Thursday, January 7, 2010

எங்களின் கண்ணீர் அஞ்சலிகள்


தமிழீழ தேசியத் தலைவரின் தந்தை என்ற பெருமை சுமந்த தமிழன் !
வாழும் காலத்திலேயே நேர்மையின் வடிவமாக திகழ்ந்த மனிதன் !
தான் வகித்த அரச உயர் பதவியை தூய்மையாக செய்த சேவைச் செம்மல் !
வன்னி முழுவதும் எத்தனையோ இளைஞர் நிலம்பெற்று
தம் வாழ்வை வளமாக்க துணையாக இருந்த தூயோன்.!
எல்லாளன் சமாதிக்கு நாள் தவறாது தீபமேற்றிய திருமகன்
அவர் நினைவாக பிரபாகரன் வர காரணமான பெரியோன் !

இராணுவத்தின் கெடுபிடியை தள்ளாத வயதிலும் சந்தித்தவர்!

எத்தனை துப்பாக்கி எதிர் வந்தாலும் எதிர்த்து பேசும் வீரன்!
கொடுஞ்சிறையில் கிடந்து உயிர் கொடுத்த மானத்தமிழன்..!
வெளியில் வந்தால் இவர் மட்டும் உண்மையை சொலவார் என்று


தள்ளாத வயதிலும் சிங்கள அரசு தடுத்து வைத்த தன்மானப் புலி !
உண்மைக்காக வாழ்பவனுக்கு சிறைக் கூடம் சிறீலங்கா !
என்ற உண்மையை மரணத்தால் எழுதிப் போன மானத்தமிழன் !
சிறையில் உயிர் நீத்து மானம் காத்தான் சேரன் செங்குட்டுவன் அன்று
அவர் வழியில் இன்னொரு சரித்திரம் படைத்தார் இவர் இன்று !

மானமுள்ள ஒவ்வொரு தமிழனும் இவரால் தலை நிமிர்வு பெற்றான்..

கோழையாய் குள்ள நரிகளால் வாழும் தமிழரை
மறுபடியும் ஒரு முறை சிந்திக்க வைத்தார்..

இனவாதப் பேய்களின் முகமூடியை இன்னொருமுறை கிழித்தார்..

பிரபாகரனின் தந்தை புகழ் மிக்க தமிழன் என்ற பெருமை தந்தார்..

இறப்பு துயரல்லடா உன் செயலே துயரென்று
சிங்களத்திற்கு சொல்லாமல் சொல்லிப் போனார்..

சிங்கள இனவாத நாயிடம் பிச்சை கேட்டு வாழாது
பெரு மரணம் கண்டு தமிழ் மானம் காத்தார்..

உனக்கு மகனாகப் பிறந்த பெருமையே பிரபாகரனுக்கு பெரிது
தள்ளாத வயதிலும் தளராத தமிழ் வீரன் நம் தாத்தா என்று
உன் புகழை எதிர் காலம் போற்றும்..
பயங்கரவாதம் பேசும் உலக நாய்களே இவர் மரணத்தால்

உங்கள் ஊன் நாற்றமெடுக்கிறது !
பாரத மாதாவே உன் தவப்புதல்வரா நாம்
நினைக்க நாறுகிறது நம் மனம்..
இவர் சிறையில் மரணிக்கும்வரை

No comments: