Saturday, September 25, 2010

உலகத்தமிழ் தியாகத்தின் திருமுகமானவனே



உலகத்தமிழ் தியாகத்தின் திருமுகமானவனே!
அகிம்சையே! உன்னை யாது என்று கூறுவது!
எம் தாய் நாட்டின் விடுதலைக்காக,
அந்நியர்களை வெளியேற்றுவதில்
அகிம்சை ஏந்தியவனே!!
அகிம்சைக்காக போராடிய,
அந்த காந்தி வம்சா வழியினரே - உன்
அகிம்சையை காலிற்கு
கீழ் போட்டு கசக்கி விட்டனர்...

காந்தி, "வெள்ளையனே வெளியேறு"
எனக்கத்தி அகிம்சை மூலம்,
தன் தாய் நாட்டின் விடுதலையை
வென்றெடுத்தார். - அதே தாய் நாட்டின்
விடுதலைக்காக, "இந்தியனே வெளியேறு"
எனக்கூறி, அகிம்சையை கையில் ஏந்திய
உன்னை மதிக்காதது என் ?????

நீ ஓர் மருத்துவனாக இருந்தாலும்,
உன்னை ஓர் மருத்துவனாலும்
காப்பாற்ற முடியாமல் போனதே!!
ஆனாலும், உன் உடலை
மருத்துவக் கல்லூரிக்கு ஒப்படைத்து,
பல தமிழ் சாதனையாளர்களை
உலகிற்கு வெளிக்காட்டியவனே!!

ஊணின்றி, உணவின்றி - எமக்காக
பாடுபட்டவனே!! - உன் ஞாபகங்கள்,
எம்மை தொடரும்.. - உன் தியாகத்தை
இவ் வரலாறு புரிந்து விட்டதே...

அகிம்சைக்கு "காந்தி" என்பது மாறி
அகிம்சை என்றதுமே உன் பெயர் சொல்லும்
அளவுக்கு அகிம்சை வழியில்
விடுதலைக்காக போராடியவனே!!

அகிம்சை, தியாகம், தானம் என்றதுமே,
"திலீபன்" என்று ஆகி விட்டதே..
உன் அகிம்சை தொடரும்..
மூச்சிழுக்கும் நேரமெல்லாம் - உன்
முகமே ஞாபகம்...

காற்றலைகள் உன் பெயரை
காலமெல்லாம் கூறிடும்!!
காசி அண்ணன் பாடலை
தேனிசையில் கேட்போம்!!
பசியை மறந்த பிள்ளை,
நீ என்றும் இறப்பதில்லை...

http://www.facebook.com/photo.php?pid=192106&fbid=129482230435942&id=100001224967290&ref=nf

No comments: