Monday, March 22, 2010

தேடல்...

தேடித் தேடி சலித்துவிட்டது
பேருந்துகளிலும்
ரயில் வண்டிகளிலும்
ஒவ்வொரு சன்னலாய்
தேடிக்கொண்டிருக்கிறேன்
நீதானா என்று?

கடற்கரை முதல்
கவியரங்கம் வரை
ஒவ்வோர் இடங்களிலும்
உனக்கான என் தேடல்
இன்னும் ஓய்ந்த பாடில்லை...

நண்பர்கள்
நகைக்கிறார்கள்
நகைக்கட்டும்...

உடன் பிறப்புகள்
உதறுகிறார்கள்
உதறட்டும்...

எனக்கு
நீ மட்டும்தான்
வேண்டும்!
உன் பார்வை
மட்டும்தான்!

உன்னைத் தேடுவேன்
என் விழிகள்
பனிக்கும் வரை!
எந்தச் செடியில்
பூத்துக்கிடக்கிறாய்?

தூக்கத்தில் மட்டுமே
வந்து போகும் நீ
நேரிலே
வரமாட்டாயா?

சில சமயம்
நடுக்கனவில்
எழுந்து விடுகிறேன்
உன்னை காண்பதற்கு!

மனதெல்லாம்
நிறைந்திருக்கும் உனக்கு
என்ன பெயர் வைப்பதென்று
யோசித்து யோசித்து
கடைசியாக
என் பெயரில் பாதியையே
வைத்து விட்டேன்...

எங்கே இருக்கிறாய்?
ஒரே ஒருமுறை
காட்சி தா!

உன் வருகைக்கான
நம்பிக்கைகளுடன்....

No comments: