Tuesday, August 28, 2012

பூந்தமல்லி சிறப்பு முகாம் முற்றுகை- சீமான் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது

பூந்தமல்லி அகதிகள் சிறப்பு முகாமில் கடந்த 22 நாட்களுக்கு மேல் உண்ணா நிலைப் போராட்டம் நடத்திய செந்தூரனின் உடல் நிலை மோசமாகவே அவரை சென்னை ராயபேட்டை மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர் அரசு அதிகாரிகள். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப் பட்டாலும் செந்தூரன் தனது பட்டினிப் போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்த வண்ணம் உள்ளார். இந்நிலையில் செந்தூரனின் போராட்டத்திற்கு ஆதரவாக பூந்தமல்லி சிறப்பு முகாமை முற்றுகை செய்து போராட்டம் நடத்தினர் சுமார் 2000 நாம் தமிழர்கள். பெருமளவில் பெண்கள் இந்த போராட்டத்தில் குழந்தைகளுடன் பங்கேற்றனர். ஆயிரக்கனில் திரண்ட நாம் தமிழர்களால் சிறுது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. நிலையை சமாளிக்க காவல் துறை அனைவரையும் கைது செய்தது. சீமான் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாம் தமிழர்கள் கைது செய்யப்பட்டு செந்நீர் குப்பம் முதல் நிலை ஊராட்சி மன்ற அலுவலத்தில் அடைத்து வைக்கப் பட்டுள்ளனர். ஏற்கனவே கடந்த 22 ஆம் தேதி மதிமுக கட்சியினர் பூந்தமல்லி சிறப்பு முகாமை முற்றுகை செய்து கைதானார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. இருந்தும் தமிழக அரசு ஏனோ இந்த விடயத்தில் மௌனம் சாதித்து வருகிறது. http://thaaitamil.com

No comments: