Sunday, November 23, 2008

காதல் படிக்கட்டுகள்




காவியப்பெண்ணே
என் காதலிப்பெண்ணே
காதலிக்கிறேன் நான் உன்னை
கண் திறந்து பாரடி நீ என்னை...
உள்ளதைச் நீ சொல்லாமல்
ஊமையாய் நீ சென்றால்
உள்ளம்தான் தாங்கிடுமா
உறக்கத்தில் ஆழ்ந்திடுமா...
நீ வாழ்க்கை துணையாக
இருக்காவிட்டாலும் பரவாயில்லை
என் வசந்த கவிதைகளுக்கு
வழிகாட்ட்டியாய் இரு...
நீ காதல் தேவைதையாக
இருக்காவிட்டாலும் பரவாயில்லை
என் கவிதை நாயகியாக இரு...
நீ அன்பை ஆயுதமாக்கி
அதை உன் புருவவில்லில் பூட்டி
என் இதயத்தை வீழ்த்திய
இளமங்கை...
உன் இரு கண்களோடு
உன் இதயத்தோடு
உன் உள்ளத்தின்
உணர்வோடு மீண்டும்
உறவாடி மகிழ்ந்திட
உன் உத்தரவுக்காக
காத்திருக்கிறேன்...
அன்பிற்கினியவளே!
அன்பு இருக்கிறது உன்னிடம்
அதை அள்ளிதர வேண்டும் என்னிடம்
அனல் சிந்தும் பார்வையல்ல
உன் பார்வை
அமுதம் சிந்தும் பார்வை
உன் பார்வை மட்டுமல்ல
மனசும் மென்மையானதுதான்...
உள்ளம் உன்னுடையதுதான்
ஆனால் அதில் உருவாகும்
எண்ணம் என்னுடையது
உன் இதயத்தின்
துடிப்பாக என்றும்
உன்னோடு நானிருப்பேன்...
இருப்பை போன்று
திடமான என் இதயம்
உன் இருவிழிகளுக்கல்லவா
இளகிபோனது...
அன்பே!
நீ வைகையின் ஓரத்தில்
வளர்கின்ற முல்லை உன்
வாசத்தை மிஞ்சிய
மலரேதுமில்லை...
தினந்தோறும்
உன்னிடம் பேசவேண்டுமென
என் உள்ளம் உனைதேடுதே
ஆனால் உன்னை கண்டபின்
எதையும் பேசமுடியாதவனாய்
நிலை மாறுதே...
உண்ணவும் மனமின்றி
உறங்கவும் நினைவின்றி
உன் நினைவில் வாடுகிறேன்
உன் வரவை தேடுகிறேன்...
எட்டுப்புலிக்காடு ரெ.வீரபத்திரன்

No comments: