Thursday, December 11, 2008

த‌னிமை




அத்துவான‌க் க‌ட்டில்

வெந்து காய்ந்தும்

ந‌னைந்து குளிர்ந்தும்

த‌லைவிரித்து

நின்று கொண்டிருக்கும்

ஒற்றைப் ப‌னைம‌ர‌த்தின்

துக்க‌ங்க‌ளோடு

ஒளிபுக‌ முடியா கால‌வெளிக்க‌ப்பால்

அட‌ர்ந்த‌ காட்டில்

துள்ளி குதித்து

வீழ்ந்து கொண்டிருக்கும்

அருவியின்

ச‌ந்தோச‌ங்க‌ளோடும்

ஆயிர‌மாயிர‌ம்

ந‌ட்ச‌த்திர‌ங்க‌ளுக்கூடாய்

எதிலும் ஒட்டாது

வ‌ள‌ர்ந்து தேய்ந்தும்

தேய்ந்து வ‌ள‌ர்ந்தும்

காய்ந்து கொண்டிருக்கிற‌து

என் த‌னிமை நில‌வு...



க‌ண்ணாடி ம‌னித‌ன்

நான் அப்ப‌டியே நானாக‌த் தெரிவேன்

நான் நானாக‌த் தெரிந்தாலும்

க‌ண்ணாடி ம‌னித‌னுக்கு இல்லை

என்னைப் போல‌ நிறைய‌ முக‌ங்க‌ள்



எட்டுப்புலிக்காடு

ரெ.வீர‌ப‌த்திர‌ன் துபாய்

No comments: