Friday, June 25, 2010

பூஜ்ஜியமாகிப்போன அரசாங்கத்தின் வீராப்பு

ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் விசேட பிரதிநிதியான பெஸ்கோ இலங்கைக்கு வந்திறங்கி மகிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து வடபகுதிக்கும் விஜயம் செய்தார். அதன்பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அமர்ந்து நெஞ்சை நிமர்தியவராக “நாம் அடுத்தவாரம் இலங்கையின் போர்க் குற்றங்களை ஆராய்ந்து பார்க்க விசேட குழுவொன்றை நியமிக்கப் போகிறோம் எனக் கூறியபோது, ஒரு ஊடகவியலாளர், மற்றுமொரு ஊடகவியலாளரின் காதுக்கருகில் சென்று அருமையான கேள்வியொன்றை எழுப்பினார். “எங்க நண்பா.. தாய் நாட்டின் பஞ்சாயுதக் காரர்கள்? நித்திரையோ?? எனக் கேட்டார்.

உண்மையில் கடந்த பொதுத் தேர்தல் காலத்தில் ஐக்கிய நாடுகள் செயலாளர் பான் கீ மூன், தான் இலங்கையின் போர்க் குற்றங்கள் குறித்து கண்டறிவதற்காக ஆலோசனை வழங்கும் நிபுணர்கள் குழுவை நியமிக்கப் போவதாகக் கூறிய போது அரசாங்கத்தின் பஞ்சாயுதங்கள் பேயாட்டம் ஆடினர். ஷஷஎமது பிணங்கள் மேல் தான் இந்தக் குழு நியமிக்கப்படும்|| “அஞ்ச வேண்டாம். எம்முடன் அணி சேரா நாடுகள் இருக்கின்றன. குழுவொன்றை நியமிக்க பான் கீ மூனுக்கு நாம் இடமளிக்கமாட்டோம்.|| ஷஷஎமக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுத் தாருங்கள். ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட சர்வதேச சூழ்ச்சிகளைத் தோற்கடிப்போம்.|| இவை தேர்தல் காலத்தில் அரசாங்கத்தின் பஞ்சாயுதங்களும் அடித் தொண்டையில் கத்தி எழுப்பிய கோஷங்களாகும். இந்தக் குழுவை நியமிப்பதற்கு முன்னர் இலங்கையின் நிலைமைகளைக் கண்டறிய பான் கீ மூனினால் அனுப்படும் விசேட பிரதிநிதியான பெஸ்கோவை இலங்கை மண்ணில் காலடி வைக்க இடமளிக்கப் போவதில்லையென அரசாங்கம் தீர்மானமொன்றை எடுத்துள்ளதாகக் கூறியது.

பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த பலத்தைப் பெற்றவுடன் அந்தத் தீர்மானத்தை மாற்றிக்கொண்ட அரசாங்கம் பெஸ்கோவை மாத்திரமல்ல அமெரிக்க ஒபாமா அரசாங்கத்தைச் சேர்ந்த போர்க் குற்ற நிபுணர்களுக்கும் இலங்கைக்கு வர அனுமதி வழங்கியது. ஏன் அரசாங்கம் அனுமதி வழங்கியது? அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டு அமெரிக்காவிற்கு முதலில் மேற்கொண்ட விஜயத்தின் போது அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் ஏமாற்றமொன்றைச் சந்தித்தார்.

“யுத்தத்தின் பின்னர் அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து ஹிலாரி கிளின்டன் பாராட்டினார்|| ஷஷயுத்தம் குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழு பற்றி நாம் நம்பிக்கைக் கொண்டுள்ளோம்|| ஜீ.எல். பீரிஸ் அமெரிக்காவிற்குச் சென்று ஹிளாரி கிளின்டனைச் சந்தித்த பின்னர் அரசாங்கத்தின் ஊடகங்கள் போட்டிப் போட்டுக்கொண்டு தலைப்புச் செய்திகளாக வெளியிட்டன. அமெரிக்கா தற்போது எமது பைக்குள் என அரசாங்கம் நினைத்தது. அமெரிக்கா தமது சட்டைப் பைக்குள் என நினைத்துக்கொண்ட அரசாங்கம் பெஸ்கோ, அமெரிக்க ஜனாதிபதியின் போர்க் குற்றங்கள் தொடர்பான நிபுணர்களை இலங்கைக்கு வருமாறு செங்கம்பளம் விரித்தது. இதனிடையே யசூசி அகாஸியும் இலங்கை வந்தார். இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினைகளில் வெளிநாட்டுத் தலையீடுகள் வேண்டாம் என யசூசி கூறியதாக இலங்கையின் ஊடகங்கள் தலைப்புச் செய்திகளை வெளியிட்டன. எனினும், இலங்கை ஊடகங்களில் வெளியிடப்படாத இரண்டு கதைகள் இருக்கின்றன.

“இலங்கையின் போர் குறித்து ஐக்கிய நாடுகளின் சர்வதேச விசாரணைகளுக்கு ஜப்பான் உதவி வழங்கும்|| ‐ யசூசி அகாசி ‐ ஏ.எவ்.பி

“இலங்கையில் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு குறித்து திருப்தி கொள்ள முடியாது மெத்தியு லீ ‐ ஒபாமாவின் ஐக்கிய நாடுகளுக்கான போர்க் குற்றங்கள் தொடர்பான பிரதிநிதி இந்த இரண்டு கதைகள் மூலம் அரசாங்கத்தின் ஆணைக்குழு தொடர்பாக கொண்டை கட்டிய சீனர்களுக்கு காண்பியுங்கள் என அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட சர்வதேச சமுகம் இலங்கைக்கு வந்து வடக்கில் சுற்றிய பின்னர் மகிந்தவுடன் கைகுலுக்கி புகைப்படத்திற்கும் போஸ் கொடுத்துவிட்டு அரசாங்கத்திற்கு வாலைக் காட்டியுள்ளன என்பது தெளிவாகியது.

ஷஷஐக்கிய நாடுகள் அலுவலகத்திற்கு எதிரிலும், தூதரக அலுவலகங்களுக்கு எதிரிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தியவர்கள் தற்போது எங்கே?|| “பான் கீ மூன், ஹிலாரி கிளின்டன் ஆகியோர் புலிகளின் சீருடைகளை அணிந்துள்ளதைப் போன்று வைக்கப்பட்ட பதாதைகள் எங்கே?|| இவையெல்லாம் தேர்தலில் வெற்றிபெறுவதற்காக மேற்கொள்ளப்பட்ட சுப்பர் ஸ்டார் தரத்திலான நகைச்சுவைக் காட்சிகள்.

“ஐக்கிய நாடுகள் அமைக்கும் விசேட நிபுணர் குழுவைத் தடுப்பதற்கு எமக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையைத் தாருங்கள்|| எனக் கூறி பொதுத் தேரிதலில் நாட்டு மக்களை ஏமாற்றிய அரசாங்கம் தற்போது ஐக்கிய நாடுகள் பிரதிநிதியே இலங்கைக்கு வந்து நிபுணர்கள் குழு நியமிக்கப்படும் என கூறிச் செல்லும் போது காதில் விழாதைப் போன்றிருக்கும் அரசாங்கம், ஜனாதிபதி மீண்டும் ஒரு முறை தேர்தலில் போட்டியிடும் வகையில் அரசியல் சாசனத்தில் திருத்தங்களை மேற்கொள்ள மூன்றில் இரண்டு பெரும்பான்மையைத் தேடுகிறது.

“ஏன் எம்முடன், சீனாவும், ரஷ்யாவும் இருக்கிறன?|| என அரசாங்கம் கௌரவமாகக் கூறுகிறது. சீனாவிடமும் ரஷ்யாவிடமும் கூறி ஐக்கிய நாடுள் சபையின் நிபுணர் குழுவைத் தடுத்து நிறுத்தியிருக்க முடியும் அல்லவா? அமெரிக்காவும் இந்தியாவும், மேற்குலக நாடுகளும் ஒன்றோடு ஒன்று இணைந்தால், சீனா அச்சம் கொள்ளும். சூடான் சீனாவின் நெருங்கிய நட்பு நாடாகும். இலங்கையை விட மிக நெருக்கமான நண்பனாக சூடான் இருந்து வருகிறது. எனினும், போர்க் குற்றங்கள் தொடர்பாக சூடானை சர்வதேச நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்வதைத் தடுக்க சீனா முன்வரவில்லை.

பாகிஸ்தான் சீனாவின் சகோதரரைப் போன்ற ஒரு நாடாகும். எனினும், கார்கில் நெருக்கடி நேரத்தின் போது பாகிஸ்தானைக் காப்பாற்ற சீனா வரவில்லை. அமெரிக்காவிற்கு எதிரான கூட்டணியில் சீனாவின் மிக முக்கியமான நண்பனான ஈரானுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் யோசனைகள் நிறைவேற்றப்பட்டபோது சீனா எவ்வித தடுப்பு நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. இதனைப் பார்க்கும்போது இலங்கை போன்ற சிறிய நாட்டைப் பாதுகாக்க அமெரிக்கா போன்ற வல்லரசுகளைப் பகைத்துக்கொள்ள சீனா விரும்புமா? கனவில்கூட நினைக்க முடியாது. சீனாவும் அவ்வாறு முட்டாள் தனமான நடவடிக்கையில் ஈடுபடாது.

சீனா எப்போதும் தனது பொருளாதார நலன்களையே கருத்திற்கொண்டு செயற்படுகிறது. அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளிலிருந்து சீனாவிற்கு கிடைக்கும் பொருளாதார நலன்களை அளவிடும் போது இலங்கைக்கு அதன் அருகில் செல்லக்கூட முடியாதுள்ளது. தற்போது இந்த அரசாங்கம் செய்கின்ற தவறையே அந்நாள் ஜே.ஆர்.ஜயவர்தனவின் அரசாங்கமும் செய்தது.

ஜே.ஆர்.ஜயவர்தனவின் நாடாளுமன்றம் மூன்றில் இரண்டு அல்ல. ஆறில் ஐந்து வீத அதிகாரத்தைக் கைப்பற்றி இந்தியாவிற்கு சவால் விடுத்தது. அன்றைய சோசலிச சோவியத் நாட்டின் நட்பு நாடான இந்தியாவுடன் மோதும் போது அமெரிக்கா உள்ளிட்ட முதலாளித்துவ நாடுகள் இலங்கைக்கு உதவ முன்வரும் என ஜே.ஆர்.ஜயவர்தன நினைத்தார். அவ்வாறு எண்ணிய ஜே.ஆர்.ஜயவர்தன, திருகோணமலை எண்ணெய்க் குதம் மற்றும் துறைமுகத்தை அமெரிக்காவிற்கு குத்தைக்கு வழங்க முயற்சித்தார். இந்த முயற்சிக்கெதிராக இந்தியா ஆயுதக் குழுக்களை உருவாக்கி அவர்களைப் பாலூட்டி வளர்த்து இலங்கையில் யுத்தமொன்றை உருவாக்கி, இறுதியில் வானிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு உணவுப் பொதிகளை போட்டு இலங்கையின் வான் எல்லையை ஆக்கிரமித்தது.

ஜே.ஆர். உடனடியாக அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளிடம் உதவி கோரினார். எம்மால் இந்தியாவைப் பகைத்துக் கொள்ள முடியாது. இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்தப் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ளுங்கள் என அமெரிக்கா பதிலளித்தது.

அமெரிக்காவின் இந்த பதிலால் அமெரிக்காவைத் திட்ட முடியாது. காரணம் அமெரிக்கா, இலங்கை போன்று சிறிய நாடு அல்ல. இந்தியாவைப் போன்று பெரிய நாடு. அதேபோல் இலங்கை அமெரிக்காவுடன் மோதினால், சீனா, ஈரான் உள்ளிட்ட அமெரிக்க விரோத நாடுகள் சிறிதாக கைகளைத் தட்டி சிறிய சத்தத்தை எழுப்பலாம். எனினும், அமெரிக்காவைத் தாக்குவதற்கு சீனா ரஷ்யா, அல்லது ஈரானிடம் உதவி கோரினால் எங்களுக்கு என்ன தலையில் கிறுக்கா என அவர்கள் கூறக்கூடும்.

2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த பின்னர் அரசாங்கம் நேரடியாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவிற்குச் சென்றது. இதன்போது இலங்கை யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த விதத்திற்கெதிராக மேற்குலக நாடுகள் யோசனையொன்றைக் கொண்டுவந்திருந்தன. அப்போது மேற்குலக நாடுகளின் யோசனையைத் தோற்கடிக்க உலக நாடுகள் இலங்கையுடன் ஒன்றாக அமர்ந்தன. மேற்குலக நாடுகளின் யோசனை தோல்வியடைந்தது. அரசாங்கம் வடக்கு கிழக்கை மாத்திரமல்ல உலகைத்தையே வென்றது என சிலர் கூறினர். அதன்பின்னர், பொதுத் தேர்தல் காலத்தில் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன், இலங்கையின் போர்க் குற்றங்களை ஆராய்ந்து ஆலோசனையைப் பெற நிபுணர்கள் குழுவொன்றை நியமிக்க தீர்மானித்த போது, அரசாங்கம் அணிசேரா நாடுகளிடம் சென்று அதனை எதிர்க்குமாறு கோரிக்கை விடுத்தது. அவ்வாறான குழுவொன்றை நியமிக்க வேண்டாம் என வலியுறுத்தும் கடிதமொன்றில் கையெழுத்திட அந்நாடுகள் இணங்கின. இதன்பின்னர் இரண்டு, மூன்று மாதங்கள் கடந்தன. குறித்த கடிதத்தில் கையெழுத்திட்ட அணிசேரா நாடுகள் நிபுணர்கள் குழுவிற்கு எதிரான தமது நிலைப்பாடுகளை திரும்பப்பெற்றன. தாம் தகவல்களை அறியாது கையெழுத்திட்டதாக சில நாடுகள் கூறின. பான் கீ மூனிற்கு எதிராக இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்ட கடிதம் இலங்கை ஊடகங்களில் பெரிதாக பிரசாரப்படுத்தப்பட்டன. பான் கீ மூனின் தீர்மானத்திற்கெதிராக தம்முடன் அணிசேரா நாடுகள் அனைத்தும் இருப்பதாக அரசாங்கம் கௌரவமாகக் கூறிக்கொண்டது. பொதுத் தேர்தலில் அரசாங்கம் அதனை பெரிய துரும்புச் சீட்டாக பயன்படுத்தியது. பின்னர் அணிசேரா நாடுகள் தமது கடிதத்தை திரும்பப் பெற்றதும், எதிர்ப்பை விலகிக் கொண்டமை குறித்தும் இலங்கையின் ஊடகங்களில் தகவல்கள் வெளியிடப்படவில்லை. தற்போது பான் கீ மூனின் விசேடப் பிரதிநிதி பெஸ்கோ இலங்கைக்கு வந்து யுத்தக் குற்றங்களை ஆராய்வதற்காக நிபுணர்கள் குழுவை நியமிப்பதாகக் கூறும்போது அரசாங்கத்திலுள்ள தாய்நாட்டின் பஞ்சாயுதங்கள் ஏதும் அறியாதவர்களைப் போல் மௌனித்துப் போயுள்ளனர்.

நன்றி

உபுல் ஜோசப் பெர்னாண்டோ
GTN

No comments: