Monday, February 28, 2011

தினமணி தலையங்கம்: துணிவுமில்லை, மனமுமில்லை

எந்தவொரு நாடும் உலக அரங்கில் மதிக்கப்படுவது அதன் ராணுவ பலத்தாலோ,பொருளாதார பலத்தாலோ, மக்கள்தொகை அல்லது நிலப்பரப்பின் அடிப்படையிலோ மட்டுமல்ல. அந்த நாடு தனது குடிமக்களை எந்த அளவுக்குப் பாதுகாக்கிறது, அவர்களது உரிமைகளை மதிக்கிறது என்பதைப் பொறுத்துத்தான் ஒரு நாடும் அதன் தலைமையும் மதிக்கப்படுகிறது, மரியாதை பெறுகிறது. சமீபகாலமாக நிகழும் சில சம்பவங்கள் இந்தியாவை ஏனைய உலக நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கத் தூண்டுகிறது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு சீன சரக்குப் படகு ஜப்பானியக் கடலோரக் காவல்படையின் ரோந்துப் படகின்மீது மோதிவிட்டது. ஜப்பானியக் கடலோரக் காவல்படை அதிகாரிகள் அந்தச் சீனப் படகின் கேப்டனைக் கைது செய்துவிட்டனர்.

சீனா கொதித்தெழுந்துவிட்டது. இது நமது நாட்டின் தன்மானத்துக்கே இழுக்கு என்று கருதி, அதை ஒரு தேசியப் பிரச்னையாக்கிவிட்டது. எல்லா விதத்திலும் ஜப்பானுக்கு நெருக்கடி கொடுக்கத் தொடங்கியது சீனா.

முதலில், அனைத்து மட்டங்களிலுமான ஜப்பானியத் தொடர்புகளை நிறுத்தி வைத்தது. நிலக்கரி மற்றும் எரிவாயு கண்டுபிடிப்புக்கான
கூட்டுமுயற்சிக்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. ஜப்பானிய எலெக்ட்ரானிக் தொழிலுக்குத் தேவைப்படும் முக்கியமான சில
தாதுப்பொருள்களின் ஏற்றுமதியை நிறுத்திவிட்டது.

பயந்துபோய், நமக்கேன் வம்பு என்று ஜப்பான் அந்தப் படகின் கேப்டனை நிபந்தனையின்றி விடுவித்து, சீனாவுடன் சமாதானம் செய்துகொண்டது. ஏதோ ஒரு தனியார் படகின் கேப்டன் என்று பாராமல், ஒரு சீனக் குடிமகன் என்கிற கண்ணோட்டத்துடன்தான் பிரச்னையை அணுகியது அந்த அரசு.

ரெய்மண்ட் டேவிஸ் ஓர் அமெரிக்கப் பிரஜை. இவர் ஓர் அமெரிக்க ஒற்றர் என்றும் கூறப்படுகிறது. ஆனால், அதற்கான தெளிவான ஆதாரம் எதுவும் கிடையாது. பாகிஸ்தான் சென்றிருந்த இவரை இரண்டு பாகிஸ்தானியர்கள் பின்தொடர்ந்ததாகவும், அவர்கள் பாகிஸ்தானிய உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ.யைச் சேர்ந்தவர்கள் என்றும், வரம்புமீறி ரெய்மண்ட் டேவிஸ் துப்பறிந்துவிடக் கூடாது என்பதற்காக அவரை அந்த இருவரும் பின்தொடர்ந்தனர் என்றும் கூறப்படுகிறது. சிலர், அந்த இரண்டு பாகிஸ்தானியர்களும் சமூகவிரோதிகள் என்றும், ரெய்மண்ட் டேவிஸின் பர்சையும், கைப்பேசியையும் பறிப்பதற்குத்தான் பின்தொடர்ந்தார்கள் என்றும் கூறுகின்றனர்.

ரெய்மண்ட் டேவிஸ் தன்னைப் பின்தொடர்ந்த அந்த இருவரையும் குருவியைச் சுட்டுத் தள்ளுவதுபோல சுட்டுக் கொன்றுவிட்டார். ரெய்மண்ட் டேவிஸ் கைது செய்யப்பட்டு, அவர்மீது கொலைக் குற்றமும் சாட்டப்பட்டிருக்கிறது. கொலைக் குற்றத்துக்கான எல்லா ஆதாரங்களும் பாகிஸ்தானிடம் இருக்கிறது. ஆனால், அமெரிக்கா தனது நாட்டுக் குடிமகன் ஒருவரை பாகிஸ்தான் கைது செய்திருப்பதை ஏற்றுக்கொள்கிறதா என்றால், இல்லை.

கடந்த சில வாரங்களாக அமெரிக்காவின் பல்வேறு விதமான அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறது பாகிஸ்தான். உயர்மட்டப் பேச்சுவார்த்தைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுவிட்டன. பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அளித்துவரும் நிதி உதவி முற்றிலுமாக முடக்கப்படும் என்று அச்சுறுத்தல்கள் கொடுக்கப்பட்டு விட்டன. ரெய்மண்ட் டேவிஸ் விஷயத்தில் பாகிஸ்தான் நடந்து கொள்வதைப் பொறுத்துத்தான் அமெரிக்க - பாகிஸ்தானிய உறவு இருக்கும் என்று அழுத்தம்திருத்தமாகப் பாகிஸ்தானிடம் தெளிவுபடுத்தி விட்டிருக்கிறது அமெரிக்க அரசு.

தனது நாட்டு ஒற்றருக்காக, தனது நாட்டுக் குடிமகனுக்காக எதுவும் செய்யத் தயாராக இருக்கிறது அமெரிக்கா. இது அந்த நாட்டின் சுயமரியாதைப் பிரச்னை. அமெரிக்க உதவியால் மட்டுமே உயிர் வாழும் நாடாக இருந்தாலும், கொலையுண்ட தனது நாட்டுக் குடிமக்கள் இருவருக்காகப் போராடுகிறது பாகிஸ்தான். இது பாகிஸ்தானின் தன்மானப் பிரச்னை என்றும், வெளிநாட்டவர் ஒருவர் தங்களது நாட்டில், தங்கள் நாட்டுப் பிரஜைகளை சுட்டுக்கொல்வதைச் சகித்துக்கொள்ள முடியாது என்றும் கூறுகிறது பாகிஸ்தான்.

முடிவில், அமெரிக்காவிடம் சரணாகதி அடையும் என்றாலும் முடிந்தவரை தனது நாட்டுப் பிரஜைகளுக்காகப் போராடுகிறது பாகிஸ்தான்.

இனி நமது இந்திய அரசின் அணுகுமுறை எப்படி இருக்கிறது என்று பார்ப்போம். ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள்மீது காரணமே இல்லாமல் நிறவெறித் தாக்குதல்கள் நடைபெற்றன, நடைபெறுகின்றன. இதுவரை நமது இந்திய மாணவர்களைத் தாக்கிய ஒருவரைக்கூட ஆஸ்திரேலிய நீதிமன்றம் தண்டித்ததாகத் தெரியவில்லை. இந்திய அரசும் அதைப்பற்றிக் கவலைப்பட்டதாகவும் தெரியவில்லை. இதுதான் ஓர் இந்தியக் குடிமகனுக்கு நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசு தரும் மரியாதை!

அமெரிக்காவில், வனவிலங்குகளின் புள்ளிவிவரக் கணக்கு எடுக்கக் கட்டிவிடப்படும் கழுத்துப் பட்டைகளைப்போல, பல லட்சம் ரூபாய் செலவழித்துப் படிக்கப்போன இந்திய மாணவர்களுக்கு "ரேடியோ டாக்' அணிவித்து மகிழ்கிறதுஅமெரிக்க அரசு. நமது அரசு அதற்கு உரத்த குரலில் எதிர்ப்புத் தெரிவிக்கக்கூடத் தயங்குகிறது. கேட்டால், அந்நிய முதலீடு பாதிக்கப்படும், அமெரிக்க உறவு சிதைந்துவிடும் என்று வியாக்கியானம் கூறுகிறார்கள். ஓர் இந்தியக் குடிமகனின் தன்மானத்தையும், சுயமரியாதையையும் விடவா, அந்நிய முதலீடு பெரியது? இதற்காகவா சுதந்திரம் பெற்றோம்?

பக்கத்தில் இருக்கும் "கண்ணீர்த் துளி' அளவிலான நாடு இலங்கை. இந்தியாவையே கேலிசெய்வதுபோல சர்வசாதாரணமாக நமது மீனவர்களை நடுக்கடலில் சுட்டுக் கொல்கிறது அந்நாட்டு ராணுவம். நாம் பேச்சுவார்த்தை நடத்தத் துடிக்கிறோமே தவிர, நமது தன்மான ரத்தம் துடிக்கவில்லை. இதுவே, ஒரு சீன அல்லது அமெரிக்க மீனவருக்கு இலங்கை ராணுவத்தால் அப்படி ஏற்பட்டிருக்குமேயானால், இப்போது
இலங்கை என்கிற ஒரு தீவே இருந்திருக்காது.

அதெல்லாம் போகட்டும். ஈழப் போராட்டத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களின் புனர்வாழ்வுக்காக, இந்தியாவிலிருந்து நமது வரிப்பணத்திலிருந்து, நம்மால் அனுப்பப்பட்ட 500 டிராக்டர்கள், இலங்கை அரசால் தென்னைமர வளர்ச்சிக் கழகத்துக்கும், முந்திரி கார்ப்பரேஷனுக்கும் பயன்படுத்தப்படுகிறது. 50,000 வீடுகள் கட்ட நமது வரிப்பணத்திலிருந்து இந்திய அரசு அளித்த நிதியுதவி வெறும் 1,000 பேருக்குத்தான் சென்றடைந்திருக்கிறது. இதை மேற்பார்வை இடவோ, கேள்வி கேட்கவோ நமது இந்திய அரசுக்குத் துணிவும் இல்லை,
மனமும் இல்லை.

நன்றி: தினமணி

தமிழக மீனவர்களுக்கு துப்பாக்கி வழங்கு! HRPC வழக்கு!!

*
இந்திய அரசே, தமிழக மீனவர்களுக்குத் துப்பாக்கி வழங்கு !
*
கச்சத்தீவுப் பகுதியில் தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன் பிடி உரிமையை உறுதி செய் !

மதுரை உயர்நீதிமன்றத்தில் மனித உரிமை பாதுகாப்பு மையம் வழக்கு!

சட்டம் யாருக்கு, எந்த வர்க்க நலனுக்கு சாதகமாக இருக்கிறது என்பது மீண்டும் அம்பலமாகியிருக்கிறது.

உலகிலுள்ள எந்த நாடும் கடல் எல்லை தாண்டும் மீனவர்களை சுட்டுக் கொல்வதில்லை. பாகிஸ்தான் கூட எல்லை தாண்டும் இந்திய மீனவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியதே வழக்கமாக இருந்திருக்கிறது. காரணம், சர்வதேசகடல் சட்டம் சரத்து 73, மீனவர்களை கடலில் சுடுவதை தடைசெய்திருக்கிறது. இச்சட்டத்தில் உலகிலுள்ள அனைத்து நாடுகளும் கையொப்பம் இட்டுள்ளன. இதில், இந்தியாவும், இலங்கையும் கூட அடக்கம்.

ஆனால், இச்சட்டத்தை இலங்கை அரசு இதுவரை மதித்து நடந்ததில்லை. இந்திய அரசும் இதை தட்டிக் கேட்டதில்லை. பதிலாக இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை குருவிகள் போல சுட்டுத் தள்ளுவது அன்றாட நிகழ்வாகி விட்டது. இதுவரை 500 க்கும் மேற்ப்பட்ட மீனவர்கள் இப்படி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினர் மீது 600க்கும் மேலான முதல் தகவல் அறிக்கைகள் பதியப்பட்டு விசாரணையின்றி கடலோர மாவட்டங்களில் நிலுவையில் உள்ளன. இவை அனைத்தும் கொலை, கொலை முயற்சி மற்றும் ஆயுத சட்டப்படியான கடுமையான குற்றங்கள். இக்குற்றவாளிகளை இந்திய நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்த இந்திய அரசு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் கடந்த 12.01.2011 மற்றும் 22.01.2011 ஆகிய தேதிகளில் வீரபாண்டியன், ஜெயக்குமார் ஆகிய மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொடூரமாக சுடப்பட்டு, கழுத்தை நெறித்து கொல்லப்பட்டுள்ளனர். இது சர்வதேச கடல்சட்டங்களை மீறிய செயலாகும். 2008ம் ஆண்டு அக்டோபர் 26ம் தேதி வெளியிடப்பட்ட இந்திய – இலங்கை கூட்டறிக்கைப்படி இந்திய மீன் பிடி படகுகளை சுடக்கூடாதென ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், இலங்கை அரசு இதையும் நடைமுறைப்படுத்தவில்லை.

இந்திய அரசியல் சட்டம் சரத்து 19 (1) ( g) ன் படி மீன்பிடி உரிமை, தமிழக மீனவர்களின் அடிப்படை உரிமையாகும். அதே போல் இந்திய அரசியல் சட்டம் சரத்து 21ன்படி மீனவர்களூக்கு வாழ்வுரிமையும் அடிப்படை உரிமையாகும். தனது குடிமக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க வேண்டியது அரசியல் சட்டப்படி அரசின் கடமையாகும். இப்படி தனது குடிமக்களின் அடிப்படை உரிமைகளான தொழில் உரிமை, வாழ்வுரிமையைப் பாதுகாக்க வேண்டிய இந்திய அரசு அக்கடமையிலிருந்து தவறியிருக்கிறது.

அத்துடன் இலங்கையில் தனது மேலாண்மையை நிலைநாட்டுவதற்க்காக தனது சொந்த நாட்டு மக்களின் நலன்களைப் பலியிட்டு வெறுமனே ராஜதந்திர நாடகங்களை நடத்தி வருகிறது. ஆனால், ஆஸ்திரேலியாவில் பணக்கார மாணவர்கள் சிலர் பாதிக்கப்பட்ட போதும், மும்பையில் தாஜ் ஓட்டல் தாக்கப் பட்டபோதும், சிலிர்த்து எழுந்தது. தேசபக்தி நாடகமாடி மக்களின் உணர்ச்சிகளை தட்டி எழுப்பியது. குஜராத் தொழிலதிபர்களின் கப்பல்கள் இந்தியப் பெருங்கடல் பகுதியில் சோமாலியா கடற் கொள்ளையர்களால் தாக்கப்பட்டு ஒரு உயிர் கூட சேதமடையாத நிலையில் இந்திய கடற்படையை விரைந்து அனுப்பி நடவடிக்கை எடுத்தது.

இப்படி ஆளும் வர்க்க நலனுக்காக மட்டுமே செயல்படும் இந்திய அரசு, தமிழக மீனவர்களை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்துகிறது. இதனால் தமிழக மீனவர்கள் இந்திய அரசு தங்களைப் பாதுகாக்கும் என்ற நம்பிக்கையை இழந்து விட்டார்கள். ஆகவே மீனவர்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள துப்பாக்கி லைசென்சும், இலவசமாகத் துப்பாக்கியும் இந்திய அரசு வழங்க வேண்டும். இத் தற்காப்புரிமை இந்திய தண்டணைச் சட்டம் பிரிவுகள் 96 – 100; வன்கொடுமை தடுப்புச் சட்டம் விதி 3 ஆகியவற்றின்படி அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கை கடற்படை செய்துள்ள குற்றங்கள், அது தொடர்பான வழக்குகள், வழக்குகள் மீதான இந்திய அரசின் நடவடிக்கைகள் குறித்து ஒரு நீதிபதியை நியமித்து விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ் நாடு அமைப்பின் மதுரைக் கிளை துணைச் செயலரும் உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான சே.வாஞ்சி நாதன், மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருக்கிறார்.

அதேபோல் மற்றொரு வழக்கில் ராமேசுவரம் மன்னார் வளைகுடாப் பகுதியானது, பல்வேறு அரியவகை கடல் வாழ் உயிரினங்கள் நிரம்பிய பகுதி என்பதால் இந்திய அரசால் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராமேசுவரம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து சீசன் நேரங்களில் மீனவர்கள் இப்பகுதியில் மீன் பிடிப்பார்கள். நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 4 லட்சம் பேர் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள். இதனால் பல்லாயிரம் கோடி ரூபாய் அரசுக்கு வருவாயாக கிடைக்கிறது.

இந்திய – இலங்கை ஒப்பந்தங்கள் 1974, 1976 ன் படி கச்சத் தீவுப்பகுதியில் தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமை அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த ஓப்பந்தங்களின்படி நேரடியாக கச்சத்தீவை இந்தியா, இலங்கைக்கு அளித்தால் அரசியல் சட்ட திருத்தம் தேவைப்படும் என்பதால் சூழ்ச்சியாக கடல் எல்லையை வரையறுப்பது என்ற அடிப்படையில், கச்சத்தீவிலிருந்து இந்திய கடல் எல்லையை வரையறுக்காமல் திட்டமிட்டே, கச்சத்தீவு இலங்கை கடற்பகுதியில் வருமாறு மாற்றி வரையறுக்கப்பட்டு தமிழர்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டுள்ளது. எனவே கச்சத்தீவை மையப்படுத்தி தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையைப் பாதுகாக்கும் வகையில் இந்தியாவின் கடல் எல்லையை இந்திய அரசு புதிதாக வரையறுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

மேற்படி வழக்குகள் 15.02.2011 ல் நீதிபதிகள் பால்வசந்தகுமார், சுப்பையா முன் விசாரணைக்கு வந்தது. வழக்கறிஞர் லஜபதிராய் ஆஜராகி வாதிட்டார். இதனையடுத்து கச்சத் தீவு மற்றும் மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா தாக்கல் செய்த மனு மற்றும் மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக சென்னை உயர்நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ள மனுக்கள் ஆகியவற்றை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது..

இந்த வழக்கு தார்மீக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் மிக முக்கியமான வழக்காகும். இதில் எழுப்பட்டுள்ள கேள்விகளுக்கு உயர்நீதிமன்றம் என்ன விடை தரும், வழக்கை தள்ளுபடி செய்யுமா என்றெல்லாம் வாசகருக்கு கேள்வி எழலாம்.

எனினும் சொந்த நாட்டு மக்களை காப்பாற்ற வக்கில்லாத அரசின் கீழ் வாழும் இந்த மீனவர்கள் தங்களது பாதுகாப்பிற்காக ஆயுதம் ஏந்தும் உரிமையை கோருவது சட்டப்படியும், அரசியல்ரீதியாகவும் சரியானதே. நீதிமன்றம் இதற்கு முகங்கொடுக்காமல் போனால் நாம் மக்கள் மன்றத்தில் இந்த கோரிக்கையை வைத்து போராடுவதே சரியாக இருக்கும்.

_________________________________________________________

தகவல்: மனித உரிமை பாதுகாப்பு மையம், தமிழ்நாடு

Wednesday, February 23, 2011

ஊழலை ஒழிப்போம் ! நாடாளுமன்றத்தில் அனைவரையும் சிரிக்க வைத்த ஜனாதிபதி...

21.02.11 அன்று நமது நாட்டின் முதல் குடிமக்களான பிரதிபா பாட்டில் பாராளுமன்ற இரு அவைகள் இணைந்த கூட்டத்தில் ஐம்பது நிமிடங்கள் அவர் பேசியதின் சாரம்சம் இதுதான்.

- பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை.
- விலை உயர்வால் பாதிக்காத வகையில் ஏழை மக்களுக்குப் பாதுகாப்பு.
- பொது வாழ்க்கையில் ஊழலைத் தடுக்க உரிய நடவடிக்கை.
- பொருளாதார வளர்ச்சியின் பலன்கள் ஏழை மக்களைச் சென்றடைய நடவடிக்கை.
- உள்கட்டமைப்பு துறையில் ரூ. 20 லட்சம் கோடி முதலீடு.
- உள்நாட்டு, வெளிநாட்டு தீய சக்திகளால் அச்சுறுத்தல் ஏற்படா வண்ணம் நாட்டின் பாதுகாப்புக்கு உறுதி.
- இந்தியாவின் நலனைக் காக்கும் வகையில் வெளியுறவுக் கொள்கை வடிவமைப்பு.
- விவசாயிகளுக்கு நியாயமான கொள்முதல் விலை கிடைக்க உரிய நடவடிக்கை. விரைவில் உணவு பாதுகாப்புச் சட்டம்.
- ஊழலைத் தடுக்க புதிய வழிமுறைகளை உருவாக்கவும் நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை நிலைநிறுத்தவும் அமைச்சர் குழு அமைப்பு.
- அரசு அதிகாரிகள் ஊழியர்களுக்கு எதிரான ஊழல் புகார் விசாரணையை விரைவுபடுத்த நடவடிக்கை.
- தேர்தல் சீர்திருத்த நடவடிக்கைகளை விரைவுபடுத்த குழு அமைப்பு.
- மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா விரைவில் நிறைவேற நடவடிக்
- பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த நிபந்தனை.

மிகவும் நகைச்சுவை உணர்வுடன் அவர் கிழ்வருமாறு கூறினார் : "வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் கறுப்புப் பணத்தைப் பதுக்கி வைத்திருக்கும் விவகாரம் அரசுக்கு கவலையளிக்கிறது. இந்தப் பணம் ஊழல் மூலமாகவோ, வரி ஏய்ப்பு மூலமாகவோ பெறப்பட்டதாக இருக்கலாம். இந்தப் பிரச்னையை தீர்க்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது. இதற்கு மத்திய, மாநில அரசுகளின் சட்ட அமலாக்க அமைப்புகளின் ஒத்துழைப்பு அவசியம். இந்தப் பிரச்னை தொடர்பாக வலுவான சட்ட நெறிமுறையை உருவாக்குவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை அரசு ஏற்கெனவே எடுத்திருக்கிறது." இதை அவர் கொள்ளும் பொது பிரதமர் உள்ளிட்ட ஆளும்கட்சியினர் பக்கம் மறந்தும் திரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த உரையில் மக்களுக்கு இருக்கும் ஆப்பு என்னவெனில் காங்கிரஸ் அரசு பொருளாதார சிர்த்திருத்தத்தை தொடர்ந்து அமலாக்கம் செய்யும் என்பதுதான். இதன் விளைவு என்னவெனில் ஏற்கனவே தற்கொலை செய்து கொண்ட ஒன்னரை லட்சம் விவசாயிகளுடன் இன்னும் இரண்டு லட்சம் சடலங்கள் சேரும் என்பதுதான். கிராமப்புற வேலைவாய்ப்பு குறித்தோ, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது குறித்தோ மறந்தும் வாயை திறக்கவில்லை என்பதையும் அறிக.

வழக்கம் போல உப்பில்லாமல் உணவருந்த சொல்லும் ஒரு உரை.

Sunday, February 20, 2011

Saturday, February 19, 2011

தேசத்தின் அன்னை பார்வதியம்மாள் மரணித்தார் : கண்ணீரில் தமிழர்கள்

தேசத்தின் அன்னை பார்வதி அம்மாள் இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார் எய்தினார். கடந்த பல ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு, இலங்கை இராணுவத்தின் சிறையில் சிக்கித் தவித்து நோய்வாய்பாட்டு இருந்த தமிழீழ தேசிய தலைவரின் தாயார் பார்வதி அம்மாள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 6.30 மணியளவில் இறையடி எய்தியுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. வன்னிப் போரின் பின்னர் நலன்புரி முகாம் ஒன்றில் வைத்து இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு கொழும்பு தடுப்பு முகாம் ஒன்றில் தடுத்துவைக்கப்பட்டிருந்த பார்வதி அம்மையார் கடும் நோய்த் தாக்கத்திற்கு உட்பட்டிருந்தார்.

தடுப்புக்காவலில் இருந்த கணவர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் 06-01-2010 அன்று உயிரிழந்ததை அடுத்து அவரது உடலம் யாழ்ப்பாணத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டபோது பார்வதி அம்மையாரையும் இலங்கை அரசு விடுதலை செய்திருந்தது. சிகிச்சைக்காக மலேசியா சென்றிருந்த அவர் அங்கிருந்து இந்தியா செல்வதற்கான அனுமதியினை இந்திய அரசு வழங்காது இழுத்தடித்ததை அடுத்து மீண்டும் தாயகம் திரும்பியிருந்தார்.

சிகிச்சைக்காக யாழ்.வடமராட்சி மந்திகை மருத்துவமனை, யாழ்.போதனா வைத்தியசாலை என்பவற்றில் அனுமதிக்கப்பட்டு இறுதியாக வல்வெட்டித்துறை மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த சில மாதமாக சுயநினைவினை இழந்திருந்த அவர் இன்று காலை 06 மணியளவில் காலமானதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வைத்தியசாலையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் உள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நன்றி : செய்தி.காம்

Friday, February 18, 2011

கடலில் கலக்கும் ரத்தம்!




இரவுக் குளிரில் நடுங்கிய நாய் ஒன்று, 'காலையில எழுந்ததும் முதல் வேலையா... போத்திக்க ஒரு போர்வை வாங்கணும்’ என்று யோசிக்குமாம். விடிந்ததும் வெயில் அடிக்க, 'போர்வை எல்லாம் இனி எதுக்கு?’ என்று போய்விடுமாம். அன்றைய இரவும் குளிர் நடுக்கும். போர்வை வாங்க நினைக்கும். மீண்டும் வெயில் காயும். போர்வை வேண்டாம் என்று நினைக்கும். இதற்கும் இன்றைய நடப்புக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதுதான் வேதனை!

இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் கொலை செய்யப்படுவது மீண்டும் மீண்டும் தொடர்கிறது. இந்தியப் பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம் அனுப்புவார். அவர் இலங்கைத் தூதரை அழைத்துக் கண்டனம் தெரிவிப்பார். இந்தத் தகவல் கொழும்புக்குக் கொண்டு செல்லப்படும் என 'உருளைக்கிழங்கு’ விளையாட்டு அரை நூற்றாண்டாக நடக்கிறது.

முள்ளி வாய்க்கால் முற்றுகையின் மூலமாக ஈழத் தமிழினத்துக்கு முற்றுப்புள்ளிவைத்த மகிந்தா ராஜபக்ஷேவுக்கு 'மகா வீர’ என்ற பட்டத்தை சிங்கள இனவாதிகள், கொழும்பில் பல்வேறு கொண்டாட்டங்களுடன் வழங்கினார்கள். தமிழக மீனவனது சந்ததிக்கும் அதேபோன்று முற்றுப்புள்ளி வைத்து, 'மகா சூர’ என்ற பட்டத்தை மகிந்தா பெற்றுக்கொள்ளும் காலம் வெகுதூரத்தில் இல்லை. கடந்த வாரத்தில் கடல் நடுவே மீன் பிடிக்கப் போனபோது, இலங்கைக் கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்ட பாண்டியனது மரணம், தமிழ் நாட்டுக்கு இதைத்தான் சங்கு ஊதிச் சொல்கிறது!

கடலே நம் காவல்!

இந்தியாவைப் பாதுகாப்பான பூமி என்பார்கள். முப்புறமும் கடலும் தலைப் பகுதியில் மலையுமாக இயற்கையே நமக்கு நான்கு பக்கமும் அரணாக அமைந்தது. மற்ற மாநிலங்களுக்கு இல்லாத இந்த வளம் தமிழகத்துக்கு உண்டு. வடக்கிலும் மேற்கிலும் மட்டும்தான் ஆந்திராவும் கேரளாவும் உள்ளன. தெற்கே இந்தியப் பெருங்கடலும், கிழக்கே வங்காள விரிகுடாவுமாக தமிழகம் தண்ணீர் சூழ்ந்த மாநிலம். சென்னை, வேலூர், காஞ்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகியவற்றை வடக்குக் கடற்கரை மாவட்டங்கள் என்றும்... சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகியவற்றைத் தெற்குக் கடற்கரை மாவட்டங்கள் என்றும் சொல்வார்கள். 1,125 கி.மீ பரப்புள்ள கடற்கரை நமக்கு இருக்கிறது. கடலும் கடல் சார்ந்த வாழ்க்கையுமாக 10 லட்சம் மீனவர்கள் வாழ்கிறார்கள். கடலுக்குள் சென்று மீன் பிடிப்பதை மட்டுமே தொழிலாகக்கொண்டவர்கள் இதில் கால்வாசிப் பேர். இந்தியாவின் கடல்சார் வளத்துக்குப் பெரும் பங்களிப்பைத் தமிழக மீனவர்கள் செய்து வருகிறார்கள். லட்சக்கணக்கிலான மதிப்புள்ள மீன்களை இவர்கள் பிடித்தாலும், அன்றாட சாப்பாட்டுக்குக் கஷ்டப்படும் வாழ்க்கை. நாட்டுப் படகும், கட்டு மரங்களும் புழங்கிய கடலில், இன்று விசைப் படகுகளின் ராஜ்யம். கடலையே திருப்பிப் போடும் காற்று வீசினாலும் ஊரையே உருமாற்றும் புயல் வீசினாலும் கடல் பயணத்தை எந்தச் சூழ்நிலையிலும் நிறுத்தாதவர்களின் வாழ்க்கைக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலே, இலங்கைக் கடற்படைதான்!

கடலில் ரத்தம் கலந்தது எப்போது?

இலங்கையில் தமிழர்கள் இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தப்பட்டு, வெட்டுக் குத்துக் கொலைகள் அதிகமாகிப்போன 70-களின் தொடக்கம்தான் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களுக்கும் தொல்லை தொடங்கியது. இலங்கை அரசுக்கு எதிராக அணி திரளும் தமிழ் இளைஞர்களுக்கு கடலுக்கு அப்பால் இருக்கிற தமிழ்நாடுதான் மறைமுகமாக உதவி செய்கிறது என்ற எண்ணம் அந்த நாட்டு அரசாங்கத்துக்கு ஏற்பட்டது. அதுவரையில் ராமேஸ்வரம் மீனவர்கள், பருத்தித்துறை, யாழ்ப்பாணம் வரைக்கும் மீன் பிடித்து நிம்மதியாகத் திரும்பி வந்த காலம் எல்லாம் உண்டு. இந்த சந்தேகம் வந்த பிறகு, இலங்கையை ஒட்டியுள்ள பகுதிக்கு வரும் அத்தனை மீனவர்களையும் தடுத்தார்கள். கைது செய்து சிலரைக் கொண்டுபோனார்கள். பின்னர் விடுவித்தார்கள். அங்கு போராட்டம் தீவிரம் அடைய... விடுதலைப் புலிகள் மீது காட்ட முடியாத கோபத்தை அப்பாவித் தமிழ் மீனவர்கள் மீது காட்டினார்கள். கைது செய்யும் சம்பிரதாயத்தை விலக்கி, கண்ணில் பட்டதும் சுட ஆரம்பித்தார்கள்.

''1983 முதல் 1991 வரை தமிழக மீனவர் மீது இலங்கைக் கடற்படையினர் 236 தாக்குதல்களைத் தொடுத்துள்ளனர். 3,003 படகுகளைத் தாக்கினார்கள். 51 படகுகளை முற்றாக அழித்தனர். 50-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இறந்துபோனார்கள். 136 மீனவர்கள் காயம் அடைந்தனர்'' என்று ஓர் அறிவிப்பு 1991-ம் ஆண்டு வந்தது. இது முழுமையான புள்ளிவிவரம் இல்லை. அதற்குப் பிறகு எந்தக் கணக்கும் எடுக்கப்படவில்லை. ''கடந்த 30 ஆண்டுகளில் 600-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சிங்களக் கடற்படையால் கொல்லப்பட்டனர்'' என்று ராமேஸ்வரம் மீனவர்கள் சொல்கிறார்கள்!

என்ன காரணம் சொல்வார்கள்?

ஒரு காலத்தில் 'கடத்தல்காரர்கள்’ என்று சொல்லித் தாக்கினார்கள். புலிகளுக்கு தமிழக மீனவர்கள்தான் உணவுப் பொருட்கள், ஆயுதங்கள், பெட்ரோல் மற்றும் டீசல் போன்றவற்றைக் கடத்திக்கொண்டு போய்த் தருகிறார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தாக்கினார்கள். அதன் பிறகு தமிழர்களை, 'கள்ளத் தோணிகள்’ என்றார்கள். போராளி இயக்கங்கள் வலுவடைந்த பிறகு, 'புலிகள்’ என்றார்கள். 2001-ம் ஆண்டு இலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் பேச்சுவார்த்தை நடந்த காலத்திலும் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் நிற்கவில்லை. மகிந்தா ராஜபக்ஷே அதிபராக ஆன பிறகு, புலிகள் மீதான தாக்குதல் கடுமையாக்கப்பட்ட பிறகு, தமிழக மீனவர்களும் கடுமையாகத் தாக்கப்பட்டனர். மீனவர்களைக் கொல்வதும், அடித்து விரட்டுவதும், தூரத்தில் இருந்து துப்பாக்கியால் சுட்டுப் பயமுறுத்துவதும் அதிகமாகின. ''தமிழக மீனவர்கள் நம்முடைய எல்லையைத் தாண்டிப் போவதால்தான் இலங்கைக் கடற்படை சுடுகிறது'' என்று இலங்கை அரசு சொன்ன காரணத்தையே, நம்முடைய மத்திய அரசாங்கமும் ஆமோதித்தது.

இந்தியக் கடல் எல்லைக்குள், பாகிஸ்தான், பங்களாதேஷ், தாய்லாந்து மீனவர்கள் உள்ளே நுழைந்துவிடுகிறார்கள். இந்திய அரசாங்கம் அவர்களைக் கைது செய்கிறது. அந்த நாட்டுக்குத் தகவல் தருகிறது. அதன் பிறகு நல்லெண்ணத்தின் அடிப்படையில் விடுதலை செய்கிறது. இந்த மனோபாவம் இலங்கை அரசுக்கு ஏன் வரவில்லை? அதை இந்திய அரசாங்கத்தால் ஏன் தட்டிக்கேட்க முடியவில்லை. சிங்களக் கடற்படை தமிழ் மீனவர்களைத் தாக்கும்போது, இந்தியக் கடற்படைக்கு அவர்களைக் காப்பாற்றும் பொறுப்பு வேண்டாமா? மீனவர்களின் கேள்விகளுக்கு இதுவரை அரசாங்கம் பதில் சொல்லவே இல்லை. பாகிஸ்தானில் இருந்து காஷ்மீருக்குள் வந்து ஒரு முஸ்லிம் சுட்டால், 'இந்தியாவுக்கு ஆபத்து’ என்று பூதாகாரமாக்குபவர்கள், ராமேஸ்வரத்துக்குள் வந்து 600 பேரைச் சுட்ட பிறகும், அமைதியாக இருப்பது சகிக்கவே முடியாதது!

கச்சத் தீவு வந்தால் அழுகை நிற்கும்!

ராமேஸ்வரத்தில் இருந்து 12 கி.மீ தூரத்தில் இருக்கும் அழகான தீவு கச்சத் தீவு. கச்சம் என்றால் ஆமை என்று அர்த்தமாம். ஆமைகள் அதிகம் உள்ள இடம் என்பதால், இப்படி ஒரு பெயர் வந்ததாம். ராமநாதபுரம், ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் காலம் காலமாக மீன் பிடித்து வந்த பகுதி அது. சேதுபதி மன்னனுக்குச் சொந்தமான எட்டுத் தீவுகளில் இதுவும் ஒன்று. பிரிட்டிஷார் ஆட்சியின்போது அவர்களது எல்லைக்கு உட்பட்ட அரசு புறம்போக்காகச் சொல்லப்பட்டது. இலங்கை சுதந்திரம் அடைந்த பிறகு, கச்சத் தீவு எங்களுக்குத்தான் சொந்தம் என்றார்கள். ஆனால், அதற்கு முந்தைய 300 ஆண்டு கால இலங்கை வரைபடத்தில் கச்சத் தீவைச் சேர்த்தது இல்லை. இலங்கையின் இந்தக் கோரிக்கை சாத்தியமானது அல்ல என்று அன்றைய பிரதமர் நேரு மறுத்தார். ஆனால், காலப் போக்கில் இலங்கைக்குக் கச்சத் தீவைத் தாரை வார்க்கும் மனநிலைக்கு பிரதமர் இந்திரா வந்தார். அமெரிக்காவை, இலங்கை அரசாங்கம் அதிகமாக நம்புகிறது, அமெரிக்காவின் காலடி இலங்கையில் பதியாமல் தடுக்க, இலங்கைக்கு ஏதாவது கைமாற்றாகக் கொடுக்கலாம் என்று நினைத்து இந்திரா, கச்சத் தீவை 1974-ம் ஆண்டு தூக்கிக் கொடுத்தார்.

அதுவரை நிம்மதியாகப் போய் மீன் பிடித்து வந்த மீனவர்களைத் தைரியமாக அடிக்க ஆரம்பித்த சிங்களக் கடற்படை, இன்று வரை நிறுத்தவில்லை. அந்த ஒப்பந்தத்தில்கூட இந்திய மீனவர்கள் கச்சத் தீவு வரை வந்து இளைப்பாறவும், தங்களது வலைகளைக் காயவைக்கவும் உரிமை உண்டு என்றும், அங்குள்ள அந்தோணியார் கோயில் விழாவுக்கு ஆண்டுதோறும் மார்ச் மாதம் வந்து வணங்கிச் செல்லவும் தடை இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. பிரதமர் ராஜீவ் போட்ட ஒப்பந்தமும் இந்த ஷரத்தை ஏற்றுக்கொண்டுள்ளது.

ஆனால், மீனவர்களை அந்தப் பக்கம் நெருங்க முடியாத அளவுக்கு அடிக்கிறார்கள் என்றால், தட்டிக்கேட்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசாங்கத்துக்குத்தான் இருக்கிறது.

'கச்சத் தீவைத் திரும்பப் பெற வேண்டும்’ என்று சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டவர் ஜெயலலிதா. 2007-ம் ஆண்டு ஒரு மீனவர் கொல்லப்பட்டபோது, 'கச்சத் தீவை மீட்க வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது’ என்று சொன்னவர் கருணாநிதி. இவர்கள் இருவரும் சொன்னதைச் செய்தால் மட்டும்தான், கடலோரத்தில் ரத்தக் கசிவு நிற்கும்!

மீனவர்கள் என்ன செய்யலாம்?

''எங்களுக்குக் கடல் எல்லை தெரியவில்லை. அதனால்தான், தாண்டிவிடுகிறோம். கரைக்கு அருகே மீன் வளம் குறைந்ததால்தான் உள்ளே தூரமாகச் செல்ல நேர்கிறது'' என்று யதார்த்தமான காரணத்தைச் சொல்கிறார்கள் மீனவர்கள். இந்தக் காரணத்தை பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகராக இருந்த எம்.கே.நாராயணனே ஒருமுறை ஒப்புக்கொண்டார். ''இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி இலங்கைக் கடல் எல்லைக்குள் மீன் பிடிப்பது முறையற்றதுதான். ஆனாலும், கடலுக்குப் புறப்படும் எந்த மீனவனும் மீன் வளம் எங்கே இருக்கிறதோ, அங்கேதான் போவார்கள். எனவே, இந்திய, இலங்கை எல்லைக்கோட்டைத் தாண்டி மீன் பிடிக்கச் செல்லும் இந்திய மீனவரைத் தடுக்க முடியுமா? அப்படி அவர்கள் சென்றால், அவர்களை இலங்கைக் கடற்படையினர் துப்பாக்கியால் சுடலாமா? துப்பாக்கியால் சுடாதீர்கள், இந்திய மீனவர்களைக் கொல்லாதீர்கள் என்று இலங்கை அரசிடம் சொல்லியுள்ளோம். ஒத்துழைப்பதாக இலங்கை அரசும் உறுதி அளித்துள்ளது'' என்று சொன்னவர் எம்.கே.நாராயணன்.

அதையும் மீறித்தான் துப்பாக்கிச் சூடு நடக்கிறது. இதைத் தடுப்பதற்கான வழிமுறையை மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் முதல்வர் கருணாநிதியே சொன்னார், ''இது தொடர்ந்தால், எங்கள் மீனவர் கை, மீனை மட்டுமே பிடித்துக்கொண்டு இருக்காது!''

ஆனால், அது அவருக்கே இப்போது நினைவில் இருக்குமோ, என்னவோ?

ஆனந்த விகடன் 26-ஜனவரி-2011

Tuesday, February 15, 2011

ஊழல் கரை படிந்துள்ள இஸ்ரோ!



இந்திய விண்வெளி ஆய்வு மையம் சுருக்கமாக இஸ்ரோ 1969 சுதந்திர தினத்தன்று தொடங்கப்பட்டது. இந்தியாவின் விண்வெளி தந்தை என அழைக்கப்படும் விக்ரம் சாராபாய் அவர்களால் உருவாக்கப்பட்டது.

நிலவில் நீர் உள்ளதா?, சந்திரனில் காற்று உள்ளதா என்பதை ஆய்வு செய்ய ராக்கெட் ஏவுவது முதல், விமானம் பறக்க ரூட் போட்டு தருவது, விமானங்களை கண்காணிப்பது, சேட்டிலைட் தொலைக்காட்சிகளுக்கு சிக்னல்கள் தருவது, மொபைல் போன்களுக்கு சிக்னல்கள் தருவது, விண்வெளியில் இருந்தபடி பக்கத்து நாட்டை உளவு பார்க்க சாட்டிலைட் ஏவுவது போன்றவை இஸ்ரோவின் பணியாகும். பெங்களுர், ஐதராபாத், திருவனந்தபுரம், சத்திஸ்கர் என நாட்டில் 16 இடங்களில் மையங்களை கொண்டு செயல்படும் இஸ்ரோவில் தற்போது 20 ஆயிரம் பேர் பணி புரிகின்றனர். தற்போதைய தலைவர் ராதாகிருஷ்ணன். இவ்வமைப்பை கட்டுப்படுத்தும் பொறுப்பு நாட்டின் பிரதமர் கையில் உள்ளது. மத்திய அமைச்சரவைக்கு பதில் மட்டுமே சொல்ல கடமை பட்டவர்கள்.

இஸ்ரோவின் செலவுக்கு தேவைப்படும் போதுயெல்லாம் பணத்தை வாரி வழங்கி வருகிறது இந்தியரசு. எல்லாமே ஆயிரம் கோடி, 5 ஆயிரம் கோடி, 10 ஆயிரம் கோடி என்ற அளவில் தான் இதற்க்கு நிதி ஒதுக்கப்படுகிறது. இந்த மையம் எப்போதாவது ராக்கெட் ஏவுகிறோம், செயற்கை கோள் ஏவுகிறோம் என்பார்கள். அன்றைய தினம் மட்டும் தலைப்பு செய்தியில் இடம் பிடிக்கும் மற்றப்படி இந்த அமைப்பின் செயல்பாடுகள் சுத்தமாக வெளியே வராது. தற்போது இந்த அமைப்பின் வணிக பிரிவான ஆன்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் 2 லட்சம் கோடி இழப்பு ஏற்படுத்திய விவகாரத்தில் சிக்கியுள்ளது. இஸ்ரோவில் உள்ள அறிவியல் ஆய்வகத்தின் முன்னால் செயலாளரான சந்திரசேகர், 2004 ஆம் ஆண்டு தேவாஸ் மல்டி மீடியா என்ற நிறுவனத்தை தொடங்குகிறார். இந்த நிறுவனம் இணைய தள சேவையில் மட்டுமே தற்போது உள்ளது என தெரியவருகிறது. அப்படிப்பட்ட நிறுவனத்தில் 73 சதவித பங்குகளை வெளிநாட்டை சார்ந்த 4 நிறுவனங்கள் கையில் உள்ளது. இந்த நிறுவனத்தின் 17 சதவித பங்கின் விலை 74 மில்லியன் என்பது குறிப்பிடதக்கது.

இந்த நிறுவனம் தொடங்கிய வேகத்தில் இஸ்ரோவுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்கிறது. அதன்படி இஸ்ரோ ஜிசட்6, ஜிசட்6ஏ என்ற பெயரில் இரண்டு செயற்கை கோளை விண்ணில் ஏவும். அதில் எஸ் பாண்டு எனப்படும் நான்காம் தலைமுறைக்கான அலைவரிசையின் 70 மெகாஹிட்ஸ் காற்றளவு கொண்ட அலைவரிசையை இந்த நிறுவனம் பயன்படுத்தும். 20 ஆண்டுகளுக்கு இந்நிறுவனத்திற்க்கு எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் அலைவரிசை வழங்கப்படும். ஜிசட் செயற்கோலை ஏவ தற்போதைய நிலையில் இஸ்ரோவுக்கு சுமார் 2500 கோடி செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கான செலவில் 170 கோடி ருபாய் இஸ்ரோவுக்கு தேவாஸ் நிறுவனம் வழங்கும், செயற்கைகோல் செயல்பாட்டுக்கு வந்தபின் வாடகையாக 1200 கோடி வழங்கப்படும் இதுதான் ஒப்பந்தம்.

இந்த அலைக்கற்றை மூலம் மொபைல் சேவை, பிராட்பேண்ட் இண்டர்நெட் சேவை அதி அதி வேகமாக அளிக்க முடியுமாம். அதோடு இது நான்காம் தலைமுறைக்கான அலைவரிசை என தெரியவருகிறது. அப்படிப்பட்ட அலைவரிசையை அரசு நிறுவனமாக பி.எஸ்.என்.எல், எம்.டி.என்.எல் போன்ற நிறுவனங்கள் 13 ஆயிரம் கோடிக்கு வாங்கியுள்ளது. ஆனால் ஒரு தனியார் நிறுவனத்திற்க்கு எந்த வித கட்டுப்பாடும் இல்லாமல் மிக மிக குறைந்த விலைக்கு அலைவரிசை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதனை வெளிக்கொண்டு வந்துள்ள மத்திய தணிக்கை துறை அதிகாரி உலகின் பல நிறுவனங்கள் போட்டி போடும் நான்காம் தலைமுறைக்கான அலைவரிசை ஒதுக்கீட்டில் இஸ்ரோ ஏன் ஏல முறையை பின்பற்றவில்லை, இதை ஏன் பிரதமர் அலுவலகத்திற்க்கு தெரிவிக்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ளது.

இஸ்ரோ நிறுவனம் மிகப்பெரிய அறிவு ஜீவிகளான விஞ்ஞானிகளை உள்ளடக்கிய நிறுவனம். நாட்டின் விண்வெளி பாதுகாப்பில் இவர்களின் பங்கு மிக மிக அதிகம். மக்கள் அதிகமாக நம்பிக்கை வைத்துள்ள இந்த அமைப்பு தனியார் நிறுவனத்திற்க்கு சாதமாக அரசுக்கு நட்டம் ஏற்படுத்தியுள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதை பார்க்கும் போது ஒன்று மட்டும் உண்மையாக உணர்வது, அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல ஆட்சி அதிகாரத்தை வழி நடத்தும், நாட்டின் பாதுகாப்பு துறையில் உள்ள அதிகாரிகளுக்கும் நாட்டின் மீது பற்றில்லை என்பது வெளிப்படையாக தெரிகிறது.

எதிர்க்கட்சிகளான பி.ஜே.பி, கம்யூனிஸ்ட் போன்றவை, பிரதமரின் கட்டுப்பாட்டில் உள்ள இஸ்ரோவில் 2 லட்சம் கோடிக்கு ஊழல் நடந்துள்ளது என குற்றசம் சாட்டியுள்ளது. இதற்க்கு பதிலளித்த பிரதமரும், பிரதமர் அலுவலக அதிகாரிகளும், எங்களுக்கு எதுவும் தெரியாது என அறிவித்துள்ளார்கள். கடந்த ஆண்டு கூட 10 ஆயிரம் கோடிக்கு மேல் முழுங்கியுள்ள இஸ்ரோ பற்றி தெரியாது என்பது கேவலமான வெட்ககேடான விஷயம்.

இதையெல்லாம் கவனிப்பதை விட்டுவிட்டு வேறு என்ன வேலை செய்கிறார் இந்தியாவின் பிரதமரான பொருளாதார மேதை. தெரியாது என அவர் சொல்வது விவகாரத்தை மறைக்கிறோம் என்பதை சொல்லாமல் சொல்கிறார். பின் பல்டியடித்து ஊழலே நடக்கவில்லை என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. எப்போவுமே பிரதமர் அலுவலகம் அப்படித்தான் அறிவிக்கும். இந்த விவகாரத்தை நேர்மையாக விசாரித்தால் இன்னும் பல ஊழல் பூதங்கள் வெளி வர வாய்ப்புண்டு.

நடக்குமா?.

Sunday, February 13, 2011

நேற்றைய கனவில் என் காதலி...



காலையில் எழுந்து இர‌வுவ‌ரை வேலை பார்த்து முடித்துவிட்டு ம‌ன‌ம் வேர்த்து புழுங்கிய‌ நேர‌ம். ம‌ன‌து ஏதோ ஒரு த‌விப்புட‌ன் செய‌ல்ப‌ட்ட‌து. வானொலியை தேடினேன் முள்ளினை சிறிது சிறிதாக‌ ந‌க‌ர்த்திய‌ பொழுது ஏதோ ஒரு அலைவ‌ரிசை எடுத்த‌து. ஒரு க‌விஞ‌ர் க‌விதை வாசித்துக்கொண்டிருந்தார். இத‌ய‌ம் விலை ம‌திப்ப‌ற்ற‌தாக‌ இருந்த‌து என்கிற‌ வ‌ரிக‌ள் என்னை நிலை நிறுத்திய‌து. வ‌சிய‌ம் செய்ய‌ப்ப‌ட்ட‌வ‌ன் போல‌ சொற்க‌ளின் பின்னால் ந‌ட‌க்க‌ தொட‌ங்கினேன்.

இத‌ய‌ம் விலை ம‌திப்ப‌ற்ற‌தாக‌ இருந்த‌து

இப்போது அத‌ற்கு ஒரு விலையும் இல்லை

என்ற‌ முத‌ல‌டியை பாடி விட்டு க‌விஞ‌ர் நிறுத்தி விட்டார். மீண்டும் முத‌ல‌டியை பாடினார். ஆர்வ‌ம் அதிக‌ரித்து பொங்கி எழுந்த‌து. அடுத்த‌ அடியை பாடினார் வாங்கிய‌ ஒருத்தி திருப்பி கொடுத்துவிட்டு போய்விட்டாள்...

அட‌டா! என்ன‌ ப‌ரிதாப‌மான‌ வியாபார‌ம்?

திருப்பி கொடுத்து விட்டு போன‌வ‌ள் மீது கோப‌ம் பொங்குகிற‌து.

ப‌த்து இத‌ய‌மா இருக்கு ஒன்றில் நஷ்ட‌மான‌ல் ம‌ற்றொன்றில் ச‌ம்பாதித்து விட‌லாம் என்ப‌த‌ற்கு?

விலை கொடுத்தா வாங்கியிருப்பாள்?

இருக்காது, க‌ண்டிப்பா இருக்காது

அதுதான் விலைம‌திப்ப‌தாயிற்றே!

இத‌ய‌ம் ப‌ண்ட‌ மாற்று செய்து இருப்பாள் அல்ல‌து இந்த‌ பைத்திய‌க்கார‌ன் சும்மாவே தூக்கி கொடுத்து இருப்பான். ஒரு வ‌கையில் ஆறுத‌ல் ப‌ட்டுக்கொள்ள‌லாம் உடைத்து த‌ராம‌ல் முழுமையாக‌ கொடுத்திருகிறாளே. இன்னொரு முறை யோசித்து பார்த்தால் இர‌ண்டிற்கும் வித்தியாச‌ம் இருப்பதாக‌ தெரிய‌வில்லை. முழுமையாக‌ ம‌ட்டும் இருந்து என்ன‌ ப‌ய‌ன் ம‌திப்பே போய்விட்ட‌தே.

முன்னாலும் விலைம‌திப்பில்லை

இப்போதும் விலை ம‌திப்பில்லை

ஓ! எத்த‌னை பேரிட‌த்தில் இப்ப‌டி இத‌ய‌ங்க‌ள் மூளையில் கிட‌க்கின்றன‌? வாழ்க்கையே உன் முக‌வ‌ரி தேவை, எத‌ற்காம் உன்னை பிரிந்தால் எப்ப‌டி ம‌றுப‌டியும் ச‌ந்திப்பேன்

வாழ்க்கையே உன் முக‌வ‌ரி தேவை...

எவ்வ‌ள‌வு ஆழ‌மான‌ வ‌ரிக‌ள்?

வாழ்க்கையில் முக‌வ‌ரி கிடைப்ப‌து எத்த‌னை க‌டின‌மான‌ காரிய‌ம். யார் யாரோ இதுதான் வாழ்க்கையின் முக‌வ‌ரி என்று த‌ந்திருக்கிறார்க‌ள். தேடிபோய் பார்த்தால்தான் தெரிகிற‌து அங்கே வாழ்க்கையே இல்லையென்று.

ந‌ம்முடைய‌ எத்த‌னை க‌டித‌ங்க‌ள் திரும்பி வ‌ந்திருக்கின்ற‌ன‌ முக‌வ‌ரியாள‌ர் இல்லை என்று!

எத்த‌னை பேர் வாழ்கையை தேடுவ‌திலேயே ஆயுளை செல‌வ‌ழித்து விடுகிறார்க‌ள்...

என் உயிர் காத‌லிக்கு அழ‌கான‌ க‌டித‌ம் எழுதினேன்

பேனா இல்லை

காகித‌ம் இல்லை...

எவ்வ‌ள‌வு அழ‌கான‌ காத‌ல் க‌டித‌ம்

எழுத‌ப்ப‌ட்ட‌ காத‌ல் க‌டித‌த்தை விட‌

எழுத‌ப்ப‌டாத‌ காத‌ல் க‌டித‌ம்தான் அழ‌கான‌து

அப்ப‌டியே எழுத‌ நினைத்தாலும் எழுதிவிட‌ முடியுமா?

வ‌லைக்குள் மீன் சிக்கும், த‌ண்ணீர் சிக்குமா?

அன்புக்குரிய‌வ‌ளே..!

நான் உன்னிட‌ம் இருந்து விடைபெறுகிறேன். நேசிக்கிற‌ சிற்ப‌த்தின் மீது ஒரு கீற‌ல்கூட‌ விழுந்து விட‌க்கூடாது என‌ நினைப்ப‌வ‌ன் நான்.என் முக‌த்தையே உன் முக‌மாய் க‌ற்ப‌னை செய்து கொள்கின்ற‌ அள‌வுக்கு உன்னால் ஈர்க்க‌ப்ப‌ட்டிருக்கிறேன். உன் புகைப்ப‌ட‌த்தைக்கூட‌ நான் எடுத்து செல்ல‌வில்லை. ஏனென்றால் உருவ‌ம் என்ப‌து ந‌ம் அன்பில் எப்போதும் குறுக்கீடு செய்ய‌வில்லை என்றே எண்ணுகிறேன்...

காத‌லியாய் இருப்ப‌வ‌ள்தான்

க‌ன‌வுக‌ளில் க‌ளிக்க‌ வைப்ப‌வ‌ள்

கால‌மெல்லாம் உன் நினைவுக‌ளின்

க‌த‌க‌த‌ப்பிலே உயிர்வாழ்ந்து விடுவேன்...

எந்த‌வொரு க‌விதையை ப‌டிக்கின்ற‌ போது

நீ என்னை நினைத்துக்கொள்வாய் என‌

நினைக்கிறேன்...

நான் உன்னை நேசித்த‌த‌ற்கு

என் நெஞ்சு ம‌ட்டுமே அத்தாட்சியாக‌ இருக்கும்

இப்ப‌டியே வ‌ரிக‌ள் தொட‌ர்ந்த‌போது

இத‌ய‌ம் ந‌டுங்க‌ ஆர‌ம்பித்து விட்ட‌து

இர‌வில் தூங்குவ‌த‌ற்கு க‌ண்க‌ளை தேடினேன்...

காலையில் எழுந்து இர‌வுவ‌ரை வேலை பார்த்து முடித்துவிட்டு ம‌ன‌ம் வேர்த்து புழுங்கிய‌ நேர‌ம். ம‌ன‌து ஏதோ ஒரு த‌விப்புட‌ன் செய‌ல்ப‌ட்ட‌து. வானொலியை தேடினேன் முள்ளினை சிறிது சிறிதாக‌ ந‌க‌ர்த்திய‌ பொழுது ஏதோ ஒரு அலைவ‌ரிசை எடுத்த‌து. ஒரு க‌விஞ‌ர் க‌விதை வாசித்துக்கொண்டிருந்தார். இத‌ய‌ம் விலை ம‌திப்ப‌ற்ற‌தாக‌ இருந்த‌து என்கிற‌ வ‌ரிக‌ள் என்னை நிலை நிறுத்திய‌து. வ‌சிய‌ம் செய்ய‌ப்ப‌ட்ட‌வ‌ன் போல‌ சொற்க‌ளின் பின்னால் ந‌ட‌க்க‌ தொட‌ங்கினேன்.

இத‌ய‌ம் விலை ம‌திப்ப‌ற்ற‌தாக‌ இருந்த‌து

இப்போது அத‌ற்கு ஒரு விலையும் இல்லை

என்ற‌ முத‌ல‌டியை பாடி விட்டு க‌விஞ‌ர் நிறுத்தி விட்டார். மீண்டும் முத‌ல‌டியை பாடினார். ஆர்வ‌ம் அதிக‌ரித்து பொங்கி எழுந்த‌து. அடுத்த‌ அடியை பாடினார் வாங்கிய‌ ஒருத்தி திருப்பி கொடுத்துவிட்டு போய்விட்டாள்...

அட‌டா! என்ன‌ ப‌ரிதாப‌மான‌ வியாபார‌ம்?

திருப்பி கொடுத்து விட்டு போன‌வ‌ள் மீது கோப‌ம் பொங்குகிற‌து.

ப‌த்து இத‌ய‌மா இருக்கு ஒன்றில் நஷ்ட‌மான‌ல் ம‌ற்றொன்றில் ச‌ம்பாதித்து விட‌லாம் என்ப‌த‌ற்கு?

விலை கொடுத்தா வாங்கியிருப்பாள்?

இருக்காது, க‌ண்டிப்பா இருக்காது

அதுதான் விலைம‌திப்ப‌தாயிற்றே!

இத‌ய‌ம் ப‌ண்ட‌ மாற்று செய்து இருப்பாள் அல்ல‌து இந்த‌ பைத்திய‌க்கார‌ன் சும்மாவே தூக்கி கொடுத்து இருப்பான். ஒரு வ‌கையில் ஆறுத‌ல் ப‌ட்டுக்கொள்ள‌லாம் உடைத்து த‌ராம‌ல் முழுமையாக‌ கொடுத்திருகிறாளே. இன்னொரு முறை யோசித்து பார்த்தால் இர‌ண்டிற்கும் வித்தியாச‌ம் இருப்பதாக‌ தெரிய‌வில்லை. முழுமையாக‌ ம‌ட்டும் இருந்து என்ன‌ ப‌ய‌ன் ம‌திப்பே போய்விட்ட‌தே.

முன்னாலும் விலைம‌திப்பில்லை

இப்போதும் விலை ம‌திப்பில்லை

ஓ! எத்த‌னை பேரிட‌த்தில் இப்ப‌டி இத‌ய‌ங்க‌ள் மூளையில் கிட‌க்கின்றன‌? வாழ்க்கையே உன் முக‌வ‌ரி தேவை, எத‌ற்காம் உன்னை பிரிந்தால் எப்ப‌டி ம‌றுப‌டியும் ச‌ந்திப்பேன்

வாழ்க்கையே உன் முக‌வ‌ரி தேவை...

எவ்வ‌ள‌வு ஆழ‌மான‌ வ‌ரிக‌ள்?

வாழ்க்கையில் முக‌வ‌ரி கிடைப்ப‌து எத்த‌னை க‌டின‌மான‌ காரிய‌ம். யார் யாரோ இதுதான் வாழ்க்கையின் முக‌வ‌ரி என்று த‌ந்திருக்கிறார்க‌ள். தேடிபோய் பார்த்தால்தான் தெரிகிற‌து அங்கே வாழ்க்கையே இல்லையென்று.

ந‌ம்முடைய‌ எத்த‌னை க‌டித‌ங்க‌ள் திரும்பி வ‌ந்திருக்கின்ற‌ன‌ முக‌வ‌ரியாள‌ர் இல்லை என்று!

எத்த‌னை பேர் வாழ்கையை தேடுவ‌திலேயே ஆயுளை செல‌வ‌ழித்து விடுகிறார்க‌ள்...

என் உயிர் காத‌லிக்கு அழ‌கான‌ க‌டித‌ம் எழுதினேன்

பேனா இல்லை

காகித‌ம் இல்லை...

எவ்வ‌ள‌வு அழ‌கான‌ காத‌ல் க‌டித‌ம்

எழுத‌ப்ப‌ட்ட‌ காத‌ல் க‌டித‌த்தை விட‌

எழுத‌ப்ப‌டாத‌ காத‌ல் க‌டித‌ம்தான் அழ‌கான‌து

அப்ப‌டியே எழுத‌ நினைத்தாலும் எழுதிவிட‌ முடியுமா?

வ‌லைக்குள் மீன் சிக்கும், த‌ண்ணீர் சிக்குமா?

அன்புக்குரிய‌வ‌ளே..!

நான் உன்னிட‌ம் இருந்து விடைபெறுகிறேன். நேசிக்கிற‌ சிற்ப‌த்தின் மீது ஒரு கீற‌ல்கூட‌ விழுந்து விட‌க்கூடாது என‌ நினைப்ப‌வ‌ன் நான்.என் முக‌த்தையே உன் முக‌மாய் க‌ற்ப‌னை செய்து கொள்கின்ற‌ அள‌வுக்கு உன்னால் ஈர்க்க‌ப்ப‌ட்டிருக்கிறேன். உன் புகைப்ப‌ட‌த்தைக்கூட‌ நான் எடுத்து செல்ல‌வில்லை. ஏனென்றால் உருவ‌ம் என்ப‌து ந‌ம் அன்பில் எப்போதும் குறுக்கீடு செய்ய‌வில்லை என்றே எண்ணுகிறேன்...

காத‌லியாய் இருப்ப‌வ‌ள்தான்

க‌ன‌வுக‌ளில் க‌ளிக்க‌ வைப்ப‌வ‌ள்

கால‌மெல்லாம் உன் நினைவுக‌ளின்

க‌த‌க‌த‌ப்பிலே உயிர்வாழ்ந்து விடுவேன்...

எந்த‌வொரு க‌விதையை ப‌டிக்கின்ற‌ போது

நீ என்னை நினைத்துக்கொள்வாய் என‌

நினைக்கிறேன்...

நான் உன்னை நேசித்த‌த‌ற்கு

என் நெஞ்சு ம‌ட்டுமே அத்தாட்சியாக‌ இருக்கும்

இப்ப‌டியே வ‌ரிக‌ள் தொட‌ர்ந்த‌போது

இத‌ய‌ம் ந‌டுங்க‌ ஆர‌ம்பித்து விட்ட‌து

இர‌வில் தூங்குவ‌த‌ற்கு க‌ண்க‌ளை தேடினேன்...

Saturday, February 12, 2011

ஜனநாயகவாதிகளே, டர்பன் கட்டிய நரி இடும் ஊளைக்கு உங்கள் பதில் என்ன?..

சிறிது நாட்களாகவே உணவுப் பொருள் பாதுகாப்பு மசோதா என்று ஆரம்பித்து அரசாங்க உணவுக் கிட்டங்கியில் உணவு தானியங்களை எலிகள் திண்ணும் பிரச்சனை வரை கேள்விப்பட்டு கொதித்தெழுந்தவர் முதல் தமது பங்குக்கு ’உச்’ கொட்டியவர் வரை அனைவரும் நேற்றைய செய்தித் தாளில் டர்பன் கட்டிய குரூர நரி (மன்மோகன் சிங்) ஒன்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் ஊளை இட்டதைப் பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள் ..

கடந்த சில மாதங்களாகவே இந்த உணவு தானியப் பொருள் பிரச்சனை விஸ்வரூபம் எடுக்க இந்த பிரச்சனை சுப்ரீம் கோர்ட்டு வரை சென்று , உச்சநீதி மன்றம் உணவுக் கிடங்கில் எலிகள் சாப்பிட்டு , அழுகிப் போகும் உணவு தானியப் பொருட்களை ஏழை மக்களுக்கு இலவசமாக பகிர்ந்தளிக்க வேண்டும் என்று ஆணையிட்டது.

நீலச் சாயம் முக்கின நரி
அந்த உத்தரவை சிறிது நாட்கள் கிடப்பில் போட்டு வைத்திருந்தார் மாண்புமிகு அமைச்சர் சரத் பவார். பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு உச்ச நீதி மன்றம் அட்வைஸ் தான் பண்ணுச்சு .. ஆர்டர் பண்ணலைனு கப்சா விட்டார் அந்த மாண்புமிகு..

கொஞ்சம் பொறுங்க.. எலி சாப்பிட்டு முடிக்கட்டும்

கடைசியில் உச்ச நீதி மன்ற பெஞ்சு கடுப்பேறி அசிங்கமாக திட்டாத குறையாக கூறியது. உணவுப் பொருட்களை இலவசமாக விநியோகச் சொன்னது கட்டளையே தவிர அறிவுரை கிடையாது என்று கிழித்து விட்டது. அதன் தொடர்ச்சியாகத்தான் டர்பன் கட்டிய அந்த ஊதா நரி பத்திரிக்கையாளர் சந்திப்பில் தனது சாயத்தை தன் வாயாலேயே நக்கி நக்கி நீக்கியிருக்கிறது.

நரி கூறுகையில் ”ஏழைகளுக்கு உணவு தானியங்களை இலவசமாக கொடுக்க முடியாது. இந்தியாவில் 37% பேர் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளனர். அவர்கள அனைவருக்கும் இலவசமாக கொடுக்க முடியாது. ஆனால் இந்த அரசாங்கம் ஏழை மக்களைக் காப்பாற்ற அந்த தானியங்களை குறைந்த விலையில் விற்கும்.

உச்ச காமெடி மன்றம்
இப்பொழுது அனைவருக்கும் கொடுத்துவிட்டால் நாளை பொது வினியோக முறையின் கீழ் மக்களுக்கு கொடுக்க உணவு தானியங்கள் இல்லாமல் உணவுத் தட்டுப்பாடு வரும் அபாயம் இருக்கிறது” என்று ஊளையிட்டிருக்கிறது அந்த நரி . மேலும் “உச்ச நீதி மன்றம் அரசின் கொள்கைகளுக்குள் தலையிடக் கூடாது” என்று பவ்வியமாக கூறியிருக்கிறது (சட்டத்தை அவ்வளவு மதிக்கிறாராம்)

சரி, நரியின் இந்த ஊளையின் முழுப் பரிமாணமும் என்ன என்று பார்ப்போம். இந்தியாவில் 37% பேர் தான் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளார்கள் என்பதே கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கையைக் குறைத்து அளவிட இந்த அயோக்கிய சிகாமனிகள் (மன்மோகன்,சிதம்பரம்,மாண்டேக் சிங் அலுவாலியா) மேற்கொண்ட முதல் திட்டம், வறுமைக் கோட்டிற்கான அளவீடை மாற்றி அமைப்பது. இந்த மக்கள் விரோதிகளின் கணக்குப்படி பார்த்தால் நகர்ப்புறத்தில் ஒரு நாளைக்கு 18 ரூபாய்க்கு குறைவாக சம்பாதிப்பவர்களும் கிராமப்புறத்தில் ஒரு நாளைக்கு ரூபாய்.11.40 க்கு குறைவாக சம்பாதிப்பவர்களும் தான் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள்
அதாவது இவர்களைப் பொறுத்த வரை நகரத்தில் ஒரு நாளைக்கு இருபது ரூபாய் சம்பாதிப்பவன் எல்லாம் டாட்டா , அம்பானியுடன் போட்டியிடும் அளவுக்கு பெரும்பணக்காரர்கள். உங்களுக்கே தெரியும் இருபது ரூபாயை வைத்துக் கொண்டு இன்றைய விலைவாசியில் மூன்று தேரத்திற்கு தேனீர் மட்டும் தான் குடிக்க முடியும் என்று.

இந்தியா - வல்லரசு
இந்த அயோக்கியர்கள் சொல்லும் கணக்கே இவ்வளவு கேவலமாக இருக்க என்.சி. சக்சேனா தலைமையிலான வறுமைக் கோட்டுக்கான வல்லுனர் குழுவின் மதிப்பீட்டின்படி இந்தியாவில் வ.கோ.கீ உள்ளவர்களின் அளவு 50%.

அதே நேரத்தில், முறைசாராத் துறைத் தொழில்களின் தேசிய ஆணையம் தனது அறிக்கையின் முதல் பக்கத்தில் 83 கோடியே 60 லட்சம் இந்திய மக்கள் (நமது மக்கள் தொகையில் 77 சதவீதத்தினர்) ரூபாய் 20 அல்லது அதற்கும் குறைவான தொகையில் ஒருநாள் பொழுதைத் தள்ளுகிறார்கள் எனக் குறிப்பிட்டுள்ளது (இதில் 18 ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பவர்கள் வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ளவர்கள் என்பதை மனதில் கொள்ளவும்).

இவ்வளவு கொடூரங்கள் இங்கு இந்தியாவில் நடந்தேறிக் கொண்டிருக்க உணவுப் பொருட்களை எலி திண்று நாசமாகப் போனாலும் பரவாயில்லை மக்கள் திண்ணவேண்டுமானால் காசு கொடுத்துச் சாப்பிடட்டும் என்று இந்த நரி இங்கு ஊளையிட்டுக் கொண்டிருக்கிறது.

வயிராற சாப்பிடும் உணவுப்பஞ்சம் இல்லாத ஜீவன்கள்

இங்கு நம் பசித்த மக்களுக்குக் கிடைக்காத உணவு தானியங்கள் ஐரோப்பிய பெரு முதலாளிகளின் பன்றிப் பண்ணைகளில் பன்றிகளுக்கு உணவாக நமது மக்களுக்கு கொடுக்கப்படும் விலையை விட குறைவான விலைக்கு விற்கப்படுகின்றன என்பது தெரிந்தும் நாம் கோபப்படாமல் இருந்தால் மனிதனாக இருப்பதில் அர்த்தமே இல்லை.

இந்திய துணைக்கண்டம் வாழ் ஜனநாயகத்தைத் தூக்கி நிறுத்தும் ஜனநாயகவாதிகளே !! .. ஏழை மக்களுக்கு உணவு கொடுக்க உச்சநீதிமன்றம் ஆணையிட்டும் கொடுக்க முடியாது என்று கூறியதோடு மட்டுமல்லாமல் அவர்களது கொள்கைகளில் நீதிமன்றம் தலையிடக் கூடாது என்றும் திமிர்த்தனமாக பதிலளித்திருக்கும் இந்த அயோக்கியர்களின் ஊளைக்கு உங்கள் பதில் என்ன ?...

உலகவங்கியின் தாளத்திற்கேற்ப இங்கு ஆட்டம் போடும் மன்மோகன் சிங் , ப.சிதம்பரம் ஆக்யோரைத் தூக்கி எறிந்து விட்டு இதே போல் இந்தியாவில் 2001 ம் ஆண்டில் பஞ்சம் இருக்கையில் கோடிக்கணக்கான டன் உணவு தானியங்களை ஐரோப்பிய நாட்டு பன்றிப் பண்ணைகளுக்கு ஏற்றுமதி செய்த பா.ஜ.க வின் கரசேவை புகழ் அத்வானியை ஆட்சியில் அமர்த்தி வேடிக்கை பார்க்கப் போகிறீர்களா ?..

இல்லை ஆயிரக் கணக்கான விவசாயிகளின் நிலத்தைப் பறித்து டாட்டா முதலாளிக்குத் தாரைவார்த்த சி.பி.எம் ஆட்சியை வரவழைக்கப் போகிறீர்களா ?..

உங்களுக்கு வேண்டுமெனில் நீங்களும் சேர்ந்து தான் மோதிப் பெற வேண்டும்.

நீதி வேண்டுமா ?.. தேர்தலை புறக்கணியுங்கள்...
புரட்சி ஒன்று தான் ஒரே வழி ..

http://senkodimaruthu.blogspot.com/2010/09/blog-post_08.html

Friday, February 11, 2011

மே 2011: ஆட்சி மாற்றத்திற்கான தேர்தலல்ல - கா.தமிழ்வேங்கை

தமிழகத்திற்கு 2011 மே மாதம் சட்ட மன்றத் தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி தமிழ்த்தேசிய ஊணர்வாளர்களிடையே ஓருவித பரபரப்பு காணப்படுவதை ஆறிய முடிகிறது,

இந்த முறை காங்கிரசை வீட்டுக்கு அனுப்பியே ஆக வேண்டும் என ஒரு சிலரும், கருணாநிதியை தோற்கடிக்க வேண்டும் என ஒரு சிலரும், மூன்றாது அணி அமைக்க வேண்டும் என ஒரு சிலரும்,ஜெயலலிதாவை ஆதரிக்கலாம் என ஒரு சிலரும்,கருணாநிதியை எதிர்த்தால் மீண்டும் ஜெயலலிதா வந்துவிடுவார் பாசிச ஆட்சி மீண்டும் ஏற்படும் என ஒரு சிலருமாக கருத்துத் தெரிவிக்கின்றனர்.

உண்மையில் தமிழ்த் தேசிய உணர்வாளர்களின் எண்ணம். மனநிலை சிதைந்து வெகுவாகக் கூறுபட்டுக் காணப்படுவதின் மூலம் மேற்கண்ட கருத்துச் சிதறல்களில் காணமுடிகிறது,பேராசிரியர் கல்யாணி. ஜார்ச் புஷ்சை எதிர்த்து மேடையில் பேசுபவன் உள்ளூர் காவல் அதிகாரியை எதிர்த்துப் பேசத் தயங்குகிறான் என்பார்,காங்கிரஸ்தான் தமிழினத்தின் முதல் எதிரி என்று கூறுபவர்களின் மனநிலையும் ஜார்ச் புஷ்சை எதிர்ப்பவனின் மனநிலையும் ஒன்றுதான், (இப்போது ஒபாமா) காங்கிரசைத் தலையெடுக்க விடாமல் இந்தத் தேர்தலில் செய்ய வேண்டும் என்று கூக்குரலிடும் தமிழ் உணர்வாளர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள், திண்டிவனம் நகரில் பெருந்தலைவர் காமராசர் சிலை அருகில் டாஸ்மாக் மதுக்கடையைத் திறந்தபோது சில நாளிதழ்களில் எதிப்பு தெரிவித்துச் செய்தி வெளியானதால் உடனடியாக அப்புறப்படுத்தினார்கள், டாஸ்மாக் கடையை அல்ல காமராசரின் சிலையை.இதைக் கண்டித்து தமிழகத்தில் ஒரு காங்கிரஸ் நாய்கூட குரைக்கவில்லை. இதுதான் இன்றைய காங்கிரஸ், காங்கிரசின் தேசிய செயல்திட்டம் என்பது அதன் தலைவர்களின் பிறந்தநாளுக்கு இனிப்பு வழங்கிக்

கொண்டாடுவதுதான். சுருக்கமாகச் சொன்னால் காங்கிரஸ் ஒரு தலையில்லாத முண்டம்.அந்த முண்டத்திற்கு முகமூடிபோட்டு தங்களின் தோள்களில் தூக்கிவரும் கொத்தடிமைகள் தான் திமுக, அதிமுகவாகும், தற்போது கொத்தடிமை வேலையை சிறப்பாகச் செய்து முன்னிலை வகிப்பது திமுக என்பது எல்லோருக்கும் தெரியும்,காங்கிரசும் அதன் தலைமைப் பொறுப்பில் இருக்கும் சோனியா ,மன்மோகன் சிங்,சிதம்பரம் போன்றவர்கள் நம் இனத்தின் எதிரிகள் என்பதில் எனக்கும் மாற்றுக் கருத்து இல்லை, ஆனால் பெருந்தலைவர் காமராசருக்குப் பிறகு முடமாகிக் கிடக்கும் காங்கிரசுக்கு இன்று முட்டுக்கொடுப்பவர்கள் யார் ?

திமுகவும். அதன் தலைவர் கருணாநிதியும் தானே .ஆனால் தமிழினத்தின் எதிரிகளை வரிசைப்படுத்தும் சிலர் காங்கிரசை முதலிலும் திமுகவை இரண்டாம் இடத்திலும் வைத்துப்பார்ப்பது எப்படி சரியானது என்பதுதான் தெரியவில்லை, திமுகவைத் தொடங்கிய அண்ணா கழகத்தைக் குடும்பமாக்கினார் இனால் இன்று குடும்பதையே கழகமாக்கிவிட்டார் கருணாநிதி, ஆசியப் பணக்காரர்களின் வரிசையில் இன்று தனக்கொரு இடத்தைத் தக்கவைத்துக் கொண்டது கருணாநிதியின் குடும்பம், போகட்டும்.

ஆனால் ஐந்து முறை அரியணையில் ஏற்றிய மக்களுக்கு நன்றி சொல்லத் தேவையில்லை துரோகம் செய்யாமல் இருந்தாரா கருணாநிதி, ஈழம் இன்று சுடுகாடானதற்கு முக்கியக் காரணம் கருணாநிதிதான்,ஓரு லட்சம் தமிழர்களைக் கொன்று குவித்த கொலைகாரன் இராஜபக்சே நமக்கு மூன்றாம் எதிரி. ஆயுதத்தை அள்ளிக்கொடுத்த சோனியா. மன்மோகன்சிங் நமக்கு இரண்டாம் எதிரிகள், ஈழத்தில் இரத்த ஆறு ஓடியபோது மழை நின்றாலும் தூவானம் தொடரத்தான் செய்யும் என்று இனப்படுகொலையை நியாயப்படுத்தியவர் கருணாநிதி,ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு இவரே நேரடி சாட்சி, மலையாள சிவசங்கரமேனனும். எம்,கே,நாராயணனும். பிரணாப்முகர்சியும் சென்னை வந்து கருணாநிதியைச் சந்தித்து கலந்தாலோசிதுவிட்டுத்தான் கொழும்புக்குச் சென்றார்கள், செய்யவேண்டியதை நீங்கள் செய்யுங்கள் திறமையாக நாடகமாடி தமிழ்நாட்டு மக்களை நான் சமாளித்துக் கொள்கிறேன் என்று கொலைகாரனுக்கு துணைபோனவர்களை வாழ்த்தி வழியனுப்பியவர் கருணாநிதி, தமிழின வரலாற்றில் நீண்ட காலம் தமிழர்களுக்கும் தமிழ் மொழிக்கும். தமிழ்மண்ணுக்கும் துரோகம்

செய்தவர் என்ற பெருமை கருணாநிதியையே சாரும், தேசிய தலைவரின் தாயார் பார்வதியம்மாள் சிகிச்சைக்காக தமிழகம் வந்தபோது அதே விமானத்திலேயே திருப்பி அனுப்பிய கல்நெஞ்சக்காரர்.

ஈழத்து இனப்படுகொலை கண்டு தமிழகத்தின் குக்கிராம மக்கள் கூட குமுறி எழுந்தார்கள், முத்துக்குமார் தன்னை தீக்கு இரையாக்கிக்கொண்டு தமிழகத்து இளைஞர்களை வீதிக்குக் கொண்டு வந்து போராடவைத்தார், பற்றிப்படரும் தமிழ்த்தேசிய தீச்சுவாலையை எப்படி அணைப்பது என்று திட்டம் தீட்டுவதிலேயே கருணாநிதி கவனமாக இருந்தாரே ஒழிய நம் இனத்தின் குரலாய் கடைசிவரை அவர் ஒலிக்கவே இல்லை, தமிழினம் கருவருக்கப்படுவதை முதலமைச்சர் நற்காலியில் படுத்துக்கொண்டு அவர் குரூரமாக ரசித்துக் கொண்டிருந்தார், ஒரு இனத்தின் தலைவனாய் தேசத்தின் முதல்வனாய் இந்த தமிழ் இனத்திற்கு அவர் செய்த ஒரே தியாகம் அண்ணா சமாதியில் உட்கார்ந்து காலை உணவிற்கும். மதிய உணவிற்கும் இடைப்பட்ட வேளையில் பட்டினி கிடந்து சாதனை புரிந்ததுதான்,தமிழினத்தை கருணாநிதி எட்டிக்காயாக வெறுப்பதை இரண்டு எளிய எடுத்துக்காட்டுடன் விளக்க விரும்புகிறேன், ஒன்று தமிழ் குறித்தது மற்றொன்று தமிழினம் குறித்தது,தன்னுடைய மகன் அமைச்சர் அழகிரிக்கு இந்தி அல்லது ஆங்கிலம் தெரியாததால் ஒரு முறை கூட நாடாளுமன்றத்தில் அழகிரி பேசவில்லை, தேசிய மொழி. தொடர்பு மொழி ஏன்ற அடையாளத்துடன் இந்தியும் ஆங்கிலமும் திகழ்வதால் இவ்விரண்டு மொழியும் தெரியாத அழகிரி. திருவிழாவில் காணாமல் போன குழந்தையைப்போல திருதிருவென விழிப்பது கண்டு கருணாநிதியால் கொதித்தெழ முடியவில்லை,

டெல்லியின் பிராந்திய மொழிப் பட்டியலில் இருக்கும் தமிழ். எங்கள் தமிழர்களுக்கு தேசிய மொழி. அம்மொழியில் பேச அழகிரியை அனுமதிக்க வேண்டும் என்று சுயநலத்துடன் தன் மகனுக்காகக் கூட தமிழை உயர்த்திப்பிடிக்க விரும்பாதவர் கருணாநிதி,மற்றொன்று. விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகளாக சித்தரித்து வரும் ஜெயலலிதா, கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது தமிழகத்தில் ஏற்பட்ட ஈழ எழுட்சியைக் கண்டு தன் நிலைப்பாட்டை ஓட்டுக்காக மாற்றிக்கொண்டார்.ஈழத்தமிழர்களுக்கு தனி நாடு அமைத்துக் கொடுக்க முயற்சி செய்வேன். ஈழவிடுதலைப் போராட்டம் நியாயமானது என்றெல்லாம் போகுமிடத்தில் பேசி கைதட்டல் பெற்றார்.

ஜெயலலிதாவின் முன் கதை நமக்குத் தெரியாததல்ல,வாக்கு வங்கியை கவர்வதற்காகவே அவர் அப்படி பேசினார், ஆனால் தனக்கு வாக்கு

வேண்டும் என்கிற சுயநலத்திற்காகக்கூட ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்காதவர் கருணாநிதி, இப்படி ஒன்றல்ல இரண்டல்ல கருணாநிதியின் ஓராயிரம் துரோகத்தைப் பட்டியலிடலாம்.

ஒரு சிலர் கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் ஒரு சேரப் பார்க்கிறார்கள்,ஜெயலலிதா சேலைகட்டிய கருணாநிதி, கருணாநிதி வேட்டி கட்டிய ஜெயலலிதா என்று எளிமையாக இவர்கள் தரும் விளக்கம் கேட்பதற்கு நகைச்சுவையுடன் கூடிய அழகியல் இதில் இருந்தாலும் இருவருக்குமான பண்பு வேறுபாட்டை அறியாதவர்களாகவே இருக்கிறார்கள், உண்மையில் உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்பவர் கருணாநிதி, அடித்துப் பிடுங்குபவர் ஜெயலலிதா, கருணாநிதி எழுதிய பாயும்புலி பண்டாரக வன்னியன் என்ற கதையில் ஒரு கதாபாத்திரத்தின் பெயர் பிலிமதல்லவை. சூழ்ச்சிக்குப் பெயர் போன பிலிமதல்லவையைப் பற்றி கருணாநிதி இப்படி எழுதியிருப்பார் -ஆயிரம் குள்ள நரிகளின் மூளை ஓரு வெள்ளைக்காரனுக்கு ஆயிரம் வெள்ளைகாரனின் மூளை தான் ஓரு பிலிமதல்லவையின் மூளையாகும். சூழ்ச்சியில்,வஞ்சகத்தில், குழிபறிப்பதில்,காட்டிக்கொடுப்பதில், துரோகத்தில் ஆயிரம் பிலிமதல்லவையின் மூளைக்கு சமமானவர் கருணாநிதி தமிழைக் கரைத்துக்குடித்து ஏப்பம்விட்ட தமிழாய்ந்த தமிழறிஞர்கள் இதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆயிரம்தான் இருந்தாலும் ஜெயலலிதா ஒரு பாப்பாத்தி அதுவும் கன்னடப் பாப்பாத்தி என்பது சிலரின் வாதம், அடிப்படையில் பெரியாரின் கொள்கைப்படி நடந்து கொள்வதாகத் தங்களுக்குத் தாங்களே மகுடம் சூட்டிக்கொள்ளும் மடையர்கள் இவர்கள், 03-02௨011 அன்று சென்னையில் திமுகவின் பொதுக்குழு விளக்கப் பொதுக்கூட்டத்தில் பேசிய கருணாநிதி. பொதுக்கூட்டத்திற்கான விளம்பரத்தை வெளியிட தினமலர் நாளிதழ் மறுத்ததை சுட்டிக்காட்டி வழக்கமான தனது ஆரிய-திராவிடப் பசப்புமொழியை அள்ளி வீசினார், ஆரியர்களை எதிர்ப்பது உண்மையென்றால் ஆரிய தினமலரிடம் ஏன் விளம்பத்திற்காக அலையவேண்டும், தனது விளம்பத்தை நிராகரித்த தினமலரை உடன்பிறப்புக்கள் நிராகரிக்கவேண்டும் என்று கருணாநிதி கூறுவாரா? அப்படிக் கூறினால் உடன்பிறப்புக்கள் ஏற்றுக்கொள்ளும் நிலையில்தான் உள்ளனரா? ஜெயலலிதாவைவிட பார்ப்பனர்களை வளர்த்துவிடுவதில் முனைப்புகாட்டி வருவபர் கருணாநிதி என்பதை நாடே அறியும், தனது சுயநலத்திற்காகப் பார்ப்பனர்களை சம்மந்தியாக்கிக்கொண்டு இந்து ராம். எஸ்,வி,சேகர் போன்ற கழிசடைகளுடன் கொஞ்சிக்குலாவும் கருணாநிதி. திரும்பத் திரும்ப ஆரிய திராவிடப்போர் ஏன்று மேடையில் மட்டும் முழங்குவதை பெரியாரின் பிஞ்சுகள் உணரவேண்டும்,தமிழுக்கு அடுத்தபடியாகத் தங்களுக்குப் பிடித்த மொழி எது? என்ற வினாவிற்குக் கருணாநிதியின் விடை சுந்தரத் தெலுங்கு என்பதாகும், சுந்தர அல்லது சுந்தரம் என்ற சமஸ்கிருதச் சொல்லுக்கு அழகு என்று பொருள், அழகுத் தெலுங்குதான் தனக்கு பிடிக்கும் என்பததன் பொருள்.

தனது முன்னோரின் மொழி தெலுங்கு என்று தெரிந்ததால்தானே கருணாநிதி இப்படிப் பேசுகிறார், கன்னடப் பாப்பாதி என்று ஜெயலலிதாவைக் கூறும் பெரியாரின் கைத்தடிகள் கருணாநிதியை தெலுங்கர் என்று ஏன் கூறுவது இல்லை, தமிழுக்கு அடுத்தபடியாக என்று கேள்வி எழுப்பாமல் பிடித்த மொழி எது ஏன்று கேட்டிருந்தால் அப்போதும் சுந்தரத் தெலுங்கு என்று ‘தமிழினத் தலைவர்’ கருணாநிதி சொன்னாலும் வியப்பதற்கில்லையே,புலிகள் பயங்கராவதிகள் என்று பிதற்றுவதோடு ஜெயலலிதா நிறுத்திக்கொள்கிறார், ஆனால் கருணாநிதியோ புலிகளை நாள்தோறும் வன்மத்தோடு வசைபாடுவதிலேயே காலத்தை கழித்துக் கொண்டிருக்கிறார். தனது குடும்பத்தில் இன்னும் குத்து வெட்டு நடக்காததுதான் பாக்கி.வாரிசு அரசியலை வளர்த்து விட்டு வாரிசுகளாலேயே தனது கதை முடியப்போகிறது என்று தெரிந்தும்

புலிகளின் தேசப்பற்றை - வீரம் செரிந்த விடுதலைப்போராட்டத்தை வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் இழிவுபடுத்துவதோடு மட்டுமல்லாமல்,துரோகிகளுக்கு எதிரான புலிகளின் நடவடிக்ககையை சகோதரச்சண்டையாகத் திரித்துக் கூறிவருபவர்தான் கருணாநிதி.

இந்த நேரத்தில் தமிழ்த்தேசிய உணர்வாளர்களும் ஈழ ஆதரவாளர்களும் ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும், உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவன் பிரபாகரன்.

கொல்லப்பட வேண்டும் என்று சோனியா,ராஜபக்சேவைவிட அதிகமானத் துடிப்பவர் கருணாநிதி, நாற்பது வயதிலேயே உலகத் தமிழர்களின் தலைவனாக உயர்ந்து விட்டாரே பிரபாகரன், ஆனால் நாமோ ஜால்ராக்களின் பாராட்டுக் கூட்டங்களில்தான் தமிழினத்தலைவராக பேசப்படுகிறோம் என்ற காழ்ப்புணர்ச்சியினால் பிரபாகரனை வெறுப்பவர்களில் இன்று உலகதில் முதலாவதாக இருப்பவர் கருணாநிதிதான், அதனால் தான் பிரபாகரன் கைது செய்யப்பட்டால் அவரை போரஸ் மன்னன் போன்று கவுரமாக நடத்தவேண்டும் என்று கருணாநிதியால் கற்பனை செய்ய முடிகிறது, ஆனால் இவரது எண்ணம் தவிடுபொடியாகும், புலிகள் மீண்டு வருவார்கள். மீண்டும் வருவார்கள்,தலைவர் பிரபாகரன் தலைமையில் வீரம் செரிந்த விடுதலைப்போர் மீண்டும் வெடிக்கும், துரோகி கருணா(நிதியின்) காலத்திலேயே ஈழம் மலரும்,சிங்களக் கடற்படையினரால் இதுவரை 537 மீனவத் தமிழச்சிகளின் தாலிகள் அறுக்கப்பட்டுள்ளன, 2011 ஜனவரி மாதத்தில் மட்டும் 2 தாலிகள் சிங்கள ஈராணுவத்தால் அறுக்கப்பட்டுள்ளன.

இந்தியக் கடற்படைத் தளபதி கருணாநிதியைச் சந்தித்து இனி மீனவர்களின் உயிருக்கும் உடைமைக்கும் கேடு நேராது என்று வாக்குறுதி கொடுத்த சில மணி நேரங்களிலேயே ஜெயக்குமார் என்ற மீனவர் சித்தரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார், புஷ்பவனம் கிராமத்தில் ஒப்பாரி ஓலம் ஒலித்துக்கொண்டிருந்த நேரத்தில் பிரணாப்முகர்சி சென்னை வந்து கருணாநிதியைச் சந்தித்த புகைப்படம் அனைத்து நாளிதழ்களிலும் முதல் பக்கத்தில் வெளியானது, அதில் சிரித்துக்கொண்டு கருணாநிதி காட்சியளிப்பது அவரது இதயத்தில் ஈரம் இல்லை ஏன்பதை எடுத்துக்காட்டுவதாக உள்ளது, இவர்கள் வீட்டில் பிணம் விழுந்தால் இந்த தேசமே அழவேண்டும், ஆனால் இந்த தேசத்தில் ஒரு பிணம் அதுவும் இலங்கை இராணுவத்தால் சுடப்பட்டு விழ்ந்தபோது இவர் சிரித்துக் கொண்டு இருக்கிறார், (சிரிப்பாய்ச் சிரிக்கும் இவரது குடும்ப அரசியலைப் பார்த்து நாடே நகைப்பது இவருக்கு தெரியாது போலும்) இப்போது மீனவர்களின் போராட்டம் சற்றுத் தீவிரமடைவதைக் கண்டு சிங்காரவேலருக்கு மணிமண்டபம் கட்டப்போவதாக அறிவித்துப் பிரச்சனையைத் திசை திருப்புகிறார் மீனவனுக்குக்கடலிலேயே சமாதிகட்டும் சிங்களவனை எதிர்த்துக் கேட்கத் துப்புக்கெட்ட கருணாநிதி.

மீனவர்களின் போராட்டத்தை மழுங்கடித்து மணிமண்டபம் நாடகம் ஆடுகிறார், இப்படித் தமிழினம் கூர்மையடையும் போதும்.பொங்கி எழும்போதும் தனது சூழ்ச்சியால் ,நயவஞ்சகத்தால் முனை மழுங்கச் செய்வதும் முறியடிப்பதும் கருணாநிதியின் வாடிக்கையாகும், நீயென்ன சொல்வது நானென்ன கேட்பது என்று முரண்டுபிடிக்கும் ஜெயலலிதாவிற்குக் கருணாநிதி போன்று சூழ்ச்சி அரசியல் தெரியாது. சோவும். சு,சாமியும் கூட ஜெயலலிதாவிற்கு அப்படிச் சொல்லிக்கொடுப்பதில்லை என்பதைக் கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஒன்றுதான் என்று வாதிடுபவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்,அது சரி ஒருவர் நெஞ்சில் குத்துகிறார், மற்றொருவார் முதுகில் குத்துகிறார், இதிலென்ன அளவுகோல் இவ்விருவரையுமே அப்புரப்படுத்தியாக வேண்டும் என்று வீராவேசமாகத் தலையங்கம் எழுதுபவர்கள் எழுதுவதோடு சரி,தமிழனத்தின் இருபொரும் தீய சக்திகள் கருணாநிதி,ஜெயலலிதா என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. உடன்பிறப்புக்கள் அல்லது ரத்தத்தின் ரத்தங்கள் முழங்குவது போன்று யாரும் இங்கு நிரந்தர முதல்வர் கிடையாது, ஜெயலலிதா மீதான எதிர்ப்பு கருணாநிதிக்கு ஆதரவாக மாறுகிறது, கருணாநிதியின் மீதான கோபம் ஜெயலலிதாவிற்கு ஆதரவாக மாறுகிறது, உண்மையில் காலம் கடந்த பின்பும் கருணாநிதி முதல்வராக நீடிப்பதற்குக் காரணம் ஒரு வகையில் ஜெயலலிதாதான்,ஜெயலலிதாவின் வரலாற்றுத் தவறுகள் கருணாநிதிக்கு வாழ்வு தந்து கொண்டிருக்கின்றன, இருவரின் எதிரெதிர் அரசியலால் தமிழகம் தனது உரிமைகள் இழந்து அடிமை தேசமாக மாறிக்கொண்டிருக்கிறது, இதற்கு என்ன வழி?

கருணாநிதியின் இந்த ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில் வேறெப்போதும் இல்லாத அளவிற்கு இயற்கை வளங்கள் சுரண்டப்படுகின்றன, ஒரு அடி மணல் உருவாக 10 லட்சம் ஆண்டுகள் ஆகின்றன, ஆனால் 15 அடிக்கும் அதிகமான ஆழத்தில் மணலை அள்ளி ஆந்திரா, கேரளா மற்றும் மாலத்தீவுக்கும் அரபு நாடுகளுக்கும் பகிரங்கமாகத் திமுகவினர் கடத்தி வருகின்றனர். மலைகள் உடைக்கப்படுகின்றன,காடுகள் அழிக்கப்படுகின்றன, நீர் நிலைகள் பராமரிப்பில்லாமல் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன, விவசாயிகள் நிலங்களை அடிமாட்டு விலைக்கு விற்றுவிட்டு நகரங்களில் குடிபெயர்கிறார்கள், கிராமங்கள் அழிந்து வருகின்றன, வேளாண் நிலங்கள் தரிசு நிலங்களாக இருந்தாலும் பரவாயில்லை கால்நடைகளின் மேய்சலுக்குப் பயன்படும். மாறாக அவை வீட்டு மனைகளாகக் கூறுபோடப்படுகின்றன, இதனால் உணவு உற்பத்தி குறைந்து விட்டது, உலகின் பழமையான ஓர் இனம் விரைவில் வயிற்றுப்பசிக்காகப் பிச்சையெடுக்கப்போகிறது.

விலைவாசி விண்ணை முட்டுகிறது. படித்த 70 லட்சம் பேருக்கு வேலை இல்லை, கள்ளுக்கடையை எதிர்க்கும் கருணாநிதி சாராயக்கடையைத்

திறந்து இளைஞர்களின் வாழ்க்கையைச் சீரழித்து வருகிறார்.மனித உரிமைகள்,மனித உயிர்கள் துச்சமாக மதிக்கப்படுகின்றன, இந்த ஆட்சியில் இதுவரை 36 பேர் மோதல் படுகொலை என்ற பெயரில் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஊடகங்கள் மிரட்டப்படுகின்றன. அதோடு திரைத்துறையையும் தன்வசப்படுத்திக் கொண்டனர். எல்லாவற்றுக்கும் மேலாக தன்மானமுள்ள ஒரு தேசிய இனத்தைச் சுயநலக்கூட்டமாக சோம்பேறி இனமாக வாழவேண்டும் என நினைத்து மாதத்திற்கொரு இலவசத்திட்டங்கள், தங்கக்குவியலைக் கண்டவர்கள் அனைத்தும் தனக்கே என ஊரிமை கோருவதுபோல தமிழ்நாட்டையே தனது குடும்பச் சொத்தாக்கிக்கொண்டிருக்கும் கருணாநிதியை நிரந்தரமாக வீட்டிற்கு அனுப்ப சரியான தருணம் இந்த தேர்தல்தான், அடுத்த தேர்தலை அவர் சந்திக்கப்போவதில்லை, காரணம் அவரது வயதும் வாரிசுகளும் அதற்கு இடம் கொடுக்கப்போவதில்லை,அப்படியானால் ஜெயலலிதா ஒன்றுமே செய்யாத அப்பாவியா என்றால் இல்லை,

வேறுபாடு என்னவென்றால் ஜெயலலிதாவின் ஊழல் அல்பத்தனமானது. அதனால்தான் தனது தோழி சசிகலாவுடன் சேர்ந்து நகையை அள்ளி பூசிக்கொண்டு புகைப்படத்திற்கு காட்சிதந்தது, நூறு ஜோடிக்கும்மேல் செறுப்பு வாங்கி அடுக்கியது, ஆனால் கருணாநிதியின் ஊழல் அப்படியல்ல, கனிமொழியைப் பாருங்கள் பத்து ரூபாய் மதிப்புள்ள பாசிமணியைத் தவிர அவரது கருத்தில் வேறுரொன்றும் இல்லை குழந்தைத்தனமான அவரது புன்னகைக்குள் ஒரு லட்சத்து எழுபத்தி ஆறாயிம் கோடி ஒளிந்திருப்பதை எவர் அறிவார், தயாநிதிமாறன் 600 கோடியை லஞ்சமாகத் தனது பாட்டி தயாளுவிடம் கொடுத்துத்தான் ஜவுளித்துறையைப் பெற்றார் என்று ஊடகங்கள் திரும்பத் திரும்ப கூறியபோதும் பாட்டியும் பேரனும் வாய்திறக்கவில்லை.
தாத்தா மட்டும் அது அண்டப்புழுகு என்று மண்ணுக்கும் விண்ணுக்குமாக எகிறிக்குதிக்கிறார் இதுதான் இன்றைய திமுக.டுனீசியா. எகிப்து, யேமன் நாட்டு அதிபர்களுக்கு எதிராக அந்நாடுகளின் மக்கள் கொதித்திதெழுந்து போராடுவதுபோல கருணாநிதியின் குடும்ப ஆட்சிக்கு.

ஊழலுக்கு எதிராகத் தமிழக மக்கள் வீதிக்கு வந்து போராடியிருக்க வேண்டும்,இருந்தாலும் பரவாயில்லை ஆனால் கருணாநிதியின் குடும்பத்திடம் மீண்டும் அதிகாரத்தை ஒப்படைத்தால் பிறகு ஊழலுக்கும் சர்வாதிகாரத்திற்கும்.துரோகத்திற்கும் மக்கள் அங்கீகாரம் கொடுத்துவிட்டதாக ஆகிவிடும்,வரப்போகும் ஐந்தாண்டிற்கும் கருணாநிதி குடும்பமே தமிழகத்தை ஆளும்நிலை ஏற்பட்டால் தமிழகம் சுடுகாடாகும். தமிழீழம் நாதியற்றுப்போகும் .ஆறுதலான செய்தியென்னவென்றால் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள், உண்மையில் வீழ்த்தப்பட வேண்டியவர்கள் கருணாதியும் ஜெயலலிதாவும்தான்,கருணாநிதியின் வீழ்ச்சியால் ஜெயலலிதா மீண்டும் அதிகாரத்திற்கு வந்தால் தமிழ்த்தேசிய உணர்வாளர்கள், ஈழ இதரவாளர்கள், மனிதஉரிமைக்காகக் குரல் கொடுப்பவர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் பாதிக்கப்படுவார்கள் (இப்போது மட்டும் என்னவாம்) இது ஊண்மை, கருணாநிதியையும். ஜெயலலிதாவையும் ஓரே நேரத்தில் வீழ்த்த வேண்டுமானால் அய்யா பழ,நெடுமாறன் கூறுவதுபோல மூன்றாவது அணி ஒன்று தேவை, இனால் மூன்றாவது ஆணி அமைக்கவேண்டியவர்கள் இரண்டு கழகங்களிடமும் பெட்டிக்கும்,தொகுதிக்கும் கையேந்துகிறார்கள், பிறகு எஞ்சியிருப்பது தமிழ்த்தேசிய சக்திகள்தான்.

தமிழர்கள் ஓன்றுபட வேண்டுமென்று முழக்கமிடும் தமிழ்த்தேசியத் தலைவர்கள் திசைக்கொருவராய்ப் பிரிந்துகிடக்கிறார்கள்.காரணம் கவிஞர் பழமலய் கூறுவதுபோல ஐந்துபேருக்கு ஆறு தத்துவம்தான்.

இதற்கு என்னதான் வழி? ஒரு கழகத்தின் தவறு இன்னொரு கழகத்தை வாழவைத்துக் கொண்டிருக்கின்றன, ஆனால் இது நிலையானதல்ல வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவை வீழ்த்தினால் பிறகு அதிமுகவும் விரைவில் வீழ்ச்சியுறும்.கருணாநிதி, இரக்கமற்ற வஞ்சகமான துரோகி.ஜெயலலிதா நேர்மையான எதிரி.காலமும் வரப்போதகும் சட்டமன்ற தேர்தலும் நமக்கு துரோகியை வீழ்த்த வாய்ப்புதர உள்ளன. இந்த ஆட்சியின் மீது மக்களுக்கும் உலகத் தமிழர்களுக்கும் மறக்கமுடியாத மாறாத சினம் பொங்கி ஆழிப்பேரலையாக உயர்ந்து எழுந்து சீறிப்பாய்ந்து வருகிது.மக்கள் நலனின் அக்கறை உள்ளவர்கள் யாராக இருந்தாலும் இந்த நேரத்தில் மக்களோடு கைகோர்ப்பதுதான் சரியானதாக இருக்கும்,திமுக-காங்கிரஸ் அதனோடு ஒட்டிக்கொண்டு தேர்தலைச் சந்திக்கும் எந்தக்கட்சியும் தமிழினத்திற்கு எதிரிகள்தான் இவர்களை எதிர்ப்பதால் நாம் ஜெயலலிதாவை ஆதரிப்பதாக ஆகிவிடுமே என்று சிலர் வாதிடுகின்றனர்.

எங்கள் பக்கம் இல்லாதவர்கள் பயங்கரவாதிகள் பக்கம் இருக்கிறார்கள் என்று உலக நாடுகளை அமெரிக்க அரசு கூறுவதற்கும் மேற்படி கருத்துக்கும் வேறுபாடு இல்லை. நான்கு மாடுகளை மோதி வீழ்த்தமுடியாத சிங்கம் தனது தந்திரத்தால்மாடுகளைப்பிரித்து ஓவ்வொரு மாடாக வீழ்த்துவதுபோலத்தான் இதுவும்,வீழ்த்தப்படவேண்டியவர்கள் இருவரும்தான் ஆனால் இரண்டு தீயசக்திகளையும் வீழ்த்த சூழலும் வலிமையும் இல்லாதபோது சிங்கத்தின் தந்திரத்தை கையாளுவதுதான் புத்திசாலித்தனம்.அதைவிடுத்துக் காங்கிரசை மட்டும் வீழ்த்துவோம் என்பதும் அல்லது தேர்தலைப் புறக்கணிப்போம் என்பதும். 49 ஓவுக்கு ஓட்டுப்போடுவோம் என்பதும் விழலுக்கு இறைத்த நீராகிவிடும். தோழர் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியுடன் எனக்கு கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் திமுக -காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்துவேன் என்று அவர் அறிவித்ததிருப்பது மக்களின் மனநிலையை அறிந்து எடுத்த முதிர்ந்த முடிவாகும்,

தேர்தல் என்றால் மூன்று வழிகள்தான் உள்ளன, ஒன்று தேர்தலில் பங்கேற்பது இரண்டு தேர்தலைப் புறக்கணிப்பது. மூன்று தேர்தலில் ஒரு அணியை ஆதரித்து அல்லது எதிர்த்துப் பரப்புரை செய்வது, சுருக்கமாகச் சொன்னால் பங்கேற்பா?புறக்கணிப்பா?பரப்புரையா? என்பதுதான்.இந்தத் தேர்தலில் தமிழ்த்தேசிய சக்திகள் பங்குபெறக்கூடாது. காரணம் மக்களின் உணர்வுகளைப்புரிந்து கொள்ளாமல் தனித்து நின்று தனிமைப்படத் தேவையில்லை.கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர்களை மக்கள் மூன்றாவது அணியாக அங்கீகரிக்கத் தயாரானபோது அதன் தேர்தல் தலைவர்கள் மக்களுக்கு துரோகம் செய்துவிட்டு கழகங்களிடம் இணைந்து கொண்டனர், தற்போது மூன்றாவது அணிக்கான சூழல் இல்லை, தேர்தலைப் புறக்கணிப்பது என்பது இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை தேவையில்லாதது.இது பிரச்சினையைக்கண்டு ஒதுங்குவதாகும். இந்தத் தேர்தலில் பரப்புரை செய்வதும் அதன் மூலம் துரோகிகளை மக்களுக்கு தோலுரித்துக்காட்டுவதுதான் சிறந்ததாகும்,வழக்கம்போல் இந்தத் தேர்தல் ஆட்சிமாற்றத்திற்கு மட்டும் வழிவகுக்கப்போவதில்லை மாறாக ஆதிக்க சக்திகளுக்கு தமிழினத்தின் நிரந்தரத் துரோகிகளுக்கு சாவு மணி அடிக்கும் தேர்தலாகும். அதோடு இந்தத் தேர்தலில் மக்கள் இன்னொரு தீர்ப்பையும் வழங்கியிருக்கிறார்கள்.

அது, ஓரு கட்சி இட்சி இனி இல்லை என்பதுதான்.எனவே மக்கள் உணர்வை மதித்து அவர்களோடு இணைந்து திமுக. காங்கிரஸ் தலைமையினான தமிழினத் துரோகிகளை வீழ்த்துவோம்.

இனி எப்போதும் எழுந்திருக்க முடியாதளவிற்கு வீழ்த்துவோம். இந்த வீழ்ச்சி எதிரிக்கும் ஒரு பாடமாக அமையட்டும். பிறகு எதிரியையும் வீழ்த்துவோம்.

தமிழ்த் தேசத்தை கட்டி ஏழுப்புவோம்,


கா.தமிழ்வேங்கை

முடிந்தவரை கலந்து கொள்ளுங்கள். இயன்றவரை அடுத்தவர்களுக்கு இந்த தகவலை கொண்டு சேருங்கள்.

Saturday, February 5, 2011

ஒவ்வொருவரும் கையெழுத்திட்டப்பின் உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அனுப்புங்கள். ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் ஐந்து கையொப்பம் பெற்றுதாருங்கள். சங்

உறங்கியது போதும் துள்ளி எழு தமிழா!
உண்மையில் நீ யார் என்றுணர் தமிழா!
பழம் பெருமை எங்களதை பக்கம் வை தமிழா!
இனி என்ன சாத்தியங்கள் என்பதையெண் தமிழா!

சரித்திரம் படைப்பதற்கு வழிகள் வகு தமிழா!
சாதித்து நீ வாழ உறுதி கொள் தமிழா!
உன்னதனாய் வாழ்ந்திடவே உரமிடு தமிழா!
உன் உரிமை உன் பெருமை உலகறியும் தமிழா!

சொல்லிலும் எழுத்திலும் கருத்துண‌ரு தமிழா!
ஈழத்தோர் என்பதுவே நம் மரபு தமிழா!
ஈழம் எனும் சொல் அதனை மையமிடு தமிழா!
பிரிவினைப் புகையதனை அணைத்து விடு தமிழா!

நம் நாடு நம் மக்கள் என்று சொல் தமிழா!
கரம் இணைத்து தடை கடந்து வெற்றி கொள் தமிழா!
நாம் எல்லாம் ஈழத்தோர் என்று உரை தமிழா!
நமது மொழி ஈழத்தமிழ் என்று கூறு தமிழா!

என் சாதி நான் மலை மட்டக்களப்பென்றும்
நான் யாழ் நான் வன்னி வல்வெட்டித்துறை என்றும்
உனக்குள்ள வேறுபாட்டை எரித்துவிடு தமிழா!
எறியாத சிலர் அவரை அகற்றிவிடு தமிழா!

ஒரு கருவில் உருவான பூக்கள் நாம் தமிழா!
என்பதனை உலகிற்கு அறியவை தமிழா!
மலரும் ஈழத்தில் மணந்திடுவோம் தமிழா!
என்றுனது மனதினில் நீ உறுதி கொள் தமிழா!

கசப்புத் தரும் எழுத்து வார்த்தை தவிர்த்துவிடு தமிழா!
மற்றவர் உணர்வதையும் கருத்தில் வை தமிழா!
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு மந்திரம் கொள் தமிழா!


http://www.change.org/petitions/view/boycott_of_sri_lanka_cricket_2011

http://www.change.org/petitions/stop-the-genocide-and-free-the-tamils-from-internment-camps-idps-in-sri-lanka

ஒவ்வொருவரும் கையெழுத்திட்டப்பின் உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அனுப்புங்கள். ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் ஐந்து கையொப்பம் பெற்றுதாருங்கள். சங்கலி தொடர்போல் செயல்பட உதவுங்கள்.

http://www.facebook.com/album.php?aid=40437&id=100000923366128&fbid=183368621703915

Thursday, February 3, 2011

சிங்கள இனவெறியர்களின் ‘ஒப்பறேஷன் கடல் சிங்கம்’!



கொழும்பிற்கு அண்மையிலுள்ள இரகசிய முகாமிலிருந்து வந்த அந்தத் தொலைபேசி அழைப்பு பெரும் அதிர்ச்சி அலைகளை என்னுள் உருவாக்கியது. தொலைபேசியில் அழைத்தவர் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒரு தமிழ் இளைஞன்.

‘அண்ணா, உங்கள் தொடர்பு மட்டும்தான் கிடைத்தது. இந்தத் தகவலை எப்படியாவது வெளிப்படுத்திவிடுங்கள். இல்லாவிட்டால், எங்களது இனத்தின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும்’ என்ற அவரது குரலில் பதற்றமும், படபடப்பும் அதிகம் காணப்பட்டது.

அவர் தெரிவித்த தகவல் இதுதான்:

சிறிலங்கா கடற்படையின் தமிழக மீனவர்கள் மீதான தொடர் தாக்குதல், படுபொலைகள் காரணமாகத் தமிழகம் கொதி நிலையை அடைந்துள்ளது. இதன் காரணமாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, வெளியுறவுச் செயலர் நிருபாமா ராவ் அவர்களை கொழும்பிற்கு அனுப்பி நிலமையைப் புரிய வைத்துள்ளது.

தமிழகத்திற்கான சட்ட சபைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், நடைபெற்று வரும் சம்பவங்கள் தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணியின் வெற்றி வாய்ப்பைக் கேள்விக்குறியாக்கும் என்பதே மத்திய அரசின் அவசரமான கண்டனங்களுக்கும், நிருபாமா ராவ்வின் கொழும்பு விஜயத்திற்கும் காரணமாக அமைந்தது. சிறிலங்கா அரசும் தமிழகத்தில் தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி மீண்டும் ஆட்சி அதிகாரத்தில் அமர்வதையே விரும்புகின்றது. இதனால், சிறிலங்கா அரசு மிகப் பெரிய சதி நடவடிக்கை ஒன்றை அரங்கேற்ற முடிவு செய்து, அதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டு வருகின்றது.

‘ஒப்பறேஷன் கடல் சிங்கம்’ என்ற குறியீட்டுப் பெயருடன் சரணடைந்து தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டு தீவிர பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றது. அதன்படி, ஆயுதங்கள் சகிதம் கடற்படை உடுப்புக்களில் சிறிலங்காவின் கடற்படை வழங்கும் படகில் அவர்கள் தமிழக மீனவர்கள் நடமாடும் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அவர்கள் மீது தாக்குதல் நடாத்தப்படும். அந்த வேளையில் அங்கு பிரசன்னமாகும் சிறிலங்கா கடற்படை அவர்கள்மீது தாக்குதல் தொடுக்கும்.

அதில், அவர்களுக்கு உயிர் ஆபத்து நிகழாது என்ற உறுதிமொழியும் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் வைத்துக் கைது செய்யப்படும் இவர்கள் மீண்டும் சிறீலங்காவுக்கு அழைத்து வரப்பட்டு, இதுவரை இவர்களே தமிழக மீனவர்கள்மீது தாக்குதல் நடாத்தியவர்கள் என்ற விதத்தில் விசாரணை நடாத்தப்பட்டு, இந்தியாவுக்கும் தகவல்கள் வழங்கப்படும். இதுவே, ‘ஒப்பறேஷன் கடல் சிங்கம்’ நடவடிக்கையின் நோக்கமாகும்’ என்று அவர் தெரிவித்ததுடன் அவரது இணைப்பும் துண்டிpக்கப்பட்டது.

அவராக இணைப்பைத் துண்டித்துக் கொண்டாரா? அல்லது, இந்தத் தகவலை வழங்கிய போது படைத் தரப்பிடம் சிக்கிக் கொண்டாரா? என்பது தெரியவில்லை.

தமிழக மீனவர்கள்மீது தமது கடற்படையினர் தாக்குதல் எதுவும் நடாத்தவே இல்லை என்று நிராகரித்த சிங்கள அரசு, மூன்றாவது சக்தி ஒன்று இந்தத் தாக்குதல்களை நடாத்தி இருக்கலாம் என்று தெரிவித்திருந்தது, இந்தச் செய்தியின் நம்பகத் தன்மையை ஒருவேளை உறுதி செய்வதாகவும் இருக்கலாம். 2009 மே மாதம் முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற தமிழின அழிப்பிற்கான அத்தனை உதவிகளையும் வழங்கிய இந்திய அரசு, மேற்குலகின் இறுதி நேர மீட்பு முயற்சியையும் தடுத்து நிறுத்தியது.

அதே வேளை, தமிழகத்து மக்கள் பொங்கி எழுந்து கிளர்ச்சியில் இறங்காதவாறு தமிழக முதல்வரும் தன் பங்கிற்கு சிங்கள அரசுக்கு உதவி புரிந்துள்ளார். அண்மைக் காலமாக சிங்கள அதிபர் மகிந்த ராஜபக்ஷவும், தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நட்பை வளர்த்துக்கொண்டுள்ளார்கள்.

இந்த நிலையில், தமிழக மக்களின் அதிருப்தி காரணமாக அ.தி.மு.க. கூட்டணி ஆட்சிக்கு வருமானால், அதில் அங்கம் வகிக்கும் தமிழீழ அபிமானிகளால் தாம் நெருக்கடிக்குள்ளாக வேண்டிய நிலமை ஏற்படும் என்பதை சிறிலங்கா அரசு உணராமல் இல்லை. எனவே, தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி மீண்டும் ஆட்சிக்குக் வருவதையே சிறிலங்கா அரசு விரும்பும் என்பதால், இந்தத் தகவலைப் புறக்கணிக்க முடியாது.

அத்துடன், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான தமிழகத்தின் தமிழின உணர்வாளாகளின் சிறிலங்காவுக்கு எதிரான நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்தலாம். விடுதலைப் புலிகள் மீதான வெறுப்பை தமிழக மக்கள் மனங்களில் விதைக்கலாம் என்பதே இந்த ‘ஒப்பறேஷன் கடல் சிங்கம்’ நடவடிக்கைக்கான அவசியமாக உள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை.

இந்தத் தகவலை, உலக நாடுகளில் வாழும் தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் அவசரமாகத் தெரிந்தவர்கள் அனைவருக்கும் பரிமாற்றம் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளுகின்றோம்.
http://www.nerudal.com/nerudal.25309.html

Tuesday, February 1, 2011

அழியும் சிறுதொழிலும் உயரும், விலைவாசியும்



‘’தக்காளி ஒரு கிலோ....கத்திரிக்காய் கால்கிலோ....... காலிபிளவர் ஒண்ணு....... முட்டைக்கோஸ் கால்கிலோ........ பல்லாரி நூறு கிராம்....... அப்புறம்.... வேற என்ன வேணும்?”

“அவ்வளவுதான். பில் எவ்வளவுப்பா?”

” 500 ரூபாய் கொடும்மா”

”என்னாது....? ஐநூறா...?”

“இன்னக்கித்தான் இந்த வெல நாளை எழுநூறாகும்“

மேற்கண்ட உடையாடல் கதைக்கான கற்பனையல்ல.... நமது தேசத்தின் காய்கறிக்கடைகளில் எல்லா மொழிகளிலும் ‘கதை‘க்கப்படுவதன் தமிழாக்கமே.

வட மாநிலத்தில் ஒரு டயர் கம்பெனிக்காரன் டயர் வாங்கினால் பல்லாரி வெங்காயம் இலவசம் என்று எழுதியிருக்கிறானாம்.... லாரி டயர் வாங்கினால் ஐந்து கிலோ... கார் டயர் வாங்கினால் ரெண்டு கிலோ..... என்று விளம்கரம் செய்யும் அளவுக்கு விலை உயர்ந்து வரலாறு படைத்துள்ளது.

மதுரை மாநகரின் நாளங்காடியில் கொட்டிவைக்கப்பட்டுள்ள காய்கறிகளைத் தொட்டுப் பார்த்துவிட்டு நகரும் மக்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

மதுரை மாநகரின் நாளங்காடியின் ஜீவாதாரமே தேவாரம், கம்பம், தேனியை சுற்றி உள்ள கிராமங்களில் இருந்தும், வத்தலக்குண்டு, கொடைக்கானல், பகுதிகளில் இருந்தும் வரும் காய்கறிகள்தான். காய்கறிகளின் வரத்து மூன்றில் ஒரு பங்காகக் குறைந்து விட்டதால் காய்கறிகளின் விலையும் மூன்று மடங்கு உயர்ந்து விலை உச்சத்திற்கு சென்றுள்ளது.

காய்கறிகளின் விலை (கிலோவில்): சென்ற மாதம் 10 ரூபாய்க்கு விற்ற தக்காளி தற்பாது 40 ரூபாயை நெருங்கியுள்ளது. வெங்காயத்தின் விலையும் 20 ரூபாயில் இருந்து 50 ரூபாயாக உயர்ந்துள்ளது. 8 ரூபாயாக இருந்த அவரைக்காய் 24 ரூபாயாகவும், 10 ரூபாயாக இருந்த புடலங்காய் 30 ரூபாயாகவும், 12 ரூபாயாக இருந்த முருங்கை பீன்ஸ் 28 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. ஐந்து ரூபாய்க்கு விற்ற தேங்காய் இன்று 15 ரூபாயாக உள்ளது. தற்போதைய நிலையில் கிலோ 30 ரூபாய்க்கும் குறைவாக காய்கறியே இல்லை என்ற நிலை உருவாகி உள்ளது.(ஆதாரம் தினமலர் 23-12-2010 நாளிதழ்)

மதுரை மட்டுமல்ல கொங்கு மண்டலத்தின் ஆகப்பிரதான காய்கறி மார்க்கெட்டான ஒட்டன் சத்திரத்திலும் இதே நிலைதான். சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு ஆந்திராவின் காய்கறிகளின் வரத்தும் குறைந்ததால் அங்கும் விலைவாசி உயர்ந்துள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன் ஐந்து நபர்கள் கொண்ட குடும்பத்திற்கு நூற்றி ஐம்பது ரூபாய்க்கு காய்கறிகள் வாங்கி ஒரு வாரம் பயன்படுத்தினார்கள். இப்போது அதே அளவு காய்கறிகள் வாங்க அறுநூறு ரூபாய் செலவாகிறது. நீண்ட மழை பெய்து முடித்த பிறகு, வேலைவாய்ப்பு கிடைக்காத அன்னாடங்காய்ச்சிகளால் இதை சமாளிக்க முடியவில்லை. ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்கி, நூறு ரூபாய் செலவழித்து குழம்பு வைக்க வேண்டி நிலை உள்ளதால் குடும்பத்தலைவிகள் குழம்பிப் போய் உள்ளனர். (பாவம் மக்கள் எவ்வளவுதான் தாங்குவார்கள்) எவ்வளவுதான் சிக்கனமாக இருந்தாலும் மாதக்க டைசியில் பட்ஜெட்டில் துண்டல்ல... வேட்டியெ விழுகிறது. இதன்பொருட்டே பல குடும்பங்களில் சண்டைகள் வருகிறது.

நாடு முழுவதும் சமையல் காய்கறிகளின் விலையேற்றத்தால் மக்கள் தடுமாறிக் கொண்டிருக்கிற சூழ்நிலையில்தான் நம் இளவரசர் மதுரையில் செட்டிநாடு உணவு வகைகளை ருசித்துச் சாப்பிட்ட செய்தியையும் படிக்க நேர்ந்தது.

நவம்பருக்கும் டிசம்பருக்கும் இடையில் மூன்று மடங்கு விலையேறியதால் அடித்தட்டு மக்கள் மட்டுமல்ல.... ஐ.டி. நிறுவனங்களின் பணிபுரிபவர்கள் கூட அரண்டு போயிருக்கிறார்கள். (அ(லைக்கற்றை ஒதுக்கீடு). ராசாவுக்கு வழக்கு பயம். அவரைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு வாழ்க்கையே பயம்.)

ஆனால் இப்படி உயர்த்தப்படும் விலைவாசியால் காய்கறி உற்பத்தியாளர்களாக விவசாயிகளின் பொருளாதாரம் உயருமா..? இந்த விலை ஏற்றத்தால் அவர்களின் வாழ்க்கை ஏற்றம் பெற்றிருக்குமா..? பருவகாலங்களொடு போராடிப்போராடியே வெளிரிப்போன முகங்களோடிருக்கும் அவர்கள் மகிழ்ச்சியடைவார்களா...? மேற்கண்ட வினாக்களுக்கெல்லாம் ஒரே விடை இல்லை. என்பதே.

சென்னை, மதுரை போன்ற பெருநகர நாளங்காடிகளில் கொட்டிவைக்கப்பட்டு அடுத்த சில நிமிடங்களில் இதை விட நான்கு மடங்கு விலைக்கு விற்கப்படும் ரகசியம் வெங்காயங்களுக்கும் தெரியாது... தக்காளிகளுக்கும் தெரியாது...... அவைகள் அடைக்கப்பட்ட கோணிப்பைகளுக்கும் தெரியாது... விவசாயிகளுக்கும் தெரியாது. விவசாயிகள் பொறுமுகிறார்கள். அவர்களின் வெங்காயத்திற்கு கிலோவுக்கு பத்துரூபாய் கூட கிடைக்கவில்லை. ஆனால் கிலோ அறுபதுக்கும் எழுபதிற்கும் நுகர்வோரிடம் விற்கப்படுகிறேதே....... இது என்ன விசித்திரமான முரண்பாடு?

இன்றைய நுகர்வு வாழ்வில் உற்பத்தி செய்யப்படும் எந்தப் பொருளுக்கும் விலை நிர்ணயம் செய்து விற்பவர் உற்பத்தியாளர்தான். ஆனால் வேளாண் விளைபொருள் விற்பனைக்கு மட்டும் விலை நிர்ணயம் செய்பவர் உற்பத்தியாளராகிய விவசாயிகளல்ல... இடைத்தரகர்கள்தான். விவசாயிகளுக்கும் நுகர்வோருக்குமிடையில் காலாட்டிக்கொண்டே தரகர்கள் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். காய்கறி மார்க்கெட்டுகளில் காய்கறிகளைக் குவித்து வைத்துவிட்டு ஒரு டீ குடித்து வருவதற்குள் பேரம் முடிந்து விடுகிறது. வாங்கிய பொருளை விற்பதற்கான மார்ஜின் வரைமுறை இல்லாமலிருப்பதால் விலைவாசி விண்ணைத் முட்டுகிறது. சாமானியருக்கு கவலை கண்ணைக் கடடுகிறது.

”1928 ஆம் ஆண்டில் வெள்ளையர் அரசு அமைத்த ராயல் கமிஷன் அளித்த அறிக்கையின்படி நடைமுறைப் படுத்தப்பட்ட ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் 1959 திருத்தியமைக்கப்பட்டு, பின்பு 1987ல் மீண்டும் திருத்தி(எத்தனை திருத்தி..?)யமைக்கப்பட்டு. தமிழகத்தில் விளையும் சுமார் 40 விழுக்காடு விளைபொருட்கள் இந்த விற்பனைச் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு 21 விற்பனைக் குழுக்களும், 277 விற்பனைக் கூடங்களும் அமைக்கப்பட்டுள்ளன.” (யோவ் என்ன செஞ்சு என்னய்யா புண்ணியம்... வெலைவாசிய கட்டுக்குள்ள வைக்கமுடியலையே...) விற்பனைக் கூடங்கள் வெறும் அலுவலகங்களை வைத்துக் கொண்டு விற்பனை கட்டணம் வசூலித்து, அனுமதிச்சீட்டு கொடுக்கும் வேலையை மட்டும் செய்து வருவதால் தரகர்கள் கண்டபடி விலை வைக்கத்தொடங்கியதன் விளைவே இந்த விலையேற்றம்..

மக்கள் தொகை 3 சதவீதம் என்ற அளவில் உயர்கிறபோது உணவு தானிய உற்பத்தி 1.6 சதவீதம் தான் உயர்கிறது. காரணம் என்ன? உணவு தானியங்களை விடுத்து பணப்பயிர்களை நோக்கிய நகர்வு விவசாயத்தில் உள்ளது. லேஸ், குர்குரே போன்ற சிப்ஸ்களை தயாரிக்க வடமாநில உருளைக்கிழங்கு விளைச்சலை பெப்சி வளைத்துப் போட்டிருக்கிறது. பெப்சியின் வருமானத்தில் 50 சதவீதம் உருளைக் கிழங்குகள் மூலமாகவே கிடைக்கிறது. உணவுப் பயிர் உற்பத்தியை ஊக்கப்படுத்த நமது ஆட்சியாளர்கள் தவறியதால் விலை உயர்வு அலைக்கற்றை ஒதுக்கீட்டின் முறைகேடுகளையும் தாண்டி விண்ணோக்கிப் பாய்கிறது.

தமிழக அரசின் 11ஆவது ஐந்தாண்டு திட்டத்திற்கான அணுகுமுறை அறிக்கையில் விவசாய நிலங்களின் அளவு 37.05 விழுக்காடாக குறைந்து விட்டது என்ற அபாயகரமான செய்தி வெளியிடப்பட்டுள்ளது. 1993- 94ல் 25 விழுக்காடாக இருந்த வேளாண் உற்பத்தி, 2005- 06ல் 13.03 விழுக்காடாக சரிந்துள்ளது. அதேபோல் 2001- 02 ல் 76.89 இலட்சம் டன்னாக இருந்த உணவு தானிய உற்பத்தி, 2004- 05ல் 61.40 இலட்சம் டன்னாக குறைந்துள்ளது. (நெலத்துல வெவசாயம் செஞ்சா அதை எப்பிடி செறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு குடுக்குறது....? அவங்களுக்கு குடுத்த வாக்குறுதியவாவது காப்பாத்த வேணாமா...?) சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் விவசாயிகளை மட்டும் விரட்டாமல் இலட்சோப லட்சம் சிறிய வியாபாரிகளையும் கோடிக்கணக்கான ஊழியர்களையும் துரத்துகின்றது.

பால்க்காரர், தயிர்கார அம்மா, கீரைக்கார பாட்டி, பச்சரிக்காரத்தெரு, நெய்க்காரன்பட்டி என தொழிலையே தங்களின் விணைப் பெயராக்கிக் கொண்டவர்கள் தமது முன்னோர்கள்.

“காவிரிப் பூம்பட்டினத்தில் பட்டினபாக்கம், மருவூர்பாக்கம் என்று இரு பிரிவுகள் இருந்தன. வணிகர்கள் வசித்து வந்த அவ்விடத்தே சுங்கச்சாலையும் கலங்கரை விளக்கமும் இருந்தன. அங்கே கடல் வழியே வந்த குதிரைகளும், நிலத்தின் வழியே வந்த மிளகுப்பொதிகளும், இமயத்திலுண்டான மணிகளும் பொன்னும், குடகுமலையில் பிறந்த சந்தனமும் அகிலும், காவிரியில் உண்டான வளங்களும், ஈழநாட்டிலிருந்து வந்த உணவுப்பொருள்களும், பிற அரிய பொருள்களும் கூடி வளம் மிகுந்த பரந்த இடத்தையுடைய தெருக்கள் இருந்தன. இப்பண்டங்களில் சிலவான, தக்கோலம், தீம்பு இலவங்கம், கற்பூரம், சாதி முதலிய மணப்பொருள்களை விற்பவர்கள் வாசவர் எனப்பட்டனர். வெற்றிலை கட்டி விற்கும் தொழிலையும், கயிறு திரித்து விற்கும் தொழிலைச் செய்தவரும் பாசவர் எனப்பட்டனர்......“ என்று நீண்டு செல்லும் சிலப்பதிகாரத்தின் பதிவுகள் யாவுமே நமது அடுத்த தலைமுறைக்கு வெறும் கற்பனைகள் என்ற எண்ணத்தைப் போதிப்பவையாகிக் கொண்டிருக்கின்றன.

திண்டுக்கல் பூட்டு, திண்டுக்கல் சுருட்டுத், கும்பகோணம் பாத்திரத்தொழில், காஞ்சிவரம் நெசவுத் தொழில் உடன்குடி பனைத்தொழில்,சில்லுகருப்பட்டி, பவானி ஜமுக்காளம், மதுரை சுங்கடி, கூறைப்புடவை, ஊத்துக்குளி வெண்ணை, மணப்பாடு மீன்பிடித் தொழில், பெரியதாழை கருவாடு என நடுத்தர மக்களும், அடித்தட்டு மக்களும் தங்களின் உயிரோடும் உடலோடும் கலந்து வளர்த்து வந்த தொழில்கள் அனைத்தும் கத்தியின்றி கத்தலின்றி சத்தமில்லாமல் வழக்கழிக்கப்படுகிறது.

கும்பகோணம் வெற்றிலை சீவல், கோவில்பட்டி கடலை மிட்டாய், நெல்லை அல்வா, கடம்பூர் போளி, உடன்குடி சில்லுக்கருப்பட்டி, மணப்பாறை முறுக்கு, திருவில்லிபுத்தூர் பால்கோவா, கல்லிடைக்குறிச்சி அப்பளம், தூத்துக்குடி மக்ரோன், சாத்தூர் சேவு, திண்டுக்கல் மலைப்பழம், மதுரை மல்லிகை, மதுரை இட்லி, மாப்பிள்ளை விநாயகர்கோடா, அய்யனார் கலர்கம்பெனி, ஆம்பூர் பிரியாணி, செட்டிநாட்டுச் சமையல் என ஊரின் பெயரிலேயே வாசனையும், சுவையும் கலந்திருந்த நமது உணவுத் தொழில்களும் பெரு வியாபாரிகளின் வாழ்வாதாரங்களாகி விட்டதால் சிறு குறு வியாபாரிகளின் ஜீவாதாரம் கேள்விக்குறியாகிவிட்டன. குடிசைத் தொழில்கள், வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள மக்கள் ஈடுபடுகின்ற தொழில்கள் யாவும் நசுக்கப்படுகின்றன.

பெருவணிக வளாகங்களில் விற்பனைப் பெண்களாய் இருப்பவர்களின் பூர்வீகம் கேட்டுப்பாருங்கள்..... இவர்களின் பாட்டனார் பாரம்பரியத் தொழிலின் நிபுனத்துவமானவராய் இருந்திருப்பார்.

உற்பத்தியாளர்களாய் இருந்த ஒரு சமூகத்தை நுகர்வோராக மாற்றியதால்தான் விலையேற்றம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. “ஒரு கிராமத்திற்குத் தேவையானவற்றை அந்த கிராமே உற்பத்தி செய்ய முயற்சிக்க வேண்டும்“ என்றார் ஜே.சி. குமரப்பா. ஆனால் நடைமுறையில் எல்லாமே தலைகீழாய் உள்ளது. கடந்த இருபதாண்டு காலத்தில் நம்முடைய ஆட்சியாளர்களின் உற்பத்தி தொடர்பான தவறாக கொள்கைகளால்தான் விலையேற்றங்கள் நிகழ்கின்றன என்று பொருளாதாரம் படித்தவர்கள் சொல்கிறார்கள். இது கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய விசயம். உயர்ந்து நிற்கும் விலைவாசியை தேர்தலுக்குள்ளாவது குறைப்பார்களா..... இல்லையெனில் வெங்காயத்திற்கான விலையாய் ஆட்சி அதிகாரங்களைக் கொடுப்பார்களா.....?

(சூரியக்கதிர்15-01-2011 இதழில் வெளியான கட்டுரை)