Saturday, November 29, 2008

நினைவுக‌ளோடு



ஒரு பொன்வேனிற் கால‌த்தின்

இருதி நேர‌மிது

பாச‌மாய் ப‌ழகிய‌

ந‌ட்புள்ள‌ங்க‌ளை பிரிந்திடும்

வேத‌னை மிகு பொழுது...

எங்கோ இருந்த‌

எம்மையும் சொந்த‌ங்க‌ளாக்கி

ச‌ந்தோச‌ங்க‌ளை அள்ளி த‌ந்த‌

ப‌ள்ளிக்கூட‌ம்

ஆசிரிய‌ர்க‌ளின் க‌ற்பித்த‌லோடு

க‌ல‌ந்த‌ ந‌கைச்சுவைக‌ள்

நாம் அடித்த‌ அர‌ட்டைக‌ள்

துய‌ர் துடைத்த‌ ந‌ட்பின் க‌ர‌ங்க‌ள்

ஒற்றை மாமர‌ம்

இப்ப‌டி அத்த‌னை த‌ட‌ய‌ங்க‌ளும்

இனி ஞாப‌ங்க‌ளில்...

வார‌ம் ஒரு

தொலைபேசி அழைப்பு

மாத‌த்திற்கொரு ம‌ட‌ல் என்று

நாம் நினைத்த‌ நினைவுக‌ள்

இன்னும் எத்த‌னை கால‌த்திற்கு

தொட‌ருமோ..?

மீண்டும் எங்கே ச‌ந்திப்போம்

புரிய‌வில்லை

எங்கேனும் பார்த்திட்டால்

வ‌ண‌க்க‌ம் சொல்லி

வார்த்தை உச்ச‌ரிக்க‌

த‌யாராகிற‌து ம‌ன‌சு...

நேற்று

நாம் ப‌கிர்ந்த‌ பொழுதுக‌ளை

பிரிவோடுக‌ள் சும‌ந்திட‌

கையெழுத்திட்டு பிரிகிறோம்

ந‌ம் நினைவுக‌ளோடு...

- எட்டுப்புலிக்காடு ரெ.வீர‌ப‌த்திர‌ன்

No comments: