Wednesday, December 30, 2009

மீண்டும் தலைவன் மீட்கும் ஈழம்



கொட்டடி கிடத்தி குண்டடி நிகழ்த்தி
கம்பிவேலிக்குள் கயமை உடன்பாடு
கண்டொழிக்க நினைத்தானே கயவன்
மாண்டொழியா எம் மானம்...
மறத்தமிழர் தன்மானம்...


மண்மிசைஅயலாட்சி அடியோடொழிக்கவே
போலித்தலைமை புறங்கடை விரட்டவே
ஆளப் பெரும்படையணி திரண்டதுவே!
புலத்தினில் புரட்சியேந்தி புதுப்படை திரண்டதுவே!

எம் தலைமையிங்கே வுதிக்கும்!
வன்னித் தலைமை வானுயரும்!
கடற்புலியும் கரும்புலியும்- ஆற்றல்
களப்புலியும் பூவையரும் புரட்சியேந்த
பிறந்த புலிப்படை மீளும்!

களத்தில் மடியும் இனமறவர்
கல்லறை சென்றும் எழுகின்றார்!
உணர்வை யூட்டும் உயர்(நடு)கல்லாய்...
உலகை உலுக்கும் உணர்வுகளாய்...

இன்னே நெருப்பில் எழுகிற ஈழம்
எம் நினைவில் வளருது நாளும்!
தாகந் தணிக்கும் எந்தலைவா
ஈகந் தருவோம் இன்னுயிரை!

எத்தனை தாய்களின் மைந்தன் நீ
உற்ற உறவு மடிவெய்த- வாழ்வு
செழித்த கழனியெலாம் எதிரி (கைக்)கொள
ஏதிலிகளான இலக்கம் தாய்க்கும்
இலக்கிய தனையன் நீ!

ஈழத்து நிலவே! நீயெம் உள்ளத்தரசாய்...
இவ்வுளத்து அரசை நிலத்தி(னி)ல் எழுப்புக!
மனத் துயருடைத்து ஆலையும் நற்றமிழ்ச்சாலையும்
அலைபடர் கடலினும் பெருக்குக!

எண்ணிலா பெருமைகள் இன்னும் படைத்து
விண்ணுயர் நெடும்புகழீட்டி நெடிது வாழ்கவே!

தோழர் சிவா



No comments: