
எனக்கு தெரியாது - நீ
என்னை பெண் பார்க்க
நாளை வருவதாக
தரகர் வந்து சொன்னார்...
எத்தனையோ தடவையாக
சேலை கட்டிக்கட்டி
சேமித்து வைத்திருக்கிறேன்
மன ரணங்களை...
சரி
நாளையும் சேலைகட்டி
ஒரு சோலையாக
உன் கண்முன்
காட்சிதர
காத்திருக்கிறேன்...
நீயாரோ
எனக்கு தெரியாது
இரவில்
இதயச்சுவரில்
எண்ணத்தூரிகை
கீரிப்பார்க்கிறது
இப்படியெல்லாம்
உன் முகம் இருக்குமோ என்று....
பொழுது விடிந்தது
எனக்கும் பொழுது விடியாதா? என்ற
பழைய ஆசையோடு
உனக்காக காத்திருக்கிறேன்...
நீயாரோ எனக்கு தெரியாது
வேறொரு பெண்ணை
நேர்முக பரீட்சை
நடத்த போய்விட்டதாக
தரகரின்
தந்திதகவல் சொல்லியது...
தவித்துபோனேன்
உன் வருகை
தந்தியில் கூட
வரவில்லையென்று
தவித்துபோனேன்.
ஆனால்
நீயாரோ
எனக்கு தெரியாது....
4 comments:
Nice Veeraa.
கவிதை நன்றாகவுள்ளது நண்பரே..
wow..it's nice...
it's really nice..
Post a Comment