Saturday, December 5, 2009

காதலும் பிரிவும் இதுதான் காதலா?

காதலியே
இதோ
என் அன்பளிப்பு...
உன் சொல் அம்புகளால்
என் குருதி கொட்டுகிறது
அதை எடுத்து
உதட்டு சாயம்
பூசிக்கொள்...

நீ பிரிந்த பின்
நேரத்தை எப்படி செலவழிக்க
கவிதைகளாகவா
இல்லை
கண்ணீராகவா?

இனிவளே!
உனக்கு பிடித்த கலர்
கருப்பா சிவப்பா
என்பது கூட
எனக்கு தெரியாது...
ஆனால்
உனக்கு கடிதம்
எழுதி முடிக்கும் முன்பே
உன் முடிவை கூறிவிட்டாய்..
நான் வடிக்கும் கண்ணீரால்
இன்று
கவிதை எழுதுகிறேன்...

இனியவளே!
உன் காலோடு
கால் கொலுசு போன பின்னும்
சத்தம் மட்டும் இன்னும்
என் மனசுக்கு ஒலிக்கிறது....

நீ எனக்கு கிடைக்க மாட்டாய் என்று
பிரிந்து சென்ற நீ
ஏன் இன்னும்
என் நினைவில் இருந்து
பிரிந்து செல்ல மறுக்கிறாய்...

என்னடி இது
என் இதத்தை
திருடிச்சென்றவள் நீ
ஆனால்
தனிமை சிறையில்
வாடுவது நானா?

நல்ல வேளை
நீ என்னை காதலிக்கவில்லை
அப்படி
நீ காதலித்திருந்தால்
இந்த உலகம்
பல ஆயிரம் கவிதைகளை
இழந்திருக்கும்...

கொள்ளையடித்து விட்டேனா
அவள் இதயத்தை
அதற்காகவா
அவளை கட்டிவைத்து
ஆயுள் தண்டனை
கொடுத்துவிட்டார்கள்...

No comments: