மனம் ஒரு குரங்குதான்
அது எங்கெங்கோ
தாவித்திரிகிறது...
சில சமயங்களில்
குழந்தை போன்று
அடம் பிடிக்கிறது...
மறக்க நினைப்பவற்றை
மறக்க முடியாது
தத்தளிக்கிறது...
அளவில்லா
சந்தோசத்தில் ஆர்ப்பரிகின்றது...
தாங்க முடியாத
துக்கத்தினால்
துவண்டு போகின்றது...
அடைய முடியாதவற்றை
எண்ணி ஏங்குகின்றது
இருப்பதைக்கொண்டு
திருப்தியடைய
மறுக்கின்றது...
இருப்பினும்
மனம்மென்பது
எதுவென்று
வரையறுக்க
முடியாதிருக்கின்றது....
எட்டுப்புலிக்காடு ரெ.வீரபத்திரன்
--
விடுதலைவீரபத்திரன்
துபாய்
No comments:
Post a Comment