Friday, November 12, 2010

வீர தமிழ் மறவனே,,




வீர தமிழ் மறவனே
தம்பி மதிவாணா .....
செந்தமிழன் சீமான் கண்டெடுத்த
மான தமிழா ....
மரணம் உன் அருகில் இருந்தபோதும்
சூட்டினால் வழியும் குருதி என்று
சாதாரணமாக எடுத்துக்கொண்டு
சளைக்காமல் இனத்துக்கு உழைத்த மாவீரனே
ஒரு கலந்துரையாடலில்
உன் உணர்ச்சி மிகு கருத்தை கேட்டுதானடா
என் உணர்ச்சியின் வேகத்தை நான் அதிகப்படுத்தினேன்
பட்டி தொட்டியெங்கும் பரப்புரை
செய்யுங்கள் என்றாய்
கிராமங்களில் கட்சியை வளர்க்க சொன்னாய்
அடித்தட்டு மக்களின் அவலங்களை
ஆழமாய் பதிவு பண்ணசொன்னாய்...
ஆரிய திராவிட விஷக்கரங்களில்
சிக்கிகொண்ட நம் மொழியை
நம் இனத்தை நம் கலாச்சாரத்தை
மீட்டெடுக்கும் வரை
சீமானோடு நிற்போம் அண்ணா என்று
எனக்கு சொல்லிவிட்டு ....
நீ எங்கோ சென்று விட்டாயே ...
உன் உருவத்தை பார்த்து உன்னை
குறைத்து மதிப்பிட்டவர்கள் கூட
உன் தமிழையும் உன் வீரத்தையும்
உன் கருத்தையும் உன் சிந்தனையையும்
உன் இனபற்றையும் பார்த்து
உன்னை அண்ணாந்து பார்த்தார்களே ...
வியந்து பார்க்க வைத்துவிட்டு
விழிகளை மூடி கொண்டாயே ...ஏனடா
தம்பிகளை கேட்டதாக சொல்லடா
அண்ணன் சொல்லி அனுப்பினான்
அதை சொல்லதானடா வந்தேன் ...
மருத்துவர்கள் கை விட்டு விட்டதாக
ராசீவ்காந்தியும் ஆவலும் அழகிரியும்
அழுது புரண்டார்கள் ...
கை விடுவதுதானே கைக்கு பழக்கம் ...
ஆனாலும் நாங்கள் விடபோவதில்லை என்று
ராசா அரி நெல்லை சிவா அதியமான்
குமார் சுகுமார் தம்பிகள் எல்லோரும்
போராடி போராடி பார்த்தார்கள் ..மதி
போராடினால் வெற்றி உறுதி என்று
நீதானே சொன்னாய் ..
நாங்கள் உன்னை மீட்கதானே போராடினோம்
எங்களை தோல்வியை தழுவ செய்துவிட்டு ..நீ
ஏனடா சாவை தழுவினாய்
பொய் வழக்கை பொசுக்கி எரிந்து விட்டு
சிறை கதவுகளை உடைத்து சீறி வரும்
சீமானின் கண்கள் கூட்டத்தில் உன்னை தேடுமே
என்ன பதில் சொல்வது ....
அண்ணனின் விடுதலைக்கு உழைத்தவனே-உன்
உயிருக்கு ஏனடா விடுதலை கொடுத்தாய் ....
போய் வாடா விடுதலை மகனே-உன்
கனவை சுமந்து கொண்டு நாங்கள் பயணிக்கிறோம்
தமிழை வாழவைப்போம்
தமிழனை ஆளவைபோம்...என்று
சூளுரைத்த உன் லட்சிய பாதையில்
அண்ணன் சீமானின் பின்னால் அணிவகுக்கிறோம்
மீட்டு எடுப்போம் தமிழர் உரிமைகளை
கட்டி எழுப்புவோம் தமிழர் உலகத்தை ...
மதிவாணா நீ மரணிக்க வில்லை -எங்கள்
மனதுக்குள் வாழ்கிறாய் ......

சிபி சந்தர்
திரைப்பட இயக்குனர்

No comments: