் ஆழ்கடல் அலையென ஆர்ப்பரித்து எழுந்தோம். எம்மைப் பொறுத்தவரை மே 18 துக்க நாளல்ல, எமது விடுதலையின் அடுத்த அத்தியாயம் தொடங்கப்பட்ட நாள். இந்த நாளில் நாம் ஒரு புதிய உத்வேகத்தைப் பெறுகிறோம். அது நமக்காக போராடி உயிர் நீத்த நம் மாவீரர்கள் நமக்கு வழங்கியுள்ள ஆன்ம சக்தி அளிக்கும் உத்வேகம் அது. அதன் உந்துதலால்தான் சர்வதேசத்தை இன்றுவரை நாம் உலுக்கி எடுக்கிறோம், இந்திய அரசியலை நம்மை நோக்கி வெற்றிகரமாக திருப்பியும் உள்ளோம். இந்த ஆண்டில் நாம் முன்வைக்கும் முழக்கம்: வீழ்வோம் என்று நினைத்தாயோ என்பது. வீழ்வோம் என்று நினைத்தாய், பல கோடி விழுதுகளுடன் எம் இனத்தின் விடுதலையை முன்னெடுக்க எழுந்துள்ளோம் என்பதை இந்த மே 18ஆம் நாளில் நாம் ஒன்றுகூடி உலகிற்கு பறைசாற்றுவோம். கனடாவில் வாழும் எம் தொப்புள் கொடி உறவுகளுக்கும், நாம் தமிழர் கனடாவிற்கு எனது புரட்சிகரமான வாழ்த்துகள். தமிழர் தாகம், தமிழீழ தாயகம்.

வீழ்வோம் என்று நினைத்தாயோ

2009ஆம் ஆண்டு மே 18ஆம் நாளன்று, முள்ளிவாய்க்கால், வட்டுவாகல் ஆகிய இரண்டு சிறிய கிராமங்களில், சிங்கள பெளத்த இனவாத அரசின் இராணுவத்தின் தொடர் தாக்குதல்களால் தங்கள் சொந்தங்களை மட்டுமின்றி, தங்கள் அங்கங்களையும், அவயங்களையும் இழந்து, நகரக்கூட வலுவற்றுக் கிடந்த நாற்பதினாயிரத்திற்கும் அதிகமானோரை கொன்று குவித்து, எந்த மண்ணின் மீட்சிக்காக போராடினார்களோ அந்த மண்ணிலேயே அம்மக்களை புதைத்து மூடிய பிறகு, சிங்கள இராணுவத்தின் தலைமை கூறியது: போர் முடிந்துவிட்டது என்று. அந்த செய்திக்குப் பிறகுதான் சிங்கள பெளத்த இனவாத அரசின் அதிபர் இருக்கும் மகிந்த ராஜபக்ச கூறினார்: புலிகளை முற்றிலுமாக அழித்துவிட்டோம். இலங்கையின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக இருந்த அந்த போராளிக் குழுவை அழித்துவிட்டோம் என்றார். அப்படித்தான் நினைத்தார்கள், நம்மை அழித்த சிங்கள பெளத்த இனவாத அரசு மட்டுமல்ல, நமது அழிப்பிற்குத் துணைபோன தெற்காசிய வல்லாதிக்கங்கள் மட்டுமல்ல, நமக்காகவே தங்கள் வாழ்வும் அரசியலும் இருப்பதாக கண்ணீர் வடித்த அரசியல் கலைஞர்கள் கூட கூறினார்கள்: எல்லாம் முடிந்துவிட்டது என்று. இதற்குமேல் ஈழத் தமிழினத்திற்கு ஏதாவது செய்ய வேண்டுமெனில், அதனை ராஜபக்ச அரசின் வாயிலாகத்தான் செய்ய முடியும் என்றார்கள். தமிழீழ மண்ணி்ன், மக்களின் விடுதலைக்காக தங்களின் இளமையை மட்டுமின்றி, தம் குடும்ப உறவுகளைத் துறந்து, கல்வி, வாழ்க்கை, எதிர்காலம் என்ற அனைத்தையும் துறந்து, புலிகளாய் களமாடிய எம் மாவீரர்களின் போராட்டம் அன்றைய தினம் மெளனிக்கப்பட்டது என்ற அறிவிப்போது எல்லாம் முடிந்துவிட்டது என்று உலகமே கூறியது. சிங்கள பெளத்த இனவாத அரசின் இன அழிப்பிலிருந்து தமிழினத்தைக் காக்க களமாடி உயிர் நீத்த 46 ஆயிரம் மாவீரர்களின் ஆன்மா தாகம் விடுதலை என்கிற விடிவு ஏற்படாமலேயே அடங்கிவிட்டதா? அப்படி அடங்கிவிடத்தான் முடியுமா? விடுதலைக்கான போராட்டம் மெளனிக்கப்படலாம், விடுதலைக்கான நியாயம் இல்லாமல் போகுமா? இல்லை, நமது போராட்டம் ஒரு களத்தில் தோற்றது உண்மையே, ஆனால் மற்றுமொரு பாதையில் அந்த போராட்டம் வேறொரு வடிவில் தொடரும் என்று கூறினாரா எம்மினத்திற்காக ஆயுதமேந்திய போராட்டத்தை முன்னெடுத்த எம் தலைவர், அது நடவாமல் போய்விடுமா? என்று உலகெங்கும் வாழ்ந்த தமிழர் நெஞ்சங்களில் எழுந்த கேள்விகளே, அவர்களின் போராட்டத்தை சர்வதேச அரங்கிற்கு கொண்டு சென்றது. இலங்கை எனும் சிறியதொரு தீவில் நடந்ததொரு விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதம் என்று கூறி முடிக்க பார்த்த சக்திகளுக்கு உலகமே ஆதரவாக நின்றது. ஆனால், இலங்கைத் தீவில் அந்த உன்னத, தியாகப் போராட்டத்தை முடக்க முடிந்த சர்வதேச வல்லாதிக்கங்களுக்கு, தமிழினம் அந்தத் தீவைத் தாண்டி தனது போராட்டத்தை தொடர்ந்தபோது முடக்கவும் முடியவில்லை, தடுக்கவும் முடியவில்லை, திகைத்து நின்றது. ஈழமென்ற வார்த்தை கூட ஒலிக்கக்கூடாது என்று அரசு உத்தரவு போட்டு தடுக்க நினைத்தார்கள் தாய் தமிழகத்தில்! இதற்கு மேல் ஈழம் என்று சொல்லி இங்கு யாரும் அரசியல் செய்ய முடியாது என்று பேசினார்கள்... இல்லை, இல்லை, திமிராக எச்சரித்தார்கள். நாம் பேசினோம், நாம் தமிழராய் தலை நிமிர்ந்து பேசினோம். எம்மக்களிடேயே மேடை போட்டு, தமிழீழ விடுதலையின் நியாயத்தைப் பேசினோம். எம் இனத்தின் விடுதலைக்கு எதிராக கூறப்பட்ட அபாண்டங்களை உடைத்தெறிந்து, எம் மாவீரர்களின் தியாகப் போராட்டத்தை பேசினோம். எம் மக்களின் துயரத்திற்காக எமது புலிகள் அழவில்லை. மாறாக, அவர்களின் அழுகையை துடைக்க தம் உயிரைப் பணயம் வைத்து வெங்கொடுமை சாக்காட்டில் வீரத்துடன் விளையாடினார்கள் என்று நெஞ்சை நிமிர்த்துப் பேசினோம். தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டம் பயங்கரவாதமல்ல, மாறாக, சிங்களம் ஈழத் தமிழினத்தின் மீது திணித்த அரச பயங்கரவாதத்திற்கு பதில்வாதமென்றோம். மக்கள் ஏற்றார்கள், தமிழ்நாட்டில் அரசியல் மாறியது. ஈழம் இதற்கு மேல் தமிழ்நாட்டில் அரசியல் அல்ல என்றவர்கள், இன்று ஈழத்தைப் பற்றிப் பேசாமல் அரசியல் இல்லை என்கிற நிலையைக் கண்டார்கள். தங்களின் பழைய நாடகத்தை புதுப்பித்து அரங்கேற்றினார்கள், எடுபடவில்லை. தங்களின் அரசியல் பாதையை மாற்றினார்கள், மக்கள் நம்பவில்லை. ஐ.நா.மனித உரிமை மன்றத்தில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று முழங்கினார்கள். என்ன அந்தத் தீர்மானம், அதில் எங்கே இருக்கிறது ஈழத் தமிழினத்திற்காக நியாயம் என்று தமிழ்நாட்டின் மாணவர் சமுதாயம் பொங்கியெழுந்து குரலெழுப்பியது. வெற்று மனத்தோடு ஆர்ப்பரித்தவர்கள் அடங்கிப்போனார்கள். போராட்டம் கைமாறியது. எந்தத் தலைவனின் படத்தைப் போட்டு சுவரொட்டி கூட ஒட்டுக்கூடாது என்றார்களோ, அந்தத் தலைவனின் படம் எம் இளைய சமூகத்தினரின் ஆடைகளின் மலர்ந்த புன்னகையோடு ஆட்சி செய்வதைக் கண்டு நாணினார்கள். புலிகளை அழித்துவிட்டோம், இதற்கு மேல் தமிழர்களுக்குத் தருவதற்கு ஏதுமில்லை என்று சிங்கள இனவாத அரசியல் தலைமை பேசியது. புலிகள் யார்? தமிழர்கள் யார்? எப்படி பிரிப்பது? பிரிக்கத்தான் முடியுமா? சிங்கள பெளத்த இனவாத அரசு தொடர்ந்து பயங்கரவாதத்தை முறியடித்து தன் இனத்திற்கு விடுதலை பெற்றுத்தர தமிழரிடையே உருவான எழுச்சியின் அடையாளம்தான் புலி. அது மிருகமல்ல, வீர உணர்ச்சியின் எழுச்சி வடிவம். அதைத் தம் இதயத்தில் தாங்கிய எம் மாவீரர்கள் எதிரியின் பலத்தைக் கண்டு அஞ்ஞாமல், துஞ்சாமல் இரவும், பகலுமாக போராடினார்கள். அவர்கள் வேறு நாம் வேறல்ல. பிரித்துப்பேசி ஒரு இனத்தின் விடுதலைப் போராட்டத்தை முடித்தவிட திட்டமிட்டார்கள். அந்த இராஜதந்திரம் தமிழினத்திடம் தோற்றுப்போனது. உலக அளவில் எழுந்தோம், நிமிர்ந்தோம், போராடினோம், எமது போராட்டத்தின் நியாயம் களத்தில் பெற்ற தோல்வியால் முடிங்கிவிடாது என்று இன்றுவரை பறைசாற்றிக்கொண்டிருக்கிறோம். அதனால்தான் கடந்த ஆண்டு இதே மே 18ஆம் நாளை ‘விழ விழ எழுவோம், விதையாய் வீழ்ந்த நாங்கள், விடுதலையாய் எழுவோம்’ என்று விடுதலையுணர்வுடன் ஆழ்கடல் அலையென ஆர்ப்பரித்து எழுந்தோம். எம்மைப் பொறுத்தவரை மே 18 துக்க நாளல்ல, எமது விடுதலையின் அடுத்த அத்தியாயம் தொடங்கப்பட்ட நாள். இந்த நாளில் நாம் ஒரு புதிய உத்வேகத்தைப் பெறுகிறோம். அது நமக்காக போராடி உயிர் நீத்த நம் மாவீரர்கள் நமக்கு வழங்கியுள்ள ஆன்ம சக்தி அளிக்கும் உத்வேகம் அது. அதன் உந்துதலால்தான் சர்வதேசத்தை இன்றுவரை நாம் உலுக்கி எடுக்கிறோம், இந்திய அரசியலை நம்மை நோக்கி வெற்றிகரமாக திருப்பியும் உள்ளோம். இந்த ஆண்டில் நாம் முன்வைக்கும் முழக்கம்: வீழ்வோம் என்று நினைத்தாயோ என்பது. வீழ்வோம் என்று நினைத்தாய், பல கோடி விழுதுகளுடன் எம் இனத்தின் விடுதலையை முன்னெடுக்க எழுந்துள்ளோம் என்பதை இந்த மே 18ஆம் நாளில் நாம் ஒன்றுகூடி உலகிற்கு பறைசாற்றுவோம். கனடாவில் வாழும் எம் தொப்புள் கொடி உறவுகளுக்கும், நாம் தமிழர் கனடாவிற்கு எனது புரட்சிகரமான வாழ்த்துகள். தமிழர் தாகம், தமிழீழ தாயகம்.

வீழ்வோம் என்று நினைத்தாயோ

2009ஆம் ஆண்டு மே 18ஆம் நாளன்று, முள்ளிவாய்க்கால், வட்டுவாகல் ஆகிய இரண்டு சிறிய கிராமங்களில், சிங்கள பெளத்த இனவாத அரசின் இராணுவத்தின் தொடர் தாக்குதல்களால் தங்கள் சொந்தங்களை மட்டுமின்றி, தங்கள் அங்கங்களையும், அவயங்களையும் இழந்து, நகரக்கூட வலுவற்றுக் கிடந்த நாற்பதினாயிரத்திற்கும் அதிகமானோரை கொன்று குவித்து, எந்த மண்ணின் மீட்சிக்காக போராடினார்களோ அந்த மண்ணிலேயே அம்மக்களை புதைத்து மூடிய பிறகு, சிங்கள இராணுவத்தின் தலைமை கூறியது: போர் முடிந்துவிட்டது என்று. அந்த செய்திக்குப் பிறகுதான் சிங்கள பெளத்த இனவாத அரசின் அதிபர் இருக்கும் மகிந்த ராஜபக்ச கூறினார்: புலிகளை முற்றிலுமாக அழித்துவிட்டோம். இலங்கையின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக இருந்த அந்த போராளிக் குழுவை அழித்துவிட்டோம் என்றார். அப்படித்தான் நினைத்தார்கள், நம்மை அழித்த சிங்கள பெளத்த இனவாத அரசு மட்டுமல்ல, நமது அழிப்பிற்குத் துணைபோன தெற்காசிய வல்லாதிக்கங்கள் மட்டுமல்ல, நமக்காகவே தங்கள் வாழ்வும் அரசியலும் இருப்பதாக கண்ணீர் வடித்த அரசியல் கலைஞர்கள் கூட கூறினார்கள்: எல்லாம் முடிந்துவிட்டது என்று. இதற்குமேல் ஈழத் தமிழினத்திற்கு ஏதாவது செய்ய வேண்டுமெனில், அதனை ராஜபக்ச அரசின் வாயிலாகத்தான் செய்ய முடியும் என்றார்கள். தமிழீழ மண்ணி்ன், மக்களின் விடுதலைக்காக தங்களின் இளமையை மட்டுமின்றி, தம் குடும்ப உறவுகளைத் துறந்து, கல்வி, வாழ்க்கை, எதிர்காலம் என்ற அனைத்தையும் துறந்து, புலிகளாய் களமாடிய எம் மாவீரர்களின் போராட்டம் அன்றைய தினம் மெளனிக்கப்பட்டது என்ற அறிவிப்போது எல்லாம் முடிந்துவிட்டது என்று உலகமே கூறியது. சிங்கள பெளத்த இனவாத அரசின் இன அழிப்பிலிருந்து தமிழினத்தைக் காக்க களமாடி உயிர் நீத்த 46 ஆயிரம் மாவீரர்களின் ஆன்மா தாகம் விடுதலை என்கிற விடிவு ஏற்படாமலேயே அடங்கிவிட்டதா? அப்படி அடங்கிவிடத்தான் முடியுமா? விடுதலைக்கான போராட்டம் மெளனிக்கப்படலாம், விடுதலைக்கான நியாயம் இல்லாமல் போகுமா? இல்லை, நமது போராட்டம் ஒரு களத்தில் தோற்றது உண்மையே, ஆனால் மற்றுமொரு பாதையில் அந்த போராட்டம் வேறொரு வடிவில் தொடரும் என்று கூறினாரா எம்மினத்திற்காக ஆயுதமேந்திய போராட்டத்தை முன்னெடுத்த எம் தலைவர், அது நடவாமல் போய்விடுமா? என்று உலகெங்கும் வாழ்ந்த தமிழர் நெஞ்சங்களில் எழுந்த கேள்விகளே, அவர்களின் போராட்டத்தை சர்வதேச அரங்கிற்கு கொண்டு சென்றது. இலங்கை எனும் சிறியதொரு தீவில் நடந்ததொரு விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதம் என்று கூறி முடிக்க பார்த்த சக்திகளுக்கு உலகமே ஆதரவாக நின்றது. ஆனால், இலங்கைத் தீவில் அந்த உன்னத, தியாகப் போராட்டத்தை முடக்க முடிந்த சர்வதேச வல்லாதிக்கங்களுக்கு, தமிழினம் அந்தத் தீவைத் தாண்டி தனது போராட்டத்தை தொடர்ந்தபோது முடக்கவும் முடியவில்லை, தடுக்கவும் முடியவில்லை, திகைத்து நின்றது. ஈழமென்ற வார்த்தை கூட ஒலிக்கக்கூடாது என்று அரசு உத்தரவு போட்டு தடுக்க நினைத்தார்கள் தாய் தமிழகத்தில்! இதற்கு மேல் ஈழம் என்று சொல்லி இங்கு யாரும் அரசியல் செய்ய முடியாது என்று பேசினார்கள்... இல்லை, இல்லை, திமிராக எச்சரித்தார்கள். நாம் பேசினோம், நாம் தமிழராய் தலை நிமிர்ந்து பேசினோம். எம்மக்களிடேயே மேடை போட்டு, தமிழீழ விடுதலையின் நியாயத்தைப் பேசினோம். எம் இனத்தின் விடுதலைக்கு எதிராக கூறப்பட்ட அபாண்டங்களை உடைத்தெறிந்து, எம் மாவீரர்களின் தியாகப் போராட்டத்தை பேசினோம். எம் மக்களின் துயரத்திற்காக எமது புலிகள் அழவில்லை. மாறாக, அவர்களின் அழுகையை துடைக்க தம் உயிரைப் பணயம் வைத்து வெங்கொடுமை சாக்காட்டில் வீரத்துடன் விளையாடினார்கள் என்று நெஞ்சை நிமிர்த்துப் பேசினோம். தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டம் பயங்கரவாதமல்ல, மாறாக, சிங்களம் ஈழத் தமிழினத்தின் மீது திணித்த அரச பயங்கரவாதத்திற்கு பதில்வாதமென்றோம். மக்கள் ஏற்றார்கள், தமிழ்நாட்டில் அரசியல் மாறியது. ஈழம் இதற்கு மேல் தமிழ்நாட்டில் அரசியல் அல்ல என்றவர்கள், இன்று ஈழத்தைப் பற்றிப் பேசாமல் அரசியல் இல்லை என்கிற நிலையைக் கண்டார்கள். தங்களின் பழைய நாடகத்தை புதுப்பித்து அரங்கேற்றினார்கள், எடுபடவில்லை. தங்களின் அரசியல் பாதையை மாற்றினார்கள், மக்கள் நம்பவில்லை. ஐ.நா.மனித உரிமை மன்றத்தில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று முழங்கினார்கள். என்ன அந்தத் தீர்மானம், அதில் எங்கே இருக்கிறது ஈழத் தமிழினத்திற்காக நியாயம் என்று தமிழ்நாட்டின் மாணவர் சமுதாயம் பொங்கியெழுந்து குரலெழுப்பியது. வெற்று மனத்தோடு ஆர்ப்பரித்தவர்கள் அடங்கிப்போனார்கள். போராட்டம் கைமாறியது. எந்தத் தலைவனின் படத்தைப் போட்டு சுவரொட்டி கூட ஒட்டுக்கூடாது என்றார்களோ, அந்தத் தலைவனின் படம் எம் இளைய சமூகத்தினரின் ஆடைகளின் மலர்ந்த புன்னகையோடு ஆட்சி செய்வதைக் கண்டு நாணினார்கள். புலிகளை அழித்துவிட்டோம், இதற்கு மேல் தமிழர்களுக்குத் தருவதற்கு ஏதுமில்லை என்று சிங்கள இனவாத அரசியல் தலைமை பேசியது. புலிகள் யார்? தமிழர்கள் யார்? எப்படி பிரிப்பது? பிரிக்கத்தான் முடியுமா? சிங்கள பெளத்த இனவாத அரசு தொடர்ந்து பயங்கரவாதத்தை முறியடித்து தன் இனத்திற்கு விடுதலை பெற்றுத்தர தமிழரிடையே உருவான எழுச்சியின் அடையாளம்தான் புலி. அது மிருகமல்ல, வீர உணர்ச்சியின் எழுச்சி வடிவம். அதைத் தம் இதயத்தில் தாங்கிய எம் மாவீரர்கள் எதிரியின் பலத்தைக் கண்டு அஞ்ஞாமல், துஞ்சாமல் இரவும், பகலுமாக போராடினார்கள். அவர்கள் வேறு நாம் வேறல்ல. பிரித்துப்பேசி ஒரு இனத்தின் விடுதலைப் போராட்டத்தை முடித்தவிட திட்டமிட்டார்கள். அந்த இராஜதந்திரம் தமிழினத்திடம் தோற்றுப்போனது. உலக அளவில் எழுந்தோம், நிமிர்ந்தோம், போராடினோம், எமது போராட்டத்தின் நியாயம் களத்தில் பெற்ற தோல்வியால் முடிங்கிவிடாது என்று இன்றுவரை பறைசாற்றிக்கொண்டிருக்கிறோம். அதனால்தான் கடந்த ஆண்டு இதே மே 18ஆம் நாளை ‘விழ விழ எழுவோம், விதையாய் வீழ்ந்த நாங்கள், விடுதலையாய் எழுவோம்’ என்று விடுதலையுணர்வுடன் ஆழ்கடல் அலையென ஆர்ப்பரித்து எழுந்தோம். எம்மைப் பொறுத்தவரை மே 18 துக்க நாளல்ல, எமது விடுதலையின் அடுத்த அத்தியாயம் தொடங்கப்பட்ட நாள். இந்த நாளில் நாம் ஒரு புதிய உத்வேகத்தைப் பெறுகிறோம். அது நமக்காக போராடி உயிர் நீத்த நம் மாவீரர்கள் நமக்கு வழங்கியுள்ள ஆன்ம சக்தி அளிக்கும் உத்வேகம் அது. அதன் உந்துதலால்தான் சர்வதேசத்தை இன்றுவரை நாம் உலுக்கி எடுக்கிறோம், இந்திய அரசியலை நம்மை நோக்கி வெற்றிகரமாக திருப்பியும் உள்ளோம். இந்த ஆண்டில் நாம் முன்வைக்கும் முழக்கம்: வீழ்வோம் என்று நினைத்தாயோ என்பது. வீழ்வோம் என்று நினைத்தாய், பல கோடி விழுதுகளுடன் எம் இனத்தின் விடுதலையை முன்னெடுக்க எழுந்துள்ளோம் என்பதை இந்த மே 18ஆம் நாளில் நாம் ஒன்றுகூடி உலகிற்கு பறைசாற்றுவோம். கனடாவில் வாழும் எம் தொப்புள் கொடி உறவுகளுக்கும், நாம் தமிழர் கனடாவிற்கு எனது புரட்சிகரமான வாழ்த்துகள். தமிழர் தாகம், தமிழீழ தாயகம்.

வீழ்வோம் என்று நினைத்தாயோ

2009ஆம் ஆண்டு மே 18ஆம் நாளன்று, முள்ளிவாய்க்கால், வட்டுவாகல் ஆகிய இரண்டு சிறிய கிராமங்களில், சிங்கள பெளத்த இனவாத அரசின் இராணுவத்தின் தொடர் தாக்குதல்களால் தங்கள் சொந்தங்களை மட்டுமின்றி, தங்கள் அங்கங்களையும், அவயங்களையும் இழந்து, நகரக்கூட வலுவற்றுக் கிடந்த நாற்பதினாயிரத்திற்கும் அதிகமானோரை கொன்று குவித்து, எந்த மண்ணின் மீட்சிக்காக போராடினார்களோ அந்த மண்ணிலேயே அம்மக்களை புதைத்து மூடிய பிறகு, சிங்கள இராணுவத்தின் தலைமை கூறியது: போர் முடிந்துவிட்டது என்று. அந்த செய்திக்குப் பிறகுதான் சிங்கள பெளத்த இனவாத அரசின் அதிபர் இருக்கும் மகிந்த ராஜபக்ச கூறினார்: புலிகளை முற்றிலுமாக அழித்துவிட்டோம். இலங்கையின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக இருந்த அந்த போராளிக் குழுவை அழித்துவிட்டோம் என்றார். அப்படித்தான் நினைத்தார்கள், நம்மை அழித்த சிங்கள பெளத்த இனவாத அரசு மட்டுமல்ல, நமது அழிப்பிற்குத் துணைபோன தெற்காசிய வல்லாதிக்கங்கள் மட்டுமல்ல, நமக்காகவே தங்கள் வாழ்வும் அரசியலும் இருப்பதாக கண்ணீர் வடித்த அரசியல் கலைஞர்கள் கூட கூறினார்கள்: எல்லாம் முடிந்துவிட்டது என்று. இதற்குமேல் ஈழத் தமிழினத்திற்கு ஏதாவது செய்ய வேண்டுமெனில், அதனை ராஜபக்ச அரசின் வாயிலாகத்தான் செய்ய முடியும் என்றார்கள். தமிழீழ மண்ணி்ன், மக்களின் விடுதலைக்காக தங்களின் இளமையை மட்டுமின்றி, தம் குடும்ப உறவுகளைத் துறந்து, கல்வி, வாழ்க்கை, எதிர்காலம் என்ற அனைத்தையும் துறந்து, புலிகளாய் களமாடிய எம் மாவீரர்களின் போராட்டம் அன்றைய தினம் மெளனிக்கப்பட்டது என்ற அறிவிப்போது எல்லாம் முடிந்துவிட்டது என்று உலகமே கூறியது. சிங்கள பெளத்த இனவாத அரசின் இன அழிப்பிலிருந்து தமிழினத்தைக் காக்க களமாடி உயிர் நீத்த 46 ஆயிரம் மாவீரர்களின் ஆன்மா தாகம் விடுதலை என்கிற விடிவு ஏற்படாமலேயே அடங்கிவிட்டதா? அப்படி அடங்கிவிடத்தான் முடியுமா? விடுதலைக்கான போராட்டம் மெளனிக்கப்படலாம், விடுதலைக்கான நியாயம் இல்லாமல் போகுமா? இல்லை, நமது போராட்டம் ஒரு களத்தில் தோற்றது உண்மையே, ஆனால் மற்றுமொரு பாதையில் அந்த போராட்டம் வேறொரு வடிவில் தொடரும் என்று கூறினாரா எம்மினத்திற்காக ஆயுதமேந்திய போராட்டத்தை முன்னெடுத்த எம் தலைவர், அது நடவாமல் போய்விடுமா? என்று உலகெங்கும் வாழ்ந்த தமிழர் நெஞ்சங்களில் எழுந்த கேள்விகளே, அவர்களின் போராட்டத்தை சர்வதேச அரங்கிற்கு கொண்டு சென்றது. இலங்கை எனும் சிறியதொரு தீவில் நடந்ததொரு விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதம் என்று கூறி முடிக்க பார்த்த சக்திகளுக்கு உலகமே ஆதரவாக நின்றது. ஆனால், இலங்கைத் தீவில் அந்த உன்னத, தியாகப் போராட்டத்தை முடக்க முடிந்த சர்வதேச வல்லாதிக்கங்களுக்கு, தமிழினம் அந்தத் தீவைத் தாண்டி தனது போராட்டத்தை தொடர்ந்தபோது முடக்கவும் முடியவில்லை, தடுக்கவும் முடியவில்லை, திகைத்து நின்றது. ஈழமென்ற வார்த்தை கூட ஒலிக்கக்கூடாது என்று அரசு உத்தரவு போட்டு தடுக்க நினைத்தார்கள் தாய் தமிழகத்தில்! இதற்கு மேல் ஈழம் என்று சொல்லி இங்கு யாரும் அரசியல் செய்ய முடியாது என்று பேசினார்கள்... இல்லை, இல்லை, திமிராக எச்சரித்தார்கள். நாம் பேசினோம், நாம் தமிழராய் தலை நிமிர்ந்து பேசினோம். எம்மக்களிடேயே மேடை போட்டு, தமிழீழ விடுதலையின் நியாயத்தைப் பேசினோம். எம் இனத்தின் விடுதலைக்கு எதிராக கூறப்பட்ட அபாண்டங்களை உடைத்தெறிந்து, எம் மாவீரர்களின் தியாகப் போராட்டத்தை பேசினோம். எம் மக்களின் துயரத்திற்காக எமது புலிகள் அழவில்லை. மாறாக, அவர்களின் அழுகையை துடைக்க தம் உயிரைப் பணயம் வைத்து வெங்கொடுமை சாக்காட்டில் வீரத்துடன் விளையாடினார்கள் என்று நெஞ்சை நிமிர்த்துப் பேசினோம். தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டம் பயங்கரவாதமல்ல, மாறாக, சிங்களம் ஈழத் தமிழினத்தின் மீது திணித்த அரச பயங்கரவாதத்திற்கு பதில்வாதமென்றோம். மக்கள் ஏற்றார்கள், தமிழ்நாட்டில் அரசியல் மாறியது. ஈழம் இதற்கு மேல் தமிழ்நாட்டில் அரசியல் அல்ல என்றவர்கள், இன்று ஈழத்தைப் பற்றிப் பேசாமல் அரசியல் இல்லை என்கிற நிலையைக் கண்டார்கள். தங்களின் பழைய நாடகத்தை புதுப்பித்து அரங்கேற்றினார்கள், எடுபடவில்லை. தங்களின் அரசியல் பாதையை மாற்றினார்கள், மக்கள் நம்பவில்லை. ஐ.நா.மனித உரிமை மன்றத்தில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று முழங்கினார்கள். என்ன அந்தத் தீர்மானம், அதில் எங்கே இருக்கிறது ஈழத் தமிழினத்திற்காக நியாயம் என்று தமிழ்நாட்டின் மாணவர் சமுதாயம் பொங்கியெழுந்து குரலெழுப்பியது. வெற்று மனத்தோடு ஆர்ப்பரித்தவர்கள் அடங்கிப்போனார்கள். போராட்டம் கைமாறியது. எந்தத் தலைவனின் படத்தைப் போட்டு சுவரொட்டி கூட ஒட்டுக்கூடாது என்றார்களோ, அந்தத் தலைவனின் படம் எம் இளைய சமூகத்தினரின் ஆடைகளின் மலர்ந்த புன்னகையோடு ஆட்சி செய்வதைக் கண்டு நாணினார்கள். புலிகளை அழித்துவிட்டோம், இதற்கு மேல் தமிழர்களுக்குத் தருவதற்கு ஏதுமில்லை என்று சிங்கள இனவாத அரசியல் தலைமை பேசியது. புலிகள் யார்? தமிழர்கள் யார்? எப்படி பிரிப்பது? பிரிக்கத்தான் முடியுமா? சிங்கள பெளத்த இனவாத அரசு தொடர்ந்து பயங்கரவாதத்தை முறியடித்து தன் இனத்திற்கு விடுதலை பெற்றுத்தர தமிழரிடையே உருவான எழுச்சியின் அடையாளம்தான் புலி. அது மிருகமல்ல, வீர உணர்ச்சியின் எழுச்சி வடிவம். அதைத் தம் இதயத்தில் தாங்கிய எம் மாவீரர்கள் எதிரியின் பலத்தைக் கண்டு அஞ்ஞாமல், துஞ்சாமல் இரவும், பகலுமாக போராடினார்கள். அவர்கள் வேறு நாம் வேறல்ல. பிரித்துப்பேசி ஒரு இனத்தின் விடுதலைப் போராட்டத்தை முடித்தவிட திட்டமிட்டார்கள். அந்த இராஜதந்திரம் தமிழினத்திடம் தோற்றுப்போனது. உலக அளவில் எழுந்தோம், நிமிர்ந்தோம், போராடினோம், எமது போராட்டத்தின் நியாயம் களத்தில் பெற்ற தோல்வியால் முடிங்கிவிடாது என்று இன்றுவரை பறைசாற்றிக்கொண்டிருக்கிறோம். அதனால்தான் கடந்த ஆண்டு இதே மே 18ஆம் நாளை ‘விழ விழ எழுவோம், விதையாய் வீழ்ந்த நாங்கள், விடுதலையாய் எழுவோம்’ என்று விடுதலையுணர்வுடன் ஆழ்கடல் அலையென ஆர்ப்பரித்து எழுந்தோம். எம்மைப் பொறுத்தவரை மே 18 துக்க நாளல்ல, எமது விடுதலையின் அடுத்த அத்தியாயம் தொடங்கப்பட்ட நாள். இந்த நாளில் நாம் ஒரு புதிய உத்வேகத்தைப் பெறுகிறோம். அது நமக்காக போராடி உயிர் நீத்த நம் மாவீரர்கள் நமக்கு வழங்கியுள்ள ஆன்ம சக்தி அளிக்கும் உத்வேகம் அது. அதன் உந்துதலால்தான் சர்வதேசத்தை இன்றுவரை நாம் உலுக்கி எடுக்கிறோம், இந்திய அரசியலை நம்மை நோக்கி வெற்றிகரமாக திருப்பியும் உள்ளோம். இந்த ஆண்டில் நாம் முன்வைக்கும் முழக்கம்: வீழ்வோம் என்று நினைத்தாயோ என்பது. வீழ்வோம் என்று நினைத்தாய், பல கோடி விழுதுகளுடன் எம் இனத்தின் விடுதலையை முன்னெடுக்க எழுந்துள்ளோம் என்பதை இந்த மே 18ஆம் நாளில் நாம் ஒன்றுகூடி உலகிற்கு பறைசாற்றுவோம். கனடாவில் வாழும் எம் தொப்புள் கொடி உறவுகளுக்கும், நாம் தமிழர் கனடாவிற்கு எனது புரட்சிகரமான வாழ்த்துகள். தமிழர் தாகம், தமிழீழ தாயகம்.