Wednesday, January 12, 2011

வன்முறை இல்லாமல்... போதைப் பொருட்கள் இல்லாமல்..

அமெரிக்கக் கண்டங்களில் வன்முறையும், போதைப் பொருட்களும் தலைவிரித்தாடுவது பற்றிய தனது நினைவலைகளில் கியூபாவின் சாதனையை அனுபவமாகக்கொண்டு அனைத்து லத்தீன் அமெரிக்க நாடுகளும் சொந்தக் கால்களில் நிற்கலாம் என்று கியூபப் புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோ கருத்து தெரிவித்துள்ளார். அவரது கட்டுரையின் பகுதிகள் வருமாறு :

“அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் கப்ரீயல் கிப்ஃபோர்ட்ஸ் மீதான தாக்குதலின் போது, 18 பேர் சுடப்பட் டனர். ஆறு பேர் பலியானார்கள். 12 பேர் காயமடைந்துள் ளனர். அதில் பலருக்குப் படுகாயம். படுகாயமடைந் தவர்களில் நாடாளுமன்ற உறுப்பி னரும் ஒருவர். அவரது தலையில் குண்டு பாய்ந்தது. அவரைக் காப்பாற்ற மருத்துவர்கள் போராடி வருகிறார் கள். இந்தத் தாக்குதலில் பலியான வர்களில் ஒன்பது வயது சிறுமியும் ஒருவர். இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்ட அதே நாளில் பிறந்தவர். அபாரமான மாணவி. அவரை இழந்த தாய், இத்தகைய வெறுப்புணர்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மிகவும் துயரமான ஒன்று எனது நினைவில் வருகிறது. பொய்களாலும், வெறுப்புணர்வாலும் தங்களை நிரப்பிக் கொள்ளாத நேர்மையான அமெரிக்க குடிமக்களை கவலையுறச் செய்யும் விஷயம் அது. உலகிலேயே மிகவும் மோசமான செல்வப்பகிர்வு உள்ள பகுதி லத்தீன் அமெரிக்காதான் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? வளர்ச்சி இல்லாததாலும், வறுமையாலும் அமெரிக்காவிற்குள் ஏராளமான லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் நுழைகிறார்கள். அவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். பணமும், பொருட்களும் எல்லையைத் தாண்டலாம். ஆனால் மனிதர்கள் தாண்டக்கூடாது. போதைப் பொருட்களும், ஆயுதங்களும் தங்குதடையின்றி ஒரு திசையிலிருந்து மற்றொரு திசைக்கு இடம் மாறுகின்றன.

உலகிலேயே அதிகமான அளவில் போதைப் பொருட்கள் அமெரிக்காவில்தான் பயன்படுத்தப்படுகிறது.ஆயுத விநியோகத்திலும் அமெரிக்காவுக்குதான் முதலிடம்.

ஸ்பெயினைச் சேர்ந்த பத்திரிகையாளர் சேவியர் கானோ டமயோ இவ்வாறு எழுதுகிறார், “உலகில் வன்முறையால் நிகழும் கொலைகளில் 27 விழுக்காடு லத்தீன் அமெரிக்காவில் நடக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் 12 லட்சம் பேர் உயிரிழந்துள்ளார்கள். பல குடிசைப்பகுதிகள் ராணுவக்காவல்துறையினரின் ஆக்கிரமிப்பில் உள்ளன. மெக்சிகோவில் ஏராளமான கொலைகள் நடக்கின்றன. கொலம்பியாவில் ஆட்கள் காணாமல் போகிறார்கள். கொலைகள் பெருகியுள்ளன. கொலைகள் நிகழும் விகிதம் உலகிலேயே லத்தீன் அமெரிக்காவில்தான் அதிகமாக இருக்கிறது.”இதை எப்படி விளக்குவது? இதற்கான விடை லத்தீன் அமெரிக்க சமூக அறிவியல் மையத்தின் ஆய்வில் கிடைத்தது. நான்கு லத்தீன் அமெரிக்க இளைஞர்களில் ஒருவர் வேலையில்லாமல் இருக்கிறார் அல்லது படிக்கவில்லை. 35 விழுக்காடு லத்தீன் அமெரிக்க மக்கள் வறுமையால் அல்லது கொடிய வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கணக்கெல்லாம் உலக வங்கி தந்திருக்கும் ஒருநாளைக்கு 1.25 டாலர் ஊதியம் என்பதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. தனது கட்டுரையை முடிக்கும்போது சேவியர் கானோ, உங்கள் இதயத்தைத் தொட்டுச் சொல்லுங்கள், ஒருநாளைக்கு 1.25 டாலரோடு உங்களால் வாழ்க்கையை ஓட்ட முடியுமா? என்று கேட்கிறார்.

இன்றைக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் சுடப்பட்ட நிகழ்வு ஊடகங்களில் பிரதான இடத்தைப் பிடித்துள்ளது. சுடப்பட்டு 38 நிமிடங்களில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. உடனடியாக இணையதளங்களில் விபரங்கள் கிடைத்தன. அவர் முழுமையாகக் குணம் பெற பல மாதங்களாகலாம். இந்த மருத்துவக்குழு வெளியிடும் விபரங்களை நரம்பு சிகிச்சை நிபுணர்கள் மிகவும் கவனமாகக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். பொதுவாக, மருத்துவ விஷயங்களை கியூபாவைச் சேர்ந்தவர்கள் மிகவும் நெருக்கமாக நின்று கவனிப்பார்கள். மருத்துவ விஷயங்களில் கரை தேர்ந்தவர்கள். இந்த மருத்துவர்களின் வெற்றியால் அவர்களும் மகிழ்ச்சியடைவார்கள்.

ஆனால் எல்லையின் மறுபுறத்தில், மெக்சிகோ மாநிலத்தில், கொடிய சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அங்கும் அற்புதமான மருத்துவர்கள் இருக்கிறார்கள். ஆனால், அமெரிக்காவிடமிருந்து பெற்ற கொடிய ஆயுதங்களோடு சிகிச்சை அறைகளுக்குள்ளேயே நுழைந்து, தங்களுக்கு வேண்டாதவர்களைக் கொன்று குவிப்பது அங்கு வழக்கமான ஒன்றுதான். குழந்தைகள் இறப்பில் ஒவ்வொரு ஆயிரத்திற்கும் ஐந்து குழந்தைகளுக்குக் குறைவாகவே உயிரிழப்பு உள்ளது. வன்முறைக்கு பலியாவதிலும் ஒரு லட்சத்திற்கு ஐந்து பேருக்கும் குறைவானவர்களே பலியாகிறார்கள். எங்களுடைய அனுபவம் காட்டுவது என்னவென்றால், முற்றுகைகள், தடைகள் மற்றும் மிரட்டல்கள் ஆகியவற்றை எதிர்கொண்டு, வன்முறையும், போதைப் பொருட்களும் இல்லாமல் லத்தீன் அமெரிக்க மக்களால் வாழ முடியும் என்பதுதான்.

கடந்த 50 ஆண்டுகளில் நடந்ததைப் பார்த்தால், அமெரிக்காவின் உறவு இல்லாமலேயே கூட லத்தீன் அமெரிக்க நாடுகளால் வாழ முடியும். இந்த விஷயத்தை நாங்கள் நடத்திக் காட்டவில்லை. அமெரிக்காவே செய்து காட்டியுள்ளது.

நன்றி.மாற்று

No comments: