Monday, August 8, 2011

சோனியாவின் அடிவயிற்றில் புற்றுநோய்: தமிழர்களின் சாபமா ?

தெய்வம் என்று ஒன்று இருக்கிறதா என்ற சந்தேகங்கள் பலருக்கு இருக்கும், சரி விடையத்துக்கு வருவோம். டெல்லியில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனி விமானம் ஒன்று இரகசியமாகப் புறப்பட்டு அமெரிக்கா நோக்கிப் பறந்துள்ளது. இவ்விமானத்தில் வேறு யாரும் இருக்கவில்லை. சோனியா அம்மையார், அவரது பிள்ளைகள் மற்றும் குடும்பவைத்தியர் சகிதம் இந்த விமானம் அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற நியூயார்க் ஸ்லோவான் கேட்டரிங் புற்று நோய் மருத்துவமனை நோக்கிச் சென்றுள்ளது. பரம ரகசியமாக இவ்விடையம் கையாளப்பட்டுள்ளது. சோனியாகாந்தியின் நெருங்கிய குடும்ப நண்பர்களுக்குக் கூட இந்தத் தகவல் மறைக்கப்பட்டிருக்கிறது என்றால் பாருங்களேன். ஆனால் அமெரிக்காவில் உள்ள செய்திச் சேவைகள் சும்மா இருக்குமா செய்திகளை அவிழ்த்துவிட்டனர். இதனால் டெல்லி தற்போது ஆட்டங்கண்டுள்ளது !

இதற்கு எல்லாம் காரணம் அவர் அடி வயிற்றில் ஏற்பட்ட பாரிய புற்றுநோய். இதனை முதலில் இந்திய மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளபோதும் அமெரிக்காவில் அதற்கான சிகிச்சைபெற இவர்கள் அறிவுரை கூறியுள்ளனர். இதற்கு அமைவாக அம்மையார் ரகசியமாக அமெரிக்கா புறப்பட்டுள்ளார். அவருக்கு நேற்றைய தினம் (வியாழன்) பாரிய சத்திரசிகிச்சை ஒன்று நடைபெற்றதாக அமெரிக்கா செய்திச்சேவைகள் ஊர்ஜிதப்படுத்தப்படாத தகவலாக செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழர்களின் வயிற்றில் அடித்த சோனியாவுக்கு அதே இடத்தில் புற்றுநோய் ! புற்றுநோய் என்பது குணப்படுத்தக்கூடிய வருத்தம் என்றாலும், அது இலகுவில் மாறாது. திரும்பத் திரும்ப அது தோன்றும் அபாயம் உள்ளது. 100% இதனைக் குணப்படுத்த முடியாது என்பது யாவரும் அறிந்த விடையம். அது மட்டுமல்லாது புற்றுநோய்க்கு செய்யப்படும் சிகிச்சை மற்றும் கொடுக்கப்படும் மருந்துகள் உடல் முழுவதும் ஒரு எரிச்சலை உண்டாக்கும். குறிப்பாகச் சொல்லப்போனால் உடல் முழுவதும் அசிட்(திராவகம்) தடவினால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும். அதுமட்டுமல்லாது அதன் பக்க விளைவுகளாக தலைமுடி உதிர்தல் தற்காலிகமாக தலை மொட்டையாதல் என்பவும் இதில் அடங்கும். இவைகளை அனுபவிக்கும் காலம் சோனியாவுக்கு நெருங்கியுள்ளது என்று தான் சொல்லவேண்டும்.

அமெரிக்காவில் அறுவை சிகிச்சை முடிக்கப்பட்ட நிலையில் அவர் எப்போது நாடு திரும்புவார் என்று தெரியவில்லை. சோனியாவின் இந் நிலை டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரசின் அடுத்த தலைவர் யார் என்ற சர்ச்சை தான் மூழாத குறை. அதுவும் வெகுவிரைவில் ஆரம்பமாகிவிடும். அடுத்து நடப்பது என்ன என்பதனை தமிழர்கள் பொறுமையோடு இருந்து பார்க்கலாம். கெடுவான் கேடு நினைப்பான் என்பார்கள் ! பழமொழிகள் பொய்யுரைப்பது இல்லையே !

DAILY TELEGRAPH REPORT

No comments: