ஒரு பக்கம் உலக தமிழ் செம்மொழி மாநாடு என்ற பெயரில் மாநாடு நடத்தி கொண்டே இன்னொரு பக்கம் தமிழர்களுக்கு என்று தனி அடையாளம் கிடையாது என்ற மிகப்பெரிய வரலாற்று பிழை நிறைந்த கருத்தை தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.
திராவிடமே நமது அடையாளம் தமிழ் அதில் உள்ளடக்கம் என்ற தமிழ் இன அழிப்பு கருத்தை வெளியிடுகிறார். எனவே நமது அடையாளம் தமிழரா? அல்லது திராவிடரா? என்பதைபற்றி ஒரு ஆழமான, அறிவு சார்ந்த விவாதம் துவக்கப்பட நேரம் வந்துவிட்டது.
சென்னை, திருச்சி, தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி, கோயமுத்தூர், சேலம், விழுப்புரம் ஆகிய முக்கிய நகரங்களில் கருத்தரங்கு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
சூன் 21 ஆம் நாள் திங்கள் கிழமை மாலை 6.00 மணிக்கு சென்னையில் தி.நகர் 31, வெங்கட்நாராயண சாலை, சி.டி.நாயகம் தியாகராயநகர் உயர்நிலைப் பள்ளியில் முதல் கருத்தரங்கம் மருத்துவர் க.கிருஷ்ணசாமி தலைமையில் நடைபெற உள்ளது.
இதில் புலவர் புலமைபித்தன், மா.இலெ.தங்கப்பா பெ.மணியரசன், புலவர்.கி.த.பச்சையப்பன், இயக்குனர். புகழேந்தி தங்கராஜ், இதழாளர் அய்யநாதன் உட்பட தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்கள். தமிழ் ஆர்வலர்கள் இந்த கருத்தரங்கில் திரளாக கலந்து கொள்ள வேண்டுகிறோம்.
--
விடுவிப்பு அல்ல விரட்டியடிப்பு
6 hours ago
No comments:
Post a Comment