Thursday, August 20, 2009

அழுக்குருண்டை பிள்ளையார் ஆண்டவனா சொல்லுங்க???


அழுக்குருண்டை பிள்ளையார் ஆண்டவனா சொல்லுங்க???

களிமண்!களி மண்ணால் செய்யப்பட்ட, இரசாயனக் கலவையற்ற விநாயகர் சிலைகளை மட்டுமே வழிபாட்டுக்குப் பயன்படுத்தவேண்டும் என்றும், இத்தகு பொம்மைகளையே நீர் நிலைகளில் கரைக்கவேண்டும் என்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.உண்மையிலே விநாயகர் பொம்மைக்குச் சக்தி இருந்தால் இதுபோன்ற நிபந்தனைகளை ஓர் அரசால் விதிக்க முடியுமா?
சிறிய வயதில் குழந்தைகள் விளையாடும் பொம்மை விளையாட்டு, பெரியவர்களாக ஆன பிறகும்கூட அவர்களை விடுவதில்லை. அதில் ஒன்றுதான் இந்தப் பிள்ளையார் விளையாட்டு.இரசாயனக் கலவை பிள்ளையாரை நீர் நிலைகளில் கரைத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்று கூறுவது கூட ஒருவகை நாத்திகம்தான்.சுற்றுச்சூழலை மட்டுமா பாதிக்கிறது இந்தப் பிள்ளையார் உள்ளிட்ட கடவுள்களின் பட்டியல் மனிதனின் அறிவையும் அல்லவா பாழ்படுத்துகிறது.இந்தப் பிள்ளையாரிடம் தோப்புக் கரணம் போட்டால் எந்தவித விக்னமும் இல்லாமல் நினைத்த காரியம் நிறைவேறுமாம். அதனால்-தான் விக்னேஷ்வரர் என்று அதற்கு இன்னொரு பெயராம்.தேர்வுத் தாளில் பிள்ளையார் சுழி போட்டு எழுதும் மாணவர், மாணவிகள் எல்லாம் நூற்றுக்கு நூற மதிப்பெண்கள் வாங்குவது ஒருபுறம் இருக்கட்டும்; குறைந்தபட்சம் தேர்ச்சிக்குரிய மதிப்பெண்களையாவது வாங்குவர் என்று உத்தரவாதம் கொடுக்க முடியுமா?கணக்குப் பாடத்தில் பிள்ளையார் சுழிபோட்டு எழுதினால், அது இரண்டு என்று நினைத்துக்கொண்டு தவறான விடை என்று விடைத்தாள் திருத்தும் ஆசிரியர் X - குறி போடவும் வாய்ப்புண்டு.பொதுவாகப் பிள்ளையார் பிறந்ததே பார்வதி தேவியாரின் அழுக்கில்தானே! இது எவ்வளவுப் பெரிய கேடு!அழுக்குக்குப் புனிதத்தைக் கற்பிக்கும் கேடுகெட்டதனம் இந்த இந்து மதத்தைத் தவிர வேறு எங்குண்டு?அழுக்கிலிருந்து தோன்றிய பிள்ளையார் தான் நமது முக்கிய கடவுள் என்று பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தால் பிள்ளைகள் மனதில் என்ன தோன்றும்? அழுக்கை விரும்புமா வெறுக்குமா? சோப்புப் போட்டுக் குளிப்பதுகூட குற்றம் என்ற எண்ணம்தானே வரும்?
பாலும், தெளிதேனும், பாகும், பருப்பும் ஆகிய நான்கைக் கலந்து கொடுத்தால் பிள்ளையார் சங்கத் தமிழ் மூன்றையும் கொடுப்பார் என்று பிள்ளைகளைப் பாட வைத்தால் பிள்ளைகள் உருப்பட்ட மாதிரிதான். சங்கத் தமிழ் என்ன சுண்டலா, அள்ளி அள்ளிக் கொடுக்க?சின்ன வயதிலேயே பிள்ளைகளின் மூளையை இப்படிக் கிள்ளினால், அவர்களின் நிலை என்னவாகும்?விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்கவேண்டும் என்று அரசமைப்புச் சட்டம் சொன்னால் போதாது! முதலில் இது மாதிரி அசிங்கமான அழுக்கைக் கடவுளாக்கும் புராணக் கசுமாலங்களை பிள்ளைகளின் மூளைகளைக் குப்பைத்தொட்டி என்று நினைத்துக் கொட்டுவதைத் தடுக்கவேண்டாமா?அழுக்குருண்டை பிள்ளையாரு ஆண்டவனா சொல்லுங்க! மண்ணுருண்டை பிள்ளையாரு மகேசனா சொல்லுங்க!

No comments: