Friday, September 24, 2010

விஜய் நடிக்கும் படத்தில் ஈழ ஆதரவு கருத்துக்கள்: சிறைக்குள் சீமான் எழுதும் திரைக்கதை



இலங்கை கடற்படையை கண்டித்து சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய சீமான் பேச்சு இந்திய இறையாண்மைக்கு எதிராக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டு அவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவர் சிறையில் இருந்தபடியே மூன்று திட்டங்கள் தீட்டி அவற்றை சிறையில் இருந்து வெளியே வந்ததும் செயல்படுத்துவதற்கான பணிகளை துவங்கியுள்ளார்.

1.சிறைக்கு சென்றபிறகு ஈழப்போரில் திராவிட கட்சிகள் ஆரியருக்கு உதவி செய்ததன் மூலம் ஈழத்தமிழர்களை கொன்றுகுவித்தது என்று சிறையில் இருந்தபடி எழுதிவருகிறார்.

திராவிட கட்சிகள் மக்களை ஏமாற்றிவிட்டு தொப்புள் குடி உறவான தமிழர்களை அழிக்க, மறைமுகமாக ஆரியர்களுக்கு செய்த உதவிகள் என்று அந்நூலில் குறிப்பிட்டுள்ளார்.


இப்புத்தகத்திற்கு ’ஆரியம் வெல்ல..திராவிடம் செய்த உதவி’ என்று தலைப்பிட்டுள்ளார். சிறையை விட்டு விடுதலையாகி வெளியே வந்ததும் இப்புத்தக வெளியீட்டு விழாவில் நடத்த திட்டமிட்டுள்ளார்.

2.விஜய்யை வைத்து இயக்கும் படம்சிறையில் தாணு தயாரிப்பில் சீமான் இயக்கத்தில் விஜய் நடிக்கும் பகலவன் திரைப்படத்திற்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன.

சிறைக்குள் பகலவன் படத்துக்கான திரைக்கதை எழுதி வருகிறார் சீமான். சிறையில் இருந்தபடியே தன்னுடையை இணை,துணை இயக்குநர்களை வரவழைத்து பட விசயமாக ஆலோசனை நடத்துகிறார்.

படத்தில் ஈழ மக்களுக்கு ஆதரவான கருத்துக்கள் அதிகம் இடம்பெறும்படி திரைக்கதையில் மாற்றங்கள் செய்துள்ளதாக தெரிகிறது.விடுதலையானதும் படப்பிடிப்பு துவங்கவிருக்கிறதாம்.

3.கட்சியை பலப்படுத்த மாவட்டங்கள்தோறும் கட்சி நிர்வாகிகள் நியமிக்கப்போகிறார் சீமான். வெளிநாடுகளில் உள்ள நாம் தமிழர் இயக்கத்திற்கும் நிர்வாகிகள் நியமிப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.

இதன் பின்னர் கட்சியின் மிகப்பெரிய மாநாடு ஒன்றை தமிழகத்தில் நடத்தவும், அம்மாநாட்டின் மூலம் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி தீர்மானம் இயற்றவும் முடிவு செய்துள்ளார் சீமான்.

அதற்கான பணிகளை செய்யவும் கட்சி முக்கியஸ்தர்களிடம் ஆலோசனை கூறியுள்ளார் சீமான்.

No comments: