Wednesday, August 18, 2010

“அனைத்துலகத் தமிழர் சொல்லப் போகும் செய்தி என்பது....?





“அவலத்தைக் கொடுத்தவனுக்கே அதைத் திருப்பிக் கொடுப்போம்”

"அன்றும் சரி, இன்றும் சரி, தமிழரின் உணர்வுகளை, அவர்களது வாழ்நிலை அவலங்களை, அவர்களது தேசிய அபிலாசைகளைச் சிங்களப் பெரும்பான்மை இனம் புரிந்து கொள்ளவில்லை. புரிந்து கொள்ள எத்தனிக்கவுமில்லை. புரிந்து கொள்ளும் ஆற்றலும் அறிவுத் திறனும் ஆன்ம பக்குவமும் அவர்களிடம் இருப்பதாகவும் தெரியவில்லை... சிங்கள மக்களின் மகாவம்ச மனவமைப்பில், அவர்களது சமூகப் பிரக்ஞையில், அவர்களது அரசியற் கருத்துலகில் அடிப்படையான மாற்றம் நிகழுமென நாம் எதிர்பார்க்கவில்லை. சிங்கள- பௌத்த மேலாண்மைவாதத்தின் வீச்சும் வலுவும் தணிந்து போகவில்லை. மாறாக, அது புதிய, புதிய வடிவங்களை எடுத்துப் புத்துயிர்பெற்று வருகிறது... "

- தமிழீழத் தேசியத்தலைவர் வே.பிரபாகரன் அவர்கள்-

நெஞ்சினில் நெருப்பேந்தி.......

மிக நீண்ட இடைவெளிக்கு பின்பு ஜரோப்பியத் தமிழ் சமூகம் ஜ.நா முன்றலில் ஒன்று கூடப் போகிறது. இந்த ஒன்று கூடலுக்கான தேவை என்பது பிரித்தானியாவிலிருந்து பாதயாத்திரை மேற்கொண்டுவரும் சிவந்தனுக்கு ஆதரவு தெரிவித்தும் அதனூடாக சிவந்தனின் கோரிக்கையோடு முருகதாசன் திடலில் சிவந்தனின் பாதயாத்திரை நிறைவை முன்னிட்டு ஐரோப்பிய தமிழ் அமைப்புக்களுடன் இணைந்து சுவிஸ் ஈழத்தமிழரவை நடாத்தும் பிரமாண்ட தேசிய இன எழுச்சி மாநாடு உட்பட முள்ளிவாய்காலுக்குப் பின்னான தமிழர்களின் அடுத்த கட்ட எழுச்சியையும் வீச்சையும் புலம்பெயர் தமிழர்களின் நிலைப்பாட்டையும் உலகிற்கு எடுத்துக் கூறவுள்ள இவ் வரலாற்று நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அணைவரையும் உரிமையுடன் விடுக்கப்பட்ட அறைகூவலோடு தமிழர் மீண்டும் பேரெழுச்சி பூண்டுள்ளனர் என்பதையே இது எடுத்துக்கட்டுகின்றமை மிக ஆரோக்கியமான ஒன்று..

இந்தத்தருணச்த்தில் சிவந்தனின் பாதயாத்திரையோடு முள்ளிவாய்காலுக்குப் பின்னான தமிழர்களின் அடுத்த கட்ட எழுச்சியையும் வீச்சையும் புலம்பெயர் தமிழர்களின் நிலைப்பாட்டையும் உலகிற்கு எடுத்துக் கூற புலம்பெயர் தமிழர் போர்கோலம் பூண்டுள்ளனர் என தமிழ் ஊடகங்களில் மிகப் பிரம்மாண்டமான பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது.
இத் தருணத்தில் எம்மால் முன்வைக்கப்படும் வேண்டுகை என்பது

சிங்கள அரசைத் தோலுரிக்க நாம் என்ன செய்யப் போகிறோம்? என்பது தான்; [இவ்விடத்தில் சிவந்தனின் போராட்ட வடிவத்தை நாம் கொச்சைப்படுத்துவதாக எண்ணிவிடதீர்கள்,இது எமது மிகத்தாழ்மையான வேண்டுதல்]
காரணாம் உணர்வு மயமான போராட்டங்களை நாம் நடத்தும் காலம் தடுப்பு முகாம்களுடன் பெரும்பாலும் முடிவுக்கு வந்து விடும் என்றே நாம் நம்புகின்றோம் இதுபற்றி தெளிவு இல்லாவிட்டால் எந்தவொரு போராட்டத்தினாலும் வெற்றி பெற முடியாது. முள்ளிவாய்க்கால் பேரழிவு எமக்கு பெற்றுக் கொடுத்த பாடம் இந்த உலகத்தை எமக்கு புரிய வைத்தது எனவே இன்றைய உலக ஒழுங்கை கவனத்திலெடுத்து அரசியல், இராஜதந்திர வழிகளில் அதற்கான முயற்சிகளை எடுப்பதே தமிழர்களின் இலக்குநோக்கிய பாதைக்கு தற்காலிகமாக சிறந்தது.

“அவலத்தைக் கொடுத்தவனுக்கே அதைத் திருப்பிக் கொடுப்போம்”
என்ற தேசியத் தலைவரின் வார்த்தைகளில் தனியே வன்முறை மட்டும் பொதிந்திருக்கவில்லை.

உடல் ரீதியாக, உள ரீதியாக, பொருளாதார ரீதியாக என்று பலவழிகளிலும் அவலங்களை தமிழ் மக்கள் சந்தித்து விட்டார்கள். அதே வழியில் தான் நாம் அவர்களுக்கு அவலங்களைப் பரிசளிக்க வேண்டும். இப்போதைய நிலையில் அவலங்களைக் கொடுத்தவர்களுக்கு பொருளாதார ரீதியாக, அரசியல் ரீதியான அவலங்களை கொடுப்பதே மிகச் சிறந்த வழிமுறையாக இருக்கும். எம்மை நடுத்தெருவுக்குக் கொண்டு வந்தவர்களையும் அப்படியே செய்வதற்கு இது தான் உகந்த வழி. இந்த வழியில் அவர்களைத் தோற்கடிப்பதற்கு நகர்வுகளை மேற்கொள்ளாதிருப்பதோ அல்லது தீர்க்கமான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய நிலையில் அது குறித்துச் சிந்திக்காமல் இருப்பதோ பாரிய பின்னடைவுகளுக்கே வழி கோலும்.

நீண்டகால நோக்கில் தமிழர் தரப்பில் போராட்டங்களை முன்னெடுப்பதற்கான கோட்பாட்டு ரீதியான செயற்திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்.

அரசியல்,அடிப்படை உரிமைகளை பெறுவதற்கான போராட்டங்களை எப்படி எங்கெங்கு நடத்துவது என்பது பற்றி சிந்திக்க வேண்டும்.

வெறுமனே வாழ்வதற்கான உரிமைகளைக் கொடுங்கள் என்று எத்தனை காலத்துக்குத் தான் கேட்க முடியும்?
எனவே;

மகிந்த அரசைத் தோலுரிக்க நாம் என்ன செய்யப் போகிறோம்?

தமிழரின் போராட்டம் இராணுவ ரீதியான தோல்வியை சந்தித்ததை தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளவோ சகித்துக் கொள்ளவோ முடியாதிருப்பது உண்மை. ஆனால், இந்தப் பலவீனத்தைப் பயன்படுத்தி தமிழ்மக்களால் நிரந்தரமாகத் தலையெடுக்க முடியாதபடி- நகர்வுகள் மேற்கொள்ளப்படுவதும் இதற்கு தமிழ்த் தேசியத்தின் வழிவந்தோரே காரணமாக அமைந்திருப்பதும் தான் வேதனையான விடயம்.

புலத்தில் தமிழர் ஒன்றுபட்டு பலத்துடன் நிமிர்ந்துள்ளோம் என்பதை எப்படி நிரூபிக்கப்போகின்றோம்.

விடுதலை வேட்கைகொண்டு தணியாத தமிழீழ தாகத்துடன் எழுச்சி பெற்று நிற்கும் இளம் தலைமுறைக்கு எப்படி வழிகாட்டப்போகின்றோம்
இதுவே இன்று எம்முன் எழுந்து நிற்கும் பெரும் கேள்விக்குறி

தமிழீழத் தேசத்தின் விடுதலைக்காகத் தமிழ் மக்கள் புரிந்துள்ள மாபெரும் தியாகத்தை, அதன் ஆன்மீக மகத்துவத்தை, அதன் வரலாற்று முக்கியத்துவத்தைச் சிங்களத் தேசம் மட்டுமன்றிச் சர்வதேசச் சமூகமும் உணர்ந்து கொள்ளாதது எமக்கு ஏமாற்றத்தையும் வேதனையையும் தருகிறது.

முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னர்- தமிழர் தரப்பில் முன்வைக்கப்பட்டு வந்த, முகாம்களுக்குள் அடைக்கப்பட்டுக் கிடக்கும் தமிழ் மக்களை சுதந்திரமாக வாழவிட வேண்டும், மனிதப்பேரவலத்தை உருவாக்கி இன அழிப்பை மேற்கொண்ட சிங்கள தேசத்தை சர்வதேச சமூகம் போர்குற்றவாளியாக நிறுத்த வேண்டும் என்ற கோசம் இப்போது வலுவிழக்கத் தொடங்கியுள்ளது. முகாம்களுக்குள் அடைக்கப்பட்டுள்ள பெரும் பகுதி மக்களை மீளக்குடியமர்த்தும் முயற்சியிலும் போராளிகளுக்கான மறுவாழ்வு என அரசாங்கம் இறங்கியுள்ளதால் தான் இந்தநிலை ஏற்பட்டுள்ளது.

இதன் விளைவாக சிங்கள அரசுக்கு எதிராக சர்வதேச ரீதியாக தமிழ் மக்கள் முன்னெடுத்து வந்த போராட்டங்களிலும் ஒருவித தொய்வும் தேக்கமும் ஏற்படத் தொடங்கியுள்ளது. சிங்கள அரசு முன்னெப்போதும் இல்லாதளவுக்கு சர்வதேச அரங்கில் நெருக்கடிகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் நிலையில்- தமிழர் தரப்பு அதற்கேற்ப காய்களை நகர்த்த முடியாமல் இருப்பது கண்கூடு.

போர் கடுமையாக நடந்து கொண்டிருந்த போது- போரை நிறுத்த வேண்டும் என்றும், பாதுகாப்பு வலயங்கள் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு நிர்ப்பந்தம் கொடுக்குமாறும் போராட்டங்கள் தமிழர் தரப்பால் மேற்கொள்ளப்பட்டன. போர் முடிவுக்கு வந்த பின்னர் தடுப்பு முகாம்களுக்குள் அடைபட்டுள்ள மக்களை வெளியே விடுமாறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. ஆனால் அரசாங்கம் சுமார் இரண்டுலட்சம் வரையான மக்களை யாழ்ப்பாணம், வன்னி, கிழக்கு போன்ற பகுதிகளுக்குச் செல்ல அனுமதித்துள்ளதால் இந்தக் கோரிக்கையை முன்னிறுத்தும் போராட்டங்களின் வீரியம் குறைந்துள்ளது.

குறுகிய காலத்துக்கு மட்டுமே நீடிக்கும் கோரிக்கைகளை முன்வைத்து நடத்த முற்பட்ட போராட்டங்களால் தான் இந்த நிலை. அதற்காக இவை ஒன்றும் அவசியமற்ற போராட்டங்கள் என்றோ முன்னிலைப்படுத்தத் தேவையில்லாத விடயங்கள் என்றோ கருதி விட முடியாது. ஆனால், தமிழர் தரப்பு அரச எதிர்ப்புப் போராட்டங்களுக்கு குறுகிய காலத்துக்கு மட்டுமே முன்னிலைப்படுத்தக் கூடிய விடயங்களை மட்டும் நம்பியிருந்தது தான் தவறு.

இன்னும் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் வரையானோர் தடுப்பு முகாம்களுக்குள் அடைபட்டுக் கிடக்கிறார்கள். அவர்களை மீள்குடியமர்த்துவதற்கு நீண்டகாலம் எடுக்கலாம். ஆனால் அவர்களை முன்னிலைப்படுத்தும் போராட்டங்களால் பெரிதாக எதையும் சாதிக்க முடியாது. ஏனென்றால் அவர்களை மீளக்குடியமர்த்துவதற்கு ஏற்படும் தாமதத்துக்கு அரசாங்கம் கூறும் நியாயங்களை சர்வதேசம் ஓரளவுக்கேனும் ஏற்றுக் கொள்கிறது.கண்ணிவெடிகளை அகற்ற வேண்டும் என்ற அரசின் நியாயத்தை உணர்ந்து கொள்வது அவசியம்.

ஏற்கனவே அவலத்தின் உச்சங்களைத் தொட்டு விட்ட மக்களை இன்னும் அதற்குள் தள்ளி விடுவதற்குத் துணை போகக் கூடாது. இலங்கை அரசு இந்த விடயத்தில் கூறும் நியாயங்களை ஓரளவுக்கு சர்வதேசம் புரிந்து கொண்டிக்கிறது. ஆனால் முகாம்களில் உள்ள மக்களுக்கு நடமாடுகின்ற அடிப்படைச் சுதந்திரத்தையேனும் வழங்குமாறு சர்வதேசம் கேட்டு வருகிறது.

அதாவது மீள்குடியமர்வுக்கு தாமதம் ஏற்பட்டாலும் சரி,அவர்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கை. இதற்குக் கூட அரசாங்கம் புதிய புதிய காரணங்களைக் கண்டுபிடித்து சர்வதேசத்தின் கோரிக்கைகளை அலட்சியம் செய்து வருகிறது . எனினும் அடுத்து வரவிருக்கும் மாகாணசபை தேர்தல்களை கவனத்திலெடுத்து அங்குள்ள மக்களின் வாக்குகளுக்காக எதையும் செய்வதற்கு அரசு தயாராகவே இருக்கிறது. அப்படியொரு நிலை வந்து விட்டால் சிங்கள அரசுக்கு எதிரான தமிழர் தரப்பின் போராட்டங்கள், கோசங்கள் முற்றாகவே வலுவிழந்து போய்விடும்.

அதற்குப் பிறகு எந்த நிலைப்பாட்டை முன்வைத்து போராட்டங்கள் நடத்தப்படப் போகின்றன?

இந்தக் கேள்வி இப்போதே எழுந்திருக்கிறது.

புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் மக்களை அரசாங்கம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை. அதனால் தான் அவர்களை வடக்கு கிழக்கில் முதலீடு செய்ய வருமாறு தொடர்ச்சியாக அழைத்துக் கொண்டிருக்கிறது.அவர்களின் போராட்டங்கள் சிங்கள அரசுக்கு சவால் மிக்கதாகவே இன்றும் இருந்து வருகிறது. ஆனால் அந்த அச்சத்தை தொடர்ந்து தக்க வைத்திருப்பதற்கு, சிங்கள அரசின் போக்கை- சர்வதேசத்தின் முன்பாகத் தோலுரிப்பதற்கு நாம் என்ன செய்கிறோம்- என்ன செய்யப் போகிறோம் என்று சிந்திப்பது அவசியம்.

போர் முடிந்து விட்டது. அரசியல்தீர்வு பற்றிய பேச்சையே காணவில்லை.

தமிழ்மக்களின் உரிமைகள் குறித்து எவரும் கதைப்பதாகவே தெரியவில்லை.

இந்த நிலையில் தான் புலம்பெயர் தமிழர்களின் போராட்டங்கள் தீவிரமாக இடம்பெற வேண்டும்.
ஆனால் அது நடக்கவில்லை.

இப்போது சர்வதேச சமூகத்திடம் முதலையின் வாயில் சிக்கியது போன்ற நிலையில் சிங்கள அரசு சிக்கிப் போய் இருக்கிறது. சிங்கள அரசைப் பணிய வைப்பதற்கு சர்வதேச ஆதரவைத் தேடிக் கொள்வதற்கு ஏற்ற தருணம் இதைவிட வேறேதும் கிடைக்குமா என்பது சந்தேகம் தான்.

ஒரு பக்கத்தில் போர்க்குற்ற விசாரணைகள் என்று சிங்கள அரசைத் துரத்துகிறார்கள்.

மனித உரிமை மீறல்களைக் காரணம் காட்டி பொருளாதார ரீதியான சலுகைகளை இடைநிறுத்தும் முயற்சிகள் நடக்கின்றன.

அரசியல் தீர்வு பற்றி வலியுறுத்துகின்றன.

பொருளாதார கட்டுப்பாடுகள் பற்றிப் பேசப்படுகிறது.

ஜனநாயகத்துக்கான அடிப்படை அர்த்தத்தைப் புரிந்து கொள்ளாத- அதன் வழி நடக்காத நாடுகள் தான் இப்போது சிங்கள அரசுக்கு சாமரம் வீசுகின்றன. மற்றெல்லா நாடுகளும் அதற்கு எதிராகவே நிலைப்பாடுகளைக் கொண்டிருக்கின்றன.
இப்படியொரு தருணத்தில் சிங்கள அரசை போர்க்குற்றச்சாட்டுகளைச் சுமத்தி நடுத்தெருவுக்குக் கொண்டு வந்து, அதை தமிழ்மக்களுக்கு நியாயமான உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்கு பயன்படுத்திக் கொள்வதே மிகச் சிறந்த இராஜதந்திரம்.

முள்ளிவாய்க்கால் பேரழிவு எமக்கு பெற்றுக் கொடுத்த பாடம் இந்த உலகத்தை எமக்கு புரிய வைத்தது.

எனவே இன்றைய உலக ஒழுங்கை கவனத்திலெடுத்து அரசியல், இராஜதந்திர வழிகளில் அதற்கான முயற்சிகளை எடுப்பதே தமிழர்களின் இலக்குநோக்கிய பாதைக்கு தற்காலிகமாக சிறந்தது.

“அவலத்தைக் கொடுத்தவனுக்கே அதைத் திருப்பிக் கொடுப்போம்” என்ற தேசியத் தலைவரின் வார்த்தைகளில் தனியே வன்முறை மட்டும் பொதிந்திருக்கவில்லை.

உடல் ரீதியாக, உள ரீதியாக, பொருளாதார ரீதியாக என்று பலவழிகளிலும் அவலங்களை தமிழ் மக்கள் சந்தித்து விட்டார்கள். அதே வழியில் தான் நாம் அவர்களுக்கு அவலங்களைப் பரிசளிக்க வேண்டும். இப்போதைய நிலையில் அவலங்களைக் கொடுத்தவர்களுக்கு பொருளாதார ரீதியாக, அரசியல ரீதியான அவலங்களை கொடுப்பதே மிகச் சிறந்த வழிமுறையாக இருக்கும். எம்மை நடுத்தெருவுக்குக் கொண்டு வந்தவர்களையும் அப்படியே செய்வதற்கு இது தான் உகந்த வழி. இந்த வழியில் அவர்களைத் தோற்கடிப்பதற்கு நகர்வுகளை மேற்கொள்ளாதிருப்பதோ அல்லது தீர்க்கமான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய நிலையில் அது குறித்துச் சிந்திக்காமல் இருப்பதோ பாரிய பின்னடைவுகளுக்கே வழி கோலும்.

நீண்டகால நோக்கில் தமிழர் தரப்பில் போராட்டங்களை முன்னெடுப்பதற்கான கோட்பாட்டு ரீதியான செயற்திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்.

அரசியல்,அடிப்படை உரிமைகளை பெறுவதற்கான போராட்டங்களை எப்படி எங்கெங்கு நடத்துவது என்பது பற்றி சிந்திக்க வேண்டும்.

வெறுமனே வாழ்வதற்கான உரிமைகளைக் கொடுங்கள் என்று எத்தனை காலத்துக்குத் தான் கேட்க முடியும்.

போர் முடிவுக்கு வந்த பின்னர் பகிரங்கமான படுகொலைகள் நின்று போயிருக்கின்றன. இந்தக் கட்டத்தில், இப்படிப்பட்ட சம்பவங்களை அடிப்படையாக வைத்து போராட்டங்களை நடத்தி வந்தால் அது காலப்போக்கில் வலுவிழந்து விடும். நிச்சயமாக வெளிப்படையான இனப்படுகொலைகள் இலங்கையில் இனிமேல் நிகழாது.அப்படிப் பார்த்துக் கொள்வார்கள் சிங்கள ஆட்சியாளர்கள்.ஆனால் வேறு விதமாக தமிழரை நசுக்குவதற்கு திட்டங்கள் தீட்டுவார்கள்.

அது அரசியல் ரீதியாக, பொருளாதார ரீதியாக அல்லது கலாசார ரீதியாக என்று பல வழிகளிலும் தமிழ்த் தேசிய இனத்தைப் பலவீனப்படுத்த முனைவார்கள். இனப்படுகொலைகளில் ஈடுபட்டால் வெளிநாடுகளின் ஆதரவு கிடைக்கவே கிடைக்காது. இதனால் அவர்களுக்கு ஒரு முகத்தைக் காண்பித்துக் கொண்டு தமிழருக்கு இன்னொரு முகத்தை காண்பிப்பார்கள்.

சிங்கள அரசுகளின் இத்தகைய போலிதனத்தை அரசியல்தீர்வு பற்றிய ஏமாற்றுத்தனத்தை, தமிழருக்கு உரிமைகளை வழங்க மறுக்கம் விடயத்தை சர்தேச சமூகத்தின் முன் கொண்டு செல்வதே இன்றைய தேவை.

இனப்படுகொலைகள், கைதுகள் காணாமற்போதல்கள், பொருளாதாரத்தடை என்பன உணர்வு மயமான விடயங்கள். இவை சர்வதேசத்தின் கண்களில் அதிக உறுத்தலை ஏற்படுத்தும்.

ஆனால் அரசியல் ரீதியான போராட்டங்கள் அப்படி எடுபடாது. ஆனால் இனிமேல் இத்தகைய போராட்டங்கள் தான் அவசியப்படும். ஏனென்றால் உணர்வு மயமான போராட்டங்களை நடத்தும் காலம் தடுப்பு முகாம்களுடன் பெரும்பாலும் முடிவுக்கு வந்து விடும். இதுபற்றி தெளிவு இல்லாவிட்டால் எந்தவொரு போராட்டத்தினாலும் வெற்றி பெற முடியாது.

கொடியையும், பதாகையையும் தூக்கிப் பிடித்துக் கொண்டு வீதியில் பேரணி செல்வதால் சாதிப்பதற்கு ஏதும் இருக்காது. நியாயமான காரணங்களை நியாயமான வழிகளில் முன்வைப்பது அவசியம். முன்னர் ஒரு காலத்தில் புலிகளைக் காரணம் காட்டி ஒதுங்கியிருந்த நாடுகளால் இப்போது அப்படிச் செய்ய முடியாது. எனவே சர்வதேசத் தலையீட்டை உருவாக்கிக் கொள்வதற்கு இப்போதைய தருணமே மிகச் சிறந்தது. சர்வதேசத் தலையீடு தவிர்ந்த வேறெந்த வழிகளிலும் தமிழருக்கு நியாயம் பிறக்காது. இதை உணர்ந்து சாத்தியமானதும்- தமிழருக்குச் சாதகமானதுமான கோரிக்கைளின் ஊடாக போராட்டகளை முன்னெடுக்கத் தயாராக வேண்டும்.
அதுவே மூன்று தசாப்தப் போரினால் சீரழிந்து போயிருக்கும் தமிழ்ச் சமூகத்துக்கு நியாயம் பெற்றுக் கொடுக்கும்.போராட்ட வடிவங்கள் மாறலாம். அது அடிப்படை இலட்சியத்துக்கு உரம் சேர்ப்பதாக இருந்தால்; எனவே ஒன்றுபடுவோம். ஒருங்கிணைந்து செயற்படுவோம்.

எமது பலம் வெறும் ஆயுதப்போராட்டத்தின் மீது கட்டியெழுப்பப்பட்டதல்ல- அதற்கும் அப்பாற்பட்டதென்ற உண்மையை புரிய வைக்க வேண்டும். சாத்தியமான வழிகளினூடாகப் போராட்டத்தை நகர்த்தி உரிமைகளைப் பெறுவதே புத்திசாலித்தனமானது. அதைவிட்டு விட்டு சாத்தியமற்ற வழிகள் மீது நம்பிக்கை வைப்பதும், எம்மை நாமே முட்டாள்களாக்கிக் கொள்வதும் சேறு பூசிக் கொண்டிருப்பதும் தமிழினத்துக்கு விடிவைத் தரப்போவதில்லை. என்பதை உணர்ந்து உரிமைப்போருக்காய் உழைப்போம். வாரீர்.

மாண்ட வீரர் கனவு பலிக்கும் மகிழ்ச்சி கடலில் தமிழ்மண் குளிக்கும்.

- தொல்காப்பியன்

No comments: