Tuesday, August 10, 2010

சொந்த நாட்டு மக்களின் மரணத்தை புறந்தள்ளி, அமெரிக்க முதலாளியை காப்பாற்றத் துடித்த ராஜீவ்காந்தி, தேச பக்தரா?

இரண்டாம் உலகப்போரில் ஹிரோஷிமாவில் குண்டுவீசப்பட்டதுபோல் போபால் நகரம் காட்சியளித்தபோது, செத்து பிணங்களாக வீழ்ந்துக் கொண்டிருந்த மக்களைக் காப்பாற்று வதற்கு, நச்சுவை முறியடிக்கக்கூடிய சிகிச்சை அவசரமாக அளிக்கப்பட்டிருக்க வேண்டும். அதற்காக மருத்துவர்கள் போபாலில் வெளி யேறிய நச்சு வாயுவில் அடங்கியுள்ள பொருள்கள் என்ன என்பதை போபால் நிறுவனத்திடம் கேட்டபோது, அதை வெளிப்படுத்த நிர்வாகம் மறுத்துவிட்டது. அதன் அமெரிக்க தலைமையகம், இந்த வாயுவில் (எம்.அய்.சி.) அடங்கியுள்ள மூலப் பொருள் களையும், ஆபத்து நேர்ந்தால் முறியடிப் பதற்கான மாற்று வேதிப் பொருள் என்ன என்பதையும் ரகசியமாகவே வைத்திருந்தது.

சம்பவம் நடந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு நச்சு வாயுவில் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றி ஆராய்ந்து அறிக்கை தந்த 'இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு', இந்த நச்சை முறியடிக்கக் கூடிய மருந்து 'சோடியம் தையோ சல்பேட்' என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. இந்த முறிப்பு மருந்தை, அப்போதே பாதிக்கப்பட்டோருக்கு தந்திருந்தால் ஏராளமான உயிர்களைக் காப்பாற்றியிருக்க முடியும் என்றும் அந்த அறிக்கை கூறியது.

இந்திய மருத்துவத் துறையிடம் இந்த முக்கியமான உண்மையை கார்பைடு நிர்வாகம் திட்டமிட்டு மறைத்தது மிகப் பெரும் கிரிமினல் குற்றம். ஆனால், கார்பைடு நிறுவனத்துக்கு எதிராக வழக்கை நடத்திய சி.பி.அய். புலனாய்வு நிறுவனம், இந்த முக்கியமான குற்றச்சாட்டை நீதிமன்றத்தில் வலியுறுத்தவே இல்லை.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் நீதிமன்றத்தில் முன் வைக்கப்பட்ட வாதம் தான் விசித்திர மானது. வெளியேறிய வாயு மிகவும் நச்சுத் தன்மை கொண்டவை என்பதும் உயிருக்கு ஆபத்தானது என்பதும் உண்மைதான். ஆனால், இப்போது நடந்த விபத்துக்கு, நாங்கள் எப்படி பொறுப்பாக முடியும்? இது கடவுளின் செயல். எந்த மனிதரை யும் கடவுளின் செயலுக்கு பொறுப்பாக்க முடியாது (It was an act of god for which no human being was responsible) என்று நீதிமன்றத் தில் கடவுளை துணைக் கழைத்தார்கள், குற்றம் சாட்டப்பட்டவர்கள்.

1985 ஆம் ஆண்டு நாடாளுமன்றம் போபால் நச்சு வாயு பேரழிவுச் சட்டம் என்ற சட்டம் ஒன்றை இயற்றியது. இச் சட்டத்தின் மூலம் பாதிக்கப்பட் டவர்கள் தங்களுக்கு இழப்பீடு கோரி நேரடியாக நீதிமன்றம் போவதை அரசு தடுத்து நிறுத்தி, பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக, இழப்பீடு கோரும் உரிமையை அரசு எடுத்துக் கொண்டது.

முதலில் ரூ.3900 கோடி இழப்பீடாகத் தர வேண்டும் என்று இந்திய அரசு அமெரிக்கா விலுள்ள யூனியன் கார்பைடு நிறுவனத்தின்மீது வழக்கு தொடர்ந்தது. வழக்கு அமெரிக்காவில் நடத்தப்பட்டிருந்தால், இழப்பீட்டுத் தொகை அதிகமாக தரவேண்டி இருக்கும் என்பதால், வழக்கு சூழ்ச்சியாக இந்தியாவுக்கே போபால் மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. வழக்கு நடந்து கொண்டிருக்கும்போதே இந்தியப் பார்ப்பன ஆட்சி, யூனியடன் கார்பைடு நிறுவனத் துடன் ரகசியமாக பேச்சு நடத்தி வந்தது.

போபால் மாவட்ட நீதிபதி இடைக்கால நிவாரணமாக, ரூ.350 கோடி தருவதற்கு உத்தர விட்டார். யூனியன் கார்பைடு நிறுவனம் இந்தத் தொகையை ஏற்க மறுத்து, ம.பி. உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தபோது, உச்சநீதிமன்றமோ, நீதிமன்றத்துக்கு வெளியே இரு தரப்பினரும் பேசித் தீர்த்துக் கொள்ளு மாறு உத்தரவிட்டு, எல்லா மனுக்களையும் தள்ளுபடி செய்துவிட்டது. அமெரிக்காவி லிருந்து வரும் அன்னிய முதலீடுகள் பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்பதற்காக, சொந்த நாட்டு குடி மக்களின் 'பிணங்களை' பணயமாக வைத்தது, இந்திய அரசு.

330 கோடி டாலருக்கு பதிலாக ரூ.173 கோடி இழப்பிட்டுத் தொகைக்கு இந்திய அரசு ஒப்புக் கொண்டது. இதைவிடக் கொடுமை பாதிக்கப்பட்ட மக்களிடம் இது பற்றி எந்தக் கருத்தையும் இந்திய அரசு கேட்கவில்லை என்பதுதான்!

பாதிக்கப்பட்டவர்கள் - இறந்தவர்கள் -இழப் பீட்டுத் தொகையைப் பெறுவதற்கு கடுமையான சான்றுகளைக் கேட்டது, இந்திய அரசு. இறந்து போனவர் என்பதை நிரூபிப்பதற்கு இறுதி ஊர்வலத்தில் போனவர்கள் சான்று தர வேண்டும் என்றார்கள். நியாயமான பல விண்ணப்பங்கள் புறக்கணிக்கப்பட்டன. யூனியன் கார்பைடு நிறுவனத்தின் செலவை குறைக்க அரசு அவ்வளவு கவலை எடுத்துக் கொண்டது. இறந்தவர், பாதிக்கப்பட்டவர் பற்றி துல்லியமான கணக்கெடுப்பு நடத்துவதில், மத்திய பிரதேச அரசோ, இந்திய அரசோ, எந்த அக்கறையும் காட்டவில்லை. இறந்தவர்கள் 3000 பேர் என்றும், இறந்தவர்கள் உட்பட பாதிக்கப் பட்டவர்கள் ஒரு லட்சத்து 5 ஆயிரம் பேர் என்றும், அவர்களே கணக்கிட்டுக் கொண் டார்கள். இழப்பீடு கோரி விண்ணப்பித்த 10 லட்சம் பேரில் 5,74,367 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டதாக ஏற்றுக் கொள்ளப் பட்டது. உண்மையாக பாதிப்புக்குள்ளான வர்களாக 5,74,367 பேர் என்று இந்திய அரசு ஏற்றுக் கொண்டாலும், 1 லட்சத்து 5 ஆயிரத்து 500 பேர் மட்டுமே பாதிப்புக்குரியவர்கள் என்ற அடிப்படையில், கார்பைடு நிறுவனம் வழங்க முன்வந்த ரூ.173 கோடியை மட்டும், இந்தியா பெற்றுக் கொண்டது.

இதனால் சராசரியாக பாதிக்கப்பட்ட ஒருவருக்குக் கிடைத்தது ரூ.1500க்கும் குறைவு! பாதிக்கப்பட்ட மக்கள் மருத்துவ செலவுக்குக் கூட பணமின்றி மரண மடைந்தனர். நச்சு வாயு வின் தாக்கம் மறையா மல், மக்களைத் தொடர்ந்து பாதிப்புக் குள்ளாக்கியது. பாதிக்கப்பட்ட மக்களுக்கான அமைப்புகள் நீதி கேட்டு, இடை விடாமல் போராடின. 1989 ஆம் ஆண்டு உச்சநீதி மன்றத் தீர்ப்பின்படி உருவான உடன்பாட்டை எதிர்த்து, பாதிக்கப்பட்டோருக்கான அமைப்புகள் மீண்டும் உச்சநீதி மன்றத்தின் கதவைத் தட்டின. உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி மீண்டும் போபால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில்தான் கடந்த 7.6.2010 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்தியாவின் நீதித்துறை, மத்திய புலனாய்வு நிறுவனம், இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தில் இருந்த ராஜீவ் தலைமையிலான காங்கிரஸ் அதிகார சக்திகள் அத்தனையுமே அமெரிக்கக் குற்றவாளியைத் தபிக்க வைப்பதில் ஆர்வம் காட்டி செயல்பட்டதற்கான ஏராளமான அதிர்ச்சியூட்டும் சான்றுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

1989 இல் நீதித் துறையும் இந்திய அரசும் இணைந்து அமெரிக்க நிறுவனத்துக்கு எதிரான அத்தனை வழக்குகளையும் கைவிட்டு, குற்றவாளிகள் தப்பிக்கச் செய்த பிறகும் மக்கள் எழுச்சியால் மீண்டும் 1991 இல் வழக்கு, தோண்டி எடுக்கப்படும் நிலை வந்தது. ஆனாலும் என்ன பயன்? 1991 இல் குற்றஞ் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான கடுமையான குற்றப் பிரிவுகள் மாற்றப்பட்டன. தண்டனைச் சட்டப் பிரிவு 304-11 என்பதிலிருந்து 304-ஏ பிரிவுக்கு மாற்றி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை கிடைக்காமல் பாதுகாப்பை ஏற்படுத்தித் தந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம்.அகமத், எஸ்.பி. மஜீம்தார் ஆகியோர் ஆவர். அப்போது மத்திய புலனாய்வுத் துறையும், இந்த துரோகத்துக்கு உடந்தையாக செயல்பட்டதை ஏற்கனவே சுட்டிக் காட்டி யிருந்தோம். இந்த உத்தரவை எதிர்த்து மறு ஆய்வுசெய்யக் கோரும் மனுவை தாக்கல் செய்யாதது மட்டுமல்ல; மற்றொரு துரோகத்தை யும் சி.பி.அய். செய்தது. சி.பி.அய். தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையை மட்டுமே உச்சநீதி மன்றத்தின் பார்வைக்கு வைத்ததேதவிர, தற்போது போபால் விசாரணை நீதிமன்றத்தில் முன் வைக்கப்பட்ட விரிவான சாட்சி ஆதாரங்களை உச்சநீதிமன்றத்தில் சி.பி.அய். தாக்கல் செய்யவில்லை. இப்போது வெளிவந்துள்ள நீதிமன்றத் தீர்ப்பு குறித்து பரிசீலிக்க - ம.பி. மாநில அரசு நியமித்துள்ள நான்கு உறுப்பினர்கள் அடங்கிய குழுவின் தலைவர் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் விவேக் டென்ககா இந்த அதிர்ச்சியான தகவலைத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க நிறுவனத்தைக் காப்பாற்ற மற்றொரு பேருதவியையும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அகமதியா எஸ்.பி.மஜிம்தார் அடங்கிய அமர்வும் செய்தது. அமெரிக்காவில் உள்ள யூனியன் கார்பைடு நிறுவனம், இந்தியாவிலுள்ள அதன் கிளையான யூனியன் கார்பைடு இந்தியா நிறுவனத்தில் நேரடியாக முதலீடு செய்திருந்த 51 சதவீத பங்குகளை பறிமுதல் செய்ய போபால் நீதிபதி உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட மக்கள் அமைப்புகள் தாக்கல் செய்த மனு மீது நீதி மன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது. உடனடியாக யூனியன் கார்பைடு நிறுவனம் ஒரு அறக்கட்டளையைத் தொடங்கி, அந்த அறக் கட்டளைக்கு பங்குகளை மாற்றித் தருமாறு மனு போட்டது. உச்சநீதிமன்ற நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம்.அகமதி, எஸ்.எம். மஜீம்தார் அமர்வு, இதற்கு ஒப்புதல் அளித்து விட்டது. (1994, பிப்.14). வழக்குதொடர்ந்த பாதுகாக்கப் பட்ட மக்களுக்கான அமைப்பின் கருத்து களைக் கேட்கவும் உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.

இப்படி - அமெரிக்க நிறுவனத்துக்காக நீதித் துறையை வளைத்து அதற்காக பதவி ஓய்வுக்குப் பிறகு அந்நிறுவனத்தில் பல கோடி மதிப்புள்ள அறக்கட்டளைக்கான தலைவர் பதவியையும் ஏற்றுக் கொண்ட நீதிபதி ஏ.எம். அகமதி இப்போது உச்சநீதிமன்றமே அப்பதவியை ஏற்குமாறு தன்னைப் பணித்ததாகக் குறிப்பிடுகிறார்.

பாதிக்கப்பட்டோருக்காக அமைக்கப்பட்ட மறுவாழ்வு மீட்பு மய்யத்தின் வேண்டுகோளை ஏற்று, "டாட்டா சமூகவியல் ஆய்வு நிறுவனம்", சம்பவம் நடந்த இரு வாரங்களில் 25,259 பாதிக்கப்பட்டோர் இல்லங்களுக்குச் சென்று பாதிப்புகளை நேரடியாக பதிவு செய்தது. பாதிப்புகள் குறித்த ஒரே நேரடியான பதிவு இது மட்டும்தான். கடுமையான பாதிப்புகளை வெளிக்கொண்டு வந்த இந்தக் கள ஆய்வுக்கான விவரங்களை ஒரு லாரி நிறைய ஏற்றி, மாநில அரசிடம் சமர்ப்பிக்கப்பட்து. அத்தனையும் திட்டமிட்டு, அழிக்கப்பட்டன. இந்த ஆவணங் களின் கதி என்னவாயிற்று என்றே தெரியவில்லை.

1997 இல் யூனியன் கார்பைடு நிறுவனத்தை அமெரிக்காவின் பன்னாட்டு நிறுவனமான 'டொவ் கெமிக்கல்ஸ்' (னுடிற ஊhநஅiஉயடள) விலைக்கு வாங்கியது. போபால் ஆலையில் உள்ள நச்சுக் கழிவுகளை அகற்றாமல் அப்படியே விட்டுவிட்டுப் போனது யூனியன் கார்பைடு; விலைக்கு வாங்கிய புதிய நிறுவனம், அதை சரி செய்ய வேண்டும் என்று பாதிக்கப் பட்டோர் நல அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. அதற்காக ரூ.100 கோடியை 'டவ் கெமிக்கல்' அரசிடம் வைப்பு நிதியாக வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றமும் கோரியது. ஆனால் 'டவ் கெமிக்கல்' நிறு வனத்துக்காக வாதாட காங்கிரசுக்குள்ளேயே புதிய 'தேச பக்தர்கள்' புறப்பட்டார்கள்.

மன்மோகன் அமைச்சரவையில் 2006-07 இல் வர்த்தக அமைச்சராக இருந்த கமல்நாத் அந்த நிறுவனத்தின் மீது எந்தக் கடுமையான கட்டுப்பாடுகளையும் திணிக்கக் கூடாது என்றார். இப்போது காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ பேச்சாளராக உள்ள அபிஷேக்சிங் கிங்வி - டவ் செமிக்கல்ஸ் நிறுவனத்தின் சட்ட ஆலோசகராக இருந்து கொழுத்த ஊதியம் பெற்றவர். நச்சு வாயுவால் ஏற்பட்ட பாதிப்புக்கு இந்நிறு வனத்தைப் பொறுப்பாக்கக் கூடாது என்று மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதினார். டாட்டா போன்ற தொழிலதிபர்கள், டவ் நிறுவனத்திடம் ரூ.100 கோடி வைப்புத் தொகையாகக் கேட்பதை கைவிட வேண்டும் என்றும், இப்படிக் கேட்டால், அன்னிய முதலீடு குறைந்துவிடும் என்றும், நச்சத் தன்மைகளை அகற்ற தனியே ஒரு நிதியம் அமைக்கலாம் என்றும் யோசனை தெரிவித்ததை, அப்போதைய நிதியமைச்சர் ப. சிதம்பரம் ஏற்றுக் கொண்டு, அதையே தமது அலுவலகக் கோப்பிலும் குறிப்பு எழுதி வைத்தார். மாண்டேக் அலுவாலியா அமைச்சரவை செயலாளர் பி.கே. சதுர்வேதி, அமெரிக் காவுக்கான இந்திய தூதர் ரேனன்சென், பிரதமரின் முதன்மை செயலாளர் டி.கே.நாயர், இப்படி அதிகார செல்வாக்கு மிக்க ஒரு பெரும் குழு, 'டவ்' நிறுவனம் ரூ.100 கோடி செலுத்த வேண்டாம் என்று அரசிடம் வற்புறுத்தி வெற்றி பெற்றது. பாதிக்கப்பட்ட மக்களைப் பற்றி இவர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. படுகொலைக்குக் காரணமான 'யூனியன் கார்பைடு' 'டவ் கெமிக்கல்' என்று பெயர் மாற்றம் செய்து கொண்டுவந்த போது, அதற்கு பட்டுக் கம்பளம் விரித்த மக்கள் துரோகிகளாகவே இவர்கள் செயல் பட்டனர். இதே ப.சிதம்பரம்தான் இப் போதும் மன்மோகன் நியமித்த குழுவில் இடம் பெற்று போபால் மக்களுக்கு நிவாரண நடவடிக்கைகள் வழங்குவது பற்றி அறிக்கை தந்திருக்கிறார்.

யூனியன் கார்பைடு நிறுவனத்தை வாங்கிய டவ் கெமிக்கல் நிறுவனம், மீண்டும் இந்தியாவில் ஆபத்தை விளைவிக்கக் கூடிய 'தர்ஸ்பான்' என்ற பூச்சிக் கொல்லி மருந்தை தயாரித்தது. இதற்காக இந்தியா வில் உள்ள அதிகாரிகளுக்கு அந் நிறுவனம் ரூ.80 லட்சம் லஞ்சம் கொடுத்தற்காக இந்நிறுவனத்தின் மீது நீதிமன்றத்தில் இரு வழக்குகள் பதிவாயின. இப்படி லஞ்சம் கொடுத்த குற்றத்திற்காக அமெரிக்காவின் சட்டப்படி அந்த நிறுவனம், அந்நாட்டுக்கு அபராதம் செலுத்த வேண்டி யிருந்தது. இதுபற்றி சி.பி.அய். விசாரணைக்கு ஏற்பாடு செய்வதாக மார்க்சிஸ்ட் உறுப்பினர் பிருந்தாகாரத் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு சார்பில் மாநிலங்களவையில் பதிலளிக்கப் பட்டது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை.

யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலைவரான வாரன் ஆண்டர்சன், விபத்து நடந்த அடுத்த சில நாட்களில் 1984 ஆம் ஆண்டு டிசம்பர் 7 ஆம் தேதி இந்தியா வந்தார். அவர் பத்திரமாக வந்து திரும்புவதற்கான உறுதியை இந்திய அரசு வழங்கியது. அப்போது பிரதமராகவும் அயல் துறை அமைச்சராகவும் இருந்தவர் ராஜிவ் காந்தி. ஆண்டர்சன் போபால் வருகை, ம.பி. மாநில முதல்வராக இருந்த அர்ஜூன் சிங்கிற்கும் தெரியாது; மாநில காவல் துறை, ஆண்டர்சனை சட்டப்படி கைது செய்து நடவடிக்கை எடுத்தது. அதற்குப் பிறகு டெல்லியிலிருந்து அர்ஜூன் சிங்கிற்கு, ஒரு தொலைபேசி வந்தது. ஆண்டர்சனை பத்திரமாக திருப்பி அனுப்ப வேண்டும் என்று தொலைபேசியில் பேசியவர் உத்தரவிடுகிறார். மாநில அரசுக்குச் சொந்தமான தனி விமானத்தில் பத்திரமாக ஆண்டர்சன் டெல்லிக்கு அனுப்பி வைக்கப் பட்டார். விமானத்தை ஓட்டிச் சென்ற கேப்டன் எஸ்.ஹசன், விமானத்தில் பயணித்த நபர் யார் என்பதே தமக்குத் தெரியாது என்று கூறுகிறார்.

இப்போது 'இந்துஸ்தான் டைம்ஸ்' நாளேட் டுக்கு அளித்த பேட்டியில் மூத்த காங்கிரஸ் தலைவரான அர்ஜூன் சிங் இது பற்றி தனக்கென்று எந்த நிலைப்பாடும் இல்லை என்றும், அப்போது மத்தியில் இருந்த ராஜிவ் தலைமை யிலான காங்கிரஸ் அரசு தான், இதற்குக் காரணம் என்றும் கூறிவிட்டார். "It was the Central Government decision to provide safe passage to Anderson" (Sunday Express, June 20, 2011) ராஜிவ் காந்தியின் முதன்மைச் செயலாளராக அப்போது இருந்த பி.சி. அலெக்சாண்டர் "பிரதமர் ராஜிவும் முதலவர் அர்ஜூன் சிங்கும் தொடர்பில் இருந் தனர். போபால் நச்சுவாயுக் கசிவுக்குப் பின்னர் யூனியன் கார்பைடு நிறுவனத் தலைவர் வாரன் ஆண்டர்சன் இந்தியாவை விட்டு தப்பித்துச் செல்ல அப்போதைய பிரதமர் ராஜிவ் காந்தி அனுமதி அளித்திருக்கலாம்" என்று கூறியுள்ளார்.

ஆண்டர்சன், இந்தியாவை விட்டு வெளியேறிய பிறகுதான், அன்றைய பிரதமர் ராஜீவ் காந்திக்கு தெரிவிக்கப்பட்டது என்று காங்கிரசார் செய்து வரும் பொய்ப் பிரச்சாரம், இப்போது ஆதாரங் களுடன் அம்பலமாகி வருகிறது. 1984 ஆம் ஆண்டு டிசம்பர் 7 ஆம் தேதி 'இந்து' ஏட்டின் டெல்லி செய்தியாளர் ஜி.கே. ரெட்டி, அந்த ஏட்டின் முதல் பக்கத்தில் எழுதியுள்ள செய்திக் கட்டுரையில் இவ்வாறு குறிப்பிடப்பட் டிருந்தது: "பிரதமரின் முதன்மை செயலாளர் பி.சி. அலெக்சாண்டர், பிரதமர் ராஜீவ்காந்தி யின் கவனத்துக்கு இன்று (டிசம். 7, 1984) இத் தகவல்களைக் கொண்டு வந்தார். ஆண்டர்சனை விடுதலை செய்து, தனி விமானத்தில் பத்திரமாக திருப்பி அனுப்புவதற்கு முன்பே, ராஜீவ் காந்தியிடம், இவை தெரிவிக்கப் பட்டன."

அடுத்த நாள் டிசம்பர் 8 ஆம் தேதி 'இந்து'வில் ஜி.கே. ரெட்டி இதுபற்றி எழுதியுள்ள மற்றொரு செய்திக் குறிப்பில் இவ்வாறு குறிப்பிடப்பட் டுள்ளது.

"நேற்று (டிசம்பர் 7 ஆம் தேதி) ராஜீவ் காந்தி, ம.பி. மாநிலத்திலுள்ள சாகர் எனும் இடத்தில் தான் இருந்தார். எனவே அர்ஜூன்சிங், ஆண்டர்சனை பிணையில் விடுதலைசெய்து பத்திரமாக அனுப்பிய செய்தியை பிரதமர் ராஜீவிடம் கலந்து பேச வில்லை என்று நம்புவதற்கு வாய்ப்பே இல்லை. ராஜீவ் வேறு மாநிலங்களில் இருந் திருந்தால்கூட அவர்கள் கலந்து பேச முடியாமல் போவதற்கு வாய்ப்புகள் இருந்திருக்கலாம். ம.பி. மாநிலத் திலேயே ராஜீவ் இருந்திருக்கும்போது எப்படி கலந்து பேசாமல், அர்ஜூன் சிங் முடிவெடுத் திருக்க முடியும்?" என்று அந்த செய்தி கூறுகிறது. ('இந்து' ஏடே இப்போது அதை வெளியிட்டு, ராஜிவுக்கு தெரிந்தே நடந்த சம்பவம்தான் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.) ஆண்டர்சனின் இந்திய வருகையை வெளி நாட்டுத் துறை அமைச்சகப் பதிவில் திட்டமிட்டு மறைக்கப்பட்டது.

அமெரிக்காவின் உளவுத் துறையான 'சி.அய்.ஏ.' இது பற்றி அப்போது தனது ரகசிய அறிக்கை யில், "இந்தியாவின் ராஜீவ்காந்தி அரசாங்கத்தின் தலையீடு காரணமாகவே ம.பி. மாநில ஆட்சி, ஆண்டர்சனை பத்திரமாக திருப்பி அனுப்பியது" என்று குறிப்பிட்டிருப்பதை 'டைம்ஸ் ஆப் இந்தியா' நாளேடு எடுத்துக் காட்டியுள்ளது. (ஜூன் 12, 2010)

ஆண்டர்சன் அமெரிக்காவில் நியூயார்க் நகரின் அருகில் தமது பண்ணை வீட்டில் சொகுசாக இருப்பது இந்திய அரசுக்கு தெரியும். ஆனாலும் அவர் தேடப்படுகிற குற்றவாளியாக அறிவிக்கப் பட்டுவிட்டார். அவரை, இந்தியாவுக்குக் கொண்டு வரும் எந்த முயற்சியையும் இந்தியா வில் பா.ஜ.க. ஆட்சியானாலும், காங்கிரஸ் ஆட்சியானா லும் எடுக்கவே இல்லை. 1995 பிப். 9 ஆம் தேதி இந்திய அரசின் செயலாளர்கள் கூட்டத்தில் இது பற்றி விவாதிக்கப் பட்டது. ஆண்டர்சனை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு கோரினால், அமெரிக்கா இந்தியாவுடனான நட்புறவு பாதிக்கும். எனவே அதை வலியுறுத்த வேண்டாம்" என்று முடிவு செய்யப் பட்டது. அந்தக் கூட்டத்தில் உள்துறை செயலாளர் கே. பத்மநாபய்யா, நிதித் துறை செயலாளர் கே.கே.மாத்தூர், ரசாயனம் மற்றும் பெட்ரோலியத் துறை செயலாளர் ஏ.என்.வர்மா உள்ளிட்ட உயர் பார்ப்பன அதிகார வர்க்கம் கலந்து கொண்டது. 2001 இல் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் சோலி சோப் ராஜி, ஆண்டர்சனை இந்தி யாவுக்கு கொண்டு வரும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம்" என்று அரசுக்கு பரிந் துரைத்தார். ஆனாலும், மக்கள் தந்த அழுத்தத்தின் காரண மாக, 2003 ஆம் ஆண்டு இந்திய அரசு உரிய ஆதாரங்களை, ஆவணங்களை முன் வைக்காமல், அமெரிக்காவிடம், இந்தக் கோரிக்கையை கண்துடைப்புக்காக வைத்தது. அமெரிக்கா உறுதி யாக ஆண்டர்சனை அனுப்ப மறுத்துவிட்டது.

அணு உலைகள் விபத்து தொடர்பாக நாடாளு மன்றத்தில் சட்டம் ஒன்றைக் கொண்டு வரும் முயற்சிகளில் மன்மோகன்சிங் ஆட்சி தீவிரம் காட்டி வருகிறது. அணுவிபத்து ஏற்பட்டால், அணு உலைகளை வழங்கும் அமெரிக்க நிறுவனங்கள் ரூ.500 கோடி டாலர்களை இழப்பீடாக அளித்தால் போதும் என்று அந்த சட்டம் கூறுகிறது; இதை நிறைவேற்றும் நிலை யில் போபால் வழக்கின் தீர்ப்பு வந்துவிட்டதால், இப்படி ஒரு சட்டத்தை நிறைவேற்ற இயலாத நெருக்கடிக்கு மன்மோகன்சிங் ஆட்சி தள்ளப் பட்டுள்ளது. எனவேதான் பாதிக்கப்பட் டோருக்கு இழப்பீடு தருவதில் தீவிரம் காட்டுவது போன்ற நடவடிக்கைகளில் மன்மோகன்சிங் ஆட்சி இறங்கியுள்ளது.

அமெரிக்காவின் மெக்சிக்கோ கடற்கரைப் பகுதியில் பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத் தின் கிணறு ஒன்றிலிருந்து எண்ணெய் வெடித்து வெளியேறியதால், கடல் தாவரங்கள், கடல் உயிரினங்கள் பெருமளவில் உயிரிழந்தன. மனித உயிரிழப்பு எதுவும் இல்லை. என்றாலும், அமெரிக்க அதிபர் ஒபாமா, கடந்த மே மாதம் 27 ஆம் தேதி சம்பவம் நடந்த இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டு, ஆத்திரப்பட்டு, பிரிட்டிஷ் பெட்ரோலிய நிறு வனத்தைக் கடுமையாக சாடி 500 கோடி டாலர் இழப்பீட்டுத் தொகையைக் கேட்டுள்ளார். ஆனால், இந்தியாவின் ராஜீவ்காந்தியும் அவரது ஆட்சியும், பல்லாயிரம் மக்கள் பிணமான உலகின் மிக மோசமான "போபால்ஷிமா"வைப் பற்றிக் கவலைப்படாமல், குற்றவாளிகளை தப்பச் செய்வதிலும், நாட்டு மக்கள் மரணத்தைவிட அமெரிக்காவிடம் நேசக்கரம் நீட்டுவதிலேயே துடிப்புடன் செயல்பட்டனர்.

இந்திய பார்ப்பன அதிகார பார்ப்பன வர்க்கம், இந்திய பார்ப்பன நீதிமன்றம், இந்திய பார்ப்பனிய உளவுத்துறை, இந்தியப் பார்ப்பன காங்கிரஸ், இந்தியப் பார்ப்பனியத் தலைமை ராஜீவ், இந்திய பார்ப்பன பனியா சுரண்டல் கும்பல், பன்னாட்டு நிறுவனங்கள், இந்துத்துவ பா.ஜ.க. பார்ப்பன ஆட்சி - என்று அனைத்து ஆளும் வர்க்கங்களும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராகவே நிற்கின்றன.

போபாலை போல் ஒரு நிகழ்வு உலகில் எந்த ஒரு நாட்டிலும் நிகழ்ந் திருந்தாலும், அதை மக்கள் மன்றம் இந்த நாட்டு மக்களைப் போல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்குமா?

ராஜீவ்காந்தி கொலைக்காக கசிந்துருகும் காங்கிரஸ்காரர்களே! ஈழத் தமிழர்களின் தேசியத் தலைவர் பிரபாகரனை ஈழத்திலிருந்து தமிழ்நாடு கொண்டுவர வேண்டும் என்று கூக்குரல் போடும் "தேசபக்தர்களே!"

22000 மக்களைப் பிணமாக்கிய ஒரு கோரப் படுகொலைக்குக் காரணமான குற்றவாளிகள் மீது நீங்கள் எடுத்த நடவடிக்கை என்ன? அவர்களை, இந்தியாவுக்குக் கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தாதது ஏன்?

இந்திய ராணுவத்தை ஈழத்துக்கு அனுப்பி, 2000 மக்களைக் கொன்று குவித்த ராஜீவுக்கு, கண்ணீர் வடிக்கும் தேசிய திலகங்களே!

இதோ, இன்றைக்கும் ஊனத்தை வாழ்வாக்கிக் கொண்டிருக்கும் இந்த போபால் மக்களுக்கு, நீங்கள் வழங்கிய நீதி என்ன?

குற்றவாளிகளை தப்பிக்க விட்டது தானா?

பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய இழப்பீட்டையும் வழங்காமல், அவர்களுக்கு பட்டை நாமம் சாத்துவது தானா?

சொந்த நாட்டு மக்களின் பிணங்கள் மீது அமெரிக்க பன்னாட்டு நிறு வனத்துக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு தரும் நீங்கள், இந்தியாவின் தேச பக்தர்களா? அமெரிக்காவின் தேச பக்தர்களா? பதில் சொல்லுங்கள்!

(புதுவை - ஆத்தூர் கூட்டங்களில் பெரியார் தி க பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆற்றிய உரையின் விரிவாக்கம்)

No comments: