Thursday, November 25, 2010

தேசிய தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்...



நாய்கள் குரைக்கட்டும்! வண்டிகள் நகரும் ! இது ஒரு ஆங்கில பழமொழியின் வடிவம் . எங்கள் அண்ணன்மார் அன்று நடந்தார் ! கல்லும் முள்ளும் நிறைந்த பாதையில் உறுதியாக நடந்தான் ! முதல் எதிரி சிங்களவன் அல்ல தமிழன் தான் ! தமிழ் போலிஸ் அதிகாரிகள் தான் எங்கள் போரை இளையோரை காட்டி கொடுத்ததும் சித்திரவதை செய்தும் சிங்கள பேரினவாத அரசின் பிச்சை காசுக்காக அன்னை மண்ணை அடிமை ஆக்கினார் !

அன்று சுதந்திர போராட்டத்தின் தடை கற்கள் இந்த சிங்கள அரசின் கூலிக்காக மாரடித்த போலீஸ் வேலை பார்த்த சில தலைவர்கள் ! பின்னர் வந்தது சில அரசியல் வாதிகள் ! வாக்குக்காக இளையோரை சூடேற்றி தூக்கு மேடை பஞ்சு மேதை என்று உரக்க கூறியவர் , அதை இளையோர் நிஜமாக்கி ஆயுதம் எடுக்க ஓடி ஒளித்தார் சிங்கள குகையில் சிலர் ! அதன் பின் இந்தியாவின் கூலி படைகளாக போராளிகள் மாற தேசிய தலைவர் முடிவு எடுத்து எல்லாரையும் தடை செய்து , ஒட்டு மொத்த தமிழ் இனத்தை ஒன்று படுத்த எடுத்த முயற்சி கொஞ்சம் பிரச்சைனக்கு உரிய விடயம் என்றாலும் சரியோ தவறோ உறுதியாக தலைவர் நின்றதானால் சைக்கிள் இலிருந்து விமானம் வரை வளர்த்தெடுக்க முடிந்தது. அவர் போராட்டத்தை வளர்த்தெடுக்க அதே நேரம் உலகின் பல அரசுகளுக்கு கைகூலிகளாக புலிகளின் எதிர்பு தமிழர் கைகொடுக்க தலைவர் கடும் சவால்களை சந்திக்க நேர்ந்தது . சிங்கள அரசின் பக்கம் தாவிய பலர் தமிழ் ஈழ போராட்டத்திற்கு சவாலாக வளர , கடைசியில் சொந்த இயக்கத்துக்கு உள்ளேயே பல கிருமிகள் .

நான் தலைவனை தனித்து பார்கிறேன் , அய்யா ...எங்கள் தெய்வமே , உள்ளத்தில் நல்ல உள்ளமாய் கர்ணனை வென்ற எங்கள் வல்லை முருகா ! உனது அல்ல ஒட்டு மொத்த தமிழினத்தின் பாவம் தான் இந்த தோல்வி !. ஆனாலும் உனது ஒருத்தியான பயணம் பலர் நெஞ்சை தொட்டு நிற்கிறது ! துரோகம் செய்த கருணா இன்று தண்ணி அடித்து தன்னை தினம் தினம் மாய்த்து கொள்கிறான் ! பிள்ளையான் உள்ளுக்குள்ளே நொந்து நொந்து அழிவான். இன்னும் பலர் நெஞ்சின் அடிமனதை தொட்டு இன்று உலக தமிழர் நெஞ்சில் எல்லாம் தெய்வமாய் , என்று வருவாய் என்று ஏக்கத்தோடு உன் வழி பார்த்து நிற்கும் மாபெரும் சூரிய தேவனை நிமிர்ந்து நிற்கிறான் என் தலைவன் !

இதற்கேல்லாம் இந்த வெற்றி பயணத்திற்கு எல்லாம் எது காரணம் ? தலைவனின் உறுதி ! கொண்ட கொள்கை மேல் கைவிடாத உறுதி ! அண்ணனின் கட்டளையில் வேலை பார்த்த கருணாவுக்கு வரலாற்று பெருமை மிக்க சிங்கள கட்சியின் உப தலைவர் பதவி என்றால் , பிள்ளையானுக்கு முதலமைச்சர் பதவி என்றால் , எந்த பிச்சை போட்டாலும் கை ஏந்தி வாங்க தயாராக நிற்கும் டக்ளசுக்கு அமைச்சர் பதவி என்றால் , என் தலைவன் ஓம் என்றால் இலங்கை ஜனாதிபதி பதவி கூட கொடுத்து இருப்பார். இல்லை என் தலைவனுக்கு உலக தமிழர் எல்லாம் இணைந்து கோயில் கட்டி அமெரிக்காவில் அல்லது ஐரோப்பாவில் வைத்து இருப்போம் ! அவ்வளவுக்கு என் தலைவனுக்கு ஆதரவும் அன்பும், மதிப்பும் உண்டு !

அப்படி பல வழிகள் இருந்தும் தலைவன் கொள்கை மாறாதவன் ! கொஞ்சம் கூட இறங்க மறுப்பவனை "இவன் பிரபாகரன் மாதிரி " என்று புது உவமானம் வரையும் அளவுக்கு தலைவன் உள்ளத்தில் உறைந்து நிற்கிறான் ! அவன் புகழ் பாடுவதோடு நாங்கள் நிற்கலாமா ?

ஒருவன் அமைதியானால் ஓராயிரம் பேர் பிரபாகரனாய் மாறவேண்டாமா ? இதைதான் இன்று எங்கள் முன் நிற்கும் தமிழீழ அரசின் பிரதிநிதிகளுக்கு முன வைக்கிறேன் ! இன்றைக்கு எங்கள் சாப கேடு தலைவனின் பாசறையில் வளர்ந்த சிலரே எங்கள் எதிரி ஆகி விட்டாலும் நாங்கள் அடங்கலாமா ?
ஒவ்வொரு தமிழீழ அரசின் உறுப்பினரும் பிரபாகரன் வழி நிற்கட்டும் ! தமிழீழ கொள்கையை நிலை நிறுத்தி தங்கள் சுய பதவி வெறிக்காக இந்த அரசை சிதைப்பவரை ஒதுக்கி , வீறு நடை போடுவீராக ! இவர்கள் சில இணைய தளங்களில் குரைப்பது எத்தனை நாளைக்கு ? இவர்கள் எழுதும் கட்டுரைகளை பார்த்தாலே இவர்களின் தரம் புரிகிறதே ! அதை விட இவர்கள் ஏன் உள்ளுக்குள் பேசி தீர்க்க படவேண்டிய விடயங்களை இப்படி எழுதி தள்ளுகிறார் ? இவர்களை பொறுத்த வரை இவர்கள் எதிரி உருத்திரகுமாரன் ஆனால் சிங்கள பேரினவாதிகளும் உருதிரகுமாரனை எப்படியாவது கைது செய்ய வேண்டும் என்று சகல வழிகளிலும் முயல்கின்றனர். அதே போல் நெடியவனையும் பிடிக்க பலத்த முயற்சி நடை பெறுகிறது ! இப்படி சிங்கள தேசம் இருவரையும் பிரிக்க அலைகையில் , இங்கேயோ வேறு பிரச்சினை !

இன்றைக்கு மக்கள் முன்னாள் உலகின் முன்னால் நிமிர்ந்து நின்ற னிகள் அதனை பெரும் பெருமைக்கு உரியவர்களே ! தமிழீழ தேசிய அரசில் போட்டியிட்ட அனைவரும் வீர மகான்களே ! தமிழீழ தேர்தல் நடாத்திய அத்தனை உள்ளங்களும் பெரியவர்களும் வணக்கத்துக்கு உரியவரே ! தமிழ் ஈழ அரசின் தேர்தல் நடாத்தும் பொது ஒரு மூதாட்டியை வாக்களிப்பு நிலையத்தில் சந்தித்தேன் ! சில நிமிடம் உரையாடிய பொது அவர் கூறினார் " தம்பி இது எல்லாம் கனவு போல இருக்கு ! நான் பிறந்தது 1934 இல் , எவ்வளவு காலம் போச்சு ! எத்தினை பேரை கண்டாச்சு ! கடைசியில பிரபாகரன் தான் முடிச்சு வைப்பான் என்று பார்த்த எல்லாம் போச்சு ! இப்ப இந்த தேர்தலை பார்க்க எனக்கு கனவு மாதிரி கிடக்கு ! விடப்படாது ! ஆனால் நான் நினைக்கிறான் இதில நிற்கிற எல்லா வேட்பாளரையும் சேர்த்து முதலில ஒரு அராங்கம் செய்ய வேணும் ! பிறகு தமிழீழ அரசாங்கம் அமைகேக்க நாங்கள் தெரிவு செயலாம் " என்று கூறினார் ! நினைத்து பார்த்தேன் உண்மைதான் ! இது மக்கள் போர் ! தமிழீழ அரசின் தேர்தல் என்றவுடன் தலை நிமிர்ந்து நானும் போட்டியிடுவேன் வெல்வேன் ! தமிழீழ அரசை அமைப்பேன் என்று கூறிய அத்தனை மனிதர்களும் போற்றபடவேண்டியவரே !

அதனால் இத்தனை வீர தமிழர்களையும் தாண்டி போட்டியில் வெற்றி பெற்று நிற்கும் தமிழீழ அரசின் பிரதிநிதிகள் இனி பிரபாகரன் வழி நின்று தடைகளை உடைக்க வேண்டும் ! கல்லெறிபவர் எறியட்டும் ! குரைப்பவர் குரைக்கட்டும் ! தமிழீழ பயணம் தொடரும் என சூளுரைக்கட்டும் ! எதிர்ப்புகள் உடைத்து முன்னேறும் பொது , இந்த பதவிக்காக அலையும் சிலரும் வேறு வழியின்றி இணைய கூடும் ! மக்கள் சரியான பாதை இது என்று இணையும் பொது , தலைவரின் பின்னால் மக்கள் இணைந்தது போன்று தமிழீழ அரசின் பின்னால் இணைவர் என்பது உறுதி ! இங்கே தலைவரின் பயணத்தை பார்த்து கற்க வேண்டும் ! எங்களுக்குள் தான் முதிலில் எதிரிகள் உருவாகுவர் ! இவர்கள் ஒன்றும் தமிழீழ கொள்கைக்காக சண்டை பிடிக்கவில்லை , நீங்கள் யார் எங்கள் தமிழ் ஈழத்துக்கு போராட என்று கேட்பவர்கள் ! இது உங்கள் மட்டுமல்ல எங்களதும் தான் என்றால் இல்லை இது எங்கள் தனிப்பட்ட சொத்து என்கிறார் ! முதலில் நாங்கள் இணைந்து உருத்திரகுமாரன் பின்னால் நிற்கும் பெரும் சக்தி மிக்க தகுந்த உணர்வும் அறிவும் கொண்ட அந்த சமூகத்தை பலபடுதுவோம் ! இது சர்வ தேச அரங்கம் ! இங்கே சதுரங்க காய்கள் சரியாக நகர்த்த படவேண்டும் ! வீரம் மட்டும் போதும் என நம்பி ஒருமுறை தோற்று நிற்கிறோம் ! செல்வத்தை இறைத்து சவால் விட்டோம் , பெரும் செல்வந்தன் பெரும் ஆயுத பலத்துடன் நசுக்கி விட்டான் ! நாங்கள் சரியாக செயாதது அந்த அறிவு! அரசியல் ! ஒரு கதிர்காமர் கெடுத்து போனது இன்றுவரை தொடர்கிறது ! வீரம் என்றால் என்ன என்று தெரியாத சிங்கள இராணுவம் இரண்டு லட்சம் படைகளையும் கொண்டு என்ன சாதித்தது ? ஓயாத அலைகளில் ஓடவில்லையா ? முல்லைத்தீவை கண்டால் நடுங்க வில்லையா ? எப்படி தோற்றோம் ? சீனாவிடம் தோற்றோம் ! ஏன் ? அரசியல் செய்யவில்லை ! இந்தியாவிடம் செய்யவில்லை ! ஓடிய சிங்களவன் என்ன செய்தான் ! அரசியல் செய்தான்! சீனாவிடம் தன மண்ணை விற்றான் தமிழ் மண்ணை வென்றான் !

இனி நாங்கள் அரசியல் செய்ய வேண்டும் ! அமெரிக்காவிடம் செய்வோம் ! பிரித்தானியாவில் செய்வோம் ! அதுதானே சிங்களவன் தானாக போய் சீனாவிடம் மாட்டி கொண்டான் ? இனி நாங்கள் தேவை படுவோம் ! இதுவரை எங்களை தடை செய்தவர் எல்லாருக்கும் நாங்கள் தேவை படுவோம் ! அண்ணல் தடை செய்த ஒரு அமைப்பை மீண்டும் ஏற்று கொள்ள இவர்களால் முடிவதில்லை ! அதனால் தமிழீழ அரசு போன்ற அமைப்பை இவர்கள் ஏற்று கொள்வர் ! அரசியல் இது ! இங்கே ஒரு புலிகளின் தளபதியை முன்னிறுத்தினால் பல பிரச்சினை வரலாம் ! சிறீ லங்கா அரசு எப்படி தடை செய்யலாம் என்று பார்க்கும் பொது நாமாக மாட்டி கொள்ளலாமா ? அதனால் புது முகங்கள் ! ஜனநாயக தலைவர்கள் ! சமூக தலைவர்கள் ! சேவை செய்தோர் என்று பலரும் உறுப்பினராகும் ஒரு அமைப்பாக தமிழீழ அரசு வளர்க்கப்பட வேண்டும் ! புலிகளின் தலைவர்கள் பின்னால் இருந்து ஆக்கமும் ஊக்கமும் தரவேண்டும் ! மக்கள் புரட்சியாய் தமிழீழ அரசு முளைக்கும் ! நடை போடும் !

தமிழீழ அரசின் பிரதிநிதிகள் உறுதியோடு தமிழ் ஈழ பயணத்தை முன்னெடுக்கும் பொது மக்கள் இந்த அரசை பலபடுத்தும் பொது நிச்சயம் வெல்வோம் ! இங்கே வெல்வது நானோ உருதிரகுமாரனோ தமிழீழ அரசோ அல்ல ! தமிழீழ மண் என்பதை உள்ளத்தில் நிறுத்துவோம் ! தமிழீழ அரசை பல படுத்துவோம் !

No comments: