Tuesday, March 8, 2011

மலையாளி -மார்வாடிகளின் ஆதிக்கத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தமிழ் தேச பொதுவுடமை கட்சியின் பொதுச்செயலாளர் பெ.மணியசரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’தமிழ்நாட்டில் மலையாளிகள் , மார்வாடிகளின் ஆதிக்கத்தால் தமிழர்களின் தொழில், வணிகம், வேலை பறிபோகிறது.

இதனால் மலையாளியான ஆலுக்காஸ் ஜூவல்லரி நிறுவனத்தை கண்டித்து , தஞ்சையில் உள்ள ஆலுக்காஸ் ஜூவல்லரி முன்பு நாளை மாவட்ட செயலாளர் பழ.ராசேந்திரன் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெறும்.

தமிழக தங்க நகைத்தொழிலை மார்வாடிகளும்,மலையாளிகளும், வங்காளிகளும் கைப்பற்றிக்கொண்டு நம் பொற்கொல்லர்களை வீதிக்கு விரட்டி விட்டார்கள்.

வறுமை தாங்காமல் நம் பொற்கொல்லர்கள் தற்கொலை செய்துகொண்டார்கள். அதைத்தக்கண்டித்துதான் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.

No comments: