Saturday, December 17, 2011

மலையாளிகளுக்கு பதிலடி கொடுக்க உலகத் தமிழினம் பொங்கி எழும் : கனடா வாழ் 3 லட்சம் தமிழர்கள்

முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையில் தமிழகத்திற்கு ஆதரவாக, கனடா வாழ் 3 லட்சம் தமிழர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். கனடா வாழ் தமிழர்கள் சார்பாக கனடாவின் தமிழ் படைப்பாளிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’தமிழர்களுக்கு யார் இன்னல் விளைத்தாலும் உலகத் தமிழினம் பொங்கி எழும்! ஏழு கோடி தமிழர்கள் தமிழ்நாட்டில் வாழ்கிறார்கள். அண்டை மாநிலங்களில் வாழும் தமிழர்களையும்புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களையும் கூட்டிப் பார்த்தால் உலகில் 8 கோடி தமிழர்கள் வாழ்கிறார்கள். தமிழனுக்கு ஒரு இறைமையுள்ள நாடு இல்லாத காரணத்தால்தான் தமிழன் உதைபடுகிறான், வதைபடுகிறான். தமிழன் என்றால் ஏதிலி என்று உலகம் நினைக்கிறது. இந்தியத் திருநாட்டில் தமிழன் கன்னடம், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் இருந்து அடித்து உதைத்து விரட்டப்படுகிறான். இப்போது தமிழர்களை உதைத்து வெளியேற்றுவதில் பக்கத்தில் உள்ள கேரளாவும் சேர்ந்து விட்டது. முல்லைப் பெரியாறு அணை பலமாக இல்லை என்றும் அது எந்த நேரத்திலும் உடையலாம் என்றும் அதனால் அதனை இடித்துவிட்டு வேறு அணை கட்டப்போவதாக கேரளாக்காரன் சொல்கிறான். முல்லைப்பெரியார் அணையின் நீர் மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாகவும் எஞ்சிய பலப்படுத்தும் பணிகளை முடித்த பின் 152 அடியாகவும் உயர்த்திக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளது. அந்த ஆணையை இந்திய நாட்டின் அரசமைப்புச் சட்டத்தை முற்றிலும் அவமதிக்கும் வகையில் கேரள அரசு பாசன மற்றும் நீர்ப் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து அந்தத் தீர்ப்பை செல்லாக்காசு ஆக்கிவிட்டது! இன்றைய கேரளா பழைய சேர நாடாகும். சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோ அடிகள் சேரநாட்டவர். எட்டுத் தொகை நூல்களில் ஒன்றான பதிற்றுப்பத்து சேர மன்னர்களின் வீரம், படைத்திறன், ஆட்சி முறை, கொடை, சமுதாயம், பண்பாடு, மன்னர்களின் பண்பு நலன்கள், அக்கால மக்களின் வாழ்க்கை முறையினை எடுத்துரைக்கிறது. இடைக் காலத்தில் வடநாட்டு நம்பூதிரிப் பார்ப்பனர்களின் குடியேற்றத்தால் மொழிக்கலப்பு ஏற்பட்டு சேரநாட்டுத் தமிழ் மலையாளம் எனத் திரிந்து புது மொழியாயிற்று. அந்த மொழிக்கு வடமொழி இலக்கணத்தைப் பின்பற்றி இலக்கணம் எழுதப்பட்டது. முல்லைப்பெரியார் அணை உடைக்கப்பட்டால் தமிழகத்தின் தென்மாவட்டங்கள் மக்கள் வாழ முடியாத பாலைவனமாக மாறிவிடும். இதில் தலையிட்டு நீதி செய்ய வேண்டிய மத்திய அரசு பாராமுகமாக இருக்கிறது. இதனை நாம் பலமாகக் கண்டிக்கிறோம். கேரளாவுக்கு வேண்டிய உணவு தமிழ்நாட்டில் இருந்துதான் போகிறது. மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது முற்றிலும் தமிழர்கள் வாழும் பீர்மேடு, தேவிகுளம், இடுக்கி மாவட்டங்கள் கேராளாவோடு இணைக்கப்பட்டன. இந்திய தேசிய மாயையில் இருந்த காமராசர், மேடாவது குளமாவது எல்லாம் இந்தியாவில் இருக்கின்றன என்று வேதாந்தம் பேசியதால் தமிழர்கள் இந்த மாவட்டங்களை இழந்தார்கள். தமிழ்நாடு சட்ட சபையில் முல்லைப் பெரியாறை இடிக்கக் கூடாது, புதிய அணையை கேரளா கட்டக் கூடாது உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் அணையின் உயரம் 136 இல் இருந்து 142 ஆக உயர்த்தப் பட வேண்டும் எனக் கேட்கும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியுள்ளது. இப்போது முல்லைப் பெரியார் அணையை அண்டியுள்ள மக்கள் அரசியல் கட்சிகளை முந்திக் கொண்டு போராட்டத்தில் குதித்துள்ளார்கள். ஆனால் கேரளாவைப் போலல்லாது தமிழக அரசின் காவல்துறை போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தியுள்ளது. மலையாளிகளுக்குச் சொந்தமான கடைகளைத் தாக்கினார்கள் என்ற குற்ச்சாட்டில் நூற்றுக்கணக்கானவர்கள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களை தமிழக அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும். கேரளவில் உள்ள இடுக்கி, தேவிகுளம், பீர்மேடு ஆகிய பகுதிகளை தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என மாநில அரசு மத்திய அசை வற்புறுத்த வேண்டும். தேவை ஏற்படின் ஒரு நேரடி வாக்கெடுப்பின் மூலம் மக்களது விருப்பத்தை அறிய வேண்டும். கேரளாவிலும் தமிழகத்திலும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்ளுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும். உடைமைகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு கொடுக்க வேண்டும். தமிழக அரசு தமிழர்களின் நலனின் அக்கறை கொண்டு தமிழர் சார்பாகச் செயல் படவேண்டும். கேரளா அரசு மலையாளிகளுக்கு ஆதரவாக இருப்பது போல் தமிழக அரசும் தமிழர்களுக்கு ஆதரவாக செயல் படவேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம். தமிழர்களுக்கு யார் இன்னல் விளைத்தாலும் அவர்களுக்கு பதிலடி கொடுக்க உலகத் தமிழினம் பொங்கி எழும் என்பதை இந்த நேரத்தில் கனடாவில் வாழ்கின்ற மூன்று இலச்சம் தமிழர்கள் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பு: மேற்கண்ட அறிக்கை படைப்பாளிகள் கழகத்தின் தலைவர் திரு.வேலுப்பிள்ளை தங்கவேலு அவர்களால் வெளியிடப்பட்டது. இவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் திரு. வே.பிரபாகரன், தந்தை செல்வா ஆகியோருடன் அரசியல் வேலை திட்டத்தில் இணைந்திருந்தவர். இவர் 55 ஆண்டுகால பதிரிகையாளரும் தமிழீழத்தின் புகழ்பூத்த பிரபல அரசியல் இலக்கிய விமர்சகருமாவார்.

Friday, December 16, 2011

முல்லைப் பெரியாறும் அய்யப்ப பக்தர்களும்!

1. தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் தர மறுப்பதற்கு மறைமுகமான முயற்சியே, கேரள அரசின் . முல்லைப் பெரியாறு அணை உடையும் ஆபத்தில் உள்ளது என்ற ஆதாரமில்லாத பீதியைப் பரப்பும் கொடுமை. 2. உச்சநீதிமன்றத்தால் முன்பு நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவே அணை பலமாக உள்ளது, தமிழ்நாடு அரசு அணையின் உயரத்தை உயர்த்தலாம் என்பதைக் கூறிவிட்ட பிறகு அதனைத் தடுத்து, தமிழக விவசாய நீர்ப் பாசனத்திற்கு ஏற்படக்கூடிய வாய்ப்புகளைத் தடுக்கவே மற்றொரு குறுக்கு வழி, புதிய அணை கட்டுவோம் என்பது கேரள அரசின் குறுக்குச் சால் ஓட்டும் முயற்சி. 3. உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ்*.ஆனந்த் தலைமையில் ஆய்வுக்குழு அதன் விசாரணையை நடத்தி முடிவை அறிவிக்கும் முன்பே இதனைத் திசை திருப்பும் நாடகங்கள் கேரள அரசாலும், மற்ற கட்சிகளாலும் அரங்கேற்றப்படுகின்றன. எல்லோரும் அங்கே ஒன்றுதான் - தமிழ்நாடு போல் அல்ல! 4. இடுக்கி மற்றும் தமிழர் வாழும் பகுதிகளில் தமிழர்கள் தாக்கப்பட்டதை விடக் கொடுமை வேறு என்ன? 5. சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்களுக்கு அடி, உதை செம்மையாக கிடைத்து வருகிறது. (புலியை அடக்கியதாகக் கூறப்படும் அய்யப்பன் கேரள அரசினைக் கண்டு கிலியில் மவுனமாகிவிட்டான் போலும்!) அய்யப்ப பக்தர்களே இன்னுமா உங்களுக்குப் புத்தி வரவில்லை? ஏன் தமிழ்நாட்டு சாமிகளுக்கு என்ன பவர்கட்டா? சக்தி இல்லையா? முதலில் கேரளாவிற்கு சரக்கு அனுப்புவதைத் தடுக்கும் முன், அய்யப்பன் கோவிலுக்கும், பத்மநாப சாமி கோவிலுக்கும், குருவாயூர் கிருஷ்ணன் கோவி லுக்கும் போகும் தமிழ்நாட்டு பக்தர்களைத் தடுத்து நிறுத்தி - எல்லையிலே நின்று - திருப்பி அனுப்பி நம்மூர் சாமி உண்டியலில் போட்டு, அந்த இருமுடி, தேங்காய் மூடி, அரிசி எல்லாம் நம் தமிழ்நாட்டு மக்களுக்கு (அவன் சு(ர)ண்டல் பேர்வழியானாலும்) பயன்படட்டுமே! அய்யப்பா, அய்யப்பா தமிழனுக்கு தண்ணீர் தரவிடாத அய்யப்பா, உன் மகர ஜோதி பித்தலாட்டம் காண எங்கள் ஆள்கள் பலியானது போதாதா? அடியும் உதையும் இப்போதும் தேவையா?

Thursday, December 15, 2011

கேரளத்திற்கு எதிரான பொருளாதாரத் தடை விதிப்போம் : த.தே.பொ.க. சிறப்பு மாநாடு : தீர்மானங்கள்

கேரளத்திற்கு எதிரான பொருளாதாரத் தடை விதிப்போம் : த.தே.பொ.க. சிறப்பு மாநாடு : தீர்மானங்கள் தமிழர் உயிருக்கு உலை வைக்கும் கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு என்ற முழக்கத்தை முன்வைத்து மதுரையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சிறப்பு மாநாடு நடத்தியது. தீர்மானம் 1 இரஷ்ய நாட்டுக் கூட்டு முயற்சியில் கூடங்குளத்தில் நிறுவப்படும் அணுமின் நிலையம் எல்லா வகையிலும் ஆபத்தானது. தமிழ் மக்கள் உயிருக்கு உலை வைக்கக் கூடியது. எனவே இந்திய அரசு கூடங்குளம் அணுமின் நிலையத்தை உடனடியாக மூட வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது. அணு உலைகள் இயங்கும்போது இயல்பாக வெளிப்படும் கதிரியக்கத் தனிமங்கள் காற்றிலும் நீரிலும் தாவரங்களிலும் கலந்து தலைமுறை தலைமுறையாகக் கொடிய நோய்களை ஏற்படுத்தக் கூடியது. இரத்தப் புற்றுநோய், கருச்சிதைவு, பிறவி ஊனங்கள் உள்ளிட்ட கொடிய விளைவுகள் அணு உலை கதிரியக்கத்தால் விளையும் என்பதை மருத்துவ ஆய்வுகளும் செர்னோபில், ஹிரோசிமா, புகுசிமா அனுபவங்களும் எடுத்துக் காட்டுகின்றன. கூடங்குளத்தில் நிறுவப்படும் வி.வி.இ.ஆர்.1000 என்ற வகை அணு உலையானது அது இயங்கத் தொடங்கி இரண்டு ஆண்டுகளிலேயே சிக்கல்களைச் சந்திக்க நேரிடும் என்றும் அவ்வுலைகளில் 32 வகையான குறைபாடுகள் உள்ளன என்றும் இரஷ்ய அரசு நியமித்த ஆய்வுக் குழுவே 2011 சூன் மாதத்தில் அறிக்கை அளித்துள்ளது. கூடங்குளம் அணு உலை நிறுவப்பட்டுள்ள இடம் பல அகவை உள்ள பாறைப் படிவங்களின் சந்திப்பு இடம் என்றும், அப்பகுதியின் கீழ் எரிமலைப் பாறைகள் உள்ளன என்றும் நிலவியல் ஆய்வுகள் கூறுகின்றன. அடிக்கடி நெல்லை மாவட்டத்தில் குறிப்பாகக் கூடங்குளம் பகுதியில் தொடர்ந்து ஏற்படும் நில அதிர்வுகள் இதனை உறுதிப்படுத்துகின்றன. நில அதிர்வு ஏற்பட்டு அணு உலையில் சிறு கீறல் விழுந்தாலும் அதன் வழியாக வெளிப்படும் கதிரியக்கம் பேரழிவை உண்டாக்கும். பெருமளவில் கடல்நீர் வேகமாக உறிஞ்சப்படுவதாலும் மிகை வெப்பநீர் கடலுக்குள் மீண்டும் விடப்படுவதாலும் பெருமளவு கடல் உயிரிகள் வளம் குறிப்பாக மீன் வளம் பெருமளவு பாதிக்கப்படும் பல இலட்சம் மீனவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகி விடும்புனல் மின்சாரம், அனல் மின்சாரம், கதிரவன் மின்சாரம் போன்றவற்றை விட அணு மின்சாரம் கூடுதல் செலவு பிடிக்கக் கூடியது. எனவே எப்படிப் பார்த்தாலும் கூடங்குளம் அணு உலையை ஏற்கவே முடியாது. கூடங்குளம் அணு உலையை அத்திட்டத்தின் தொடக்கக் காலத்திலிருந்தே தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி எதிர்த்துப் போராடுகிறது. இன்று இடிந்த கரையில் மையம் கொண்டு மீனவர்களும் உழைப்பாளர்களும் பல்லாயிரக்கணக்கில் ஒன்று கூடி நடத்திவரும் தொடர் போராட்டம் உலகத்தின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இந்திய அரசின் நயவஞ்சக முயற்சிகள் அனைத்தையும் முறியடித்து மக்கள் நடத்தும் இத்தொடர் போராட்டத்தை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி உறுதியாக ஆதரிக்கிறது. போராடும் மக்களை வாழ்த்துகிறது. இந்திய அரசு கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடும் வரை உயிர் ஈகம் செய்தாவது உறுதியாகப் போராடி அந்த அணு உலையை மூடச் செய்வோம் என இம்மாநாடு உறுதியேற்கிறது. தீர்மானம் 2 தமிழக அரசே நெய்வேலி மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கே கேட்டுப் பெறு நெய்வேலி மின்சார நிலையத்திலிருந்து உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதும் தமிழகத்திற்கு வழங்கப்படுவதில்லை. தமிழ் மண்ணின் நிலக்கரியைப் பயன்படுத்தி நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரம் கர்நாடகாவுக்கு நாள்தோறும் 11 கோடி யூனிட் அனுப்பப்படுகிறது. முல்லைப் பெரியாறு அணையை இடிக்கத் துடிக்கும் கேரளாவிற்கு இங்கிருந்து நாள்தோறும் 9 கோடி யூனிட் மின்சாரம் செல்கிறது. ஆந்திராவுக்கு 6 கோடி யூனிட் மின்சாரம் போகிறது. இம்மின்சாரம் தமிழகத்திற்கே திருப்பப்பட்டால் தமிழ்நாட்டில் மின்சாரப் பற்றாக்குறையே வராது. தமிழகத்தின் மின் பற்றாக்குறை ஒரு நாளைக்கு 22 கோடி யூனிட்தான். ஆனால் அண்டை மாநிலங்களுக்கு அன்றாடம் அனுப்பப்படுவதோ 26 கோடி யூனிட் மின்சாரம். தமிழ் மண்ணின் மின்சாரத்தைப் பறித்து அண்டை மாநிலங்களுக்குக் கொடுத்துவிட்டு இந்திய அரசு தமிழ்நாட்டில் செயற்கையாக மின் பற்றாக்குறையை ஏற்படுத்துகிறது. அறிவிக்கப்பட்ட மின்வெட்டு 2 மணி நேரம் என்றாலும் நாள்தோறும் 5 மணி நேரம் வரை மின்சாரம் வெட்டப்படுகிறது. தமிழகத்தில் சிறு தொழில்கள், வேளாண்மை ஆகியவை முடக்கப்படுகின்றன. மறுபுறம் இம்மின்பற்றாக்குறையையே காரணமாகக் காட்டி கூடங்குளம் அணுமின் நிலையத்தைத் தமிழகத்தில் திணிக்கிறது இந்திய அரசு. இந்திய அரசின் இச்சதித் திட்டத்தை விழிப்புடன் இருந்து தமிழக அரசு எதிர்க்க வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது. தமிழகத்திற்கு உரிமையான நெய்வேலி மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கு வழங்குமாறு இந்திய அரசைத் தமிழக அரசு வற்புறுத்த வேண்டும். அம்மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கே பெற வேண்டும் என தமிழக அரசை இம்மாநாடு கோருகிறது. தீர்மானம் 3 முல்லைப் பெரியாறு அணை உரிமையை மீட்கும் வரை கேரளத்திற்கு எதிரான பொருளாதாரத் தடை விதிப்போம் முல்லைப்பெரியாறு அணை வலுவாக உள்ளது என்றும் முதல் கட்டமாக அதில் 142 அடி வரை தண்ணீர் தேக்கலாம் என்றும் சிற்றணையில் செய்ய வெண்டிய சிறு சிறு செப்பனிடும் பணிகளைச் செய்து முடித்தபின் முழு கொள்ளளவான 152 அடி வரை தமிழகம் தண்ணீரைத் தேக்கிக் கொள்ளலாம் என்றும் உச்சநீதிமன்றம் 2006 பிப்27 அன்று தீர்ப்பளித்தது. மண்ணியல் வல்லுநர்கள் நீரியல் வல்லுநர்கள் ஆகியோரைக் கொண்ட குழுக்கள் அமைத்து கள ஆய்வு செய்ய வைத்து அவற்றின் பரிந்துரை அடிப்படையிலேயே உச்சநீதி மன்றம் இத்தீர்ப்பை வழங்கியது. கேரள அரசு இத்தீர்ப்பு தன்னைக் கட்டுப்படுத்தாது என்று கூறி புதிய சட்டத்திருத்தம் கொண்டு வந்து மேற்படி தீர்ப்பை செயல்படுத்தவிடாமல் தமிழகத்தைத் தடுத்து வருகிறது. இதை எதிர்த்துத் தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில் 27.03.2006 அன்று வழக்குத் தொடுத்தது. உச்சநீதிமன்றம் நீதிபதி ஆனந்த் தலைமையில் வல்லுனர் குழு அமைத்து கள ஆய்வு செய்ய ஆணையிட்டது. அக்குழு தனது பரிந்துரையை 2012 சனவரியில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளது. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தையோ இந்திய அரசமைப்புச் சட்டத்தையோ சட்டை செய்யாமல் கேரள அரசு முல்லைப் பெரியாறு அணையை உடைக்க மலையாள மக்களுக்கு இனவெறியூட்டி தமிழர்களுக்கு எதிரான போராட்டத்தை நடத்தி வருகிறது. அங்குள்ள ஆளும் காங்கிரசு கட்சி, எதிர்க்கட்சியான மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி, பாரதிய சனதாக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் முல்லைப்பெரியாறு அணைச் சிக்கலில் தமிழினத்திற்கு எதிரான மலையாள இனவெறிச் சிக்கலாக மாற்றியுள்ளனர். எதிரும் புதிருமான இக்கட்சிகள் அனைத்தும் தமிழகத்திற்கு எதிரான பகை உணர்ச்சி என்னும் ஒரு புள்ளியில் இணைந்து செயல்படுகின்றன. கேரளத்தில் வாழும் அப்பாவித் தமிழர்களைத் தாக்குவது அவர்கள் நடத்தும் கடைகளைச் சூறையாடுவது ஐயப்பன் கோயிலுக்குப் போகும் தமிழ்நாட்டு பக்தர்களைத் தாக்குவது தேனி மாவட்டத்திலிருந்து கூலி வேலைக்குச் செல்லும் நூற்றுக்கணக்காக தமிழ்ப் பெண்களைச் சிறைப்பிடித்து மானபங்கப்படுத்துவது தமிழக ஊர்திகளைத் தாக்குவது போன்ற அட்டூழியங்களை மலையாள இனவெறியர்கள் செய்துவருகிறார்கள். இந்த இன இழிவுகளையும் பேரவலங்களையும் சொல்லி நாம் சோகத்தைப் பகிர்ந்து கொள்வது மட்டும் போதாது. இந்த அட்டூழியங்களைத் தடுத்து நிறுத்த வேண்டுமானால் மலையாளிகளுக்கு தமிழகத்தில் தக்க பதிலடி கொடுக்க வேண்டும். முல்லைப் பெரியாறு அணை உரிமையை ஏற்கும் வரை கேரளத்திற்கு எதிரான பொருளாதார தடையை எல்லாப் பாதைகளிலும் செயல்படுத்த வேண்டும். முற்றிலுமாக தமிழகத்திலிருந்து கேரளம் செல்லும் பொருள் போக்குவரத்தை நிறுத்த வேண்டும். முல்லைப் பெரியாறு அணையை உடைப்பதற்காக நயவஞ்சக நோக்கோடு புதிய அணை கட்டித் தருவதாக ஏமாற்று வாக்குறுதி தருகிறார்கள் மலையாள அரசியல்வாதிகள். அடுத்ததாக, முல்லைப் பெரியாறு அணை நீர் தேக்க உயரத்தை 120 அடியாகக் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறார்கள். நீதி மன்றத்திற்கு வெளியே முல்லைப் பெரியாறு அணைச் சிக்கலைப் பேசித் தீர்த்துக் கொள்வோம் என்று ஆசை வார்த்தை காட்டுகிறார்கள். தமிழ்நாட்டை ஏமாற்றுவதற்கு கேரள ஆட்சியாளர்கள் செய்யும் இந்த சாகசங்களுக்குப் பலியாகாமல் அவற்றை ஏற்க மறுத்துவரும் தமிழக அரசின் தற்போதைய நிலைப்பாடு வரவேற்கத்தக்கது. தமிழக அரசு இந்நிலைப்பாட்டைத் தொடர்வதுடன் கேரள சூழ்ச்சிகளை முறியடிக்க தமிழக மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஊட்டி ஒருமித்த திசையில் தமிழக மக்களைத் திரட்டிக் கொள்ள உரிய முயற்சிகளைச் செய்ய வேண்டும். கேரளத்திற்கு எதிரான தொடர் “பொருளாதார தடையை அணை உரிமையை மீட்கும் வரை மக்கள் செயல்படுத்த தமிழக அரசு உறுதுணை புரிய வேண்டும் என்றும், மக்களின் முயற்சிகளுக்க தடை போடக் கூடாது என்றும் இம்மாநாடு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது. முல்லைப் பெரியாறு உரிமையை முழுமையாக மீட்கும் வரை தமிழக மக்கள் ஒருங்கிணைந்து உறுதியாகப் போராட வேண்டும் என்றும் ம லையாள இனவெறிக்கத் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் தமிழக மக்களை உரிமையோடு கேட்டுக் கொள்கிறது. தீர்மானம் 4 முல்லைப் பெரியாறு அணை உரிமைப் போராட்டத்தில் போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறு கேரளத்தில் தமிழ் மக்கள் மலையாள இனவெறியர்களால் தாக்கப்படுவது கண்டும் தமிழர் நிறுவனங்கள் சூறையாடுவதைக் கண்டும் ஐயப்பன் கோயில் பக்தர்களைத் தாக்குவது கண்டும் தமிழ்ப் பெண்கள் சிறைப்பிடிக்கப்பட்ட மானபங்கப் படுத்தப்படுவதை அறிந்தும் உணர்ச்சிக் கொந்தளிப்பு ஏற்பட்டு அதற்கு பதிலடியாக தமிழத்தில் உள்ள மலையாளிகளை வெளியேற வலியுறுத்தியும் மலையாள நிறுவனங்களை மூடக் கோரியும் த.தே.பொ.க. தோழர்களும் இன உணர்வாளர்களும் போராட்டங்கள் நடத்தினார்கள். அதற்காக அவர்கள் மீது பிணையில் வரமுடியாத கடும் பிரிவுகளில் சென்னை போன்ற இடங்களில் பொய் வழக்குப் பதிவு செய்து அவர்களைச் சிறையில் அடைத்துள்ளது தமிழகக் காவல்துறை. சிறையில் உள்ள அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் இப்போராட்டம் தொடர்பாக போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டுமென்றும் இம்மாநாடு தமிழக அரசை வலியுறுத்துகிறது. தீர்மானம்: 5 தேவாரத்தில் நியூட்ரினோ நிறுவனத்தைத் தொடங்காதே! தேவராத்தில் நியூட்ரினோ நிலையம் நிறுவ இந்திய அரசு முயன்று வருகிறது. அணு உலையைப் போலவே நியூட்ரினோ நிறுவனமும் உயிருக்கு ஆபத்தானது. கதிரியக்கத்தையும், நில அதிர்வுகளையும் நியூட்ரினோ ஆலை வெளிப்படுத்தும் மலை வளத்தையும், நீர் ஆதாரங்களையும் நாசப்படுத்தும். எனவே இந்திய அரசு நியூட்ரினோ திட்டத்தை உடனே கைவிட வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது. :

Saturday, December 10, 2011

தமிழக அரசியல் கட்சிகளுக்கும் அதன் தலைவர்களுக்கும் தமிழக மக்களுக்கும் குவைத் தமிழர் கூட்டமைப்பின் வேண்டுகோள்: வணக்கம். குவைத்தில் வாழ்ந்துவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் அமைப்புகளும் இணைந்து இக்கோரிக்கையினை முன்வைக்கின்றோம். தமிழகத்தில் மொழிக்கும் இனத்திற்கும் நிலத்திற்கும் எதிரான செயல்பாடுகள் எவ்வித அச்சுறுத்தலுமின்றிப் பரவித் தமிழர்களை அழுத்திவைப்பது நெடுங்காலமாக மிக எளிதாக நடைபெற்று வருகின்ற ஒன்றாகும். இது அண்மைக்காலங்களில் அதிகமாகவும் அழுத்தத்தோடும் நடைபெற்றுவருகிறது. காலங்கள் பல கடந்தும் எவ்விதமான பிரச்சனைகளும் நிரந்தரத் தீர்வை நோக்கிச் செல்லாமல் உள்ளன. ஆக்கப்பூர்வமான வழிமுறை இல்லாமலும் ஒருமித்த கருத்தினடிப்படையில் அரசியல் இயக்கங்கள் இணைந்து போராடும் நிலை இல்லாமலும் இருந்து வருகிறது. தமிழகத்திற்கெதிரான அண்டை மாநிலங்களான கருநாடகா, கேரளா ஆந்திராவிற்கெதிரான எந்தவொரு நிலையான முடிவை எட்டாமலும், நிரந்தரத்தீர்வை வலியுறுத்தும்படியான செயல்பாடுகளைச் சட்டமன்றத்திலோ நாடாளுமன்றத்திலோ எடுப்பதற்கான முயற்சிகளும் இன்றி, இவற்றிக்கெதிராகப் போராடும் இயக்கங்களை ஒடுக்குவதிலும் ஒழிப்பதிலும் மட்டுமே ஆர்வங்கொண்டு இயங்குகின்றன தமிழகத்தை ஆளும் கட்சிகள். தமிழ் மொழியினைக் காப்பதற்கான நடவடிக்கைகளும், தமிழகத்தின் அனைத்து அரசு நடைமுறைகளிலும் ஆட்சி மொழியாக நிலைக்க வைக்கும் முயற்சிகளும், கல்வி மொழியாகவும், சட்ட மொழியாகவும் நிலைநிறுத்தவும் எவ்வித முயற்சியும் தமிழகத்தில் இல்லை. இதுகுறித்த கவலைதுளியும் இன்றி, கொள்கை அளவில் கூடப் பல கட்சிகளுக்குச் சரியான புரிதல் இல்லாத நிலையே காணப்படுகிறது. மொழி வளர்ச்சியிலும் பாதுகாப்பிலும் அக்கறையற்ற அரசுகள்தாம் தமிழகத்தை ஆண்டுவருகின்றன. நிலவளம், ஆற்றுவளம், இயற்கைச் செல்வங்கள், பழங்காலச் சான்றுகள் யாவும் காக்கப்படவில்லை. பண்பாடு, கலை இலக்கியச் செல்வங்களைக் காப்பதிலும் எவ்வித அக்கறையுமற்ற அரசுகள்தாம் நம்மை ஆண்டுகொண்டு வருகின்றன. ஈழத்தில் இனப்படுகொலையானாலும் பரமக்குடியில் ஆதிக்குடிகள் கொல்லப்பட்டாலும் இணைந்து முடிவெடுக்கும் கட்சிகள் தமிழகத்தில் காணப்படவில்லை. கூடங்குளப் போராட்டம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் தமிழினத்தையும் காப்பதற்கானதென்றாலும் யாருமே குரல்கொடுக்க முன்வருவதில்லை. முல்லைப் பெரியாறில் தண்ணீர் தரமறுக்கும் கேடுகெட்ட மாநிலமாகக் கேரளா இருந்தும்கூட போராட்டத்தை முன்னெடுக்க தேர்தல் நிலைப்பாடற்ற இயக்கங்கள்தாம் முன்வருகின்றன.வலிவான திராவிடக்கட்சிகள் செயல்படாமல் உள்ளன. கடந்த ஊராட்சிமன்றத் தேர்தலில் ஏறத்தாழ 5 இலட்சம் பேர் போட்டியிட்டனர். சட்ட மன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் கூட்டணி அமைக்கவும் இடம்பெறவும் ஆளாய்ப் பறக்கின்றன ஆளத்துடிக்கும் கட்சிகள். ஊழல், இலஞ்சம் தனிமனித ஒழுக்கமின்மைகளில் முன்னிற்கின்றனர் தமிழக மக்கள் பிரதிநிதிகள். தமிழினத்திற்கெதிரான முயற்சிகளை முறியடிக்கவும், அவற்றிற்கெதிரான போராட்டங்களை நடத்திடவும் இவர்கள் யாரும் முன்வருவதில்லை. தமிழகத்தைத் தானே ஆளப்போவதாக அறைகூவல் விடுக்கும் இப்போலிகள், போராட்டக்களங்களில் முகம்கொடுக்க மறுக்கின்றனர். இனியும் இத்தன்மைகளைக் கொண்டு இயங்குபவர்களைப் பொறுத்துக்கொள்ளத் தமிழகம் தயாராயிருக்கும் என்ற நம்பிக்கை உங்களுக்கு வேண்டாம். தயங்காமல் போராடுபவர்களும் தமிழினத்திற்காக இயங்கும் உண்மையான தமிழர்களையுமே தலைவர்களாக ஏற்க தமிழினம் தயங்காது, தான் தோன்றித்தனமாய்த் தன்னலம் கொண்டலையும் தலைவர்கள் என்போரைத் தள்ளிவிடவும் தயங்கமாட்டோம். தமிழகத்தை ஆளவும், மக்கள் பிரதிநிதிகளைப் பெருமளவில் வைத்துக்கொள்ளவும் துடிக்கும் கட்சிகள், தமிழகத்திற்கும் மக்களுக்கும் உண்மையாகப் பணியாற்ற கடைசியான ஒரு வாய்ப்பாக முல்லைப்பெரியாறு பிரச்சனையினைக் கருத்தில்கொண்டு, இப்பிரச்சனையில் தமிழகத்திற்கு உறுதியான நிலையான முடிவினைக் காண வேண்டும். அனைத்துப் பிரச்சனைகளிலும் தமிழகத்திற்கும் தமிழினத்திற்கும் நியாயமான உண்மையான காரணங்கள் இருந்தும் எதிராளிகள் தமிழினத்தைக் கொன்றொழிக்கும் முயற்சிகளில் தொடந்து ஈடுபட்டு வருகின்றனர். இவற்றையெல்லாம் முறியடிக்காது வெற்றிகொள்ளாமல் அதனைச் சிதைப்பது போன்ற நிலைகளிலேயே தமிழகக் கட்சிகள் இயங்கிவருகின்றன. முல்லைப் பெரியாறு பிரச்சனையில், தமிழக கட்சிகள் இயக்கங்கள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும். கேரளத்திற்கெதிராகச் சட்டரீதியாகவும் நடுவண் அரசு மூலமாகவும் இறுதியான தீர்வினை எட்ட வேண்டும். கேரளத்திற்கெதிராகப் பொருளாதாரத் தடைவிதித்து, தமிழகத்திலிருந்து செல்லும் காய்கறிகள் பால் உள்ளிட்ட உணவுப்பொருட்கள், மணல், மின்சாரம் உள்ளிட்ட இயற்கை வளங்கள் ஆகிய அனைத்தையும் உடனே தடைசெய்ய வேண்டும். தமிழகத்தில்,புதுவையில் இயங்கும் மலையாளிகளின் நிறுவனங்களை உடனடியாகப் பூட்டவேண்டும். இவை இனி என்றுமே தமிழர்களிடம் வணிகம் செய்யும் வாய்ப்பினை இல்லாமல் செய்ய வேண்டும். தமிழர்களிடம் இத்தகு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தமிழகத்திலிருந்து கேரளாவிற்குக் கட்டுமானப் பணிகளுக்கும் பிற பணிகளுக்கும் பெருமளவில் கூலிகளாகச் சென்று பணிபுரிபவர்களை உடன் திரும்ப அழைத்து, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வடமாநிலத்தவர்கள் பணிபுரியும் இடங்களில் வேலைவாய்ப்புக்களைப் பெற்றுத்தரவேண்டும். மலையாள பத்திரிக்கைகள் திரைப்படங்களைத் தமிழகத்தில் தடைசெய்யவேண்டும். மலையாள தொலைக்காட்சிகளை தமிழகத்தில் தடைசெய்யவேண்டும். அனைத்து கம்பிவட இணைப்பாளர்களையும் இதற்கென அணுகி, அவர்களை இணங்கச்செய்ய வேண்டும். தமிழ்த் திரைப்பட உலகில் பணிபுரியும் அனைத்து மலையாளிகளையும் வெளியேற்ற வேண்டும். மலையாளிகள் நடித்தப் படங்களையும் அவர்களால் தயாரிக்கப்பட்ட படங்கள், மலையாளக் கலைஞர்களின் பங்களிப்புடன் வெளிவரும் திரைப்படங்களையும் வெளியிடத் தடைவிதிப்பதோடு, இதற்கு இணங்கிச் செயல்பட அனைத்து தமிழ்த்திரைக் கலைஞர்களையும் வலியுறுத்தவேண்டும். கேரள மாணவர்களைத் தமிழகக் கல்வி நிறுவனங்களில் சேர்த்துக்கொள்ளத் தடைவிதித்து, அனைத்துக் கல்வி நிலையங்களையும் இதற்கு உடன்பட வைக்க வேண்டும். தமிழகத்தில் பல இடங்களில் ஆயிரக்கனக்கான ஏக்கர் நிலங்களை மலையாளிகள் வாங்கிக் குவித்துள்ளனர். இந்நிலங்களைக் கைப்பற்றித் தமிழகத்திற்குச் சொந்தமாக்க வேண்டும். தமிழகத்தில் விளையும் காய்கறிகள், உணவுப்பொருட்கள், மீன் ஆடு மாடு உள்ளிட்டவற்றையும் ஏனைய தயாரிப்புக்களையும் தமிழர்களே ஏற்றுமதி செய்ய வழிவகை காணவேண்டும். தமிழகத்தில் எல்லா வளமிருந்தும், கல்வியும் திறமையுமுள்ளவர்களாகத் தமிழர்கள் இருந்தும், அரசியல், அறிவியல், அறவியல் என்று அனைத்துத் துறைகளிலும் தமிழர்கள் முதன்மைப்பெற்றிருந்தாலும் எங்கும் அடிமைகளாகவும் முன்னின்று செயலாற்றும் வாய்ப்பினைப் பெறாமலும், எதிரிகளின் சூழ்ச்சிகளுக்கும் பகைமைகளுக்கும் ஆளாகி, தம்மில் பிரிந்து, வாழவழியற்ற நாதியற்ற ஓரினம்போல் இருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. பழம்பெருமைகளைப் பேசுவதும், வாய்ப்பு கிடைக்குமிடங்களில் உணர்ச்சியாகப் பேசி உரக்கக்கூவிப் பிரிவதும், தன்னலம் ஓங்கிக் காணப்படுவதும், ஊழல் இலஞ்சம் மிகுந்தும், ஆள்வோருக்கும் அரசியல்வாதிகளுக்கும் அடிமைப்பட்டுக்கிடப்பதுமான நிலைகள் மாற வேண்டும். தமிழினம் தழைத்தோங்க அனைத்துக் கட்சிகளும் இயக்கங்களும் ஒன்றிணைந்து செயலாற்றக் கேட்டுக்கொள்கிறோம். தமிழக மக்களுக்கு அன்பான வேண்டுகோள்: அன்பிற்கினியத் தாய்த்தமிழ் உறவுகளே! மூன்று தமிழர்களின் தூக்கு, கூடங்குளப் பிரச்சனைகளில் தாங்கள் தன்னெழுச்சியாகப் போராடுவதைக் கண்டு பெருமிதம் கொண்டோம். தொடர்ந்து இதுபோன்ற அனைத்துப் பிரச்சனைகளிலும் சாதி, மதம், கட்சி உள்ளிட்ட அனைத்து வேறுபாடுகளையும் கடந்து தமிழர்கள் என்ற ஒரே குடையின் கீழ் இணைந்து செயல்பட வேண்டுகிறோம். தேர்தல் காலங்களில் மட்டும் தங்கள் கால்களில் விழுந்து, வெற்றி பெற்றப்பின் தங்களின் கருத்தினை, பிரச்சனைகளைக் கருதாமல் தன்னலம்கொண்டு இயங்கும் மக்கள் பிரதிநிதிகளைக் கீழ்பணியச் செய்து மக்கள்பணியாற்றிடும் கட்டாயத்தை உருவாக்குங்கள். மாறானவர்களை முற்றிலும் புறக்கணித்து அவர்களை இயங்கவிடாமல் செய்யுங்கள். பொருளாதார வகைகளிலும் அரசுப்பணிகள், தொழில் துறைகளிலும் முன்னேறி வளங்கொண்ட தமிழகத்தை உருவாக்குங்கள். நமக்கான நாட்டினை நாமே உருவாக்குவோம். முல்லைப் பெரியாற்றை வென்றெடுப்போம்! இழந்த உரிமைகளை மீட்டெடுப்போம்! நன்றி. குவைத் தமிழர் கூட்டமைப்பு kuwaitthamizhar@gmail.com 00965-66852906

Friday, December 9, 2011

மலையாளிகள் - ஒரு பார்வை : ( சும்மா ஒரு மீள்பதிவு :) - நாஞ்சில் எக்ஸ்பிரஸ்™

ஒரு முறை பீகாரில் நடந்த ரயில் விபத்து பற்றி இந்து பத்திரிக்கை வெளியிட்ட செய்தியில் வேடிக்கையாக ஒரு செய்தி வெளியிட்டிருந்ததாம் இந்த விபத்தில் மலையாளிகள் யாரும் இறக்க வில்லையென்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த அளவிற்கு மலையாளிகள் இல்லாத இடமில்லை. சாதாரண தொழிலாளி முதல் பெரிய உயர்பதவிகள் வரை இவர்களை பார்க்கலாம். இவ்வளவு இருந்தும் இவர்களிடம் இருக்கும் குறுகிய மனப்பான்மை படிப்பறிவு அற்ற பீகாரிகளை விட கேவலமான ஒன்று. மற்ற மாநிலத்தவர்களை ஏளனமாக பார்ப்பது மலையாளிகளின் குணம். அதிலும் தமிழன் என்றால் இவர்களுக்கு கேலிப்பொருள். சமீபத்தில் நடிகர் ஜெயராம் தமிழ்பெண்களைப்பற்றி விமர்சனம் செய்தது ஒன்றும் மலையாளிகளை பொறுத்த வரை புதிய விசயமல்ல. தமிழர்களையும், தமிழ்நாட்டையும் கிண்டல் பண்ணுவது என்பது அவர்களுக்கு சாதாரணமான ஒன்று. தமிழனை பாண்டி என்றும் பெண்களை தமிழத்தி என்றும் என்றும் கிண்டலாக அழைப்பதுண்டு. காடுகளில் வாழ்ந்து கப்பை கிழங்கையும், மத்தி மீனையும் சுட்டுத்தின்று கட்டஞ்சாயா குடித்து வயிறு நிரப்பியவர்களுக்கு நாகரிகம் கற்றுக்கொடுத்து, பேச மொழியையும் கற்றுக்கொடுத்தவன் தமிழன். மலையாள இலக்கியம் தமிழ் இலக்கியத்தின் கடைசி தலைமுறை. இவர்கள் தமிழர்களை கிண்டல் பண்ணுவது வேடிக்கைான ஒன்று. பத்து மலையாளிகளுக்கு நடுவில் ஒற்றைத்தமிழனாக வேலைசெய்து பார்த்தால் தெரியும் நீங்கள் எப்படி தனிமைப்படுத்தப்படுவீர்கள் என்று, அதுவே பத்து தமிழர்களுக்கு நடவில் ஒரு மலையாளி என்றால் அது மாதிரி நமக்கு யோசிக்கவே தோணாது. மலையாளக்கரையோரத்தில் பிறந்தவன் என்பதால் மலையாளிகளைக்குறித்து சற்று அதிகம் தெரிந்தவன் நான். நான் சும்மா சொல்கிறேன் என்று நம்ப மறுத்தால் நாஞ்சில் நாடன் எழுதிய தீதும் நன்றும் படித்துப்பாருங்கள். மலையாள கரையோர எழுத்தாளனின் அனுபவங்களில் இதைப்பற்றி அதிகம் எழுதியிருப்பார். அவர் சொல்லியிருக்கும் இதுபோன்ற பல உதாரணங்களில் ஒன்று: மலையாள நாடன் பாட்டு என்று சொல்லப்படும் நாட்டுப்புற பாட்டு ஒன்றில் "சுத்தம் இல்லாத தமிழனுக்கு சூலடி" என்று ஒரு வரிவரும், சூல் என்றால் துடைப்பைக்கட்டை. சுத்தம் இல்லாத தமிழனுக்கு துடைப்பக்கட்டையால் அடிகொடுக்கவேண்டும் என்பது அர்த்தம். சுத்தம் பற்றி பேசுபவர்களின் சுத்தம் எப்படி என்று தெரியவேண்டுமென்றால் திருவனந்தபுரம் தம்பானூர் பேருந்துநிலையம் சென்றால் அறியலாம். ஒரு மாநிலத்தில் தலைநகரின் முக்கிய பேருந்து நிலையம் எப்படி நாறிப்போய் கிடக்கிறதென்று பார்க்கலாம். வெயில் காலத்திலேயே கால் வைத்தால் தொற்றுநோய் வந்துவிடுமோ என்றநிலை. மழைவந்தால் சும்மா மணக்கும். இவர்கள் தமிழனின் சுத்தம் பற்றி பேசுகிறார்கள். சினிமாவிலும் தமிழர்களை கிண்டல் பண்ணுவதை கவனிக்கலாம். திருடர்கள், கூலிவேலைக்காரர்கள், வீட்டுவேலைக்காரர்கள், அடியாட்கள் இதுபோன்ற பாத்திரங்களில் தமிழர்களையே தமிழ்பேசி நடிக்க வைப்பார்கள் அல்லது மலையாளிகளை தமிழ்பேசவைத்து நடிக்க வைப்பார்கள். தமிழர்களின் ஒழுக்கத்தை குறை சொல்பவர்களின் ஓழுக்கம் பற்றி ஊருக்கே தெரியும். இந்தியாவில் அதிகம் மது அருந்துபவர்கள் இருக்கும் மாநிலம் கேரளா, அதிகம் கருச்சிதைவு நடக்கும் மாநிலம் கேரளா. மலையாளிகள் பங்கு இல்லாமல் வளைகுடாக்களில் கொலை, கொள்ளையில் நடப்பதில்லை. இந்த லட்சணத்தில் இவர்கள் தமிழனின் ஒழுக்த்தை குறைசொல்கிறார்கள். கோவை, குமரி மாவட்டத்தின் எல்லைகளில் செல்லும் வாகனங்களை இரண்டு நாட்கள் நிறுத்தினால் மொத்த கேரளாவும் அரிசி கிடைக்காமல் பட்டினி கிடக்கும், குழந்தைகள் பால் இல்லாமல் பசியில் அழும், கட்டிட வேலைகளுக்கு மண் இல்லாமல் வேலைகள் முடங்கும், நெய்வேலியிலிருந்து செல்லும் மின்சாரத்தை நிறுத்தினால் மொத்த கேரளாவும் இருட்டில் மூழ்கும். மொத்தத்தில் தமிழ்நாட்டை அண்டிப்பிழைக்கும் இவர்களுக்கு இத்தனை நக்கல் அதிகம் தான். சொந்த மாநிலத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் முன்னேற்றத்திற்கும் ஆப்படிக்கும் நோக்கத்தில் கட்சி நடத்தும் சிவப்புக்கொடி கட்சிகளுக்கு ஆதரவு அளித்து அவர்களை ஆட்சியில் அமர்த்துவதிலிருந்தே தெரிகிறது, மலையாளிகளின் புத்திசாலித்தனம். மலையாளிகள் தமிழர்களை கிண்டல் பண்ணுவதற்கும் சூரியனைப்பார்த்து நாய் குரைப்பதற்கும் பெரிதாக வித்தியாசயொன்றுமில்லை. நல்லாருங்கடே மக்கா...

Thursday, December 8, 2011

நாம் தமிழர் கட்சி நடைபயணம் மேற்கொள்ளும் : சீமான் கண்டனம்

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கயில், ’’முல்லைப் பெரியாறு அணையை உடைத்துவிட்டு, அந்த இடத்தில் புதிதாக அணைக் கட்டி தமிழகத்தின் உரிமைக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்கும் நோக்குடன் கேரள அரசும், அம்மாநில அரசியல்வாதிகளும் செய்துவரும் மிரட்டல் அரசியலே தமிழினத்தவருக்கு எதிராக அம்மாநிலத்தில் நடந்துவரும் வன்முறை வெறியாட்டங்களாகும். 116 ஆண்டுகள் பழைமையாகிவிட்ட முல்லைப் பெரியாறு அணை பலவீனமான உள்ளது, அது நிலநடுக்கத்திற்குத் தாங்காது உடைந்து விடலாம், அப்படி உடைந்தால் கேரளத்தின் நான்கு மாவட்டத்தின் பெருத்த உயிர் சேதம் ஏற்படும் என்றெல்லாம் கால் நூற்றாண்டாக, கேரள மாநில அரசும், அம்மாநில அரசியல் கட்சிகளும் பரப்புரை செய்து வருகின்றன. முல்லைப் பெரியாறு அணை உடைவது போல் படமெடுத்து, அதனை கேரள மாநில திரையரங்குகளில் போட்டுக்காட்டியும் முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக அம்மக்களை தூண்டி வந்தன. இப்போது கேரள அரசே நிதியுதவி செய்து ஒரு பெரிய படமொன்றையும் எடுத்து வெளியிட்டுள்ளது. ஆனால் இத்தனை ஆண்டுக்காலமும் எவ்வித பாதிப்பும் இன்றி மலைபோல் உறுதியாக முல்லைப் பெரியாறு அணை நின்றுக்கொண்டிருக்கிறது. முல்லைப் பெரியாறு அணை உள்ள இடத்தில் நிலநடுக்கம் ஏற்பாட்டல் அது உடைந்துவிடும் என்ற கேரள அரசின் பரப்புரை எந்த அளவிற்குத் தவறானது என்பதை நிரூபிக்க, 1993ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் லாத்தூரில் நடந்த நிலநடுக்கத்தை சுட்டிக்காட்டலாம். ரிக்டர் அளவுகோலில் 6.4 ரிக்டர் அளவுகோலுக்கு நடந்த அந்த நிலநடுக்கத்தில் 10,000 மக்கள் கொல்லப்பட்டனர். ஆனால் அங்கிருந்த கொய்னா அணைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. அதுவும் முல்லைப் பெரியாறு அணையைப் போல் பழைய முறையில் கட்டப்பட்ட (Masonry Dam) அணைதான். எனவே நிலநடுக்கப் பூச்சிகாட்டல் அடிப்படையற்றது என்பது கட்டடப் பொறியாளர்கள் அனைவருக்கும் தெரியும். எனவே, முல்லைப் பெரியாறு அணை பலவீனமான உள்ளது என்பதை நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியாத கேரள அரசு, அப்பிரச்னையை நீதிமன்றத்திற்கு வெளியே கொண்டுவந்து சிக்கலாக்கவே இரு மாநில மக்களுக்கு இடையிலான மோதலை தூண்டி வருகிறது. நீதிமன்றத்தில் சட்ட ரீதியாக, தொழில் நுட்ப ரீதியாக சாதிக்க முடியாததை வன்முறையின் மூலம் சாதிக்கத் துணிந்துள்ளது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இந்த அராஜக விளையாட்டு எப்போது தொடங்கியுள்ளது என்று பார்த்தாலே, இதன் பின்னணியில் உள்ள சதி புரியும். கேரள முதல்வர் உம்மன் சாண்டி பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசிய பிறகே தமிழக மக்களுக்கு எதிராக வன்முறை வெறியாட்டம் அரங்கேறியுள்ளது. கேரள மாநிலம் இடுக்கியில் உள்ள தோட்டங்களில் பணியாற்றிவிட்டுத் திரும்பிய தமிழ்நாட்டுப் பெண்கள் சிலரின் சேலையைப் பிடித்து இழுத்து அத்துமீறியுள்ளனர். அம்மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சிறு கட்சிக்காரர்கள் அணையை உடைப்போம் என்று கூறிக்கொண்டு அணைப் பகுதிக்குள் செல்ல முயன்றுள்ளனர். இப்படிப்பட்ட நிகழ்வுகள் அனைத்தையும் கேரள மாநில காவல் துறையினர் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிந்துள்ளனர். முல்லைப் பெரியாறு பிரச்னை தொடர்பாக ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க கேரள, தமிழக முதல்வர்களுக்கு பிரதமர் அழைப்பு விடுத்திருப்பதன் நோக்கம், பிரச்னையை நீதிமன்றத்தின் விசாரணையில் இருந்து மீட்டு, பேச்சுவார்த்தை என்ற வலையில் தமிழகத்தை சிக்க வைத்து, அணையை உடைக்க கேரள அரசிற்கு சாதமான தீர்வைத் திணிக்கவே என்பதை தமிழக மக்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். கடந்த மாதம் 22ஆம் தேதி மத்திய நீர்வளத் துறை அமைச்சர் பவன்குமார் பன்சலை கேரள முதல்வர் உம்மன் சாண்டி சந்தித்துப் பேசினார். அப்போது புதிய அணை குறித்த திட்டத்தை அளிக்குமாறு உம்மன் சாண்டியிடம் பவன் குமார் பன்சல் கேட்டுக்கொண்டுள்ளார். அதன் பிறகு, 25ஆம் தேதி கேரள மாநிலத்தின் அனைத்துக் கட்சிக் குழு பிரதமரை சந்தித்து பேச்சுவார்த்தை கோரிக்கையை விடுத்துள்ளது. இதைத் தொடர்ந்தே உம்மன் சாண்டி பிரதமரை சந்தித்துப் பேசியுள்ளார். ஆக, கேரள அரசும், அரசியல் கட்சிகளும் ஒன்று கூடியே இந்த பேச்சுவார்த்தை சதித் திட்டத்தை அரங்கேற்றி வருகின்றன. எனவே, பேச்சுவார்த்தை அழைப்பை தமிழக முதல்வர் நிராகரித்து இருப்பது சரியான நடவடிக்கையாகும். முல்லைப் பெரியாறு அணையின் மீதான தமிழ்நாட்டின் உரிமையை நிலைநிறுத்த நீதிமன்ற வழியே சரியானது, அதனை விட்டு ஒருபோதும் தமிழக அரசு விலகக் கூடாது. 1979ஆம் ஆண்டு அணை பலவீனமான இருக்கிறது என்று கூறி நீர்தேக்கம் அளவை 152 அடியில் இருந்து 136 அடிக்கு குறைத்த கேரள அரசு, அதனை 120 அடிக்குக் குறைக்க வேண்டும் என்று நேற்று கூடிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்துள்ளது. பேச்சுவார்த்தைக்கு தமிழக அரசு செல்ல வேண்டும் என்று வலியுறுத்தும் தமிழ்நாட்டு அரசியல் கட்சி ஒன்று, அம்மாநில கட்சிகளின் இந்நோக்கத்தை புரிந்துகொள்ளத் தவறியது ஏன் என்று புரியவில்லை. எனவே, தமிழினத்திற்கு எதிராக நடத்தப்பட்டுவரும் வன்முறையானது முல்லைப் பெரியாறு அணையை உடைத்து தமிழினத்தின் வாழ்வாதாரத்தை முற்றிலுமாக முடக்குவதே என்பதை புரிந்துகொண்டு, கேரள அரசியல்வாதிகளின் முயற்சியை முறியடிக்க வேண்டும். இந்த உண்மையை தென்தமிழ்நாட்டு மக்களுக்கு எடுத்துரைக்க வரும் 17, 18ஆம் தேதிகளில் நாம் தமிழர் கட்சி நடைபயணம் மேற்கொள்ளும். அப்பகுதியில் பொதுக் கூட்டங்களை நடத்தி கேரள அரசியல்வாதிகளின் சதித்திட்டத்தை தமிழர்களிடையே பகிரங்கப்படுத்துவோம். முல்லைப் பெரியாறு அணை தமிழினத்தின் சொத்து, அதனை விட்டுவிடாமல் கட்டிக்காத்து தமிழினத்தின் உரிமையை நிலைநிறுத்துவோம்’’என்று தெரிவித்துள்ளார். :

Wednesday, December 7, 2011

உடையப் போவது அணையா? தேசிய ஒருமைப்பாடா?

1886 ஆம் ஆண்டு திருவாங்கூர் சமஸ்தானத் துக்கும் சென்னை மாகாணத்துக்கும் இடையே 999 ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டது. 125 ஆண்டுகள் முற்றுப் பெறுவதற்கு முன்பாகவே இந்த ஒப்பந்தத்தை முறிக்கும் வகையில் கேரள மாநில அரசு நடந்துகொள்வது சரியானது தானா? இந்தப் பிரச்சினையில் தான் நினைத்ததுதான் நடக்க வேண்டும் என்கிற முரட்டுத் தனத்தில் கேரளா ஈடுபட்டு வருவது கண்டனத்துக்குரியது. இப்பொழுது கேரள அரசின் பாதுகாப்போடு வன்முறை நிகழ்வுகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டுக்குச் சொந்தமான பேருந்துகள், லாரிகள் தாக்கப்படுகின்றன. சபரி மலைக்குச் செல் லும் தமிழ் நாட்டைச் சேர்ந்த பக்தர்கள்கூட தாக்கப் படும் அவலம். வேலைக்குச் செல்லும் தமிழர்கள் அடித்து விரட்டப்படுகின்றனர். கேரள இளைஞர் காங்கிரசினர் தமிழ்நாட்டின் எல்லைக்குள் நுழைந்து ஆர்ப்பாட்டம் நடத்தி இருக் கின்றனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த காவல் துறையினர் தாக்கப்பட்டிருக்கின்றனர். தமிழ்நாட்டின் பகுதியில் காங்கிரஸ் கொடியை நட்டு வைத்துவிட்டுச் சென்றுள்ளனர். பி.ஜே.பி.யும் தன் பங்குக்குப் போராட்டம் நடத்துகிறது. இதன் பொருள் என்னவாக இருக்க முடியும்? கேரளாவில் காங்கிரஸ் ஆளும் கட்சியாக இருக்கிறது என்பதை நினைவூட்டவா? தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி என்று ஒன்று இருக்கிறதா? அது என்ன செய்து கொண்டிருக்கிறது? அதன் நிலைப்பாடு என்ன? காங்கிரஸ் என்பது வெறும் மாநிலக் கட்சிதானா? அது தேசியக் கட்சி என்ற நிலையை இழந்துவிட்டதா? ஒருக்கால் தமிழ்நாட்டில் உள்ள காங்கிரசுக்கு மட்டும்தான் தேசிய உணர்வு உண்டு; மற்ற மாநிலங் களில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு அந்த உணர்வு கிடையாது என்பதையாவது அறிவித்து விடட்டும். காங்கிரசின் இந்த நிலைப்பாடுதான் கேரளா மற்றும் கருநாடக மாநிலத்தில் உள்ள பி.ஜே.பி., இடது சாரிகள் நிலையும் கூட. என்னதான் தேசியம் பேசினாலும் உள்ளத்துக்குள் ஊற்று எடுத்துக் கொண்டு இருப்பது மாநில உணர்ச்சி தான்! அதையாவது அறிவு நாணயமாக ஒப்புக் கொள்ள வேண்டாமா? தங்கள் பக்கம் நியாயம் இல்லை - ஏற்கெனவே வந்த தீர்ப்புகள் மறுபடியும் வந்துகொண்டிருக்கும் என்பதை உணர்ந்த நிலையில், வன்முறையில் இறங் கும் ஒரு வேலையில் கேரளா இறங்கியுள்ளது. இதற் குக் கேரள மாநில அரசும் பின்னணியில் உள்ளது. இதன் மூலமாக, உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தலைமையில் அமைந்துள்ள குழுவையும் மிரட்டுகின்ற யுக்தியைக் கையாளுகின்றார்கள். கேரளாவில் காங்கிரஸ் ஆட்சி மிகப் பெரிய அளவில் பெரும்பான்மை கொண்ட ஆட்சியாக இல்லை. நூலிழையில் நித்திய கண்டம் பூரண ஆயுள் என்ற பரிதாபத்தில்தான் உள்ளது. இதிலிருந்து மீளும் யுக்தியும் இதில் புதைந்து இருக்கிறது. காவிரிப் பிரச்சினையில் கருநாடக மாநிலமும் சரி, முல்லைப் பெரியாறு பிரச்சினையில் கேரளாவும் சரி, ஒரு சார்பாக எல்லா வகையான நியாயங்கள், நேர்மை, நாணயம், நீதி, சட்டம், ஒப்பந்தம் முதலியவற்றை எல்லாம் மூர்க்கத்தனமாக தூக்கி எறிந்து செயல்பட்டு வருகின்றன. இவற்றில் மத்திய அரசின் போக்கும் சந்தேகத் துக்கு அப்பாற்பட்டதாக இருக்கவில்லை. தேர்தல் நேரம் என்றபோது கண்டும் காணாமலும் இருந்தது. தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி நடத்தும் நிலையில், காங்கிரசுக்குச் சாதகமான மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறது. திட்டவட்ட மாக பிரதமர் வாயிலிருந்து சொற்கள் வருகின்றனவா? அணையை உடைக்கும் அளவுக்குக் கேரளா நடந்து கொள்ளும் நிலையில், மத்திய காவல் படையைப் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்த வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையைக் கூட ஏற்காமல் அதிகாரிகளைக் கலந்து ஆலோசிப்பதாகக் கூறுவது எல்லாம் தட்டிக் கழிக்கும் ஒன்றாகவே கருதப்பட வேண்டியுள்ளது. அணையை மட்டும் உடைக்கவில்லை. தேசிய ஒருமைப்பாட்டையும் உடைத்திட தேசியவாதிகள் முண்டா தட்டி நிற்பது பரிதாபமே!

Tuesday, December 6, 2011

முல்லைப் பெரியாறு அணையை உடைக்கத் துடிக்கும் மலையாளிகளை வெளியேற்றுவோம்: ததே.பொ.க.

தமிழகத்திற்குச் சொந்தமான முல்லைப் பெரியாறு அணையை உடைக்கத் துடிக்கும் மலையாளிகளை தமிழகத்திலிருந்து வெளியெற்றுவொம் என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன், மதுரையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசினார். முல்லைப் பெரியாறு அணையைக் காப்போம் என வலியுறுத்தி (03.12.2011) மாலை, மதுரை காளவாசல் மாப்பிள்ளை விநாயகர் திரையரங்கு அருகில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் பேசிய, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன், “கேரள அரசின் தலைமை வழக்கறிஞர் தண்டபாணி கேரள உயர்நீதிமன்றத்தில் முல்லைப் பெரியாறு அணை வலுவாக இருப்பதாகவும், பாதுகாப்பு குறைபாடுகள் ஏதும் இல்லையென்றும், ஒருவேளை அணை உடைந்தாலும் அத்தண்ணீர் முழுவதையும் முல்லை பெரியாறு அணைக்கு கீழ்ப்பகுதியில் உள்ள பெரிய அணையான இடுக்கி அணை உள்வாங்கிக் கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளார். அணை பலவீனமடைந்திருப்பதாக அச்சம் ஏற்படுத்தும் பரைப்புரையை ஊடகங்கள் தான் செய்கின்றன என்றும் அவர் கூறினார். இது தான் உண்மை நிலை. ஊடகங்கள் மட்டுமின்றி, இதற்கு நேர் மாறாக காங்கிரஸ், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி ஆகிய கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு தமிழனப்பகை வெறியைப் பரப்புகின்றன. முல்லைப் பெரியாறு அணையை விட இடுக்கி அணையின் கொள்ளளவு 7 மடங்கு பெரியது. எனவே எந்த நிலையிலும் அங்கு அச்சப்படுவதற்கு அடிப்படையே இல்லை. வேண்டுமென்றே தமிழினப் பகைப் பரப்புரை கேரளத்தில் நடக்கிறது. கேரளத்தின் அடிப்படை உணவுத்தேவையை தமிழகமே நிறைவு செய்கிறது. நாள் தோறும் 700 டன் அரிசி தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு செல்கிறது. கேரளத்தின் முழு இறைச்சித் தேவையையும், காய்கறி, முட்டை ஆகியவற்றின் தேவையையும் தமிழ்நாடு தான் நிறைவு செய்கிறது. நெய்வேலி இரண்டாம் அனல் மின்நிலையத்திலிருந்து நாள்தோறும் 9 கோடி யூனிட் மின்சாரம் தமிழகத்திலிருந்து கேரளா செல்கின்றது. தமிழ்நாட்டில் வாழும் 30 இலட்சம் மலையாளிகள் வணிக அரசர்களாகவும், உயர் பதவிகளிலும் கோலோச்சுகிறார்கள். ஆனால், இதற்கான நன்றியுணர்ச்சி சிறிதும் இல்லாமல் தமிழினப் பகையோடு மலையாளிகள், முல்லைப் பெரியாறு அணை உரிமையை மறுத்து தமிழ்நாட்டு மக்களின் வயிற்றில் அடிக்கிறார்கள். குமுளியில் தமிழர்களின் வணிக நிறுவனங்கள் தாக்கப்பட்டுள்ளன. வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை அலுவலகம் சூறையாடப்பட்டுள்ளது. இது தொடருமேயானால், தமிழகத்திலிருந்து மலையாளிகள் அனைவரையும் வெளியெற்றும் போராட்டத்தை தமிழர்கள் மேற்கொள்ள வேண்டும் கேரளத்திற்கு எதிராக பொருளாதாரத் தடை விதித்து பொருள் போக்குவரத்தை முடக்க வேண்டும். நெய்வேலி மின்சாரம் கேரளாவிற்கு செல்வதைத் தடுக்க வேண்டும். தமிழர்களுக்கு இதைத் தவிர வேறு வழியில்லை என்று பேசினார்.

Friday, December 2, 2011

ஒரு மலையாள படத்தில் இந்திய அமைதி (அழிப்பு ) படையை நியாயபடுத்தும் வசனங்கள்.

ஒரு மலையாள படத்தில் இந்திய அமைதி (அழிப்பு ) படையை நியாயபடுத்தும் வசனங்கள். தமிழ் படங்களில் நம் நியாயங்களை சொல்ல அனுமதிப்பார்களா இந்த இந்திய ஜனநாயக தேசத்திலே ஒரு மலையாள படத்தில் வரும் இந்த காட்சியை பாருங்கள்.. எப்படி வஞ்சகதொடு உருவாக்கி இருக்கிறார்கள் என்று... அவர்கள் கருத்தை பொய்யும் புனைவும் கலந்து படத்தில் சொல்ல அவர்களுக்கு உரிமை இருக்கிறது நம் கருத்தை சொல்ல அனுமதி இருக்கிறதா? Why Was Indian Peace Keeping Force (IPKF) sent to Sri Lanka by Rajiv Gandhi In the military movie flick 'MISSION 90 DAYS', Megastar Mammootty explains to an LTTE cadet the exact truth behind the Rajiv Gandhi - LTTE issue which happened at Sri Lanka... http://www.youtube.com/watch?v=evlxfcPvxfc&feature=share

Thursday, December 1, 2011

முல்லைப் பெரியாரைக் காக்கப் போராட்டங்கள் வைகோ அறிவிப்பு

தென் தமிழ்நாட்டின் வாழ்வாதாரமான பென்னிகுக் கட்டிய முல்லைப் பெரியாறு அணையை உடைக்க கேரள அரசும், அங்குள்ள அரசியல் கட்சிகளும் கச்சை கட்டிக்கொண்டு பல்வேறு அராஜக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. தமிழகத்தில் நாம், எல்லை மீறிய பொறுமையை கடைபிடித்து வருகிறோம். குட்டக் குட்டக் குனியும் நிலைக்கு நாம் ஆளாகிவிடக்கூடாது. நமக்கு உரிமையுள்ள முல்லைப் பெரியாறு அணையின் வலிமை குறித்தும், உண்மை நிலை குறித்தும் தமிழ்நாட்டின் பொதுப்பணித் துறை மூத்த பொறியாளர்கள் தயாரித்துள்ள குறுந்தட்டுகள் தமிழகம் முழுவதிலும் விநியோகிக்கப்பட வேண்டும். முல்லைப் பெரியாறு அணையைக் காக்கும் பிரச்சாரப் பயணத்தை நானும், முல்லைப்பெரியாறு பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் கம்பம் அப்பாஸ் அவர்களும் டிசம்பர் 7தேதி,மதுரையில் இருந்து கூடலூர் வரை மேற்க்கொள்கிறோம். டிசம்பர் 8 ஆம் தேதி அன்று முல்லைப் பெரியாரைக் காக்க கம்பம் நகரில் என்னுடைய தலைமையில், கம்பம் அப்பாஸ் அவர்கள் முன்னிலையில் உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெறும். பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தொடங்கி வைப்பார். விவசாய சங்கத்தலைவர்களும், பல்வேறு அமைப்புகளின் தலைவர்களும் போராட்டத்தை ஆதரித்துப்பேசுவார்கள். அண்ணன் பழ.நெடுமாறன் அவர்கள் உண்ணாவிரதத்தை நிறைவு செய்வார். கேரளம் செல்லும் அனைத்துச் சாலைகளிலும் போக்குவரத்தைத் தடுத்து நிறுத்துகின்ற முற்றுகைப் போராட்டம் ஜனவரி 21 ஆம் தேதி நடத்துவதாக திருச்சியில் அறிவித்து இருந்தோம். தற்போது அந்தப் போராட்டம் டிசம்பர் 21 ஆம் தேதி நடைபெறும் என்றும், 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்ற கட்சிகள், அமைப்புகள் அனைவரும் இப்போராட்டத்தில் பங்கேற்பார்கள் என்றும், தமிழ் நாட்டின் உரிமையைக் காக்க இந்தப் போராட்டங்களுக்கு விவசாயிகளும் அனைத்து தரப்பினரும் ஆதரவு தர வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறேன். வைகோ பொதுச் செயலாளர், மறுமலர்ச்சி தி.மு.க ‘தாயகம்’ சென்னை - 8 01.12.2011

Wednesday, November 30, 2011

ஏன் இந்த கொலைவெறி: தமிழக மாணவர்கள் பதிலடி போராட்டம்

கடந்த நவம்பர் 23-ஆம் தேதி முதல் கோவா மாநிலம் பனாஜியில் 42-ஆவது பன்னாட்டுத் திரைப்பட விழா நடைபெற்றுவருகிறது. பல நாடுகளிலிருந்தும், இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் திரைப்படத் துறையினரும், மாணவர்களுமாக மொத்தம் 8ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் இன்று (நவம்பர் 29) மதியம் உணவு இடைவேளைக்குப் பிறகு திரைப்பட விழா நடக்கும் வளாகத்தில் கூடிய கேரளாவைச் சேர்ந்த நடிகர் ’ஒரு தலை ராகம்’ ரவீந்தர், சில பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட 30 பேர் ‘முல்லைப் பெரியாறு அணை இடிந்துவிடும்’ என்றும், ’புதிய அணையைக் கட்ட வேண்டும்’ என்றும் குரல் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு, வளாகத்திற்குள்ளேயே ஊர்வலம் போலவும் நடத்தினர். இதனைக் கண்டு வெகுண்டெழுந்த பல்வேறு திரைப்படக் கல்லூரிகளைச் சேர்ந்த தமிழ் மாணவர்கள், திரைப்படத் துறையினர் 50-க்கும் மேற்பட்டோர் உடனடியாக ஒன்றுகூடி, ”8000 ஏக்கர் விளைநிலம், 3 கோடி மக்கள் வறட்சியில் சாகும் அவலத்தைத் தடுக்க வேண்டும்”, “முல்லைப் பெரியாறு அணையைக் காக்க வேண்டும்”, “அணையைச் சிதைப்பது, இந்திய ஒற்றுமையைச் சிதைத்துவிடும்”, “அன்பிற்குரிய கேரள மக்கள், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்கவேண்டும்” “அன்பிற்குரிய கேரள மக்களே! ஏன் இந்த கொலைவெறி” என்றும் தொடர்ந்து உரக்க முழக்கம் எழுப்பி ஊர்வலம் சென்றனர். உடனடியான இந்த பதில் நடவடிக்கையைக் கண்டவர்கள் வியப்படைந்தனர். இரண்டு குழுவினரும் முழக்கம் எழுப்பி ஊர்வலம் சென்றதால் அங்கு சிறிதுநேரம் பதற்றம் நிலவியது. செய்தியாளர்களிடையே பேசிய மாணவர்கள், “கேரள அரசு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து உடனடியாக தன்னுடைய நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும். முல்லைப் பெரியாறு தமிழக மக்களின் வாழ்வாதாரம். அதனை ஒருபோதும் விட்டுத் தர முடியாது. இதற்காக தமிழக மாணவர்கள் போராடுவார்கள்” என்று தெரிவித்தனர். இந்திய, பன்னாட்டு பத்திரிகையாளர்கள், பார்வையாளர்களிடம் அவர்கள் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை தொடர்பான உண்மை நிலைமையினை விளக்கினர். பிறகு அங்கு வந்த காவல்துறையினர் தமிழ் மாணவர்களைக் கலைந்து செல்லுமாறு வேண்டினர். ”கேரளப் போராட்டக் குழுவினர் கலைந்து சென்றால் தான் நாங்களும் கலைந்து செல்வோம். அவர்கள் ஒரு வேளை போராட்டம் செய்தால் தொடர்ந்து பதில் நடவடிக்கைகளில் ஈடுபடுவோம்” என்று எச்சரிக்கை விடுத்து, பின்னர் கேரள போராட்டக் குழுவினர் கலைந்து சென்றதும் தமிழ்மாணவர்களும் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.

Tuesday, November 29, 2011

தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கு செல்லும் பொருட்களை தடுப்போம்- சீமான்

நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கை. கேரள மக்கள் அனைவரும் முழுமூச்சில் மீண்டும் தமிழர்களுக்கு எதிராய் அவதூறையும் விஷமப் பிரச்சாரத்தையும் தொடங்கி விட்டார்கள்.முல்லை பெரியாறு அணையை இடிக்க வேண்டும் என்று இன்று இடுக்கி மாவட்டத்தில் முழு அடைப்பு நடத்தியிருக்கிறார்கள்.கேரள முதல்வர் உம்மன்சாண்டி தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பிரதமரைச் சந்தித்து அணை குறித்து முறையிட்டிருக்கிறார்கள்.பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் கேரள உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.மேலும் காந்தி சிலை முன்பு தர்ணாவில் இறங்கியுள்ளார்கள்.டெல்லியில் டேம் 999 என்னும் விஷமப் படத்தை பத்திரிக்கையாளர்கள் உட்பட அனைவருக்கும் திரையிட்டுக் காட்டியிருக்கிறார்கள். இதன் மூலம் கேரள அரசும் அங்குள்ள அனைத்துக் கட்சிகளும் தமிழர்களுக்கு எதிராய் மறைமுகப் போரில் இறங்கியுள்ளனர் என்பது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது. எண்ணற்ற முறை,பல மட்டங்களில்,கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் தமிழர்களுக்கு உரிய,நியாயமான தீர்வு கிட்டவில்லை என்ற நிலையில் வேறு வழியின்றித் தான், தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றம் சென்று முறையிடப்பட்டது.உச்சநீதிமன்றமும் ஏழு பேர் கொண்ட வல்லுநர் குழுவினை அமைத்து அவர்களது அறிக்கையின் அடிப்படையில் முல்லை பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீரைத் தேக்கலாம் என்று தீர்ப்பளித்து விட்டது.ஆனால் தீர்ப்பளித்து காலங்கள் பல கடந்தும் அதனை அமல்படுத்துவதற்கு எதிராய் இதுவரை பல முட்டுக்கட்டைகளைப் போட்டு,அதற்கு எதிராய் செயல்பட்ட கேரள அரசு இப்பொழுது நில நடுக்கத்தால் அணை உடையும் அபாயம் இருப்பதாகவும் அதனால் எண்ணற்ற மக்கள் உயிரிழக்கும் அபாயம் இருப்பதாகவும் பல வழிகளில் புதிய விஷமப் பிரச்சாரத்தினை ஆரம்பித்துள்ளது. இடுக்கி மாவட்டத்தில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் முல்லை பெரியாறு அணைக்கு எந்தச் சேதமும் இல்லை என அணையை ஆராய்ந்த பின்பு மத்திய புவியியல் ஆராய்ச்சித்துறை இயக்குனர் ஜான் மேத்யூ தெரிவித்துள்ளார்.கடல் மட்டத்தில் இருந்து முல்லை பெரியாறு அணை 2 ஆயிரத்து 889 அடியில் இருக்கிறது.ஆனால் அணை உடைந்தால் அழிந்து போகும் என கேரளத்த்தினர் கூறும் குமுளிப்பகுதி கடல் மட்டத்தில் இருந்து 3 ஆயிரத்து 100 அடியிலும்,வண்டிப்பெரியாறு 3 ஆயிரத்து 350 அடியிலும்,பாம்பனாறு 3 ஆயிரத்து 750 அடியிலும் இருக்கிறது.இது ஒன்றே போதும் மலையாளிகள் தண்ணீரில் வடிகட்டிய பொய்யை எவ்வாறு கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள் என்பதனை நிரூபிப்பதற்கு. தென்மாவட்டத்தில் உள்ள தமிழர்கள் நலனில் எங்கோ இருந்து வந்த ஆங்கிலேயன் பென்னிக்குக்கிற்கு இருந்த அக்கறையில் துளியளவு கூட கூப்பிடு தூரத்தில் உள்ள கேரள மக்களுக்கும் அங்குள்ள அரசியல் கட்சிகளுக்கும் இல்லை.மாறாக வெறுப்பும் குரோதமும் மண்டிக் கிடக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் இருந்து மின்சாரம்,மீன்,கறி,அரிசி,உப்பு,புளி,மணல் என தொடர்ந்து சுரண்டிக் கொழுக்கின்றனர்.அங்கிருந்து கொழுத்தது போதாது என்று இங்கு வந்தும் சுரண்டுகின்றனர்.ஆனால் பதிலுக்கு தமிழக விவசாயிகளின் வாழ்விற்குத் தேவையான தண்ணீரைத் தர மறுக்கின்றனர்.தண்ணீரைத் தர மறுப்பவர்கள் தான் இங்குள்ள விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களினால் உயிர் வாழ்கின்றனர். சர்வ தேசியம் பேசும் கம்யூனிஸ்டுகள்ஆட்சி செய்தாலும் சரி,இந்திய தேசியம் பேசும் காங்கிரசுக்காரன் ஆட்சி செய்தாலும் சரி,இது தான் நிலை.கேரள மக்கள் தன்னை திராவிடன் என்றோ இந்தியன் என்றோ கருதுவதில்லை. மலையாளிகளாகக் கருதுகின்றனர். இதே நிலை நீடித்தால் அவர்களது கொட்டத்தை அடக்க இங்கிருந்து கேரளாவிற்குச் செல்லும் அனைத்துப் பொருட்களையும் தடுத்து நிறுத்தவும்,அணை இருக்கும் பகுதிகளை மீண்டும் தாய்த் தமிழகத்துடன் இணைக்கும் போராட்டத்தையும் அதிவிரைவில் நடத்த நாம் தமிழர் கட்சி தயங்காது என எச்சரிக்கிறோம்.
ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27ல் மாவீரர் நாளை கொண்டாடிவரும் கொளத்தூர் பகுதியில் உள்ள ஈழவிடுதலை ஆதரவாளர்கள், நேற்று பெய்த கடும் மழையிலும் மாலை 5.00 மணி முதலே, புலியூர் பிரிவில் கூடத் தொடங்கி விட்டனர். விடாமல் பெய்து கொண்டிருந்த மழை மாலை சரியாக 6.00 மணிக்கு நின்றுவிட்டது. மாலை 06.05 மணிக்கு மாவீரர்களின் நினைவாகவும், அவர்களின் வீரத்தையும், புகழையும் போற்றி பாடப்படும் பாடல்கள் ஒலிக்க வந்திருந்த பொதுமக்கள் மாவீரர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி வீரவணக்கம் செலுத்தினார்கள். அதற்கு பின்னர், சமர்ப்பா குமரன் குழுவினரின் புலிகளின் வீரம் பற்றி பாடிய இசை நிகழ்ச்சியும், பாவலர் அறிவுமதி அவர்கள் எப்படியிருந்தது ஈழம் என்ற தலைப்பில் விடுதலைப்புலிகளின் ஆட்சி ஈழத்தில் எப்படி நடைபெற்றது என்பதைப்பற்றி விளக்கி பேசினார். கொளத்தூரில் இருந்த பயிற்சி முகாமில் பயிற்சி எடுத்த ஒரு புலிவீரன், அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு சென்றுள்ளான். அப்போது அந்த வீட்டில் இருந்த பெரியம்மா விருந்தினராய் வந்த அந்த வீரனுக்கு இரண்டு பிஸ்கட் துண்டுகளை கொடுத்து உபசரித்துள்ளார். அந்த வீரன் முகாமுக்கு சென்று பெரியம்மா கொடுத்த இரண்டு பிஸ்கட் துண்டு பற்றி பொன்னம்மானிடம் சொன்னபோது, உனக்கு மட்டும் இரண்டு துண்டு பிஸ்கட் கிடைத்தால் போதுமா..? அதே பிஸ்கட்டை மற்றவர்களுக்கும் நீ கொண்டுவந்து கொடுத்திருக்க வேண்டாமா..? அவர்களுக்கும் அந்த பிஸ்கட் மீது ஆசை இருக்காதா...? என்று கேட்டுள்ளார். தவறை உணர்ந்த அந்த புலிவீரன் தான் பிஸ்கட் உண்டதுக்காக மன்னிப்பு கேட்டுள்ளான். புலிகளின் இயக்கத்தில் மன்னிப்பு என்பதே கிடையாது என்பதால், முகாமில் உள்ள அனைத்து வீரர்களுக்கும் அதே அளவுக்கு பிஸ்கட் வாங்கிவரும்படி சொல்லி அதற்கான பணத்தையும் கொடுத்துள்ளார் பொன்னம்மான். அந்த வீரன், வாகனத்தில் சென்று பிஸ்கட் வாங்கிவர தயாராகியுள்ளார், இந்த வாகனம் இயக்கத்துக்கு சொந்தமானது அதை இப்போது நீ உன்னுடைய சொந்த வேலைக்கு பயன்படுத்த கூடாது என்று வாகனத்தில் செல்ல அனுமதிக்க மறுத்துவிட்டார் பொன்னம்மான். பின்னர் அந்த வீரன் நடந்தே சென்று அனைத்து வீரர்களுக்கும் தேவையான பிஸ்கட்டுகளை வாங்கிக் மூட்டையில் கட்டி தூக்கிக்கொண்டு வந்துள்ளார். தனது பிள்ளைகளிடம் பொன்னம்மான் எப்படி நடந்து கொண்டார் என்பதற்காக நான் இதை சொல்லுகிறேன், பொன்னம்மான் அப்படி நடப்பதற்கு காரணம்... என்ன...? அவருக்கு வழிகாட்டியான தலைவர் அப்படிப்பட்டவர். வீரம் அன்பு, பண்பு போன்ற உயரிய பழக்க வழக்கங்கள் நம் தமிழர்களுக்கு மட்டுமே சொந்தமானது. உலகில் உள்ள எந்த நாட்டு இராணுவ அமைப்பிலும், காவல்துறையிலும் இல்லாத மனித நேயங்களை நாம் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் மட்டும் பார்க்க முடியும். திருமணமான சில மாதங்களில் போருக்கு வந்த ஒரு சிங்கள வீரன், விடுதலைப்புலிகளிடம் சிறைபட்டுவிட்டான். கைது செய்யப்பட்ட அந்த வீரன் புலிகளின் சிறையில் சிலவருடங்கள் இருந்தபோது அவன் தன்னுடைய இளம் மனைவியை சந்திக்க வேண்டும் என்று இயக்கத்தின் பொறுப்பாளர்களுக்கு கடிதம் எழுதினான், அந்த கடிதம் தலைவரிடம் சென்றது... தலைவரிடம் அதற்கு அனுமதியும் கிடைத்தது. குறிப்பிட்ட ஒருநாளில், சிங்கள் வீரனின் மனைவி அனுராதபுரத்திலிருந்து கிளிநொச்சிக்கு வந்தார். தந்து கணவனை சந்தித்து பேசினாள், மாலை வரை இருவரும் குடும்ப விடயங்களை பேசினார்கள். மாலையில் அனுராதபுரத்துக்கு செல்லும் தொடர்வண்டிக்கு அந்த பெண்ணை புலிகள் அழைத்து சென்றனர். ஏதோ காரணத்தால் அன்று அந்த தொடர்வண்டி வரவில்லை... என்ன செய்வது ஒரு பெண்ணை அதுவும் சிங்கள இனத்தை சேர்ந்த ஒரு இராணுவ வீரரின் மனைவியை எங்கு தங்க வைப்பது என்று பொறுப்பாளர்கள் தடுமாறினார்கள். தகவல் தலைமைக்கு சென்றது, அந்த பெண் தனக்கு எந்த இடம் பாதுகாப்பானது என்று கருதுகிறாளோ அந்த இடத்தில் தங்க வையுங்கள் என்று தலைவர் சொல்லிவிட்டார். அந்த பெண் தன் கணவனுடன் தங்க விரும்பினாள்.... அவளின் விருப்பப்படியே கணவனும் மனைவியும் தங்கினார்கள். இரவு முழுவதும் கணவனுடன் தங்கிய அந்த பெண், மறுநாள் மகிழ்ச்சியுடன் தன்னுடைய உறவினர்கள் உள்ள பகுதிக்கு சென்றுவிட்டாள். ஆனால், மூன்று மாதத்திற்கு பிறகு புலிகளின் தலைமைக்கு ஒரு கடிதம் வந்தது. அதில், தான் கணவனை சந்திக்க வந்தபோது மனிதாபிமானத்துடன் நடந்து கொண்டமைக்கு நன்றி தெரிவித்து எழுதியிருந்தாள் அந்த பெண், கூடவே தான் கருவுற்று இருப்பதாகவும், ஆனால் இந்த கரு எப்படி உருவானது என்று உறவினர்கள் கேட்டால் நான் என்ன செய்யட்டும், நானும்... எனது கணவனும் சேர்ந்து இருந்ததால் தான் இந்த கரு உருவானது என்று சொன்னால் இந்த உலகம் நம்புமா...? இதனால் என் நடத்தையின் மீது கெட்டபெயர் உருவாகுமோ...? என்று தான் பயப்படுவதாக சொல்லி கடிதம் வந்தது. அந்த பெண்ணின் கடிதம் தலைவரின் பார்வைக்கு போனது, ஒரு பெண்ணுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த சிக்கல் சாதாரணமானதல்ல.... இதை தீர்க்க வேண்டும் என்று முடிவு செய்த தலைவர் மீண்டும், அந்த பெண்ணுக்கு கடிதம் எழுதினார். நீ, உனது மாமியார் மற்றும் உங்கள் ஊரின் பௌத்த மதகுரு மூவரும் குறிப்பிட்ட இந்த நாளில் கிளிநொச்சிக்கு வாருங்கள் என்று அந்த கடித்தத்தில் எழுதப்பட்டிருந்தது. அதன்படி கிளிநொச்சிக்கு வந்த அந்த மூவரையும் அழைத்து சென்று அந்த சிங்கள் வீரனிடம் விட்டார்கள், தாங்கள் இருவரும் ஒருநாள் இரவு சேர்ந்திருந்தது உண்மை என்றும் தன்னுடைய மனைவியின் வயிற்றில் வளரும் கரு என்னுடையதுதான் என்றும் தான் தாயிடமும், மதகுருவிடமும் சொன்னான் அந்த சிங்கள இராணுவ வீரன். என் கணவன், மாமியார், மதகுரு மூவரும் உட்கார்ந்து பேசி விட்டாதால் எனக்கு குடும்பத்தில் ஏற்ப்பட்ட களங்கம் தீர்ந்துவிடும். ஆனால், ஊரில் உள்ளவர்கள் எப்படியும் என்னுடைய நடத்தையை தவறான கண்நாட்டத்தில் தான் பார்ப்பார்கள், பேசுவார்கள் நான் என செய்யட்டும் என்று அந்த சிங்கள பெண் கண்ணீரோடு நின்றாள். அந்த சிங்கள பெண்ணின் கற்புக்கு களங்கம் வந்து விட்டது என்பதை உணர்ந்தார் தலைவர். உலகின் எந்த நாட்டு இராணுவத்திலும் செய்யாத ஒரு காரியத்தை செய்தார். ஆமாம், அந்த இராணுவ வீரனை நிபந்தனை இல்லாமல் விடுதலை செய்தார். பெண்ணின் கண்ணீருக்கும் கற்புக்கும், நெரிக்கும், மதிப்பளிக்கும் வழக்கம் தமிழில் உள்ள புறநானூற்று பாடல்களில் மட்டுமே நான் கண்டுள்ளேன், ஆனால் பிரபாகரன் என்ற தலைவரிடம் அதை நேரில் கண்டுள்ளேன் என்று பாவலர் அறிமதி அவர்கள் பேசினார்.

Monday, November 28, 2011

தமிழ்த்தேசிய நினைவெழுச்சி நாள், குவைத்

குவைத் தமிழர் கூட்டமைப்பின் சார்பில் தமிழ்த்தேசிய நினைவெழுச்சி நாள், 25.11.2011 அன்று தோழர்.செங்கொடி நினைவரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு வரவேற்புரை நல்கி கவிஞர். விருதைபாரி அவர்கள் ஈகைச்சுடர் ஏற்றிவைத்திட தோழர்.தமிழ்நாடனை அழைத்தார். தோழர்.தமிழ்நாடன் அவர்கள் ஈகைச்சுடர் ஏற்றி தொடக்கவுரை நிகழ்த்தினார். தொடர்ந்து முனு.சிவசங்கரன் அவர்கள் மாவீரர்நாள் உறுதிமொழி செய்துவைத்தார்கள். தொடர்ந்து, தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தோழர். தியாகு அவர்களின் மாவீரர்நாள் அறிக்கையினை தொழிலதிபர் சாமி வெளியிட பொறியாளர் இராமன் அவர்கள் பெற்றுக்கொண்டர்கள். தோழர். சிவமணி, தோழர்.பகலவன் ஆகியோரின் எழுச்சிமிகு மாவீரர்நாள் கவிதையினைத் தொடந்து, தோழர்.முனு.சிவசங்கரன் அவர்களும் தோழர்.பின்னலூர் மணிகண்டன் அவர்களும் உரையாற்றினார்கள். தொடர்ந்து உரையாற்றிய பொறியாளர் முத்து அவர்கள், இலங்கை விமானத்தில் பயணிப்பதை புறக்கணிக்கவும், எதிரிகளின் பொருட்கள் தயாரிப்புக்களை புறக்கணிக்கவும் கோரிக்கையினை முன்வைத்து எழுச்சியான உரைநிகழ்த்தினார்கள். இதைத்தொடர்ந்து, தமிழகத்திலிருந்து இணையம் வழி தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தோழர்.தியாகு அவர்கள் மாவீரர்நாள் உரை நிகழ்த்தினார்கள். அடுத்து பொறியாளர் இராமன் அவர்கள் தமிழர்கள் ஒற்றுமையாக வாழவேண்டும் என்ற கருத்தை முன்வைத்து உரையாற்றினார்கள். தொடர்ந்து, நாடுகடந்த தமிழீழ அரசின் துணைப்பிரதமர் திரு. உருத்திராபதி சேகர் அவர்கள் இணையம் வழி மாவீரர்நாள் உரையாற்றினார்கள். தொடர்ந்து தோழர்கள் இரகுநாதன், தோழர். பட்டுக்கோட்டை சத்யா அவர்கள் எழுச்சிமிக்க கவிதையோடும் தோழர் செந்தில்குமார், தோழர்.மாதவன், கவிஞர் தோழர் வித்யாசாகர் அவர்கள் உணர்வுமிக்க கவிதையோடும் பொறியாளர் சேகர் அவர்களும் உரையாற்றினர். அடுத்து, தினமலரைப் புறக்கணிப்போம் என்றக் கோரிக்கையோடு உறுதிமொழி ஏற்றிவைக்க, தோழர் செல்லம்மா வித்யாசாகர் அவர்கள் முதல் ஒப்பம் இட்டு தொடங்கிவைக்க பங்கேற்ற அனைவரும் ஒப்பம் இட்டார்கள். இறுதியாக, தோழர் வின்சென்ட் அவர்கள் உரையாற்றினார்கள். காஞ்சி மக்கள் மன்றத்தின் சார்பில் உருவாக்கப்படும் தோழர்.செங்கொடி நினைவுமண்டப பணிகளுக்கு கொடைஅளிக்க வேண்டும் என்ற கோரிக்கையினை தோழர். தமிழ்நாடன் முன்வைக்க பலரும் முன்வந்து கொடைநல்கினர். தனது குடும்பத்தார் படித்துவந்த தினமலர் நாளிகையினை நிறுத்தச்செய்த தோழர் குமரேசன் அவர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் அவையில் நன்றியும் பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டது. மிகுந்த எழுச்சியோடும் உணர்வுப்பூர்வமாகவும் நடைபெற்ற இந்நிகழ்வில் தொழிலதிபர்கள் இராசேந்திரன், செந்தில் ஆகியோரும் தோழர்.செயபாலன், தோழர். பிரான்சிசு சீசர், தோழர். சிவராமகிருட்டிணன், தோழர். நடராசன், தோழர் கருப்பசாமி, கவிஞர் தமிழ்க்காதலன், ஓவியர் கொண்டல்ராசு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வின் புகைப்படங்களைக் கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்: https://picasaweb.google.com/112864862706759070212/MaaveerarNaal2011 த.தே.வி.இ. பொதுச் செயலாளர் தோழர் தியாகு, நாடுகடந்த தமிழீழ அரசின் துணைப்பிரதமர் திரு.உருத்திராபதி சேகர் ஆகியோரின் காணொளி இணைப்பை இங்கு காணலாம்: http://www.youtube.com/user/thamizhnadan?feature=mhsn குவைத் தமிழர் கூட்டமைப்பு

Saturday, November 26, 2011

Thursday, November 24, 2011

"பத்துப் பேர் வாழத் தொண்ணூறு பேர் சாவதா?

வால் தெருவைக் கைப்பற்றுவோம்'' என்னும் போர் முழக்கம் அண்மைக்கால உலகில் ஓர் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. வால் தெரு அமெரிக்க முதலாளித்துவத்தின் புகலிடம்! ""பத்துப் பேர் வாழத் தொண்ணூறு பேர் சாவதா?'' என்னும் வெளிப்படையான கேள்வி அமெரிக்காவை மூச்சுத் திணறச் செய்துவிட்டது. உலகின் பாதி சிவப்பாகிவிட்ட காலகட்டத்தில்கூட, இப்படி ஒரு போராட்டம் அமெரிக்காவில் வேர் பிடிக்க முடியவில்லை. உலகெங்குமுள்ள நாடுகள் சுரண்டப்படுவதால், குவிந்து வழிகின்ற செல்வத்தில் அடிமட்ட மக்களுக்குப் பங்கில்லை என்றாலும், வழிவதைக் கொண்டு வயிற்றை நிரப்பிக் கொள்ளும் வாய்ப்பாவது அவர்களுக்கு இருந்தது. அதோடு அவர்கள் அமைதியடைந்தனர். இன்று "உயிரைக் கையில் பிடித்துக் கொண்டாவது வாழலாம்' என்னும் நிலைக்கும் மோசம் வந்துவிட்டது. வேலையில்லாத் திண்டாட்டம் ஒருபுறம்; கிடைக்கும் வேலைக்கும் போதிய ஊதியம் இல்லை என்பது இன்னொருபுறம். ஒபாமாவுக்கு முந்திய காலத்திலேயே இந்தச் சிக்கல் தோன்றிவிட்டது. ஆயினும், இந்தச் சிக்கல்களுக்கெல்லாம் சிறந்த தீர்வைத் தன்னால் வழங்க முடியும் என்று ஒபாமா தேர்தல் காலத்தில் வாக்குறுதிகளை அள்ளி வீசினார்! ""இந்தத் தருணத்துக்காகக் காத்திருந்த அந்த மக்கள் நாம்தாம்!'' ஒபாமாவின் இந்த முழக்கம் அமெரிக்கர்களுக்குக் கிளர்ச்சி ஊட்டியது. அந்தத் தருணம் வந்துவிட்டதாக மக்கள் நம்பினார்கள். மூடி இறுகிப் போயிருந்த கதவுகளை ஒபாமா திறந்துவிடப் போகிறார்; வாழ்க்கைச் சிக்கல்கள் ஒரு முடிவுக்கு வரப்போகின்றன என்று எதிர்பார்த்திருந்தார்கள். பொருளாதார முறை மாறாமல் பீடத்தில் அமர்கின்ற மனிதர்கள் மாறுவதால் என்ன மாற்றம் வந்துவிட முடியும்? ஒபாமா இன்று புறந்தள்ளப்பட்ட மனிதராகிவிட்டார்! 1989-ல் சோவியத் நாடு சீர்குலைந்து சிதறிச் சின்னாபின்னப்பட்ட பிறகு, தம்பட்டம் அடித்துக்கொண்டு உயர்ந்தெழுந்த தாராளமயமாக்கல் கொள்கை உலகை ஒரு கிராமமாகச் சுருக்கி பன்னாட்டு முதலாளிகளை வெடித்துப் போகுமளவுக்குப் பெருக்கச் செய்தது. அந்தக் கொள்கை உலகெங்கும் எண்ணற்ற குழந்தைகளைப் பெற்றெடுத்தது. மன்மோகன் சிங்கும், அலுவாலியாவும், ப. சிதம்பரமும் இந்தியாவில் அந்தக் கொள்கை ஈன்றெடுத்த மக்கள்தாம்! நாளொன்றுக்கு 32 ரூபாய் வருவாய் உள்ளவனும், ஒரு கணவனும், மனைவியும் இரு மக்களும் வசிப்பதற்கு 77 மாடிகள் கொண்ட வீட்டை 7,000 கோடி ரூபாய்க்குக் கட்டிக் கொண்டுள்ள அம்பானியும் வறுமைக் கோட்டுக்கு மேலானவர்கள் என்று ஒரே தட்டில் வைத்துச் சமப்படுத்த நினைக்கும் மன்மோகன் அரசின் கொள்கைகள் தாராளமயமாக்கல் கொள்கையிலிருந்து இரவலாகப் பெறப்பட்டவைதாம். ஒரு தனிமனிதன் தன்னுடைய சிறு தொழில் முறிந்து திவாலாகிப் போகின்றபோது கண்டுகொள்ளாத ஓர் அரசு, விஜய் மல்லைய்யாவின் கிங் ஃபிஷர் நிறுவனம் கடனில் மூழ்குகின்றபோது கவலை கொள்கிறது. அரசு கை கொடுக்க வேண்டும் என்பதை ஒரு கடமையாக்குகிறது அந்த நிறுவனம்; அப்படிச் செய்வது இன்றியமையாதது என்று மத்திய அமைச்சர் வயலார் ரவியும் பரிந்துரைக்க முந்துகிறார். இதேபோல் அமெரிக்காவிலும் பிற நாடுகளிலும் வங்கிகள் முறிவுற்றபோதும், ஆட்டோமொபைல் நிறுவனங்கள் நலிவுற்றபோதும், அவற்றுக்கு முட்டுக்கொடுக்க அந்தந்த நாட்டு அரசுகள் முனைந்து நின்ற நிலையில் மக்களிடம் ஏற்பட்ட கொதிப்புத்தான் இந்த "வால் தெருவைக் கைப்பற்றுவோம்' என்ற போராட்டம். மக்களின் வரிப்பணம் பெருமுதலாளிகளை முட்டுக்கொடுக்க ஏன் செலவு செய்யப்பட வேண்டும்? அவர்களின் நிறுவனங்களைக் காக்க அரசு ஏன் முன்னுரிமை அளிக்க வேண்டும்? வளம் கொழிக்கச் செய்யும் பொருளாதாரக் கொள்கை என்றீர்களே! தொண்ணூறு பேரை உறிஞ்சிப் பத்துப் பேர் வாழ்வது என்ன கொள்கை? வசதியுள்ள சிலருக்கும் வசதியற்ற பலருக்கும் உலகம் இதுவரை அறிந்திராத வகையில் இடைவெளி அகன்று போயிருப்பதுதானே இந்தக் கொள்கையால் ஏற்பட்ட பயன்? பெருமுதலாளிகளோடு கூட்டணி அமைத்துக்கொண்டு ஆட்சி நடத்துவதன் விளைவுதானே இந்த அராஜகப் போக்கு! கூழுக்குப் போட உப்பில்லை என்பானுக்கும், பாலுக்குப் போடச் சீனி இல்லை என்பானுக்கும் கவலை ஒன்றுதான்! ஆனால், தேவை ஒன்றுதானா? எவனுடைய தேவை முன்னுரிமை உடையது? "கடையனுக்கும் கடைத்தேற்றம்' என்னும் நூலில் சான்ரசுகின் சொல்வார்: ""ஒருவனிடம் பத்து ரூபாய் இருப்பதால் அவன் மகிழ்ச்சியடைவதில்லை; பக்கத்திலிருக்கும் இன்னொருவனிடம் அந்தப் பத்து ரூபாய் இல்லாதபோதுதான் அவன் மகிழ்ச்சி அடைகிறான். அப்போதுதான் அடுத்தவனுக்கு ஒரு விலை குறிக்க முடியும்?'' தாராளமயமாக்கல் கொள்கை மேட்டுக்குடியினர்க்கும், அடிமட்ட நிலையினர்க்கும் இருக்கும் இடைவெளியை மென்மேலும் பெருக்குவதில்தான் உயிர்த்திருக்கிறது. 2008-ல் ஏற்பட்டு இன்று வரை நீடிக்கும் பொருளாதாரச் சீர்குலைவின் விளைவுதான் பெருமுதலாளிகளுக்கு எதிராக ஆங்காங்கே வெடித்துக் கிளம்பும் இந்தப் போராட்டம்! கிரீசு நொறுங்கிவிட்டது; இத்தாலி தவியாய்த் தவிக்கிறது. அயர்லாந்து நன்றாக இல்லை. ஐரோப்பிய ஒன்றியத்தில் எந்த நாட்டு மக்கள்தான் நிறைவாக வாழ்கிறார்கள்? அமெரிக்காவின் நியூயார்க், இங்கிலாந்தின் லண்டன், இத்தாலியின் ரோம், ஜெர்மனியின் பிராங்பர்ட், ஸ்பெயினின் மாட்ரிட், போர்ச்சுகலின் லிஸ்பன், செர்பியா, மெக்ஸிகோ, பெரு, சிலி என 82 நாடுகளில் 951 நகரங்களில் "வால் தெருவைக் கைப்பற்றுங்கள்' என்னும் போர்த் தீ கொழுந்து விட்டு எரிகிறது. இந்தப் போராட்டத்தின் சிறப்பு அமெரிக்காவும், மேற்கு ஐரோப்பாவும் இதன் களங்களாக உள்ளன என்பதுதான். இன்னொரு சிறப்பு, குறிப்பான எந்தத் தலைவனாலும் இது வழிநடத்தப்படவில்லை என்பது. தானாக வெடித்துக் கிளம்பிய ஒன்று இது! பிறிதொரு பெருஞ்சிறப்பு, இந்தப் போராட்டம் எந்தக் குறிப்பிட்ட தனியொரு ஆட்சியாளனுக்கும் எதிரானதில்லை. கோபம் ஒபாமா மீதன்று, கடைப்பிடிக்கப்படும் பொருளாதார முறையின் மீதானது. ஒபாமாவானாலும், புஷ் ஆனாலும், மன்மோகன் ஆனாலும், அத்வானி ஆனாலும், எவரானாலும் போர்டு நிறுவனத்துக்கும், அம்பானிகளுக்கும் சேவை செய்ய வந்தவர்களே! 2008-ல் பல மேலைநாடுகளைத் தாக்கிய பொருளாதார மந்தம் என்னும் நிலை இந்தியாவைத் தாக்கவில்லை என்று மன்மோகன் ஒரு முறை மகிழ்ந்தார். ஆனால், அதற்கு முன்னரே இந்தியாவின் நிலை கவலைக்கிடம். அங்கே 82 நாடுகளில் போராட்டம் என்றால் இந்தியாவில் ஒரிசா, ஜார்க்கண்ட், சத்தீஷ்கர், மத்தியப் பிரதேசம், பிகார், மகாராஷ்டிரம், ஆந்திரம், மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம் போன்ற ஒன்பது மாநிலங்களில் 60 மாவட்டங்களில் நம்முடைய ஆட்சியும் இல்லை; அரசியல் சாசனமும் இல்லை. அவை மாவோயியவாதிகளின் பிடியில் இருக்கின்றன. ஆந்திரம் தொடங்கி நேபாளம் வரை அந்த இயக்கம் வேர் பி டித்து நிலைபெற்றிருக்கிறது. இந்தியாவின் உள்துறை அமைச்சராகத் திகழும் ப. சிதம்பரம், ""மாவோயியம் என்பது பயங்கரவாதத்தை விடக் கொடுமையானது'' என்று சொல்கிறார். அவரால் பயங்கரவாதத்தையும் ஒழிக்க முடியவில்லை; மாவோயியத்தையும் ஒழிக்க முடியவில்லை. அலைக்கற்றை ஊழலில் இவர் பெயரும் சேர்ந்து அடிபடத் தொடங்கிய உடனே, இவர் சனியின் பீடிப்புத்தான் இதற்குக் காரணம் என்று ஒரு நவக்கிரகக் கோயிலுக்குத் தன் மனைவி, மகன், மருமகளுடன் சென்று காக்கை மண்பொம்மையைத் தலையில் சுமந்துகொண்டு குடும்பத்துடன் மூன்று முறை பிராகாரம் வந்திருக்கிறார். மாவோயியத்தையும், பயங்கரவாதத்தையும் ஒழிப்பதற்குக்கூட ஏதாவது ஒரு தீர்த்த யாத்திரைக்குச் சிதம்பரம் திட்டமிட்டு வைத்திருக்கக் கூடும்! 60 மாவட்டங்களில் மாவோயியவாதிகள் நிலைபெற்றிருப்பதற்குக் காரணம் என்ன? இந்தியா முழுவதும் வனச் செல்வம், மலைச் செல்வம், சுரங்கச் செல்வம் ஆகியவை கடந்த சில காலங்களாகக் கொள்ளையடிக்கப்பட்டு சூறையாடப்பட்டன. ஆட்சியாளர்களும் தொழில் நிறுவனங்களும் கூட்டாளிகள்! மதுரைக்குப் பக்கத்தில் கீழவளவில் இருந்த ஒரு மலையே காணாமல்போய், மலை இருந்த இடம் சமதளம் ஆகிவிட்டது. அழகிரி ஆசீர்வாதம் மலைக்குக் கிட்டாமல், சில மனிதர்களுக்குக் கிட்டியமையால் மலை தன் ஆவியைத் துறந்துவிட்டது என்கிறார்கள் சுற்றுப்புறத்தில் வாழும் பொதுமக்கள். கர்நாடகத்தில் ரெட்டி சகோதரர்கள் கைங்கர்யத்தால் ஒரு சுரங்கமே சீனாவுக்கு ஏற்றுமதியானது; எல்லாம் நம் அரசின் துணையோடுதான். அதில் அடித்த கொள்ளையைக் கொண்டு ரெட்டி சகோதரர்களால் எடியூரப்பாவின் அரசை உருவாக்கவும் முடிந்தது; அவரைக் கண்ணீர் விட வைத்துக் கீழிறக்கவும் முடிந்தது. மாவோயிய முறைகள் நியாயமானவை என்பதல்ல; சுரண்டல்காரர்களோடு கூட்டணி சேரும் ஆட்சியாளர்கள்தாமே மாவோயியவாதிகளின் பிறப்புக்குக் காரணம். பெருமுதலாளிகளின் கருவறையில் அவர்களுக்கு எதிரானவர்கள் வளர்கிறார்கள் என்பதுதானே மார்க்சீய அறிவு வாதம். மாவோயியவாதிகளோடு மன்மோகன் சிங்குக்குள்ள கோபமே கனி வளங்களைச் சந்தைப்படுத்த முடியவில்லை என்பதுதானே. தாராளமயமாக்கல் என்பதன் தாரக மந்திரம் சந்தை. தன்னுடைய பேரழகு மனைவியின் மேகம் போன்ற பெருங்கூந்தல் கூட ஒரு தொழில்முனைவோனுக்குச் சந்தைப் பொருள்தான்! "வால் தெருவைக் கைப்பற்றுவது' என்பதன் பொருள் சுரண்டலை ஒழிப்பது என்பதுதான். பத்துப் பேர் வாழத் தொண்ணூறு பேர் சாவதா?

Tuesday, November 22, 2011

'டேம் 999' படத்தை தடை செய்ய வைகோ வலியுறுத்தல்

முல்லைப் பெரியாறு அணையை உடைக்கும் சதிதிட்டத்தின் ஒருபகுதியாக, 'டேம் 999' என்ற ஆங்கிலத் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ள மதிமுக பொதுச் செயலர் வைகோ, இப்படத்தை வெளியிட மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும், தமிழ்நாட்டுத் திரையரங்குகளில் இப்படம் திரையிடப்படுமானால், அதனை எதிர்த்துத் தடுத்து நிறுத்த, மதிமுக அறப்போரில் ஈடுபடும் என்று அவர் எச்சரித்துள்ளார். கேரளத்தின் சதிகார சக்திகள், ஒரு திரைப்படத்தைத் தயாரித்து வெளியிடுவதற்கு, இவ்வளவு காலமும் ரகசியமாக வைத்திருந்து, படத்தைத் தயாரித்து, வருகின்ற 25 ஆம் தேதி, இந்தியாவிலும், ஐக்கிய அரபு நாடுகளிலும் வெளியிட இருக்கின்றனர். படத்தின் பெயர், டேம் 999. இந்தத் தலைப்பே விஷமத்தனமானது. முல்லைப்பெரியாறு அணையில் 999 ஆண்டுகளுக்குத் தமிழ்நாட்டுக்குச் சட்டப்படியான உரிமை இருப்பதைக் காட்டுவதற்காகத்தான், இந்தத் தலைப்பை வைத்து உள்ளனர். ஆங்கிலேயர் ஆட்சியில், 100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அணை, உடைந்து நொறுங்குவது போலவும், பிரளயமாய் வெள்ளம் பாய்வது போலவும், லட்சக்கணக்கான மக்கள், குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உட்பட, பரிதாபமாகப் பலியாகி மடிவது போலவும் படத்தின் உச்சகட்டக் காட்சியை அமைத்து உள்ளனர். , நவ.22: டேம் 999 திரைப்படம் தமிழக திரையரங்குகளில் திரையிடப்படுமானால் அதை தடுத்து நிறுத்த மதிமுக அறப்போரில் ஈடுபடும் என அக்கட்சியின் பொதுச்செயலர் வைகோ அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "தென்தமிழ்நாட்டின் எதிர்காலத்தையே படுநாசம் செய்யக்கூடிய விதத்தில், ஐந்து மாவட்டங்களுக்குப் பாசனத்துக்கு நீரும், குடிநீரும் வழங்கி வருகின்ற, பென்னி குக் கட்டிய முல்லைப்பெரியாறு அணையை எப்படியும் உடைத்தே விடுவது என்று கேரள அரசு முடிவு எடுத்து விட்டது. 2006 ஆம் ஆண்டு பிப்ரவரி 27-ல், இந்தப் பிரச்னையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டி உச்சநீதிமன்றம் அளித்த தீர்பபைக் காலில் போட்டு மிதித்து விட்டு, அணையை உடைப்பதற்கும் அதிகாரம் உண்டு என்று கேரளம், சட்டமன்றத்தில் ஒரு சட்டத்தையே நிறைவேற்றியது. தற்போது, அணையை உடைப்பதற்கு, 40 கோடி ரூபாய்களை ஒதுக்கி விட்டது. எந்த நேரத்திலும், தென்பாண்டி மண்டலத்துக்கு அந்த அபாயம் நேரிடலாம். கேரளம் கட்டுவதற்குத் திட்டமிட்டு உள்ள புதிய அணையில் இருந்து, தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டுத் தண்ணீரும் தர வாய்ப்பு இல்லை. ஏனெனில், புதிய அணை, பள்ளத்தில் அமையும். கேரள அரசின் அக்கிரமப் போக்கை, மத்திய அரசு கண்டுகொள்ளாததுடன், ஊக்குவிக்கும் வகையில், கேரளத்தினர் தயாரித்துக் கொடுத்த ஒரு அணை மசோதாவை நிறைவேற்றுவதற்கும் திட்டமிட்டு விட்டது. திரைப்படம் மூலம் விஷமத்தனம்.. கேரளத்தின் சதிகார சக்திகள், ஒரு திரைப்படத்தைத் தயாரித்து வெளியிடுவதற்கு, இவ்வளவு காலமும் ரகசியமாக வைத்திருந்து, படத்தைத் தயாரித்து, வருகின்ற 25 ஆம் தேதி, இந்தியாவிலும், ஐக்கிய அரபு நாடுகளிலும் வெளியிட இருக்கின்றனர். படத்தின் பெயர், டேம் 999. இந்தத் தலைப்பே விஷமத்தனமானது. முல்லைப்பெரியாறு அணையில் 999 ஆண்டுகளுக்குத் தமிழ்நாட்டுக்குச் சட்டப்படியான உரிமை இருப்பதைக் காட்டுவதற்காகத்தான், இந்தத் தலைப்பை வைத்து உள்ளனர். ஆங்கிலேயர் ஆட்சியில், 100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அணை, உடைந்து நொறுங்குவது போலவும், பிரளயமாய் வெள்ளம் பாய்வது போலவும், லட்சக்கணக்கான மக்கள், குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உட்பட, பரிதாபமாகப் பலியாகி மடிவது போலவும் படத்தின் உச்சகட்டக் காட்சியை அமைத்து உள்ளனர். கடந்த 1975-ல், சீனாவில், பாங்கியாவோ எனும் அணை உடைந்ததைப் பின்னணி அமைத்து உள்ளனர். இந்திய, ஹாலிவுட் நடிகர்களைக் கொண்டு, மலையாளிகள் முதலீடு செய்து, இப்படத்தைத் தயாரித்து உள்ளனர். அச்சுதானந்தன் முதல்வராக இருந்தபோது, முல்லைப்பெரியாறு அணை உடைவது போலவும், இலட்சக்கணக்கான மக்கள் சாவது போலவும் கிராஃபிக்ஸ் காட்சிகளை வடிவமைத்து, ஐந்து இலட்சம் குறுந்தகடுகளை, கேரளம் முழுமையும் வழங்கினர். முதல்வரின் இணையதளத்திலேயே இந்தப் போலிக் காட்சிகளைக் காண்பித்தனர். அதைத்தான் இப்போது, பிரமாண்டமான திரைப்படக் காட்சியாக அமைத்து வெளியிடுகின்றனர். அரிசி, பால், காய்கறிகள், இறைச்சி உள்ளிட்ட அனைத்து உணவுப் பண்டங்களும் கேரளத்துக்கு அனுப்பி, அவர்களுக்கு எல்லாவிதத்திலும் உதவியாக இருந்து வருகின்ற நம் தமிழ்நாட்டின் தலையில் கல்லைப் போட, என்ன நெஞ்சழுத்தம் அவர்களுக்கு இருக்க வேண்டும்? முல்லைப் பெரியாறு அணையை உடைக்க சதி.. முல்லைப் பெரியாறு அணை, எத்தகைய நில நடுக்கத்துக்கும் ஈடு கொடுக்கக்கூடிய வலிமையோடு உள்ளது என்பதைத் தமிழகத்துப் பொறியாளர்கள், ஆணித்தரமான ஆதாரங்களோடு குறுந்தட்டாக ஆக்கி உள்ளனர். ஆயினும், நமக்கு உரிமை உள்ள அணையை உடைக்க, நம் வாழ்வில் மண்ணைப் போட, கேரளம் முடிவு செய்து விட்டது. நம்மைச் சீண்டிப் பார்க்கிறார்கள். நம் முகத்திலேயே மிதிக்கவும் துணிந்து விட்டார்கள். கேரள மக்களை நாம் எதிரிகளாகக் கருதியது இல்லை. ஆனால், இப்பிரச்னையில் தொடக்கத்தில் இருந்தே அங்கு உள்ள அரசியல் கட்சிகளும், சில அக்கறை உள்ள சக்திகளும், ஒன்றிரண்டு பத்திரிகை நிறுவனங்களும், எப்படியும் முல்லைப் பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என முடிவு செய்து, அந்தச் சதித்திட்டத்தை நிறைவேற்றத் துடிக்கின்றார்கள். இந்தப் படத்தில், புராண காலத்துச் சம்பவங்களையும், மனிதர்களின் உணர்ச்சிப் போராட்டங்களையும் இணைத்து, நம் முல்லைப் பெரியாறு அணை உடைவதால் பெருந்துயர் விளைந்தது என்று சித்தரித்து உள்ளனர். இதனைப் புத்தகமாகவும் வெளியிட்டு உள்ளனர். தமிழ்நாட்டிலும் இந்தப் படம் திரையிடப்படும் என்று விளம்பரம் செய்து உள்ளனர். தமிழ்நாட்டுக்குப் பெருங்கேடு செய்யயும் கேரளத்தின் திட்டத்தை, எக்காளத்தோடு வெளிப்படுத்தும் இத்திரைப்படத்தை, தமிழ்நாட்டில் திரையிட, தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது. இந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க, கடுகு அளவு அக்கறையேனும் இந்திய அரசுக்கு இருக்குமானால், இந்தியாவில் எங்கும் திரையிட, மத்திய அரசு அனுமதிக்கக்கூடாது. 'இந்தத் திரைப்படத்தைத் தமிழ்நாட்டில் திரையிட அனுமதிக்காதீர்கள்' என்று, தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபை, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்தியத் திரைப்பட நடிகர் சங்கம், தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கம் ஆகிய அமைப்புகளுக்கு, இருகரம் கூப்பி வேண்டுகோள் விடுக்கின்றேன். அவர்களுக்குக் கடிதமும் அனுப்பி உள்ளேன். அனைத்தையும் மீறி, தமிழ்நாட்டுத் திரையரங்குகளில் இப்படம் திரையிடப்படுமானால், அதனை எதிர்த்துத் தடுத்து நிறுத்த, மறுமலர்ச்சி தி.மு.க. அறப்போரில் ஈடுபடும் என எச்சரிக்கின்றேன்," என்று வைகோ கூறியுள்ளார். ராமதாஸ் கோரிக்கை... இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், "கேரளத்தைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் பணியாற்றும் ஐக்கிய அரபு அமீரக நாடுகள் ஆகியவற்றின் நிதி உதவியுடன் 'டேம் 999' என்ற பெயரில் ஆங்கில திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் இந்தியாவில் வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளது. முல்லைப் பெரியாற்று அணை உடைந்து பேரழிவு ஏற்படுவது போன்ற காட்சிகள் நிறைந்த இப்படம் வெளியானால் தமிழகம், கேரளம் ஆகிய இரு மாநிலங்களிலும் பொது அமைதி பாதிக்கப்படும். முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்று பல்வேறு வல்லுநர் குழுக்கள் ஏற்கனவே அறிக்கை அளித்துள்ள நிலையில் எப்படியாவது அந்த அணையை உடைத்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் 'டேம் 999' திரைப்படத்தை கேரள அரசு நிதி உதவி செய்து தயாரித்திருக்கிறது. எனவே, இந்தத் திரைப்படத்தை இந்தியாவில் வெளியிட தடை விதிக்க வேண்டும். இதற்காக மத்திய அரசை தமிழக முதல்வர் ஜெயலலிதா கடுமையாக வலியுறுத்த வேண்டும்," என்று ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். http://news.vikatan.com/index.php?nid=5099

Friday, November 18, 2011

தினமலர் பொறுக்கி அந்துமணி இரமேஷை தூக்கில் போடுவது அநீதி! - வினவு

ராஜீவ் கொலை வழக்கும் ஒரு பெட்டி கிரிமினலின் குற்றமும் ஒன்றா? ஆம் என்கிறது தினமலர். நாமும் அதை மறுக்காமல் தினமலர் பாணியில் வேறு சில குற்றங்களை ஆராய்ந்து பார்ப்போம். தினமலர் பொறுக்கி அந்துமணி இரமேஷை தூக்கில் போடுவது அநீதி! 13.11.2011 தினமலரில் அதன் சிறப்பு நிருபர் பெயரில் எழுதப்பட்ட “செந்தமிழர்கள் கொந்தளிக்காதது ஏன்?” என்றொரு கட்டுரையை வெளியிட்டிருக்கிறார்கள். அதை நீங்களே ஒரு முறை படித்துவிட்டு வாருங்கள், விரும்பாதவர்களுக்கு அதன் சுருக்கம் இங்கே: அதில் 23 வயது சவுமியா எனும் அழகான கேரளப் பெண்ணை ஓடும் ரயிலில் வன்புணர்ச்சி செய்து கீழே தள்ளிக் கொன்ற கோவிந்தசாமி என்ற குற்றவாளிக்கு நீதிமன்றத்தில் மரண தண்டனை கொடுக்கப்பட்டிருக்கும் விவரத்தை தருகிறார்கள். பின்னர் அந்த கோவிந்தசாமி விருத்தாசலத்தைச் சேர்ந்த பச்சைத் தமிழன், மாற்றுத்திறனாளி, தாழ்த்தப்பட்டவர் என்பதால் அவர் மீதான மரண தண்டனையை எதிர்த்து நாம் குரல் கொடுக்க வேண்டுமல்லவா என்பதை போற்றுவது போல இழிவுபடுத்தும் வஞ்சப் புகழ்ச்சி பாணியில் எழுதியிருக்கிறார்கள். தினமலரின் நோக்கம் ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூவர் மீதான தூக்கை எதிர்த்து தமிழகத்தில் எழுந்த எதிர்ப்பை இங்கே பொதுப்புத்தியில் ஒரு சென்டிமெண்டான விசயத்தை வைத்து இழிவுபடுத்துவதுதான். மரணதண்டனை வேண்டாமென்று கோருபவர்கள் இத்தகைய கொடூரமான காமப் பொறுக்கியை காப்பாற்ற குரல் கொடுப்பார்களா என்று கேட்பதன் மூலம் அந்த அழகான கேரளப் பெண்ணின் அனுதாபத்தை வைத்து ராஜீவ் கொலை வழக்கில் சிக்க வைக்கப்பட்டிருக்கும் மூவரை வில்லனாக்குவதுதான் தினமலரின் நோக்கம். அதே நேரம் கூடுதலாக தமிழன், மாற்றுத் திறனாளி, தலித் என்ற விவரங்களின் மூலம் தினமலரின் பார்ப்பன விழுமியங்களை நிலைநிறுத்துவது ஒரு போனஸ் நோக்கம். அதிலும் அந்த கோவிந்தசாமி தாழ்த்தப்பட்டவர் என்பதால் வயிற்றுப்பிழைப்புக்காக சிறு திருட்டுகள் செய்து இப்படி உணர்ச்சிவசப்பட்டு ஒரு தவறை செய்து விட்டார், அவரைக் காப்பாற்றுங்கள் என்று நயவஞ்சமாக எழுதுகிறார்கள். அதே போல இந்துத்வ இந்திய உணர்வுக்கு சேதாரம் ஏற்படக்கூடாது என்பதற்காக தமிழுணவர்வை குறி வைத்து தாக்குகிறார்கள். என்ன எழுதி என்ன பயன்? தினமலர் உருவாக்கி வைத்திருக்கும் பிற்போக்கான வாசகர் வட்டம் இந்த வஞ்சப் புகழ்ச்சி இகழ்ச்சியை புரிந்து கொள்ளாமல் தினமலர் இப்படி எழுதலாமா என்று கோபப்படுகிறது. அவர்களெல்லாம் கோவை என்கவுண்டர் மேனியாவில் மனதைப் பறி கொடுத்தவர்கள் அல்லவா, அதனால் இளம் பெண் கற்பழிப்பைத் தாண்டி மற்ற விவரங்களின் மறை பொருளை புரிந்து கொள்ள முடியாத துரதிர்ஷடசாலிகள். இருந்தாலும் ஆர்.எஸ்.எஸ் அம்பிகள் தினமலர் கட்டுரைக்கு அருஞ்சொற்பொருளை எழுதி வாசகர் கடிதத்தில் புலம்பும் அப்பாவித் தமிழர்களுக்கு தேறுதல் சொல்லி வருவதோடு தினமலருக்கு வாழ்த்தையும் தெரிவிக்கிறார்கள். மூவர் தூக்கை வெறும் மனிதாபிமான நோக்கில் பேசிய பலரும், அதன் அரசியல் முக்கியத்துவத்தை பேசினால் பிரச்சினை என்று வெறும் சென்டிமெண்டாக மட்டும் மக்களிடம் கொண்டு போனவர்களும், தினமலரின் இந்த சாணக்கிய நரித்தந்திரத்தை எதிர் கொள்ள முடியாமல் திணறுகிறார்கள். எனினும் அவர்களின் தவறு தினமலரின் வக்கிரத்தோடு ஒப்பிட முடியாத ஒன்று. முதலில் ராஜிவ் கொலை என்பது ஆயிரக்கணக்கான ஈழத்தமிழரின் வாழ்வுரிமை போராட்டத்தோடு சம்பந்தப்பட்ட ஒன்று. அமைதிப்படையை அனுப்பி ஈழத்தமிழர்களை கொன்று குவித்த இந்திய அரசின் போர்க்குற்றத்தோடு தொடர்புடைய ஒன்று. ராஜிவ் கொலை வழக்கை வெறும் கிரிமினல் வழக்காக விசாரிக்காமல், அமைதிப்படை அனுப்பிய காலத்திலிருந்து தொடர்புடைய அரசியல் வழக்காக விசாரித்தால் பல உண்மைகள் வெளியே வரும். அதன்படி பார்த்தால் ராஜீவ் கொலை வழக்கில் குற்றமிழைக்காத மூவர் மட்டுமல்ல, அந்தக் கொலையை செய்தவர்களும் குற்றமற்றவர்கள் என்று ஆதாரங்களுடன் நிரூபிக்க முடியும். அதாவது அமைதிப்படை அட்டூழியத்தின் எதிர்விளைவுதான் ராஜவ் கொலை. இதுவும் ஒரு பெட்டி கிரிமினலின் குற்றமும் ஒன்றா? ஆம் என்கிறது தினமலர். நாமும் அதை மறுக்காமல் தினமலர் பாணியில் வேறு சில குற்றங்களை ஆராய்ந்து பார்ப்போம். தினமலர் வாரமலரில் எழுதிப் புகழ்பெற்றவர் அந்துமணி எனும் இரமேஷ். இவர் தினமலர் சென்னை பதிப்பின் உரிமையாளரும் கூட. ராமசுப்பையரின் வழியில் வந்த பார்ப்பன உத்தமர். இவருக்கு இருக்கும் அதிகார செல்வாக்கை வைத்துப் பார்த்தால் இவர் நூற்றுக்கணக்கான பெண்களை சீரழித்திருக்க வேண்டும். அப்படி இல்லாமல் உணர்ச்சி வசப்பட்டு சில பெண்களோடு மட்டும் கொஞ்சம் விளையாடி இருக்கிறார். அதில் ஒரு பெண், தினமலர் அலுவலகத்தில் வேலை செய்தவர் போலீசில் புகார் கொடுக்கிறார். இதை பாலியல் வக்கிரம் என்று மட்டும் புரிந்து கொள்ளாதீர்கள். அந்துமணிக்கு சினிமா, மேன்மக்கள், பணக்காரர்கள், அரசியல்வாதிகள், முதலாளிகள் என்று பரந்துபட்ட தொடர்பு, வாய்ப்புகள் இருந்தும் அவர் எப்போதும் எல்லை மீறியவரில்லை. ஏதோ போதாத காலம், கீழ் பணியாற்றும் பெண்ணிடம் கொஞ்சம் ‘லைட்டாக’ வரம்பு மீறிவிட்டார். பின்னர் புகார் கொடுத்த அந்தப் பெண்ணை மனநோயாளியாக ஆக்கி அலுவலகத்தை விட்டு துரத்தி, போலீசு உலகை கொஞ்சம் கவனித்து அந்த புகாரை குப்பைக் கூடைக்கு வீசி எறிந்து விட்டார். அவர் நினைத்திருந்தால் அந்தப் பெண்ணை கூலிக்கு ஆள் அமர்த்தி கொலையே செய்திருக்கலாம். அப்படி செய்யாதது ஏன் என்பதில்தான் அவரது ஜீனின் மாட்சிமை அடங்கியிருக்கிறது. பார்பனர்கள் எப்போதும் யாரையும் நேரடியாக கொலை செய்து பழக்கமில்லை. அதெல்லாம் மாட்டுக்கறி சாப்பிடும் காட்டு மிராண்டிகளான ‘கீழ்சாதி’ பயல்கள் செய்வது. அந்துமணி இரமேஷ் அய்யரை அப்படி எடை போட்டு விடாதீர்கள். இதற்கு மேல் அந்துமணியை கைது செய்து அந்த பாலியல் வன்புணர்ச்சிக்கான வழக்கில் விசாரித்து அவருக்கு தூக்குதண்டனை வாங்கித்தரவேண்டும் என்று யாராவது கிளம்பினால் அது தருமத்தின்படியும், மனு தர்மத்தின்படியும், பார்ப்பன நெறிப்படியும் அநீதியானதாகும். மேலும் உலகை ஆளும் ஒரு பார்ப்பனனை அப்படி தூக்கில் போட்டால் இந்தியாவே இயற்கை சீற்றத்தால் அழியுமென்பது உறுதி. ஆகவே யாரும் அந்த புண்ணியவானுக்கு தீங்கிழைக்காமல் இருங்கள் என்று கேட்டுக் கொள்கிறோம். தினமலர் பொறுக்கி அந்துமணி இரமேஷை தூக்கில் போடுவது அநீதி!ஏற்கனவே காஞ்சி பெரியவாள் ஜெயேந்திர சரஸ்வதிக்கு அப்படி ஒரு அபகீர்த்தி நிகழ்ந்ததனால்தான் சுனாமி ஏற்பட்டு ஆயிரக்கணக்கில் மக்கள் இறந்தார்கள். பெரியவாள் துறவறத்தோடு, பார்ப்பன தர்மத்தையும், இந்து மதத்தையும் அல்லும் பகலும் பாடுபட்டு காப்பாற்றும் திருப்பணியை செய்து வந்தவர். தொடர்ச்சியாக அந்த வேலைகளில் ஏற்பட்ட களைப்பு காரணமாக சில பல பார்ப்பன மாமிகளின் மேல் கை வைத்து விட்டார். அதுவும் கூட வன்புணர்ச்சி என்று முடிவு செய்துவிடக்கூடாது. அதெல்லாம் பெரியவாளுக்காக சில பக்தர்கள் ஒப்புதலுடன் மேற்கொண்ட பரிகாரங்கள். அனுராதா ரமணன் மட்டும் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு பெரியவாளின் செய்கையில் குற்றம் கண்டுபிடித்து பொதுவெளியிலும் அம்பலப்படுத்தினார். அவர் புராணக்கதைகள் எதையும் படித்ததில்லை போலும். ஆனானப்பட்ட இந்திரனும், விசுவாமித்திரனும் கூட இப்படி சில தருணங்களில் சஞ்சலப்பட்டவர்கள்தான். அதையெல்லாம் பரப்பிரம்மத்தின் ஆகிருதி விளையாட்டு என்று கொள்வதை விடுத்து இகலோக மனிதப்பதர்களின் நோக்கில் ஆய்வு செய்வது தவறு. இதையெல்லாம் புரிந்து கொள்ளாத குசும்புப் பார்ப்பான் சங்கரராமன் தொட்டதுக்கெல்லாம் மொட்டைக்கடிதாசி போட்டு பெரியாவளை இம்சித்து வந்தான். பெரியவாளும் எத்தனை நாள் இந்தக் கொசுக்கடியை சமாளிப்பது? அவாளுக்கும் சமயத்தில் கோபம் வருமோ இல்லியோ? பக்தரான அப்புவையும், ரவி சுப்ரமணியனையும் கூப்பிட்டு சங்கர ராமனை போட்டுத் தள்ளுமாறு உத்திரவிட்டார். அவர்களும் பெரியவாளின் கொசுக்கடியை கோவில் வளாக்கத்திலையே அரிவாளால் அழித்து விட்டார்கள். தெய்வம் நின்று கொல்லுமென்பது பெரியவாளின் விசயத்தில் உண்மையானது. இது பொறுக்காத சில ஜென்மங்கள் பெரியவாளை கைது செய்து சிறையில் அடைத்து துன்புறுத்தியது அக்கிரமம். ஆனாலும் பெரியவாள் சஞ்சலப்படாமல் தொடர்ந்து போராடி எல்லா சாட்சிகளையும் விலைக்கு வாங்கி, பிறகு நீதிபதிக்கே ரேட் பேசி வழக்கை நீர்த்துப் போகச் செய்து விட்டார். இதெல்லாம் நீதிமன்றங்களில் சகஜம் என்பது ஒரு போண்டா வக்கீலுக்கு கூட தெரியும். தற்போது இந்த வழக்கை மறு விசராணை செய்து குற்றத்தை நீருபித்து பெரியவாளை தூக்கில் தொங்கவிட வேண்டும் என்று சிலர் பேசுவது சரியா? பூலோக இந்துக்களின் சர்வலோக குருவை இப்படி ஒரு கொசுக்கடி அழிப்பிற்காக தூக்கில் தொங்க விடுவது சரியா? நேர்மையுள்ள இந்துக்கள் சிந்திக்கட்டும். ஒரு வேளை சில தமிழ் – திராவிட – கம்யூனிஸ்ட் வெறியர்கள் அப்படி பெரியவாளை தூக்கில் போடுவதற்கு காரணமாக இருந்தால் இந்தியா அழிவது உறுதி. விருத்தாசலம் கோவிந்தசாமி வயிற்றுப்பாட்டுக்காக திருடியதும், நம்மவா முதல்வர் புரட்சித் தலைவி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததும் ஒன்றா? சில அம்மாஞ்சிகள் அப்படிக் கேட்கிறார்கள். கோவிந்தசாமி திருடி, கற்பழித்ததற்கு தூக்கா, முழு தமிழகத்தையும் மொட்டையடித்த ஜெயாவுக்கு வாய்தாவா என்று கேட்பது மாபெரும் அநீதி. புரட்சித் தலைவி தன்னை பாப்பாத்தி என்று சட்டசபையிலேயே துணிவாக அறிவித்த வீராங்கனை. இது வரை தமிழகம் கண்டமுதல்வர்களில் ஒரே ஒரு இந்து முதல்வர் இவர்தான் என்று வீரத்துறவி இந்து முன்னணி இராம கோபாலனால் பாராட்டப்பட்ட தாய். அவருக்கென்று குடும்பமோ, குட்டியோ எதுவும் கிடையாது. அவர் சொத்து சேர்ப்பது யாருக்காக? தமிழகத்தில் உள்ள எல்லாக் கோவில்கள்களிலும் பூஜை, புனஸ்காரங்கள், யாகங்கள், குடமுழுக்கு செய்து இந்து தருமத்தை காப்பாற்றுவதற்காகவே அப்படி சொத்து சேர்க்கிறார். அதுவும் பெரிய பெரிய முதலாளிகள் தமிழகத்தில் தொழில் துவங்கி கைமாத்தாக வைக்கும் தட்சிணையைப் போய் அப்படி சொத்து சேர்ப்பு, திருட்டு, ஊழல் என்று சொல்வது யாருக்கு அடுக்கும்? மல்லையாவின் மெக்டோவல் தமிழகத்தில் பெருக்கெடுத்து ஓடுவதனால்தானே சூத்திர, பஞ்சம, சண்டாளப் பயல்களுக்கு இலவச லாப்டாப்பெல்லாம் கொடுக்க முடிகிறது? அதற்கு காணிக்கையாக மல்லையா புண்ணியவான் சில போல கோடிகளை அம்மாவுக்கு கொடுத்தால் என்ன தப்பு? பெங்களூரூ சொத்து குவிப்பு வழக்கிற்காக அம்மா எத்தனை நெடிய போராட்டம் நடத்த வேண்டியிருந்தது? இல்லையென்றால் அந்த கோவிந்தராசனை சட்டுப்புட்டென்று தூக்கில் போட தீர்ப்பளித்த மாதிரி ஓரிரு வருடங்களில் வழக்கை முடித்திருந்தால் என்ன நடந்திருக்கும்? ஆக பார்ப்பன அறம் தழைத்தோங்க, பூலோகம் செழித்திருக்க அந்துமணி இரமேஷ், காஞ்சிப் பெரியவாள், புரட்சித் தலைவி போன்ற ஆன்றோரை காப்பாற்றுவது மானமுள்ள ஒவ்வொரு இந்துவின் கடமை என்பதை இங்கே வலியுறுத்துகிறோம். வந்தே மாதரம்! பாரத் மாதாகி ஜெய்!! இந்து தர்மம் ஓங்குக!!!

Friday, October 21, 2011

1 . மக்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்த பின்னரே, அணு உலையை திறக்க வேண்டும் என்பது சரி. ஆனால் நாகர்கோவில் நகரத்தில் 6 ,500 பேர் வசிப்பதாக அறிக்கை தயாரிக்கும் இந்திய அரசை, போபால் விஷ வாயு விடயத்தில் பாதிக்கப்பட்ட மக்களை பல வகையிலும் கை விட்ட , இன்றளவும் கை விட்டு வரும் இந்திய அரசின் நம்பக தன்மையை எப்படி நம்புவது? இத்திட்டத்தின் , கட்டுமான பணியை துவக்கிய திட்ட இயக்குனர் அகர்வால் மர்ம மரணம் குறித்து அரசிடம் இருந்து எந்த விளக்கமும் இதுவரை இல்லை. 2 . இந்தியா இதுவரை ,திட்டமிட்டுள்ள அனைத்து அணு உலைகளும் இயங்கினாலும் , அணு மின் சக்தியின் பங்களிப்பு 10 % மட்டுமே. இந்த வெறும் பத்து சத வீததுக்காக ஏன் இத்தனை ரிஸ்க் எடுக்க வேண்டும்?.இதில் வேறு இதன் கழிவுகளை 24 ஆயிரம் வருடங்கள் பாதுகாக்க வேண்டுமாம். நினைத்து பார்க்கவே மலைப்பாக இல்லையா? 3 . தொண்ணூறு சதவீதம் பங்களிப்பு தரும்,அனல்,புனல்,காற்று, சூரிய சக்தி திட்டங்களை பற்றி அரசு அதிகம் சிந்தித்ததாக தெரியவில்லை. ஐம்பது வருடங்களாக கிடப்பில் உள்ள ஒகேனக்கல் புனல் மின் திட்டத்தை அரசு ஏன் துவங்க மறுக்கிறது? 4 . கூடன் குளம் திட்டம் துவங்கபட்ட ஆண்டு 1988 -89 .அப்போது நிறைய போராட்டங்கள், ஊர்வலங்கள் நாகர்கோவிலில் இருந்து கூடங்குளத்திற்கு நடத்தப்பட்டன. துப்பாக்கி சூட்டில் இருவர் பலி ஆகினர். தீவிர போராட்டங்களின் காரணமாக ,அடிக்கல் நாட்ட வர இருந்த ராஜீவ் காந்தி தனது பயணத்தை ரத்து செய்து விட்டார். போராட்டம் என்றால் 2 பேர் செத்தது போதாதா?. 200 பேர் சாக வேண்டுமா என்ன ?. 5 . அதன் பின்னர் , ரஷ்ய உடைந்தபின்னர் பத்து ஆண்டுகளுக்கு மேலாக இத்திட்டம் கிடப்பில் கிடந்தது. ரஷ்யா உடைந்து விட்டதால், இத்திட்டம் வராது என்று மக்கள் நம்ப தொடங்கி விட்டனர். 6 . ஆனால் திட்ட பணிகள் துவங்கியபோது , பெருமளவு எதிர்ப்பு இல்லை என்பது உண்மை. அதே வேளையில் ,அடையாள உண்ணா விரதங்கள் நடந்தன. கடந்த இரண்டு ஆண்டுகளும் அடையாள உண்ணா விரதங்கள் நடந்தன.அது மீடியாக்களால், கண்டு கொள்ள படவில்லை. ஈழத்தில் படுகொலைகள் நடந்த போது ,மானாட மயிலாட கண்டவர்கள் நாம் என்பதை மறக்க வேண்டாம். மீடியாகளால் கண்டு கொள்ளப்படாதவை ,மக்கள் சபைக்கு வருவதில்லை. அதனால் உங்கள் கவனத்திற்கு வர வாய்ப்பில்லை. 7 . அடுத்து திட்டம் துவங்கிய போது, மக்கள் சுனாமி,ஆழி பேரலை போன்ற வார்த்தைகளை அறிந்து இருக்கவில்லை என்பதை நீங்கள் உணர வேண்டும். தமிழ் நாட்டு வரலாறு அறியாத, ஏன் தனது ,தனது குடும்பத்து வரலாறு அறியாத, எம்.ஜி .ஆர்,சிவாஜி ,ரஜினி வரலாறு அறிந்த, இன்னும் அணு வின் தீமைகளை அறியாத படித்தவர்கள் வாழும் பூமி இது. இந்த நிலையில் ,கூடன்குளத்தை சுற்றி வாழும் படிப்பறிவில்லாத ,பாமர மக்கள் எதை தெரிந்து வைத்திருப்பார்கள் என நீங்கள் நம்புகிறீர்கள்? 8 . பத்து ஆண்டுகளுக்கு முன்னர், ஜப்பானில் அணு உலையும் வெடிக்கவில்லை , இந்தியாவில் சுனாமியும் வரவில்லை. இதை ஏன் நீங்கள் உணர மறுக்கிறீர்கள். இவை ஏற்பட்ட பின்னர் தான் ,மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டது. 9 . ரஷ்ய தொழில் நுட்பத்தில் பாதுகாப்பு இருப்பதாக நாங்கள் நம்பவில்லை. ரஷ்ய தொழில் நுட்பம் இரண்டாம் தரமானது. உதாரணம் , இந்திய விமான படையில் உள்ள மிக்-21 . விமான படையில் இருபது வருடங்கள் பணியாற்றிய எனது நண்பர் சொன்னார்,அவர் கண் எதிரே, நான்கு விமானங்கள் தீ பிடித்தன என்று. அதை ஏன் ரஷ்ய பொறியாளர்களால் சரி செய்ய இயவில்லை? இவர்களுடைய அணு பாதுகாப்பு மட்டும் எப்படி தரமாக இருக்கும்? 10 . ரஷ்ய எம்.பி.பி.எஸ் தரமற்ற கல்வி என்பதால் ,இந்திய அரசு அதை நேரிடையாக இன்னும் அங்கீகரிக்கவில்லை. 11 . மக்கள் எதிர்ப்பு அல்லது புரட்சி வெடிப்பதற்கு நீங்கள் காலக்கெடு எப்படி விதிக்கிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை. லிபியாவில் அறுபது ஆண்டுகளாக மக்கள் மௌனமாக எல்லாவற்றையும் பொறுத்து கொண்டு இருந்தனர். எப்படி திடீர் என்று புரட்சி செய்யலாம் என்று நீங்கள் கேட்பதை போல் உள்ளது. 12 . எண்ணெய் ,வாயு துறையில் லீக் ஏற்பட்டால் அருகில் நிற்கும் நபர் மட்டுமே சாவார். அவரது குடும்பமோ ,வருங்கால சந்ததியோ சாகாது. ஆனால் அணு கதிரியக்கத்தில் சந்ததி சாவும் அல்லது ஊனமாகும். அணு துறையை , எண்ணெய் துறையுடன் ஒப்பிடுவது ஏற்புடையதல்ல. 14 . இந்தியாவில் மின்சார தட்டுபாடாம். ஆனால் இலங்கைக்கு கொடுக்க மட்டும் மின்சாரம் இருக்கிறதாம். உங்கள் வசதிக்காக கீழே தந்துள்ளேன். India Sri Lanka to Share Electricity through Undersea Power Cables As a step towards strengthening bilateral relations, India and Sri Lanka are planning to share electricity through undersea power cables. The interesting features of the project are: A. Indian power circuit Indian power grid from Madurai to feed Rameswaram through an overhead transmission line From Rameswaram undersea cable would be laid to connect Talai Mannar, Sri Lanka B. Sri Lankan power circuit Talaimannar to feed to Anuradhapura through an overhead line to connect to Sri Lankan power grid Key Facts : 1.cost of the project is Indian Rupees 2292 crores 2.power cables would be laid in seabed like telecom or internet cables 3.to have built in safety to address electrocution on both sides in case of 4.undersea cable damage 5.an optical fibre cable also would be laid along with power cables to monitor power cables and to enhance communication facilities on both sides 6.to start with, power sharing would be of 500 MW and later can be enhanced up to 1000 MW 7.could be completed in 42 months 15 . இப்படி இலங்கைக்கு மின்சாரம், என்.எல்.சி , அணை நீர் பிரச்சினை என்று எல்லாவற்றிலும் நாம் இந்திய அரசால் வஞ்சிக்கப்படுகிரோம். இதை டமிளர்கள் என்று புரிந்து கொள்ள போகிறார்களோ தெரியவில்லை. நன்றி பகலவன் குழுமம் (இணையதளம்)

Thursday, October 20, 2011

உடைந்த கடவுள் (கவிதைத் தொகுப்பு)

புத்தகத்தின் பெயர் : உடைந்த கடவுள் (கவிதைத் தொகுப்பு) ஆசிரியர் : கவிஞர் வித்யாசாகர் ஆய்வு : கவிதாயினி திருமதி. லதாராணி பூங்காவனம் பேரன்புடையீர் வணக்கம், ஒரு சில நாட்களில் என் மகிழ்ச்சி எல்லையில்லாமல் சென்றுவிடும். காரணம் எதாவது ஒரு புதிய புத்தகம் கிடைத்துவிட்டால் ஏறக்குறைய நான் பித்தாகவே ஆகிவிடுவதுண்டு. அப்படித்தான் இன்றும்.... கவிஞர் திரு. வித்யாசாகர் எழுதி சமீபத்தில் வெளிவந்த "உடைந்த கடவுள்" புத்தகத்தை படிக்கப் படிக்க அங்கனம் ஆனேன். சாதாரணமான ஒரு புன்னகையுடன் மட்டுமே அவரிடமிருந்து அப்புத்தகத்தைப் பெற்றுவந்த நான் வாங்கிக்கொண்டு... வீடு வந்து சேர்வதற்குள் 47 கவிதைகளைப் படித்துவிட்டேன். அதாவது 47 கருத்துக்களை என் மூளையிடம் ஒப்படைத்துவிட்டேன். வீடுவந்தவுடன், மிச்ச கவிதைகளை சொச்சமின்றி படித்து மெச்சினேன்.... அக்கவிதைகளைப் பற்றிச் சொல்வதெனில், சில கவிதைகள் நம்மிடம் பேசுகின்றன.. சில என்னைச் சிந்திக்க வைத்தன... சில என்னை இவ்வுலக நடப்பெண்ணி சிரிக்கவும் வைத்தது. உண்மையில் இன்று என்னிடம் இப்புத்தகம் நிறைய பேசியது... என்னை நிறைய சிந்திக்கவைத்தது, என் கண்ணீரை சிந்தவும் வைத்து’ என் உணர்வுகளைச் சிலிர்க்கவும் வைத்தது... ஒவ்வொருக் கவிதையும்... வசிக்க வாசிக்க மணித்துளிகளை உடைத்துக் கொண்டு வெளிவந்துவிடுகிறது. அத்தகு, அவர் சொன்னதுபோலவே – //ஆனால் புரிவதற்கும் அர்த்தப்படவும் நாட்களும் வருடங்களும் தேவைப்படலாம்// ஆழமான கருத்துக்களை அசாதாரணமாகச் சொல்லி சிந்தையில் ஏற்றிவிடும் இவரா இப்படிச் சொல்வது ? என்று எண்ணினேன். உலக அசைவுகள் ஒவ்வொன்றையும் ஊன்றிக் கவனித்து உணர்வுகளை உள்வாங்கி எழுத்துக்களின் கழுத்தை வளைத்து ஏட்டினில் எளிதாகப் பூட்டிவைத்த இந்தச் சாட்டையிலுள்ள ஒவ்வொரு நூலும் தெளிவாகவே நம் அறிவுக்குப் புரியவும் கண்ணுக்குத் தெரியவுமேத் தந்துள்ளார். மொழிமீது கவிஞர் வைத்த விழியை.. இந்தக் கவிதைகள்தான் அடித்துச் சொல்கிறதே ... //புதைந்து கிடந்ததை தோண்டிஎடுத்தவன் தானே செய்ததாகச் சொன்னான் – செம்மொழி// //கணக்கெழுதும் அண்ணாச்சிக்கும் வாங்குவோருக்கும் "கிலோ" தமிழ் என்றே தெரியப்பட்டுள்ளது// மனித நேயம் என்பது நாம் அடுத்தவர் மீது இரக்கப்பட்டு கொடுத்து உதவுவது என்பதல்ல. முதலில் அடுத்தவர் படும் துன்பத்தை உணர வேண்டும்...இதுதான் மனித நேயத்தின் முதல் நிலை... நம் கவிஞரின் மனம் சுமக்கும் மனித நேயத்தை இக்கவிதைகளின் மூலம் நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது. //தெருவோரத்தில் நிறைய வாகனங்கள் வரிசையாய் நிற்கிறது... எத்தனையோ பேரின் அவசரம் தெரிந்தோ தெரியாமலோ ..// //நிறைய வீடுகளில் நிறைய அறைகள் புழக்கமின்றியே கிடக்கிறது... // //அந்த அறைகளுக்கு எந்தக் கவலையுமில்லை.... தெருவில் உண்டு உணர்ந்து புணர்ந்து ஒரு தலைமுறையைக் கடக்கும் ஒரு சாமானியனுக்குத் தேவை அந்த நன்கு சுவர்களே... // என்று சமுதாய சிந்தனையோடு அவர் படும் ஆதங்கம் எத்தனை எத்தனையோ அவரின் கவிதைகளில் காண முடிகிறது .... மேலும் நம் தேசத்தின் இன்றைய நிலையானது...ஒரே இடத்தில் நிலையாக நின்றுகொண்டே ஓட்டப்பந்தயத்தில் தங்கப் பதக்கம் வாங்க வேண்டும் என்று ஆசைப்படுபவன்போல் தான் உள்ளதென்பதை...மிக எளிதாகப் புரியும்படி கூறிவிட்டுப் போகிறார் கீழுள்ள இந்தக் கவிதையில். //சிறுவர்களின் வியர்வையில் தான் நசுக்கப் படுகிறது நம் தேசத்தின் முன்னேற்றம்// இதோ... எதிர்பார்ப்புகளோடு சுழன்று கொண்டிருப்பதென்ன நம் மனித இனம் மட்டுமா? ...எத்தனையோ எதிர்பார்ப்புகளை உள்ளடக்கிக்கொண்டிருக்கிறதோ இந்தப் பிரபஞ்சம் என்று நம்மைச் சிந்திக்க வைத்துவிடுகிறாரே கீழ்வரும் இச்சிறு கவிதையில்... //நிறைய மண் மாளிகையாகமலும் நிறைய பஞ்சுகள் நெய்யப்படாமலும் நிறைய மனிதர்கள் பக்குவப்படாமலும் விதியென்று சுற்றுகிறது பூமி // ...... வலிகளைப் புரிந்து கொள்ள அடிபட்டிருக்கவேண்டும் என்பதல்ல.... ஒரு கவிஞனென்பவன் தான் எழுத எடுத்துக் கொண்ட கருவை தானே "அது" வாக மாறிவிடும்போதுதான் அதன் நுணுக்கமான உணர்வுகளை அவனால் அக்கவிதையில் கொண்டுவர முடியும் என்பதை உணர்த்தும் வகையில் ''விதவை'' என்ற ஒற்றை வார்த்தைப் போர்வை அவள் உணர்வுகளின் மூச்சடைத்துவிடுவதை உணர்ந்து சொல்லி யுள்ளாரே... // வெற்று நெற்றியின் கோடி ஆசையை விதவை என்ற – ஒற்றை வார்த்தை மறைத்துக் கொள்கிறது... // இதைப் படித்துமுடிக்கையில் உண்மையில் தொண்டையை அடைத்த உமிழ்நீரை விழுங்கிவிட்டுத்தான் அடுத்த கவிதைக்குள் கண்புகுத்தினேன் நான்! செவ்வாயில் நீரையும் நிலாவில் காற்றையும் கணக்கிட்டுக்கொண்டிருக்கும் காலத்திலும் கண்மூடித்தனமான மூடத்தனத்தை இன்னும் நம் மூளை சுமந்து கொண்டுதானே இருக்கிறது..... அந்த மூடத்தனத்தை என்று நாம் முடக்கிப் போடுவோமோ தெரியவில்லையே என்ற ஆதங்கத்துடன் வெளிப்படும் கவிஞரின் கோபாவேசமும் மிக நன்றாகப் பல கவிதைகளில் புலப்படுகிறது...., அதை கீழ்வரும் கவிதைகள் செம்மையுறக் காட்டியும் விடுகிறது - // சுத்திப் போடறதை விட சுலபம் அதெல்லாம் ஒண்ணுமே யில்லைன்னு நம்பறது // சூப்பர் வித்யா...சபாஷ் என்று சொல்லாமல் இருக்க முடியுமா இதைப் படித்துவிட்டு? அடுத்து... // சிந்திக்காமல் வாங்கினவன் வீட்டில் கழுதைப் படமும் நெற்றியில் முட்டாள் பட்டமும் // // கால நேர சம்பிரதாயம் பார்ப்பவன் வீட்டிலும் பிணங்கள் விழாமலில்லை... // இப்படி எத்தனை எத்தனை பாமரத்தனமான பழக்கங்களை இன்னும் நம் மக்கள் வழக்கில் கொண்டிருப்பதை இப்புத்தகத்தில் பல இடங்களில் தன் கூர்மையான எழுதுகோலால் நிம்பி நம்மை உணர்வைத்திருக்கிறார். // அங்கிருந்தே நூல் பிடிங்க மொத்த மூடத்தனத்துக்கும் பாடையை நாமே கட்டலாம் // இந்த வரிகளைப் படிக்கும்போது "மிக அழுத்தமான வரிகள் வித்யாசாகர்" என்று கூறி கவிஞருக்கு இங்கிருந்தே ஒரு பூங்கொத்து கொடுத்துவிடத் தோன்றுகிறது. // இதெல்லாம் வேண்டாம்னு சாமியே வந்து சொன்னாக்கூட சாமியையே முட்டாள் என்று சொல்லும் புத்திசாலிகள்தாம் நாம்.. // என்கிறார். இன்னும் எத்தனை எத்தனையோ.... இப்படி, சின்ன சின்ன சில்லறை மூடத்தனங்கள் இன்றும் நம்மைப் பெரிய அளவில் ஆட்டிப் படைப்பதை அர்த்தத்தோடு சொல்லி இருக்கிறார் நிறையக் கவிதைகளில்.... //மரணம் மட்டும் நிகழாதிருக்குமானால் நிகழாது இருந்திருந்தால் மனிதன் கொல்லும் முதல் நபர் கடவுளாகக் கூட இருக்கலாம் ... // அடப்பாவிகளே... மனிதர்களுக்கும் கடவுளுக்கும் உள்ள பிணைப்பே இவ்வளவுதானே என நையாண்டி செய்ததுபோல் உள்ளது இக்கவிதை... சிரித்து மகிழ்ந்தேன்....இதைப் படிக்கும்போது... //எத்தனையோ வாகனங்கள்.... தரையைக் கிழிக்கும் வண்ணம் சீறிப் பாய்கிறது... யாருக்கு என்ன அவசரமோ...... ................................ இருப்பினும் - ‘போறவன் அப்படியே சாவறானா பாரு’ என நிறையப்பேர் மனசு நினைக்காமலில்லையே..// எவ்வளவு உண்மை இது... எத்தனையோ முறை எத்தனையோப் பேரை நானும் இப்படித் திட்டியிருக்கிறேனே, இதுபோல் ஒரு தருணமினி வருமெனில் ஒரு நிமிடம் நான் இக்கவிதையினை நினைத்துப் பார்த்து அவசரப்படாமல் ... அவர்களின் அவசரம் என்னவாக இருக்குமோ என நினைத்து... திட்டாமல் வழி விட்டே செல்வோமே என நினைக்கவைத்துவிட்டார் கவிஞர் வித்யாசாகர்.. இன்னொரு கவிதையில் // கோவில் உண்டியலில் போடும் பணத்தைப் படிக்கச் செல்லும் பாலகனின் கிழிந்த சீருடையை மாற்றச் சொல்லி அவனின் தாயின் கையில் திணித்த // அந்த நல்லெண்ணம்... கவிஞரின் உள்ளத்தை முழுமையாகப் படிக்கச்செய்தது. //நூறு ரூபாய்க்குத் துணிவாங்கி நூற்றி ஐம்பதிற்கு சட்டை தைத்து.... தினம் இரண்டு ரூபாயில் பெட்டிப் போட்டு ஒரு ரூபாயில் பட்டினி கிடக்கும் ஏழைகளை நினைக்காததில் உடைகிறது கடவுள் // என்கிறார். கட வுள் உடைந்தானோ இல்லையோ என் கண்ணீர் இக்கவிதை வரியில் உடைந்தது... // தெருவோர தூசிகளில் தூளி கட்டி கிழிந்த புடவையின் வழியே அம்மா வருவாளா... எனப் பார்க்கும் பச்சிளங் குழந்தையின் ஏக்கத்தின் தடங்கள் தன் அடையாளங்களை நல்ல தார் சாலையாக மட்டுமே காட்டிக்கொள்கிறது.. // இந்தக் கவிதையைப் படிக்கும்போது கவிஞர் திரு. காசி ஆனந்தனின் – நீ செருப்பின் அழகைப் பார்க்கிறாய்... நான் அதைத் தைத்தவன் கையைப் பார்க்கிறேன்" என்ற கவிதை வரி நினைவுக்கு வருகிறது... ஆக... பலவித நறுமண மலர்களைச் சேர்த்துச் செய்த இக்கவிதைப்பூங் கொத்தினை... சிறிது சிறிதாகக் கொத்தித் தின்ற ஒரு சிறிய பறவைப் போல் நானும் இப்புத்தகத்தை படித்து மன நிறைவு பெற்று மகிழ்ந்தேன்.... மொத்தத்தில் கவிக்கோ திரு. அப்துல்ரகுமானின் ஆலாபனையும், ஈழத்துப் புரட்சிக் கவி திரு. காசி ஆனந்தனின் "நறுக்குகளும்" சேர்ந்து இரண்டிலுமாய் அப்பெருங் கவிஞர்கள் வெளிப்படுத்திய உணர்ச்சிக்கும் எழுச்சிக்கும் சற்றும் குறைவின்றி கவிஞர் வித்யாசாகரின் கவிதைகளும் சமுதாயத்தை நோக்கித் தாக்குகின்றது.... இத்தனைப் பண்பட்ட இப்படைப்பாளியின் வரிகளில் சமுதாயத்தைப் பண்படுத்த முனையும் இவரின் எண்ணங்களும் எழுத்துக்களும் இத் தமிழுலகில் என்றென்றும் நிலைப் பெற்றிருக்க வாழ்த்துகிறேன்! அன்புடன், கவிதாயினி திருமதி. லதாராணி பூங்காவனம் செயலாளர்: பெரியார் பன்னாட்டு மையம், குவைத் கிளை

Sunday, October 9, 2011

தமிழர்கள் மீதுஅணுஉலையைக் திணிக்கத் துடிக்கும் காங்கிரசைக் கருவறுக்க அரிமாவளவன் அழைப்பு!!

காலை நடந்த பேச்சுவார்த்தையில் உயர்மட்டக்குழு என்றும், கூடங்குளத்தில் அனைத்துப் பணிகளும் நிறுத்தப்படும் என்றும் மக்கள்தான் முக்கியம் என்றும் பேசிய தலைமையமைச்சர் மன்மோகன்சிங் மாலையில் வல்லுனர் குழு என்றும் உரிய காலத்தில் தொடங்க தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும் என்றும் பல்டிக்கு மேல் பல்டி அடித்துள்ளார். உலகநாடுகள் பங்கேற்ற காமன்வெல்த் போட்டிகளுக்கான அரங்குகளும் கட்டடங்களும் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாகவே இடிந்து விழுந்தது குறித்து உலகமே விழுந்து விழுந்து சிரித்தது. இந்தியா தலை குனிந்து நின்றது. இதற்குக் காரணமான கல்மாடி போன்ற மலைவிழுங்கிகளை அமைச்சரவையிலேயே வைத்திருந்த மன்மோகன்சிங் இன்று கூடங்குளம் அணுஉலையால் எந்த ஆபத்தும் இல்லை என்று அடித்துச் சத்தியம் செய்கிறார். அவர் மூக்கின் கீழேயே நடந்த உலக மகா ஊழல்களை உணராத உத்தமர் அவர். அலைக்கற்றை ஊழலில் ஒரு லட்சத்து 76ஆயிரம் கோடிகளை விழுங்கிய எமகாதர்கள் ஏப்பம் விட்டது உலகத்திற்கே கேட்டது. ஆனால், அருகிலிருந்த தனக்கு தெரியவே தெரியாது என்று சத்தியம் செய்கிறார். இந்த மகா உத்தமர்தான் இப்போது, கூடங்குளம் பற்றி அடுத்த சத்தியம் செய்கிறார். ஆதர்ஷ் அடுக்குமாடிக் கட்டட ஊழல், அரங்குகளும் பாலங்களும் சரிந்து விழுந்த கல்மாடி ஊழல், அலைக்கற்றைத் திருட்டு ஊழல் போன்றனவெல்லாம் மன்மோகன்சிங் அருகில்தான் நடந்தன. ஆனால், கூடங்குளம் என்பது ஊழல் உலை மட்டுமல்ல! ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகத்திற்கும் உலை வைக்கும் அணு உலை அது! பாதுகாப்பானது என்றால், பாராளுமன்றத்திற்கு அருகில் வைத்துக் கொள்ள வேண்டியதுதானே! பாராளுமன்றத்தைத் தாக்கியதையே தடுக்க முடியாது அசகாயச் சூரர்கள் அணுஉலை வெடித்தால் காப்பாற்றிக் கரை சேர்த்து விடுவார்களாம்! முதல் அணுஉலையைக் கட்டும்போது எச் சி எல் என்ற நிறுவனம் ஒதுக்கீட்டுத் தொகையை 46 விழுக்காட்டுக்குத்தான் டெண்டர் கோரி ஒப்பந்தம் எடுத்தது. கடல் மணலைக் கலந்து கட்டடம் கட்டுகிறார்கள் என்று அப்போதைய சட்ட மன்ற உறுப்பினர் புகார் அளித்தார். இப்படியெல்லாம் கண்ணெதிரேயே தில்லு முல்லு செய்து கட்டிய அணுஉலை வரைபடத்திலும் விளம்பரத்திலும் வேண்டுமானால் பாதுகாப்பானதாக இருக்கலாம். நடைமுறையில் அதுவும் ஒரு காமன் வெல்த் “கலக்கல்” கட்டடம்தான். தில்லி உயர்நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே இரண்டு முறை குண்டு வெடித்தது. அதையே தடுக்க முடியவில்லை. மும்பை நகரின் நட்ட நடு வீதியில், நடுப்பகலில் சுட்டுத் தள்ளியதை நேரடி ஒளிபரப்பினார்களே! இப்படி மையத்தையே காப்பாற்ற இயலாத இவர்கள் கடைக்கோடியில் கடைபரப்பி வைத்திருக்கிற அணுஉலைகளைக் காப்பாற்றப் போகிறார்களாம்! வெடித்தபிறகு மன்மோகன்சிங், எழுதி வைத்து இரங்கல் வாசிப்பார். கேட்க நாம் இருக்க மாட்டோம். தமிழகத்திற்கு எதிராக இருக்கிற இலங்கைக்கும் கேரளாவிற்கும் மின்சாரம் வழங்கத்தான் திட்டம். எஞ்சியிருப்பது தமிழ்நாட்டிற்கு என்று காடை காட்டுகிறார்கள்! கண்ணை விற்றா சித்திரம் வாங்குவோம்? உயிரை விலை பேசியா எச்சில உணவு தேடுவோம்? தமிழனைக் காவு கொடுத்து மின் உற்பத்தியா? மத்தியில் இருக்கிற காங்கிரசு அரசு தமிழர் விரோத அரசு என்று எண்ணற்ற முறை மெய்ப்பித்து விட்டது. இரு நாட்களுக்கு முன்பாக ராமேசுவரம் பகுதியிலிருந்து சிங்கள இனவெறி கடற்படையால் பிடிக்கப்பட்ட படகுகள் இந்தியப் படைகளின் முன்பாகத்தான் கடத்தப்பட்டிருக்கின்றன. 550 மீனவர்களைக் கொன்ற பின்னரும் இந்தியா தமிழ் மீனவர்களைக் காப்பாற்றவில்லை. ஈழத்தில் மிகப்பெரிய ஒரு இனப்படுகொலையை சிங்களப் இனவெறி அரசோடு சேர்ந்து செய்து முடித்த காங்கிரசு ஆட்சி கூடங்குளத்தில் மட்டும் தமிழினத்தின் மீது பாசமழையையா கொட்டப்போகிறது? மீண்டும் ஒரு தமிழினப் படுகொலைக் களத்தைத்தான் அங்கே உருவாக்கி வைத்திருக்கிறது. ஒட்டுமொத்தத் தமிழினத்தையும் அழித்தொழிக்க நினைக்கும் காங்கிரசுக் கட்சிக்கு வரும் உள்ளாட்சித் தேர்தலில் பாடை கட்டுவோம்! ஈழத் தமிழர் மீது தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை அள்ளிப்போட்டுக் கொன்ற இதே அரசு இன்று தமிழ்நாட்டுத் தமிழர்களை அழித்தொழிக்கும் ஆயுதத்தை நம் நடுவில் நிறுவுகிறது. வெடித்த பின்னர் வேதனைகளைக் கொட்டக்கூட நாம் இருக்கமாட்டோம்! நம்மைக் கொல்லத் துடிக்கும் இன எதிரிகளை இந்தத் தேர்தலிலும் அடையாளம் காண்போம். எங்கெங்கு காங்கிரசுக் கட்சி நிற்கிறதோ அங்கெல்லாம் அக் கட்சியை வேரடி மண்ணோடு சாய்ப்போம். இவ்வாறு தமிழர்களத்தின் பொதுச் செயலாளர் திரு. அரிமாவளவன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.