Saturday, December 4, 2010

துபாயில் தமிழ் உணர்வாளர்களுடன் தோழர் பெ.மணியரசன் சந்திப்பு: தமிழர்கள் உறுதியுடன் சமரசமின்றி தமிழ் தேசியத்தை முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்




02.12.2010 அன்று துபாயில் தோழர் சிவா தலைமயில் இச் சந்திப்பு இடம்பெற்றது. இதில் தமிழ் தேசியபொதுவுடமைக்கட்சியின் பொதுச்செயலாளர் பெ.மணியரசன் கலந்து கொண்டார். முன்னதாக தமிழ்தேசியத் தமிழர்கண்ணோட்டம் துபாயில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இதை தோழர் பெ.மணியரசன் வெளியிட தோழர் பட்டனம் மணி பெற்றுக்கொண்டார். இதனைத்தொடர்ந்து நடந்த கலந்துரையாடலில் பலரும் தமிழ் உணர்வுமிக்க கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர்.

அமீரகத்தமிழ் பேரவையின் தலைவர் ஆசிப்மீரான் தமிழ் உணர்வளர் கவிமதி ஆகியோர் உரை நிகழ்த்தினர். இறுதியாக பேசிய மணியரசன் தமிழர்கள் உறுதியுடன் சமரசமின்றி தமிழ் தேசியத்தை முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். நிறைவாகா திருமதி சீபா நன்றியுரை நிகழ்த்தினார். தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் எழுச்சியும் மகிழ்ச்சியும் கலந்த நிகழ்வாக அமைந்தது.

No comments: