Sunday, November 23, 2008

அன்று பெய்த‌ ம‌ழையில்



அன்று பெய்த‌ ம‌ழையில்
பூக்க‌ள் பூத்த‌ன‌
செடிக‌ளுக்கு புது வாழ்வாம்...
த‌வ‌ளைக‌ள் ம‌கிழ்ச்சி
ஆராவார‌த்தில்
ப‌ற‌வைக‌ள்
பாட‌த் தொட‌ங்கின‌...
இருந்தும்
அழுத‌ப‌டியே
அனாதை குழ‌ந்தை
தெரு ஓர‌மாய்
பாழும் ஈழ‌த்தில்
அன்று பெய்த‌ ம‌ழையில்…

எட்டுப்புலிக்காடு ரெ.வீர‌ப‌த்திர‌ன்

No comments: