Saturday, February 19, 2011

தேசத்தின் அன்னை பார்வதியம்மாள் மரணித்தார் : கண்ணீரில் தமிழர்கள்

தேசத்தின் அன்னை பார்வதி அம்மாள் இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார் எய்தினார். கடந்த பல ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு, இலங்கை இராணுவத்தின் சிறையில் சிக்கித் தவித்து நோய்வாய்பாட்டு இருந்த தமிழீழ தேசிய தலைவரின் தாயார் பார்வதி அம்மாள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 6.30 மணியளவில் இறையடி எய்தியுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. வன்னிப் போரின் பின்னர் நலன்புரி முகாம் ஒன்றில் வைத்து இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு கொழும்பு தடுப்பு முகாம் ஒன்றில் தடுத்துவைக்கப்பட்டிருந்த பார்வதி அம்மையார் கடும் நோய்த் தாக்கத்திற்கு உட்பட்டிருந்தார்.

தடுப்புக்காவலில் இருந்த கணவர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் 06-01-2010 அன்று உயிரிழந்ததை அடுத்து அவரது உடலம் யாழ்ப்பாணத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டபோது பார்வதி அம்மையாரையும் இலங்கை அரசு விடுதலை செய்திருந்தது. சிகிச்சைக்காக மலேசியா சென்றிருந்த அவர் அங்கிருந்து இந்தியா செல்வதற்கான அனுமதியினை இந்திய அரசு வழங்காது இழுத்தடித்ததை அடுத்து மீண்டும் தாயகம் திரும்பியிருந்தார்.

சிகிச்சைக்காக யாழ்.வடமராட்சி மந்திகை மருத்துவமனை, யாழ்.போதனா வைத்தியசாலை என்பவற்றில் அனுமதிக்கப்பட்டு இறுதியாக வல்வெட்டித்துறை மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த சில மாதமாக சுயநினைவினை இழந்திருந்த அவர் இன்று காலை 06 மணியளவில் காலமானதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வைத்தியசாலையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் உள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நன்றி : செய்தி.காம்

2 comments:

வித்யாசாகரின் எழுத்துப் பயணம் said...

உடனிருந்து காத்திடாத மண்ணிற்கான பாவத்தை; இத்தாயின் காலடிகளில் கண்ணீர் விட்டேனும் துடைப்போம்..

வித்யாசாகர்

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

ANNAIyin AATHAMA shanthi adaiya IRAIVANIDAM vaendukiraen....