Tuesday, May 25, 2010

கொலைக்களத்தில் கும்மாளமா? என்ன செய்யப் போகிறோம்??

இலங்கையில் பலநாடு ராணுவம் மற்றும் தளவாடங்கள் உதவியுடன், துரோகிகள் பலர் துணையோடு குழந்தைகள் பெண்கள் என்கிற பேதமின்றி எண்ணற்ற தமிழர்களை சிங்கள ராணுவம் கொண்று குவித்து போர் முடிந்து ஒரு ஆண்டு முடிந்தும் தமிழர்கள் இன்னும் வதைக்கப்படுகிறார்கள்.

இன்னும் சுமார் 1 லட்சம் தமிழர்கள் அகதிகள் என்று வெளியுலகுக்கு சொல்லிவிட்டு முள்வேலி முகாம்களில் அவர்களை கைதிகளாக வதைக்கப்படுகிறார்கள்.

முள்வேலி முகாம்களிலும் இன்னபிற இடங்களிலும் தமிழ் பெண்களுக்கு பாலியல் கொடுமைகள் இழைப்பதுமாக நம் தமிழினத்திற்கு தொடர்ந்து பேரின்னல்களை அளித்து வருகிறது சிங்கள அரசு.

தமிழர் பகுதிககளில் சிங்களர்களை கட்டாயக் குடியேற்றம் செய்துள்ளது சிங்கள அரசு.

இம்மாதிரி எண்ணற்ற போர்குற்றங்களை தொடர்ந்து செயல்படுத்திவரும் சிங்கள அரசை அகிம்சை இந்தியாவை ஆளும் சுயநல கட்சிகள் ஆதரிக்க்கின்றன. ஏனைய சில நயவஞ்சக நாடுகளைத்த் தவிர பல்வேறு உலகநாடுகள மற்றும் பல சர்வதேச அமைப்புகள் இலங்கை அரசின் மீதான போர்குற்றங்கள நிரூபித்து இலங்கையில் மெல்ல மெல்ல அழிக்கப்படும் தமிழினத்தை காப்பாற்றும் முயற்சியில் உள்ளனர்.

இந்நிலையில் தன் மீதுள்ள போர்குற்றங்களையும் தமிழர்களுக்கு புரிந்த அநீதிகளையும் மறைக்கும்வன்னம் இலங்கை அரசு வரும் ஜூன் 3ஆம் தேதி சர்வதேச இந்திய திரைப்பட விருதுகள் விழாவை இலங்கையில் நடத்தவுள்ளது. இங்குள்ள பணத்தாசை பிடித்த திரைப்பட மற்றும் ஊடகப்ப பேய்களுக்கு பெருமளவு பொருள் பட்டுவாடா நடந்துள்ளதாகவும் தகவலக்ள் உண்டு!

தமிழ் திரையுலகமும், பல்வேறு தமிழ் அமைப்புகளும் விடுத்த வேண்டுகோள்களை புறக்கணித்து அவ்விழாவில் பங்குபெறப்போகும் நடிகர் நடிகைகளின் திரைப்படங்களையும், அவ்விழாவை ஸ்பான்சர் செய்யவுள்ள நிறுவனங்களின் தயாரிப்புகளையும் இந்திய வாழ் தமிழர்களாகிய நாம் இனி வாழ்நாள் முழுக்க புறக்கணித்து நம் எதிர்ப்பை தெரிவிக்கலாமா?

இந்தி சினிமாவை தமிழ்நாட்டில் நம்மால் புறக்கணிக்க முடியுமா?

இந்த விஷயத்தில் தமிழ் பத்திரிக்கைகள் பலவும் அமுக்குனிகளாக செயல்படுவதன் காரணம் என்ன?

அரசியல்ரீதீயாக நம் தமிழ் தலைவர், முதலமைச்சர் இன்னும் ஏன் குரல் கொடுக்கவில்லை?

மும்பை தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நம் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்லவில்லை! மும்பையில் பலியானவர்களை விட அதிகமான எண்ணிக்கையில் நம் தமிழ்நாட்டு தமிழர்களாகிய இராமேஸ்வர மீனவர்கள் இலங்கைக் கடற்ப்படையால் கொல்லப்பட்டுக்கொண்டேயிருக்கிறார்கள்!

கொல்லப்பட்ட இராமேஸ்வரத் தமிழர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள்தானே!

இந்திய அரசு ஏன் இப்படி மௌனம் சாதிக்கிறது!

மும்பையில் வாழ்பவன் மரியாதைக்குரிய இந்தியன் எனில், இராமேஸ்வரத்தில் வாழ்கிற தமிழன் இளப்பமான இந்தியனா?


இந்தி சினிமாவை தமிழ்நாட்டில் வாழவைக்கும் நம்முள் உள்ள எட்டப்பர்களின் துரோகங்களை தாண்டி நம் எதிர்ப்பை காட்ட உண்மைத தமிழர்களாகிய நமக்கு அவ்வளவு தைரியம் உள்ளதா?

இலங்கை சென்று நம் தமிழர்களுக்காக நம்மால் போராடவும் முடியவில்லை! இலங்கைவாழ் தமிழர்களுக்கு நாமும் நம் தமிழ் அரசும், உலகவாழ் தமிழர்களும், மற்ற நல் உள்ளங்களும் அனுப்பிய உதவிப்பொருட்கள் முழுதும் நம் தாய்த் தமிழர்களுக்குத்தான் போனதா என நம்மால், நம் அரசால், நம் செய்திப் பத்திரிக்கைகளாலும் உறுதி செய்யவும் முடியவில்லை!

ஆனால் இப்போது நம் கண்முன்னே, நம்முடைய வீட்டுக்குள், நம்முடைய தெருவில், நாம் மளிகை மற்றும் வேறு பொருட்கள் வாங்கும் இடத்தில், நம் இந்தி சினிமா பார்க்கும் பழக்கத்தில்………………. சிங்கள அரசின் மீதான நம் எதிர்ப்பை, வன்மையாக வெளிப்படுத்தும் வாய்ப்பு வந்திருக்கிறது!

கூடவே தமிழர்களுக்கு எதிரான கொடியவர்களுக்குத் துணைபோகும் துரோகிகளுக்கும், குருதி வழிந்தோடும் இழவு வீட்டிலும் வியாபாரம் செய்யப்போகும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தமிழர்களாகிய

நமது மானத்தை,

எதிர்ப்பை,

உணர்வை

பதிவுசெய்யும் தைரியம் வாய்ப்பு நம்மிடம் வந்துள்ளது!!

என்ன செய்யப் போகிறோம்?????????????

-நன்றி - சிந்தனி

No comments: