Friday, July 22, 2011

ஈழப் பிரச்சனை: டெல்லியில் வைகோ ஆர்ப்பாட்டம்

ஈழப் தமிழர்க்கு உலக அளவில் ஆதரவை திரட்ட டெல்லியில் வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும், இந்த ஆர்ப்பாட்டம் ஆகஸ்ட் 12ஆம் தேதி நாடாளுமன்றத்திற்கு எதிரே நடைபெறும் என்றும் மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சமச்சீர் கல்வி: தமிழக அரசுக்கு வைகோ கண்டனம்

சமச்சீர் கல்வி முறையை உடனே நிறைவேற்ற மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. சமச்சீர் கல்வி விவகாரத்தில் தமிழக அரசின் அணுகுமுறை கண்டனத்துக்கு உரியது என்றும் மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


முல்லை பெரியார்: வைகோ உண்ணாவிரதம்

முல்லை பெரியார் அணை விவகாரத்தில் கேரள அரசை கண்டித்து ஆகஸ்ட் 17 தேதி மதுரையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உண்ணாவிரதம் மேற்கொள்கிறார் என்று அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

No comments: