Thursday, July 15, 2010

ரூபாய்க்கான அடையாள சின்னம் உருவாக்கிய தமிழர்



அம்பிகா சோனி தலைமையிலான அமைச்சரவையால் நேற்று(15ந்தேதி) ஏற்றுக்கொள்ளப்பட்ட , இந்திய ரூபாய்க்கான புதிய அடையாள குறியீட்டை வடிவமைத்த த.உதயகுமார் சென்னைத் தமிழர் ஆவார்.


ஐ.ஐ.டி முதுநிலை பட்டதாரி மாணவரான த.உதயகுமார், சென்னை தண்டையார் பேட்டை கார்ப்பரேசன் காலனி 4வது தெருவைச் சேரந்தவர். இவரது தந்தை, ரிஷிவந்தியம் தொகுதியின் தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏவும், மு.க.அழகிரி பேரவையின் தலைவருமான தர்மலிங்கம் ஆவார். தாயார் பெயர் ஜெயலட்சுமி ஆகும். உதயகுமார், 1978 ஆம் ஆண்டு அக்டோபர் 10ந் தேதி பிறந்தார்.

இவர்களது பூர்வீகம் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள மரூர் என்பதாகும்.

உதயகுமாருக்கு, ராஜ்குமார் என்ற அண்ணனும், விஜயகுமார்,மற்றும் விஜயகுமாரி என்ற தம்பி, தங்கையும் உள்ளனர். இவர்களில் விஜயகுமாரிக்கு மாட்டும் கல்யாணம் ஆகியுள்ளது. அண்ணன் ராஜ்குமார் ஷார்ஜாவில் என்ஜீனியராக பணியாற்றி வருகிறார்.

ஓவியம் வரைவதில் மிகுந்த ஆர்வம் உள்ள விஜயகுமார், ஓவியத்திற்காக பல பரிசுகளைப் பெற்று உள்ளார்.

உதயகுமார், சென்னை வளசரவாக்கத்தில் உள்ள லாசேட்லியர் உறைவிட ஜூனியர் கல்லூரியில் +2வரை படித்தார். பின்னர், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து பி.ஆர்க் பட்டம் பெற்றார். உதயகுமார், பி.ஆர்க் படிப்பில் மாநிலத்திலேயே முதல் மாணவராக தேர்வு பெற்றார்.

அதன் பிறகு, மும்பை ஐ.ஐ.டியில் தொழில் டிசைனிங் பிரிவில் (விஷுவல் கம்யூனிகேசன்) முதுகலை பட்டம் பெற்று உள்ளார். இவர், சில நிறுவனங்களுக்கு டிசைன் வடிவமைத்து கொடுக்கும் பணிகளையும் செய்து வந்தார்.

இந்திய ரிசர்வ் வங்கி, கடந்த ஆண்டு அறிவித்த ரூபாய்க்கான அடையாள குறியீட்டு போட்டிக்கு தான் வடிவமைத்த அடையாள குறியீட்டை அனுப்பிவைத்தார் உதயகுமார்.

போட்டிக்கு வந்த 3000,அடையாள குறியீட்டில், உதயகுமாரின் அடையாள சின்னம் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதன் மூலம் 2 .5 லட்சம் பரிசு கிடைக்க உள்ளது.

மேலும், தான் படித்த மும்பை கவுகாத்தி ஐ.ஐ.டியில் தொழில் டிசைனிங் பிரிவில் உதவிப் பேராசிரியராகவும் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: