எங்களை விட
எங்கள் நாட்டு
சாமியார்கள் தான்
ஜனநாயகத்தை சரியாக
புரிந்து கொண்டிருக்கிறார்கள்...
அதனால்தான்
இங்கு சில தந்திரசாமிகளின்
மந்திர வலைகளில்
எங்கள் மந்திரிமார்கள்
மயங்கி கிடக்கிறார்கள்...
சாமியார் மடங்களின்
சாய்வு மேசையில் எங்கள்
சட்ட வரவுகள்
சரி செய்யப்படுகின்றன...
அரசியல் வாதிகளை விட
ஆசிரமவாசிகள் தான்
அதிகமாய் அதிகாரம்
செலுத்துகிறார்கள்...
ஆட்சியாளர்கள் மாறலாம்
ஆனால் ஆசியாளர்கள்
மாறுவதில்லை...
எனவே தான் இங்கு
ஆட்சியாளர்களை விட
ஆசிரமவாசிகளுக்கு
அதிக மரியாதை...
ஒன்று மட்டும் புரிந்தது
எதையும் புரிந்து கொள்ளாத
இந்தியனைத்தான்
இவர்கள் எதிர்பார்க்கிறார்கள்...
எட்டுப்புலிக்காடு ரெ.வீரபத்திரன்
இம்முறை மகளிர் தினத்தில் கொண்டாட்டம் இல்லையே, ஏன்?
21 hours ago
No comments:
Post a Comment