Wednesday, June 2, 2010

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை புதுவை இளைஞருக்கு ரூ.3 லட்சம் பரிசு



புதுச்சேரி, ஜூன் 1_ எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த புதுவை இளைஞருக்கு ரூ.3 லட்சம் பரிசுத்-தொகை வழங்கப்படும் என்று முதல்வர் வைத்தி-லிங்கம் அறிவித்துள்-ளார். புதுவை சன்னியா-சிகுப்பத்தை சேர்ந்தவர் சங்கரன்லட்சுமி. இவரது மகன் சந்தோஷ்குமார். சென்னையில் படித்து முடித்து விட்டு தற்-போது சிங்கப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த மார்ச் மாதம் 29ஆம் தேதி எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை புரிந்துள்ளார்.

புதுவை திரும்பிய சந்தோஷ்குமார் நேற்று முதல்வர் வைத்திலிங்-கத்தை சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருக்கு முதல்-வர் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் முதல்வர் வைத்திலிங்கம் கூறியதாவது: தமிழ-கத்தை சேர்ந்த சண்முக-வடி-வேலு என்ற இளை-ஞர் கடந்த 1997ஆம் ஆண்டு தனது 28ஆவது வயதில் எவரெஸ்ட் சிக-ரத்தில் ஏறி முதல் தமி-ழர் என்ற பெருமையை பெற்றார். தற்போது புதுவையை சேர்ந்த சந்-தோஷ்குமார் எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை புரிந்துள்ளார்.

பாலியல் கொடுமை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த சாத-னையை நிகழ்த்தியுள்-ளார். அவருக்கு பாராட்-டுக்களை தெரிவித்துக்-கொள்கிறேன். அரசு சார்பில் அவருக்கு ரூ.3 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும். மேலும் குடியரசு தினம் அல்லது சுதந்திர தினத்தன்று விருது வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

No comments: