Tuesday, January 25, 2011

மத்திய,மாநில அரசு அறிவிப்பு -தமிழக மீனவர்களுக்கு இலவச இறுதிச் சடங்கு !

நாள் தோறும் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் செய்திகளுக்கு குறைவு இல்லை. வட இந்தியன் வம்பிலுத்துவிட்டு வெளிநாடுகளில் நைய புடைக்கப்பட்டால் இந்தியனை அடித்துவிட்டார்கள் என்று கண்டனம் தெரிவித்து அனைத்து மாநில மக்களிடம் இந்திய உணர்வு அரசியல் நடத்தும் இந்தியா, எதோ ஒரு ஐரோப்பிய நாட்டில் சிங்கு தலைப்பாகை வைக்கக் கூடாது என்றால் இந்தியர்களை அவமானப்படுத்துகிறார்கள் என்று பொங்கி எழும் பிரதமர், தான் எழுதிய பாடல் போலவே காகிதக் ஓடத்தை டெல்லிக்கு அனுப்பும் தமிழக முதல்வர், இவர்கள் கூட்டணி தமிழக சட்ட சபைத் தேர்தலை நெருங்கும் இந்த நேரத்தில் கொலை செய்யப்படும் மீனவர் உடல் நலம் கருதி 'இலவச இறுதிச் சடங்கு நடத்தவும், பதினாறாம் நாள் கருமாதிக்கு பண உதவி செய்யும் இலவச திட்டம்' அறிவித்து தேர்தலில் வென்றுவிட நினைத்தாலும் வியப்படைய ஒன்றும் இல்லை. ஈழத்தமிழர்கள் பிணங்களின் மீது ஏறி நின்று பாராளுமன்ற வெற்றியைச் சுவைத்தார்கள், சட்ட மன்ற வெற்றிச் சுவைக்கு தமிழக மீனவன் பிணங்கள் போலும்.

வங்காளவிரிகுடா சிங்களவெறிகுடாவாகி மீனவர்களின் இரத்தங்கள் கலந்து நிறமாறிக் கிடக்கிறது.

தமிழர்கள் இந்தியர்கள் இல்லை என்று இந்தியாவே ஒதுங்கி வேடிக்கைப் பார்பதன் மூலம் மறைமுகமாகக் குறிப்பிட்டு உணர்த்தும் போது தேசியவாதம் பேசும் தேசியவியாதிகளை எதால் அடிக்கலாம் ?

நம்மால் நேரிடையாக ஒரு மயிரையும் புடுங்க முடியாது என்றாலும், முடிந்த வழியில் இந்த அக்கரமங்களுக்கு செருப்படிக் கொடுத்தோம், எதிர்ப்பைக் காட்டினோம் என்று வரலாற்றில் எழுத்தின் வழியாகப் பதியவைக்கவில்லை என்றால் நாம் தமிழனுக்கு பொறந்தவர்கள் என்று சொல்லிக் கொள்ள ஒன்றும் இல்லை.

நன்றி
http://govikannan.blogspot.com/2011/01/blog-post_25.html

No comments: