Monday, April 12, 2010

மறைக்கப்பட்ட இனப்படுகொலை : இலங்கையின் போர்குற்றம்

இந்திய தலைநகர் டெல்லியில் “Unspoken Genocide: War crimes in Sri lanka” (மறைக்கப்பட்ட இனப்படுகொலை : இலங்கையின் போர்குற்றம்) என்ற தலைப்பில் வரும் ஏப்ரல் 15 ஆம் திகதி டெல்லி பல்கலைக்கழக தமிழ் மாணவர்களால், dublin மக்கள் தீர்ப்பாயத்தோடு இணைந்து மாநாடு ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இலங்கையின் போர்க்குற்றத்தை உலகிற்கு அம்பலபடுத்திய Dublin மக்கள் தீர்ப்பாயத்தில் பங்காற்றும் முன்னாள் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ராஜிந்தர் சச்சார், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி நீதியரசர் கிருஷ்ணையர், அனைத்துலக மனித உரிமை கழகத்தின் விராஜ் மென்டிஸ்,முன்னாள் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழ்நாடு PUCL தலைவர் சுரேஷ், PUCL முன்னாள் தலைவர் கண்ணபிரான், முன்னாள் சண்டிகர் நீதிபதி அஜித் சிங் பைன்ஸ்,புரட்சிகர எழுத்தாளர் சங்கத்தை சார்ந்த கவிஞர் வரவர ராவ்,அரசியல் கைதிகள் விடுதலை குழுவை சார்ந்த பேராசிரியர் கிலானி,காஸ்மீர் அனைத்து கட்சி ஹுரியத் குழுவை சார்ந்த சையத் அலிஷா கிலானி, உலக சீக்கிய செய்திகள் (world sikh news) ஆசிரியர் ஜக்மோகன் சிங், அனைத்துலக மக்கள் போராட்ட லீகின் துணை தலைவர் சாய் பாபா, மார்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியை சார்ந்த கவிதா கிருஷ்ணன் போன்ற தலைவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார்கள்..

இந்நிகழ்வு நமது மீனகம் தளத்தில் ஏப்ரல் 15 மதியம் 2 மணி முதல் நேரலை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உறவுகள் அனைவரும் கட்டாயம் காணவேண்டிய நிகழ்வு இது...

No comments: