Monday, April 20, 2009

தேர்த‌ல் ச‌ந்தை



மாண்ட‌வ‌ர் பெய‌ரைச்சொல்லி

வாக்குக‌ள் கேட்கும் விந்தை

வேறெந்த‌ நாட்டில் உண்டு.

இன‌த்துக்கு சேவை செய்ய‌

க‌ள‌த்துக்கு வ‌ந்த‌வ‌ர்க‌ள்

இன்று காசு ப‌ண‌த்துக்க‌ல்ல‌வா

ப‌த‌வி ஆசை பிடித்து

அழைகிறார்க‌ள்.

ச‌ந்த‌ர்ப‌ சூழ‌லாலே

சில‌ த‌லைவர்க‌ள் ஆனோர்கூட‌

ச‌ந்திக்கு ச‌ந்தி நின்று

த‌லைக்கு மேலே

இரு கை தூக்கி

உன்னை ஈடாய்

வாக்குக்கு விலையும் பேசுகிறார்.

வாக்கெனும் ம‌ந்திர‌க்கோல்

வ‌ழ‌ங்கிடும் ப‌த‌விக்காக‌

காக்கையை குயிலாய்க்காட்டும்

க‌ய‌வ‌ர்க‌ள் வ‌ருவார் உனை தேடி.

சாக்க‌டை தொழிலுக்காய்

த‌ன் இன‌ மான‌ம் விற்போரின்

புக‌ழ்ச்சிக்கு ப‌லியாகிவிடாதே.

எட்டுப்புலிக்காடு ரெ.வீர‌ப‌த்திர‌ன்

No comments: