Saturday, November 29, 2008

மாவீர‌ர்



த‌ன் மான‌முள்ள‌ த‌மிழ்த் தியாகிக‌ளே

த‌மிழ் ம‌ண்ணின் விடிவிற்காய்

இன்னுயிரை ம‌ண்னுக்காய் அற்பணித்த‌

மாவீரர்க‌ளே...

நீங்க‌ள் சாக‌வில்லை - எம் ம‌ண்ணில்

விதைக‌ளாக‌ விதைக்க‌ப் ப‌ட்டிருக்கிறீர்க‌ள்

நாளை ம‌ல‌ர‌ப் போகும் ந‌ம் தேச‌த்தில்

நீங்க‌ள் மாபெரும் ப‌டிக்க‌ற்க‌ளே...

ஈழ‌ ம‌ண்ணின் ம‌டியிலே உங்க‌ள்

பாத‌ சுவ‌டுக‌ள் ம‌ங்காம‌ல் ப‌டிகின்ற‌து

ஆண்ட‌ ப‌ர‌ம்ப‌ரைதான் நாம்

அற‌த்த‌மிழின‌ம் - மீண்டும்

ஆழ‌ நினைப்ப‌தில் த‌வ‌றில்லை...

வாய்மை த‌வ‌றாம‌ல்

வ‌லிமையுட‌ன் போராடும் என் ம‌ற‌வர்க்கு

வைய‌க‌த்தில் நிச்ச‌ய‌ம் ஓர் வ‌ர‌லாறுண்டு

ம‌ண்ணிற்காய் தியாகித்த‌ - உங்க‌ள்

நினைவுக‌ள் நாளை ந‌ன‌வாகும்...

ம‌ண்ணில் நீங்க‌ள் சாய்ந்தாலும் - உங்க‌ள்

க‌ர‌ங்க‌ள் ஏந்திய‌ துப்பாக்கிக‌ள் சாய‌வில்லை

நெஞ்சில் வீர‌ங்கொண்ட‌ த‌மிழ்

வேங்கைக‌ள் தன் மான‌த்துட‌ன்

த‌லை நிமிர்ந்து தூக்கி நிற்க்கின்ற‌ன‌ர்

உங்க‌ள் க‌ர‌ங்க‌ள் தாங்கிய‌ துப்பாக்கிக‌ளை...

தானை தலைவ‌ன் ஆனைப்ப‌டி

த‌லை நிமிர்ந்து போராடும் ந‌ம்

தேச‌ வீரர்க‌ள் நாளை

வெற்றி வாகை சூடுவ‌ர்

எம் தாய் ம‌ண்ணை மீட்டெடுத்து

த‌னிநாடு த‌னை அமைத்து

தேச‌க் கொடியை ஏற்றி வைத்து

சுத‌ந்திர‌மாக‌ நாளை நாம்

சொந்த‌ ம‌ண்ணில் சுவாசிப்போம்

உல‌க‌ம் எங்கும் உம‌க்கு

ஒரு வ‌ர‌லாறு உண்டு த‌மிழ் உள்ள‌வ‌ரை

உங்க‌ள் புக‌ழ் ம‌ங்காம‌ல்

மாட்சிமையுட‌ன் நிலைத்து வாழும்

உங்க‌ள் க‌ன‌வுக‌ள் நாளை ந‌ன‌வாகும்....

எட்டுப்புலிக்காடு ரெ.வீர‌ப‌த்திர‌ன்

இல்லாத‌ ஆல‌ய‌மும் உன‌து தீப‌மும்



ந‌ட‌ந்த‌வைக‌ளையே

நினைத்து நினைத்து

உன் நினைவுகளோடு

ந‌ட‌ந்து ந‌ட‌ந்து

சொல்லிய‌ழ‌ முடியாச்

சோக‌ங்க‌ளைத் த‌ந்த‌

சூழ‌லைப்பிரிந்து அவ‌ன்

வெகு தூர‌ம் போய்விட்டான்...

உன் நினைவுக‌ள்

க‌ல்லில் வ‌ரைந்த‌ உருவ‌மாய்

குளிரில் உறைந்த‌ ந‌தியாய்

அவ‌ன் நினைவின் சிக‌ர‌ங்க‌ளில்

அமைதியாய் வீற்றிருந்து

அழுகையை கொடுக்கின்ற‌ன‌...

வாழ்வைத் தேடிப்ப‌ற‌ந்து

வில‌ங்கை பூட்ட்டி வ‌ந்த‌வ‌ளே

உன் சிற‌குக‌ளை விரிக்க‌

அந்த‌ ப‌ழைய‌ வானில்

அன்று அவ‌ன்

பூக்க‌ளால் தோர‌ண‌ம்

போட்டு வைத்திருந்த‌

பாதைக‌ள் எல்லாம்

ப‌த்திர‌மாக‌ இருக்குமென்று

நினைக்கிறாயா?

உன் வாழ்வு தோற்ற‌ பின்ன‌ர்

வந்து சொல்கிறாய்...

அவ‌ன் உயிர்காக்க‌ நீ

இன்னொருவ‌ன்

ம‌னைவியானாய் என்று

உல‌க‌ம் உன் நியாய‌த்தில்

உறுதிக் கொள்ளாது பெண்ணே!

குல‌ம‌க‌ளாய் இருந்து நீ

குதூக‌லமாய் வாழ்க‌வென்று

த‌ன்ன‌ந்த‌னியாய்

தொலைதூர‌ தேச‌மொன்றை

தேடிய‌டைந்தான்...

திரும்பி வ‌ர‌ முடியாத‌

தொலைவிற்கு நீ

ப‌ட‌ கோட்டி போன‌பின்ன‌ர்

அவ‌ன் க‌ரைக‌ளின்

க‌ல‌ங்க‌ரை விள‌க்கினை த‌க‌ர்த்தான்...

ஆப‌த்துக்க‌ளை தாண்டி நீ

வந்த‌டைய‌ வேண்டுமென்ற‌

ஆராத‌னை வேண்டாத‌ போது

அவ‌ன் ம‌ன‌தின் ஆல‌ய‌த்தை

அடியோடு பெய‌ர்த்தான்...

இன்று உன் க‌ர‌ங்க‌ளில்

தீப‌ மேந்தி

காத‌லின் கோவிலை தேடுகிறாய்

துரோகியாய் நீ மாறிய‌ தின‌த்த‌ன்றே

அந்த‌ ஆல‌ய‌த்திலும்

இடி வீழ்ந்த‌தை அறியாம‌ல்...

எட்டுப்புலிக்காடு ரெ.வீர‌ப‌த்திர‌ன்

நினைவுக‌ளோடு



ஒரு பொன்வேனிற் கால‌த்தின்

இருதி நேர‌மிது

பாச‌மாய் ப‌ழகிய‌

ந‌ட்புள்ள‌ங்க‌ளை பிரிந்திடும்

வேத‌னை மிகு பொழுது...

எங்கோ இருந்த‌

எம்மையும் சொந்த‌ங்க‌ளாக்கி

ச‌ந்தோச‌ங்க‌ளை அள்ளி த‌ந்த‌

ப‌ள்ளிக்கூட‌ம்

ஆசிரிய‌ர்க‌ளின் க‌ற்பித்த‌லோடு

க‌ல‌ந்த‌ ந‌கைச்சுவைக‌ள்

நாம் அடித்த‌ அர‌ட்டைக‌ள்

துய‌ர் துடைத்த‌ ந‌ட்பின் க‌ர‌ங்க‌ள்

ஒற்றை மாமர‌ம்

இப்ப‌டி அத்த‌னை த‌ட‌ய‌ங்க‌ளும்

இனி ஞாப‌ங்க‌ளில்...

வார‌ம் ஒரு

தொலைபேசி அழைப்பு

மாத‌த்திற்கொரு ம‌ட‌ல் என்று

நாம் நினைத்த‌ நினைவுக‌ள்

இன்னும் எத்த‌னை கால‌த்திற்கு

தொட‌ருமோ..?

மீண்டும் எங்கே ச‌ந்திப்போம்

புரிய‌வில்லை

எங்கேனும் பார்த்திட்டால்

வ‌ண‌க்க‌ம் சொல்லி

வார்த்தை உச்ச‌ரிக்க‌

த‌யாராகிற‌து ம‌ன‌சு...

நேற்று

நாம் ப‌கிர்ந்த‌ பொழுதுக‌ளை

பிரிவோடுக‌ள் சும‌ந்திட‌

கையெழுத்திட்டு பிரிகிறோம்

ந‌ம் நினைவுக‌ளோடு...

- எட்டுப்புலிக்காடு ரெ.வீர‌ப‌த்திர‌ன்

க‌ருணை ம‌க‌ன்



த‌மிழீழ‌த்தின் விடிவிற்காய்

த‌ர‌ணியிலே தோன்றிய‌வ‌ன்

மாசு இல்லா தூய‌ ம‌ன‌ம்

இல‌ட்சிய‌த்தில் ம‌ன‌ உறுதி

ச‌த்திய‌த்தின் மூர்த்தி எம்

த‌மிழீழ‌த்தின் த‌லைவ‌ன்...

கூனிக் குருகி சோம்பேறிக‌ளாய்

கொட்டாவி விட்டுக் கிட‌ந்த‌வ‌ரை

யானையின் ப‌ல‌ம் கொண்டு

ஆர்ப்ப‌ரிக்க‌ வைத்த‌ வீர‌ன்...

புழுவுக்கும் அஞ்சி நடுங்கி

பொறி அட‌ங்கி வாழ்ந்த‌வ‌ரை

கொல்ல‌ வ‌ரும் குண்டுக்கும்

அஞ்சாம‌ல் இருக்க‌ வைத்த‌ மகான்...

தாய் நாட்டின் பெருமைத‌னை

அறியாத‌ பேதைக்கு அதை

தெளிவாக‌ எடுத்திய‌ம்பி

த‌லை நிமிர‌ வைத்த‌ மேதை...

ப‌டை கொண்டு வந்தவ‌ரை

ப‌ய‌ந்தோட‌ வைத்த‌ ம‌க‌ன்

போராட்ட‌ம் என்ப‌த‌ற்கோர்

புது வ‌ழியை க‌டைபிடித்த‌ ஆசான்...

நான் முத‌லில் நீ பிற‌கு

கூடி வா என்னுட‌ன் என்று

போர்க்க‌ள‌ம் சென்று

போராடும் மாவீர‌ன்...

தாய‌க‌த்தின் த‌லைவ‌னையும் அவ‌ன்

வ‌ழித் தோன்ற‌ல்க‌ளையும்

அக‌ம் ம‌ல‌ர‌ வாழ்த்தி நிற்ப்போம்...

எட்டுப்புலிக்காடு - ரெ.வீர‌ப‌த்திர‌ன்

Sunday, November 23, 2008

தேச‌ப்பிதாவே

தேச‌ப்பிதாவே!

சுத‌ந்திர‌க்குழ‌ந்தையை

சும‌ந்து பெற்ற‌ க‌ருவ‌றையே!

உன் க‌ல்ல‌றையை சில‌ர்

காய‌ப்ப‌டுத்திய‌ போது

யாரும் க‌வ‌லைப‌ட‌வில்லை...

ந‌டிகை ஒருத்திக்கு

நான்கு நாள் காய்ச்சலென்றால்

நாடே ச‌ல‌ச‌ல‌க்கும்

பார‌த‌ தேச‌த்தில்

ம‌காத்மாவே உன்

ச‌மாதி சேத‌ப்ப‌ட்ட‌ போது

யாரும் ச‌ஞ்ச‌ல‌ப்ப‌ட‌வில்லை!

இப்போது புரிகிற‌து

தேச‌மே

சேத‌ம‌டைது கொண்டிருப்ப‌தை

ச‌கித்துக்கொள்ளும் இவ‌ர்க‌ள்

உன‌து ச‌மாதி சேத‌ம‌டைந்த‌த‌ற்காவா

ச‌ங்க‌ட‌ப்ப‌டுவார்க‌ள்?

வைத்துகாக்கும்

வ‌கைய‌றியாத‌வ‌ர்க‌ள்

வாங்கி த‌ந்த‌வ‌ர்க‌ள் மீது

வ‌சை ம‌ழை பொழிவ‌து

வாடிக்கைதானே!

க‌ண‌வ‌ன் மீது கொண்ட‌ கோப‌த்தை

பிள்ளையை அடித்துக்

தீர்த்துக்கொள்ளும்

ஒரு ச‌ராச‌ரி இந்திய‌

ம‌னைவியை போன்ற‌வ‌ர்க‌ளே

இவ‌ர்க‌ள்?

தேச‌ப்பிதாவே நீ

அன்னிய‌ர்க‌ளின்

சுர‌ண்ட‌லை ம‌ட்டுமே

விர‌ட்டி அடித்தாய்...

இப்போது நாங்க‌ள்

சொந்த‌க்கார‌னாலேயே

சுர‌ண்ட‌ப்ப‌டுகிறோம்...

அன்று நீ

கைத்த‌டியுட‌ன் ந‌ட‌ந்து

க‌ள்ள‌ச்சார‌ய‌த்தை

ஒழிக்க‌ முய‌ன்றாய்...

இன்று எங்க‌ள் த‌லைவ‌ர்க‌ள்

க‌ள்ள‌ச்சார‌ய‌க்கார‌ர்க‌ளின்

கைத்த‌டிக‌ளாய்

ப‌வ‌னி வ‌ருகிறார்க‌ள்...

இது ஜ‌ன‌நாய‌க‌ நாடு என்ப‌து

எங்க‌ளுக்கு

தேர்த‌ல் நேர‌த்தில் தான்

தெரிய‌வ‌ருகிற‌து...

எச்சில் இலைக‌ளுக்கு

எம‌து ம‌க்க‌ள்

ஏமாற‌த்தயார் என்ப‌தால்

எங்க‌ள் எஜ‌மான‌ர்க‌ள்

எலும்பு துண்டுக‌ளை வீசி

எளிதில் வ‌ய‌ப்ப‌டுத்துகிறார்க‌ள்!

அன்னிய‌ரிட‌மிருந்து

எங்க‌ளுக்கு

விடுலை வாங்கி த‌ந்தாய்

நாங்க‌ள் சொந்த‌ நாட்டாரிட‌த்து

சுத‌ந்திர‌ம் பெறுவ‌து எப்போது?

எட்டுப்புலிக்காடுரெ.வீர‌ப‌த்திர‌ன்

ரோஜா பூ




உன் இத‌ழ்மீது

ம‌ழைத்துளி விழுந்தாலே

என் இத‌ய‌த்தில்

இடிவிழுந்த‌து போல‌ இருக்கிற‌து...

உன் காற்றில் ப‌ற‌க்கும்

ம‌க‌ர‌ந்தத்தை சுவாசிக்கிறேன்

நீ பேசுவ‌தில்லை

நானும் தான்

ப‌ர‌வாயில்லை

ந‌ம் மௌன‌ங்க‌ளாவ‌து

பேசிக்கொள்ள‌ட்டும்...

நான் பார்க்கும் திசையெல்லாம்

நீ தெரிகின்றாய்

என் இர‌வின் நில‌வாய்

சிரிக்கின்றாய்

என் க‌விதையின் க‌ருவாய்

உயிர்க்கின்றாய்

சில‌ ச‌ம‌ய‌ம் நானாக‌வும்...

நான் நீயாக‌ இருப்ப‌தால்தான்

நான் நானாக‌ இருப்ப‌தில்லை

எப்போதுமே...

காற்று ப‌ட்டாலே க‌ச‌ங்கிவிடுவாய்

உன் காம்பை முறிப்ப‌தில்

என‌க்கு விருப்ப‌மில்லை

ஏனென்றால்

உன்னை எப்போதே

நேசிக்க‌ தொட‌ங்கிவிட்டேன்

ஒரு வ‌ண்டாக‌ அல்ல‌...

எட்டுப்புலிக்காடு ரெ.வீர‌ப‌த்திர‌ன்

ம‌ற‌ந்து போகுமா?



பூச்செண்டும் வாழ்த்து ம‌ட‌லும்

ந‌ட்பை பேணலாம்

விர‌க்திய‌டையாத‌ ம‌ன‌திற்கு...

சொன்ன‌ வார்த்தையும்

கொடுத்த‌ ப‌ரிசும்

ஞாப‌க‌ம் இருக்க‌லாம்

உண்மைய‌ன்பு உள்ள‌வ‌ர்க‌ளுக்கு...

வாழும் சோக‌மும்

ந‌ட‌ந்த‌ க‌ஷ்ட‌மும்

மாண்டு போக‌லாம்

எழுத்தாள‌னுக்கு...

எடுத்த‌ வெற்றியும்

அடைந்த‌ தோல்வியும்

ம‌ற‌க்காம‌ல் இருக்கலாம்

வீர‌னுக்கு...

கேட்ட‌ பேச்சும்

வாங்கிய‌ அடியும்

ம‌ற‌ந்து போக‌லாம்

தாய‌ன்பினில்...

ஆனாலோ!

இங்கு விழுந்த‌ குண்டும்

ம‌டிந்த‌ உயிரும்

ம‌ற‌ந்து போகுமா?

செழித்த‌ ச‌ந்தோச‌ம்

ம‌ரித்துப்போன‌தை

ம‌ற‌ந்து போகுமா

ம‌ன‌ம்...
எட்டுப்புலிக்காடுரெ.வீர‌ப‌த்திர‌ன்

என் புகைப்ப‌ட‌ங்க‌ள்



காதல் படிக்கட்டுகள்




காவியப்பெண்ணே
என் காதலிப்பெண்ணே
காதலிக்கிறேன் நான் உன்னை
கண் திறந்து பாரடி நீ என்னை...
உள்ளதைச் நீ சொல்லாமல்
ஊமையாய் நீ சென்றால்
உள்ளம்தான் தாங்கிடுமா
உறக்கத்தில் ஆழ்ந்திடுமா...
நீ வாழ்க்கை துணையாக
இருக்காவிட்டாலும் பரவாயில்லை
என் வசந்த கவிதைகளுக்கு
வழிகாட்ட்டியாய் இரு...
நீ காதல் தேவைதையாக
இருக்காவிட்டாலும் பரவாயில்லை
என் கவிதை நாயகியாக இரு...
நீ அன்பை ஆயுதமாக்கி
அதை உன் புருவவில்லில் பூட்டி
என் இதயத்தை வீழ்த்திய
இளமங்கை...
உன் இரு கண்களோடு
உன் இதயத்தோடு
உன் உள்ளத்தின்
உணர்வோடு மீண்டும்
உறவாடி மகிழ்ந்திட
உன் உத்தரவுக்காக
காத்திருக்கிறேன்...
அன்பிற்கினியவளே!
அன்பு இருக்கிறது உன்னிடம்
அதை அள்ளிதர வேண்டும் என்னிடம்
அனல் சிந்தும் பார்வையல்ல
உன் பார்வை
அமுதம் சிந்தும் பார்வை
உன் பார்வை மட்டுமல்ல
மனசும் மென்மையானதுதான்...
உள்ளம் உன்னுடையதுதான்
ஆனால் அதில் உருவாகும்
எண்ணம் என்னுடையது
உன் இதயத்தின்
துடிப்பாக என்றும்
உன்னோடு நானிருப்பேன்...
இருப்பை போன்று
திடமான என் இதயம்
உன் இருவிழிகளுக்கல்லவா
இளகிபோனது...
அன்பே!
நீ வைகையின் ஓரத்தில்
வளர்கின்ற முல்லை உன்
வாசத்தை மிஞ்சிய
மலரேதுமில்லை...
தினந்தோறும்
உன்னிடம் பேசவேண்டுமென
என் உள்ளம் உனைதேடுதே
ஆனால் உன்னை கண்டபின்
எதையும் பேசமுடியாதவனாய்
நிலை மாறுதே...
உண்ணவும் மனமின்றி
உறங்கவும் நினைவின்றி
உன் நினைவில் வாடுகிறேன்
உன் வரவை தேடுகிறேன்...
எட்டுப்புலிக்காடு ரெ.வீரபத்திரன்

காதல் படிக்கட்டுகள்


காவியப்பெண்ணே
என் காதலிப்பெண்ணே
காதலிக்கிறேன் நான் உன்னை
கண் திறந்து பாரடி நீ என்னை...
உள்ளதைச் நீ சொல்லாமல்
ஊமையாய் நீ சென்றால்
உள்ளம்தான் தாங்கிடுமா
உறக்கத்தில் ஆழ்ந்திடுமா...
நீ வாழ்க்கை துணையாக
இருக்காவிட்டாலும் பரவாயில்லை
என் வசந்த கவிதைகளுக்கு
வழிகாட்ட்டியாய் இரு...
நீ காதல் தேவைதையாக
இருக்காவிட்டாலும் பரவாயில்லை
என் கவிதை நாயகியாக இரு...
நீ அன்பை ஆயுதமாக்கி
அதை உன் புருவவில்லில் பூட்டி
என் இதயத்தை வீழ்த்திய
இளமங்கை...
உன் இரு கண்களோடு
உன் இதயத்தோடு
உன் உள்ளத்தின்
உணர்வோடு மீண்டும்
உறவாடி மகிழ்ந்திட
உன் உத்தரவுக்காக
காத்திருக்கிறேன்...
அன்பிற்கினியவளே!
அன்பு இருக்கிறது உன்னிடம்
அதை அள்ளிதர வேண்டும் என்னிடம்
அனல் சிந்தும் பார்வையல்ல
உன் பார்வை
அமுதம் சிந்தும் பார்வை
உன் பார்வை மட்டுமல்ல
மனசும் மென்மையானதுதான்...
உள்ளம் உன்னுடையதுதான்
ஆனால் அதில் உருவாகும்
எண்ணம் என்னுடையது
உன் இதயத்தின்
துடிப்பாக என்றும்
உன்னோடு நானிருப்பேன்...
இருப்பை போன்று
திடமான என் இதயம்
உன் இருவிழிகளுக்கல்லவா
இளகிபோனது...
அன்பே!
நீ வைகையின் ஓரத்தில்
வளர்கின்ற முல்லை உன்
வாசத்தை மிஞ்சிய
மலரேதுமில்லை...
தினந்தோறும்
உன்னிடம் பேசவேண்டுமென
என் உள்ளம் உனைதேடுதே
ஆனால் உன்னை கண்டபின்
எதையும் பேசமுடியாதவனாய்
நிலை மாறுதே...
உண்ணவும் மனமின்றி
உறங்கவும் நினைவின்றி
உன் நினைவில் வாடுகிறேன்
உன் வரவை தேடுகிறேன்...
எட்டுப்புலிக்காடு ரெ.வீரபத்திரன்

தூக்க‌ம் விற்ற‌ காசுக‌ள்




தூக்க‌ம் விற்ற‌ காசுக‌ள்

இருப்ப‌வ‌னுக்கோ வந்து விட‌ ஆசை

வந்த‌வ‌னுக்கோ சென்று விட ஆசை

இதோ அய‌ல்தேச‌த்து ஏழைக‌ளின்

க‌ண்ணீர் அழைப்பித‌ழ்...

விசாரிப்புக‌ளோடும்

விசா அரிப்புக‌ளோடும் வ‌ருகின்ற‌

க‌டித‌ங்க‌ளை நினைத்து நினைத்து

ப‌ரிதாப‌ப்ப‌ட‌த்தான் முடிகிற‌து...

நாங்க‌ள் பூசிக்கொள்ளும்

சென்டில் வேண்டும‌னால்

வாச‌னைக‌ள் இருக்க‌லாம்

ஆனால் வாழ்க்கையில்...?

தூக்க‌ம் விற்ற‌ காசில்தான்

துக்க‌ம் அழிக்கின்றோம்

ஏக்க‌ம் என்ற‌ நிலையிலே

இள‌மை க‌ழிக்கின்றோம்...

எங்க‌ளின் நிலாக்கால‌

நினைவுக‌ளையெல்லாம்

ஒரு விமான‌ப்ப‌ய‌ன‌த்தூனூடே

விற்று விட்டு

க‌ன‌வுக‌ள்

புதைந்துவிடுமென‌ தெரிந்தெ

க‌ட‌ல் தாண்டி வந்திருக்கிறோம்...

ம‌ர‌ உச்சியில் நின்று

ஒரு தேன் கூட்டை க‌லைப்ப‌வ‌ன் போல‌

வார‌ விடுமுறையில்தான்

பார்க்க‌ முடிகிற‌து...

இய‌ந்திர‌மில்லாத‌ ம‌னித‌ர்க‌ளை...

அம்மாவின் மேனி தொட்டு

எழுந்த‌ நாட்க‌ள் க‌ட‌ந்துவிட்ட‌ன

இங்கே அலார‌த்தின் எரிச்ச‌ல் கேட்டு

எழும் நாட்க‌ள் க‌ச‌ந்து விட்ட‌ன‌...

ப‌ழ‌கிய‌ ந‌ண்ப‌ர்க‌ள் ப‌ழ‌கிய‌ வீதிக‌ள்

ப‌ள்ளி நாட்க‌ள் எல்லாமே

ஒரு இர‌வு நேர‌ க‌ன‌வுக்குள்

வ‌ந்து வ‌ந்து காணாம‌ல்

போய்விடுகிற‌து...

ந‌ண்ப‌ர்க‌ளோடு

கிட்டிப்புல் க‌ப‌டி சீட்டு

என சீச‌ன் விளையாட்டுக்க‌ள்

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழ‌மையும்

எதிர் பார்த்து விளையாடி ம‌கிழ்ந்த‌

உள்ளூர் உல‌க‌க்கோப்பை கால்ப‌ந்து...

வீதிக‌ளில் ஒன்றாய்

வ‌ள‌ர்ந்த‌ ந‌ண்ப‌ர்க‌ளின் திரும‌ண‌த்தில்

கூடி நின்று கிண்ட‌ல‌டித்த‌ல்

ப‌ழைய‌ச‌ட‌ங்குகள்

ம‌றுத்து போராட்ட‌ம்

பெண் வீட்டார் ம‌திக்க‌வில்லை

என‌கூறி வ‌ற‌ட்டு பிடிவாத‌ங்க‌ள்...

இவையெதுவுமெ கிடைக்காமல்

க‌ண்டிப்பாய் வ‌ர‌வேண்டும்

என்ற‌ ச‌ம்பிரதாய‌ அழைப்பித‌ழுக்காக‌...

ச‌ங்க‌ட‌த்தோடு

ஒரு தொலைபேசி வாழ்த்தூனூடே

தொலைந்து விடுகிற‌து

எங்க‌ளின் நீ..ண்ட‌ ந‌ட்பு...

எவ்வ‌ள‌வு ச‌ம்பாத்தும் என்ன‌?

நாங்க‌ள் அய‌ல்தேச‌த்து

ஏழைக‌ள்தான்...

காற்றிலும் க‌டித‌திலும்

வ‌ருகின்ற‌ சொந்த‌ங்க‌ளின்

ந‌ண்பர்க‌ளின் ம‌ர‌ண‌செய்திக்கெல்லாம்

அர‌பிக்க‌ட‌ல் ம‌ட்டும் தான்

ஆறுத‌ல் த‌ருகிற‌து...

இத‌யம் தாண்டி

ப‌ழ‌கிய‌வ‌ர்க‌ளெல்ல‌ம்

ஒரு க‌ட‌லைத்தாண்டிய‌

க‌ண்ணீரிலையே

க‌ரைந்துவிடுகிறார்க‌ள்...

இருப்பையும் இழ‌ப்பையும்

க‌ண‌க்கிட்டு பார்த்தால்

எஞ்சி நிற்ப்ப‌து

இழ‌ப்பு ம‌ட்டும்தான்...

ஒவ்வொறு முறை

ஊருக்கு வ‌ரும்பொழுதும்

புதிய‌ முக‌ங்க‌ளின்

எதிர் நோக்குத‌லையும்

ப‌ழைய‌ முக‌ங்க‌ளின்

ம‌றைத‌லையும் க‌ண்டு

அய‌ல் தேச‌ம் செல்ல‌ மறுத்து

அட‌ம் பிடிக்கும் ம‌ன‌சிட‌ம்

த‌ங்கையின் திரும‌ண‌மும்

வீட்டு க‌ட‌ன்க‌ளும்

பொருளாதார‌மும் வ‌ந்து

ச‌மாதான‌ம் சொல்லி அனுப்பிவிடுகிற‌து

மீண்டும் அய‌ல்தேச‌த்திற்கு...

எட்டுப்புலிக்காடு ரெ.வீர‌ப‌த்திர‌ன்‍
துபாய்.

ஈழ‌ நாய‌க‌ன்


தியாக‌ வீர‌னே பிர‌பாகரா!

தன் ந‌ல‌ம் பாராம‌ல்

ஈழ‌த்தைக் காக்க‌ போராடும்

புலிக‌லின் த‌லைவ‌னே !

தன் ந‌ல‌த்திற்காக‌

சுர‌ண்டுவ‌த‌ற்கே நேர‌மில்லை

இங்கு சில‌ அர‌சிய‌ல் வாதிக‌ளுக்கு...

நீயோ

பிறர் ந‌ல‌த்துக்காக‌

போராடிக்கொண்டிருக்கிறாய்...

உன் முடிவை

இந்த‌ உல‌க‌மே

உற்றுப் பார்க்கிற‌து

விடிய‌ல் எப்பொழுது

போராடும் உன‌க்கு...

எட்டுப்புலிக்காடு
ரெ.வீர‌ப‌த்திர‌ன் துபாய்

நினைவுக்குரிய‌ நாட்க‌ள்




பேருந்து நெரிச‌லில்
நீ செய்த‌ கண்ண‌சைவும்
யாருமில்லா தெருவில்
ப‌ய‌ந்த‌ ப‌டியே உன்னை
அழைத்து சென்ற‌தையும்...
ப‌னி விழுந்து ம‌றையாத‌
அதிகாலையில் - நீ
கோல‌ம் போடுவ‌தை
பார்க்க‌ வ‌ந்த‌ நாட்க‌ளையும்...

க‌ட‌ற்க‌ரை ம‌ண‌லில் இருவ‌ரும்
கை கோர்த்த‌ ப‌டியே செல்லும் போது
நீ சொன்ன‌ வார்த்தைக‌ள்
நிச‌ம் இல்லையானாலும்
நியாய‌மான‌ ப‌திலை சொல்...!

நித்த‌ம் நித்த‌ம் உன‌க்காக‌
நித்திரை இழ‌ந்தேன்
நில‌வு உருமாறுவ‌தில்
நியாய‌ம் உண்டு...

நீ மாறிய‌தில்
நியாய‌மென்ன‌?

எட்டுப்புலிக்காடு
ரெ.வீர‌ப‌த்திர‌ன்..துபாய்

என் இனிய‌வ‌ளே




என் இனிய‌வ‌ளே

காவிய‌ப்பெண்ணே என்

காத‌லிப்பெண்ணே

காத‌லிக்கிறேன் நான் உன்னை

கண் திற‌ந்து பார‌டி நீ என்னை..

உள்ள‌தை நீ சொல்லாம‌ல்

ஊமையாய் நீ சென்றால்

உள்ள‌ம் தான் தாங்கிடுமா

உற‌க்க‌த்தில் ஆழ்ந்திடுமா...

நீ வாழ்க்கை துணையாக‌

இருக்காவிட்டாலும் ப‌ர‌வாயில்லை

என் வ‌ச‌ந்த‌ க‌விதைக‌ளுக்கு

வழிகாட்டியாய் இரு...

நீ காத‌ல் தேவ‌தையாக‌

இருக்காவிட்டாலும் பர‌வாயில்லை

என் கவிதை நாய‌கியாக இரு...

நீ அன்பை ஆயுத‌மாக்கி

அதை உன் புருவ‌வில்லில் பூட்டி

என் இத‌ய‌த்தை வீழ்த்திய‌

இள‌ம‌ங்கை...

உன்னோடு

உன் இரு க‌ண்க‌ளோடு

உன் இத‌ய‌த்தோடு

உன் உள்ள‌த்தின்

உண‌ர்வோடு மீண்டும்

உற‌வாடி ம‌கிழ்ந்திட‌

உத்த‌ர‌வுக்காக காத்திருக்கிறேன்...



எட்டுப்புலிக்காடு

ரெ.வீர‌ப‌த்திர‌ன் துபாய்

21-ம் நுற்றாண்டு அதிச‌ய‌ங்க‌ள்

வ‌ரைமுறைய்ய‌ற்ற‌ க‌ல‌வ‌ர‌ங்க‌ளுக்கு
கி.மு.வும், கி.பி.யும் ஒன்றுதான்
ம‌த‌ம் பிரித்து சாதி எடுத்து
ச‌ம‌த்துவ‌ புர‌ங்க‌ளிலும்
மனித‌ பிண‌ங்க‌ளை
ந‌ட்டுவைத்தார்க‌ள்...

வீட்டிலே சும‌க்க‌ப் ப‌ய‌ந்து
ப‌ள்ளிக்குக் குழ‌ந்தைக‌ளை
பொதி சும‌த்தி அனுப்புகிற
பெற்றோர்க‌ள்...

காத‌லுக்கும் கவ்ர‌வ‌த்துக்கும்
முடிச்சுப்போடுகின்ற‌ ஏழைக‌ள்
வாழ்க்கைக்கும் வ‌ர‌த்ட்ச‌ணைக்கும்
தீர்வு காண‌ம‌லே
செத்துப் போகும் கொடுமை...

இங்கு
காத‌ல‌ர்க‌ளை எதிர்ப்ப‌தாய்
சொல்லிவிட்டு
சாதியையும்,ம‌த‌த்தையும்
எரிக்க‌ப் ப‌ய‌ந்து ம‌ன‌சுக‌ளை
எரிப்ப‌வ‌ர்க‌ள்...

பெண்ணென்றால்
க‌ருவ‌றையையே
க‌ல்ல‌றையாக்கிவிடும்
ம‌னித‌ங்க‌ள்...
நிர‌ந்த‌ர‌ம‌ற்ற‌
இந்த‌ உல‌கில் 'நான்' என்று
சோம்பித் திரியும்
போலி சாமியார்க‌ளோடு
இவ‌ர்க‌ளும் காம‌ம் சுகிக்கும்
அவ‌ல‌ங்க‌ள்...

கி.மு.‍என்ன‌ கி.பி. என்ன‌
இருப‌த்தியோரு நூற்றாண்டடென்ன‌
சுற்றுகிற‌வ‌ரை
இன்னும் தொட‌ராம‌ல்
இருக்க‌ப் போவ‌தில்லை
இந்த‌ ர‌ண‌ங்க‌ள்
ம‌னித‌ர்க‌ள்
ம‌னித‌ங்க‌ளாகும் வ‌ரை...
எட்டுப்புலிக்காடு
ரெ.வீர‌ப‌த்திர‌ன்..துபாய்

இதுதாண்டா இந்தியா.

கொலைகாரனுக்கு நல்ல சார்ப்பான கத்தி சப்ளை. கத்திக்குத்து வாங்கி சாகபோறவனுக்கு முன் கூட்டியே ஒப்பாரி. அடடா, என்ன மனிதாபிமானம்.


· புள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுகிறான்.' - இது பழமொழி அல்ல.


· தலைக்கு குண்டு. வாய்க்கு சோறு. ஆக வாய்க்கரிசி.


· உயிரோடு இருக்கும்போது நோய்வாய்ப்பட்ட பெற்றோர்களுக்கு, தரமான மருத்துவம் கொடுத்து காப்பாற்ற வக்கற்ற வாரிசுகள், செத்தப் பிறகு ஊர் மெச்சவேண்டும் என்பதற்காக 'கருமாதியை' ரொம்ப விசேஷமாக நிறைய செலவு செய்து கொண்டாடுவார்கள். வருஷா வருஷம் 'தேவசத்தை' சிறப்பாக செஞ்சி சொந்தக்காரங்ககிட்ட நல்லபெயர் வாங்குவார்கள். அற்ப இந்துசமூக புத்தி.


· ஈழத்தமிழர்களுக்கு ஏராளமான நிதி குவிகிறது.


· குண்டால் அடிச்சி சோறுபோடுறான்.


· 'இனி நம்ம கிட்ட ஒண்ணுமில்லே. எல்லாம் மேலே இருக்கிறவன்கிட்டதான் இருக்கு.' -கையாலாகாத டாக்டரின் வசனம்.


· "அவளே போனபிறகு, நான் உயிரோடு இருக்கிறதுல அர்த்தம் இல்ல. என்னைவிடுங்க நானும் போய் சாகிறேன்."

பொண்டாட்டியை இவனே தூக்குல மாட்டி தொங்க விட்டுவிட்டு, ஊர் மக்கள் மத்தியில் வசனம் பேசுகிறான் கொலைகார கணவன்.


"தமிழர்களின் நலனுக்காகத்தான் போர்" என்று ராஜபக்சே சொல்கிறார்.


தமிழர்களுக்கு எதிராக சிங்கள ராணுவத்திற்கு ஆயுத உதவி.

நிவாரண உதவி என்ற பெயரில் தமிழர்களுக்கு வாய்க்கரிசி.

இதுதாண்டா இந்தியா.

விடுதலைவீரபத்திரன்
துபாய்

க‌ன‌வே க‌லையாதே

இன்ப‌மான‌ ப‌ள்ளி நாட்க‌ள்

இணைகின்ற‌ சிறு வ‌ய‌தின் ஆட்க‌ள்

சிரிப்பொலியும் பேச்சொலியுமாய்

இருந்த‌போது

எங்கிருந்தோ வ‌ந்த‌

பீர‌ங்கி தோட்டாக்க‌ள்

ப‌ள்ளி சுவ‌ர்க‌ளை சுக்கு நூறாக்கிய‌து...

கை கால் இழ‌ந்து த‌விக்கும்

என் இன‌ குழ‌ந்தைக‌ளை

நினைகும்போது

குறுதி கொப்ப‌ளிக்கிற‌து

இத‌ய‌த்தில்...

தாயின் க‌ற்பை சூறையாடிவிட்டு

த‌ந்தையையும் அடித்து

இழுத்து சென்ற‌ கொடூற‌த்தை க‌ண்ட‌

ம‌க‌னும்,ம‌க‌ளும்

புத்த‌க‌ப் பையைத் தூக்கி எறிந்து விட்டு

புல்ல‌ட்டுக‌ளை தூக்க‌ துணிந்த‌னர்

விடுத‌லை புலிக‌ளாய்...

இற‌ப்ப‌து ஒருமுறைதான்

எப்ப‌டி இற‌ந்தோம் என்ப‌தை விட‌

எத‌ற்காக‌ இற‌ந்த‌ம் என்ப‌தை

வாழ்வின் கொள்கையாக‌க் கொண்ட‌

த‌மிழ்நாட்டு ஈழ ஆத‌ர‌வாளர்க‌ள்

போர் முழ‌க்க‌மிட்ட‌தால்

ஈழத்தில் வெடிக்கும் போர் ஓய்ந்த‌து...

ப‌ள்ளி,க‌ல்லூரிக‌ளும்

ம‌ருத்துவ‌ ம‌னைக‌ளும்

புதிதாய் முளைக்க‌ ஆர‌ம்பித‌ன்..

சாதி,ம‌த‌ இன‌ பாகுபாடுகளை ம‌ற‌ந்து

க‌ல‌ப்பு திரும‌ண‌ம் செய்து கொண்ட‌ன‌ர்

க‌ண‌வ‌னை இழந்த‌ பெண்க‌ளுக்கு

ம‌றுவாழ்வு கொடுத்த‌ன‌ர் இளைஞர்க‌ள்.

அய‌ல்நாடுக‌ளில்

அக‌தியாய் அவ‌திப‌ட்ட‌

அனைத்து இன‌ ம‌க்க‌ளும்

த‌மிழ் ஈழம் வ‌ந்து குவிந்த‌ன‌ர்...

அனைத்து ந‌ட்டு நிறுப‌ர்க‌ளும்

போட்டா போட்டி எடுக்க‌

உல‌கத் த‌லைவர்க‌ளின்

வாழ்த்துச்செய்தி

வ‌ந்த‌ வ‌ண்ண‌மிருக்க‌

ஈழ‌ விடுத‌லைக்காக‌

த‌ன்னுயிரை இழ‌ந்த‌ மாவீரர்க‌ளுக்கு

ஈழ ம‌க்க‌ளுட‌ன்

வீர‌ வ‌ண‌க்க‌ம் செலுத்திவிட்டு

ஆட்சி பீட‌த்தில் அம‌ர்ந்தார்

ஈழ நாய‌க‌ன் பிர‌பாக‌ர‌ன்

விடியும் போது நான் க‌ண்ட‌

க‌ன‌வே க‌லையாதே....

எட்டுப்புலிக்காடு
ரெ.வீர‌ப‌த்திர‌ன் துபாய்

க‌ருணை ம‌க‌ன்

த‌மிழீழ‌த்தின் விடிவிற்காய்

த‌ர‌ணியிலே தோன்றிய‌வ‌ன்

மாசு இல்லா தூய‌ ம‌ன‌ம்

இல‌ட்சிய‌த்தில் ம‌ன‌ உறுதி

ச‌த்திய‌த்தின் மூர்த்தி எம்

த‌மிழீழ‌த்தின் த‌லைவ‌ன்...

கூனிக் குருகி சோம்பேறிக‌ளாய்

கொட்டாவி விட்டுக் கிட‌ந்த‌வ‌ரை

யானையின் ப‌ல‌ம் கொண்டு

ஆர்ப்ப‌ரிக்க‌ வைத்த‌ வீர‌ன்...

புழுவுக்கும் அஞ்சி நடுங்கி

பொறி அட‌ங்கி வாழ்ந்த‌வ‌ரை

கொல்ல‌ வ‌ரும் குண்டுக்கும்

அஞ்சாம‌ல் இருக்க‌ வைத்த‌ மகான்...

தாய் நாட்டின் பெருமைத‌னை

அறியாத‌ பேதைக்கு அதை

தெளிவாக‌ எடுத்திய‌ம்பி

த‌லை நிமிர‌ வைத்த‌ மேதை...

ப‌டை கொண்டு வந்தவ‌ரை

ப‌ய‌ந்தோட‌ வைத்த‌ ம‌க‌ன்

போராட்ட‌ம் என்ப‌த‌ற்கோர்

புது வ‌ழியை க‌டைபிடித்த‌ ஆசான்...

நான் முத‌லில் நீ பிற‌கு

கூடி வா என்னுட‌ன் என்று

போர்க்க‌ள‌ம் சென்று

போராடும் மாவீர‌ன்...

தாய‌க‌த்தின் த‌லைவ‌னையும் அவ‌ன்

வ‌ழித் தோன்ற‌ல்க‌ளையும்

அக‌ம் ம‌ல‌ர‌ வாழ்த்தி நிற்ப்போம்...

எட்டுப்புலிக்காடு - ரெ.வீர‌ப‌த்திர‌ன்

என் ஆசை

அப்பா அம்மாவுட‌ன்

கொஞ்சி ம‌கிழ‌ ஆசை

அண்ணா அக்க‌வுட‌ன்

அன்பாக‌ ஆடிபாட‌ ஆசை

த‌ம்பி த‌ங்கையுட‌ன்

த‌வ‌ழ்ந்து விளையாட‌ ஆசை

உற்றார் உற‌வின‌ருட‌ன்

உற‌வாட‌ ஆசை

ப‌க்க‌த்து வீட்டு ந‌ண்ப‌ர்க‌ளுட‌ன்

பந்து விளையாட‌ ஆசை

சொந்த‌ ம‌ண்ணில் சுத‌ந்திர‌மாக‌

சுற்றி திரிய‌ ஆசைதான்

ஆனால்

அந்நிய‌ நாட்டில்

அனாதையாக‌ அல்ல‌வா

வாழ்கிறேன்...

வ‌ய‌ல்த‌னை விட்டு

பிடுங்கிய‌ நாற்றாய்

வாழ்ந்த‌ வீட்டையும்

வாழ‌வைத்த‌ ம‌ண்ணையும் விட்டு

வெளியேறி வாடிப்போன‌து

என் இத‌ய‌ம்...

எட்டுப்புலிக்காடு ரெ.வீர‌ப‌த்திர‌ன்

அன்று பெய்த‌ ம‌ழையில்



அன்று பெய்த‌ ம‌ழையில்
பூக்க‌ள் பூத்த‌ன‌
செடிக‌ளுக்கு புது வாழ்வாம்...
த‌வ‌ளைக‌ள் ம‌கிழ்ச்சி
ஆராவார‌த்தில்
ப‌ற‌வைக‌ள்
பாட‌த் தொட‌ங்கின‌...
இருந்தும்
அழுத‌ப‌டியே
அனாதை குழ‌ந்தை
தெரு ஓர‌மாய்
பாழும் ஈழ‌த்தில்
அன்று பெய்த‌ ம‌ழையில்…

எட்டுப்புலிக்காடு ரெ.வீர‌ப‌த்திர‌ன்

Saturday, November 22, 2008

புதிய‌ இந்தியா

கொலை கொள்ளை மிர‌ட்ட‌லும்

ந‌ல்ல‌ ம‌னித‌ர்க‌ள் மாய்க்க‌ப்ப‌டுவ‌தும்

க‌ற்பு சூறையாடுத‌லும்...

அன்பு காத‌ல் க‌ரைந்து போவ‌தும்

வெள்ள‌ப்பெருக்கும் வ‌றுமையும்

உய‌ர்ப‌த‌வி ஆசையும்...

ம‌னித‌ப் ப‌டுகொலைக‌ள்

ம‌கா சாத‌ர‌ண‌ங்க‌ள்

இனித்த‌ப்ப‌ முடியாது

இந்த‌ யுக‌ மானிட‌ம்...

உலோக‌ங்க‌ளின்

துளித்துளி வார்த்தைக‌ளுக்கு

க‌ட்டுப்ப‌டுகின்ற‌

மானிட‌ வ‌ர‌லாறு இது...

கொலைக‌ளுக்கு ப‌ரிசு வ‌ழ‌ங்கும்

புதிய‌ நூற்றாண்டு இது...

விர‌ல்க‌ளில் எம‌னை சுண்டும்

வீர‌ விளையாட்டு

கால‌த்தை

கைக‌ளுக்குள் பொத்திவைக்கும்

க‌டைசி க‌ண்டு பிடிப்பு

இப்ப‌டி போகிற‌து

புதிய‌ இந்தியா...?

எட்டுப்புலிக்காடு ரெ.வீர‌ப‌த்திர‌ன்