Sunday, May 23, 2010

நிறம் மாறும் ஜுனியர் விகடன்






ஜுனியர் விகடன். ஒரு காலத்தில், தரமான பத்திரிக்கையாக, மக்களின் நம்பிக்கையை பெற்ற இதழாக வலம் வந்து கொண்டிருந்தது ஜுனியர் விகடன். இப்போது, சிறிது சிறிதாக நிறம் மாறி, தற்போது மஞ்சள் நிறமாகவே ஆகி விட்டது.

விகடன் குழுமத்தில் உள்ள மற்ற பத்திரிக்கைகள் அனைத்தையும் விட, அக்குழுமத்தில் பணியாற்றுபவர்களுக்கு, ஜுனியர் விகடன் என்றாலே ஒரு தனி மதிப்பு உண்டு. அரசு அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகள் என அனைவரிடத்திலும், ஜுனியர் விகடன் செய்திகள் என்றால் ஒரு மதிப்பும், தங்களைப் பற்றிய தவறான செய்திகள் வெளி வந்தால் அச்சமும் இருந்தது உண்டு. இதெல்லாம், பாலசுப்ரமணியன் என்ற விகடன் குழுமத்தின் மூத்த ஆசிரியர் இருந்த பொழுது.

இதற்குப் பிறகு, இரண்டாவது தலைமுறை தலையெடுத்த பிறகு, தொழிலை விரிவாக்க வேண்டும் என்றும், சினிமாவிலும், சின்னத் திரையிலும் கால் பதிக்க வேண்டும் என்றும், எடுக்கப் பட்ட முயற்சிகள், பாலசுப்ரமணியன் தனது விருப்பமின்மையை தெரிவித்த போதும், அவரது எதிர்ப்பு உதாசீனப் படுத்தப் பட்டது. இதையும் தாண்டி தீவிரமாக எதிர்த்தால், எக்ஸ்பிரஸ், இந்து, குமுதம் போன்ற பத்திரிக்கை குழுமங்களில் நடக்கும் குழாயடி சண்டை இங்கேயும் நடக்கும் என்ற புரிதலில், தனது மகனின் விருப்பப் படி, விட்டு விட்டார்.

ஆனால், தொடர்ந்து நடந்த சம்பவங்கள், பாரம்பரியம் மிக்க விகடன் குழுமம், பாலியல் உணர்வுகளை தூண்டும் வகையில், செக்சை மூலதனமாக வைத்து, செக்ஸ் பத்திரிக்கையாக மாறி வந்ததை கண்டு மனம் பொறுக்கவில்லை அந்த பெரியவருக்கு. சரி. செக்சை மூலதனமாக வைத்து பத்திரிக்கை நடத்துவதென்றால், அதில் ஆசிரியர் என்று என்னுடைய பெயரை போடாதே என்று முடிவெடுத்து, பொறுப்புக்களை ஒப்படைத்து, 2008ம் ஆண்டில் ஒதுங்கிக் கொண்டார் அந்த பண்பான பெரியவர்.

ஜுனியர் விகடன் எப்படிப் பட்ட இதழாக இருந்தது தெரியுமா ? 2003ம் ஆண்டில், தமிழகத்தில் கடும் வறுமை தாண்டவமாடிய போது, வெறும் பத்திரிக்கை பணியை மட்டும் செய்யக் கூடாது, அதையும் தாண்டி, சமுதாயத்தில் உருப்படியாக ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவெடுக்கப் பட்டு, விகடன் ட்ரஸ்ட் என்று ஒரு ட்ரஸ்ட் உருவாக்கப் பட்டு, பாலசுப்ரமணியனின் சொந்த கிராமமான நரிமணம், தத்தெடுக்கப் பட்டது.

ஒரு குடும்பத்துக்கு ஒரு நாளைக்கு ஒரு கிலோ அரிசி என்ற வகையில் வழங்கப் பட்டது. விகடனின் இந்த திட்டத்துக்கு கிடைத்த ஆதரவு, ஒன்றரை கோடி நிதியை பெற்றுத் தந்தது.
இதற்குப் பிறகு, பொறுப்பேற்ற, பா.சீனிவாசன் விகடன் குழுமம் பல்லாண்டுகளாக உழைத்து, எடுத்த நற்பெயரை, நாறப் பெயராக்கும் பணியில், தன்னை ஈடுபடுத்திக் கொள்ள தொடங்கினார். இதன் முதல் படி, விகடன் டாக்கீஸ் என்ற சின்னத் திரை. சின்னத் திரையில் சீரியல் தயாரிப்புத் தொடங்கியவுடனே, பிரபலமான, விஐபிக்களின் ஆதரவைப் பெற்ற சின்னத் திரை நடிகையோடு கிசுகிசுக்கப் பட்டார். விகடன் ஊழியர்கள் பலருக்கு இந்த விஷயங்கள் அரசல் புரசலாக தெரிய வந்தும், முதலாளிக்கு எதிராக என்ன பேச முடியும் என்று வாயை மூடிக் கொண்டு இருந்தார்கள். அந்தக் குற்றச் சாட்டுகளை சீனிவாசன் மறுக்கவும் இல்லை. ஆனால், நாளோரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இவரது சரச சல்லாபங்கள் வளர்ந்து கொண்டே இருந்தன.

பா.சீனிவாசன்

சரி. சீனிவாசன் என்ற தனிப்பட்ட மனிதனின் அந்தரங்கம் இது. இதைப் பற்றி விமர்சிக்க யாருக்கு உரிமை உண்டு என்ற கேள்வி எழும். மிக மிக நியாயமான ஒரு கேள்வி. யாருக்கும் உரிமை இல்லைதான். சீனிவாசனின் ஜுனியர் விகடன் பத்திரிக்கை மற்றவரின் அந்தரங்கத்தில் தலையிடாத வரை, இந்த உரிமை யாருக்கும் இல்லை. கடந்த இதழ் ஜுனியர் விகடனில் ஒரு கவர் ஸ்டோரி. ஒரு ஆண், பல பெண்களோடு, உறவில் இருந்து, அந்த நெருக்கமான உறவை படம் பிடித்து வைத்துள்ளதையும், அந்தப் படங்களை, அவனது கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்கிலிருந்து அந்தப் பெண் எடுத்து விட்டாளாம்.

இதை கவர்ஸ்டோரியாக போட்டு, தன்னுடைய மிகப் பெரிய சமுதாய சேவையை செய்திருக்கிறது ஜுனியர் விகடன்
அதற்கு அடுத்த இதழில், வழக்கம் போல, நித்யானந்தா மற்றும் ரஞ்சிதா.

இது போன்ற சீரழிவிற்கு ஆளாகியுள்ள ஜுனியர் விகடன், தனது பாரம்பரியத்தையும், விழுமியங்களையும், சிறிது சிறிதாக இழந்து கொண்டு வருகிறது.

இதற்கு முன்பு, மிஸ்டர் மியாவ் என்ற ஒரு கண்றாவி தொடர். அந்தத் தொடரில், எந்த நடிகர் யார் கூட தற்பொழுது படுத்துக் கொண்டிருக்கிறார். இதற்கு முன்பு யார் கூட படுத்துக் கொண்டிருந்தார் என்ற ஆராய்ச்சி. இப்போது, அதே தொடரையே கொஞ்சம் பெயர் மாற்றி, சினி விசித்திரன் ஹியர் என்ற ஆராய்ச்சி தொடர்.

பேசாமல், ஜுனியர் விகடன், சரோஜா தேவி கதைகளை தொடராக வெளியிடலாம். அதில் வரும் படங்கள் அந்தத் தொடர்களுக்கு பொருத்தமாகவே இருக்கும். அடுத்த முயற்சியாக, சரோஜா தேவி கதைகளை விகடன் டாக்கீஸ் மூலமாக சின்னத் திரையிலோ, பெரிய திரையிலோ, தயாரித்து வெளியிடலாம். நல்ல லாபம் கிடைக்கும். அந்தப் பட ஷுட்டிங்குக்கு, தற்போது பா.சீனிவாசனுடன் நெருக்கமாக இருக்கும் காவல் துறை அதிகாரிகள், ஆதரவு தருவார்கள் என்பது உறுதி.

பேசாமல், பத்திரிக்கை நடத்துகிறேன் என்று போலியாக நடித்துக் கொண்டிருக்காமல், கன்னட பிரசாத் போல, நேரடியாக தொழிலுக்கு வாருங்கள். கன்னட பிரசாத் போல மாட்டிக் கொள்ளாமல், பத்திரமாக தொழில் நடத்த, உங்களுக்கு, ஆதரவு தர, பல போலீஸ் அதிகாரிகள் வருவார்கள்.

நன்றி- நாம்தமிழர்

No comments: