Tuesday, September 14, 2010

செப்டம்பர் 17ஆம் நாள் மஹிந்தவைக் கைது செய்ய வலியுறுத்தி மாபெரும் கவனயீர்ப்பு


ஐக்கிய நாடுகள் சபை பொதுவிவாதத்தில் உரையாற்றுவதற்காக இந்த மாதம் அமெரிக்காவுக்கு வருகை தரும் சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கைது செய்து அவர் மீது போர்க்குற்ற விசாரணை நடத்தக் கோரும் கவனயீர்ப்பு நிகழ்வு, ரொரன்ரோவிலுள்ள அமெரிக்க துணைத் தூதரகத்திலும் (360 University Ave, Toronto (Subway: St. Patrick)), கியூபெக்கிலுள்ள அமெரிக்க துணைத் தூதரகத்திலும் (1155 rue St-Alexandré (Corner Of St-Alexandré & Rene Levesque), Montréal, Québec, H3B 1Z1) நடக்கவுள்ளது.


வருகின்ற வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 17ஆம் நாள், பி.ப. 3 மணி முதல் மாலை 8 மணிவரை நடக்கும் இம்மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டத்தில் கனடியத் தமிழ் மக்கள் அனைவரையும் தவறாது கலந்துகொள்ளுமாறு கனடியத் தமிழர் தேசிய அவை அழைக்கின்றது.

மேலதிக தொடர்புகள் வேண்டின் 1866 263 8622 (101) என்ற தொலைபேசி இலக்கத்திலும், info@ncctcanada.ca என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளவும்

No comments: