Friday, March 11, 2011

விழித்தெழு புறப்பட...



மறுபடியும் தேர்தல் சந்தை
கூடிவிட்டது
ஆட்டுமந்தைகளாய்
மக்களும் ஓட்டுப்போட
புறப்பட்டுவிட்டார்கள்...
அன்று கைகுலுக்கி கொண்டவர்கள்
இன்றைய எதிரிகளாக நிற்கிறார்கள்...
அன்றைய எதிரிகள்
இன்று கைக்குலுகி
நலம் விசாரிக்கிறார்கள்...
சென்ற முறை
சட்டசபைக்கு சென்று
கொள்ளை அடித்தவர்கள்
மீண்டும் வாய்ப்புத்தேடி
விண்ணப்பிக்கிறார்கள்...
பட்டி தொட்டியெல்லாம்
படைபடையாய்
வாகனங்கள் அணிவகுப்பு...
ஓட்டுடன் உன்னையும்
விலைபேசும்
புதிய அரசியல்வாதிகள்...
ஓட்டுப்போடும் நாளும் கூட
வேலைக்கு சென்றால்தான்
அன்றைய வயிற்றை நிரப்ப
ஆயத்தமாகும் ஏழைகள்...
வானொலியும், தொலைக்காட்சியும்
வெற்றிப்பெற்றவர்களை தொடர்ந்து
அறிவித்துக்கொண்டிருக்கிறது...
இரு கைக்கூப்பி
கும்பிடு போட்டவர்கள்
கோட்டையை நோக்கி
வேட்டையாட சென்றுவிட்டனர்...
போதைக்கு அடிமையாகி
புதல்வன் இன்னும் உறக்கத்தில்...
நாட்டையும் நம்மையும்
அடிமையாக்குவதற்கு முன்
விழித்தெழு மகனே
வேறு கிரகத்திற்கு சென்றுவிடுவோம்...

1 comment:

நிலா said...

ரொம்ப நல்லா இருக்குது. அதே நேரம் துக்கமாயும் இருக்கு.