Tuesday, February 15, 2011

ஊழல் கரை படிந்துள்ள இஸ்ரோ!



இந்திய விண்வெளி ஆய்வு மையம் சுருக்கமாக இஸ்ரோ 1969 சுதந்திர தினத்தன்று தொடங்கப்பட்டது. இந்தியாவின் விண்வெளி தந்தை என அழைக்கப்படும் விக்ரம் சாராபாய் அவர்களால் உருவாக்கப்பட்டது.

நிலவில் நீர் உள்ளதா?, சந்திரனில் காற்று உள்ளதா என்பதை ஆய்வு செய்ய ராக்கெட் ஏவுவது முதல், விமானம் பறக்க ரூட் போட்டு தருவது, விமானங்களை கண்காணிப்பது, சேட்டிலைட் தொலைக்காட்சிகளுக்கு சிக்னல்கள் தருவது, மொபைல் போன்களுக்கு சிக்னல்கள் தருவது, விண்வெளியில் இருந்தபடி பக்கத்து நாட்டை உளவு பார்க்க சாட்டிலைட் ஏவுவது போன்றவை இஸ்ரோவின் பணியாகும். பெங்களுர், ஐதராபாத், திருவனந்தபுரம், சத்திஸ்கர் என நாட்டில் 16 இடங்களில் மையங்களை கொண்டு செயல்படும் இஸ்ரோவில் தற்போது 20 ஆயிரம் பேர் பணி புரிகின்றனர். தற்போதைய தலைவர் ராதாகிருஷ்ணன். இவ்வமைப்பை கட்டுப்படுத்தும் பொறுப்பு நாட்டின் பிரதமர் கையில் உள்ளது. மத்திய அமைச்சரவைக்கு பதில் மட்டுமே சொல்ல கடமை பட்டவர்கள்.

இஸ்ரோவின் செலவுக்கு தேவைப்படும் போதுயெல்லாம் பணத்தை வாரி வழங்கி வருகிறது இந்தியரசு. எல்லாமே ஆயிரம் கோடி, 5 ஆயிரம் கோடி, 10 ஆயிரம் கோடி என்ற அளவில் தான் இதற்க்கு நிதி ஒதுக்கப்படுகிறது. இந்த மையம் எப்போதாவது ராக்கெட் ஏவுகிறோம், செயற்கை கோள் ஏவுகிறோம் என்பார்கள். அன்றைய தினம் மட்டும் தலைப்பு செய்தியில் இடம் பிடிக்கும் மற்றப்படி இந்த அமைப்பின் செயல்பாடுகள் சுத்தமாக வெளியே வராது. தற்போது இந்த அமைப்பின் வணிக பிரிவான ஆன்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் 2 லட்சம் கோடி இழப்பு ஏற்படுத்திய விவகாரத்தில் சிக்கியுள்ளது. இஸ்ரோவில் உள்ள அறிவியல் ஆய்வகத்தின் முன்னால் செயலாளரான சந்திரசேகர், 2004 ஆம் ஆண்டு தேவாஸ் மல்டி மீடியா என்ற நிறுவனத்தை தொடங்குகிறார். இந்த நிறுவனம் இணைய தள சேவையில் மட்டுமே தற்போது உள்ளது என தெரியவருகிறது. அப்படிப்பட்ட நிறுவனத்தில் 73 சதவித பங்குகளை வெளிநாட்டை சார்ந்த 4 நிறுவனங்கள் கையில் உள்ளது. இந்த நிறுவனத்தின் 17 சதவித பங்கின் விலை 74 மில்லியன் என்பது குறிப்பிடதக்கது.

இந்த நிறுவனம் தொடங்கிய வேகத்தில் இஸ்ரோவுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்கிறது. அதன்படி இஸ்ரோ ஜிசட்6, ஜிசட்6ஏ என்ற பெயரில் இரண்டு செயற்கை கோளை விண்ணில் ஏவும். அதில் எஸ் பாண்டு எனப்படும் நான்காம் தலைமுறைக்கான அலைவரிசையின் 70 மெகாஹிட்ஸ் காற்றளவு கொண்ட அலைவரிசையை இந்த நிறுவனம் பயன்படுத்தும். 20 ஆண்டுகளுக்கு இந்நிறுவனத்திற்க்கு எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் அலைவரிசை வழங்கப்படும். ஜிசட் செயற்கோலை ஏவ தற்போதைய நிலையில் இஸ்ரோவுக்கு சுமார் 2500 கோடி செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கான செலவில் 170 கோடி ருபாய் இஸ்ரோவுக்கு தேவாஸ் நிறுவனம் வழங்கும், செயற்கைகோல் செயல்பாட்டுக்கு வந்தபின் வாடகையாக 1200 கோடி வழங்கப்படும் இதுதான் ஒப்பந்தம்.

இந்த அலைக்கற்றை மூலம் மொபைல் சேவை, பிராட்பேண்ட் இண்டர்நெட் சேவை அதி அதி வேகமாக அளிக்க முடியுமாம். அதோடு இது நான்காம் தலைமுறைக்கான அலைவரிசை என தெரியவருகிறது. அப்படிப்பட்ட அலைவரிசையை அரசு நிறுவனமாக பி.எஸ்.என்.எல், எம்.டி.என்.எல் போன்ற நிறுவனங்கள் 13 ஆயிரம் கோடிக்கு வாங்கியுள்ளது. ஆனால் ஒரு தனியார் நிறுவனத்திற்க்கு எந்த வித கட்டுப்பாடும் இல்லாமல் மிக மிக குறைந்த விலைக்கு அலைவரிசை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதனை வெளிக்கொண்டு வந்துள்ள மத்திய தணிக்கை துறை அதிகாரி உலகின் பல நிறுவனங்கள் போட்டி போடும் நான்காம் தலைமுறைக்கான அலைவரிசை ஒதுக்கீட்டில் இஸ்ரோ ஏன் ஏல முறையை பின்பற்றவில்லை, இதை ஏன் பிரதமர் அலுவலகத்திற்க்கு தெரிவிக்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ளது.

இஸ்ரோ நிறுவனம் மிகப்பெரிய அறிவு ஜீவிகளான விஞ்ஞானிகளை உள்ளடக்கிய நிறுவனம். நாட்டின் விண்வெளி பாதுகாப்பில் இவர்களின் பங்கு மிக மிக அதிகம். மக்கள் அதிகமாக நம்பிக்கை வைத்துள்ள இந்த அமைப்பு தனியார் நிறுவனத்திற்க்கு சாதமாக அரசுக்கு நட்டம் ஏற்படுத்தியுள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதை பார்க்கும் போது ஒன்று மட்டும் உண்மையாக உணர்வது, அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல ஆட்சி அதிகாரத்தை வழி நடத்தும், நாட்டின் பாதுகாப்பு துறையில் உள்ள அதிகாரிகளுக்கும் நாட்டின் மீது பற்றில்லை என்பது வெளிப்படையாக தெரிகிறது.

எதிர்க்கட்சிகளான பி.ஜே.பி, கம்யூனிஸ்ட் போன்றவை, பிரதமரின் கட்டுப்பாட்டில் உள்ள இஸ்ரோவில் 2 லட்சம் கோடிக்கு ஊழல் நடந்துள்ளது என குற்றசம் சாட்டியுள்ளது. இதற்க்கு பதிலளித்த பிரதமரும், பிரதமர் அலுவலக அதிகாரிகளும், எங்களுக்கு எதுவும் தெரியாது என அறிவித்துள்ளார்கள். கடந்த ஆண்டு கூட 10 ஆயிரம் கோடிக்கு மேல் முழுங்கியுள்ள இஸ்ரோ பற்றி தெரியாது என்பது கேவலமான வெட்ககேடான விஷயம்.

இதையெல்லாம் கவனிப்பதை விட்டுவிட்டு வேறு என்ன வேலை செய்கிறார் இந்தியாவின் பிரதமரான பொருளாதார மேதை. தெரியாது என அவர் சொல்வது விவகாரத்தை மறைக்கிறோம் என்பதை சொல்லாமல் சொல்கிறார். பின் பல்டியடித்து ஊழலே நடக்கவில்லை என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. எப்போவுமே பிரதமர் அலுவலகம் அப்படித்தான் அறிவிக்கும். இந்த விவகாரத்தை நேர்மையாக விசாரித்தால் இன்னும் பல ஊழல் பூதங்கள் வெளி வர வாய்ப்புண்டு.

நடக்குமா?.

No comments: