Saturday, December 19, 2009

பேரறிவாளன் - விடிவு எப்போது?

பதினெட்டு ஆண்டு சிறைவாசம்...

அதிலும் தனிமைச் சிறைச்சாலை.

இதனினும் கொடியதாக எவ்வித பரோல் விடுப்பும் இல்லாத நீண்ட நெடிய
சிறைவாசம்.

ராஜீவ் காந்தி படுகொலையில் கைதுசெய்யப் பட்டு மரண தண்டனைக் கைதியாக
வேலூர் தனிமைச் சிறையில் இருக்கும் பேரறி வாளன், சில கோரிக்கைகளை
வலியுறுத்தித் தமிழக முதல்வருக்கு ஒரு நீண்ட கடிதத்தை எழுதியிருக்கிறார்.
அந்த கடித நகலை நமக்கும் அனுப்பியிருந்தார். அதை வாசகர்களின் பார்வைக்கு
அப்படியே வைத்திருக்கிறோம். பேரறிவாளனின் மனநிலை மட்டுமின்றி, சிறை
வாழ்க்கை பற்றிய சில கண்ணோட்டங்களும் நம்மை கவனிக்க வைக்கின்றன இதில்!

'நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை' என்ற நிலையற்ற இவ்வுலகில் தன்னுடைய
இருத் தலுக்காக, உண்மையின் உயிர்த்தலுக்காகப் போராடும் மனிதனின்
விண்ணப்பம். மீண்டும் மீண்டும் என்னுடைய பின்னணி குறித்துக் கூறுவது,
தங்களுக்கு சலிப்பூட்டுவன. என்றாலும், தேவையின் பொருட்டுக் கூறுகிறேன்,
பொருத் தருள்க.

அய்யா, நான் பெரியாரின் கொள்கைவழிப் பெயரன். பகுத்தறிவு என் பாதை; அதுவே
என்னு டைய இன்றைய நிலைக்கு முதல் காரணமும்கூட. அடுத்து... நான்

மொழி, இனப்பற்றாளன். தொப்பூழ் கொடி உறவாம் தமிழக மக்கள் படும் இன்னல்
கண்டு, இதயம் நொந்தவன். உலகத் தமிழரைப் போல் என்னால் இயன்றதை அவர்களுக்கு
இயல்பாகச் செய்தவன். என்னைக் கொலைக் களத்தில் நிறுத்த இந்த காரணங்கள்
போதுமானதாக இருந்தது. அடிப்படையில் நான் ஒரு கொள்கையாளன்... கொலையாளன்
அல்ல. இதனை என்னுடைய 'தூக்குக் கொட்ட டியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்'
என்ற நூல் வடிவிலான வாதுரை தெளிவுபடுத்தும் என நம்புகிறேன்.

'தடா' சட்டம் என்ற கொடுங்கருவி குறித்துத் தாங்கள் மிக நன்றாகவே
அறிவீர்கள். அந்த ஆட்தூக்கிச் சட்டம், குற்றமற்ற பலரையும் விலங்கினைப்
பூட்டி சிறைக் கொட்டடியில் தள்ளிய வரலாற்றினை உணர்ந்தவர் தாங்கள்! அதற்கு
சற்றும் குறைவில்லாமல் அதே அளவில் அச்சட்டத்தின் குரூரத்தால்
பாதிக்கப்பட்டவன் நான். கைவிரித்து வந்த கயவர்கள், பொய்விரித்துப்
புலன்கள் மறைத்து, எம்மைக் கொலையாளியாக்கிய உண்மை உணராதவர் அல்ல தாங்கள்!

மற்றபடி, பிற 'தடா'வினருக்கும் எனக்குமுள்ள பெருத்த வேறு பாடெல்லாம்,
அவர்கள் மீது நல்வாய்ப்பாக முன்னாள் தலைமை அமைச்சர் கொலை வழக்கில்
குற்றம் சுமத்தப்படவில்லை. மாறாக, அதனினும் சிறிய அளவிலான கொலைக்
குற்றங்களில் தொடர்பு படுத்தப்பட்டார்கள். அடுத்து, எனக்குக் கொள்கைப்
பின்னணி இருந்ததே தவிர அரசியல் பின்னணி, செல்வாக்கு எதுவும் இல்லை. இவையே
நான் இழைத்த பெரும்பிழைகள்.

அய்யா... கட்சி நம்பிக்கை துளியும் அற்றுப்போன மனிதனாக மெள்ள மெள்ள சாவை
நேசிக்கவும் பழகிவிட்ட, பழக கட்டாயப் படுத்தப்பட்ட மனிதனாக இம்முறையீட்டு
மனுவினை எழுதுகிறேன். ஏனெனில் இனத்தின்பால், மொழியின்பால் பற்றுகொண்ட ஓர்
இளைஞன், தன்னுடைய கடுமையான உழைப்பால், அர்ப்பணிப்பு உணர்வால் தமிழர் தம்
தலைமையேற்ற வரலாற்றைப் பதிவு செய்துள்ள 'நெஞ்சுக்கு நீதி' அதற்கான விடை
பகிர்கிறது. அதன் நாற்பத்தெட்டாம் அத்தியாயத்தில் தாங்கள் கூறியவற்றைத்
தங்களுக்கு மீண்டும் நினைவூட்டுவதற்கு பொருத்தருள்க.

'இருபது ஆண்டு சாதாரணமானதா? இளைஞனாக இருந்தால் வனப்பும் வசீகரமும்
நிறைந்த வாலிபம் சிறைச்சாலையிலேயே முடிந்து விடுகிறது. நாற்பது வயதுக்கு
மேற்பட்ட மனிதனாகத்தான் அவனை வெளியே பிரசவிக்கிறது சிறைச்சாலை.

வாலிபத்தை கடந்த நிலையிலே உள்ளவன் ஆயுள் தண்டனை பெற்றால், வாழ்வின்
சுகத்தை இனிமேல் அனுபவிக்க முடியாது என்ற பருவத்தில் சக்கை மனிதனாக அவனை
சிறைச்சாலை வெளியே உமிழுகிறது. ஆயுள் தண்டனையைவிட மரண தண்டனை எவ்வளவோ
மேல்தான்!'

ஆம், அய்யா..! பதினெட்டு ஆண்டு சிறைவாசம்... அதிலும் தனிமைச் சிறைச்சாலை.
இதனினும் கொடியதாக எவ்வித பரோல் விடுப்பும் இல்லாத நீண்ட நெடிய
சிறைவாசம்... இவையெல்லாம் சிறிய துன்பங்களே எனக்கூறும் அளவிற்கு சாவின்
நிழலில்தான் வாழ்வே நகர்த்தவேண்டும். அய்யா, கற்பனை செய்ய முடிகிறதா
தங்களால்? கற்பனை எல்லைகளுக்கு அப்பாற்பட்டது எம்முடைய துன்பம். அதன்
பின்னரும் இம்மனுவினை நல்ல மனநிலையோடு என்னால் எழுத முடிகிறதென்றால்,
நீதியின்பால் எனக்குள்ள அசைக்க முடியாத நம்பிக்கையும், கொள்கை எனக்களித்த
மன உறுதியுமே காரணங்கள்.

அய்யா, அன்றாடம் எத்தனையோ மனுக்கள் தங்கள் மேசையில் வந்து விழும். எதனையோ
எதிர்பார்த்து ஏக்கத்தோடு, நம்பிக்கையோடு பல கோரிக்கைகளை முன்வைக்கும்
அதுபோன்ற மற்றுமொரு மனுவல்ல இது.

உள்ளபடியே எவ்வித குற்றமும் புரியாமல், செய்யாத குற்றத்துக்காகப்
பிழைபட்டுப் போன நீதியின் விளைவால் வாழ்வின் பதினெட்டு ஆண்டு கால
வசந்தத்தை இழந்துவிட்ட மனிதனாக இம்மனுவினை எழுதுகிறேன்.

'யாருக்கும் தூக்கு தண்டனை வேண்டாம்' என்றீர்கள். மகிழ்ந்து போனேன்.
சதாம் தூக்கிலிடப்பட்டபோது 'ஒரு மனிதனின் இறுதி அத்தியாயங்களை கிழித்து
விடாதீர்கள்' எனச் சொன்னீர்கள். பேருவகை கொண்டேன். 'மாற்றுக் கட்சியினராக
இருந்தாலும் தூக்கு கூடாது' என்றீர்கள். வியந்திருக்கிறேன். அண்மையில்,
'பாகிஸ்தான் சிறையில் வாடும் சரப்ஜித்சிங் தூக்கினைக் குறைக்க உலக
நாடுகள் குரல் எழுப்பவேண்டும்' என வேண்டுகோள் விடுத்தீர்கள். தங்களுடைய
உள்ளக்கிடக்கையை புரிந்து, பெருமை கொண்டேன்.

ஆனால் அய்யா... வேதனையோடு தங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புவதெல்லாம்-
பிறகேன் எம்முடைய தூக்கினை மாற்றத் தயங்குறீர்கள்? எம்முடைய வழக்கில்,
'நால்வரையும் தூக்கிலிடுவதில் தனக்கோ தன்னுடைய புதல்வர்களுக்கோ
விருப்பமில்லை' என திருமதி சோனியா அம்மையார் கூறிய பின்னரும் ஏன்
என்னுடைய தூக்கினைக் குறைக்க முடியவில்லை? திருமதி நளினி அவர்களின்
தூக்கினைக் குறைத்து ஆணையிட்டீர்கள், மகிழ்ச்சி. அவருக்குத் தூக்கினைக்
குறைக்க இருந்த அதே நியாயமான காரணங்கள், இன்னும் சொல்லப்போனால் அதைவிடக்
கூடுதலான நியாயங்கள் ஏனைய மூவருக்கும் உள்ளது என்பதைத் தங்களுக்கு
சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

அய்யா, இனியும் நான் தூக்கினைக் குறைக்கும் வேண்டுதலோடு என்னுடைய
முறையீட்டைத் தங்கள் முன் வைக்கத் தயாரில்லை. எனக்கு விடுதலை வேண்டும்.
ஒரு ஆயுள் சிறைவாசியைக் காட்டிலும் கூடுதலான துன்பத்தினைக்
கண்டுவிட்டேன். எனவே எனக்கொரு முடிவு, என்னுடைய நிலைக்கோர்
முற்றுப்புள்ளி விழவேண்டும்.

'காந்தியடிகள் நூற்றாண்டை ஒட்டி 12.11.68-க்கு முன்பு மரண தண்டனை
பெற்றவர்கள் அனைவருக்கும் தண்டனை குறைக்கப்பட்டதன் விளைவால் 111 கைதிகள்
தூக்கிலிருந்து தப்பினர்' என்ற வரலாற்று நிகழ்வைத் தாங்கள் நெஞ்சுக்கு
நீதியில் பதிவு செய்துள்ளீர்கள். பேரறிஞர் அண்ணா நூற்றாண்டினையட்டி
மீண்டும் அவ்வரலாற்று நிகழ்வு புதுப்பிக்கப்பட வேண்டும் என
விரும்புகிறேன்.

ஏனெனில், கடந்த 18 ஆண்டுகளாக 'தம்முடைய வாழ்வே என்னை மீட்பதுதான்' என
சலிக்காது போராடிவரும் என்னுடைய பெற்றோரின் முதுமை தரும் அச்சம் என்
மனதைப் பிழிகிறது. அவர்களுக்கு ஒரு புதல்வனாக என்னுடைய கடமையை செய்யத்
தவறியிருந்தாலும், குறைந்தளவு, என்னுடைய நிலையால் அவர்கள் இழந்திருக்கும்
அமைதிக்குத் தீர்வுகாணவே ஆசை கொள்கிறேன்.

அய்யா, 18 ஆண்டுகளுக்கு முன்னர் எனக்குத் தூக்கு
நிறைவேற்றப்பட்டிருக்குமானா��
�், இன்று என்னுடைய பெற்றோர் தம்முடைய மற்ற பேரப்பிள்ளைகளோடு தன்னுடைய
இனிமையைக் கண்டிருப்பர். குறைந்தளவு, தாங்கள் என்னுடைய கருணை மனுவினை
தள்ளுபடி செய்த 25-04-2000 அன்று என்னைத் தூக்கிலிட்டிருந்தாலும் இன்று
என்னைப் பற்றிய துன்பம் என்னுடைய பெற்றோரையும் உற்றார் உறவினர்களையும்
ஆட்கொண்டிருக்காது. கெட்ட வாய்ப்பாக அவை நிகழவுமில்லை; என்னுடைய
பெற்றோருக்கு அமைதியும் மகிழ்ச்சியும் ஏற்படவுமில்லை. இரண்டுமற்ற இந்த
நிலை ஒழிக்கப்பட்டாக வேண்டும்.

திருமதி பிரியங்கா, திருமதி நளினி ஆகியோர் சந்திப்பு அதற்கான வாய்ப்பைத்
தந்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் திரு.தமிழருவி
மணியன் போன்றோரின் கருத்துக்களெல்லாம் எம்முடைய துன்பத்தை எதிரொலிப்பதாக
உள்ளது. இந்நிலைக்குப் பின்னரும் எமக்கு விடிவு கிட்டவில்லையானால்,
விடுதலை பிறக்கவில்லையானால்... இனி எப்போதுமே அது நிகழப்போவதில்லை.

வாழ்வோ சாவோ, ஒளியோ இருளோ, இன்பமோ துன்பமோ... தற்போதே இறுதிசெய்யப்பட்டாக
வேண்டும். பேரறிஞர் அண்ணா நூற்றாண்டில் பெரியாரின் பேரப்பிள்ளையன்று
நீதிபெற்றது என்ற வரலாறு எழுதப்படட்டும் அல்லது இனமொழி பற்றுக்காகக்
குற்றமற்ற ஓர் இளைஞன் கொல்லப்பட்டான் என வரலாறு குறிக்கட்டும்.

வேதனை மிகுந்த இந்த நீண்ட நெடிய 18 ஆண்டு சிறைவாசம் முற்றுப் பெற துணை
புரியுங்கள். ஓர் உண்மை மனிதனின் உயிர்ப் போராட்டத்துக்குக்
கொள்கையாளனின் மனக்குமுறலுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள், முடிவுரை
எழுதுங்கள்!

பதினெட்டு ஆண்டு சிறைவாசம். அதிலும், தனிமைச் சிறைச்சாலை. அதனினும்
கொடியதாக எந்தவித பரோல் விடுப்பும் இல்லாத நீண்ட நெடிய சிறைவாசம். சாவின்
நிழலில்தான் வாழ்வையே நகர்த்த வேண்டும் என்ற துன்பத்தின் எல்லை. நான்
மொழி, இனப் பற்றாளன். ஈழத் தமிழரின் நிலைகண்டு நொந்தவன். இதுவே, என்னைக்
கொலைக்களத்தில் நிறுத்தப் போதுமான காரணங்களாக இருந்தன. நான் செய்த
தவறுதான் என்ன?' -தண்டனைக் குறைப்பு வேண்டி தமிழக முதல்வருக்கு தூக்குத்
தண்டனைக் கைதி பேரறிவாளன் எழுதிய கடிதத்தின் சில வரிகள்தான் இவை.

முன்னாள் பாரதப் பிரதமர் ராஜிவ்காந்தி படுகொலை செய்யப்பட்டு பதினெட்டு
ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. அவரது கொடூர மரணத்திற்குக் காரணமானவர்கள்
என்று சி.பி.ஐ.யால் சுட்டிக் காட்டப்பட்டவர்கள் நளினி, முருகன், சாந்தன்,
பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோர்.
இவர்களில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் தூக்குத் தண்டனைக்
கைதிகள். மற்றவர்கள் ஆயுள் கைதிகளாக சிறையில்
அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

தூக்குத் தண்டனைக் கைதிகளில் சாந்தன், முருகன் ஆகிய இருவரும் இலங்கைத்
தமிழர்கள். பேரறிவாளன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். இவர்தான் ராஜிவ்
படுகொலைக்குக் காரணமான `பெல்ட் பாம்' தயாரித்தவர் என சி.பி.ஐ.யால்
குற்றம்சாட்டப்பட்டவர். உச்ச நீதிமன்றத்தில் தூக்குத் தண்டனை உறுதி
செய்யப்பட்ட நிலையில், அரசின் கருணைப் பார்வைக்காகக் காத்துக்
கிடக்கிறார்கள் பேரறிவாளன் உள்ளிட்ட கைதிகள். அதிலும், கடந்த 15-ம் தேதி
நடந்து முடிந்த அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி, தமிழக அரசு தண்டனையைக்
குறைக்கும் என்ற நம்பிக்கையோடு, பேரறிவாளன் எழுதிய கடிதத்தின் பல
பகுதிகள் மிக உருக்கமாக எழுதப்பட்டிருந்தன.

ஆனால், அவரது தண்டனைக் குறைப்பு பற்றிய எந்தவித அறிவிப்பையும் அரசு
வெளியிடவில்லை. பேரறிவாளனின் நிறைவேறாத அந்தக் கடிதத்தின் சில பகுதிகள்
இதோ...

`நிலையற்ற இவ்வுலகில் தனது இருத்தலுக்காக, உண்மையின் உயிர்த்தலுக்காகப்
போராடும் ஒரு மனிதனின் விண்ணப்பம். அடிப்படையில் நான் ஒரு கொள்கையாளன்.
கொலையாளன் அல்ல. `தடா' சட்டத்தின் குரூரத்தால் பாதிக்கப்பட்டவன் நான். கை
விரித்து வந்த கயவர்கள் எம்மைக் கொலையாளியாக்கிய உண்மையை உணராதவர் அல்ல
தாங்கள். எனக்கு கொள்கைப் பின்னணி இருந்ததே தவிர, அரசியல் பின்னணி,
செல்வாக்கு எதுவும் இல்லை. இவையே நான் செய்த `பெரும் பிழைகள்'. கடைசி
நம்பிக்கைத் துளிகளும் அற்றுப் போன மனிதனாக, மெல்ல மெல்ல சாவை
நேசிக்கவும் பழகிவிட்ட, பழக கட்டாயப்படுத்தப்பட்ட மனிதனாக இதனை
எழுதுகிறேன்.

`நெஞ்சுக்கு நீதி'யின் நாற்பத்தெட்டாம் அத்தியாயத்தில் தாங்கள், `இருபது
ஆண்டுகள் சாதாரணமானதா? இளைஞனாக இருந்தால், வனப்பும், வசீகரமும் நிறைந்த
வாலிபம் சிறைச்சாலையிலேயே முடிந்துவிடுகிறது. ஆயுள் தண்டனையைவிட, மரண
தண்டனை எவ்வளவோ மேல்தான்' என எழுதியுள்ளீர்கள். ஆம். உள்ளபடியே,
பிழைபட்டுப் போன நீதியின் விளைவால், 18 ஆண்டு வசந்தத்தை இழந்துவிட்ட
மனிதனாக இம்மனுவினை எழுதுகிறேன். உண்மைக்கு `கருணை' வேண்டி நான்
எழுதவில்லை. `கனிவு' வேண்டி எழுதுகிறேன்.

அய்யா.. `யாருக்கும் தூக்குத் தண்டனை வேண்டாம்' என்கிறீர்கள். மகிழ்ந்து
போனேன். சதாம் தூக்கிலிடப்பட்டபோது, `ஒரு மனிதனின் இறுதி அத்தியாயங்களைக்
கிழித்துவிடாதீர்கள்' எனச் சொன்னீர்கள். பேருவகை கொண்டேன். `மாற்றுக்
கட்சியினராக இருந்தாலும் தூக்குக் கூடாது' என்றீர்கள்.
வியந்திருக்கிறேன்.

ஆனால், அய்யா... வேதனையோடு தங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புவதெல்லாம்,
பிறகேன் எமது தூக்கினை மாற்றத் தயங்குகிறீர்கள்? `நால்வரையும்
தூக்கிலிடுவதில் எனக்கோ, எனது புதல்வர்களுக்கோ விருப்பமில்லை' என திருமதி
சோனியா அம்மையார் கூறிய பின்னர், நளினியின் தூக்கினைக் குறைத்து
ஆணையிட்டீர்கள். மகிழ்ச்சி. அதேநேரம், அவருக்கு தூக்கினைக் குறைக்க
இருந்த அதே நியாயமான காரணங்கள், இன்னும் சொல்லப்போனால், அதைவிட கூடுதலான
நியாயங்கள் ஏனைய மூவருக்கும் உள்ளது என்பதை சுட்டிக்காட்ட
விரும்புகிறேன்.

ஏனெனில், இதேநிலை முடிவற்று நீடிப்பதால் தொலைந்துபோகும் எனது வாழ்வைப்
பற்றி நான் கவலை கொள்ளவில்லை. மாறாக, கடந்த 18 ஆண்டுகளாகவே தமது வாழ்வே
என்னை மீட்பதுதான் என சலிக்காது போராடிவரும் எனது பெற்றோரின் முதுமை
தரும் அச்சம்தான் என் மனதைப் பிழிகிறது. அவர்களுக்கு ஒரு புதல்வனாக எனது
கடமையைச் செய்யத் தவறியிருந்தாலும், எனது நிலையால் அவர்கள்
இழந்திருக்கும் அமைதிக்குத் தீர்வு காண ஆசை கொள்கிறேன். 18 ஆண்டுகளுக்கு
முன்பே எனக்கு தூக்கு நிறைவேற்றப்பட்டிருந்தால், எனது பெற்றோர் தமது
பேரப்பிள்ளைகளோடு இனிமையைக் கண்டிருப்பர். என்னைப் பற்றிய துன்பம் எனது
பெற்றோரையும், உற்றாரையும் ஆட்கொண்டிருக்காது. கெட்ட வாய்ப்பாக அவை
நிகழவுமில்லை. எனது பெற்றோருக்கு அமைதியும், மகிழ்ச்சியும்
ஏற்படவுமில்லை.

பிரியங்கா, நளினி சந்திப்பு அதற்கான வாய்ப்பினைத் தந்துள்ளது. திரு
தமிழருவி மணியன் போன்றோரின் கருத்துக்கள் எமது துன்பத்தை எதிரொலிப்பதாக
உள்ளன. இந்நிலைக்குப் பின்னரும் எமக்கு விடுதலை கிட்டவில்லையானால், இனி
எப்போதுமே அது நிகழப்போவதில்லை. வாழ்வோ சாவோ, ஒளியோ இருளோ, இன்பமோ
துன்பமோ தற்போதே இறுதி செய்யப்பட்டாக வேண்டும். அல்லது இன, மொழிப்
பற்றுக்காக குற்றமற்ற ஓர் இளைஞன் கொல்லப்பட்டான் என்று வரலாறு
குறிக்கட்டும். முடிவுரை எழுதி புதியதொரு வாழ்க்கையைத் தொடங்கி
வைப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு கடிதத்தை நிறைவு செய்கிறேன்' என ஏழு
பக்கங்களுக்கு தனது கோரிக்கையைப் பதிவு செய்திருக்கிறார் பேரறிவாளன்.

நாம் இந்தக் கோரிக்கை கடிதம் பற்றி பேரறிவாளனின் தாய் அற்புதத்திடம்
பேசினோம். "அண்ணா நூற்றாண்டு விழாவில் கட்டாயம் அறிவிப்பு வரும் என
நம்பிக்கையோடு என் மகன் முதல்வருக்குக் கடிதம் எழுதினான். எதுவும்
நடக்கவில்லை'' என குமுறலோடு பேசியவர், சிறிது இடைவெளிக்குப் பிறகு,
"எங்களுக்கு ஒரு பையன். இரண்டு பெண் குழந்தைகள். அறிவு சிறைக்குப்
போகும்போது, அவனுக்கு 19 வயசு. அவன் அக்காவுக்கு திருமண நிச்சயதார்த்தம்
நடந்தது. இப்போது பேரன் ப்ளஸ்டூ படிக்கிறான். பேத்தி ஒன்பதாவது
படிக்கிறாள். கடந்தமுறை சிறையில் அவனைச் சந்தித்துப் பேசும்போது,
`செப்டம்பர் 15_ம் தேதிக்குள் அறிவிப்பு வரும்னு எதிர்பார்க்கிறேன்.
இல்லாவிட்டால், `தயவு செய்து என்னைத் தூக்கில் போடுங்கள்' என உச்ச
நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு நான் கடிதம் எழுதப் போகிறேன்' என என்னிடம்
அழுதான்'' என்றபடியே அழ ஆரம்பித்துவிட்டார் அற்புதம்.

`இன்றில்லாவிட்டாலும், நாளை, நாளை மறுநாள்.. என்றாவது ஒருநாள் தன் மகனின்
விடுதலை தீர்மானிக்கப்படும்' என்ற நம்பிக்கைதான் அற்புதத்தின் வாழ்க்கையை
நகர்த்திக் கொண்டிருக்கிறது.

---குமுதம் ரிப்போட்டர்---
---ஜூனியர் விகடன்---

1 comment:

Shan Nalliah / GANDHIYIST said...

We hope and pray he would be released SOON! Otherwise this is INHUMAN ACT!!!
MUMBAI ATTACK KASAB TREATED WELL SPENDING MILLION OF RS FOR SECURITY!
PERARIVAALAN MUST BE RELEASED BEFORE WTCC!!! WE HAVE TRUST ON MK/CM;SG/Congress Party!