Saturday, February 5, 2011

ஒவ்வொருவரும் கையெழுத்திட்டப்பின் உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அனுப்புங்கள். ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் ஐந்து கையொப்பம் பெற்றுதாருங்கள். சங்

உறங்கியது போதும் துள்ளி எழு தமிழா!
உண்மையில் நீ யார் என்றுணர் தமிழா!
பழம் பெருமை எங்களதை பக்கம் வை தமிழா!
இனி என்ன சாத்தியங்கள் என்பதையெண் தமிழா!

சரித்திரம் படைப்பதற்கு வழிகள் வகு தமிழா!
சாதித்து நீ வாழ உறுதி கொள் தமிழா!
உன்னதனாய் வாழ்ந்திடவே உரமிடு தமிழா!
உன் உரிமை உன் பெருமை உலகறியும் தமிழா!

சொல்லிலும் எழுத்திலும் கருத்துண‌ரு தமிழா!
ஈழத்தோர் என்பதுவே நம் மரபு தமிழா!
ஈழம் எனும் சொல் அதனை மையமிடு தமிழா!
பிரிவினைப் புகையதனை அணைத்து விடு தமிழா!

நம் நாடு நம் மக்கள் என்று சொல் தமிழா!
கரம் இணைத்து தடை கடந்து வெற்றி கொள் தமிழா!
நாம் எல்லாம் ஈழத்தோர் என்று உரை தமிழா!
நமது மொழி ஈழத்தமிழ் என்று கூறு தமிழா!

என் சாதி நான் மலை மட்டக்களப்பென்றும்
நான் யாழ் நான் வன்னி வல்வெட்டித்துறை என்றும்
உனக்குள்ள வேறுபாட்டை எரித்துவிடு தமிழா!
எறியாத சிலர் அவரை அகற்றிவிடு தமிழா!

ஒரு கருவில் உருவான பூக்கள் நாம் தமிழா!
என்பதனை உலகிற்கு அறியவை தமிழா!
மலரும் ஈழத்தில் மணந்திடுவோம் தமிழா!
என்றுனது மனதினில் நீ உறுதி கொள் தமிழா!

கசப்புத் தரும் எழுத்து வார்த்தை தவிர்த்துவிடு தமிழா!
மற்றவர் உணர்வதையும் கருத்தில் வை தமிழா!
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு மந்திரம் கொள் தமிழா!


http://www.change.org/petitions/view/boycott_of_sri_lanka_cricket_2011

http://www.change.org/petitions/stop-the-genocide-and-free-the-tamils-from-internment-camps-idps-in-sri-lanka

ஒவ்வொருவரும் கையெழுத்திட்டப்பின் உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அனுப்புங்கள். ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் ஐந்து கையொப்பம் பெற்றுதாருங்கள். சங்கலி தொடர்போல் செயல்பட உதவுங்கள்.

http://www.facebook.com/album.php?aid=40437&id=100000923366128&fbid=183368621703915

No comments: