Saturday, October 30, 2010

கந்தலாகும் இந்திய இராசதந்திரம் -செண்பகத்தா

இந்திய தற்காப்புக் கற்கைகள் மற்றும் பகுப்பாய்வுக்கான கழகத்தின் முன்னாள் இயக்குநர் கே.சுப்பிரமணியம் இந்திய பாதுகாப்பு விவகாரங்கள் பற்றிப் பல ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார் . இவற்றில் அவருடைய முக்கிய ஆதங்கம் வெளிப்படுகிறது.

இந்தியாவின் மேன்மை எம்மால் ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயம் இதை ஏற்பதற்கு அயல் நாடுகள் மறுக்கின்றன. சீனாவைப் பெரும் வல்லரசாக எற்றுக் கொள்ளும் இந்தியாவின் அயல் நாடுகள் தமக்குச் சமதையான நாடாகவே இந்தியாவைக் கருதுகின்றன. சுப்பிரமணியத்தாரின் இந்தப் புலம்பல் நிரந்தரமான உண்மையை வெளிப்படுத்துகிறது. இந்தியா தன்னைக் கான மயிலாடக் கண்டிருந்த வான் கோழியாகத் தான் காட்ட முடிகிறேதே தவிரச் சீனாவை போல் உலகத் தர வல்லரசாக வர முடியவில்லை.

இன்னொரு கட்டுரையில் இந்தச் சுப்பிரமணியம் என்ன சொல்கிறார் என்றால் ‘வலு என்பது செய்யும் திறன், ஆக்கும் திறன், மாற்றங்களை ஏற்படுத்தும் திறன், உருவமாற்றத்திறன் என்பதோடு தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் திறன். இந்திய நாட்டின் சக்திக் கோட்பாட்டில் இவை அடங்குகின்றன.’ இந்த முக்கிய செய்தி கேந்திரப் பகுப்பாய்வுச் சஞ்சிகை ஏப்பரல் 1987 பக்கம் 04ல் காணப்படுகிறது. (Strategic Analysis, April 1987, Page 4 Author K. Subrahmaniyam).

சொன்னதைச் செய்ய முடியாத கட்டம் வரும் போது தனது சொற்களை மென்று விழுங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. சுப்பிரமணியம் கூறும் இந்திய வலு அல்லது சக்தி எங்கே போய்விட்டது. அவர் பட்டியலிடும் திறன்களில் ஒன்றையாவது ஈழத் தமிழர் பிரச்சனையில் இந்தியாவால் நடைமுறைப் படுத்த முடிந்ததா..?

உள்நாட்டு பிரச்சினைகளைத் தீர்க்க முடியாமல் எப்படி ஈழத் தமிழர் பிரச்சினையைத் தீர்த்து வைக்க இயலும். புரையோடிப் போயுள்ள காஷ்மீர் பிரச்சினையை இனப் படுகொலை மூலம் எதிர்கொள்ள முடிகிறதே தவிர, ஆக்கபூர்வமான தீர்வை வழங்கும் திறன் இந்தியாவிடம் இல்லை. தொடர் கதையாகி வரும் தமிழக மீனவர்கள் மீதான சிறிலங்கா கடற்படையினரின் தாக்குதல் கிட்டத் தட்ட இந்தியா மீது சிறிலங்கா தொடுத்துள்ள மறைமுகப் போராகக் கருதப்படுகிறது .

09 யூலை 2010ம் நாள் நாகை மாவட்ட மீனவர் செல்லப்பன் படுகொலை செய்யப்பட்டார் . இது தொடர்பாகத் தமிழக முதல்வர் கருணாநிதி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதிய கடிதத்திற்கு அவர் பதில் கூறவில்லை. உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஒப்பமிட்ட நாலு வரிப் பதில் கருணாநிதிக்கு அனுப்பப்பட்டது. பதில் என்ன சொன்னது..? தங்கள் கடிதம் தொடர்பாகப் பிரதமர் மன்மோகன் சிங், பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் ஆகியோருக்கு விரிவாக எடுத்துரைத்துள்ளேன் இந்திய வெளிவிவகார அமைச்சகம் சிறிலங்கா அரசுடன் பேசி இந்தப் பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுக்கும்.

தமிழக மீனவர்கள் கொல்லப்படும் போதெல்லாம் தமிழக முதல்வர் எழுதும் கடிதங்களுக்கு இது போலத் தான் இந்திய நடுவண் அரசு பதிலளிக்கும். முதல்வர் கருணாநிதி இது பற்றி அலட்டிக் கொள்வதில்லை. சிறிலங்காத் து£தரை வெளிவிவகார அமைச்சகத்திற்கு அழைத்து சிறிலங்கா அரசைக் கண்டிக்க வேண்டியது தான் இராசதந்திர நடைமுறை. இது உலகம் முழுவதும் ஏற்றுள்ள பாரம்பரிய நடைமுறை. நியூசிலாந்து நாட்டின் செய்தி வாசிப்பாளர் போல் வெறன்றி என்பவர் புது டில்லி மாநில முதல்வர் ஷீலா டிக்ஷிற் அவர்களின் பெயரை உச்சரிக்க முடியாதவர் போல் நையாண்டி செய்தபோது கடுஞ்சினம் கொண்ட இந்திய அரசு மேற்கூறிய பாரம்பரிய நடைமுறையைப் பின்பற்றியது.

அதாவது நியூசிலாந்து து£தரை வெளிவிவகார அமைச்சகத்திற்கு அழைத்து இந்திய அரசு கடும் அதிருப்தியைத் தெரிவித்தது. இதற்கு அந்தத் து£தர் மன்னிப்புக் கேட்டார். போல் வெறன்றியின் வேலையும் போய்விட்டது. அவுஸ்திரேலியா தொடர்பாகவும் து£தரை வெளிவிவகார அமைச்சகத்திற்கு அழைக்கும் நிகழ்ச்சி ஒக்ரோபர் 09ல் நடந்துள்ளது. அவுஸ்திரேலியாவில் இந்திய மாணவர்களும், இந்திய வம்சாவழி அவுஸ்திரேலியர்களும் மர்மக் கும்பல்களால் அண்மைக் காலமாகத் தாக்கப்படுவது உலகறிந்த விடயம்.

ஒரு இந்தியன் மின்சாரம் செலுத்தப்பட்டுக் கொல்லப்படும் காட்சியின் வீடியோப் பிரதிகளை மின் அஞ்சல் மூலம் அவுஸ்திரேலியப் பொலிசார் விநியோகித்தும். இன்ரர்நெற்றில் பதிவேற்றம் செய்தும் உள்ளனர். அத்தோடு இனவாதத்தைத் து£ண்டும் கருத்துக்களையும் வெளியிட்டனர். 09 ஒக்டோபர் 2010ம் நாள் இந்திய நடுவண் அரசு இது பற்றி அவுஸ்திரேலிய அரசிடம் விளக்கம் கோரியுள்ளது. அத்தோடு நிற்காமல் புது டில்லிக்கான அவஸ்திரேலியத் து£தர் பீற்றர் வர்கீஸ் அவர்களை வெளிவிவகார அமைச்சகத்திற்கு அழைத்து கடும் அதிருப்தியை இந்தியா தெரிவித்துள்ளது.

நடுவண் அரச அமைச்சர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில் இந்தியர்கள் எங்காவது தாக்கப்பட்டால் அதற்கு இந்தியா கடும் நடவடிக்கை எடுக்கும் என்றார். இது வரை 534 வரையிலான தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் இவர்கள் இந்தியர்கள் இல்லையா..? காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் இறுதி நாள் நிகழ்ச்சிகளின் போது போர்க் குற்றவாளியான மகிந்த ராஐபக்சவை எலிசபத் மகாராணியின் பிரதிநிதி எட்வேட் இளவரசரின் பக்கத்தில் அமர வைத்திருக்கும் இந்தியா, அரச குடும்பத்திற்கு பெரும் அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளது .

இது பற்றிச் சர்வதேச ஊடகங்கள் கண்டனம் தெரிவித்தாலும் அது செவிடன் காதில் ஊதிய சங்கு போல் இந்திய அதிகாரிகளின் காதில் வீழ்ந்துள்ளது. முறைப்படி பார்த்தால் 77 தங்கப் பதக்கங்கள் உட்பட 177 பதக்கங்களை வென்ற அவுஸ்திரேலியாவின் பிரதமர் யூலியா கெயிலார்ட் அவர்களை அல்லவா விசேட விருந்தினராக அழைத்துக் கௌரவித்திருக்க வேண்டும். இந்த நாகரிகம் பக்குவம் இந்தியாவுக்கு இன்னும் வரவில்லை . இந்தியர்கள் பற்றி சராசரி அவுஸ்திரேலியர்கள் மட்டமாக நினைப்பதில் என்ன தவறு.

விக்கிரமாதித்தன் கதையில் வரும் மீண்டும் மீண்டும் முருங்க மரத்தில் ஏறும் வேதாளம் போல் முதல்வர் கருணாநிதி ஈழத் தமிழர்களுக்குச் சம உரிமை வழங்கும்படி சோனியாவிடம் கடிதமூலம் கேட்டிருக்கிறார். வாழ்வுரிமையே மறுக்கப்பட்டிருக்கிறது சம உரிமையாவது, சம உரிமையாவது கிடைக்குமா என்ன..? சட்டசபைத் தேர்தல் நெருங்கி விட்டது ªஐயலலிதாவின் அட்டகாசம் எல்லை கடந்து விட்டது. இருக்கிறது ஈழத்தமிழர் உரிமைப் பிரச்சனை விடுவாரா கருணாநிதி .

1956ல் சிதம்பரத்தில் நடந்த திமுக பொதுக் குழுக் கூட்டத்தில் அவர் ஈழத்தமிழர் உரிமை பற்றிப் பேசினார் என்று சொல்கிறார்கள் . நம்புவது கடினமாகத்தான் இருக்கிறது அசல் சந்தர்ப்பவாதியான கருணாநிதி உள்ளன்று வைத்துப் புறமொன்று பேசுவதில் வல்லவராயிற்றே. அது சரி பெரியவரே சகோதர யுத்தத்தை மறைவாய் நின்று து£ண்டியவர்கள் யார் தெரியுமா? உங்களுக்கு தெரியாமலாபோகும்.

இன்று வரை இந்திய அரசியலில் பின்னணிச் சக்தியாக விளங்கும் றோ உளவமைப்புத் தான் போராளிக் குழுக்களை இணைந்து செயற்பட விடாமல் பிளவு கோல் செருகியவர்களும் இவர்கள் தான். பரஸ்பர சந்தேகங்களை உருவாக்கி விரிசலைப் பெரிதாக்கியவர்கள் றோப் புண்ணியவான்கள் தான். சகோதர யுத்தம் பற்றிப் பேசுவதற்கு உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது. நாவலர் நெடுஞ் செழியனை ஓரங்கட்ட நீங்கள் செய்த சூழ்ச்சி, சகோதர யுத்தம் இல்லாமல் வேறென்ன. உங்கள்? வீட்டுக்குள் வரப்போகுது, வட்டியும் முதலுமாக கொடுக்கப் போகிறீர்கள்.

கருணாநிதியை பற்றிய கவலையை விடுங்கள் அந்த ஆளின் பிறவிக் குணம் மாறாது. இப்போது சுப்பிமணியத்தார் சொன்ன இந்தியாவின் வலுவைப் பற்றிப் பார்ப்போம். புது டில்லியில் இருந்து து£ரப் பார்வை இந்தியாவின் எதிர் காலத்திட்ட வரைபடம் என்ற புதிய நு£லைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அட்மிரல் ராஐ£ மேனன் என்ற இந்திய கடற்
படை அதிகாரியும், டாக்டர் ராவ் குமார் என்ற பாதுகாப்பு விவகாரப் பகுப்பாய்வு நிபுணரும் இணைந்து இந்நு£லை எழுதியிருக்கிறார்கள். இதில் சொல்லப்பட்ட விடையங்கள் சுப்பிரமணியத்தாரின் வலுத் திறன் கோட்பாட்டுடன் ஒத்துப் போவது போல் தென்பட்டாலும் அடிப்படையில் முரண்பட்டே காணப்படுகின்றன .

மிகச் சுருக்கமாகக் கூறுவதாயின் இராணுவ பொருளாதார வலுப்பெற்ற சீனாவின் எழுச்சி இந்தியாவுக்கு மிகப் பெரிய அசசுறுத்தலாக அமையும். இந்திய சீன எல்லைகளில் பதற்றம் நிலவும். அவற்றை சுமூகமாகத் தீர்க்கும் வலுவோ தந்திரமோ 2030 வரை இந்தியாவிடம் கிடையாது . இது தான் நு£லின் ஆதாரச் செய்தி சீனா - பாகிஸ்தான் நட்புறவு இராணுவ, பாதுகாப்பு, இராசதந்திர அடிப்படையில் நீடிக்கும் இது இந்தியாவுக்குத் தீராத தலைவலியாக இருக்கும் .

உலக வல்லரசாக வளரும் இந்தியாவின் இலட்சியம் சீனா - பாகிஸ்தான் நெருக்க உறவுகளால் பெரும் பின்னடைவைச் சந்திக்கும். இவை அடுத்து வரும் செய்திகள். தெற்கு ஆசிய நாடுகளுக்குச் சீனா வழங்கும் பொருளாதார மற்றும் பாதுகாப்பு உதவிகள் இந்தியா எதிர்பார்க்கும் நட்பு சக்திகளை சீனா பக்கம் இழுத்துச் செல்லும். இதனால் இந்தியா இந்தப் பிராந்தியத்தில் தனிமைப் படுத்தப்பட நிறைய வாய்ப்பு உண்டு.

சீனாவின் பலத்துக்கு நிகராக இந்தியா எழுச்சி பெற 2030 வரை காத்திருக்க வேண்டும் அதற்கிடையில் உலக மாற்றங்கள் மதிப்பிட முடியாதளவுக்கு நிகழ்ந்து விடும். இந்த நு£லை எழுதிய அட்மிரல் ராஐ£ மேனனும் பாதுகாப்பு ஆய்வாளர் டாக்டர் ராவ் குமாரும் சில நியாயப் படுத்த முடியாத எதிர்வு கூறல்களை வெளியிட்டுள்ளனர். இது முக்கியமான கனவு நு£ல் என்ற விமர்சனம் நியாயமானது.

அமெரிக்கா, மத்திய ஆசியநாடுகள், தென்கிழக்கு ஆசிய நாடுகள் சீனாவைக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக இந்திய நட்புறவை எதிர்காலத்தில் நாடலாம் என்பது தான் கனவுகளின் உச்சக் கட்டம். வியட்நாம் 2020ம் வருடத்தில் ஒரு பலமான இராணுவ நாடாக வளர்ச்சி பெறுவதோடு, சீனாவுக்கு எதிரான இந்திய நட்பு நாடாக இடம் பெறும். இந்தோனேசியாவும் பலம் பெற்று இந்திய நட்பு நாடாக மாறுவதோடு தனது துறைமுகங்களை இந்தியக் கடற்படையின் பாவனைக்கு வழங்கும்.

கனவுலகில் சஞ்சரிப்போர் யதார்த்தத்தை இழந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள். 2030ல் சீனாவுக்கு சமனான வளர்ச்சி காண்போம் என்ற கனவு இந்தியா என்ற நாடு இருந்தால் தான் பலிதமாகும் ஈழத் தமிழர்களை அழித்த இந்தியாவின் கனவுகள் மிதப்பாகத் தான் இருக்கின்றன.

No comments: