Wednesday, September 7, 2011

மூவரின் தூக்கு நம் இனத்தின் மீதான சுருக்கு



அறத்தையே வாழ்வாகக் கொண்டு எவ்வுயிற்கும் அறம்போற்றிய இனம் தமிழினம். இன்று நீதிக்காக யார் யாரிடமோ கையேந்தி நிற்கிறோம். அகிம்சையை போதித்த மகாத்மா காந்தியை தேச தந்தையாகக் கொண்ட இந்தியா தமிழினத்திற்கு எமனாக நின்று நமது இரத்தத்தை குடிக்கிறது.இனி அவர்கள் தங்களின் தேச தந்தையாக எமனைத்தான் ஏற்கவேண்டும்.

ஒன்றரை இலட்சம் உயிர்களைக் குடித்தும் வெறி தீராமல் இன்னும் மூன்று அப்பவிகளின் உயிரையும் குடிக்க துடித்துக்கொண்டு இருக்கிறது. 11 ஆண்டுகாலம் முடிவெடுக்காமல் நிறுத்திவைக்கப்பட்ட கருணை மனுவால் ஒவ்வொரு நாளும் தூக்கை எதிர்நோக்கி வாழ்ந்த அந்த மனநிலை தூக்குத் தண்டனையை விட மேலான மிகவும் கொடுமையான தண்டனை ஆகும். இதனால் தண்டிக்கப்பட்டது பேரறிவாளன் , சாந்தன், முருகன் ஆகிய மூன்று தமிழ்ச்சகோதரர்கள் மட்டும் இல்லை. அவர்களின் குடும்பமும் சேர்ந்தே இதில் தண்டனையை அனுபவித்தது.

இராசீவ்காந்தி கொலைவழக்கு நடந்த விதம் என்பது நீதியை குழிதொண்டி புதைத்து தமிழர்களை பழிவங்கும் நோக்கத்துடனேயே முன் தீர்மானத்தோடு நடத்தப்பட்ட ஒரு வழக்காகும்.

இராசீவ்காந்தி கொலை தொடர்பாக பல்வேறு விசாரணை அமைப்புகள் இந்திய அரசால் ஏற்படுத்தப்பட்டது, அவற்றில் ஜெயின் கமிஷனும், வர்மா கமிஷனும், தங்களது அறிக்கைகளை சமர்பித்து பல ஐயங்களை வெளியிட்டு இருந்தது.அதனடிப்படையில் எந்த நடவடிக்கையும் இல்லை.ஜெயின் கமிஷன் தனது விசாரணை சார்ந்த சில கோப்புகளை இந்திய மத்திய அரசிடம் கேட்டது. ஆனல் நரசிம்மராவின் கங்கிரசு அரசு அந்த கோப்புகளை காணவில்லை என்று பதில் சொன்னது. இங்கே கவனிக்கபடவேண்டிய விடயம் சந்திராசமி நரசிம்மராவின் நெருங்கிய நண்பர். ஜெயின் கமிஷன் சந்திராசமியை சந்தேக நபர் தீரவிசாரிக்க வேண்டும் என்று அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறது. ஆகவே கங்கிரசு கட்சியே இராசீவ் காந்தியின் கொலைவழக்கு விசரணையை நேர்மையாக நடத்த விரும்பவில்லை.

இதை தொடர்ந்து அமைக்கப்பட்ட பண்ணோக்கு விசாரணைக்குழு தனது பணியை தொடங்கி முழுமையடையாத நிலையில், இந்த வழக்கில் மரண தண்டனை வழங்குவது என்பது நீதிக்கு முரணானது.

மரண தண்டனை விதிக்கப்பட்ட இவ்வழக்கானது சி.பி.ஐ அமைப்பால் தடா சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டது. தடா சட்டம் என்பது மனித உரிமைக்கு எதிரான சட்டம் என்பதால் இந்திய அரசே அதனை காலவதியாக்கியது. இவ்வழக்கை தடா சட்டத்தின் கீழ் விசாரித்தது தவறு என்றும் ஆனல் வாக்குமூலங்களை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது இந்திய நீதித்துறையின் பெரிய முரண்பாடு ஆகும்.
தடா சட்டத்தின்படி 20 வயதிற்குட்பட்டவர்களை கைதுசெய்ய இயலாது என்`ற நிலையிலும் 19 வயதே நிரம்பிய பேரறிவாளன் இச்சட்டத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருப்பது இவ்விசாரணையின் முரண்பாட்டை தெரிந்துகொள்ள போதுமானது. பேரறிவாளன் தான் எழுதிய மடல்களில் அரசு தரப்பு வாதங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டதாகவும், தங்களது வாதங்களை பதிவு செய்யப்படாமலேயே தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடுகிறார். இதோடு மட்டுமல்லாமல் அடித்து துன்புறுத்தி வாக்குமூலத்தை வாங்கியதாகவும் குறிப்பிடுகிறார்கள். இந்த வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட 26 பேரில் ஏற்கனவே 22 பேர்கள் விடுவிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்றால் சி.பி.ஐ இந்த வழக்கில் அப்பாவிகளையே குற்றவாளிகளாக்கி இருக்கிறது. ஆகவே நீதிக்கு புறம்பான இந்த வழக்கும் அதன் தீப்பும் தமிழர்களால் ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்றாகும்.

அப்படி தூக்குத்தண்டனை கொடுக்கும் அளவுக்கு என்ன குற்றம் செய்தார்கள் இவர்கள். பேரறிவாளன் ஒரு பேட்டரியை வங்கி கொடுத்தார் என்று சொல்கிறது சி.பி.ஐ. அவர் வாங்கினார் என்பதற்கோ அந்த பேட்டரிதான் கொலைசெய்யபட்டவர்கள் பயன்படுதினார்கள் என்பதற்கோ எந்த விதமான ஆதாராமும் சான்றும் இல்லை. இதை நிறுபிக்கவும் இல்லை சி.பி.ஐ. இந்த வழக்கில் கதை வசனம் எழுதி புனைவுகளை உருவாக்கி அப்பவித் தமிழர்களை பழிதீர்த்து விட்டர்கள் என்பதே உண்மை.

தடா வழக்கு என்பதால் அவர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய உயர் நீதிமன்ற மேல் முறையீடும் இல்லாமல் போனது. ஆகவே பலமாக நீதியின் கதவுகள் அடைக்கப்பட்டு தூக்குக்கொட்டடிக்கு கொண்டு செல்லப்பட்டவர்களே இவர்கள்.
கருணை மனு மூலமாகவாது நீதியை வென்றெடுக்கலாம் என்று இருந்தபோதும் நீதிபதியாக இருந்து ஆளுநர் ஆன பாத்திமாபீவீ தமிழ்நாடு அமைசரவையின் ஒப்புதல் இன்றி நிராகரித்தார். உயர்நீதிமன்றம் இந்த நிராகரிப்பை தவறு என்று சுட்டிக்காட்டியது. இந்த நிலையில்தான் இந்திய அரசின் ஜனாதிபதிக்கு கருணை மனு கொடுக்கப்பட்டு 11 ஆண்டுகள் முடிவெடுக்காமல் நிறுத்துவைக்கப்பட்டு இருந்தது.

தேர்தலில் தோற்றும் பணநாயகத்தால் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டு ஜனநாயகத்தைக்கொன்ற ப.சிதம்பரம் அமைச்சராக இருக்கும் உள்த்துறை குடியரசுத்தலைவருக்கு கருணைமனுவை நிராகரிக்குமாறு பரிந்துறை அனுப்பி இருக்கிறது. இந்த பசப்பு சிறிப்பு பகல்வேடக்காரன் தமிழனாக பிறந்ததை சந்தேகப்படவேண்டி இருக்கிறது. எல்ல நிலையிலும் அநீதியாக தோற்கடிக்கப்பட்ட அப்பாவிகளை இன்று தூக்குக் கயிற்றுக்கு அருகில் நெருக்கித்தள்ளி இருக்கிறது இந்தியாவின் நீதி.

இன்று நாம் அவர்களைக்காப்பாற்ற ஏதாவது ஒருவழி தேடி நிற்கிறோம். இருந்த ஒரு வழியையும் தமிழக முதல்வர் செயலலிதா அறைந்து சாத்திவிட்டார். இனி இதை திறப்பது நமது பேரெழுச்சியான் போராட்டதிலேயே தங்கி இருக்கிறது.
சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர சட்டமன்ற உறுப்பினர்களால் கொடுக்கப்பட்ட தீர்மானத்தை பிடிவாதமாக விவாதத்திற்கு எடுக்காமல் விட்டதன் மூலம் தமிழக அரசுக்கு அக்கரை இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.
குடியரசுத்தலைவர் கருணை மனுவை நிராகரித்து இருப்பதால் அதில் தலையிட தனக்கு அதிகாரமில்லை என இன்று சட்டமன்றத்தில் சொல்லி இருக்கிறார் முதல்வர் செயலாலிதா. இது தமிழர்களின் தலையில் மிளகாய் அரைக்கும் வேலையாகும்.இந்த கூற்றில் துளியளவும் உண்மை இல்லை. விதி 161ன் படியே நாம் செயலலிதவை தமது அதிகாரத்தை பயன்படுத்தச் சொல்கிறோம். விதி 161 படி ஜனாதிபதியின் மன்னிப்பு அதிகாரமும் கவர்னரின் மன்னிப்பு அதிகாரமும் ஒன்றே ஆகும். இதற்கு முன்னுதாரனமாக தயாசிங் வழக்கை எடுத்துகொள்ளலாம்.இந்த வழக்கில் குடியரசு தலைவரால் கருணை மனு நிராகரிக்கப்பட்ட பிறகும் மாநில ஆளுநருக்கு கருணை மனுபோடுகிறார். அவ்வறு போடுவதற்கு விதி 161 இடமளிக்கிறது என உச்சநீதி மன்றம் விளக்கமளித்துள்ளது. இதற்கு முன்னுதாரனமாக இன்னொரு வழக்கும் இருக்கிறது. கேரளத்தில் சி.ஏ.பாலன் கருணை மனுவை அப்போது குடியரசுத் தலைவர் நிராகரித்த பின் முதலமைச்சராக இருந்த இ.எம். எஸ் நம்பூதிரிபாட் அவர்களும் (1957) அப்போது கேரளா சட்ட அமைச்சராக இருந்த வீ.ஆர். கிருஷ்ண அய்யர் அவர்களும் தாங்கள் விதி 161ஐ பயன்படுத்தி சி.ஏ.பாலன் கருணை மனுவை ஏற்று தூக்குத் தண்டனை நீக்கப் போவதாக அறிவித்தார்கள். அதன்பிறகு இந்திய அரசு இறங்கி வந்து சி.ஏ.பாலன் கருணை மனுவை ஏற்று அவரது தூக்குத் தண்டனையை நீக்கியது. தமிழக முதல்வர் இந்த முன் எடுத்துக்காட்டை பின்பற்றியாவது பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரின் கருணை மனுவை மறு ஆய்வு செய்து ஏற்குமாறு தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரலாம். தீர்மனத்தை நிறைவேற்றியதோடு நில்லாமல் உள்துறையையும் தன் வசம் வைதிருப்பதால் ஆளுநருக்கு கருணை மனுவை ஏற்குமாறு பரிந்துரையையும் அனுப்பி வைக்க வேண்டும்.அதை விடுத்து இந்த பிரச்சினையில் இருந்து ஒதுங்கிக்கொள்வதை தமிழமக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டர்கள்.
தமிழர்களே நாம் தமிழக அரசு, இந்திய அரசு ஆகிய இரண்டையும் பணியவைக்கும் அளவில் நமது போராட்டதை நடத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.



பேரறிவாளன் எதற்காக வங்குகிறோம் என்று தெரியாமல் ஒரு பேட்டரியை வாங்கிக்கொடுத்தது தூக்குத்தண்டனைக்குறிய குற்றமா..? என்பதை சிந்தித்து பார்க்கவேண்டும்.
இது குற்றமென்றால் எங்கள் மீது ஏவபட்ட இந்திய அரசின் கொடுங்கோண்மைக்கு என்ன தண்டனை. தமிழர்களே..?
இந்தி எதிர்ப்பு போராட்டதில் 400 பேர்வரை சுட்டுக்கொன்ற இந்திய இராணுவத்துக்கும் அதிகாரிகளுக்கும் என்ன தண்டனை கொடுக்கப்பட்டது?
அகிம்சையை கையிலெடுத்து போராடிய வீரவேங்கைதிலீபனை கொன்ற இந்திய அரசுக்கும் அதிகாரிகளுக்கும் என்னை தண்டனை கொடுக்கப்பட்டது..?
அமைதிப்படை என்கிற பெயரில் அணுப்பபட்ட அட்டூழியப்படை செய்த பாலியல் வல்லுறவுகளுக்கும் கொலைகளுக்கும் என்ன தண்டனை கொடுக்கப்பட்டது.?
ஆயுதங்களை அள்ளிக்கொடுத்து ஈழத்தமிழர்களின் போராட்டத்தை நசுக்கி இலட்சக்கன தமிழர்களை கொன்று இனக்கொலை புரிந்த இந்திய அரசுகும் அதிகரிகளிக்கும் என்ன தண்டனை.?
தொடர்ந்தும் சிங்கள இராணுவத்தால் தாக்கப்பட்டு இறந்துபோன ஆயிரம் வரையிலான தமிழக மீனவர்களை கொன்றவர்களுக்கு என்ன தண்டனை..? கொலை செய்ய விட்டு காவல் காத்த இந்திய இராணுவத்துகு என்ன தண்டனை?இதற்காக ஒரு வழக்கு கூட இன்னும் பதியவில்லையே. தமிழர்களே சிந்திப்போம்.
பேரறிவாளன் , சாந்தன், முருகன் ஆகியோரின் கழுத்தை நெரிக்கத்துடிக்கும் தூக்குக்கயிறு அவர்கள் மூன்று பேரைமட்டும் நெறிக்கவில்லை. ஒட்டுமொத்த தமிழினத்தின் குரல்வளையையும் நெரித்துக்கொண்டிறுக்கும், நெரிக்கப்போகும் கயிறாகும். இதனை உணர்ந்து நாம் போராட்டத்தை தொடர்ந்தும் நடத்த வேண்டும். சகோதரி செங்கொடி இந்த போராட்டத்தில் தன்னை முன்னிறுத்தி சென்று இருக்கிறார். அவரின் தியாகம் வெற்றி பெறவேண்டும். ஒரு தனிமனிதனாக நான் எப்படி போராடுவது என்று சிந்திக்கலாம். கீழ்கண்ட போராடமுறைகளை கையிலெடுத்து நாம் தீவிரமாக போராடுவோம்.


அந்தந்த பகுதிகளில் எந்த இயக்கங்கள் போரடினாலும் கருத்து வேறுபாடுகளை மறந்து நேரடியாகச் சென்று பங்கெடுத்து ஆதரவுகொடுக்கவேண்டும். முடிந்தவரை குடிம்பத்துடன் போராடுவோம்.

கல்லுரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கனித்தும், அரசு அதிகாரிகள் பணிகளை புறக்கனித்தும், அரசுகளுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும்.குறிப்பாக மத்திய அரசு அலுவலகங்கள் இயங்கவே கூடாதபடி செய்ய வேண்டும்.

இந்த தூக்குதண்டனை நிறுத்துவைக்கப்படும் வரை எல்லோரும் கருப்புக்கொடி அணிவோம்.

தன்னோடு வேலை செய்யும் தமிழர்களுக்கு பிரச்சினைகளை விளக்கி அவர்களையும் இனைத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் நம்மவர்கள் நமக்கென்ன என்று இருந்துவிடக்கூடும்.

ஏற்கனவே வழக்கறிஞர்கள் போராட்டத்தை தொடங்கி விட்டர்கள். அவர்களின் பின்நின்று ஆதரவு கொடுக்க வேண்டும்.

மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகையிடப்படவேண்டும்.ஒரு இந்திய மத்திய அரசு அலுவலகங்கள் கூட இயங்ககூடாது. ஏற்கனவே குஜார் இன மக்கள் போராடிய விதத்தை நாமும் கையில் எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டிலிருந்து தொடர்வண்டிகள் இயங்கவே கூடாது.

ஆங்கங்கே தொடர்ந்து தன்னெழுச்சியாக போராட்டவடிவங்களை முன்னெடுக்க வேண்டும்.

தொழிற்சங்கங்களில் உள்ளோர் அந்தந்த சங்கங்களை வலியுறுத்தி போராட வைக்க வேண்டும்.

காவல்துறையில் உள்ள தமிழர்கள் தமிழர்களின் போரட்டத்தை ஒடுக்கமால் தமிழர்களாக நடந்துகொள்ளவேண்டும். மற்ற மாநில கவல்துறையினர் எப்படியோ அப்படியே நீங்களும் நடந்துகொள்ளுங்கள்.

 வீதி வீதியாக கிராமம் கிராமாக மக்களை சந்தித்து இருக்கும் வய்புகளை பயன்படுத்தி போரடுவோம்.

போரட்டத்துக்கு வரமுடியாதவர்கள் கருத்துக்களை துண்டறிக்கையாக மாற்றி தங்களால் இயன்ற பொருட்செலவில் போராடுவோம்.

சிறைக்கு செல்ல அனைவரும் தயாராக இருப்போம்.

வணிகர்கள் தாங்களாகவே கடையடைபுகளை நடத்த வேண்டும்.

நாம் நடதுகிற போரில் தமிழ் தேசியம் வெற்றிபெறவேண்டும். இந்திய தேசியம் தோற்கடிக்கபட வேண்டும். விரைவாக களம் காண்போம் மூவரின் தூக்கு நம் இனத்தின் மீதான சுருக்கு …

தோழர் சிவா.

உதவி : தமிழ்தேசப் பொதுவுடமை கட்சி வெளியீடுகள்

No comments: